Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பசில் மோடியை சந்திக்கிறார் – 1 பில்லியன் வாங்கவுள்ளார்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பசில் மோடியை சந்திக்கிறார் – 1 பில்லியன் வாங்கவுள்ளார்!

March 16, 2022

spacer.png

 

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸ, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இன்று(16.03.22) சந்திக்க உள்ளார்.

அத்துடன், இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கரையும் நிதியமைச்சர் இன்று சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நிதியமைச்சர் பசில் ராஜபஸ, நேற்றுப் பிற்பகல் இந்தியாவுக்கு பயணமானார். ஒரு பில்லியன் டொலர் கடன் வசதி உடன்படிக்கையில் கையொப்பமிடுவதற்காக அவர் அங்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

https://globaltamilnews.net/2022/174197

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிடமிருந்து ஒரு பில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தம் இன்று கைச்சாத்து

(இராஜதுரை ஹஷான்)

இலங்கைக்கு தேவையான கோதுமை மா,சீனி,அரிசி மற்றும் மருந்து பொருட்களை கொள்முதல் செய்வதற்காக இந்தியாவிடமிருந்து ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தம் இன்றையதினம்  கைச்சாத்திடப்படவுள்ளது.

இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்ப எவ்வித திட்டமும் இல்லை - இந்திய உயர்  ஸ்தானிகராலயம் | Virakesari.lk

இலங்கையில் இம்மாதம் இடம்பெறவுள்ள 5 ஆவது ஒம்புட்ஸ்மன் மாநாட்டில் விசேட அதிதியாக கலந்துக்கொள்ளுமாறு நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்தார்.

நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவிற்கும், இந்திய பிரதமரிற்கும் இடையிலான சந்திப்பின் போது இலங்கைக்கான நிதியுதவி மற்றும் இரு நாடுகளுக்குமிடையிலான இராஜதந்திர உறவு நிலைமை குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்திய அரசாங்கத்தின் அழைப்பிற்கமைய நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு செவ்வாய்க்கிழமை மாலை புதுடெல்லியை சென்றடைந்தார்.

நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ,நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர் ஆடிகல மற்றும் நிதியமைச்சரின் பாரியார் புஸ்பா ராஜபக்ஷ ஆகியோரை இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொறகொட வரவேற்றார்.

நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவிற்கும் இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சின் செயலாளர் ஸ்ரீ ஹர்ஸவர்தன் ஸ்ரிங்லாவிற்கும் இடையிலான சந்திப்பு புதன்கிழமை காலை புதுடெல்லியில் இடம்பெற்றது.

இந்த இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொறகொட,நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர் ஆடிகல ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர்,இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இந்திய தேசிய பாதுகாப்பு பிரதி ஆலோசகர் ஸ்ரீ விக்ரம் மிஸ்ரி ஆகியோரை நிதியமைச்சர் சந்தித்தார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும்,நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பு புதன்கிழமை மாலை புதுடெல்லியில் இடம்பெற்றது.

இச்சந்திப்பின் போது இலங்கைக்கான நிதி உதவிகள்,இரு நாடுகளுக்குகிடையிலான இராஜதந்திர உறவு நிலைமை குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

இலங்கைக்கு தேவையான கோதுமை மா,சீனி,அரிசி மற்றும் மருந்து பொருட்களை கொள்முதல் செய்வதற்காக இந்தியாவிடமிருந்து ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.

இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்படும் ஒப்பந்தங்களை நிறைவு செய்வதற்காக நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ இந்தியாவிற்கு உத்தியோகப்பூர்வமாக விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

நிதியமைச்சருக்கும்,இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் கலாநிதிக்கும் கடந்தவாரம் இடம்பெற்ற தொலைப்பேசி உரையாடலை தொடர்ந்து நிதியமைச்சரின் இந்திய விஜயம் உறுதிப்படுத்தப்பட்டது.

நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ கடந்த டிசெம்பர் மாதம் இந்தியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

எரிபொருள் , அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும் மருந்து பொருட்கள் ஆகிய அத்தியாவசிய தேவைகளுக்காக இந்தியா இலங்கைக்கு 2.1 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்குமிடையிலான குறுகிய மற்றும் நடுத்தர திட்டங்களை செயற்படுத்தும் முறைமையை இலகுப்படுத்தல் வழிமுறைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டன.

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு உணவு ,மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்யும் வகையில் கடன்வரி நீடிப்பை கருத்திற்கொண்டு அவசர உணவு மற்றும் சுகாதார சேவைத்திட்டம் ,எரிபொருள் இறக்குமதி செய்யும் எரிசக்தி பாதுகாப்பு திட்டம் ,திருகோணமலை  எண்ணெய் தாங்கிகளை நவீனமயப்படுத்தல் நடைமுறையில் உள்ள நிலுவை தொகை சிக்கல்களை தீர்ப்பதற்காக இலங்கைக்கு உதவுவதற்கு நாணய பரிமாற்றத்தின் ஊடாக சலுகை வழங்கல் மற்றும் பொருளாதார முன்னேற்றம்இதொழில்வாய்ப்பை விரிவுப்படுத்தும் வகையில் இலங்கையில் பல்வேறு துறைகளில் இந்திய முதலீடுகளை இலகுப்படுத்தல் ஆகிய விடயங்கள் குறித்து ஆராயப்பட்டன.அவை குறுகிய மற்றும் நடுத்தர கால ஒத்துழைப்பிற்கான தூண்கள் என கருதப்படுகிறது.

எரிபொருள் கொள்வனவிற்காக இந்தியா கடந்த மாதம் இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியது. தற்போதைய விஜயத்தை தொடர்ந்து இலங்கை இந்தியாவிடமிருந்து மேலும் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளது.
 

 

https://www.virakesari.lk/article/124266

 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

இந்தியாவிடமிருந்து ஒரு பில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தம் இன்று கைச்சாத்து

எண் சாத்திரத்தில்.... நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும், இதை வாசிக்கவும்.

இன்றைய திகதி.... 17.03.2022
திகதியும் 8,  கூட்டுத் தொகையும் 8.

இன்றைய நாளில்... மிகப் பெரும் தொகையான, 
ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை... 
இந்தியா, இலங்கைக்கு கடனாக...  கொடுக்கின்றது.

எட்டில் கடன் குடுத்தால்.... 
கடன் வாங்கினவன், எட்டியும் பார்க்காமல் போய் விடுவான். 

அதோடை... கள்ள வியாழன். கழுத்தையும் அறுத்து விட்டு விடும்.

இந்தியா... இந்தக் காசை, இலங்கைக்கு... 
அன்பளிப்பாக கொடுத்தது என்று நினைக்க வேண்டியதுதான்.

- யாழ். களத்திற்காக....
ஜோதிட சிந்தாமணி தமிழ் சிறி.- 

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா..!  இது என்ர வேட்டிங்க..😢

IMG-20220317-123341.jpg

என்னப்பா இங்க இவ்வளவு அமளி துமளி நடக்குது .. சீனனை சீன்லயே காணோம்..உஷாராகிட்டான்..👍

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

இலங்கையில் இம்மாதம் இடம்பெறவுள்ள 5 ஆவது ஒம்புட்ஸ்மன் மாநாட்டில் விசேட அதிதியாக கலந்துக்கொள்ளுமாறு நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்தார்.

வாங்கோ இருட்டில ஆளை ஆள் தெரியாமல் பேசுவோம் எழுதுவோம் இந்தியாவில கொண்டுபோய் வாசிச்சு பாருங்கோ.  மொய் வைப்பீர்கள் எனும் நம்பிகையிற்தான் அழைப்பே வைக்கப்படுகிறது.

1 hour ago, கிருபன் said:

எரிபொருள் கொள்வனவிற்காக இந்தியா கடந்த மாதம் இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியது.

