Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரச்சினைகளுக்கு... தீர்வு வழங்காவிட்டால்,  "பௌத்த சங்க சாசனத்தை" அமுல்படுத்துவோம் – பௌத்த பீடங்களின்... மகாநாயக்க தேரர்கள், எச்சரிக்கை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காவிட்டால் பௌத்த சங்க சாசனத்தை அமுல்படுத்துவோம் – பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் எச்சரிக்கை!

பிரச்சினைகளுக்கு... தீர்வு வழங்காவிட்டால்,  "பௌத்த சங்க சாசனத்தை" அமுல்படுத்துவோம் – பௌத்த பீடங்களின்... மகாநாயக்க தேரர்கள், எச்சரிக்கை!

பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால், பௌத்த சங்க சாசனத்தை அமுல்படுத்துவதாக மூன்று பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் எச்சரித்துள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு உடன் தீர்வு வழங்குமாறு கோரி ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் உட்பட அனைத்துக் கட்சிகளின் தலைவர்களிடமும் மூன்று பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடிதம் ஒன்றின் மூலம் அவர்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குமாறுகோரி, கடந்த 4ஆம் திகதி ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட யோசனைகள் தொடர்பில் சாதகமாக அவதானம் செலுத்தப்படாமை குறித்து அவர்கள் தங்களது கவலையை வெளியிட்டுள்ளனர்.

புதிய அமைச்சரவை நியமனம் பிரச்சினைக்கு தீர்வாகாது எனவும் 20ஆம் திருத்தச் சட்டத்தை நீக்கி 19ஆம் திருத்தச் சட்டத்தின் சாதகமான அம்சங்களை உள்வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

https://athavannews.com/2022/1277697

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, தமிழ் சிறி said:

பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால், பௌத்த சங்க சாசனத்தை அமுல்படுத்துவதாக மூன்று பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் எச்சரித்துள்ளனர்

மொட்டமார் உக்கிரமா மாறுவதற்குள் தீர்வை வழங்கிடுக..😊

IMG-20220421-113428.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

மொட்டமார் உக்கிரமா மாறுவதற்குள் தீர்வை வழங்கிடுக..😊

IMG-20220421-113428.jpg

குருநாதா on Twitter: "எங்களுக்கு வரவேண்டிய காவிரி தண்ணீரை தடுக்குற  நாயி.எங்ககிட்ட இருந்து வர மின்சாரத்த எதுக்கு யூஸ் பண்ற #WeHateKarnataka… "  تويتر \ குருநாதா (maangamadayan86@)

இனித்தான்... ஸ்ரீலங்கா அரசியல் சூடு பிடித்து, 
கொதி நிலைக்கு போகப் போகுது.
வந்திட்டான்யா...  மொட்டையன்.  🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

பிரச்சினைகளுக்கு... தீர்வு வழங்காவிட்டால்,  "பௌத்த சங்க சாசனத்தை" அமுல்படுத்துவோம் – பௌத்த பீடங்களின்... மகாநாயக்க தேரர்கள், எச்சரிக்கை!

இந்த மூன்று மகாநாயக்க தேரர்களில் ஒருவரை சனாதிபதி ஆக்கிவிட்டால்.......!  ஆனால் இவர்கள் தங்கள் மக்களைக் கவருவதற்கு ஒரு முள்ளிவாய்கால்தானே இருக்கிறது. இன்னமும் இரண்டு வேண்டுமே.....!! 🤔

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப ஆட்சி செய்வது எந்த சாசனத்திலயாம்......!   🤔

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, தமிழ் சிறி said:

பிரச்சினைகளுக்கு... தீர்வு வழங்காவிட்டால்,  "பௌத்த சங்க சாசனத்தை" அமுல்படுத்துவோம் – பௌத்த பீடங்களின்... மகாநாயக்க தேரர்கள், எச்சரிக்கை!

என்ன பிரச்சனைகளுக்கு தீர்வு??????????

  • கருத்துக்கள உறவுகள்

கெட் மொட்டையள்..... கோதாவுக்குள்ள இறங்கி.... பசியில இருக்கிற சனத்திடம் வாங்கப் போகினம்.....

பேசாம.... வழக்க் போல..... ‘குடியும், குடித்தனமாக’ இருக்கிறது, நல்லது.... 😁

  • கருத்துக்கள உறவுகள்

மொட்டைகளும் வாங்கி தான் திருந்த வேண்டும் என்றால் யாராலும் எதுவும் செய்ய முடியாது.😄

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

கடந்த 4ஆம் திகதி ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட யோசனைகள் தொடர்பில் சாதகமாக அவதானம் செலுத்தப்படாமை குறித்து அவர்கள் தங்களது கவலையை வெளியிட்டுள்ளனர்.

பிச்சை எடுத்து நீங்கள்  வயிற்றை பார்த்து கொள்வீர்கள்......புத்தசாசனப்படி ...ஆனால் பிச்சை கொடுக்கிறவனுக்கு  சாப்பாட்டுக்கு முதலாளித்துவாதிகளிடம் கையேந்த வேணுமே ....

உங்கன்ட புத்தசான வங்கியில்  பில்லியன் டொலர் இருக்கோ 

1 hour ago, குமாரசாமி said:

என்ன பிரச்சனைகளுக்கு தீர்வு??????????

தமிழனை எப்படி இந்த பிரச்சனைக்குள் கொர்த்துவிட்டு  ராஜபக்சாவை காப்பற்றுவதற்கான தீர்வு....

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, putthan said:

பிச்சை எடுத்து நீங்கள்  வயிற்றை பார்த்து கொள்வீர்கள்......புத்தசாசனப்படி ...ஆனால் பிச்சை கொடுக்கிறவனுக்கு  சாப்பாட்டுக்கு முதலாளித்துவாதிகளிடம் கையேந்த வேணுமே ....

உங்கன்ட புத்தசான வங்கியில்  பில்லியன் டொலர் இருக்கோ 

தமிழனை எப்படி இந்த பிரச்சனைக்குள் கொர்த்துவிட்டு  ராஜபக்சாவை காப்பற்றுவதற்கான தீர்வு....

அதென்ன சங்கசாசனம் ?யாராவது விளக்கம் சொல்லுங்கோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

என்ன பிரச்சனைகளுக்கு தீர்வு??????????

தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டால்...
நாட்டை, சிங்கப்பூர் மாதிரி முன்னேற்றலாம் என்று...
பிக்குகளுக்கு... இப்ப தான் புரிந்து உள்ளது போல் தெரிகின்றது.

காலம் கடந்தாலும், அதுவே நல்ல மாற்றம் தானே.
அதுதான்...  பிக்குகள், தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணச்  சொல்லி,
அரசுக்கு... அழுத்தம் கொடுக்கின்றார்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.