Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் கடிதம் தந்தேன்-400 பேருக்கு பிரான்ஸ், டென்மார்க், சுவிஸ் குடியுரிமை தந்தது- சீமான் திடுக் தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, goshan_che said:

அண்ணை,

நான் சீமான் யாரால் இயக்க படுகிறார் என்பதை பற்றியும், தமிழரசன், முத்துகுமார் பற்றியும், முத்துகுமார் மர்ம கொலை பற்றியும் மிக தெளிவாக எடுத்து சொல்லியுள்ளேன்.

ஆகவே ஒருவரின் பசப்பு வார்த்தைகளுக்கு அப்பால் அவரை நான் இன்ன ஆட்களின் கையாள் என கணித்து வைத்திருப்பதால் அவரை தமிழ் தேசியத்தின் பிடிப்பாக, எமக்கு நன்மை தரகூடிய ஒருவராக நான் கருதவில்லை.

ஆனால் எமது நலனை விட்டு விட்டு பார்த்தாலே கூட, தமிழ் நாட்டுக்கு திமுக, அதிமுகவை விட மிக கொடிய ஆபத்து பிஜேபி என்பதை நான் நம்புகிறேன். 

உங்களுக்கு பெரியாரை பிடிக்காமல் இருக்கலாம் ஆனால் கேரளாவில் கம்யூனிஸ்டுகள் போல, தமிழ்நாட்டில் பெரியார் விதைத்த அரசியல் சித்தாந்தம் இல்லாவிடில் இப்போ உபி போல காஞ்சி சங்கராசாரியார் ஆளும் மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றி இருப்பார்கள்.

ஆகவே ஆரிய அல்லது பிராமணிய அரசியலை அண்டவிடாது தடுக்க வேண்டியது அவசியம். 

ஆகவே தமிழ்நாட்டின் அரநியல் நலனை கருத்தில் கொண்டாலும் சீமான் பெரியாரை நீக்கி அந்த வெற்றிடத்தில் சவர்காரை நிறுவ முயற்சிப்பதால் நான் அவரை எதிர்கிறேன்.

முன்பே பலதடவை எழுதி விட்டேன் சீமான் பெரியார் நீக்கத்தை கைவிட்டால், தமிழர்களை தூயமைவாத சாதிய பிரிப்பில் ஈடுபடுவதை கைவிட்டால் அவரை மூர்க்கமாக எதிர்க்கும் தேவை என்போன்றவர்களுக்கு இராது.

தமிழ் நாட்டின் அரசியலை பொறுத்தவரை நான் யாரின் ஆதரவாளரும் இல்லை.

ஆனால் பிராமணிய/சனாதன சித்தாந்தத்தின் எதிரி. அவ்வளவுதான்.

இந்த அடிப்படையில்தான் சீமானை மட்டும் அல்ல, ரஜனியை, கமலையும் எதிர்கிறேன்.

இனப்படுகொலையாளியின் மகளை யாழ்களதிலேயே பிரபல்யபடுத்தும் அளவுக்கு கச்சிதமாக நான் முகமூடி அணிவதில்லை 🤣.

அதே போல் திமுகவை எதிர்ப்பது போல் பாசாங்கு காட்டியபடி, இனப்படுகொலை நேரமும், இன்றும் கருணாநிதியின் துரோகத்துக்கு வக்காலத்து வாங்கும் வைரமுத்துவை உங்களை போல நான் ஆதரிப்பதும் இல்லை.

எமது விடயத்தில் கருணாநிதி துரோகம் செய்தார் என்பதற்காக கருணாநிதி துரோகி என்று சொல்பவர்கள் எல்லாம் நல்லவர்கள் என்று ஏற்று கொள்ளும் அப்பாவியும் நானால்ல.

உங்களுக்கு எதிராக கருத்து எழுதியவரை முஸ்லிம் என கூறியவர் நீங்கள் தானே சார்??

  • Replies 204
  • Views 12k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, nunavilan said:

சாதிய கட்சி நடாத்தும் ராம்தாஸ், தொல்மாவளவன் பற்றி எங்கே ஒரு கருத்தையும் காணவில்லை.

அது வேறை  ஆஸ்பத்திரி 😁

 

  • கருத்துக்கள உறவுகள்
On 15/10/2021 at 19:05, விளங்க நினைப்பவன் said:

ஆகவே இந்தியாகிராமப்புற தமிழ் மக்களை முட்டாளாக வைத்திருந்தே அரசியல் செய்ய விரும்புகிறர் சீமான்.😂

ம்ம் மிச்ச திராவிட கட்சி ஆதரவாளர்கள்/ வாக்காளார்கள் எல்லாம் பி எச் டியாக்கும்.😜

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, nunavilan said:

தமிழ் நாட்டில் ஏன் இந்தியாவில் முழு அரசியல்வாதிகளும் (99 %) இதை தான் செய்கிறார்கள். 

முதலில் பி.ஜேபி.(  B team, C team, D team)(என்ன கிளித்தட்டோ நடக்குது)  பிறகு ஆர்.எஸ்.எஸ் .

தமிழ் நாட்டில் முழுக்கட்சிகளும் ஏதோ ஒருவகையில் தங்களுக்குள்ளும் , காங்கிரஸ், பி.ஜே.பி என காலத்துக்கு காலம் கூட்டு வைத்த வண்ணமே உள்ளார்கள். அவர்களுக்கான விமர்சனங்கள் உங்களால் வைக்கப்படாதது உங்களின் இரட்டை வேடத்தை காட்டுகிறது.

 

பிராமணிய ஜெயலலிதா  ஆட்சியில் இருந்த  போது  ஒரு எதிர்ப்பையும் காணவில்லையே?? ஏன் ஏன்?

நுணா,

நான் சீமானின் மீது விமர்சனம் வைத்தால் அதை முறியடிக்காமல் என் மீது விமர்சனம் வைக்கிறீர்கள். பரவாயில்லை பதில் சொல்கிறேன் (இந்த உங்கள் விமர்சனமும் என் பதிலும் இதுதான் முதற் தடவை அல்ல).

