Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சீனாவின் ஆதிக்கத்தை தடுக்க தனி ஈழமே தீர்வு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவின் ஆதிக்கத்தை தடுக்க தனி ஈழமே தீர்வு என முன்னாள்  பாராளுமன்ற உறுப்பினா் எம். கே. சிவாஜிலிங்கம்  தெரிவித்துள்ளார்.

சென்னை ஊடக மையத்தில் நேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்திலேயே சீன உளவுக் கப்பலுக்கு அனுமதி அளித்துள்ளாா். தற்பொழுது இந்திய அரசின் தொடா் அழுத்தத்தால் சீன உளவுக் கப்பலுக்கு தற்போதைய அதிபா் ரணில் விக்ரமசிங்க அனுமதி மறுத்துள்ளாா். 

இருப்பினும் அந்த கப்பலின் பயணம் தொடா்ந்துள்ளது. அது இலங்கைக்கு வருவதில்தான் தாமதமே தவி அதன் பயணம் தடைப்படவில்லை.

இலங்கை அரசு தன்னுடைய சா்வதேச நிலைப்பாட்டில் தெளிவில்லாமல் உள்ளது. இந்தியாவோடும் இருப்போம் சீனாவோடும் இருப்போம் என்றால் இந்தியா அதற்கு அனுமதிக்காது. எனவே இலங்கை அரசு அவா்களுடைய சா்வதேச நிலைப்பாட்டில் தெளிவடைய வேண்டும். அதோடு இலங்கையின் வடகிழக்கில் உள்ள ஈழத்தமிழா்களுக்காக இந்திய அரசு தலையிட்டு அவா்களுக்கென சுதந்திர வாக்கெடுப்பை நடத்த வழிவகை செய்ய வேண்டும்.

இன்றைய இலங்கையில் ஈழத்தமிழா்களுக்கு நிரந்தர அமைதியான அரசியல் தீா்வை காணும் நோக்கத்தில் இந்திய அரசு அவசரமாகவும் உடனடியாகவும் தலையிட்டு சுதந்திரத்திற்கான வாக்கெடுப்பை நடத்துவதற்குத் தலைமை ஏற்கவேண்டும். 

இலங்கையின் ஆக்கிரமிப்புக்கு எதிராக ஈழத்தமிழ் மக்களையும் வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள அவா்களின் தாயகத்தின் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கும் நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

அத்துடன் பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் வரை ஈழத்தமிழகப் பகுதிகளை ஈழத்தமிழா்களே ஆளவும் ஐ.நா. இடைக்கால நிா்வாகம் வழிவகை செய்ய வேண்டும். 

சீனாவின் ஆதிக்கத்தைத் தடுக்க தனி ஈழமே தீா்வாகும். சா்வதேச நாணய  நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட சா்வதேச சமூகத்திடமிருந்து இலங்கை பொருளாதார உதவியை நாடும் நிலையில் இலங்கைக்கு எந்த உதவியும் செய்யாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு, இந்திய அரசாங்கம் உட்பட சா்வதேச சமூகத்தை வலியுறுத்துகிறோம் என்றார். (R)

Tamilmirror Online || சீனாவின் ஆதிக்கத்தை தடுக்க தனி ஈழமே தீர்வு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Quote

 

சீனாவின் ஆதிக்கத்தை தடுக்க தனி ஈழமே தீர்வு என முன்னாள்  பாராளுமன்ற உறுப்பினா் எம். கே. சிவாஜிலிங்கம்  தெரிவித்துள்ளார்.

சென்னை ஊடக மையத்தில் நேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்திலேயே சீன உளவுக் கப்பலுக்கு அனுமதி அளித்துள்ளாா். தற்பொழுது இந்திய அரசின் தொடா் அழுத்தத்தால் சீன உளவுக் கப்பலுக்கு தற்போதைய அதிபா் ரணில் விக்ரமசிங்க அனுமதி மறுத்துள்ளாா். 

