Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுப்பிரமணியன் சுவாமி கொழும்பு வருகிறார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

image_cc2257667b.jpg

இந்திய அரசியல்வாதியும், பொருளாதார நிபுணரும், புள்ளிவிபர நிபுணருமான சுப்பிரமணியன் சுவாமி இம்மாதம் கொழும்புக்கு விஜயம் செய்யவுள்ளார். 

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரிலேயே அவர், கொழும்புக்கு வருகைதரவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர். நவராத்திரி விழாவில் பிரதமர் மஹிந்தவுடன் இணைந்து பங்கேற்கவுள்ளார் என அறியமுடிகின்றது.

இந்நிலையில், இலங்கை படையின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பங்கேற்கும் நிகழ்வில் கலந்துகொண்டு, தேசிய பாதுகாப்பு தொடர்பில் உரையாற்றவுள்ளார் என அறியமுடிகின்றது.

Tamilmirror Online || சுப்பிரமணியன் சுவாமி கொழும்பு வருகிறார்

  • கருத்துக்கள உறவுகள்

கூட இருந்தே குழி பறித்தவரெல்லாம் மஹிந்த அரசில் அங்கம் வகிக்கும்போது, தூர இருந்து குழி பறித்த நீங்களெல்லாம் மஹிந்த அழைப்பில் வருவது அவ்வளவு ஒன்றும் பெரிய குற்றமல்ல.

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் சுவாமி இன்னொரு ரணில்......!   🤔

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தர் இவர் செய்த தமிழின அழிப்பு உதவிக்கு எப்பவும் கடமைப்பட்டவர் தானே. அதுதான் பதவிக்கு வரும் போதெல்லாம்.. இவரைக் கூப்பிட்டு தான் பிச்சை எடுத்தாலும் பரிசு (பெட்டி) கொடுத்து மகிழ்பவர். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

இந்தச் சுவாமி இன்னொரு ரணில்......!   🤔

இந்த சாமி  ஒரு குழப்பன்காசி எவன் புலிகளை எதிர்கிறானே அப்படிப்பட்டவர்கள் என்ன கொள்கை கொண்டிருந்தாலும். அவரகளுடன் கட்டியணைத்தப்படி கொண்டாட்டம் போடும் கொள்கை இலட்சியத்துடன் வாழ தெரியவில்லை 

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு அரசியல் கோமாளி. கொலைகாரரை ஆஹா... ஓஹோ.... என்று புகழ்ந்துவிட்டு தமிழருக்கு பாடம் எடுக்கும். இதை ஒன்றும் கொண்டு போகுதில்லையே என்று ஆதங்கமாய் இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, பிழம்பு said:

சுப்பிரமணியன் சுவாமி இம்மாதம் கொழும்புக்கு விஜயம் செய்யவுள்ளார். 

Suvami.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் உண்மையான நண்பன் இந்தியா : ராஜபக்ஷ ஆட்சியில் உறுப்படுத்தப்பட்டுள்ளது : இலங்கை வருவதை உறுதி செய்து சுப்பிரமணியன் சுவாமி தெரிவிப்பு

(ஆர்.ராம்)

இலங்கையின் உண்மையான நண்பன் இந்தியா என்பதை ராஜபக்ஷவினரின் ஆட்சியில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளத என்று பாரதீஜ ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி பிரத்தியேகமாக வீரகேசரிக்குத் தெரிவித்துள்ளார்.

கடந்த புதன்கிழமை இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவைச் சந்தித்திருந்த சுப்பிரமணியன் சுவாமி விரைவில் இலங்கை செல்லவுள்ளதாக தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

அதனைத்தொடர்ந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவரை தமது குடும்பத்தினரின் நவராத்திரி விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் சுப்பிரமணிய சுவாமியிடத்தில் இவ்விடயங்கள் பற்றி தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு வினவியபோது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

இலங்கை விஜயம் இலங்கையின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது குடுத்தினரால் எதிர்வரும் வாரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நவராத்திரி விழாவில் கலந்து கொள்ளுமாறு அன்பாக அழைத்துள்ளார். எனது நெருங்கிய நண்பராக இருக்கும் அவரின் அழைப்பினை ஏற்று அந்நிகழ்வில் பங்கேற்கவுள்ளேன். அது மிகவும் உணர்வு பூர்வமானது.

