Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானியாவை அடைய முயன்ற புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு விபத்து: 27பேர் உயிரிழப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவை அடைய முயன்ற புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு விபத்து: 27பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவை அடைய முயன்ற புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு விபத்து: 27பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவை அடைய முயன்ற புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு, ஆங்கிலக் கால்வாயில் கவிழ்ந்ததில் குறைந்தது 27பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரு நாடுகளையும் பிரிக்கும் குறுகிய கடற்பரப்பில், புலம்பெயர்ந்தவர்கள் தொடர்புப்பட்ட சமீபத்திய ஆண்டுகளில் பதிவான மிக மோசமான விபத்து இதுவாகும்.

நேற்று (புதன்கிழமை) குளிரான நீரில் மூழ்கிய புலம்பெயர்ந்தவர்களின் சடலங்கள், பிரான்ஸின் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டன.

உயிரிழந்தவர்களில் ஐந்து பெண்கள் மற்றும் ஒரு சிறுமி அடங்குவதாக பிரான்ஸின் உட்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் அறிக்கை தெரிவிக்கின்றது. இரண்டு பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லப்பட்டனர்.

புலம்பெயர்ந்தவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என ஜெரால்ட் டார்மான் மேலும் தெரிவித்தார்.

முன்னதாக, பிரான்ஸ் அதிகாரிகள் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை 31ஆக கணக்கிட்டனர். ஆனால் பின்னர் அந்த எண்ணிக்கையை மறுபரிசீலனை செய்யப்பட்டது.

‘இந்த மரணத்தால் அதிர்ச்சியும் திகைப்பும் அடைந்துள்ளதாக’ பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் கூறியுள்ளார். மேலும், கடக்க முயற்சிப்பதில் இருந்து மக்களைத் தடுக்க பிரான்ஸுக்கு மேலும் அழைப்பு விடுத்தார். கடத்தல் கும்பல்கள் ‘கொலையிலிருந்து தப்பித்துக் கொண்டிருக்கின்றன’ என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், பிரித்தானியா உள்நாட்டு ஆதாயத்திற்காக இந்த பிரச்சினையை அரசியலாக்குவதை நிறுத்த வேண்டும் என்று கூறினார்.

ஆங்கில கால்வாய், உலகின் பரபரப்பான கப்பல் பாதைகளில் ஒன்றாகும் மற்றும் நீரோட்டங்கள் வலுவாக உள்ளன.

மனித கடத்தல்காரர்கள், மிகவும் உடையக்கூடிய, ஊதப்பட்ட படகுகள் மூலம் புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் செல்கின்றனர். இந்த படகுகள், அலைகளின் தயவில் பிரித்தானிய கரையை அடைய முயற்சிக்கின்றன. இது மிகவும் ஆபத்தான கடற்பயணமாகும்.

https://athavannews.com/2021/1252138

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

இப்படி, பெரும்பாலும் இஸ்லாமிய கூட்டம், அலையலையாக தினமும்கிளம்பி போவது, பிரான்ஸ் போலீசாருக்கு தெரியாது என்று சொல்லவதில் அர்த்தம் இல்லை.

இது, பிரான்ஸ் அரசின் அனுசரனையுடன் நடக்கும், சுத்திகரிப்பு வேலை.

நான் 2000 தொடக்கத்தில்  பிரித்தானியா வந்த போது ஓப்பீட்டளவில் மத்திய கிழக்கு அகதிகள் குறைவு அமேரிக்கா பிரித்தானியா கூட்டு தான் அகதிகளை உருவாக்கிறது உப்பு திண்டவன் தண்ணீர் குடிக்க வேண்டும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கில கால்வாய் ஊடாக நுழைபவர்களை தடுப்பதற்கான பிரித்தானியாவின் யோசனையை நிராகரித்தது பிரான்ஸ்!

ஆங்கில கால்வாய் ஊடாக நுழைபவர்களை தடுப்பதற்கான பிரித்தானியாவின் யோசனையை நிராகரித்தது பிரான்ஸ்!

பிரான்ஸிலிருந்து தங்கள் நாட்டுக்கு அகதிகள் ஆபத்தான கடல் பயணம் மேற்கொள்வதைத் தடுப்பதற்காக பிரித்தானியா முன்வைத்த யோசனைகளை பிரான்ஸ் நிராகரித்தது.

