Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காலநிலை மாற்றத்தால் இலங்கை மிகவும் பாதிப்படைகிறது – எரிக் சொல்ஹெய்ம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காலநிலை மாற்றத்தால் இலங்கை மிகவும் பாதிப்படைகிறது – எரிக் சொல்ஹெய்ம்

காலநிலை மாற்றத்தால் இலங்கை மிகவும் பாதிப்படைகிறது – எரிக் சொல்ஹெய்ம்

காலநிலை மாற்றத்தால் இலங்கை மிகவும் பாதிப்படைவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வந்துள்ள சொல்ஹெய்மிடம் ஆங்கில ஊடகமொன்று மின்னஞ்சலில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டில் மண்சரிவு மற்றும் தீவிர வானிலை அச்சுறுத்தல்கள் அதிகரிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் காலநிலை மாற்றத்தை கையாள்வது பசுமையான வேலைகளை உருவாக்குவதற்கும் அனைத்து இலங்கையர்களையும் ஒரு ஒழுக்கமான நடுத்தர வர்க்க வாழ்க்கைக்கு கொண்டு வருவதற்கும் ‘ஒரு மகத்தான வாய்ப்பு’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியிலிருந்து ஒரு பசுமையான பாதையை கண்டுபிடிப்பதற்கு இலங்கைக்கு எவ்வாறு உதவுவது என்பது குறித்து ஜனாதிபதி மற்றும் அவரது சிறந்த குழுவினருடன் நெருக்கமாக பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மிகவும் வளமான அறிவுசார் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது என்றும் மற்ற இந்தியப் பெருங்கடல் நாடுகள் மற்றும் உலகின் பிற நாடுகளுடன் நெருக்கமாக பணியாற்றுகிறது என்றும் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2022/1304683

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, தமிழ் சிறி said:

பொருளாதார நெருக்கடியிலிருந்து ஒரு பசுமையான பாதையை கண்டுபிடிப்பதற்கு இலங்கைக்கு எவ்வாறு உதவுவது என்பது குறித்து ஜனாதிபதி மற்றும் அவரது சிறந்த குழுவினருடன் நெருக்கமாக பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர் பிரச்சனையை வைத்து குளிர் காய்ந்து ஒரு வித குற்ற உணர்வும் இல்லாமல் அடுத்த வேட்டைக்கு கிளம்பிவிட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

காலநிலை மாற்றத்தால் இலங்கை மிகவும் பாதிப்படைகிறது – எரிக் சொல்ஹெய்ம்

வந்தால் வந்தவேலையை மட்டும் பார்த்திட்டு போங்க... ஏன் கூட்டமைபையும்..மற்றவையும் சந்திச்சு நேரத்தை வீணாக்குவான்..மசாலாத்தோசை விருப்பமென்றால் கிறீண்லன்ட் கோட்டலிலை போய் சாப்பிடவும்...போண்டா ,சுசீயம் விருப்பமெண்டால் மைசூரு கபேயில் சாப்பிடவும்...அதைவிட  விசேசமாய் ஏதும் வேணுமென்றாள் றனிலிடம் கேட்டால் தருவார்...

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, alvayan said:

காலநிலை மாற்றத்தால் இலங்கை மிகவும் பாதிப்படைகிறது – எரிக் சொல்ஹெய்ம்

வந்தால் வந்தவேலையை மட்டும் பார்த்திட்டு போங்க... ஏன் கூட்டமைபையும்..மற்றவையும் சந்திச்சு நேரத்தை வீணாக்குவான்..மசாலாத்தோசை விருப்பமென்றால் கிறீண்லன்ட் கோட்டலிலை போய் சாப்பிடவும்...போண்டா ,சுசீயம் விருப்பமெண்டால் மைசூரு கபேயில் சாப்பிடவும்...அதைவிட  விசேசமாய் ஏதும் வேணுமென்றாள் றனிலிடம் கேட்டால் தருவார்...

இப்படி வாறவையை மகிழ்வித்து அனுப்புவது தானே இலங்கை அரசின் வேலை.