1. பசப்பு வார்த்தை இந்தியா அல்ல உலகம் எங்கும் அரசியல்வாதிகள் கூறுவதுதான். ஆனால் நான் சொன்னது தமிழ் தேசியம் பற்றிய பசப்பு வார்த்தைகளை. சீமானின் தமிழ் தேசியம், தலைவர், எமது பிரச்சனை மீதான பசப்பு வார்த்தையில் எனக்கு நம்பிக்கை இல்லை. தமிழ் நாட்டில் வேறு அரசியல்வாதிகள் யாரும் இப்படி இப்போ சொல்வதில்லை. ஆனால் 2009 இல் வைகோவின் நடவடிக்கை பற்றி இதே யாழில் (நீங்கள் இணைத்த ஜெகத் காஸ்பர் திரியில்) எழுதியுள்ளேன். ஆனால் வைகோ செய்த உதவிகளையும் நினைவு கூறுவேன். அவரை ஒருபோதும் தமிழன் இல்லை என ஒதுக்க முனைவதை ஏற்க மாட்டேன்.

2. நீங்கள் இந்த கேள்வியை கேட்டது ஆச்சரியமாக உள்ளது. ஆர் எஸ் எஸ் தான் பிஜேபியின் ideological mentor என்பதை அவர்களே வெளிபடையாக ஏற்கிறார்கள். ஆர் எஸ் எஸ் சின் அரசியல் கட்சிதான் பிஜேபி. ஒன்றின் பி/சி டீம் என்றால் மற்றையதினந்தும்தான்.

3. திமுக பிஜேபி கூட்டு இருந்த காலத்தில் நான் யாழில் எழுதுவதில்லை. ஆனால் அப்போ கடும் விமர்சனத்தை வைத்தேன். ஜெயலலிதா கூட்டின் போதும் அப்படியே. நான் யாழில் எழுத தொடங்கிய பின் முந்தைய திராவிட கட்சிகளின் பிஜேபி  கூட்டை விமர்சித்து எழுதியுள்ளதோடு, தமிழ்நாட்டில் முதல் பிஜேபி சீட்டுக்கு அட்சாரம் போட்டவர் கருணாநிதி என்பதையும் எழுதியிள்ளேன். நிச்சயமாக சுய, குறுகிய லாப நோக்கில் பிஜேபியை நாட்டில் காலூன்ற விட்ட அனைவரும் கடும் விமர்சனதுக்கு உரியோரே.

ஆனால் இதுவரை தமிழ்நாட்டில் எந்த கட்சியும் செய்யாத முயற்சி “பெரியார் நீக்க அரசியல்”. இது பிஜேபி தமிழ் நாட்டில் alternative government என்ற நிலைக்கும் ஈற்றில் ஆளும் கட்சி என்ற நிலைக்கும் இட்டு செல்லும்.

கூட்டணியில் ஓரிரு சீட் வெல்வதை போல அல்ல - அது மிகவும் அபாயகரமான போக்கு -ஆகவே, பெரியாரிய சித்தாந்தத்தை (பெரியாரை அல்ல) தக்க வைக்க சீமானை கடுமையாக எதிர்ப்பதை தவிர வேறு வழி இல்லை.

4. முன்பு இதை பற்றி எழுதியுள்ளேன். ஜெயலலிதா பிராமணராக இருந்த போதும், சமூக நீதி விடயத்தில் அவர் கருணாநிதியை விட கறாராக இருந்தார். இட ஒதுக்கீட்டை இந்திய அரசியல் அமைப்பின் சரத்தில் சேர்த்தது மூலம் உச்ச நீதிமன்று அதை பறிப்பதை தடுத்தார். இருக்கும் வரை மோடியை அளவோடு வைத்திருந்தார். நீட் உட்பட பலதை எதிர்த்தார். ஆகவே அவரிற்கு சோ போன்றோர் அறிவுரை கூறியதாக சொன்னபோதும், அவர் ஒரு பிராமணராக இருந்த போதும் அவரும் சமூக நீதியினை பேணினார், பெரியாரிய சித்தாந்தத்தை நீக்கும் அரசியல் செய்யவில்லை ஆகவே - பெரியாரை நீக்கி அந்த வெற்றிடத்தை சவர்காரால் நிரப்ப முயற்சிக்கிறார் என்ற பயம் ஜெயாவின் மேல் ஏற்படவில்லை.

ஆனால் அவரின் ஏனைய பல நடவைக்கைகளை விமர்சித்துள்ளேன். 

ஒரு போதும் அவரை ஈழதாய் என்றோ, இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்றோ நான் எழுதியதில்லை🤣

4. இராமதாசை ஆணவ படுகொலைகள் திரியில் மிக கடுமையா விமர்சிதுள்ளேன். திருமா இலங்கை வந்ததை மிக கடுமையாக விமர்சிதுள்ளேன். ஆனால் அவரின் தலித் அரசியல் சாதி அரசியல் அல்ல. அடக்குபவரின் சாதி அரசியலையும், அடக்கபடுபவரின் தலித்திய அரசியலையும் ஒன்றாக “சாதி அரசியல்” என பார்ப்பது, பார்பவரின் சமூகநீதி பற்றிய புரிந்துணர்வின்மையே என்பது என் நிலைப்பாடு. தலித் அரசியலுக்கு நான் எப்போதும் ஆதரவுதான். அதில் சமரசம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, nunavilan said:

உங்களுக்கு எதிராக கருத்து எழுதியவரை முஸ்லிம் என கூறியவர் நீங்கள் தானே சார்??

ஓம் அந்த கருத்தில் என்றும் மாற்றம் இல்லை. அது தனி மனித தாக்குதல் என்று சம்பந்த பட்டவர் சொன்ன போது இல்லை என மறுத்து என் தன்னிலை விளக்கத்தை கொடுத்தேன்.

இப்போ மேலே கூட பிரச்சன்ன சில்வாவின் மகளுக்கு ஆலவட்டம் பிடித்ததை பற்றி எழுதியுள்ளேன். 

நான் ஒரு குற்றசாட்டை வைக்க முன்னம் மிக அவதானமாக அவதானித்து, என் சந்தேகத்தை நிவர்த்தி செய்ய வாய்ப்பும் கொடுத்து, அதன் பின்பே அதில் இறுதி முடிவு எடுத்தேன். அதை நிர்வாகம் அல்லது நிர்வாகத்தில் இருக்கும் ஒருவர் இரசிக்காமல் போகலாம்.

ஆனால் நான் என் மனதில் பட்டதை, விதிகளுக்கு முடிந்தளவு உட்பட்டு எழுதியே போவேன், நிர்வாகிகளுக்கு நோகாமல் எழுதுவதில்லை. 

பிடிக்காவிட்டால் வெட்டி விட்டு போகட்டும். 

