Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசனின் மாளிகை- முகனூல் என்னை தடை செய்த கவிதை

Featured Replies

இன்று என் சொந்த பெயரில் உள்ள முகனூலில் கொழும்பில் இடம்பெற்ற போராட்டத்தை பற்றி சிம்பிளாக சொல்ல எழுதிய இந்தக் கவிதையால் முகனூல் தற்காலிகமாக என்னை தடை செய்தது.

..................................

இவ்வாறே அவர்கள் 

அரசனின் மாளிகையை

சுற்றி வளைத்தனர்

 

அன்று தேவ சபையில்

அரசன் பல்லாயிரம் ஆடுகளை

கொன்று 

தன் இந்திரியத்தால் குளிப்பாட்டி

விருந்து கொடுத்து இருந்தான்.

வண்ணாத்திப் பூச்சிகளின்

இறைக்கைகளை வெட்டி

படையல் போட்டு

இருந்தான்

 

அதை புசித்தவர்கள்

இன்று அவன் மாளிகையை

சுற்றி வளைத்தனர்

தங்களின் நாவு

வரண்டு எச்சில்

வற்றி விட்டதாக

கிளர்ந்து எழுந்தனர்

 

தாளா பசியால்

கதவுகளை

நெட்டித் தள்ளுகின்றனர்

 

அரசன் அவர்களை அறிவான்

 

இன்னும் ஒருமுறை

அவன் விருந்து கொடுத்து

இந்தக் கணக்கையும்

முடித்து வைக்கும் போது

சுற்றி வளைத்தவர்கள்

அரசனை

ஆரத் தழுவுவர் 

 

வண்ணத்துப் பூச்சிகளின்

இறக்கைகளை அவன்

மீண்டும் முறிக்கும் போது

அவனை அவர்கள்

மீண்டும் அரசனாக்குவர்

 

டொட்.

  • கருத்துக்கள உறவுகள்

சுடாமல் சுட்டிட்டுது...அருமையான கவிதை..

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

உண்மை சுடும்.....எப்பக்கம் தொடினும்......இதுக்கு தடை செய்யாமல் இருந்திருந்தால்தான் அதிசயம்.......!  👍

நன்றி நிழலி ......!  

  • தொடங்கியவர்
6 minutes ago, suvy said:

உண்மை சுடும்.....எப்பக்கம் தொடினும்......இதுக்கு தடை செய்யாமல் இருந்திருந்தால்தான் அதிசயம்.......!  👍

நன்றி நிழலி ......!  

இந்தக் கவிதையை தடை செய்த காரணம் அரசியல் இல்லையாம். வண்ணாத்துப் பூச்சிகளை கொல்வது (Animal cruelty) பற்றி எழுதியதாம் என்று காரணம் போட்டு இருந்தார்கள். 

எங்கே போய் தலையை முட்ட என்று இருந்தது....

  • கருத்துக்கள உறவுகள்

இது நல்ல பகிடியாய் இருக்கு.....கவிதையில் கூட வண்ணத்துப் பூச்சியை வாழவைக்கினமாம்.......!  😁

  • தொடங்கியவர்
6 minutes ago, suvy said:

இது நல்ல பகிடியாய் இருக்கு.....கவிதையில் கூட வண்ணத்துப் பூச்சியை வாழவைக்கினமாம்.......!  😁

அநேகமாக யாரோ ரிப்போர்ட் பண்ணியிருப்பினம். என் முகனூலில் மகிந்த பக்தர்கள் சிலர் உள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்

வண்ணத்துப் பூச்சிகளின்

இறக்கைகளை அவன்

மீண்டும் முறிக்கும் போது

அவனை அவர்கள்

மீண்டும் அரசனாக்குவர்

 

  • கருத்துக்கள உறவுகள்

“அதை புசித்தவர்கள்

இன்று அவன் மாளிகையை

சுற்றி வளைத்தனர்

தங்களின் நாவு

வரண்டு எச்சில்

வற்றி விட்டதாக

கிளர்ந்து எழுந்தனர்”

 

“வண்ணத்துப் பூச்சிகளின்

இறக்கைகளை அவன்

மீண்டும் முறிக்கும் போது

அவனை அவர்கள்

மீண்டும் அரசனாக்குவர்”

 

சிங்களத்தின்/ஆதிக்கவாதிகளின் உண்மை முகம். 

நன்றி நிழலி.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

இந்தக் கவிதையை தடை செய்த காரணம் அரசியல் இல்லையாம். வண்ணாத்துப் பூச்சிகளை கொல்வது (Animal cruelty) பற்றி எழுதியதாம் என்று காரணம் போட்டு இருந்தார்கள். 

எங்கே போய் தலையை முட்ட என்று இருந்தது....

நானும் இதைத் தான் நினைத்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்
On 31/3/2022 at 21:33, நிழலி said:

இன்று என் சொந்த பெயரில் உள்ள முகனூலில் கொழும்பில் இடம்பெற்ற போராட்டத்தை பற்றி சிம்பிளாக சொல்ல எழுதிய இந்தக் கவிதையால் முகனூல் தற்காலிகமாக என்னை தடை செய்தது.

..................................

இவ்வாறே அவர்கள் 

அரசனின் மாளிகையை

சுற்றி வளைத்தனர்

 

அன்று தேவ சபையில்

அரசன் பல்லாயிரம் ஆடுகளை

கொன்று 

தன் இந்திரியத்தால் குளிப்பாட்டி

விருந்து கொடுத்து இருந்தான்.

வண்ணாத்திப் பூச்சிகளின்

இறைக்கைகளை வெட்டி

படையல் போட்டு

இருந்தான்

 

அதை புசித்தவர்கள்

இன்று அவன் மாளிகையை

சுற்றி வளைத்தனர்

தங்களின் நாவு

வரண்டு எச்சில்

வற்றி விட்டதாக

கிளர்ந்து எழுந்தனர்

 

தாளா பசியால்

கதவுகளை

நெட்டித் தள்ளுகின்றனர்

 

அரசன் அவர்களை அறிவான்

 

இன்னும் ஒருமுறை

அவன் விருந்து கொடுத்து

இந்தக் கணக்கையும்

முடித்து வைக்கும் போது

சுற்றி வளைத்தவர்கள்

அரசனை

ஆரத் தழுவுவர் 

 

வண்ணத்துப் பூச்சிகளின்

இறக்கைகளை அவன்

மீண்டும் முறிக்கும் போது

அவனை அவர்கள்

மீண்டும் அரசனாக்குவர்

 

டொட்.

அருமையான கவிதை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.