Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது ரஷ்யா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது ரஷ்யா

அதிநவீன கண்டம் விட்டு கண்டம் பாயும் சர்மட் ஏவுகணையை ரஷ்யா வெற்றிகரமாக சோதித்து பார்த்துள்ளது.

hpTcood3.jpg

வடக்கு ரஷ்யாவில் உள்ள பிளெசெட்ஸ்க் காஸ்மோட்ரோம் (Plesetsk Cosmodrome) விண்வெளி மையத்திலிருந்து ஏவுகணையை செலுத்தி ரஷ்ய இராணுவம் சோதித்து பார்த்தது. சர்மட் ஏவுகணை சாத்தானின் 2வது பாகம் என மேற்கு நாடுகளின் ஆய்வாளர்களால் அழைக்கப்படுகிறது.

ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி புதின், சர்மட் ஏவுகணையை யாராலும் வெல்ல முடியாது என்றும் உலகின் எந்த பகுதியையும் தாக்கி அழிக்கும் சக்தி கொண்டது என்றார்.

FQ17qrZVIAAEjTk.jpg

தொலைகாட்சியில் பேசிய ஜனாதிபதி புதின், தனித்துவமான ஏவுகணை ரஷ்ய இராணுவத்தை வலுப்படுத்தும் என்றும் வெளிநாட்டு அச்சுறுத்தல்களில் இருந்து நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்தும் என்றார். ரஷ்யா மீது தாக்குதல் நடத்த நினைக்கும் நாடுகள் இனி இரு முறை யோசிக்க வேண்டும் என்றார்.
 

https://www.virakesari.lk/article/126101

 

  • Replies 104
  • Views 6.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, கிருபன் said:

ரஷ்யா மீது தாக்குதல் நடத்த நினைக்கும் நாடுகள் இனி இரு முறை யோசிக்க வேண்டும் என்றார்.

Yet again, Vladimir Putin wins another 6 years as Russian leader

GIF palmadas klatschen maos - animated GIF on GIFER - by Bathis

அமெரிக்கா... இனி, அடக்கி வாசிக்க வேண்டும். 💪 😂
புட்டினுக்கு... வாழ்த்துக்கள். 👏 👏 👏

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Funny Gifs : putin GIF - VSGIF.com

வாழ்த்துக்கள் புட்டின்.💐
தார தப்பட்டைகள் ஒலிக்கட்டும் :cool:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, தமிழ் சிறி said:

அமெரிக்கா... இனி, அடக்கி வாசிக்க வேண்டும். 💪 😂
புட்டினுக்கு... வாழ்த்துக்கள். 👏 👏 👏

வரும் 9ம் திகதி ரஷ்யா நல்லதொரு செய்தியை அறிவிக்குமாம் 😁

 உக்ரேனுக்கு இன்னும் உக்கிரமாய்  இருக்குமோ? இருக்கும் இருக்கும் 😂

பலகோடி மக்கள் வாழும் நாடொன்றைத் தன்னால் ஒரே ஏவுகளையால் அழிக்க முடியும் என்று மார்தட்டுபவனை விட உலகின் அதியுர்ந்த பயங்கரவாத அச்சுறுத்தல் இருக்க முடியாது. இதைக் கேட்டு மகிழ்பவரை என்னவென்று சொல்வது ? அதுவும் போரை அனுபவித்து ஒருக்கப்பட்ட இனத்திலிருந்து வந்தவர்களாம்.

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, இணையவன் said:

பலகோடி மக்கள் வாழும் நாடொன்றைத் தன்னால் ஒரே ஏவுகளையால் அழிக்க முடியும் என்று மார்தட்டுபவனை விட உலகின் அதியுர்ந்த பயங்கரவாத அச்சுறுத்தல் இருக்க முடியாது. இதைக் கேட்டு மகிழ்பவரை என்னவென்று சொல்வது ? அதுவும் போரை அனுபவித்து ஒருக்கப்பட்ட இனத்திலிருந்து வந்தவர்களாம்.

 

குமாரசாமி அண்ணரையும் சிறியையும் உங்களுக்கு தெரியவில்லை இன்னும்  என்று  தான் அர்த்தம்  சகோ

இத்தனை  வருடங்களாக  எழுதும் உறவுகள்  இருவரும்..

நாம் புரிந்து  கொண்டது  இவ்வளவு  தானா  சகோ???😪

26 minutes ago, விசுகு said:

 

குமாரசாமி அண்ணரையும் சிறியையும் உங்களுக்கு தெரியவில்லை இன்னும்  என்று  தான் அர்த்தம்  சகோ

இத்தனை  வருடங்களாக  எழுதும் உறவுகள்  இருவரும்..

