Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாராளுமன்ற சர்வ கட்சி கூட்டத்தை கூட்டுமாறு முப்படைதளபதிகள் சார்பில் சவேந்திரசில்வா சபாநாயகரை கோரினார்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாராளுமன்ற சர்வ கட்சி கூட்டத்தை கூட்டுமாறு முப்படைதளபதிகள் சார்பில் சவேந்திரசில்வா சபாநாயகரை கோரினார்!

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டின் சமகால பொருளாதார நிலைமை, 21 ஆவது திருத்தச்சட்டமூலம் குறித்து நாளை பிரதமர் விசேட உரை!

அவசர, கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு... சபாநாயகர் அழைப்பு.

அவசர கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அழைப்பு விடுத்துள்ளார்.

அதற்கமைய, இன்று(13) மாலை 5 மணிக்கு குறித்த கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது ஒரு நல்ல சமிக்ஞை இல்லை.

முதன்முறையாக ராணுவம் நேரடியாக பொது பரப்பில் வந்து அரசியல்வாதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அடுத்த படியாக ராணுவம் அரசை நெருக்கடிக்கு உள்ளாக்கலாம் அல்லது தானே அந்த பொறுப்பை எடுக்க முனையலாம். வரும் வெறும் நாட்கள் பரபரப்பாக நகரும்.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, நிழலி said:

இது ஒரு நல்ல சமிக்ஞை இல்லை.

முதன்முறையாக ராணுவம் நேரடியாக பொது பரப்பில் வந்து அரசியல்வாதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அடுத்த படியாக ராணுவம் அரசை நெருக்கடிக்கு உள்ளாக்கலாம் அல்லது தானே அந்த பொறுப்பை எடுக்க முனையலாம். வரும் வெறும் நாட்கள் பரபரப்பாக நகரும்.

அடுத்த நாட்டு ராணுவம் வருவதைவிட எமது ராணுவமே அடக்கலாம் என எண்ணுகிறார்களோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, நிழலி said:

இது ஒரு நல்ல சமிக்ஞை இல்லை.

முதன்முறையாக ராணுவம் நேரடியாக பொது பரப்பில் வந்து அரசியல்வாதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அடுத்த படியாக ராணுவம் அரசை நெருக்கடிக்கு உள்ளாக்கலாம் அல்லது தானே அந்த பொறுப்பை எடுக்க முனையலாம். வரும் வெறும் நாட்கள் பரபரப்பாக நகரும்.

உண்மைதான். நாங்கள் முட்டு கொடுத்துத்தான் இவர்கள் நிற்கவேண்டும் என்றால் நாங்களே ஏன் நிற்க கூடாது என தளபதிகள் யோசிக்க கூடும்.

இராணுவ ஆட்சி வந்தால் தமிழருக்கு நெருக்கடி கூடும். நில பறிப்பு வேகம் எடுக்கும்.

அரசியல்வாதிகளுக்கு கடைசி சந்தர்ப்பம் இதுவாக இருக்கலாம்.

ராஜபக்சேக்கள், ரணில் இல்லாத அரசை அமைத்து - போராட்டகாரரை கொஞ்சம் நிதானப்படுத்தி, எண்ணையை இறக்கி, தேர்தலை வைத்து ஏதாவது செய்தாக வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

https://www.newswire.lk/2022/07/13/party-leaders-decide-to-call-for-rws-resignation-ahead-of-presidents-resignation/

 

ஜனாதிபதிக்கு முன் ரணில் பதவி விலக வேண்டும். சர்வ கட்சி தலைவர்கள் முடிவு என்கிறார் சுமந்திரன்.

