Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

40 ஆயிரம் மெட்ரிக் தொன் எரிபொருளை இலங்கையிடம் கையளித்தார் இந்திய உயர்ஸ்தானிகர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.ஓ.சி.யினால் வழங்கப்பட்ட 40 ஆயிரம் மெட்ரிக் தொன் எரிபொருளை இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிடம் கையளித்துள்ளார்.

Image

Image

இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் தட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இந்தியன் எண்ணெய் நிறுவனத்திடமிருந்து 40 ஆயிரம் மெட்ரிக் தொன் டீசலை கொள்வனவு செய்ய அமைச்சரவை பெப்ரவரி முதல் வாரத்தில் அங்கீகாரம் வழங்கியிருந்தது.

40 ஆயிரம் மெட்ரிக் தொன் எரிபொருளை இலங்கையிடம் கையளித்தார் இந்திய உயர்ஸ்தானிகர் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

13 ஆம் திருத்தச்சட்டததைக் நிறைவேற்றச் சொல்லி இந்தியத்ததூதுவரிடம் கையளித்த கடிதத்திற்கு பதில் இல்லை. அதைக் குப்பையில் எறிந்து விட்டு சிறிலங்காவிற்கு சகல உதவிகளையும் செய்கிறது இந்தியா. இதுதான் இந்தியா! இதைப் புரிந்து கொள்ளாத மரமண்டைகள்தான் இந்தியாவுக்கு கடிதம் எழுதிய தமிழ்தலைவர்கள்.

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்

குடுத்து அடிமைப்படுத்தலாம் என நினைக்கிறார்களோ என்னவோ.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பிழம்பு said:

40 ஆயிரம் மெட்ரிக் தொன் எரிபொருளை இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிடம் கையளித்துள்ளார்.

இனி சொறிலங்கா பெற்றுக்கொள்ளும் உதவிகள் அனைத்தும் US டொலரில் பெற்று திருப்பி கொடுக்கும்போது US ல் தான் கொடுக்கணும் ஈரானுக்கு மாத்திரம் பண்ட மாற்று யாரோ ஒண்டு SL கடனையும் அமெரிக்க கடனையும் ஒப்பிட்டுக்கொண்டு நேற்று இருந்தினம் புதிய ஆள் என்றபடியால் பேசாமல் விட்டு விட்டேன் .

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, பெருமாள் said:

இனி சொறிலங்கா பெற்றுக்கொள்ளும் உதவிகள் அனைத்தும் US டொலரில் பெற்று திருப்பி கொடுக்கும்போது US ல் தான் கொடுக்கணும் ஈரானுக்கு மாத்திரம் பண்ட மாற்று யாரோ ஒண்டு SL கடனையும் அமெரிக்க கடனையும் ஒப்பிட்டுக்கொண்டு நேற்று இருந்தினம் புதிய ஆள் என்றபடியால் பேசாமல் விட்டு விட்டேன் .

அப்போ.. பெருந்தொகையாய் அடிச்சு வைச்சிருக்கிற காசொண்டும் செல்லாதோ? அதை மக்கள் வைச்சு விளையாடத்தான் சரி.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, satan said:

அப்போ.. பெருந்தொகையாய் அடிச்சு வைச்சிருக்கிற காசொண்டும் செல்லாதோ? அதை மக்கள் வைச்சு விளையாடத்தான் சரி.

அவை கடுதாசி முன்பே சொன்னது போல் இலங்கையில் காணி வாங்கி முதலீடு என்பது வேஸ்ட் .

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பெருமாள் said:

அவை கடுதாசி முன்பே சொன்னது போல் இலங்கையில் காணி வாங்கி முதலீடு என்பது வேஸ்ட் .

சாச்சா ..... இலங்கை மீண்டிடும். 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, satan said:

சாச்சா ..... இலங்கை மீண்டிடும். 

 

ஓமோம்

ஒப்பரேசன் வெற்றி

ஆனால் ஆள்  காலி???

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் நினைப்பது போல் சிறிலங்கா ஒன்றும் கடனில் மூழ்கவில்லை என பிள்ளையானே கூறி விட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

நீங்கள் நினைப்பது போல் சிறிலங்கா ஒன்றும் கடனில் மூழ்கவில்லை என பிள்ளையானே கூறி விட்டார்.