நாம் புரிந்து  கொண்டது  இவ்வளவு  தானா  சகோ???😪

கருத்துக்களத்தை வாசிப்பவர்கள் யார் கருத்து எழுதுகிறார்கள் என்று தெரிந்துகொண்டுதானா வாசிக்க வேண்டும் ?

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, விசுகு said:

 

குமாரசாமி அண்ணரையும் சிறியையும் உங்களுக்கு தெரியவில்லை இன்னும்  என்று  தான் அர்த்தம்  சகோ

இத்தனை  வருடங்களாக  எழுதும் உறவுகள்  இருவரும்..

நாம் புரிந்து  கொண்டது  இவ்வளவு  தானா  சகோ???😪

media1.giphy.com/media/Q7ozWVYCR0nyW2rvPW/200w....

விசுகர், ஒரே... தமாசுதான். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, இணையவன் said:

கருத்துக்களத்தை வாசிப்பவர்கள் யார் கருத்து எழுதுகிறார்கள் என்று தெரிந்துகொண்டுதானா வாசிக்க வேண்டும் ?

அப்படியென்றால்  உங்களது  இந்த  அடையாளப்படுத்தலும்  தவறு  தானே சகோ???

(அதுவும் போரை அனுபவித்து ஒருக்கப்பட்ட இனத்திலிருந்து வந்தவர்களாம்)

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

வரும் 9ம் திகதி ரஷ்யா நல்லதொரு செய்தியை அறிவிக்குமாம் 😁

 உக்ரேனுக்கு இன்னும் உக்கிரமாய்  இருக்குமோ? இருக்கும் இருக்கும் 😂

FB removes deepfake video of Ukrainian President - Sentinelassam

வரும் 9ம் திகதி... செலென்ஸ்கி, 
தனது காக்கி சட்டையை...  கழட்டிப்  போட்டு, கலர் சட்டை போடலாம் என்று... 
மாண்புமிகு புட்டின்,  அறிவிக்கப் போகின்றார். 

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இணையவன் said:

அதுவும் போரை அனுபவித்து ஒருக்கப்பட்ட இனத்திலிருந்து வந்தவர்களாம்.

முதல் வெடி விழ முன்னரே பிளேன் பிடித்து யூரோப் வந்தவர்கள் போரை அனுபவித்தவர்களா?

ஆட்டிலறி சத்தம், குண்டுவீச்சுக்கள் எதையும் நேரடியாகக் கேட்டேயிருக்கமாட்டார்கள். 

 

2 hours ago, விசுகு said:

அப்படியென்றால்  உங்களது  இந்த  அடையாளப்படுத்தலும்  தவறு  தானே சகோ???

(அதுவும் போரை அனுபவித்து ஒருக்கப்பட்ட இனத்திலிருந்து வந்தவர்களாம்)

நாம் ஈழத் தமிழர்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்தது.

ஒவ்வொரு விதமான திரிகளில் நடைபெறும் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பால் கள உறவுகளுடன் நட்புடனேயே பழக முயற்சிக்கிறேன்.

ஒருவர் எழுதிய கருத்தைப் பார்க்காமல் அது யார் எழுதியது என்று பார்ப்பதுதான் தவறு. அவர் தனக்குப் பிடித்தவராக இருந்தால் கண்ணை மூடிக் கொண்டு ஆதரிப்பதற்கும் பச்சை குத்துவதற்கும் யாருக்கும் உரிமை உண்டு. ஆனால் இதுதான் குழுவாதம். ஆரோக்கியமானது இல்லை. பல தடவைகள் ஒவ்வொரு பிரச்சனைகளின்போது குழுவாதம் தவிர்க்கப்பட வேண்டும் என்பது தொடர்ச்சியாக நிர்வாகத்தால் அறிவுறுத்தப்படுவதற்கான காரணம் அது யாழின் வளர்ச்சிக்கு முற்றிலும் முரனானது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, இணையவன் said:

நாம் ஈழத் தமிழர்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்தது.

ஒவ்வொரு விதமான திரிகளில் நடைபெறும் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பால் கள உறவுகளுடன் நட்புடனேயே பழக முயற்சிக்கிறேன்.

