Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனாவின் செல்வாக்கு இலங்கையில் அதிகரிப்பதை தமிழ் மக்கள் விரும்பவில்லை - எம். சுமந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா மனித உரிமை பேரவையில் 2012 இல் இருந்து இலங்கை தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் சீனா எதிரான நிலைப்பாட்டை மிக வெளிப்படையாக எடுத்திருக்கின்றது. 

ஆகவே தமிழ் மக்களை பெறுத்தவரையில் ஜனநாயகம் பேணப்படவேண்டும் என்று குரல் கொடுக்கின்ற வகையிலே சீனாவினுடைய செல்வாக்கு இலங்கையில் அதிகரிப்தை நாங்கள் விரும்பவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் எம். சுமந்திரன் தெரிவித்தார். 

மட்டக்களப்பு மாகரசபை முதல்வர் ரி.சரவணபவான் மாநகசைபை ஆணையாளருக்கு எதிரா நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு விசாணைக்கு இன்று வியாழக்கிழமை (22) ஆஜரான பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அரசுக்கு எதிரான இந்த போராட்டங்களை கடந்த பெப்ரவரி மாதம் நாங்கள் தான் ஆரம்பித்து வைத்தோம். ஆகவே மக்களுடைய போராட்டங்கள் அனைத்துக்கும் எங்களுடைய ஆதரவு இருக்கின்றது அரசாங்கம் நாங்கள் எதிர்பார்த்ததைவிட அவசரமாக மக்களிடம் இருந்த செல்வாக்கை முழுமையாக இழந்து நிற்கின்றது. 

நாங்கள் எந்த நாட்டுக்கும் சாந்தவர்கள் அல்ல எதிரானவர்களும் அல்ல ஆனால் இலங்கைவாழ் தமிழ் மக்களை பெறுத்தளவிலே எங்களுடைய அரசியல் பிரச்சனை சம்மந்தமாக இந்தியா தமிழ் மக்கள் சார்பிலே சர்வதேச உடன்படிக்கையை 1987 ம் ஆண்டு கைச்சாத்திட்டது அது முழுமையாக அமுல்படுத்தவேண்டும் என்பது எங்களுடைய கோரிக்கை. 

அதன்காரணமாக நாங்கள் இந்தியாவுடன் நெருங்கி செயற்படுகின்றோம் இந்திய அரசும் தொடர்சியாக அதிலே உள்ள விடையங்கள் நிறைவேற்றப்படவேண்டும் என்று தங்களுடைய கருத்தை மிகவும் ஆணித்தரமாக சொல்லிவருகின்றனர்.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் பகையிருப்பது எல்லோருக்கும் தெரிந்த விடையம் இந்தியாவினுடைய கரை எல்லை இலங்கை கரை எல்லை  30 கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கின்றது. இந்தியாவினுடைய பாதுகாப்பு நிமிர்த்தமாக இந்தியா கரிசனையாக இருப்பது எவரும் ஏற்றுக் கொள்ள கூடிய விடயம். 

அதேவேளையில் சீனா இலங்கைக்குள் வந்து காலடி எடுத்து வைக்கும் விடையமாக மற்றைய நாடுகள் விசேடமாக ஜனநாயகத்தை பேணுகின்ற மனித உரிமையை மதிக்கின்ற நாடுகள் இங்கே வந்து இலங்கை அரசாங்கத்தோடு நட்புறவு பேணி தங்களுடைய விழுமியங்களை பரப்புவது நல்ல விடையம்.

ஆனால் சீனாவை பெறுத்தவரையில் அங்கு ஜனநாயகம் இருப்பது எவருக்கும் தெரியாத விடையம் ஒரு கட்சி ஆட்சி. மாற்று கருத்துக்களுக்கு இடமில்லை மனித உரிமைகள் என்றால் அது என்னவென்று கேட்கின்ற அளவுக்குதான் சீனாவினுடைய நிலைப்பாடு. 

ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக 2012 இருந்து  தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் சீனா அந்த தீர்மானங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை மிக வெளிப்படையாக எடுத்திருக்கின்றது. 

ஆகவே தமிழ் மக்களை பெறுத்தவரையில் பாதிக்கப்பட்டவர்கள் என்ற வகையில் மனித உரிமை மீறல்களுக்கு அதிகமாக முகம் கொடுக்கின்றவர்கள் என்ற வகையில். ஜனநாயகம் பேனப்படவேண்டும் என்று குரல் கொடுக்கின்ற வகையில். சீனாவினுடைய செல்வாக்கு இலங்கையில் அதிகரிப்தை நாங்கள் விரும்பவில்லை 

ஆகவே நாங்கள் உயரியதாக கருதுகின்ற விழுமியங்களை கொண்ட நாடுகள் இலங்கைக்கு அறிவுரை கூறுவது இலங்கையில் ஈடுபடுவது வரவேற்க தக்கவிடையம் என்றார். 

சீனாவின் செல்வாக்கு இலங்கையில் அதிகரிப்பதை தமிழ் மக்கள் விரும்பவில்லை - எம். சுமந்திரன்  | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

சுமத்திரன்  அவ்வப்போது தான் யாருடைய ஆள் என்பதை இப்படியான அறிக்கைகள் மூலம் தமிழ் மக்களுக்கு சொல்லுவது உண்டு .

