Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இது, சிங்கள பெளத்த நாடு...  இங்கு, விகாரை  தூபிகளைப் பராமரிக்க, எவருடைய அனுமதியையும் பெற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது. – சரத் வீரசேகர

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குருந்தூர் மலையில் விகாரை இருந்தமைக்கு சான்றுகள் உள்ளன: பௌத்தர்களின் இரக்கத்தை அலட்சியமாக கருத வேண்டாம் – சரத் எச்சரிக்கை

இது, சிங்கள பெளத்த நாடு...  இங்கு, விகாரை  தூபிகளைப் பராமரிக்க, எவருடைய அனுமதியையும் பெற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது. – சரத் வீரசேகர

இது சிங்கள பெளத்த நாடு என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இங்கு பழைய தூபிகளைப் பராமரிக்க எவருடைய அனுமதியையும் பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது என  முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ஓகஸ்ட் 31 ஆம் திகதியன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற ஒருவர் முல்லைத்தீவு குருந்தூர் மலை விகாரையின் விகாராதிபதி சட்டவிரோத நிர்மாணத்தை மேற்கொள்கின்றார் என்று தெரிவித்து பொய்யான தகவலை நாடாளுமன்றத்துக்கு அறிவித்து, நாடாளுமன்றத்தையும் மக்களையும் தவறாக வழிநடத்த முயற்சித்துள்ளார்.

தொல்பொருள் அகழ்வுப் பணிகளை நிறுத்துவதற்கான தீய எண்ணத்துடனேயே அவர் அவ்வாறு கூறியுள்ளார்.

முல்லைத்தீவு நீதிவான் அந்த நிர்மாணத்தை நிறுத்துவதற்கு உத்தரவு வழங்கியிருந்தார். அதன் பின்னர் பொலிஸார் நகர்த்தல் பத்திரமொன்று மூலம் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்டத்தரணிகளுடன் அந்த இடத்துக்குச் சென்று அவதானித்து அந்த வழக்கை நீக்கிக் கொண்டுள்ளனர்.

இதன்படி தொல்லியல் திணைக்களத்துக்கு அதனைப் பராமரிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படியே நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

குருந்தூர் அசோக விகாரை என்பது 2 ஆயிரம் வருடங்கள் வரையில் பழமையான பௌத்த விகாரை தொகுதியாகும். தீபவம்சம் மற்றும் மகாவம்சத்துக்கு அமைய குருந்தூர் மலை உண்மைக் கதையை எழுதிய வரலாற்று இடமாகும்.

அங்கு அகழ்வுகளின்போது புத்தர் சிலைகள் உள்ளிட்டவை மீட்கப்பட்டுள்ளன. ஆனால், அங்கு எந்த இடத்திலும் இந்து ஆலயம் இருந்தமைக்கான சாட்சியம் இல்லை. இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்று நடந்த சம்பவத்துக்கு வெட்கப்பட வேண்டும்.

இங்கு புனித சின்னங்களை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு ஜூன் 12 ஆம் திகதி நடைபெற்றது. அதில் பௌத்த பீடங்களின் நாயக்க தேரர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த சிலர் குண்டர் குழுக்களுடன் சென்று அதைக் குழப்பினர். மலர் ஒன்றை வைத்துக்கூட பூஜை செய்ய முடியாத வகையில் பிக்குகள் திரும்பியிருந்தனர்.

இந்த பௌத்த நாட்டில் பெளத்த சாசனத்தை அவமதிக்கும் வேலையைச் செய்தும், பெளத்தர்கள் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருப்பதை மௌனித்திருப்பதாகக் கருத வேண்டாம் என்று அன்று நான் நாடாளுமன்றத்தில் கூறினேன்.

