Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஒரு வருடத்திற்குள் இனப் பிரச்சினைக்கான முழுமையான தீர்வு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வருடத்திற்குள் இனப் பிரச்சினைக்கான முழுமையான தீர்வு!

ஒரு வருடத்திற்குள் இனப் பிரச்சினைக்கான முழுமையான தீர்வு!

இனப் பிரச்சினைக்கான முழுமையான தீர்வு புதிய அரசியலமைப்பின் ஊடாக ஒரு வருட காலத்திற்குள்ளே செய்து முடிக்கப்படும் என்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வாக்குறுதியை தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்கும் என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்று (25) இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், புதிய அரசியலமைப்பின் ஊடாக இனப் பிரச்சினைக்கான முழுமையான தீர்வு காண்பது தொடர்பான வேலை திட்டம் உடனடியாக நடைபெற வேண்டும். அதை ஜனாதிபதி முன்னெடுக்கின்ற போது எங்களுடைய முழுமையான இணக்கப்பாடும் முழுமையான ஆதரவும் அதற்கு இருக்கும் என்பதே எங்களுடைய உத்தியோகபூர்வ நிலைப்பாடாகும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமராக இருந்த காலப்பகுதியில் எவ்வளவு சேர்ந்து செயற்பட்டோம் என்பதை அவர் அறிவார். 2016 ஆம் ஆண்டு ஜனவரியில் இருந்து பாராளுமன்றம் அரசியலமைப்பு பேரவையாக மாற்றப்பட்ட காலத்தில் இருந்து ஒரு பிரேரணை நிறைவேற்றப்பட்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து இதற்கான முன்னெடுப்புகள் வழிகாட்டல் குழு எல்லாம் அமைக்கப்பட்டது. அந்த வழிகாட்டக் குழுவிலே தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் நானும் அங்கத்தவர்களாக இருந்திருக்கின்றோம்.

புதிய அரசியலமைப்பு தொடர்பான 2 இடைக்கான அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட்டன. 2019 ஜனவரி மாதம் இரண்டாவது இடைக்கால அறிக்கையோடு நிபுணர் குழுவினால் வரையப்பட்ட ஒரு முழுமையான அரசியலமைப்பு வரைவு கூட அப்பொழுது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கமினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதை தொடர்ந்து வந்து ஜனாதிபதி தேர்தலிலே ஐக்கிய தேசிய கட்சியின் சார்பாக முன்நின்ற சஜித் பிரேமதாஸவுடைய தேர்தல் அறிக்கையிலே அந்த முயற்சியில் தொடர்ந்து செயற்பட்டு முடிவை எட்ட வேண்டும் என்று சொல்லப்பட்டது.

2016 ஆம் ஆண்டு அரசியலமைப்பு பேரவையாக உருவாக்கப்பட்டு பலவித கூட்டங்கள் கலந்துரையாடல்கள் மக்கள் சந்திப்புகள் செய்யப்பட்டு மாகாண சபைகளுடைய பிரதிநிதித்துவத்தையும் பெற்று விசேடமாக தென்பதியிலுள்ள ஏழு மாகாண சபைகளை உள்ளடக்கி வேலை செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் தொடர்ந்து முன் சொல்ல ஜனாதிபதி ஆவணம் செய்ய வேண்டும். கடந்த ஆட்சிக்காலத்திலே இந்த வேலை செய்யப்பட்டது. இதனை வெகு விரைவாக தொடர்ந்து முன்னெடுத்தால் ஒரு வருட காலத்திற்குள் இதனை முடிவுக்கு கொண்டு வரலாம். ஒரு வருடம் கூட தேவை இல்லை. அனைவருடைய இணக்கப்பாட்டோடு சகல மக்களுடைய ஆதரவோடு புதிய அரசியலமைப்பு கொண்டு வரப்பட வேண்டும்.

ஜனாதிபதியின் கருத்தை வரவேற்கின்ற நேரத்தில் இதற்கு முன்னர் பங்களித்ததை போலவே முழுமையான பங்களிப்பை கொடுப்போம் என ஜனாதிபதி அவர்களுக்கு சொல்லி வைக்க விரும்புகிறேன் என்றார்.
 

-யாழ். நிருபர் பிரதீபன்-

https://tamil.adaderana.lk/news.php?nid=167008

  • கருத்துக்கள உறவுகள்

தற்காலிக ஜனாதிபதி, ஒரு வருடத்தில் அவரது பதவிக்காலம் முடிந்துவிடும் என்று யாராவது இவருக்கு எடுத்துச் சொல்லுங்கப்பா!

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு விடயம்

ஆனால்  பழையபடி அடுத்த  தீபாவளிக்கு  என்று  ஆகிவிடாமல் இருந்தால் சரி?

  • கருத்துக்கள உறவுகள்

அதை ரணில்தான் கூற வேண்டும், சுமந்திரன் அல்ல. 

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, Kapithan said:

அதை ரணில்தான் கூற வேண்டும், சுமந்திரன் அல்ல. 

ஓஓஓஓஓஓஓ அவர் கூறினால் உடனே நம்பிடுவீங்களோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, nunavilan said:

இனப் பிரச்சினைக்கான முழுமையான தீர்வு புதிய அரசியலமைப்பின் ஊடாக ஒரு வருட காலத்திற்குள்ளே செய்து முடிக்கப்படும் என்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வாக்குறுதியை தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்கும் என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

சம்பந்தன் விட்ட ரீல் எல்லாம் அறுந்து போச்சுது.
இனி   சம்பந்தன் விட்ட குறைய சுமந்திரன் தொடர்வார்....🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

ஓஓஓஓஓஓஓ அவர் கூறினால் உடனே நம்பிடுவீங்களோ?

நம்புவதாக அர்த்தம் அல்ல. ஆனால் இதைக் கூற வேண்டியவர் அவர்தானே? 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

சம்பந்தன் விட்ட ரீல் எல்லாம் அறுந்து போச்சுது.
இனி   சம்பந்தன் விட்ட குறைய சுமந்திரன் தொடர்வார்....🤣

இனவழிப்பை அறவே அழித்து பெயின்றடிக்குக்ம் வேலையை  செவ்வனே செய்யும் சுமந்திரன்..

Edited by alvayan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, alvayan said:

இனவழிப்பை அறவே அழித்து பெயின்றடிக்குக்ம் வேலையை  செவ்வனே செய்யும் சுமந்திரன்..

ஈழத்தமிழினத்திற்கு கிடைத்த சாபத்தின் வடிவங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.