  • கருத்துக்கள உறவுகள்

கோட்டாவுக்கும் ரணிலுக்கும் இடையில் பகைமை அதிகரித்து வருகிறது – மைத்திரி

ரணில் உடனடியாக பதவி விலகவேண்டும் – கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் வலியுறுத்து!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உடனடியாக பதவி விலகவேண்டும் என கட்சித் தலைவர்கள், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நாடாளுமன்ற வளாகத்தில் இன்று(புதன்கிழமை) நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்திலேயே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு ரணில் விக்கிரமசிங்கவின் செயற்பாடும் காரணமாக அமைந்துள்ளது எனவும் கட்சித் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தையும் கைப்பற்றும் முன்னர், அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

https://athavannews.com/2022/1291085

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டின் பொருளாதார நெருக்கடிகளுக்கு கொரோனாவே காரணம் – சபாநாயகர்

 ”ஜனாதிபதி பதவி விலகாவிடில், நான் பதவி விலகுவேன்”  கட்சித் தலைவர்கள்  கூட்டத்தில், அறிவித்தார்  சபாநாயகர்.

‘ஜனாதிபதி பதவி விலகாவிடில் நான் பதவி விலகுவேன்”  என கட்சித்தலைவர்கள்  கூட்டத்தில் அறிவித்தார்  சபாநாயகர் மஹிந்த யாப்பா தெரிவித்துள்ளார்.

இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
  • கருத்துக்கள உறவுகள்

அடடா சபாநாயகருக்கே ரோஷம் வந்திட்டுதுபோல!!

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, goshan_che said:

உண்மைதான். நாங்கள் முட்டு கொடுத்துத்தான் இவர்கள் நிற்கவேண்டும் என்றால் நாங்களே ஏன் நிற்க கூடாது என தளபதிகள் யோசிக்க கூடும்.

இராணுவ ஆட்சி வந்தால் தமிழருக்கு நெருக்கடி கூடும். நில பறிப்பு வேகம் எடுக்கும்.

அரசியல்வாதிகளுக்கு கடைசி சந்தர்ப்பம் இதுவாக இருக்கலாம்.

ராஜபக்சேக்கள், ரணில் இல்லாத அரசை அமைத்து - போராட்டகாரரை கொஞ்சம் நிதானப்படுத்தி, எண்ணையை இறக்கி, தேர்தலை வைத்து ஏதாவது செய்தாக வேண்டும்.

விடுங்கோ கோசான்,

மாவு நன்றாக புளிக்கட்டும். 😉

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

விடுங்கோ கோசான்,

மாவு நன்றாக புளிக்கட்டும். 😉

உண்மைதான்.

23 minutes ago, தமிழ் சிறி said:

நாட்டின் பொருளாதார நெருக்கடிகளுக்கு கொரோனாவே காரணம் – சபாநாயகர்

 ”ஜனாதிபதி பதவி விலகாவிடில், நான் பதவி விலகுவேன்”  கட்சித் தலைவர்கள்  கூட்டத்தில், அறிவித்தார்  சபாநாயகர்.

‘ஜனாதிபதி பதவி விலகாவிடில் நான் பதவி விலகுவேன்”  என கட்சித்தலைவர்கள்  கூட்டத்தில் அறிவித்தார்  சபாநாயகர் மஹிந்த யாப்பா தெரிவித்துள்ளார்.

இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

பாவம் யாப்பா கோட்ட சொல்லுற கதைய கேட்டு மாறி மாறி கதைச்சு விரக்தியின் விழிம்புக்கே போய்ட்டார் போல😆.

இவரும் ரிசைன் பண்ணினா பாராளுமன்றை கூட்டுவதும் அடுத்த ஜனாதிபதிய தேர்வதும் கடினமாகும்.

ஆமியிண்ட கைல கொடுக்காமல் அடங்க மாட்டாங்கள் போலியே🤣.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

 

பாவம் யாப்பா கோட்ட சொல்லுற கதைய கேட்டு மாறி மாறி கதைச்சு விரக்தியின் விழிம்புக்கே போய்ட்டார் போல😆.

இவரும் ரிசைன் பண்ணினா பாராளுமன்றை கூட்டுவதும் அடுத்த ஜனாதிபதிய தேர்வதும் கடினமாகும்.

ஆமியிண்ட கைல கொடுக்காமல் அடங்க மாட்டாங்கள் போலியே🤣.

கொடுப்பது நல்லதுதானே..🤣

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

முதன்முறையாக ராணுவம் நேரடியாக பொது பரப்பில்

ஒரு முறை coup நடந்தது என்று நினைக்கிறன். அனால் முறியடிக்கப்பட்டது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.