Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரயில் முன் தள்ளிவிட்டு மாணவி படுகொலை; அதிர்ச்சியில் தந்தையும் மரணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரயில் முன் தள்ளிவிட்டு மாணவி படுகொலை; அதிர்ச்சியில் தந்தையும் மரணம்

21 நிமிடங்களுக்கு முன்னர்
 

சத்யப்ரியா

பட மூலாதாரம்,SATHYAPRIYA FAMILY.

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவி ஒருவர் ரயில் முன்பு தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த அவரது தந்தையும் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் கொலைக் குற்றம் சாட்டப்பட்ட மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை ஆலந்தூரில் வாழ்ந்துவரும் மாணிக்கம் - ராமலட்சுமி தம்பதியின் மகள் சத்யப்ரியா. இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பிபிஏ மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். ராமலட்சுமி, தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றி வருகிறார். இவர்களது வீட்டிற்கு எதிரே, ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளர் தயாளன் என்பவர் வாழ்ந்து வருகிறார். இவரது மகன் சதீஷ் டிப்ளமோ படிப்பை முடித்துள்ளார்.

சத்யப்ரியாவும் சதீஷும் காதலித்து வந்த நிலையில், சத்யப்ரியாவின் வீட்டில் இதற்கு எதிர்ப்பு ஏற்பட்டது. சதீஷ் எந்த வேலையும் செய்யாமல் திரிவதால், சதீஷை திருமணம் செய்துகொள்ளக்கூடாது என பெற்றோர் கூறினர். இதையடுத்து சதீஷைவிட்டு சத்யப்ரியா விலகத் துவங்கினார். இருந்தாலும் காதலை தொடரும்படி சதீஷ் வற்புறுத்தி வந்தார் என்று குற்றம் சாட்டப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று கல்லூரி செல்வதற்காக பிற்பகல் 1.30 மணியளவில் பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு வந்தார் சத்யப்ரியா. அப்போது அங்கு வந்த சதீஷ் மறுபடியும் சத்யப்ரியாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் ஏற்கெனவே காதலித்து வந்ததைச் சொல்லி சண்டை போட்டதாகவும் புகார் கூறப்படுகிறது.

 
 

சிவப்புக் கோடு

 

சிவப்புக் கோடு

இருவருக்கும் இடையில் வாக்குவாதம் நடந்துகொண்டிருந்தபோது தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கிச் செல்லும் மின்சார ரயில் நடைமேடைக்குள் நுழைந்து கொண்டிருந்தது. ஆத்திரத்தில் இருந்த சதீஷ் ரயில் முன்பாக சத்யப்ரியாவைத் தள்ளிவிட்டார் என்று குற்றம்சாட்டப்படுகிறது.

ரயில் சத்யப்ரியா மீது ஏறி இறங்கியது. இதற்குப் பிறகு சதீஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

 

சத்யப்ரியா

பட மூலாதாரம்,SATHYAPRIYA FAMILY

 

படக்குறிப்பு,

சத்யப்ரியா

சத்யப்ரியாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், தப்பி ஓடிய சதீஷை பிடிக்க, ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டன. சத்யப்ரியாவின் தோழிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

சதீஷ் பிடிபட்டது எப்படி?

சதீஷின் செல்போன் சிக்னலை பின்தொடர்ந்தபோது அவர் துரைப்பாக்கம் பகுதியில் சுற்றித் திரிவது தெரிந்தது. இதையடுத்து நேற்று இரவு அவர் கைது செய்யப்பட்டார். தற்போது அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், மாணவி சத்யாவின் தந்தைக்கு இரவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

தொடரும் ரயில் நிலைய கொலைகள்

 

சந்தேக நபரை அடையாளம் காட்டிய சிசிடிவி காட்சி

பட மூலாதாரம்,POLICE

 

படக்குறிப்பு,

சந்தேக நபரை அடையாளம் காட்டிய சிசிடிவி காட்சி

காதலிக்க மறுப்பதால், சென்னை மின்சார ரயில் நிலையங்களில் பெண்கள் கொல்லப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த 2016ஆம் ஆண்டும் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ராம்குமார் என்ற வாலிபர், சிறையிலேயே உயிரிழந்தார். அவர் மின்சார வயரை கடித்து தற்கொலை செய்துகொண்டதாக போலீஸ் தெரிவித்தது. எனினும், இந்த மரணத்தில் மர்மங்கள் இருப்பதாக புகார்கள் எழுந்தன.

காணொளிக் குறிப்பு,

சுவாதியை கொன்றது கூலிப்படையா? ராம்குமார் மரணத்தில் விலகாத மர்மங்கள்

2021ஆம் ஆண்டில் தாம்பரம் ரயில் நிலையத்தில் சுவேதா என்ற நர்சிங் கல்லூரி மாணவி, காதல் விவகாரம் தொடர்பாக கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். இதில் குற்றம்சாட்டப்பட்ட ராமச்சந்திரன் என்பவரும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

https://www.bbc.com/tamil/global-63253144

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் காதலிக்கவில்லை என்றால்… விட்டு விலகுவதுதானே முறை.
காதலிக்கச் சொல்லி வற்புறுத்துவது எந்த வகையில் நியாயம்.

இழவு பிடித்த தமிழ் சினிமாவில்… காதலிக்கச் சொல்லி பின்னால் அலைந்து, வற்புறுத்தும் காட்சிகள் நிறையவே உண்டு.
மக்களுக்கு நல்ல பண்பான விடயங்களை சொல்லிக் கொடுக்காத சினிமாக்கள் தான் இதற்கு காரணம்.