ஒருவர் எழுதிய கருத்தைப் பார்க்காமல் அது யார் எழுதியது என்று பார்ப்பதுதான் தவறு. அவர் தனக்குப் பிடித்தவராக இருந்தால் கண்ணை மூடிக் கொண்டு ஆதரிப்பதற்கும் பச்சை குத்துவதற்கும் யாருக்கும் உரிமை உண்டு. ஆனால் இதுதான் குழுவாதம். ஆரோக்கியமானது இல்லை. பல தடவைகள் ஒவ்வொரு பிரச்சனைகளின்போது குழுவாதம் தவிர்க்கப்பட வேண்டும் என்பது தொடர்ச்சியாக நிர்வாகத்தால் அறிவுறுத்தப்படுவதற்கான காரணம் அது யாழின் வளர்ச்சிக்கு முற்றிலும் முரனானது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

நன்றி.

நீங்கள் சொல்வது எனக்கு புரிந்தது. நான் சொல்ல வந்தது உங்களுக்கு புரிந்திருக்கும்?

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, இணையவன் said:

பலகோடி மக்கள் வாழும் நாடொன்றைத் தன்னால் ஒரே ஏவுகளையால் அழிக்க முடியும் என்று மார்தட்டுபவனை விட உலகின் அதியுர்ந்த பயங்கரவாத அச்சுறுத்தல் இருக்க முடியாது.

சர்வாதிகளுக்குரிய ஆணவபேச்சு. அதிலும் புரின் உலகின் அதியுர்ந்த பயங்கரவாத சர்வாதிகாரி  😟

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, இணையவன் said:

பலகோடி மக்கள் வாழும் நாடொன்றைத் தன்னால் ஒரே ஏவுகளையால் அழிக்க முடியும் என்று மார்தட்டுபவனை விட உலகின் அதியுர்ந்த பயங்கரவாத அச்சுறுத்தல் இருக்க முடியாது. இதைக் கேட்டு மகிழ்பவரை என்னவென்று சொல்வது ? அதுவும் போரை அனுபவித்து ஒருக்கப்பட்ட இனத்திலிருந்து வந்தவர்களாம்.

 

ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான், வட கொரியா, ஈரான், கியூபா, வெனிசுவேலா, யேமென் போன்ற நாடுகளையும் மேற்கு ஆபிரிக்க, ஆபிரிக்க நாடுகளை ஆக்கிரமிப்புக்களாலும், பொருளாதாரத் தடையாலும், சுரண்டலாலும் பட்டினி போட்டு மக்களை அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகள் கொன்று குவிக்கையில், 

ஒட்டுமொத்த மேற்கும், மேற்கு சார்பான நாடுகளும் எதிர்த்து நிற்கையில், தனித்து எதுவித வெளி உதவிகளுமின்றி தனது இராணுவ நடவடிக்கையினை தொடர்ந்து  மேற்கொள்ளும் பலத்தையும், நம்பிக்கையினையும் ரஸ்யாவுக்கு தந்தது/தருவது எது ? 

இந்த அணு வல்லமைதான் அந்த துணிச்சலை ரஸ்யாவுக்கு வழங்குகிறது. 

எனவே, பொருளாதார, இராணுவ பலம் தான் எதனையும் தீர்மானம் செய்கிறது. 

29 minutes ago, விளங்க நினைப்பவன் said:

சர்வாதிகளுக்குரிய ஆணவபேச்சு. அதிலும் புரின் உலகின் அதியுர்ந்த பயங்கரவாத சர்வாதிகாரி  😟

ர்ஸ்ய அதிபர்

""பலகோடி மக்கள் வாழும் நாடொன்றைத் தன்னால் ஒரே ஏவுகளையால் அழிக்க முடியும் "" 

என்று கூறியதாக தரவுகள்/சான்றுகள் எதனையும் காட்ட முடியுமா ?  

5 minutes ago, Kapithan said:

 

ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான், வட கொரியா, ஈரான், கியூபா, வெனிசுவேலா, யேமென் போன்ற நாடுகளையும் மேற்கு ஆபிரிக்க, ஆபிரிக்க நாடுகளை ஆக்கிரமிப்புக்களாலும், பொருளாதாரத் தடையாலும், சுரண்டலாலும் பட்டினி போட்டு மக்களை அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகள் கொன்று குவிக்கையில், 

ஒட்டுமொத்த மேற்கும், மேற்கு சார்பான நாடுகளும் எதிர்த்து நிற்கையில், தனித்து எதுவித வெளி உதவிகளுமின்றி தனது இராணுவ நடவடிக்கையினை தொடர்ந்து  மேற்கொள்ளும் பலத்தையும், நம்பிக்கையினையும் ரஸ்யாவுக்கு தந்தது/தருவது எது ? 

இந்த அணு வல்லமைதான் அந்த துணிச்சலை ரஸ்யாவுக்கு வழங்குகிறது. 