ஏன் வெட்டினீர்கள் என்று கேட்பதையே 2015 காலத்தோடு விட்டு விட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Quote

ஒரு போதும் அவரை ஈழதாய் என்றோ, இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்றோ நான் எழுதியதில்லை🤣

இதை சீமான் ஈழதமிழர் நிர்க்கதியான நேரம் அவரின் வார்த்தைகள் (யாருக்கும்) ஒரு அரவணைப்பை தந்தது என  அவரே சொல்லி உள்ளார். நீங்கள் விளங்காது போல் நடிக்கிறீர்கள். ஏனெனில் நீங்கள் சீமான் மீது உள்ள காழ்ப்புணர்வு என்பதை அடித்து  சொல்வேன்.

Quote

நிர்வாகத்தில் இருக்கும் ஒருவர் இரசிக்காமல் போகலாம்.

பிறகு  மற்வர்களுக்கு பாடமெடுக்க கூடாது என்பதற்காகவே எழுதினேன்.

Quote

இராமதாசை ஆணவ படுகொலைகள் திரியில் மிக கடுமையா விமர்சிதுள்ளேன். திருமா இலங்கை வந்ததை மிக கடுமையாக விமர்சிதுள்ளேன். ஆனால் அவரின் தலித் அரசியல் சாதி அரசியல் அல்ல. அடக்குபவரின் சாதி அரசியலையும், அடக்கபடுபவரின் தலித்திய அரசியலையும் ஒன்றாக “சாதி அரசியல்” என பார்ப்பது, பார்பவரின் சமூகநீதி பற்றிய புரிந்துணர்வின்மையே என்பது என் நிலைப்பாடு. தலித் அரசியலுக்கு நான் எப்போதும் ஆதரவுதான். அதில் சமரசம் இல்லை.

மக்களின் பஸ்களை கொழுத்திய ராம்தாஸ் குழு பற்றிய உங்களின் சமூகநீதி அசர வைக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nunavilan said:

இதை சீமான் ஈழதமிழர் நிர்க்கதியான நேரம் அவரின் வார்த்தைகள் (யாருக்கும்) ஒரு அரவணைப்பை தந்தது என  அவரே சொல்லி உள்ளார். நீங்கள் விளங்காது போல் நடிக்கிறீர்கள். ஏனெனில் நீங்கள் சீமான் மீது உள்ள காழ்ப்புணர்வு என்பதை அடித்து  சொல்வேன்.

நீங்கள் சீமான் சொல்வதை எல்லாம் நம்பும் மன நிலையில் இருப்பதால் இதை நம்புவதாக நான் அடிக்காமல் சொல்வேன்.

ஜெயா புலிகளை தீய சக்கி என்று கடைசிவரை விழித்தவர், தலைவரை தூக்கில் போட வேண்டும் என தீர்மானம் இயற்றியவர்.

கருணாநிதி வலம் போனால், தான் இடம் போவது தனக்கு ஆதாயம் என்ற அடிப்படையில் அவர் அந்த நேரம் ஈழம் சார்பாக கொஞ்சம் தேர்தல் நேரத்தில் மட்டும் இளக்கம் காட்டுவது போல நடித்தார், அந்த நாடகத்துக்கு சீமானும் ஒரு நல்ல குணச்சித்திர வேடம் ஏற்று நன்றாக ஒப்பேற்றினார்.

இது எனது பார்வை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எமக்கு தமிழ்நாட்டு அரசியல் தேவையில்லை. இருந்தாலும் தேவையான நேரத்தில் தேவையானதை கரம் பிடிக்க வேண்டும். அவ்வளவுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, nunavilan said:

பிறகு  மற்வர்களுக்கு பாடமெடுக்க கூடாது என்பதற்காகவே எழுதினேன்

தவறு செய்வது மனித இயல்புதானே நுணா அப்படி நானும் தவறுகளுக்கு அப்பாற்பட்டவன் அல்ல. இப்போ பாருங்கள் ஒரு நிர்வாகியாக இருந்து கொண்டே சீமானை பற்றிய திரியில் கோஷானை பற்றி நீங்கள் எழுதுகிறீகள். அது போலத்தான்.

32 minutes ago, nunavilan said:

மக்களின் பஸ்களை கொழுத்திய ராம்தாஸ் குழு பற்றிய உங்களின் சமூகநீதி அசர வைக்கிறது.

நான் மேலே எங்கே இராமதாசுக்கு ஆதரவாக எழுதினேன் - இராமதாசுக்கு எதிர் அரசியல் செய்யும் திருமாவின் அரசியலை பற்றி அல்லவா எழுதியுள்ளேன்.

குறிப்பு

நானறிய இராமதாஸ் பஸ் கொழுத்தி அல்ல அது அதிமுக பிறகு அழகிரி செய்தது.

ஆனால் இராமதாஸ் குடிசை கொழுத்தி, காடு வெட்டி. பஸ்சையும் கொழுத்தி இருந்தால் சுட்டி காட்டவும் திருத்தி கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, goshan_che said:

தவறு செய்வது மனித இயல்புதானே நுணா அப்படி நானும் தவறுகளுக்கு அப்பாற்பட்டவன் அல்ல. இப்போ பாருங்கள் ஒரு நிர்வாகியாக இருந்து கொண்டே சீமானை பற்றிய திரியில் கோஷானை பற்றி நீங்கள் எழுதுகிறீகள். அது போலத்தான்.

நான் மேலே எங்கே இராமதாசுக்கு ஆதரவாக எழுதினேன் - இராமதாசுக்கு எதிர் அரசியல் செய்யும் திருமாவின் அரசியலை பற்றி அல்லவா எழுதியுள்ளேன்.

குறிப்பு

நானறிய இராமதாஸ் பஸ் கொழுத்தி அல்ல அது அதிமுக பிறகு அழகிரி செய்தது.

ஆனால் இராமதாஸ் குடிசை கொழுத்தி, காடு வெட்டி. பஸ்சையும் கொழுத்தி இருந்தால் சுட்டி காட்டவும் திருத்தி கொள்கிறேன்.

ரைட்டு. நான் உங்களை முஸ்லிம் என எழுதினேனா?  என்பது தான் எனது  point.

ராமதாசின் குண்டர்களென்பதை தமிழ்நாடே அறியும்.

