Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜனாதிபதி... பதவி விலக வேண்டிய, அவசியம் இல்லை – நாமல் ராஜபக்ஷ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

 

ஜனாதிபதி... பதவி விலக வேண்டிய, அவசியம் இல்லை – நாமல் ராஜபக்ஷ

ஜனாதிபதி பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை என முன்னாள் அமைச்சர்  நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட அவர், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிறுவ வேண்டிய அவசியம் இருப்பதால், அது நிறைவேறினால், ஜனாதிபதி பதவி விலக வேண்டிய அவசியமில்லை என குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் பெறும் கட்சிக்கு அரசாங்கம் வழங்கப்படும் என ஜனாதிபதி தெளிவாக கூறியுள்ளதால், மக்கள் வீதியில் இறங்கி போராட்டங்களில் ஈடுபட வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்திற்குள் 113 ஆசனங்களைப் பெறுவதன் மூலம் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை பலத்தைப் பெற முடியும் என்று ஜனாதிபதி மற்றும் பிரதமர் இருவரும் தெளிவாகக் கூறியுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த நேரத்தில் கட்சிகள் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி மக்களை அமைதிப்படுத்த ஒன்றிணைய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

1988/1989ஆம் ஆண்டுகளில் அரசியல்வாதிகள் அவசர முடிவுகளை எடுத்த வரலாற்றை இலங்கை கொண்டுள்ளது என்றும் எனவே தொலைநோக்கு பார்வையுடன் ஒன்றிணைந்து கூட்டு முடிவுகளை எடுப்பதே சிறந்தது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

https://athavannews.com/2022/1275214

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரசியலில் எனது எதிர்காலத்தை மக்கள் தீர்மானிப்பார்கள் – நாமல்

கோட்டா... பதவி விலகினால்... அடுத்த திட்டம் என்ன? – நாமல் கேள்வி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்தால், நாட்டின் அடுத்த திட்டம் என்ன என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜனநாயகத்தின் கோட்பாடுகளை மீறி அரசாங்கங்களை மாற்ற முடியாது என  அவர் இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.

“இன்று கோட்டா வீட்டுக்குப் போ என்று சொல்வீர்கள். ஆனால் நாளை அவர் பதவி விலகினால் என்ன திட்டம்? யார் வழிநடத்துவார்கள்?” என்றும் அவர் இதன்போது கேள்வி எழுப்பினார்.

கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினால் அடுத்து வருபவரும் இதே பிரச்சினைகளையே எதிர்கொள்ள வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, அனைவரும் இணைந்து மக்களின் கோபத்தை தணிக்க முதலில் செயற்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்

https://athavannews.com/2022/1275273

  • கருத்துக்கள உறவுகள்

நாமல் இப்போதைக்கு  மக்களிடம் அடி வாங்குதல் தான் உங்கள் கடமை. 10 வருடங்கள் நாட்டை காப்பாற்றிய லட்சணத்தை மக்கள் இனம் கண்டுள்ளார்கள். இனியும் உங்களை மக்கள் பதவியில் வைத்திருப்பார்கள் என நினைக்கவில்லை.

கேள்வி உண்மையில் சரியான கேள்விதான். சனாதிபதியும் பிரதமரும் அமைச்சர்களும் பதவி விலகினால் யார் அரசை பொறுப்பேற்பது? இடைக்கால காபந்து அரசு என்றால் கூட அதற்கும் ஆட்கள் தேவை அல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, தமிழ் சிறி said:

கோட்டா... பதவி விலகினால்... அடுத்த திட்டம் என்ன? – நாமல் கேள்வி

பெரிதாக எதுவுமில்லை. எங்கள் சம்பந்தர் ஐயா தவணை சொல்வதற்கு, கோட்டா விலகிய நாள், இன்னொரு தீபாவளியாக உருவாகும்.😆

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

கேள்வி உண்மையில் சரியான கேள்விதான்.

இது பற்றி ஒரு தமிழ் செய்தியிலும் சொன்னார்கள் எதிர் கட்சிகள் யாரும் வரதயாரக இல்லை என்று காரணம் பிரச்சனைகளை தீர்க்க  நாட்டில் வெளிநாட்டு காசு கையிருப்பில் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிழலி said:

கேள்வி உண்மையில் சரியான கேள்விதான். சனாதிபதியும் பிரதமரும் அமைச்சர்களும் பதவி விலகினால் யார் அரசை பொறுப்பேற்பது? இடைக்கால காபந்து அரசு என்றால் கூட அதற்கும் ஆட்கள் தேவை அல்லவா?

நான் ஒரு 6 மாதம் no payயில் போய் செய்து கொடுக்க ரெடி🤣.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

நான் ஒரு 6 மாதம் no payயில் போய் செய்து கொடுக்க ரெடி🤣.

ஒரு 2 அல்லது 3 மாதம் பார்த்துவிட்டு போவது நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

ஜனநாயகத்தின் கோட்பாடுகளை மீறி அரசாங்கங்களை மாற்ற முடியாது என  அவர் இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.

இவர்கள் எல்லாம் ஜனநாயகப்படி தான் கருமமாற்றினார்கள். அப்படி நடந்திருந்தால் இத்தனை கஸ்ரத்தை நாடு சந்தித்திருக்காது. அடுத்த திட்டம் தமிழரின் உரிமைகளை வழங்குங்கள், அதன் பிறகு பாருங்கள் நாடு அசுர வேகம் பெறும். ஆனால் நம்ம தலைமைகள் ஏற்பதற்கு இன்னும் அதற்கு தயார் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

நான் ஒரு 6 மாதம் no payயில் போய் செய்து கொடுக்க ரெடி

நீங்கள் 6 மாதத்தால் பணியை முடித்து கொண்டு இலங்கையைவிட்டு திரும்பும் போது இலங்கையின் வெளிநாட்டு பண கையிருப்பு நிலை தாராளமாக உயர்ந்திருக்கும் என்பது எனது நம்பிக்கை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.