எனவே, பொருளாதார, இராணுவ பலம் தான் எதனையும் தீர்மானம் செய்கிறது. 

ர்ஸ்ய அதிபர்

""பலகோடி மக்கள் வாழும் நாடொன்றைத் தன்னால் ஒரே ஏவுகளையால் அழிக்க முடியும் "" 

என்று கூறியதாக தரவுகள்/சான்றுகள் எதனையும் காட்ட முடியுமா ?  

நீங்கள் குறிப்பிட்ட மேற்கு நாடுகளின் அராஜகத்தை நானும் எதிர்க்கிறேன்.

2 வாரத்தில் Kiev இனைப் பிடிப்பதாக ஆரம்பிக்கப்பட்ட ரஷ்சிய ஆக்கிரமிப்பு கைவிடப்பட்டு மே 9 இற்குள் எதையாவது பிடித்து வெற்றியைக் கொண்டாடினால் போதுமென்ற நிலையில் ரஸ்யா உள்ளது. அதற்காக ரஸ்யா எதனையும் செய்யும். ஏனென்றால் புட்டின் ஒரு சர்வாதிகாரி.

Marioupol Donbass பகுதி பலநூறு கிலோ மீற்றர் ரஸ்ய எல்லையைக் கொண்டது. அது தவிர அங்கு ஏற்கனவே பிரிவினைவாதிகள் போராடும் பகுதி. இதைவிட இலகுவான யுத்தத்தை உலகின் வல்லரசு எதிர்கொள்ள முடியாது. 

போர்க்கள நிலமையை விடுவோம். பல தசாப்தங்களுக்கு முன் அமெரிக்கா யப்பானில் செய்த மானுடருக்கெதிரான மாபெரும் அழிவுக்குப் பல மடங்கு மேல் என்னால் செய்ய முடியும் என்று மார்தட்டும் ஒரு மிகப் பெரிய பயங்கரவாதியை ஆதரித்து மகிழும் மனநிலை கொண்டவர்களா ஈழத் தமிழர்கள் ?

மீண்டும் ஒருமுறை விடுதலைப் புலிகளை இங்கு இழுப்பதற்கு மன்னிக்கவும். இறுதிப் போரில் தம்மிடமுள்ள போர்த்திறனை இழந்தபோதிலும் இறுதியாக இருந்த இரு விமானங்களை மிகச் சிரமத்தின் மத்தியுலும் கொழும்பிலுள்ள இராணுவ மையங்களையே தாக்கினார்களே தவிர கொழும்பை அழிக்க நினைக்கவில்லை.

வெட்கித் தலைகுனிய வேண்டிய சிந்தனை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, தமிழ் சிறி said:

வரும் 9ம் திகதி... செலென்ஸ்கி, 
தனது காக்கி சட்டையை...  கழட்டிப்  போட்டு, கலர் சட்டை போடலாம் என்று... 
மாண்புமிகு புட்டின்,  அறிவிக்கப் போகின்றார். 

இவர்ரை கதையளை பாத்தியளே. உதவி செய்யிற நாடுகளை வெருட்டுற மாதிரித்தான் கதைப்பார்..உக்ரேனுக்குள்ளை இருக்கிற மேற்குலக சார்பு அரசியல்வாதிகள் எல்லாம் மாஃபியாக்கள் தெரியுமோ? கிட்டத்தட்ட கோசோவா நாட்டு அரசியல்வாதிகள் மாதிரி......

பாத்தியளே சிறித்தம்பி புட்டின் ஒரு சிஷ்டமாய்த்தான் அடிக்கிறார்.முடிஞ்ச அளவுக்கு சனத்தை வெளியேறச்சொல்லிப்போட்டு சணல் அடியாம்.இந்த இரட்டை முக மேற்குலகு இருக்கெல்லே சொல்லி வேலையில்லை.இவையள் ஆயுதங்களை உக்ரேனுக்கு குடுத்துக்கொண்டே அங்கை ஒரே சண்டை அழிவு அலைச்சல் எண்டு ஒரே ஊளையிடுகினம்.நரிப்புத்தி மேற்குலகுக்கு இதுவும் வேணும்.இன்னும் வேணும்.

மேற்குலக வியாபாரிகளிடமிருந்து இந்த உலகத்தை புட்டின் காப்பாற்றுவார் என நம்புவோம்.

9ம் திகதியன்று அந்த நற்செய்தியை புட்டின் அறிவிக்கும் வரை நன்றி வணக்கம் சிறித்தம்பி.

