Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பதவி விலக முடியாது: ஜனாதிபதி கோட்டா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பதவி விலக முடியாது: ஜனாதிபதி கோட்டா

தோல்வியடைந்த ஜனாதிபதியாக பதவியிலிருந்து விலக முடியாது என்றும் தனக்கு 5 வருடங்களுக்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அந்த பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னதாக தாம் பதவி விலகப்போவதில்லை எனவும் மீண்டும் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்துள்ளார்.

https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/பதவி-விலக-முடியாது-ஜனாதிபதி-கோட்டா/150-297943

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை சிக்கல்: எஞ்சிய 2 ஆண்டுகள் ஆட்சி செய்த பிறகே பதவி விலகுவேன் - கோட்டாபய ராஜபக்ஷ

35 நிமிடங்களுக்கு முன்னர்
 

கோட்டாபய

பட மூலாதாரம்,PMD

 

படக்குறிப்பு,

கோட்டாபய

தனது எஞ்சிய இரண்டு வருட பதவி காலத்தையும் நிறைவு செய்த பிறகே விலகப்போவதாக இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ப்ளும்பெர்க் செய்தி சேவைக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தனது பதவி காலம் நிறைவடைவதற்கு முன்னர் பதவி விலக போவதில்லை எனவும், ஐந்து வருடங்களுக்கு மக்கள் ஆணை அளித்துள்ளதால் எஞ்சியுள்ள இரண்டு வருடங்களையும் நிறைவு செய்யவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பதவி விலகுமாறு மக்கள் வீதிகளில் இறங்கி போராடுகின்ற நிலையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், தான் இனி தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

''தோல்வியடைந்த ஜனாதிபதியாக என்னால் செல்ல முடியாது. எனக்கு ஐந்து வருடங்கள் ஆணை வழங்கப்பட்டுள்ளது. நான் மீண்டும் தேர்தலில் போட்டியிட மாட்டேன்" என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை, பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவுகளை சந்தித்துள்ள இந்த தருணத்தில், எரிபொருள், எரிவாயு, மருந்து வகைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

இதனால், கோட்டா கோ கம என்ற மாதிரி கிராமம் அமைக்கப்பட்டு, ஜனாதிபதி செயலகம் முற்றுகையிடப்பட்டு இன்று 50 நாட்களை கடந்து அரச எதிர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது.

ஜனாதிபதி செயலகம் மாத்திரமன்றி, நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இன்றும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இலங்கையின் பணவீக்கம் சுமார் 40 வீதத்தை எட்டியுள்ளது.

இவ்வாறு இடம்பெற்ற போராட்டம், கடந்த மே மாதம் 9ம் தேதி வன்முறையாக மாறியதுடன், அந்த வன்முறைகளில் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட சுமார் 10 பேர் உயிரிழந்தனர்.

அத்துடன், 200ற்கும் அதிகமானோர் காயமடைந்ததுடன், பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டு, சேதமாக்கப்பட்டிருந்தன.

இந்த வன்முறைகளை அடுத்து, பிரதமராக பதவி வகித்த மஹிந்த ராஜபக்ஷ, தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, மே மாதம் 12ம் தேதி, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, புதிய பிரதமராக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்றார்.

 

போராட்டக்காரர்கள்

 

படக்குறிப்பு,

கோட்டாபய பதவி விலகக் கோரி நடந்துவரும் போராட்டத்தின் ஒரு காட்சி.

இதையடுத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர், சர்வதேச நாணய நிதியம், இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிடமிருந்து 4 பில்லியன் அமெரிக்க டாலர்களை கடனுதவியாக கோரியுள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு அதிக காலம் உள்ள நிலையில், கோட்டாபய ராஜபக்ஷ பதவிக் காலம் முடிவடையும் வரை அரசியல் நிச்சயமற்ற தன்மை அதிகரிக்கும் என பொருளாதார நிபுணர் ஒருவரை மேற்கோள்காட்டி ப்ளும்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்திடம் குறைந்தது 6 மாதங்கள் அல்லது ஒரு வருடத்திற்கு முன்பாக சென்றிருந்தால், இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது என ஜனாதிபதி கூறியுள்ளார்.

தான் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளிடம் உதவியை நாடியுள்ளதாகவும், தனிப்பட்ட ரீதியில் அந்த நாட்டு தலைவர்களுடன் கலந்துரையாடி, கடிதங்களை அனுப்பியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மசகு எண்ணெயை நீண்ட கால உடன்படிக்கையின் அடிப்படையில் பெற்றுக்கொள்ள கத்தார், ஐக்கிய அரபு எமிரேட் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளின் தலைவர்களுடன் தான் தனிப்பட்ட ரீதியில் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், மானிய அடிப்படையில் முன்னோக்கி செல்ல வேண்டும். அரச ஊழியர்களை அல்லது ராணுவத்தை குறைக்க முடியாது. ஆள்சேர்ப்பை குறைக்க முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-61711883

  • கருத்துக்கள உறவுகள்

Jumping Fox GIFs - Get the best GIF on GIPHY

ராஜபக்சக்களை, கதிகலங்க வைத்து...  நன்றாக போய்க் கொண்டிருந்த போராட்டம்,
சில வாரங்களில்... நல்ல முடிவு கிடைக்கலாம் என எதிர் பார்த்த நிலையில்..
இடையில் புகுந்து... காரியத்தை  கெடுத்து விட்டார், நரியார்  ரணில்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப முழுசா முடிச்சு விட போறன் என்று சொல்றாரோ!🤔

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, ஏராளன் said:

அரச ஊழியர்களை அல்லது ராணுவத்தை குறைக்க முடியாது. ஆள்சேர்ப்பை குறைக்க முடியும்

ம்ம்ம்… பார்ப்போம்…எவ்வளவு நாள் இது நீடிக்கும் என.

