Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வடக்கில் சீனாவும் இந்தியாவும் அபிவிருத்திகளை மேற்கொள்ள இடங்களை வழங்கியுள்ளோம்: வாசுதேவ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் சீனாவும் இந்தியாவும் அபிவிருத்திகளை மேற்கொள்ள இடங்களை வழங்கியுள்ளோம்: வாசுதேவ

வடக்கில் சீனாவும் இந்தியாவும் அபிவிருத்திகளை மேற்கொள்ள இடங்களை வழங்கியதாகவும் இதனால் வட பகுதி மக்கள் அதிக நன்மைகளை அடைவார்கள் என நீர்ப்பாசன அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது, அவர் மேலும் தெரிவிக்கையில், “சிறிமாவோ பண்டார நாயக்கா காலப்பகுதியில் இருந்து இலங்கையானது சீனாவுடனும் இந்தியாவுடனும் நெருக்கமான தொடர்புகளை பேணுகின்றது. அவருடைய காலப்பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டபோது எமது நாடு நடுநிலையாக செயற்பட்டு இருந்தது. தற்போதும் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் முரண்பாடு நிலை காணப்படுகின்றது. அதனை நாம் ஜனாதிபதியுடன் பேசியே முடிவுகளை எடுத்து வருகின்றோம்.

நாம் எந்த நாடுகளுக்கும் எமது பகுதிகளை விற்கவில்லை. எந்த நாட்டுக்கும் சார்பாக செயற்படவுமில்லை. இயற்கையான பகுதிகளில் அபிவிருத்தி செய்வதற்கு நாம் சில பகுதிகளை வழங்குகின்றோம். இதனால் எமது மக்களுக்கும் நன்மைகள் ஏற்படும்.

வடக்கில் இந்தியாவும் சீனாவும் அபிவிருத்திகளை மேற்கொள்ள இடங்களை வழங்கியுள்ளோம். இதனால் வட பகுதி மக்களுக்கு அதிக நன்மைகள் ஏற்படும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

https://athavannews.com/2021/1257427

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இந்த இரு நாடுகளும் தெற்கை அபிவிருத்தி செய்ய அடிபடவில்லை.. மிஸ்டர் நாணயக்கார..

இவர் உண்மையில் விளக்கமில்லாமல் பேசுறாரா.. இல்லை இவரைச் சுற்றி உள்ள மக்கள் விளக்கக் குறைவானவர்கள் என்று நினைச்சுப் பேசுறாரா..?!

  • கருத்துக்கள உறவுகள்

இதன் மூலம் எதையோ மறைக்க முயற்சிக்கிறார். சிங்களவர் அங்காலை கொதிப்பதால்  தமிழரை ஆப்பிழுத்த குரங்காக்கிவிட்டோம் என்று உள்ளூர மகிழ்கிறார் போலுள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 hours ago, கிருபன் said:

சிறிமாவோ பண்டார நாயக்கா காலப்பகுதியில் இருந்து இலங்கையானது சீனாவுடனும் இந்தியாவுடனும் நெருக்கமான தொடர்புகளை பேணுகின்றது. அவருடைய காலப்பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டபோது எமது நாடு நடுநிலையாக செயற்பட்டு இருந்தது. தற்போதும் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் முரண்பாடு நிலை காணப்படுகின்றது. அதனை நாம் ஜனாதிபதியுடன் பேசியே முடிவுகளை எடுத்து வருகின்றோம்.

ஐயா நாணயக்காரரே! இன்றைய உலக அரசியல் வேறு.....ஒல்லாந்தர் காலத்து அரசியலை உங்கடை சிங்கள சனத்தோடை வைச்சுக்கொள்ளுங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

மூட்டிவிட்டிட்டு குளிர் காய்கிற தந்திரம் எப்போதும் எடுபடாது. தான் மூட்டிய தீயில் தானே விழுந்து கருக வேண்டியும் வரலாம். இந்தியா தனக்கு எதிரிகளை தானே தட்டு வைத்து அழைத்ததுபோல்..... 

காலம் எதையோ அவசரமாக எழுத முயற்சிக்கிறது.

 

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு கோஷனின் 1000ஏக்கர் காணியை பறித்து கொடுத்துபோட்டான்கள் போல் டவுட் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெருமாள் said:

எனக்கு கோஷனின் 1000ஏக்கர் காணியை பறித்து கொடுத்துபோட்டான்கள் போல் டவுட் 🤣

அவற்றை சொத்து கடலுக்கை இருக்காம்.
போய் கண்டு பிடியுங்கோவன் பாப்பம்.

மூண்டு பூச்சியத்தை கூட்டிப் போட்டியள்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பெருமாள் said:

எனக்கு கோஷனின் 1000ஏக்கர் காணியை பறித்து கொடுத்துபோட்டான்கள் போல் டவுட் 🤣

ஹி ஹி .... அது நடந்தால் உங்களுக்கும் அளவில்லா மகிழ்ச்சி போல் தெரிகிறது. அப்படி ஏதும்  நடவாது. அவரிடம் 1000ஏக்கர் காணி இருந்தால் ஆள்  வெளிநாட்டில் நிம்மதியாக இருந்திருக்க மாட்டார்!

அவர் அடிச்சு விடுறதில இதுவும் ஒன்று.

8 minutes ago, ஈழப்பிரியன் said:

அவற்றை சொத்து கடலுக்கை இருக்காம்.

சுனாமியோடு வெளிவரலாம் கொஞ்சம் பொறுங்கோ! 

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, பெருமாள் said:

எனக்கு கோஷனின் 1000ஏக்கர் காணியை பறித்து கொடுத்துபோட்டான்கள் போல் டவுட் 🤣

🤣 ஐயோ என்ர முதிசக்காணி… நாலு பக்கமும் கடல். உள்ளயும் கடல், வெளியயும் கடல். அதையா சீனனுக்கு கொடுத்து போட்டாங்கள்🤣.

56 minutes ago, ஈழப்பிரியன் said:

அவற்றை சொத்து கடலுக்கை இருக்காம்.
போய் கண்டு பிடியுங்கோவன் பாப்பம்.

மூண்டு பூச்சியத்தை கூட்டிப் போட்டியள்.

உங்களுக்கு பொறாமை எங்க நான் அதில 500 ஏக்கர வித்து பெனி ஸ்டொக் வாங்கி வரன் பபெட் மாரி ஆகிடுவனோ எண்டு 🤣.

52 minutes ago, satan said:

ஹி ஹி .... அது நடந்தால் உங்களுக்கும் அளவில்லா மகிழ்ச்சி போல் தெரிகிறது. அப்படி ஏதும்  நடவாது. அவரிடம் 1000ஏக்கர் காணி இருந்தால் ஆள்  வெளிநாட்டில் நிம்மதியாக இருந்திருக்க மாட்டார்!

அவர் அடிச்சு விடுறதில இதுவும் ஒன்று.

சுனாமியோடு வெளிவரலாம் கொஞ்சம் பொறுங்கோ! 

ஐயோ சாத்ஸ்,

தட் இஸ் எ ஜோக் யார்.

எல்லாத்திலயும் சிடு சிடுக்காமல் கொஞ்சம் ஜொலியாவும் இருங்கப்பா. 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.