18 minutes ago, குமாரசாமி said:

மேற்குலக வியாபாரிகளிடமிருந்து இந்த உலகத்தை புட்டின் காப்பாற்றுவார் என நம்புவோம்.

9ம் திகதியன்று அந்த நற்செய்தியை புட்டின் அறிவிக்கும் வரை நன்றி வணக்கம் சிறித்தம்பி.

நல்லது.

இந்தத் திகதிக்கு அடுத்த 10 நாட்களில் இலங்கைத் தீவில் பயங்கரவாத்ததை அழித்து இலங்கையைக் காப்பாற்றிய நாளாக சிங்களவர் கொண்டாடுவார்கள். 

இரண்டுக்கும் ஒற்றுமை என்னவென்றால் எத்தைனையாயிரம் மக்கள் பலியானால் என்ன, எத்தனை கோடி சொத்துகள் அழிக்கப்பட்டால் என்ன, பக்கச்சார்பான போர் வெற்றிதான் முக்கியம்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, இணையவன் said:

பலகோடி மக்கள் வாழும் நாடொன்றைத் தன்னால் ஒரே ஏவுகளையால் அழிக்க முடியும் என்று மார்தட்டுபவனை விட உலகின் அதியுர்ந்த பயங்கரவாத அச்சுறுத்தல் இருக்க முடியாது. இதைக் கேட்டு மகிழ்பவரை என்னவென்று சொல்வது ? அதுவும் போரை அனுபவித்து ஒருக்கப்பட்ட இனத்திலிருந்து வந்தவர்களாம்.

அப்படிங்களாண்ணே. அப்படின்னா.. இந்த உலகில் தனித்து நின்று தன் சொந்த இனத்தின் பங்களிப்போடு அதன் அரசியல் சமூக விடுதலைக்காகப் போராடிய மக்கள் மீது டொலர் கணக்கில் கமிசனை வாங்கிக் கொண்டு ஆயுதங்களையும்.. விமானங்களையும்.. பொஸ்பரஸ் குண்டுகளையும்.. விமானிகளையும்.. பயிற்சிகளையும் கொட்டிக் கொடுத்த உக்ரைனைக்கு கருணை காட்டுவது மட்டும் எப்படி நியாயமாகும்..??!

இன்னும் கோத்தா கும்பல்.. உக்ரைனிடம் வாங்கின ஆயுதத்திற்கு கொடுத்த டொலருக்கு.. கணக்குக் கேட்டுக்கிட்டு இருக்காங்க. இந்த வாரமும் ஒரு செய்தி வந்திருந்ததே. 

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, இணையவன் said:

1) நீங்கள் குறிப்பிட்ட மேற்கு நாடுகளின் அராஜகத்தை நானும் எதிர்க்கிறேன்.

2 வாரத்தில் Kiev இனைப் பிடிப்பதாக ஆரம்பிக்கப்பட்ட ரஷ்சிய ஆக்கிரமிப்பு கைவிடப்பட்டு மே 9 இற்குள் எதையாவது பிடித்து வெற்றியைக் கொண்டாடினால் போதுமென்ற நிலையில் ரஸ்யா உள்ளது. அதற்காக ரஸ்யா எதனையும் செய்யும். ஏனென்றால் புட்டின் ஒரு சர்வாதிகாரி.

Marioupol Donbass பகுதி பலநூறு கிலோ மீற்றர் ரஸ்ய எல்லையைக் கொண்டது. அது தவிர அங்கு ஏற்கனவே பிரிவினைவாதிகள் போராடும் பகுதி. இதைவிட இலகுவான யுத்தத்தை உலகின் வல்லரசு எதிர்கொள்ள முடியாது. 

போர்க்கள நிலமையை விடுவோம். பல தசாப்தங்களுக்கு முன் அமெரிக்கா யப்பானில் செய்த மானுடருக்கெதிரான மாபெரும் அழிவுக்குப் பல மடங்கு மேல் என்னால் செய்ய முடியும் என்று மார்தட்டும் ஒரு மிகப் பெரிய பயங்கரவாதியை ஆதரித்து மகிழும் மனநிலை கொண்டவர்களா ஈழத் தமிழர்கள் ?

மீண்டும் ஒருமுறை விடுதலைப் புலிகளை இங்கு இழுப்பதற்கு மன்னிக்கவும். இறுதிப் போரில் தம்மிடமுள்ள போர்த்திறனை இழந்தபோதிலும் இறுதியாக இருந்த இரு விமானங்களை மிகச் சிரமத்தின் மத்தியுலும் கொழும்பிலுள்ள இராணுவ மையங்களையே தாக்கினார்களே தவிர கொழும்பை அழிக்க நினைக்கவில்லை.