ரொமேஸ் பண்டாரியில் இருந்து பார்க்கிறோமே.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, satan said:

தமிழர் பிரச்சனையை வைத்து குளிர் காய்ந்து ஒரு வித குற்ற உணர்வும் இல்லாமல் அடுத்த வேட்டைக்கு கிளம்பிவிட்டார்.

நீங்க ஒரு பக்கமாக யோசித்தாலும் நோர்வே நாட்டை  நரி தன் வலைக்குள் இழுத்துள்ளார் 👍

  • கருத்துக்கள உறவுகள்

ரணிலை போன்று பொருளாதார யதார்த்தத்தை நன்கு புரிந்துகொண்ட ஒரு அரசியல்வாதியை பார்க்க முடியாது - சொல்ஹெய்ம்

By Rajeeban

14 Oct, 2022 | 12:16 PM
image

இலங்கையை நெருக்கடியிலிருந்து மீட்பதற்கான தலைமைத்துவத்தை ரணில் விக்கிரமசிங்க வழங்குவார்.

இலங்கை ஜனாதிபதியை போல  பொருளாதார யதார்த்தத்தை நன்கு புரிந்துகொண்ட ஒரு அரசியல்வாதியை பார்க்க முடியாது என நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமானதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் ஐஏஎன்எஸ் இணையத்தளத்திற்கு வழங்கியுள்ள பேட்டியில் இதனை தெரிவித்துள்ள அவர் இலங்கையை நெருக்கடியிலிருந்து மீட்பதற்கான தலைமைத்துவத்தை ரணில் விக்கிரமசிங்க வழங்குவார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சகோதார மக்களிற்கு ஆதரவளிக்கும் வெளிப்பாடாக இந்தியா இலங்கைக்கு மிக முக்கியமான உதவிகளை வழங்கியுள்ளது என  எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பொருளாதார நிலைமை மிக மோசமாக உள்ளது என குறிப்பிட்டுள்ள நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் ஆனால் இலங்கை மீண்டும் இயங்கத்தொடங்கியுள்ளது பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் இந்திய நிறுவனங்கள் மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி துறைகள் எலெக்ரிக் போக்குவரத்து போன்றவற்றில் முதலீடு செய்வதில் இந்திய நிறுவனங்களிற்கு முக்கிய பங்குள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதானி ஏற்கனவே முக்கியமான காற்றாலை மின் உற்பத்தி குறித்த முதலீடுகளை அறிவித்துவிட்டார் எனவும் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் 12 ம் திகதி இலங்கை ஜனாதிபதியுடனான தனது சந்திப்பை  சிறந்தது என தெரிவித்துள்ள எரிக்சொல்ஹெய்ம் பசுமை பொருளாதார மீட்சி மற்றும் காலநிலை தலைமைத்துவம் தொடர்பில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு  சிறந்த தொலைநோக்கு பார்வை உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவை விட பொருளாதார யதார்தத்தை நன்கு புரிந்துகொண்ட ஒரு அரசியல்வாதியை நினைத்து பார்ப்பது கடினம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையை நெருக்கடியிலிருந்து மீட்பதற்கான தலைமைத்துவத்தை ரணில் விக்கிரமசிங்க வழங்குவார் ஆனால் அவரது பணி மிகவும் கடினமானது அதற்காக அவரை எவரும் பாராட்டப்போவதில்லை  ஏனென்றால் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான கடுமையான நடவடிக்கைகளே ஒரேவழி எனவும் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் அதிக வரிகள் தேவையற்ற பொதுச்செலவீன குறைப்பு போன்றவை காணப்படலாம், குறுகிய காலத்தில் வலிகள் காணப்படும்,ஆனால் நீண்ட கால அடிப்படையில் இலங்கைக்கான வாய்ப்புகள் மிகவும் சாதகமானவையாக உள்ளன என இலங்கையின் சமாதான தூதுவராக பணியாற்றிய எரிக்சொல்ஹெய்ம் ஐஎஎனஎஸ ற்க்கு தெரிவித்துள்ளார்.