இருப்பினும் அந்த கப்பலின் பயணம் தொடா்ந்துள்ளது. அது இலங்கைக்கு வருவதில்தான் தாமதமே தவி அதன் பயணம் தடைப்படவில்லை.

 

தனி தமிழீழம் இனி சாத்தியமில்லை. வேறை ஏதாவது மாத்தி யோசியுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

தனி தமிழீழம் இனி சாத்தியமில்லை. வேறை ஏதாவது மாத்தி யோசியுங்கோ.

எல்லாம் தமிழர்கள் எம் ஒற்றுமையிலும் சாமர்த்தியத்திலும் தான் தங்கி இருக்குது. 

உக்ரைனுக்கு ஒரு டான்பாஸ் (DONBAS).. சீனாவுக்கு ஒரு தாய்வான் போல.. இலங்கைக்கு ஒரு தமிழீழம் அமைவதால்... கூடிய நலனடைவது ஹிந்தியாவாத்தான் இருக்கும். ஆனால்.. ஹிந்தியர்களுக்கு ஹிந்தியா அவசியமில்லை என்றால்.. தமிழீழமும் இப்போதைக்கு சாத்தியமில்லை தான். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் செல்லாக்கின் கீழ் கிடைக்கும் என்றால்,  எனக்கு தமிழ் ஈழமே வேண்டாம். 

🙏

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
58 minutes ago, Kapithan said:

இந்தியாவின் செல்லாக்கின் கீழ் கிடைக்கும் என்றால்,  எனக்கு தமிழ் ஈழமே வேண்டாம். 

🙏

மாலை தீவு செல்வாக்கின் கீழ் ஓகேயா? 😉

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, குமாரசாமி said:

மாலை தீவு செல்வாக்கின் கீழ் ஓகேயா? 😉

நாளாந்தம் கோமியம் குடித்து சாணத்தால் முழுகுவதை விட, ஒரே ஒரு தடவை சுன்னத்துச் செய்யலாம்தானே 🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

இந்தியாவின் செல்லாக்கின் கீழ் கிடைக்கும் என்றால்,  எனக்கு தமிழ் ஈழமே வேண்டாம். 

🙏

கடும் ரோசக்காரனாய் இருப்பார் போலிருக்கு!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Kapithan said:

நாளாந்தம் கோமியம் குடித்து சாணத்தால் முழுகுவதை விட, ஒரே ஒரு தடவை சுன்னத்துச் செய்யலாம்தானே 🤣

கோமிய ஆட்சி வாழ்க்கை முழுவதும் இருக்காது சார். உங்க சொக்கத்தங்க ஆட்சி ஒரு நாள்......ஒரு நாள் மேடையேறும். :cool:

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, குமாரசாமி said:

கோமிய ஆட்சி வாழ்க்கை முழுவதும் இருக்காது சார். உங்க சொக்கத்தங்க ஆட்சி ஒரு நாள்......ஒரு நாள் மேடையேறும். :cool:

அப்படியென்றால் இந்தியாவின் கீழே  ஒரு மாநிலமாய் இருப்பதற்கு நீங்கள் ஆயத்தமா? 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பிழம்பு said:

அதோடு இலங்கையின் வடகிழக்கில் உள்ள ஈழத்தமிழா்களுக்காக இந்திய அரசு தலையிட்டு அவா்களுக்கென சுதந்திர வாக்கெடுப்பை நடத்த வழிவகை செய்ய வேண்டும்.

முதலில் இந்தியா இப்போதுள்ள கண்டத்திலிருந்து தன்னை காத்துக்கொள்ளட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப சீனா இல்லை என்டு முடிவு எடுத்தாச்சோ.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

அப்ப சீனா இல்லை என்டு முடிவு எடுத்தாச்சோ.

கெதியா சொல்லுங்க இருக்கவா போகவா🤔🤔 நாட்டில 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.