 

1 hour ago, கிருபன் said:

இலங்கைக்கு தேவையான கோதுமை மா,சீனி,அரிசி மற்றும் மருந்து பொருட்களை கொள்முதல் செய்வதற்காக இந்தியாவிடமிருந்து ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.

 

1 hour ago, கிருபன் said:

எரிபொருள் , அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும் மருந்து பொருட்கள் ஆகிய அத்தியாவசிய தேவைகளுக்காக இந்தியா இலங்கைக்கு 2.1 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவும் தீர்ந்துவிட அடுத்த திட்டம் என்னவோ? கம்மன் பில சொன்னது நூறு வீதம் உண்மை. சும்மா இருந்து கடன் வாங்கியே திண்டு காலத்தை கழிச்சிருக்கிறானுகள்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு இந்தியாவின் ராஜதந்திரம் ஜெயிக்கிறது.......தமிழனை அழித்து சிங்களவனை பிச்சை எடுக்க வைப்பது.......நண்பனோ,உறவினரோ அடுத்தடுத்து இரண்டுதரத்துக்கு மேல கடன் கேட்டால் முறைத்துக் கொண்டு விலகிப்போய் விடுவார்கள்......இந்தியன் ரொம்ப நல்லவன் எவ்வளவு தரம் கேட்டாலும் குடுப்பான்......... இங்கு யாருக்கும் வெட்கமில்லை......!  (துப்புற சிமைலி தேடினேன் கிடைக்கவில்லை).

  • கருத்துக்கள உறவுகள்

சிவப்புத் தோள்துண்டு, வேட்டி சடைக்கு என்ன ஆயிற்று? உண்மையிலேயே பிச்சை கேட்கிற நிலையிலேயே நிக்கிறார். அழுதுடுவாரோ? 

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, suvy said:

இங்கு இந்தியாவின் ராஜதந்திரம் ஜெயிக்கிறது.......தமிழனை அழித்து சிங்களவனை பிச்சை எடுக்க வைப்பது.......நண்பனோ,உறவினரோ அடுத்தடுத்து இரண்டுதரத்துக்கு மேல கடன் கேட்டால் முறைத்துக் கொண்டு விலகிப்போய் விடுவார்கள்......இந்தியன் ரொம்ப நல்லவன் எவ்வளவு தரம் கேட்டாலும் குடுப்பான்......... இங்கு யாருக்கும் வெட்கமில்லை......!  (துப்புற சிமைலி தேடினேன் கிடைக்கவில்லை).

இந்தியாவுக்கு போறம்! 500 மில்லியன் வாங்கிறம்! ஒரு ஜவுளிக் கடையே இல்லை இல்லை ஒரு ஜவுளிக்கடலே வைக்கிறம்.

  • கருத்துக்கள உறவுகள்

கடனை வைத்தே அடிமை ஆக்கி விடுவார்கள். இதற்குள் நண்பர் sentiment வேறு.

  • கருத்துக்கள உறவுகள்

கடுமையான நிதி நெருக்கடி- இந்தியாவிடம் 73ஆயிரம் கோடி ரூபாய் கடன் கோரும் இலங்கை!

எரிபொருள் கடன் தொகையை அதிகரிக்குமாறு இந்தியாவிடம் கோரிக்கை!

எரிபொருள் கடன் தொகையை அதிகரிக்குமாறு இந்தியாவிடம் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கமைய எரிபொருள் கொள்வனவுக்காக வழங்கப்படும் கடனை 500 மில்லியன் அமெரிக்க டொலர்களில் இருந்து 750 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்குமாறு இந்தியாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை, இந்தியாவிடமிருந்து ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை கடனாக பெறும் ஒப்பந்தத்தில் இன்று(வியாழக்கிழமை) கைச்சாத்திடப்படவுள்ளது.

