Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எரிபொருளுக்காக காத்திருப்பவர்களுக்கு நீராகாரம் வழங்குங்கள் - வடமாகாண ஆளுநர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எரிபொருளுக்காக காத்திருப்பவர்களுக்கு நீராகாரம் வழங்குங்கள் - வடமாகாண ஆளுநர்

எரிபொருளுக்காக நீண்ட வரிசைகளில் மணிக்கணக்காக காத்திருக்கும் மக்களுக்கு உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் பொது அமைப்புக்கள் இயன்றவரை நீராகாரத்தை வழங்குமாறு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

அது தொடர்பில் தெரிவிக்கையில், 

வட மாகாண ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமனம்! | Kuruvi

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் நிலையில் வடமாகாணத்திலும் மக்கள் மணிக்கணக்கில் வெயிலில் நீண்ட வரிசையில் காத்தி இருக்கிறார்கள்.

மட்டுப்படுத்தப்பட்ட அளவில் எரிபொருள் விநியோகம் இடம்பெற்று வருவதால் அதனைப் பெறுவதற்காக நோய் நிலமை உள்ளவர்களும் எரிபொருளுக்காக மணிக்கணக்காக காத்திருக்கின்ற நிலைமையை நான் உணர்கிறேன்.

ஆகவே இயன்றவரை எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்கும் மக்களுக்கு சமூக மட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கொடை வள்ளல்கள் தற்போதைய தருணத்தில் நீராகாரத்தை வழங்கி உதவுமாறு வடமாகாண பிரதம செயலாளர் ஊடாக  வடமாகாண உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் உள்ளூராட்சி ஆணையாளர் மாற்றம் பிரதேச செயலகங்களுக்கும் ஆளுநர் கோரிக்கை விடுத்துள்ளார்.
 

 

https://www.virakesari.lk/article/129957

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, கிருபன் said:

எரிபொருளுக்காக காத்திருப்பவர்களுக்கு நீராகாரம் வழங்குங்கள் - வடமாகாண ஆளுநர்

முந்தியெல்லாம் கூடுதலான கடைவாசலிலை தண்ணிப்பானை வைச்சிருக்கும். ஆரும் போய் எவ்வளவும் குடிக்கலாம். அந்த சிஸ்டம் இப்ப இல்லையோ?

ஓ.....எல்லாரும் வெஸ்ரேன் ஸ்ரையிலுக்கு மாறீட்டினம் போல......:cool:

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

முந்தியெல்லாம் கூடுதலான கடைவாசலிலை தண்ணிப்பானை வைச்சிருக்கும். ஆரும் போய் எவ்வளவும் குடிக்கலாம். அந்த சிஸ்டம் இப்ப இல்லையோ?

ஓ.....எல்லாரும் வெஸ்ரேன் ஸ்ரையிலுக்கு மாறீட்டினம் போல......:cool:

குறிப்பிட்ட சில கிணற்று நீர் தான் நன்னீராக இருக்கிறது. அதை தேடிப் போய் அள்ளி கொடுக்கவேணும். நிறைய இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் லீற்றர் 3-5 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் நீங்க மூலை முடுக்கெல்லாம் விகாரைகளை கட்டிக் கொண்டிருங்கள்.

 

ஓர் புத்தர் சிலைக்கு 15 இராணுவத்தை காவல்காக்க வைக்கும் நாடால்லவா…!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, ஏராளன் said:

குறிப்பிட்ட சில கிணற்று நீர் தான் நன்னீராக இருக்கிறது. அதை தேடிப் போய் அள்ளி கொடுக்கவேணும். நிறைய இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் லீற்றர் 3-5 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது.

கிராமிய வாழ்க்கை என்றுமே தரமானது. உத்தரவாதம் நிறைந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

எந்த தண்னி என்டு சொல்ல வில்லை என்டாலும் பறவாய் இல்லை. கொடுதால் போச்சு.

  • கருத்துக்கள உறவுகள்

தானே முன்மாதிரியாய் தொடக்கி வைக்கலாமே?

  • கருத்துக்கள உறவுகள்

"பாண் கிடைக்காவிட்டால் கேக் சாப்பிடுங்கள்" என்று French princess Marie Antoinette கூறியதுதான் நினைவிற்கு வருகிறது. 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, கிருபன் said:

வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா

இவர் மக்களால் தெரிவுசெய்யப்பட்டவரோ, நியமிக்கப்பட்டரோ அல்ல. சனாதிபதியால் நியமிக்கப்பட்டவர், சனாதிபதியின் புத்திதானே இவருக்கும் இருக்கும்.🤔

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Paanch said:
On 22/6/2022 at 03:56, கிருபன் said:

வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா

இவர் மக்களால் தெரிவுசெய்யப்பட்டவரோ, நியமிக்கப்பட்டரோ அல்ல. சனாதிபதியால் நியமிக்கப்பட்டவர், சனாதிபதியின் புத்திதானே இவருக்கும் இருக்கும்

நாய் வளர்த்தால் எஜமானுக்கு வாலை ஆட்டியே தீரும்.

இதிலென்ன புதுமை.

  • கருத்துக்கள உறவுகள்
On 22/6/2022 at 17:56, கிருபன் said:

எரிபொருளுக்காக நீண்ட வரிசைகளில் மணிக்கணக்காக காத்திருக்கும் மக்களுக்கு உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் பொது அமைப்புக்கள் இயன்றவரை நீராகாரத்தை வழங்குமாறு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

இதை சொல்வதற்கு ஒரு ஆளுநர்! மற்றவர்கள் செய்ய வேண்டும் என்று சொல்பவர், எதற்கு ஆளுநர் வேஷம்? மக்களின் காணிகளை அபகரிக்காதீர்கள் என்று ஒருமுறை சொல்லட்டும் பாப்போம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.