வெட்கித் தலைகுனிய வேண்டிய சிந்தனை.

இணையவன்,

உண்மையில் நீங்கள் கூற விரும்புவதை புரிந்துகொள்ள முடியவில்லை.

" நீங்கள் குறிப்பிட்ட மேற்கு நாடுகளின் அராஜகத்தை நானும் எதிர்க்கிறேன்.""

இது நல்லவிடயம்.

""2 வாரத்தில் Kiev இனைப் பிடிப்பதாக ஆரம்பிக்கப்பட்ட ரஷ்சிய ஆக்கிரமிப்பு கைவிடப்பட்டு மே 9 இற்குள் எதையாவது பிடித்து வெற்றியைக் கொண்டாடினால் போதுமென்ற நிலையில் ரஸ்யா உள்ளது. அதற்காக ரஸ்யா எதனையும் செய்யும். ஏனென்றால் புட்டின் ஒரு சர்வாதிகாரி.""

எதனை அடிப்படையாகக் கொண்டு 2, 3,வாரங்கள் என்று கூறுகிறீர்கள். புரியவில்லை 🧐

புடினை சர்வாதிகாரி என்கிறீர்கள். அது உங்கள் சொந்தக் கருத்து. அதனையிட்டு நான் கூறுவதற்கு எதுவும் இல்லை. 

""மீண்டும் ஒருமுறை விடுதலைப் புலிகளை இங்கு இழுப்பதற்கு மன்னிக்கவும். இறுதிப் போரில் தம்மிடமுள்ள போர்த்திறனை இழந்தபோதிலும் இறுதியாக இருந்த இரு விமானங்களை மிகச் சிரமத்தின் மத்தியுலும் கொழும்பிலுள்ள இராணுவ மையங்களையே தாக்கினார்களே தவிர கொழும்பை அழிக்க நினைக்கவில்லை.""

ஏன் இதனை இங்கே குறிப்பிடுகிறீர்கள்?

ரஸ்ய அதிபர்  பலகோடி மக்கள் வாழும் நாடொன்றை ஒரே ஏவுகணையால் தன்னால் அழிக்க முடியும் என்று கூறியதாக குறிப்பிட்டுடிருப்பதனாலா ? ஒரு அணுஆயுத நாட்டின் அதிபர் இவ்வாறு பொறுப்பில்லாமல் கூறுவார் என்று எப்படி இவ்வளவு வேகமாக முடிவுக்கு வந்தீர்கள்? செய்திகளை இப்படி இலகுவாக நம்புவது எங்களை நாங்களே முட்டாளாக்கும் செயற்பாடு என நான் நம்புகிறேன்.. 

ரஸ்ய அதிபர் இவ்வாறு கூறியதற்கு ஆதாரம்/சான்றுகளைக் காட்டமுடியுமா என்று விளங்க நினைப்பவரிடம் கேட்டதற்கு, பதிலேதும் கூறாமல் உங்கள் கருத்துக்கு விருப்பு வாக்கு செலுத்தியதிலிருந்து உங்களுக்கு புரியவில்லையா  இது ஆதாரமில்லாத/தவறான செய்தியென்று ?

வெட்கித் தலை குனியவேண்டிய சிந்தனை என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். எந்தச் சிந்தனையை ஒட்டி வெட்கமுற வேண்டும்? 

ஆதாரங்களில்லாமல் சகட்டுமேனிக்கு வெளிவரும் gossip களை உண்மை என நம்பி நம்பி கருத்துக் கூறுபவர்கள்தான் வெட்கப்பட வேண்டும். 

உங்கள் கூற்றுக்கு ஆதாரம் இருக்கிறதா எனக் கேட்பவர்க்ள் ஏன் வெட்கப்பட வேண்டும்? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 minutes ago, இணையவன் said:

நல்லது.

இந்தத் திகதிக்கு அடுத்த 10 நாட்களில் இலங்கைத் தீவில் பயங்கரவாத்ததை அழித்து இலங்கையைக் காப்பாற்றிய நாளாக சிங்களவர் கொண்டாடுவார்கள். 

இரண்டுக்கும் ஒற்றுமை என்னவென்றால் எத்தைனையாயிரம் மக்கள் பலியானால் என்ன, எத்தனை கோடி சொத்துகள் அழிக்கப்பட்டால் என்ன, பக்கச்சார்பான போர் வெற்றிதான் முக்கியம்.

இன்று உக்ரேனுக்காக கண்ணீர் வடிக்கும் மேற்குலகம் முள்ளிவாய்க்கால் அழிவை கண்டும் காணாமல் இருப்பதன் காரணம் என்ன?