நிதி அமைச்சின் செயலாளர் எஸ். ஆர். ஆட்டிகல இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2022/1272255

############    ##############   ###################

ஒரு பில்லியன் கடன் ஒப்பந்தத்தில்... கையெழுத்து வைத்து,
"மை"...  காய முதல், அடுத்த கடனுக்கும்.... வேண்டுகோள் விடுத்தாச்சு. 
கூச்சப் படாமல், கேட்கிறார்கள். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, வாதவூரான் said:

இந்தியாவுக்கு போறம்! 500 மில்லியன் வாங்கிறம்! ஒரு ஜவுளிக் கடையே இல்லை இல்லை ஒரு ஜவுளிக்கடலே வைக்கிறம்.

இவ்வளவு பவ்வியமாக இருக்கத்தெரியுமா?

2 பேர் மற்றும் நபர்கள் அமர்ந்துள்ளனர் இன் படமாக இருக்கக்கூடும்

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

இன்றைய திகதி.... 17.03.2022
திகதியும் 8,  கூட்டுத் தொகையும் 8.

 

நான் பிறந்தது 26.

கூட்டுத்தொகையும் 8.

எனக்கும் எண்கணித சாத்திரம் சொல்லுங்க சிறி.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

இவ்வளவு பவ்வியமாக இருக்கத்தெரியுமா?

2 பேர் மற்றும் நபர்கள் அமர்ந்துள்ளனர் இன் படமாக இருக்கக்கூடும்

500 மில்லியன் எண்டால் இதுக்கு மேலையும் பவ்வியம் காட்டலாம் வேணுமெண்டால் ஒரு கும்பிடும் போட்டு வைக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வாதவூரான் said:

500 மில்லியன் எண்டால் இதுக்கு மேலையும் பவ்வியம் காட்டலாம் வேணுமெண்டால் ஒரு கும்பிடும் போட்டு வைக்கலாம்

அடுத்தமுறை கடன் கேட்டு வரேக்கை விமான நிலையத்திலிருந்தே கும்பிடு 
போட்டுக் கொண்டு வருவார்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

கடுமையான நிதி நெருக்கடி- இந்தியாவிடம் 73ஆயிரம் கோடி ரூபாய் கடன் கோரும் இலங்கை!

எரிபொருள் கடன் தொகையை அதிகரிக்குமாறு இந்தியாவிடம் கோரிக்கை!

எரிபொருள் கடன் தொகையை அதிகரிக்குமாறு இந்தியாவிடம் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கமைய எரிபொருள் கொள்வனவுக்காக வழங்கப்படும் கடனை 500 மில்லியன் அமெரிக்க டொலர்களில் இருந்து 750 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்குமாறு இந்தியாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை, இந்தியாவிடமிருந்து ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை கடனாக பெறும் ஒப்பந்தத்தில் இன்று(வியாழக்கிழமை) கைச்சாத்திடப்படவுள்ளது.

நிதி அமைச்சின் செயலாளர் எஸ். ஆர். ஆட்டிகல இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2022/1272255

############    ##############   ###################

ஒரு பில்லியன் கடன் ஒப்பந்தத்தில்... கையெழுத்து வைத்து,
"மை"...  காய முதல், அடுத்த கடனுக்கும்.... வேண்டுகோள் விடுத்தாச்சு. 
கூச்சப் படாமல், கேட்கிறார்கள். 

வாங்குகிறவன் தான் வெந்த வீட்டில் அள்ளுறான் என்றால் கொடுக்கிறவனுக்கு எங்கே போய்ச்சு புத்தி மக்களின் வரிப்பணத்தில் வள்ளல் என்கிற எண்ணம் வேறை அதுசரி அவனுக்கு புத்தியிருந்தால் உப்பிடிப்பட்டவனை நண்பன் என்று அழைப்பானா? ஒருநாள் வழமையான ஒப்பந்தம்தானே என்று இசக்கு பிசக்காய் வில்லங்கமான ஒப்பந்தத்தில் வச்சிடப்போறார் எழுத்தை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.