  • கருத்துக்கள உறவுகள்

சிலர் இதை “ பிள்ளையார் கலியாணம் செய்த மாதிரி’ என்று சொல்ல கேள்விப்பட்டுள்ளேன்.😀

  • கருத்துக்கள உறவுகள்

பதவி விலக முடியாது போடா!

  • கருத்துக்கள உறவுகள்

தோல்வியுற்ற ஜனாதிபதியாக என்னால் வெளியேற முடியாது – மீண்டும் போட்டியிட மாட்டேன்: கோட்டா

தோல்வியுற்ற ஜனாதிபதியாக... என்னால் வெளியேற முடியாது – மீண்டும் போட்டியிட மாட்டேன்: கோட்டா

தோல்வியடைந்த ஜனாதிபதியாக என்னால் வெளியேற முடியாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

பல மாதங்களாக வீதிப் போராட்டங்கள் தம்மை பதவி நீக்கம் செய்யுமாறு அழைப்பு விடுத்த போதிலும் தனது பதவிக்காலத்தில் எஞ்சிய இரண்டு வருடங்களையும் முடிப்பதாக தெரிவித்த அவர், மீண்டும் தேர்தலில் நிற்கப் போவதில்லை என்றும் தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று (திங்கட்கிழமை) வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

எஞ்சிய காலத்திலும் தொடர்ந்தும் ஜனாதிபதியாக பதவி வகித்து நாட்டை சீரழித்துள்ள நிதி நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு அவதானம் செலுத்துவேன் என்றும் அவர் தெரிவித்தார்.

நாட்டிற்கு தனது வெற்றிகரமான சேவைகளை பிரதிபலிக்க விரும்புவதாக ஜனாதிபதி கூறினார்.

6 மாதங்களுக்கு முன்னரே சர்வதேச நாணய நிதியத்திடம் சென்றிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமை இருந்தால் முழுமையான அதிகாரம் காணப்பட வேண்டும் அவ்வாறு இல்லாவிட்டால் அதனை முழுமையாக இரத்து செய்து வெஸ்ட் மினிஸ்டர் நாடாளுமன்ற முறைமையை அமுல்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

மார்ச் நடுப்பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதியின் அலுவலகத்திற்கு வெளியே முகாமிட்டுள்ளனர். இதனால் அவர் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் தங்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

எரிபொருளில் இருந்து மருந்து வரை கடுமையான பற்றாக்குறைக்கு வழிவகுத்தமை, பணவீக்கத்தை 40வீதமாக உயர்த்தியமை மற்றும் வரலாற்றுக் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு வழிவகுத்தமை என கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ‘கோட்டா கோ ஹோம்’ போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மே மாதத்தில் அரசாங்க ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையிலான மோதல்கள் இரத்தக்களரியாக மாறிய பின்னர், நாட்டின் பிரதமர் பதவியில் இருந்து ஜனாதிபதியின் மூத்த சகோதரர் மஹிந்த ராஜபக்ஷ இராஜினாமா செய்தார்.

இதனையடுத்து, புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கவும் ஜனாதிபதியும் சர்வதேச நாணய நிதியம், இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து இந்த ஆண்டு சுமார் 4 பில்லியன் டொலர் உதவியை நாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1285729

  • கருத்துக்கள உறவுகள்

காலைச் (இலங்கைமக்களைச்) சுற்றிய பாம்பு கடிக்காமல் விடாது.

Unbenannt-1.jpg

  • கருத்துக்கள உறவுகள்

1. ஜனாதிபதி கோட்டாவின் பேச்சு நாட்டின் எதிர்காலம், மக்களின் சுபீட்சமான வாழ்க்கை என்பவற்றை முன்னிறுத்திய வார்த்தைகளாக தெரியவில்லை.

2. இப்போதுள்ள நெருக்கடியான வாழ்க்கை சூழ் நிலையில் மக்கள் மத்தியில் இருக்கும் கொதிநிலை குறையும் வரையும் பதவியை கையகப்படுத்தி ஆட்சி அதிகாரம் இராணுவம் பொலீஸ் அனைத்தின் உதவியுடன் தனது வம்சத்தை பாதுகாக்க முயற்சிக்கிறார் கோத்தா.

3. இப்போதே பதவி விலகினால் சுயமரியாதையுடன் நடந்து முடிந்தவைக்கு பொறுப்புகூறாமல் காலத்தை கழிக்கலாம் மாறாக  5 வருடம் கழித்துதான் பதவி விலகுவேன் என்றால் பொறுப்புகூறலுடன் அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்கும் சட்ட நடவடிக்கையுடன் நீதிவிசாரணைக்குட்படுத்தபடுவார்  என மக்கள் அறிவித்தல் விட வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.