அன்று விடுதலைப்புலிகள் மக்களையும், அரந்தலாவ பிக்குகள் உள்ளிட்டவர்களையும் கொலை செய்யும் போதும் கொழும்பில் இந்து ஆலயங்களில் திருவிழாக்கள் நடந்தன. பௌத்தர்கள் எந்தத் தடைகளையும் ஏற்படுத்தவில்லை. அதனால் நீங்கள் செய்யும் வேலையால் அனைத்து தமிழ் மக்களுக்கும் அவமானத்தையே கொண்டுவந்துள்ளது. இது பௌத்த நாடாகும். சிங்கள பெளத்த நாடு என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

மேற்குலக நாடொன்றின் தூதுவர் ஒருவர், ஏன் சிங்கள பௌத்த நாடு என்று கூறுகின்றீர்கள் என்று, ஒருவரிடம் கேட்டுள்ளார். நீங்கள் தேவேந்திர முனையில் இருந்து காங்கேசன்துறைக்கு உலங்குவானூர்தியில் போகும்போது தெரியும் விகாரைகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்டுள்ளமையாலேயே அவ்வாறு கூறுகின்றோம் என்று தூதுவருக்கு அவர் விளக்கமளித்துள்ளார்.

இங்கு பழைய தூபிகளைப் பராமரிக்க எவருடைய அனுமதியைப் பெற்றுக்கொள்ளும் அவசியமில்லை. அது தொல்பொருள் திணைக்களத்தின் பணியாகும். இந்து ஆலயங்கள், முஸ்லிம் பள்ளிகள் இந்த நாட்டில் அமைக்கப்படுகின்றன. அதற்கு பௌத்தர்கள் ஒருபோதும் எதிர்ப்பு வெளியிடுவதில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அந்த நாடாளுமன்ற உறுப்பினர் வடக்கில் பௌத்த விகாரைகளை அமைக்க வேண்டாம் என்று கோஷங்களை எழுப்பிவிட்டு கொழும்புக்கு வந்து மீண்டும் வடக்குக்குப் போவதானது இது பௌத்த நாடு என்பதனாலேயே என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

வேறு நாட்டில் பெரும்பான்மையான மதமொன்றுக்கு வேறு மதத்தைச் சேர்ந்த ஒருவர் இடையூறு ஏற்படுத்தினால் அதற்கு மறுநாள் அவர் காணாமல்போயிருப்பார். குருந்தூர் விகாரை பராமரிப்புக்காக இடைவிடாது செய்யும் இடையூறுகளை நிறுத்த வேண்டும் என்று நாங்கள் மிகவும் விநயமாக அவர்களிடம் கேட்கின்றோம்.

இந்தப் பராமரிப்புப் பணிகளை தொல்பொருள் திணைக்களம் நிறுத்தாது முன்னெடுத்துச் செல்லும். அது நிறுத்தப்படாது.

இதேவேளை, இந்த நடவடிக்கைகளால் இனச் சுத்திகரிப்பு செயற்பாடு நடக்கும் என்று அந்த நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார். யாழ்ப்பாணத்தில் 25 ஆயிரம் வரையிலான சிங்களக் குடும்பங்கள் இருந்தன.

இப்போது எத்தனை பேர் இருக்கின்றனர். அங்கு இப்போது எவ்வளவு முஸ்லிம் குடும்பங்கள் இருக்கின்றன? உண்மையில் இனச் சுத்திகரிப்பு நடந்திருந்தால் சிங்களம் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராகவே நடந்திருக்கும்.

இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குச் சரியான பாதைகளைக் காட்டுங்கள், இல்லாவிட்டால் இவர்களை விரட்டியடிங்கள் என்று நான் தமிழ் மக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2022/1298232

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இவனெல்லாம் எங்க திருந்தி எங்க நிமிர்வது வாய்ப்பே இல்ல 

  • கருத்துக்கள உறவுகள்+

அநுராதபுரத்தில் எத்தனை ஆயிரம் தமிழ்க் குடும்பங்கள் இருந்தன?....

அவர்களை அவர்களின் சொந்த நிலத்திலிருந்து துரத்தியடித்தது ஆராம்?

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரை பெரும்பான்மையாக கொண்டிருந்த கிழக்கில் எப்படி 1/3 பங்கு சிங்களவர்கள் வந்தார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

ரணிலை முன்ன விட்டு, பின்னால இருந்து இவயள் டான்ஸ் போடுகினம்.....

ஏதோ டாலர் வந்து குவிஞ்சு விட்டுது..... நாம பழைய ஆட்டம் போடலாம் என்ற நிணைப்பு

மனிசி ஒருத்தி, தூசணத்தில கொடுக்க, காரில, பயந்து நடுங்கிக் கொண்டிருந்த வீர சூரயா.....