இலங்கை எதிர்கொண்டுள்ள நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு பசுமை அபிவிருத்தி மிகவும் முக்கியமான விடயம் என குறிப்பிட்டுள்ள எரிக்சொல்ஹெய்ம் மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி எலெக்ரிக் மொபிலிட்டி மரநடுகை பசுமை விவசாயம் சுற்றுசூழலிற்கு உகந்த சுற்றுலா ஆகியவை வேலைவாய்ப்புகள் மற்றும் பொருளாதார செழிப்பிற்கான பாரிய வாய்ப்புகளை வழங்குகின்றன எனவும் குறிப்பிட்டுள்ள அவர் இவை வெற்றிபெறும் கொள்கைகள் இவை சுற்றுசூழலிற்கும் பொருளாதாரத்திற்கும் ஒரே நேரத்தில் சிறந்தவை எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதியின் காலநிலை ஆலோசகர் என்ற அடிப்படையில் நான் அவர் தனது பணியாளர்கள் உள்நாட்டு வெளிநாட்டு வர்த்தகத்தை கவருவதற்கான சிறந்த கொள்கைகளை உருவாக்குவதற்கு உதவுவேன் எனவும்  எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

இலங்கை சீனா இந்தியா  ஐரோப்பா மற்றும் ஏனைய உலகநாடுகளி;ல் இருந்து சிறந்த சுற்றுச்சுழல் செயற்பாடுகளை பெற்றுக்கொள்வதற்கான தொடர்புகளை ஏற்படுத்திக்கொடுப்பேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

காலநிலை மாற்றம் இலங்கை இருப்பிற்கே அச்சுறுத்தலானதா என்ற கேள்விக்கு எரிக்சொல்ஹெய்ம் ஆம் என பதிலளித்துள்ளார்.

இலங்கையின் வறண்ட பகுதி தொடர்ந்தும் உலர்வலயமாகவும் ஈரமான பகுதி ஈரமாகவும் காணப்படும் நாங்கள் மிக மோசமான காலநிலையையும் மண்சரிவையும் சந்திப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

https://www.virakesari.lk/article/137625

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கிருபன் said:

ரணிலை போன்று பொருளாதார யதார்த்தத்தை நன்கு புரிந்துகொண்ட ஒரு அரசியல்வாதியை பார்க்க முடியாது - சொல்ஹெய்ம்

By Rajeeban

14 Oct, 2022 | 12:16 PM
image

இலங்கையை நெருக்கடியிலிருந்து மீட்பதற்கான தலைமைத்துவத்தை ரணில் விக்கிரமசிங்க வழங்குவார்.