பொருளாதார நிபுணர் பிள்ளையான் கூறினால் சரியாகத்தான் இருக்கும். 🤣

(அந்த எடுபட்ட பயல்… இவ்வளவு நாளும் மறியல்லை இருந்திட்டு இப்ப தான்… வெளியிலை வந்து இருக்கிறான்.) 😂

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, தமிழ் சிறி said:

பொருளாதார நிபுணர் பிள்ளையான் கூறினால் சரியாகத்தான் இருக்கும்.

இதுவரையில் எதை சரியாக கூறியிருக்கிறார், எதை சரியாக செய்திருக்கிறார்? சிங்களவனுக்கு வெள்ளை அடிக்கிறதை மட்டும் பிசகாமல் செய்தார், செய்தும் வருகிறார். ஒருநாள் அதுவும் அவனுக்கு தேவையற்றதாய் இவரை கை கழுவி விடுவான் சிங்களவன்.

4 hours ago, விசுகு said:

 

ஓமோம்

ஒப்பரேசன் வெற்றி

ஆனால் ஆள்  காலி???

கட்சியிலுள்ள அமைச்சர்களே உண்மையை மறைக்க முடியாமல் விமர்சிக்கிறார்கள், கட்சியை விட்டு வெளியேறுகிறார்கள். இவருக்கு எதுவும் புரியவில்லை. பாவம்! சந்தர்ப்பவாத அரசியல்வியாதி, பாசம் விடவில்லை கூலியில்லாமல் மாரடிக்குது.

  • கருத்துக்கள உறவுகள்
On 15/2/2022 at 22:35, satan said:

குடுத்து அடிமைப்படுத்தலாம் என நினைக்கிறார்களோ என்னவோ.

டெல்லியின் வேலையே அதுதான் இலங்கை கவுண்டால் தமிழர்கள் அமைதியான தீர்வு உருவாகிவிடும் அப்படி உருவாக்கினால் தமிழ்நாடு ஐந்து லட்ஷம் கொடிக்குமேல் GST வரி மத்திய அரசுக்கு கொடுக்கும் மாநிலம் உரிமை குரல் கொடுத்தால் கதை கந்தல் .ஆகவே எங்களுக்கு இந்தியா எனும் தேசம் சிதறும் மட்டும் விடிவு கிடையாது .

  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் ...ரயில் பெட்டி...ரயில்  எஞ்சின் போலத்தனோ.../

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, பெருமாள் said:

டெல்லியின் வேலையே அதுதான் இலங்கை கவுண்டால் தமிழர்கள் அமைதியான தீர்வு உருவாகிவிடும் அப்படி உருவாக்கினால் தமிழ்நாடு ஐந்து லட்ஷம் கொடிக்குமேல் GST வரி மத்திய அரசுக்கு கொடுக்கும் மாநிலம் உரிமை குரல் கொடுத்தால் கதை கந்தல் .ஆகவே எங்களுக்கு இந்தியா எனும் தேசம் சிதறும் மட்டும் விடிவு கிடையாது .

எதை கற்பனை செய்து பயந்து தமிழனை அழிக்க உதவியதோ அப்போதே தனக்கு எதிரியையும்  இழுத்து விட்டிருக்கிறது இந்தியா. எந்தப்பக்கம் பார்த்தாலும் எதிரி. இவர் செய்த உபாயம், சீனா அமெரிக்கா என்று பயந்து நித்திரை இல்லாமல் தவிக்க வேண்டியான். படுத்தாலும் கனவில் சீனா தமிழ் நாட்டில் நிற்பான் எழுந்து தண்ணி குடிச்சு ஆற்றவேண்டிய நிலை. உதவி வாங்கியவன் நிம்மதியாய் இவரின் எதிரியின் காலடியில் குளிர் காய்கிறான். அவனும் ஒருநாள் தவிப்பான் கடன் வாங்காமல் இருந்திருந்தால் நிம்மதியாய் காலத்தை கழித்திருக்கலாமே என. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.