இறுதிகட்ட யுத்தத்தில் கூடுதலான புலம்பெயர்மக்கள் தாம் வசிக்கும் நாடுகளில் வீதியில் இறங்கி விழிப்புணர்வு போராட்டங்களை நடத்தினார்களே அதற்கு உங்கள் விசுவாச மேற்குலகிடமிருந்து ஏதாவது ஒரு விசனம் தெரிவித்தார்களா?

உக்ரேன் அதன் அழிவைப்பார்த்து நான் ஏன் கவலைப்பட வேண்டும்? என் இனத்திற்காக யார் அழுதார்கள்?

ஊரில் ஒரு வசனம் சொல்வார்கள்  செத்தவீட்டில் அழுத கண்ணீரும் கடன் என. இதன் அர்த்தம் விளங்கினால் சந்தோசம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, கிருபன் said:

முதல் வெடி விழ முன்னரே பிளேன் பிடித்து யூரோப் வந்தவர்கள் போரை அனுபவித்தவர்களா?

ஆட்டிலறி சத்தம், குண்டுவீச்சுக்கள் எதையும் நேரடியாகக் கேட்டேயிருக்கமாட்டார்கள். 

 

சரி நானும் என்னைப்போன்றவர்களும் வெடிச்சத்தம் கேட்பதற்கு முன்னரே பாயை சுருட்டிக்கொண்டு வந்தவர்கள் தான் ஒத்துக்கொள்கின்றேன்.

வெடிச்சத்தங்கள் கேட்டும் அவலங்களை பார்த்த பின்னரும் எப்படி அயலவர்களை விட்டு,அவலப்படுபவர்களை விட்டு பெட்டியை தூக்கிக்கொண்டு தப்பி ஓடி வரமுடிந்தது? இவ்வளவு ஈவு இரக்கமான மனம் கொண்ட தாங்கள் ஏன் சொந்த மண்ணை விட்டு ஆங்கில பூமியில் தஞ்சம் புகுந்தீர்கள்?

காகம் கரிச்சட்டியை பாத்து நீ கறுப்பெண்டு சொல்லி சிரிச்சுதாம். 😎

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
28 minutes ago, இணையவன் said:

நல்லது.

இந்தத் திகதிக்கு அடுத்த 10 நாட்களில் இலங்கைத் தீவில் பயங்கரவாத்ததை அழித்து இலங்கையைக் காப்பாற்றிய நாளாக சிங்களவர் கொண்டாடுவார்கள். 

இரண்டுக்கும் ஒற்றுமை என்னவென்றால் எத்தைனையாயிரம் மக்கள் பலியானால் என்ன, எத்தனை கோடி சொத்துகள் அழிக்கப்பட்டால் என்ன, பக்கச்சார்பான போர் வெற்றிதான் முக்கியம்.

இரண்டு வெற்றிகளும் மனித அழிவுகளை கொண்டது. எனக்கு இது ஏற்புடையதல்ல.

ம்ன் இன அழிவு பலத்துடன் இருந்தவர்களை நிக்கதியாக்கி விட்டு,பல தடைகளை போட்டு கைகளை கட்டிய பின்,  ஆயுதங்களை மௌனிக்க வைத்த பின் கண்மூடித்தனமாக நயவஞ்சகமாக வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த பின் அழித்தொழித்தார்கள்.

உக்ரேனில் அப்படியல்ல. நாட்டுக்கு நாடு போட்டி போட்டுக்கொண்டு அவர்களுக்கு ஆயுத உதவி வழங்குகின்றார்கள்.நவீன ஆயுத பாவனைக்கு பயிற்சி வழங்குகின்றார்கள்.இராணுவ ஆலோசனைகள் வழங்குகின்றார்கள்.போரினால் பாதிக்கப்பட்ட இராணுவத்தினரை அயல் நாடுகள் பொறுப்பேற்கின்றார்கள். உக்ரேனில் இருந்துவரும் மக்களை (அவர்கள் அகதிகள் இல்லையாம்) மணிநேரமும் காத்திருந்து தங்கள் நாட்டுக்கு  அழைத்து வந்து பராமரிக்கின்றார்கள்.

மனிதனுக்கு பரிதாப உணர்ச்சி அவசியம். ஆனால் அதற்கென்று நேரகாலம் இடம் வலம் பார்க்க வேண்டியது முக்கியம்.