இலங்கை ஜனாதிபதியை போல  பொருளாதார யதார்த்தத்தை நன்கு புரிந்துகொண்ட ஒரு அரசியல்வாதியை பார்க்க முடியாது என நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமானதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் ஐஏஎன்எஸ் இணையத்தளத்திற்கு வழங்கியுள்ள பேட்டியில் இதனை தெரிவித்துள்ள அவர் இலங்கையை நெருக்கடியிலிருந்து மீட்பதற்கான தலைமைத்துவத்தை ரணில் விக்கிரமசிங்க வழங்குவார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சகோதார மக்களிற்கு ஆதரவளிக்கும் வெளிப்பாடாக இந்தியா இலங்கைக்கு மிக முக்கியமான உதவிகளை வழங்கியுள்ளது என  எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பொருளாதார நிலைமை மிக மோசமாக உள்ளது என குறிப்பிட்டுள்ள நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் ஆனால் இலங்கை மீண்டும் இயங்கத்தொடங்கியுள்ளது பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் இந்திய நிறுவனங்கள் மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி துறைகள் எலெக்ரிக் போக்குவரத்து போன்றவற்றில் முதலீடு செய்வதில் இந்திய நிறுவனங்களிற்கு முக்கிய பங்குள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதானி ஏற்கனவே முக்கியமான காற்றாலை மின் உற்பத்தி குறித்த முதலீடுகளை அறிவித்துவிட்டார் எனவும் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் 12 ம் திகதி இலங்கை ஜனாதிபதியுடனான தனது சந்திப்பை  சிறந்தது என தெரிவித்துள்ள எரிக்சொல்ஹெய்ம் பசுமை பொருளாதார மீட்சி மற்றும் காலநிலை தலைமைத்துவம் தொடர்பில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு  சிறந்த தொலைநோக்கு பார்வை உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவை விட பொருளாதார யதார்தத்தை நன்கு புரிந்துகொண்ட ஒரு அரசியல்வாதியை நினைத்து பார்ப்பது கடினம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையை நெருக்கடியிலிருந்து மீட்பதற்கான தலைமைத்துவத்தை ரணில் விக்கிரமசிங்க வழங்குவார் ஆனால் அவரது பணி மிகவும் கடினமானது அதற்காக அவரை எவரும் பாராட்டப்போவதில்லை  ஏனென்றால் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான கடுமையான நடவடிக்கைகளே ஒரேவழி எனவும் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் அதிக வரிகள் தேவையற்ற பொதுச்செலவீன குறைப்பு போன்றவை காணப்படலாம், குறுகிய காலத்தில் வலிகள் காணப்படும்,ஆனால் நீண்ட கால அடிப்படையில் இலங்கைக்கான வாய்ப்புகள் மிகவும் சாதகமானவையாக உள்ளன என இலங்கையின் சமாதான தூதுவராக பணியாற்றிய எரிக்சொல்ஹெய்ம் ஐஎஎனஎஸ ற்க்கு தெரிவித்துள்ளார்.

இலங்கை எதிர்கொண்டுள்ள நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு பசுமை அபிவிருத்தி மிகவும் முக்கியமான விடயம் என குறிப்பிட்டுள்ள எரிக்சொல்ஹெய்ம் மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி எலெக்ரிக் மொபிலிட்டி மரநடுகை பசுமை விவசாயம் சுற்றுசூழலிற்கு உகந்த சுற்றுலா ஆகியவை வேலைவாய்ப்புகள் மற்றும் பொருளாதார செழிப்பிற்கான பாரிய வாய்ப்புகளை வழங்குகின்றன எனவும் குறிப்பிட்டுள்ள அவர் இவை வெற்றிபெறும் கொள்கைகள் இவை சுற்றுசூழலிற்கும் பொருளாதாரத்திற்கும் ஒரே நேரத்தில் சிறந்தவை எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதியின் காலநிலை ஆலோசகர் என்ற அடிப்படையில் நான் அவர் தனது பணியாளர்கள் உள்நாட்டு வெளிநாட்டு வர்த்தகத்தை கவருவதற்கான சிறந்த கொள்கைகளை உருவாக்குவதற்கு உதவுவேன் எனவும்  எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

இலங்கை சீனா இந்தியா  ஐரோப்பா மற்றும் ஏனைய உலகநாடுகளி;ல் இருந்து சிறந்த சுற்றுச்சுழல் செயற்பாடுகளை பெற்றுக்கொள்வதற்கான தொடர்புகளை ஏற்படுத்திக்கொடுப்பேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

காலநிலை மாற்றம் இலங்கை இருப்பிற்கே அச்சுறுத்தலானதா என்ற கேள்விக்கு எரிக்சொல்ஹெய்ம் ஆம் என பதிலளித்துள்ளார்.

இலங்கையின் வறண்ட பகுதி தொடர்ந்தும் உலர்வலயமாகவும் ஈரமான பகுதி ஈரமாகவும் காணப்படும் நாங்கள் மிக மோசமான காலநிலையையும் மண்சரிவையும் சந்திப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

https://www.virakesari.lk/article/137625

 

இது ரணிலுக்கு தெரியுமா? 😁
எரிக்… நரிக்கு, காக்கா பிடிக்கிறான். 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உலகத்திலேயே இலங்கையின் தந்திரம் சொல்லி முடியாது......சிலமாதங்களளுக்கு முன் ஜனாதிபதியையே விரட்டியடிச்சு விளையாடினார்கள்......அவர்கள் ரணிலை பொம்மையாக இருத்திவைத்துவிட்டு பழையபடி தங்கள் நினைத்ததை செய்து கொண்டு வருகிறார்கள்.....வல்லரசுகள் எல்லாம் அவர்களின் கைகளுக்குள் வளைந்து நிக்கின்றன ......!   