16 செக்கன் காணொளிக்கு குத்தி முறியும் நீங்கள் மிகுதியையும் பார்த்து கருத்து எழுத  முடியுமா? இல்லை  தப்பி  ஓட்டமா?
குறிப்பாக கோடிக்கணக்கில் மோடி அரசால் குடியேறிகளாகும் வடநாட்டவர்கள் பற்றி தமிழ் நாட்டில் யாரும் வாயே திறக்கவில்லை.(பெரிய கைக்கள்) உங்களின் பி ரீம், சீ ரீம் எங்கோ இடிக்கிறதே??

 

1 hour ago, goshan_che said:

நீங்கள் சீமான் சொல்வதை எல்லாம் நம்பும் மன நிலையில் இருப்பதால் இதை நம்புவதாக நான் அடிக்காமல் சொல்வேன்.

ஜெயா புலிகளை தீய சக்கி என்று கடைசிவரை விழித்தவர், தலைவரை தூக்கில் போட வேண்டும் என தீர்மானம் இயற்றியவர்.

கருணாநிதி வலம் போனால், தான் இடம் போவது தனக்கு ஆதாயம் என்ற அடிப்படையில் அவர் அந்த நேரம் ஈழம் சார்பாக கொஞ்சம் தேர்தல் நேரத்தில் மட்டும் இளக்கம் காட்டுவது போல நடித்தார், அந்த நாடகத்துக்கு சீமானும் ஒரு நல்ல குணச்சித்திர வேடம் ஏற்று நன்றாக ஒப்பேற்றினார்.

இது எனது பார்வை.

சீமான் சொல்வதை நான் நம்புவதில்லை. சீமான் என்ன சொன்னாலும் முழு நேர ஊழியனாக எதிர்க்குமொருவர்(நல்லது கெட்டது பற்றியெல்லாம் எந்த கவலையும் இல்லை). இதற்கு மேலாகவும் செய்கிறீர்கள். (அதைப்பற்றி நான் எழுத போவதில்லை). அதனால் தான் உங்களுக்கு பதிலளிக்க வேண்டி உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

ரைட்டு. நான் உங்களை முஸ்லிம் என எழுதினேனா?  என்பது தான் எனது  point.

ராமதாசின் குண்டர்களென்பதை தமிழ்நாடே அறியும்.

16 செக்கன் காணொளிக்கு குத்தி முறியும் நீங்கள் மிகுதியையும் பார்த்து கருத்து எழுத  முடியுமா? இல்லை  தப்பி  ஓட்டமா?
குறிப்பாக கோடிக்கணக்கில் மோடி அரசால் குடியேறிகளாகும் வடநாட்டவர்கள் பற்றி தமிழ் நாட்டில் யாரும் வாயே திறக்கவில்லை.(பெரிய கைக்கள்) உங்களின் பி ரீம், சீ ரீம் எங்கோ இடிக்கிறதே??

 

சீமான் சொல்வதை நான் நம்புவதில்லை. சீமான் என்ன சொன்னாலும் முழு நேர ஊழியனாக எதிர்க்குமொருவர்(நல்லது கெட்டது பற்றியெல்லாம் எந்த கவலையும் இல்லை). இதற்கு மேலாகவும் செய்கிறீர்கள். (அதைப்பற்றி நான் எழுத போவதில்லை). அதனால் தான் உங்களுக்கு பதிலளிக்க வேண்டி உள்ளது.

1. தப்பி ஓட்டமா? இங்கே என்ன சண்டையா நடக்குது நுணா? கருத்து பரிமாற்றம். இதில் ஒரு கட்டத்துக்கு மேல் கருத்தொற்றுமை வராவிடில் agree to disagree அவ்வளவுதான். நீங்கள் 4 ம் பக்கதில் இணைக்க முதல், இந்த செய்தி இங்கே இணைக்கபட முன்பே நான் முழு காணொளியையும் பார்த்து விட்டேன். சீமான் புருடா விட்டார் என்ற கருத்தில் மாற்றமில்லை.

2. தயவு செய்து நான் இராமதாஸ் பற்றி முதலில் நான் எழுதியதை வடிவாக வாசியுங்கள். ஆணவ கொலை செய்யும் அவரின் அரசியலை நான் ஆதரிக்கவில்லை அதை எதிர்க்கும் தாழ்தப்பட்ட மக்களின் அரசியலைதான் ஆதரிப்பதாக எழுதினேன். 

3. ஏன் வாய் திறக்காமல்? வாக்காளர் அட்டையில் குளறுபடி, ரயில்வே வேலையில் குளறுபடி என பிஜேபி தவிர்ந்த கட்சிகள் எல்லாம் தமிழ்நாட்டில் வடநாட்டவர் வரத்து குறித்து குரல் கொடுத்த படிதான் உள்ளன.  பி டீம் என்பது அதுவல்ல. இன்றைக்கு இஸ்லாமியரும், கிறீஸ்தபரும் “தாய் மதம்” திரும்ப வேண்டும் என்று சொல்லியுள்ளார் சீமான். இது முழுக்க ஆர் எஸ் எஸ் தத்துவம். இப்படியானவற்றால்தான் சீமானை பிஜேபி/ஆர் எஸ் எஸ் பி டீம் என்கிறோம்.

இதை உங்களுக்கு வருட கணக்க்காக விளங்க படுத்தி நான் களைத்து விட்டேன். பி டீம் என்றால் நேரடியான டீம் அல்ல. எதிர்ப்பது போல் போக்கு காட்டியபடி பிஜேபி முன்னுக்கு வர இடைவெளி ஏற்படுத்தி கொடுக்கும் தரகர்கள். சீமான் மட்டும் அல்ல கமலும், ரஜனியும் கூட இப்படியான தரகர்களே.

பெரியாரை நீக்கி விட்டு அதில் “ஆன்மீக அரசியலை” புகுத்துவது, அல்லது “மனுஸ்மிருதி பற்றி இப்போ கதைக்க வேண்டியதில்லை” என்பது அல்லது “முஸ்லீம்களும்,கிறீஸ்தவரும் தாய் மதம் திரும்ப வேண்டும்” என்பது இவை எல்லாமே சனாதன நச்சை மறைமுகமாக நாட்டில் பரப்பி அதன் மூலம் பிஜேபிக்கு ஏதுவான சூழலை உருவாக்கும் கைங்காரியமே. இதை செய்வபர்கள் யாரும் பீஜேபியின் பி சி டீம்தான்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

சீமான் என்ன சொன்னாலும் முழு நேர ஊழியனாக எதிர்க்குமொருவர்(நல்லது கெட்டது பற்றியெல்லாம் எந்த கவலையும் இல்லை).