ஜஎம்எப் நிபந்தனை என்ன என்று புரியாத, முட்டாள் ஜன்மம்.

இவர்கள் கட்சி, செயலாளர், அடித்து விடுறார். கோத்தாவை தேர்ந்தெடுத்தது அறுபத்து ஒன்பது இலட்சம்.

ஆர்ப்பாட்டம் செய்து எதிர்த்தது வெறும் ஒரு இலட்சம். ஆகவே செல்லாதாம்.....

வருது வாயில.... 🤬

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழ் சிறி said:

மேற்குலக நாடொன்றின் தூதுவர் ஒருவர், ஏன் சிங்கள பௌத்த நாடு என்று கூறுகின்றீர்கள் என்று, ஒருவரிடம் கேட்டுள்ளார். நீங்கள் தேவேந்திர முனையில் இருந்து காங்கேசன்துறைக்கு உலங்குவானூர்தியில் போகும்போது தெரியும் விகாரைகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்டுள்ளமையாலேயே அவ்வாறு கூறுகின்றோம் என்று தூதுவருக்கு அவர் விளக்கமளித்துள்ளார்.

 

15 hours ago, தமிழ் சிறி said:

வேறு நாட்டில் பெரும்பான்மையான மதமொன்றுக்கு வேறு மதத்தைச் சேர்ந்த ஒருவர் இடையூறு ஏற்படுத்தினால் அதற்கு மறுநாள் அவர் காணாமல்போயிருப்பார்.

 

15 hours ago, தமிழ் சிறி said:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அந்த நாடாளுமன்ற உறுப்பினர் வடக்கில் பௌத்த விகாரைகளை அமைக்க வேண்டாம் என்று கோஷங்களை எழுப்பிவிட்டு கொழும்புக்கு வந்து மீண்டும் வடக்குக்குப் போவதானது இது பௌத்த நாடு என்பதனாலேயே என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இவனுடைய வார்த்தைகளே இவனின் முட்டாள்தனத்துக்கு சான்று! ஊமையர் சபையில் உளறுவாயன் மகா பிரசங்கி! இதுக்கு கல்லெறியக்கூடாது, நல்லாய் தொண்டைத்தண்ணி வத்துமட்டும் குரைக்க விட்டு தனது முட்டாள்தனத்தை கொட்டுமட்டும் வேடிக்கை பாக்க வேண்டும். தன்வயாலேயே கெடும்.

  • கருத்துக்கள உறவுகள்

அங்காலைநிலக்கரி இல்லையாம் இந்தாளை ஒருக்கால் போய் வாங்கி வரச்சொல்லுங்கோ

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, வாதவூரான் said:

அங்காலைநிலக்கரி இல்லையாம் இந்தாளை ஒருக்கால் போய் வாங்கி வரச்சொல்லுங்கோ

 

3 கப்பல்  காசுக்கு  காத்து  நிற்குதாம்

அதைக்கவனிக்க முடியலை

வந்திட்டார்....?

  • கருத்துக்கள உறவுகள்
On 8/9/2022 at 20:15, தமிழ் சிறி said:

மேற்குலக நாடொன்றின் தூதுவர் ஒருவர், ஏன் சிங்கள பௌத்த நாடு என்று கூறுகின்றீர்கள் என்று, ஒருவரிடம் கேட்டுள்ளார். நீங்கள் தேவேந்திர முனையில் இருந்து காங்கேசன்துறைக்கு உலங்குவானூர்தியில் போகும்போது தெரியும் விகாரைகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்டுள்ளமையாலேயே அவ்வாறு கூறுகின்றோம் என்று தூதுவருக்கு அவர் விளக்கமளித்துள்ளார்.

விடுதலைப் போராட்டம் முறியடிக்கப்பட்ட பின், பான்கி மூன் உலங்கு வானூர்தியில் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட பின் கருத்து தெரிவிக்கும்போது கூறியது, நிலத்திலிருந்து பல அடி உயரத்திற்கு நெருப்பு எரிந்து பரவியிருக்கிறது என்றார். இதுவும் பவுத்த நாட்டின் அடையாளம் என்பதை அவர் தெரிந்து கொண்டாலும் கையூட்டு அவரை நீதியை நடைமுறைப்படுத்த விடவில்லை. அவர் இப்போ என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று அறிய ஆவலாயுள்ளேன்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.