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, suvy said:

இந்த உலகத்திலேயே இலங்கையின் தந்திரம் சொல்லி முடியாது......சிலமாதங்களளுக்கு முன் ஜனாதிபதியையே விரட்டியடிச்சு விளையாடினார்கள்......அவர்கள் ரணிலை பொம்மையாக இருத்திவைத்துவிட்டு பழையபடி தங்கள் நினைத்ததை செய்து கொண்டு வருகிறார்கள்.....வல்லரசுகள் எல்லாம் அவர்களின் கைகளுக்குள் வளைந்து நிக்கின்றன ......!   

வல்லரசுகள் எல்லாம் அவர்களின் கைகளுக்குள் வளைந்து நிக்கின்றனவா அல்லது

வல்லரசுகளின் பிடிக்குள் இவர்கள்  சிக்கி  விட்டார்களா என்பது கேள்வி

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விசுகு said:

வல்லரசுகள் எல்லாம் அவர்களின் கைகளுக்குள் வளைந்து நிக்கின்றனவா அல்லது

வல்லரசுகளின் பிடிக்குள் இவர்கள்  சிக்கி  விட்டார்களா என்பது கேள்வி

இல்லை அவர்கள் சிக்கவில்லை......பிரச்சினைகள் வந்தபோது எல்லாம் காலத்தை கடத்திக் கொண்டு போக அவை நீர்த்துப் போய் விடும் .....அதைத்தான் செய்கிறார்கள்......தங்களுக்குள் பரமவைரிகளான நாடுகள் அத்தனையும் இவர்களை பொறுத்தவரை முண்டு கொடுத்துக் கொண்டு நிற்பதைத்தானே பார்க்கிறோம்......அதுதான் சாணக்கியம்....எம்மிடம் அது துளியும் கிடையாது......! 

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, suvy said:

இல்லை அவர்கள் சிக்கவில்லை......பிரச்சினைகள் வந்தபோது எல்லாம் காலத்தை கடத்திக் கொண்டு போக அவை நீர்த்துப் போய் விடும் .....அதைத்தான் செய்கிறார்கள்......தங்களுக்குள் பரமவைரிகளான நாடுகள் அத்தனையும் இவர்களை பொறுத்தவரை முண்டு கொடுத்துக் கொண்டு நிற்பதைத்தானே பார்க்கிறோம்......அதுதான் சாணக்கியம்....எம்மிடம் அது துளியும் கிடையாது......! 

 

நியாயமும்  தர்மமுமே வெல்லக்கூடிய விடயங்களே  தவிர  

தந்திரங்களும் சுத்துமாத்துக்களும் அல்ல அண்ணா

காலம்  எடுக்கலாம்

ஆனால்  சிறிலங்கா  இன்றே அதற்கான பரிகாரத்தை  செலுத்தத்தொடங்கியுள்ளது கண்கூடு?

  • கருத்துக்கள உறவுகள்
On 13/10/2022 at 20:28, தமிழ் சிறி said:

நாட்டில் மண்சரிவு மற்றும் தீவிர வானிலை அச்சுறுத்தல்கள் அதிகரிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதை கண்டுபிடித்து சொல்வதற்கா இவர் நோர்வேயிலிருந்து வந்தார்? நம்ம வானிலை ஆராய்ச்சியாளர்களுக்கு இது தெரியாமல் போய்விட்டதே!

 

16 hours ago, கிருபன் said:

தேவையற்ற பொதுச்செலவீன குறைப்பு போன்றவை காணப்படலாம்,

சொல்பவருக்கும் கேட்ப்பவருக்கும் விளங்கினால் சரி.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.