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பிழம்பு said:

ஆகவே தமிழ் மக்களை பெறுத்தவரையில் ஜனநாயகம் பேணப்படவேண்டும் என்று குரல் கொடுக்கின்ற வகையிலே சீனாவினுடைய செல்வாக்கு இலங்கையில் அதிகரிப்தை நாங்கள் விரும்பவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் எம். சுமந்திரன் தெரிவித்தார். 

2009இல் தமிழருக்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் சபையால் கொண்டுவந்த இலங்கைக்கு எதிரான பிரேரணையை இந்தியா முறியடித்து இலங்கைக்கு ஆதரவு வழங்கியதாலேயே இன்றுவரை எமது பிரச்சனை நீள்கிறது.

இதைப்பற்றி எல்லாம் மூச்சுவிடாமல் சதா சீனனையை பேசிக் கொண்டிருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இந்தியாவால் ஒரு பிரயோசனமும் இல்லை என்று சிங்களவனுக்கு தெரிந்தது, இந்த பிரகிராசியருக்கு தெரியவில்லை.

சும்மா இருந்து பினாத்தாமல், ஒரு எட்டு போய், சீன தூதரை சந்தித்து, எமக்கு ஒரு அரசியல் தீர்வை பெற்று தந்தால், எங்கள் ஆதரவும் உங்களுக்கே என்று சொல்லி வைத்தால், இந்தியாவுக்கு செக் வைத்த மாதிரி இருக்குமே. 🤔

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிழம்பு said:

இன்று வியாழக்கிழமை (22) ஆஜரான பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்

இவர்கிட்ட எல்லாம் ஏன் இன்டர்வியு எடுக்கீங்க.? ☺️

585230710.jpg

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, Nathamuni said:

இந்த இந்தியாவால் ஒரு பிரயோசனமும் இல்லை என்று சிங்களவனுக்கு தெரிந்தது, இந்த பிரகிராசியருக்கு தெரியவில்லை.

சும்மா இருந்து பினாத்தாமல், ஒரு எட்டு போய், சீன தூதரை சந்தித்து, எமக்கு ஒரு அரசியல் தீர்வை பெற்று தந்தால், எங்கள் ஆதரவும் உங்களுக்கே என்று சொல்லி வைத்தால், இந்தியாவுக்கு செக் வைத்த மாதிரி இருக்குமே. 🤔

உங்கடை கதையை பார்த்தால் திருவாளர் சுமத்திரன் தமிழர்களுக்கு  விடிவு ஏற்படுத்தி கொடுக்க வந்த தேவ தூதன்  போல் அல்லவா  இருக்கு !!!!!!🤣

அவரே  தமிழர் தமிழ் என்று பிழைக்க வந்த பிழைப்பு வாதி அரசியலில் வருமானம் பார்க்க வந்தவர்கள் இவர்கள் சீனா காரரை என்ன செய்யணும் என்று எனக்கு தெரியும் என்பார் .

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிழம்பு said:

தமிழ் மக்களை பெறுத்தவரையில் . சீனாவினுடைய செல்வாக்கு இலங்கையில் அதிகரிப்தை நாங்கள் விரும்பவில்லை

பயபுள்ள எப்படி நேக்கா மஹிந்த குரூப்போட தமிழ்மக்களை மறுபடியும் கொழுவிவிடுது பார். ஏற்கனவே எங்களை அவங்களுக்கு பிடிக்காது,  சீனா என்றால் அவர்களுக்கு உயிர்.

தமிழர்கள் எப்போ சொன்னார்கள் சீனா ஸ்ரீலங்காவில் செல்வாக்காக இருப்பது எங்களுக்கு பிடிக்கவில்லையென்று?

வடகிழக்கில் சிங்கள ஆக்கிரமிப்பு அதிகரிப்பதை தமிழ்மக்கள் விரும்பவில்லை என்று பேச துப்பில்லை சீனாவுக்கு போயிட்டார் மானிக் பாட்ஷா.

தமிழர் நிலங்கள் படிப்படியாக சிங்களவர்களிடம் பறிபோகும்போது, சிங்களவர் நிலம் சீனாக்காரனிடம் பறிபோவதுபற்றி தமிழர்கள் எதுக்கு கவலைபட போகிறார்கள்?

 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, valavan said:

தமிழர்கள் எப்போ சொன்னார்கள் சீனா ஸ்ரீலங்காவில் செல்வாக்காக இருப்பது எங்களுக்கு பிடிக்கவில்லையென்று?

இவர் எப்போ தமிழரிடம் அதைக்கேட்டார் என்று முதலில்  கேளுங்கோ அவரை. 

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய எல்லைக்குள்ளே உள்ள சீனாவை ஒன்றும் செய்ய முடியவில்லை இந்தியாவால், இலங்கையில் சீனாவின் தலையீட்டை என்ன செய்ய முடியும்? ஆனால் தாம் போகுமிடமெல்லாம் ஆக்கிரமிக்கும் சீனாவை எந்த நாடாலும் இதுவரை எதுவும் செய்யமுடியவில்லை அண்மைய உதாரணம் பிலிப்பீன்ஸ் மற்றும் இந்தியா. இலங்கை சீனாவிடம் பொல்லைக்கொடுத்து அடி வாங்கப்போகிறது வெகு விரைவில்.

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, vasee said:

இலங்கையில் சீனாவின் தலையீட்டை என்ன செய்ய முடியும்?

இந்தியாவால் ஒன்றும் செய்ய முடியாது என்பதாலேயே தனது  முகவர்களை உசுப்பிவிட்டுக்கிடக்கு அவையளும் கதறுகினம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.