சீமான் சொல்வதை முழு நேரமாக எதிர்கிறேன் என்பதில் ஒரு ஒளிவு மறைவும் இல்லை. நான் எனது அபிப்பிராயத்தின்ன்படி நல்லது கெட்டது என்று எனக்கு படுவதன் படியே இந்த நிலைப்பாட்டை எடுக்கிறேன். சீமானை நான் எதிர்க்கும் காரணத்தை பல பத்தாவது தடவையா மேலே இன்னொருதரம் எழுதியிள்ளேன். நல்லது கெட்டது பற்றி கவலைபடாமல் சீமானை நான்  எதிர்க்கிறேன் என்பது உங்கள் ஒப்பீனியன். அது உங்கள் உரிமை ஆனால் அதை உண்மை என நான் ஏற்க தேவையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

இதற்கு மேலாகவும் செய்கிறீர்கள். (அதைப்பற்றி நான் எழுத போவதில்லை). அதனால் தான் உங்களுக்கு பதிலளிக்க வேண்டி உள்ளது.

இதில் நீங்கள் உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுவதாக எனக்கு படுகிறது.

அல்லது இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டி, பூடகமாக எழுதி என் மேல் சேறடிக்கும் மலின உத்தியோ என்றும் எண்ணத்தோன்றுகிறது.

நான் யாழில் எழுத தொடங்கிய காலத்தில் நீங்கள் என்னோடு கருத்தாடல் செய்துவிட்டு அதே திரியில் மட்டுறுத்தலும் செய்து என் கருத்துக்களை வெட்டியது பாரபட்சமானது என நமக்கிடையே ஒரு பிணக்கு உருவானது. அதை பின்னர் நான் அப்படியே விட்டு விட்டேன். ஆனால் நீங்கள் அதை கறுவியம் வைத்துள்ளீர்களோ எனவும் எண்ண தோன்றுகிறது.

ஒரு நிர்வாகியாக நீங்கள் இப்படி பூடகமாக  எழுதுவது என் மீது தேவையற்ற சந்தேகத்தை வாசகர்களுக்கு ஏற்படுத்தும்.

நீங்கள் அது என்ன என்றாலும் அதை பொது வெளியில் போட்டுடைக்கும் முழு அனுமதியை நான் இப்போ தருகிறேன்.

அப்படி என்ன “இதற்கு மேலாகவும்” நான் செய்கிறேன் என்பதை தயவு கூர்ந்து வெளிப்படையாக எழுதி விடுங்கள்.

ஒருவர் மீது குற்றம் சுமத்தும் போது அது என்ன குற்றம் அதன் ஆதாரம் என்ன என்பதை அவருக்கு சொல்லி, ஒரு right to reply உரிமையை அவருக்கு கொடுக்க வேண்டியது அடிப்படை நியாயாதிக்கம்.

அப்படி உங்களால் சொல்ல முடியாவிட்டால், உங்கள் வார்த்தைய வாபஸ் பெற்று கொள்ள வேண்டும்.

ஒரு நிர்வாகியாக இருந்து கொண்டு பொத்தாம் பொதுவில் ஒருவர் மீது பூடகமாக குற்றசாட்டை வீசி விட்டு போவது நியாயமில்லை என்பதை நீங்களும் ஏற்பீர்கள் என நினைகிறேன்.

பிகு

இப்போதும் உங்கள் மீது ஒரு மனத்தாங்கலும் இல்லை. ஆனால் ஒன்றில் அப்படி என்ன செய்கிறேன் என இதே திரியில் எழுதுங்கள் அல்லது உங்கள் பூடகமான குற்றசாட்டை மீளப் பெறுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பிற்சேர்க்கை

இதே right to reply ஐ இன்னொரு கள உறவு மீது சந்தேகம் சொல்லும் போது கோஷான் கொடுத்தாரா? என்ற கேள்வியை நீங்கள் முன்வைக்கலாம்.

ஆம் கொடுத்தேன். ஒரு திரியில் எனது சந்தேகங்களை முழுவதுமாக பட்டியல் இட்டு - நீங்கள் யாழில் இப்படியா இயங்குகிறீகள் என கேட்டேன். அது பதிலின்றி கடந்து போகப்பட்டது, அதே போல் திண்ணையிலும்.

ஆனால் அப்படி நான் சொன்னது தவறு என்றே வைத்தாலும் ( தவறு என நான் ஏற்கவில்லை) அதே தவறை ஒரு நிர்வாக உறுபினராக நீங்கள் செய்ய கூடாதல்லவா?

 

  • கருத்துக்கள உறவுகள்

கீழ் சொன்ன தகவல் உண்மை என்றால்.. இது பிரித்தானியாவில் விண்ணப்பிக்கப்பட்டிருந்தால்.. நீங்கள் சமர்ப்பித்துள்ள ஆவணங்கள் போதாது.

லைவ் இன் த யு கே சான்றிதழ் இல்லையேல் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

மேலும்..  உங்கள் சமூக சேவைகள் தொடர்பான நற்சான்றிதழ் வழங்கப்படின்.. குறிப்பாக உள்ளூர் எம் பி அல்லது கவுன்சிலர் அதனை உறுதிப்படித்தி தரின் அதுவும் உங்கள் விண்ணப்பத்திற்கு வலுச்சேர்க்கும்.

மேலும்.. சீமான் ஒரு கட்சித் தலைவர் மற்றும் அவரது கட்சி அங்கத்தவர்களுக்கு அரசியல் ரீதியான அச்சுறுத்தல்.. மற்றும் அவர்களின் அரசியல் நிலைப்பாடு காரணமாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்படுதல்.. கொலை செய்யப்படுதலுக்கான வாய்ப்புக்கள் இருப்பின்.. சீமானின் கட்சி உறுப்பினர் என்ற உறுதிப்படுத்தல் கடிதத்தின் மூலம்.. அந்தக் கட்சி சார்ந்து ஆபத்துக்களை எதிர்கொள்ளும் ஒருவர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றால்.. அரசியல் தஞ்சம் கோரும் விண்ணப்பத்திற்கு வலுச்சேர்க்க முடியும்.