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப் பெண் ஏதும் ஏறுமாறாக கதைத்து இருக்கலாம். சம்பாதிக்க வக்கிலையா என்று கேட்டு இருக்கலாம்.. இவருக்கு கோபம் சுருக் என்று தலையில் ஏறி இருக்கலாம்..சதீஸ் கொஞ்சம் எதிர்காலத்தை பற்றி அந்த குறுகிய நிமிஷதுக்குள் யோசித்திருப்பின் இப்படி நடந்து இருக்காது..

1 hour ago, தமிழ் சிறி said:

ஒருவர் காதலிக்கவில்லை என்றால்… விட்டு விலகுவதுதானே முறை.
காதலிக்கச் சொல்லி வற்புறுத்துவது எந்த வகையில் நியாயம்.

இழவு பிடித்த தமிழ் சினிமாவில்… காதலிக்கச் சொல்லி பின்னால் அலைந்து, வற்புறுத்தும் காட்சிகள் நிறையவே உண்டு.
மக்களுக்கு நல்ல பண்பான விடயங்களை சொல்லிக் கொடுக்காத சினிமாக்கள் தான் இதற்கு காரணம்.

தனுஷ் தான் முதல் குற்றவாழி 

Edited by பகிடி

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, பகிடி said:

தனுஷ் தான் முதல் குற்றவாழி 

உங்ககளுக்கு... முதல் குற்றவாளி தனுஷ் என்றால்,
எங்களுக்கு... எம்.ஜி.ஆர்.,  சிவாஜி கணேசன் தான் முதல் குற்றவாளி.
இங்கு சிலருக்கு... தியாகராஜ பாகவதர் முதல் குற்றவாளி.
அவர்களின் பெயரை கேட்காதீங்க, ப்ளீஸ். 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பகிடி said:

அந்தப் பெண் ஏதும் ஏறுமாறாக கதைத்து இருக்கலாம். சம்பாதிக்க வக்கிலையா என்று கேட்டு இருக்கலாம்.. இவருக்கு கோபம் சுருக் என்று தலையில் ஏறி இருக்கலாம்.

பகிடிக்குத்தானும் இப்படி எழுதக்கூடாது. ☹️

  • கருத்துக்கள உறவுகள்

திரைப்படங்களில் புகைபிடிக்கும் மதுபானம் அருந்தும் காட்சிகள் வரும்போது  புகை பிடிப்பது உடலுக்கு தீங்கு மதுபானம் உயிரைக் கொல்லும் என்ற அறிவித்தலை போட்டுவிட்டு படம் முழுவதும் கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு, ஊழல், அடிதடி, அரிவாள் வெட்டு எல்லாம் தாராளமாகக் காட்டுவார்கள். காலப்போக்கில் இவை அனைத்தும் எமது இளம் சமுதாயத்தை எப்படியெல்லாம் சீரழிக்கும் என்பதை எவரும் உணர்ந்ததாக தெரியவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நடக்காத,நடக்கக்கூடாத, நம்பமுடியாத சம்பவங்களை சினிமா மற்றும் நாடக தொடர்களில் விபரமாக காட்டுவார்கள். அவை மக்களை இலகுவாக போய் சேர்கின்றது.

ரஜனி சிகரெட்டை வாய்க்குள் மடக்கி வைத்தை போல் நானும் வைக்க வெளிக்கிட்டு.....😝

  • கருத்துக்கள உறவுகள்

அடிடா அவள, உதைடா அவளை,வெட்றா அவளை தேவையேயில்ல,  என்று பாட்டெழுதி அதற்கு இசையமைத்து  அதை கொண்டாடி கொண்டிருந்தால் இவ்வாறான காட்டுமிராண்டித் தனங்கள் இன்னும் இன்னும் வரலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

மாணவிக்கு நடந்த துயரத்தை அறிந்து நொறுங்கி போனேன்! – முதல்வர் மு.க.ஸ்டாலின் வேதனை!

1651894917-3565.jpg&w=&h=&outtype=webp
சென்னையில் கல்லூரி மாணவி சத்யா தண்டவாளத்தில் தள்ளப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார்.

சென்னையில் கல்லூரி மாணவி சத்யா என்பவரை ஒரு தலையாக காதலித்து வந்த சதீஷ் என்ற இளைஞர், சத்யா தனது காதலுக்கு ஒப்புக்கொள்ளததால் ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
மாணவி சத்யா உயிரிழந்ததை தாங்க முடியாமல் அவரது தந்தையும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் சதீஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கலும், வேதனையும் தெரிவித்துள்ளார். “சென்னையில் மாணவி சத்யாவுக்கு நிகழ்ந்த துயரத்தை அறிந்து நொறுங்கி போயுள்ளேன். இதுவல்ல நாம் காண விரும்பும் சம்பவம். தமிழ்நாட்டில் இனி எந்த பெண்ணுக்கும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க வேண்டிய கடமை ஒரு சமூகமாக நமக்கு உள்ளது.
 
இயற்கையிலேயே ஆண்கள் வலிமை உள்ளவர்களாக இருக்கலாம். ஆனால் அந்த வலிமை பெண்களை பாதுகாக்கக்கூடியதாக இருக்க வேண்டுமே தவிர அடுத்தவர்களை கட்டுப்படுத்துவதற்காக இருக்க கூடாது” என்று கூறியுள்ளார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.