Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிளிநொச்சி பொது நூலகத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சி பொது நூலகத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது!

 

 

 

கிளிநொச்சி பொது நூலகத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்றது.

கரைச்சி பிரதேச சபையினால் புதிதாக நிர்மானிக்கப்படவுள்ள குறித்த நூலகம் கிளிநொச்சி நகரின் ஏ9 வீதியில் அமையவுள்ளது.

குறித்த நூலகத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் யாழ்.இந்திய துணை தூதுவர் ராம ராஜேஸ், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கிளிநொச்சி பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட வழிபாட்டினை தொடர்ந்து கரைச்சி பிரதேச சபை வளாகத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து அதிதிகள் விழா இடம்பெறம் மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து மங்கள விளக்கேற்றல் இடம்பெற்றதை தொடர்ந்து அடிக்கல் நாட்டப்பட்டது.

spacer.png


spacer.png

spacer.png

spacer.png

spacer.png

spacer.png
 

spacer.png

spacer.png

 

spacer.png


spacer.png

spacer.png

spacer.png

https://athavannews.com/2022/1262532

 

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே கிளிநொச்சி நகர மண்டபத்தில் ஒரு பொதுநூலகம் இருந்தது. எனவே அழிக்கப்பட்ட நூலகத்துக்குப் பதிலாகக் கட்டப்படும் நூலகமென்று சொல்லுங்கோ செய்தியாளரே. 

அக்கல்நாட்டிறர்களின் நிரலைப்பார்த்தா நாளைக்கே கட்டி  முடிந்துவிடும்போல் தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

கூகுளும் ஸ்மார்ட் போன்களும் வந்த பின்னர் பொதுநூலகங்களை பொதுமக்கள் பாவிப்பது   முக்கியமான தொன்றாக இல்லாமல் போய்விட்டது.

நூலகங்களுக்கு கொட்டப்படும் சில  கோடிகளை ஏற்கனவே உள்ள பாடசாலைகள், மருத்துவமனைகளை மேம்படுத்தவும்,அல்லது தகர கொட்டைகளில் வாழ்பவர்களுக்கு உதவவும் கழிப்பறைகளை அமைத்துக்கொடுக்கவும் பயன் படுத்தலாம் என்று நினைக்கிறேன்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

நூலகத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் யாழ்.இந்திய துணை தூதுவர் ராம ராஜேஸ், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இவர் ஏன் இதுக்கு எல்லாம் வாறார்? இவையளும் பிக்குகள் மாதிரி எங்களோட உரச வேணும் என்று நிக்கினம். நாங்கள்  இறுகிக்கொண்டு இருக்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா கல்லுக்கும்…. திரு நீறு பூசியிருந்தால்,
வந்திருந்த பாதிரியார்…. கோவிக்க மாட்டாரா…. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

எல்லா கல்லுக்கும்…. திரு நீறு பூசியிருந்தால்,
வந்திருந்த பாதிரியார்…. கோவிக்க மாட்டாரா…. 🤣

பாதிரியார்கள் நிச்சயம் கோவிக்க மாட்டார்கள். ஆனால் மாதா கோவிலில் வழிபாடு நடைபெற்றிருந்தால் யாழ் களத்தில் கூட பலர் பொருமியிருப்பர. 😉

6 hours ago, valavan said:

கூகுளும் ஸ்மார்ட் போன்களும் வந்த பின்னர் பொதுநூலகங்களை பொதுமக்கள் பாவிப்பது   முக்கியமான தொன்றாக இல்லாமல் போய்விட்டது.

நூலகங்களுக்கு கொட்டப்படும் சில  கோடிகளை ஏற்கனவே உள்ள பாடசாலைகள், மருத்துவமனைகளை மேம்படுத்தவும்,அல்லது தகர கொட்டைகளில் வாழ்பவர்களுக்கு உதவவும் கழிப்பறைகளை அமைத்துக்கொடுக்கவும் பயன் படுத்தலாம் என்று நினைக்கிறேன்.

 

 

அவ்வாறு பொதுப்படையாக சொல்ல முடியாது வளவன். இங்கு கனடாவில் இன்னும் நூலகத்தின் பயன்பாடு அதிகமாக உள்ளது. வெறுமனே புத்தகங்களை வாசிக்கவும், தற்காலிகமாக இரவல் எடுப்பதுக்கும் என்று இல்லாமல், அமைதியாக இருந்து படிக்கவும், ஆசிரியருடன் வந்து மேலதிகமாக கற்கவும், கணணியில் இருந்து பிரதியெடுக்கவும், நல்ல விவரணங்களை பார்க்கவும் என்று ஒரு நூலகத்தின் பயன்பாடு விரிந்து செல்கின்றது. 

தாயகத்திலும் இவ்வாறு நூலகப் பாவனை விரிவடைந்து செல்லுமாயின் மாணவர்களுக்கும் கற்க நினைப்பவர்களுக்கும் பயனாக அமையும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

அவ்வாறு பொதுப்படையாக சொல்ல முடியாது வளவன். இங்கு கனடாவில் இன்னும் நூலகத்தின் பயன்பாடு அதிகமாக உள்ளது. வெறுமனே புத்தகங்களை வாசிக்கவும், தற்காலிகமாக இரவல் எடுப்பதுக்கும் என்று இல்லாமல், அமைதியாக இருந்து படிக்கவும், ஆசிரியருடன் வந்து மேலதிகமாக கற்கவும், கணணியில் இருந்து பிரதியெடுக்கவும், நல்ல விவரணங்களை பார்க்கவும் என்று ஒரு நூலகத்தின் பயன்பாடு விரிந்து செல்கின்றது. 

தாயகத்திலும் இவ்வாறு நூலகப் பாவனை விரிவடைந்து செல்லுமாயின் மாணவர்களுக்கும் கற்க நினைப்பவர்களுக்கும் பயனாக அமையும்.

உண்மை

எனது  மக்கள்  அதிக நேரத்தை  செலவிடுவது (வகுப்பைவிட அதிகம்)  இங்கு தான்

காரணம் அமைதி படிக்கக்கூடிய  சூழல்

வளவனுக்கு பெரிய  பிள்ளைகள்  இல்லை  என்று நினைக்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, valavan said:

கூகுளும் ஸ்மார்ட் போன்களும் வந்த பின்னர் பொதுநூலகங்களை பொதுமக்கள் பாவிப்பது   முக்கியமான தொன்றாக இல்லாமல் போய்விட்டது.

எல்லோரிடமும் இந்த வசதியில்லை, எல்லோருக்குக்கும் இதை பாவிக்க முடியும் என்பதும் இல்லை, எல்லோரும் இதை அத்தியாவசியம் என நினைப்பதுமில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.