சீமான் அதையே தான் குறிப்பிட்டிருப்பார். ஆனாலும் சீமான் வழங்கக் கூடிய சமூகப் பணி தொடர்பான நற்சான்று கடிதங்களும் குடியுரிமை விண்ணப்பத்திற்கு வலுச்சேர்க்கலாம். இருந்தாலும் குறித்த எங்கு பிரஜா உரிமை பெற விரும்புகிறார்களோ அங்கு.. சமூக சேவைக்கான நற்சான்றிதழ் பெறப்படுதல் கூடிய அனுகூலமாகும். அதனை சீமான் உறுதிப்படுத்தி வழங்கலாம்.. தனது வெளிநாட்டு தொடர்பாலர்களின் சமூக சேவைகளை உறுதி செய்து. 

ஆனால்.. சீமானின் கடிதம் ஒன்று மட்டும் எல்லாத்தையும் தீர்மானிக்காது. அது வலுச்சேர்க்கப் பயன்படுத்தப்படலாம். அதை தான் சீமானும் குறிப்பிட்டிருக்கிறார்.. தனது எளிய மொழியில். அவ்வளவும் தான்.

மிகுதி எல்லாம் இங்கு கருத்தாவது சீமான் மீதான வெறுப்புணர்ச்சி மட்டுமே. 

10 hours ago, Elugnajiru said:

எனது பிரஜாவுரிமை விண்ணப்பத்தைக் கையாண்டு முடிவுசெய்ய இழுத்தடிக்கிறாங்கள்

எனது விண்ணப்பத்துடன் கீழ்வருவனவற்றை இந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அமைய இணைத்திருக்கிறேன்.

எனது வரி செலுத்துகை சம்பந்தமான மூன்று வருட அறிக்கை

எனது மொழித்திறன் விடயமாக தகுதிகாண் சான்றிதழ்

எனது தொழில் முறைக்கல்வி தேர்ச்சி தொடர்பான சான்றிதழ்.

இவை அனைத்தையும் சமர்பித்தும் அவஙள் இழுத்தடிக்கிறாஙள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆம் மிகவும் கேவலமான தனிமனத தாக்குதல். எனக்கு சீமான் மீது எந்தவித‌ வெறுப்பும் இல்லை. நான் பொதுவாக இத‌தகைய திரிகளில் இருந்து வில‌கியே இருப்பவன். தீம்கா என்னால் என்னவென்றே எனக்கு தெரியாது. நான் தீம்காவில் ஆள் என்கின்றார்கள்? இந்த செய்தயை நான் ஒர் இந்திய செய்தி தளத்தில் இருந்தே வாசித்துவிட்டு வெட்டி ஒட்டினேன். ஆனால் இது எனக்கு ஒரு sensational news ஆக பட்டது ஆகவே இணைத்தேன். 

அதற்கு இவர் எழுதிய பதிலை பதில் மிகவும் தவறானது. அதற்கு இவர் என்னுடை இனத்தை இழுத்து பேசினார். அகதிகளுடன் நேரில் வாழ்ந்து பார்த்த எனக்கு இவர் எழுதியது சிரிப்பக இருந்தது. 

இதற்கு நுனாவிலான் என்ற நிர்வாகியும் லயிக்கி இருந்தார். 

ஒருவருருடய தொழில் / வாழும் இடம் / இனம் / குலம் இவைகளா தமிழ் தேசியத்ததை தீர்மனிகின்றது?

நிர்வாகம் நாதமுனியின் இந்த கருத்தை தூக்கும்படி பகிரங்கமாக வேண்டுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

ஆம் மிகவும் கேவலமான தனிமனத தாக்குதல். எனக்கு சீமான் மீது எந்தவித‌ வெறுப்பும் இல்லை. நான் பொதுவாக இத‌தகைய திரிகளில் இருந்து வில‌கியே இருப்பவன். தீம்கா என்னால் என்னவென்றே எனக்கு தெரியாது. நான் தீம்காவில் ஆள் என்கின்றார்கள்? இந்த செய்தயை நான் ஒர் இந்திய செய்தி தளத்தில் இருந்தே வாசித்துவிட்டு வெட்டி ஒட்டினேன். ஆனால் இது எனக்கு ஒரு sensational news ஆக பட்டது ஆகவே இணைத்தேன். 

அதற்கு இவர் எழுதிய பதிலை பதில் மிகவும் தவறானது. அதற்கு இவர் என்னுடை இனத்தை இழுத்து பேசினார். அகதிகளுடன் நேரில் வாழ்ந்து பார்த்த எனக்கு இவர் எழுதியது சிரிப்பக இருந்தது. 

இதற்கு நுனாவிலான் என்ற நிர்வாகியும் லயிக்கி இருந்தார். 

ஒருவருருடய தொழில் / வாழும் இடம் / இனம் / குலம் இவைகளா தமிழ் தேசியத்ததை தீர்மனிகின்றது?

நிர்வாகம் நாதமுனியின் இந்த கருத்தை தூக்கும்படி பகிரங்கமாக வேண்டுகிறேன்.

என்னை, வடகிழக்குக்கு வெளியேயானவன், இஸ்லாமியன் என்றவர், உங்களை, தென் இலங்கையர் என்பதா என்கிறார்.

முதலில் உங்கள் பெயர் கொழும்பான். அதை மாத்தாமல், தென் இலங்கையர் தவறு  என்பதே தவறானதா , இல்லையா?

புரியவில்லை, நண்பா.....

மேலும், நீங்கள், என்னை.... சிங்களத்தில், பொய் பொத்தல் என்றீர்கள், நியாயமா?

ரத்தம், தக்காளி சட்டினி கதை தானே?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

என்னை, வடகிழக்குக்கு வெளியேயானவன், இஸ்லாமியன் என்றவர், உங்களை, தென் இலங்கையர் என்பதா என்கிறார்.

முதலில் உங்கள் பெயர் கொழும்பான். அதை மாத்தாமல், தென் இலங்கையர் தவறு  என்பதே தவறானதா?

புரியவில்லை, நண்பா.....

மேலும், நீங்கள், என்னை.... சிங்களத்தில், பொய் பொத்தல் என்றீர்கள், நியாயமா?

ரத்தம், தக்காளி சட்டினி கதை தானே?

உங்களை வடக்கு கிழக்கிற்கு வாழ்வியலுக்கு அந்நியமானவன் என கூறுவது நீங்கள் அந்த மண்ணின் கலாச்சாரத்தை, அரசியலை, பொருளாதாரத்தை, புவியியலை தலைகீழாக விளங்கி கொண்டு அதன் அடிப்படையில் கருத்துக்களை எழுதுவதால். 