கபிதான், நான் பிரெஞ்சு  செய்திகளை அதிகம் வாசிப்பதுண்டும். ஆய்வுக் கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளதின்படி Kiev இனைப் பிடிப்பதற்காகத்தான் யுத்தம் ஆரம்பிக்கப்பட்டு ரஸ்யப் படைகள் அங்கு நகர்த்தப்பட்டன. அந்த நகரைப் பிடிக்காமல் ஏன் பலமான இழப்புகளுடன் ஏன் பின்வாங்க வேண்டும் ? ஒரு நாட்டின் இராணுவ பலத்தைச் சிதைக்க வேண்டுமானால் அதன் தலைநகரைப் பிடிப்பதை விட்டு ஏன் தனது நாட்டு எல்லையில் நின்று வீரம் பேச வேண்டும் ?

புட்டின் சர்வாதிகாரி என்பது எனது சொந்தக் கருத்தாக நீங்கள் கருதினால் இது பற்றி உங்களுடன் உரையாடுவதில் பயனில்லை.

கொழும்புத் தாக்குதலைச் சுட்டிக் காட்டியது எந்த நிலையிலும் புலிகளின் இலக்கு சிங்கள பொதுமக்கள் இல்லை. தற்போது உக்ரெய்னில் இருந்து வரும் செய்திகளையும் படங்களையும் பார்த்திருந்தால் உங்களுக்குப் புரிந்திருக்கும் அது முற்றிலும் இராணுவ இலக்குகள் இல்லை.

இதுவரை மேற்கு நாடுகள் யுத்தத்தில் இறங்காமைக்குக் காரணம் இயலாமை அல்லது மூன்றாவது உலக யுத்தம் மூழும் என்ற காரணம் இல்லை. ரஸ்யாவிடம் உள்ள அணு ஆயுதங்களும் ஐரோப்பா முழுவதும் உள்ள மின்னணு ஆலைகளும்தான். மேற்கு நாடுகளிடம் அணு ஆயுதம் இருந்தாலும் அது இனி ஒருபோது பாவிக்கப்பட மாட்டாது என்று நம்பலாம். ரஸ்யா அப்படி அல்ல. புட்டின் எடுப்பதுதன் முடிவு. புட்டினை நீங்கள் ஒரு பொறுப்புள்ள மனிதராகக் கருதினால் அது உங்கள் விருப்பம்.

வெட்கித் தலை குனியவேண்டிய சிந்தனை எனக் குறிப்பிட்டது எதோ ஒரு காரணத்துக்காக முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான மக்களைப் பேரினவாதம் பலியிட்டதோ அதே இனம் அதேபோன்று இன்னொரு தேசத்தில் ஏதோ காரணத்துக்காக அங்கும் பொதுமக்கள் சாவதைக் கண்டுகொள்ளாது அதை வெற்றியாகக் கொண்டாடுவதைத்தான்.

ரஸ்ய ஏவுகணை ஆதாரம். இது பிரெஞ்சில் உள்ளது. RS-28 Sarmat பற்றித் தேடிப் பாருங்கள். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, இணையவன் said:

ஒருவர் எழுதிய கருத்தைப் பார்க்காமல் அது யார் எழுதியது என்று பார்ப்பதுதான் தவறு. அவர் தனக்குப் பிடித்தவராக இருந்தால் கண்ணை மூடிக் கொண்டு ஆதரிப்பதற்கும் பச்சை குத்துவதற்கும் யாருக்கும் உரிமை உண்டு. ஆனால் இதுதான் குழுவாதம். ஆரோக்கியமானது இல்லை. பல தடவைகள் ஒவ்வொரு பிரச்சனைகளின்போது குழுவாதம் தவிர்க்கப்பட வேண்டும் என்பது தொடர்ச்சியாக நிர்வாகத்தால் அறிவுறுத்தப்படுவதற்கான காரணம் அது யாழின் வளர்ச்சிக்கு முற்றிலும் முரனானது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

எனது அவதானிப்பின் படி......  கருத்துக்கள பொறுப்பாளராக இருந்து கொண்டு பல திரிகளில் கருத்து எழுதாமலே பக்கசார்பு விருப்பு வாக்கை இட்டவர்களில் நீங்கள் முதன்மையானவர்.நிழலியும் இதே வேலையை செய்திருக்கின்றார். ஆனால் நிழலி குறைந்த பட்சம் திரியில் ஒரு வசன கருத்தையாவது வைத்திருப்பார்.ஆனால் நீங்கள்??????

குழுவாதம் இல்லாது கருத்து எழுத வேண்டுமெனில் ஒருவர் முதுகை மற்றவர் சொறிவது போல் ஆகிவிடும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.