அதனைத்தொடர்ந்து இலங்கையின் பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகள் பங்கேற்கும் விசேட நிகழ்வொன்றில் ‘தேசிய பாதுகாப்பு’ சம்பந்தமான விசேட உரையொன்றையும் ஆற்றவுள்ளேன்.

இதற்கு அடுத்தபடியாக இந்திய இலங்கை மீனவர்கள் விவகாரம் தீராத பிரச்சினையாக நீடித்துக்கொண்டிருக்கின்றது. இந்த விடயம் சம்பந்தமாக முக்கியமாக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

இரு அயல்நாடுகளுக்கு இடையில் இவ்விதமான நிலைமை தொடர்வது பொருத்தமற்றதாகும். ஆகவே இலங்கையின் அமைச்சரவையில் அந்த விடயத்திற்குப் பொறுப்பாகவுள்ள அமைச்சரைச் (கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா) சந்தித்து பிரத்தியேகமான பேச்சுக்களில் ரூடவ்டுபடவுள்ளேன்.

குறிப்பாக அந்தப்பேச்சுவார்த்தை இருநாட்டு மீனவர்களின் பிரச்சினைகளுக்கும் சுமூகமான தீர்வொன்றை நிரந்தரமாகப் பெறுவதை மையப்படுத்தியதாகவே இருக்கப்போகின்றது.

ராஜபக்ஷக்களால் பெருமிதம் இலங்கையின் கடந்த ஆட்சியாளர்களும் அங்கு பணியாற்றிய எமது நாட்டு இராஜதந்திர சேவையில் இருந்த நிருவாகத்தினரும் ராஜபக்ஷக்கள் தொடர்பாக தவறான பிம்பத்தினை கட்டியெழுப்பியிருந்தனர்.

தற்போது, அந்த பிம்பம் அகன்றுள்ளது. இலங்கையின் உண்மையான நண்பன் இந்தியா என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனை ராஜபக்ஷ சகோதரர்கள் தமது ஆட்சியில் உறுதிப்படுத்தியுள்ளார்கள். 

அத்துடன், சீனாவுடன் இலங்கை நெருக்கம் கொண்டிருப்பதாக கூறப்படுகின்ற உணர்வுபூர்வமான விடயங்கள் அனைத்தும் தற்போது மீளவும் சீரமைக்கப்பட்டு வருகின்றது. கடந்த ஆட்சியாளர்கள் சீனாவுடன் சாய்ந்திருந்த நிலைமைகள் தற்போது காணப்படவில்லை.

அத்துடன், எமது நாட்டின் இராஜதந்திர உத்தியோகத்தர்களும் மாற்றப்பட்டுள்ளனர். இதனால் தவறான தோற்றப்பாடுகள் ஏற்படும் நிலைமைகள் தற்போது காணப்படவில்லை. இந்தியாவுக்கும்ரூபவ் இலங்கைக்கும் காணப்படும் நீண்டகாலமான உறவுகள் மீளவும் வலுப்பட ஆரம்பித்துள்ளன.

அண்மையில் நான் இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தனிகர் மொரகொடவைச் சந்தித்திருந்தேன். அவர் இந்திய, இலங்கை உறவுகளுக்கு புத்துயிர் அழிப்பதற்கான பாதைவரைபடமொன்றை உருவாக்கியிருக்கின்றார். அது பாராட்டத்தக்க விடயமாகும்.

இவ்விதமான இந்திய, இலங்கை உறவுகள் மீளவும் புத்துயிர் அளிக்கப்பட்டு மென்மேலும் வலுப்படவுள்ளன என்பதில் எவ்விதமான சந்தேகமில்லை அதற்கு என்னாலான செயற்பாடுகளையும் முன்னெடுப்பேன் என்றார்.
 

https://www.virakesari.lk/article/114526

 

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, கிருபன் said:

கடந்த ஆட்சியாளர்கள் சீனாவுடன் சாய்ந்திருந்த நிலைமைகள் தற்போது காணப்படவில்லை.

முழுப்பூசணிக்காயை ஒரு தட்டு சோற்றில் மறைத்த அகட விகட கவி சுப்பிரமணியன்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.