ஆனால் ஒரு அகதி என்பவன் வடக்கு கிழக்குக்கு மட்டும் உரித்தானவன் அல்ல. ஒரு அகதியின் வலியை அறிய உலகின் எந்த மூலையில் இருந்து கொண்டும் எழுத முடியும்.

மேலும் இங்கே கொழும்பானோ வேறு எந்த உறவோ எந்த இடத்திலும் அகதிகளை பழிக்கவோ, வசை பாடவோ இல்லை. அப்படி பழித்திருந்தால் - நீங்கள் சொல்வது போல் அகதிகள் பற்றிய புரிதல் அற்றவர்கள் என்ற குற்றசாட்டு சரியானதாக இருக்கும். 

எல்லாரும் சீமானின் வார்த்தைகளை பற்றி கதைக்க, நீங்கள் அகதிகள் பற்றி தேவையில்லாமல் ஒரு தனி டிரக்கில் டிராமா போட்டீர்கள். அதுதான் சுட்டி காட்டப்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, colomban said:

ஆம் மிகவும் கேவலமான தனிமனத தாக்குதல். எனக்கு சீமான் மீது எந்தவித‌ வெறுப்பும் இல்லை. நான் பொதுவாக இத‌தகைய திரிகளில் இருந்து வில‌கியே இருப்பவன். தீம்கா என்னால் என்னவென்றே எனக்கு தெரியாது. நான் தீம்காவில் ஆள் என்கின்றார்கள்? இந்த செய்தயை நான் ஒர் இந்திய செய்தி தளத்தில் இருந்தே வாசித்துவிட்டு வெட்டி ஒட்டினேன். ஆனால் இது எனக்கு ஒரு sensational news ஆக பட்டது ஆகவே இணைத்தேன். 

அதற்கு இவர் எழுதிய பதிலை பதில் மிகவும் தவறானது. அதற்கு இவர் என்னுடை இனத்தை இழுத்து பேசினார். அகதிகளுடன் நேரில் வாழ்ந்து பார்த்த எனக்கு இவர் எழுதியது சிரிப்பக இருந்தது. 

இதற்கு நுனாவிலான் என்ற நிர்வாகியும் லயிக்கி இருந்தார். 

ஒருவருருடய தொழில் / வாழும் இடம் / இனம் / குலம் இவைகளா தமிழ் தேசியத்ததை தீர்மனிகின்றது?

நிர்வாகம் நாதமுனியின் இந்த கருத்தை தூக்கும்படி பகிரங்கமாக வேண்டுகிறேன்.

நீங்கள் மட்டும் யாழ்ப்பாணிகள் பனங்கொட்டைகள் என்றெல்லாம் எழுதலாம்.

உங்கள் இனம் தமிழ் இனம் இல்லை என்று ஒத்துக் கொண்டதற்கு நன்றிகள். ( முன்னர் ஒத்துக்கொண்டீர்களா என்று தெரியவில்லை)

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு, நீட்டி, முழக்கி எழுதி வைப்பதை வாசிக்க நேரமும் இல்லை. விருப்பமும் இல்லை.

இந்த தளத்தில் சில, நுண்ணிய வேலைகள் நடந்து வருவது தெரிகிறது.

ஒருவர், விஜய் முழு தமிழர் இல்லையே என்பார். அடுத்தவர் முழு விளக்கம் தருவார்.

சீமான் கிறிஸ்தவர் என்பார். பாஜக வின் பி ரீம் தானே என்பார்

முற்று முழுதான திமுக அனுதாப நிலைப்பாடு.

கோத்தா அமேரிக்காவில், பூ போடும் இரட்டை நிலைப்பாடு திரியில், குழப்பம் தரும் கடிதம் இடுவார்.

கேட்டால், நீ வடகிழக்கு இல்லை, இஸ்லாமியன் என்று தனிமனித தாக்குதலில் போவார்கள்.

அதாவது தமது கருத்தியலை விதைப்பது.

தனிமனித தாக்குதல் தொடர்பில் நிர்வாகம் உறுதியாக நடவடிக்கை எடுப்பதால், இப்போது தவிப்பு.

சீமானை எதிர்ப்போர் இருவகை; இரண்டாவது வகையினர் நோக்கமே வேறு. முதலாவது வகையினர், இவர்களை புரிந்து விலகி இருப்பதே நல்லது.

இதை புதிதாக சொல்லவில்லை, முன்பும் சொல்லி இருக்கிறேன்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

எனக்கு, நீட்டி, முழக்கி எழுதி வைப்பதை வாசிக்க நேரமும் இல்லை. விருப்பமும் இல்லை.

இந்த தளத்தில் சில, நுண்ணிய வேலைகள் நடந்து வருவது தெரிகிறது.

ஒருவர், விஜய் முழு தமிழர் இல்லையே என்பார். அடுத்தவர் முழு விளக்கம் தருவார்.

சீமான் கிறிஸ்தவர் என்பார்.

முற்று முழுதான திமுக அனுதாப நிலைப்பாடு.

கோத்தா அமேரிக்காவில், பூ போடும் இரட்டை நிலைப்பாடு திரியில், குழப்பம் தரும் கடிதம் இடுவார்.

கேட்டால், நீ வடகிழக்கு இல்லை, இஸ்லாமியன் என்று தனிமனித தாக்குதலில் போவார்கள்.

அதாவது தமது கருத்தியலை விதைப்பது.

தனிமனித தாக்குதல் தொடர்பில் நிர்வாகம் உறுதியாக நடவடிக்கை எடுப்பதால், இப்போது தவிப்பு.

சீமானை எதிர்ப்போர் இருவகை; இரண்டாவது வகையினர் நோக்கமே வேறு. முதலாவது வகையினர், இவர்களை புரிந்து விலகி இருப்பதே நல்லது.

சீமான் கிறீஸ்தவர் என்பது நான் சொல்லவில்லை. பாஜகவின் மாநில பொறுப்பில் இருக்கும் எச் ராஜா ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியது. அதை பற்றி வாய் திறக்காமல் கள்ள மெனம் காப்பது சீமான்.