பிரித்தானியாவை அடைய முயன்ற புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு, ஆங்கிலக் கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27பேர் உயிரிழந்ததையடுத்து இதுபோன்ற விபத்து நிகழாமல் இருக்க, தாம் எடுக்க விரும்பும் ஐந்து படிகளை கோடிட்டுக் காட்டி பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுக்கு பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் கடிதமொன்றை அனுப்பி வைத்தார்.

இதில், இதில், பிரான்ஸ் கடற்கரையிலிருந்து அதிகமான படகுகள் வெளியேறுவதைத் தடுக்க கூட்டு ரோந்து, சென்சார்கள் மற்றும் ரேடார் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல், பரஸ்பர கடல் ரோந்துகள் ஒருவருக்கொருவர் பிராந்திய நீரில் மற்றும் வான்வழி கண்காணிப்பு, பிரான்ஸ் உடனான இருதரப்பு வருவாய் ஒப்பந்தத்தில் உடனடி வேலை, உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஆனால், பிரித்தானியா வரும் அனைத்து அகதிகளையும் பிரான்ஸ் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும்; அகதிகள் வருவதைத் தடுப்பதற்காக பிரான்ஸ் கடற்கரைப் பகுதிகளில் பிரித்தானியா படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட அனுமதிக்க வேண்டும் என்று பொரிஸ் ஜோன்ஸன் வலியுறுத்தியிருந்தார்.

எனினும், அந்தத் திட்டங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று பிரான்ஸ் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் கேப்ரியல் அட்டல் தெரிவித்தார்.

எனவே, இந்தப் பிரச்சினை குறித்து ஐரோப்பிய ஓன்றியம் நடத்தும் கூட்டத்துக்கு பிரித்தானிய உட்துறை அமைச்சர் பிரீத்தி படேலுக்கு அழைப்பு விடுக்கப்போவதில்லை என்றும் அவர் கூறினார்.

இந்த ஆண்டு மட்டும் இதுவரை 25,700 பேர் இத்தகைய ஆபத்தான பயணத்தை மேற்கொண்டனர். கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இது 3 மடங்கு அதிகமாகும்.

https://athavannews.com/2021/1252639

  • கருத்துக்கள உறவுகள்
On 24/11/2021 at 23:44, தமிழ் சிறி said:

பிரித்தானியாவை அடைய முயன்ற புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு விபத்து: 27பேர் உயிரிழப்பு!

ஐபிசி காணொளியில் இறந்த அனைவரும் தமிழர்கள் என்று சொன்னார்கள்.

உண்மையில் இறந்தவர்கள் அனைவரும் தமிழர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

image.jpeg

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

ஐபிசி காணொளியில் இறந்த அனைவரும் தமிழர்கள் என்று சொன்னார்கள்.

உண்மையில் இறந்தவர்கள் அனைவரும் தமிழர்களா?

அப்படி தகவல் இல்லை....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 26/11/2021 at 11:33, London Ranjan said:

நான் 2000 தொடக்கத்தில்  பிரித்தானியா வந்த போது ஓப்பீட்டளவில் மத்திய கிழக்கு அகதிகள் குறைவு அமேரிக்கா பிரித்தானியா கூட்டு தான் அகதிகளை உருவாக்கிறது உப்பு திண்டவன் தண்ணீர் குடிக்க வேண்டும்

2 hours ago, Nathamuni said:

 

பிரான்ஸ் இப்ப அந்தமாதிரி வைச்சு செய்யுது....🤭

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

பிரான்ஸ் இப்ப அந்தமாதிரி வைச்சு செய்யுது....🤭

 

பிரான்ஸ் நீண்ட காலத்துக்கு இதை செய்ய முடியாது.

ஒரு பேச்சுவார்த்தைக்கு செல்லும்முன்னர், முடிந்த வரை... பிரிட்டனுக்கு ஆட்களை அனுப்ப முனைகின்றனர்.

இருந்தாலும், எரிவதை பிடுங்கினால், கொதிப்பது நிக்கும் என்பது போல, ஒரு 100 பேரை திருப்பி அனுப்பினால், எல்லாம் நிற்கும்.

அது தவிர, லிவர்பூல் குண்டுபிடிப்பு, ஒரு எம்பி கொலை நிகழ்வுகளின் பின்னர், வருபவர்களை உள்ளே அடைத்து வைக்கிறார்கள். அவர்களை பேட்டி எடுத்த போது, இங்கே அடைந்து கிடைப்போம் என்றால், அங்கேயே இருந்திருக்கலாமே... அனுப்பி விடுங்கள் போகிறோம் என்று சொல்வதும்.... டிவியில் வந்தது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.