கிறிஸ்தவர்  என்பதால் ஒன்றும் இல்லை. நானே 1/8 கிறீஸ்தவந்தான். சீமான் விஜையின் மீது இந்த ஆயுதத்தை பாவிக்க முடியாமைக்கு இது காரணம் என்று சொல்லவே அது சொல்லபட்டதே ஒழிய விக்ரரையும், சீலனையும் இன்னும் பலரையும் ஏற்று கொண்ட எனக்கு சீமான் கிறிஸ்தவர் என்பது ஒரு பொருட்டல்ல. 

விஜை பாதி மலையாளி, பாதி தமிழன் என்று எழுதியதும்  - இனத்தூயமை வாதம் பேசுவது எவ்வளவு முட்டாள்தனமானது என்பதை சுட்டி காட்டவும், விஜைய சீமான் தமிழன் என்று முன்பே ஏற்று செர்டிபிகேட் கொடுத்து விட்டதால் இப்போ விழி பிதுங்கி நிக்கிறார் என்பதை சுட்டவுமே.

”அகண்ட-தமிழ் அடையாள அரசியலை” தமிழ்தேசிய அரசியலின் அடித்தளமாக எடுக்க வேண்டும் என யாழில் பக்கம் பக்கமாக எழுதுபவன் நான். எனக்கு எவரினதும் பூர்வீகம், மதம், சாதி பற்றி கிஞ்சித்தும் அக்கறை இல்லை. ஆனால் இவற்றை தூக்கி பிடித்து அரசியல் செய்பவர்கள், தாம் உருவாக்கிய முட்டுச்சந்தில் தாமே மாட்டி நிக்கும் போது அதை சுட்டி காட்டுவேன். 

மேலே தெளிவாக குறிப்பிட்டுளேன் சனாதன எதிர்ப்பு என்பது வேறு திமுக ஆதரவு என்பது வேறு. 

திமுக ஆதரவு நிலைப்பாட்டில் இருப்பவரா வைரமுத்து திரியில் பக்கம் பக்கமாக கருணாநிதியின் வண்டவாளங்ளை தண்டவாளம் ஏற்றுவார்?

சனாதன எதிர்ப்பு என்ற கோணத்தில் நான் வைக்கும் கருத்துக்களை திமுகாரரும் வைத்தால் அதன் அர்த்தம் நான் திமுககாரன் என்பதல்ல. இதே கருத்தைதான் கேரள கம்யூனிஸ்டும் முன்வைக்கிறார்கள். அப்போ நான் மலையாளி, கம்யூனிஸ்டா🤦‍♂️ (சிரிப்பாக இருக்கிறது). 

நிர்வாக நடவைக்கையை இட்டு அலட்டி கொள்ளும், திகதி வாரியாக நினைவில் வைத்து, அனிவசரிக்கு திண்ணையில் நினவூட்டும் அளவுக்கு நான் நிர்வாக நடவைக்கையை நினைத்து உருகுவதில்லை. எழுதுவது என் பணி, திருத்துவது அவர்கள் பணி.

இதே திரியில் நீங்கள் எழுதிய கருத்தில் நிர்வாகம் எத்தனை இடங்களில் *****தையல் போட்டுள்ளது? அந்த இடங்களில் நீங்கள் எழுதிய கருத்துக்கான என் எதிர்வினையை அகற்றி உள்ளது - இதில் எனக்கு முழு உடன்பாடே.

அதனால் ஒருவித தவிப்பும் இல்லை. பிரசன்ன சில்வாவின் நண்பர்கள்தான் தவிக்கிறார்கள்🤣

  • கருத்துக்கள உறவுகள்

தமது முழு பதிவையே நீக்கியது தெரியவில்லை, தையல் தெரிகிறது....

முழு நேர சேவகம் செய்யும் உதயநிதி நண்பர்கள் கூட தவிப்பார்கள். 🤑

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

தமது முழு பதிவையே நீக்கியது தெரியவில்லை, தையல் தெரிகிறது....

முழு நேர சேவகம் செய்யும் உதயநிதி நண்பர்கள் கூட தவிப்பார்கள். 🤑

எனது முழுபதிவு, உங்கள் தையலுக்கான எதிர்வைனை. உங்களுக்கு தையல் போட்டால் என் எதிர்வினையை முற்றாக நீக்குவது லொஜிக்கல் என்பது கூடவா உறைக்காது?

நான் உதயநிதியியுடன் கூட இருந்து தண்ணி அடிப்பேன் என்று யாழ்களத்தில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கவில்லை.

உதயநிதியின் மகன் பாடல் வெளியிட்டவுடன் அதுக்கு யாழில் திரி திறந்து, திண்ணையில் விளம்பரமும் செய்யவில்லை. ஆகவே நான் உதயநிதி நண்பன் இல்லை.

எனக்கு உதய நிதிக்கும் உள்ள ஒரே கனெக்சன் நயந்தாரா மட்டுமே🤣.

  • கருத்துக்கள உறவுகள்

ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்க தேவை இல்லை. செயலே சொல்கிறது.

தவிர, நான் ஒருபோதுமே, அவருடன் தண்ணி அடித்ததாக சொல்லவில்லை.

கொழும்பில் வாழும், யாழ் இந்து நண்பர் வீட்டுக்கு, பர்கர் இன மணைவி பிறந்த நாள் பார்ட்டிக்கு போயிருந்தேன். மணைவியின் உறவினர்கள் வந்திருந்தனர்.

நான் கொண்டு போயிருந்த டியூட்டி பிறீ போத்தலை அடித்தார்கள்.

நீ தொடாதே என்று சொல்ல, நான் ஒன்றும், உதயநிதி நண்பர் அல்லவே....

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்க தேவை இல்லை. செயலே சொல்கிறது.

தவிர, நான் ஒருபோதுமே, அவருடன் தண்ணி அடித்ததாக சொல்லவில்லை.

கொழும்பில் வாழும், யாழ் இந்து நண்பர் வீட்டுக்கு, பர்கர் இன மணைவி பிறந்த நாள் பார்ட்டிக்கு போயிருந்தேன். மணைவியின் உறவினர்கள் வந்திருந்தனர்.

நான் கொண்டு போயிருந்த டியூட்டி பிறீ போத்தலை அடித்தார்கள்.

நீ தொடாதே என்று சொல்ல, நான் ஒன்றும், உதயநிதி நண்பர் அல்லவே....

நுணலும் தன் வாயால் கெடும் 🤣.

இப்போதைக்கு வேண்டாம் - தேவையான நேரத்தில் வாக்குமூலத்தின் ஸ்கிரீன் ஷாட் பதியபடும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.