Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

 சுமந்திரனால் தமிழ் தேசியம் தேய்ந்து செல்கிறது. இனியும் சுமந்திரன் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் கட்டுப்பட மாட்டோம் – கே.வி. தவராசா குற்றச்சாட்டு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 சுமந்திரனால் தமிழ் தேசியம் தேய்ந்து செல்கிறது. இனியும் சுமந்திரன் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் கட்டுப்பட மாட்டோம் – கே.வி. தவராசா குற்றச்சாட்டு.

இனியும் சுமந்திரன் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் கட்டுப்பட மாட்டோம் என்ற சிறீதரநின் கருத்தை முற்று முழுதாக ஏற்றுக்கொள்வதாக இலங்கை தமிழரசு கட்சியின் கொழும்புகிளை தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி தவராஜா தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் கூறிய இந்த விடயத்தினை நான் கட்சிக்குள் உள்வாங்கப்பட்ட பின்னர் 2010 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை 12 ஆண்டுகளாக தொடர்ச்சியாக கூறி வருகிறேன்.

கட்சி என்று கூறும் போது கட்சிக்குள்ளே ஒரு முடிவு எடுக்கும் பொழுது அந்த முடிவு அனைவராலும் சேர்த்தெடுக்கப்பட வேண்டும். தலைவர் ஒரு முடிவு எடுத்தால் கூட கட்சியில் உள்ளவர்கள் மத்தியிலும் கேட்கப்பட வேண்டும். அது மத்திய குழுவில் உள்ள நாடாளுமன்ற குழுவாக இருந்த கூட அங்கேயும் ஒன்றிணைந்து முடிவெடுக்கப்பட வேண்டும்.

எந்தவொரு முடிவும் ஒரு குழுவான முடிவாக இருக்க வேண்டும். இதனை தொடர்ச்சியாக நான் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றேன். எந்த விடயத்தை எடுத்தாலும் தன்னிச்சையான முடிவினை எடுப்பதை எப்போது நிறுத்துகிறார்களோ அப்பொழுதுதான் கட்சி நிலைத்து நிற்கும்.

இலங்கை தமிழரசு கட்சி என்பது தனியார் கம்பனியல்ல மக்களின் கட்சி மக்களின் உரிமை பெற்றெடுப்பதற்காக இந்த வீட்டுக்குள் வந்து குந்தியிருக்கின்றோம் தவிர இது எங்களுடைய வீடு என யாரும் மார்தட்ட முடியாது.

குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து கடந்த 13 வருட காலத்தில் பலர் வெளியேறி பல கட்சிகள் உருவாக்கியுள்ளன. ஒரு தனி நபரின் பிழையான செயல்பாட்டினால் இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக உயர் நீதி அரசராக இருந்த சி.வி.விக்னேஸ்வரன் உட்பட பலர் சென்று இருக்கின்றார்கள். ஒவ்வொரு தடவையும் ஒரு தனி மனிதனின் செயற்பாட்டால், பலர் கட்சியை விட்டு வெளியேறும் நிலைமை காணப்படுகின்றது.

அதாவது தமிழ் தேசியம் தேய்ந்து கொண்டு செல்கின்றது இந்த தமிழ் தேசியம் தொடர்ந்து தேய்ந்து கொண்டு செல்லும் போது கட்சியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்றார்.

https://athavannews.com/2022/1307846

  • கருத்துக்கள உறவுகள்

தலைமைக்கான போட்டி தொடங்கிவிட்தது. 

😉

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kapithan said:

தலைமைக்கான போட்டி தொடங்கிவிட்தது. 

😉

animiertes-lachen-bild-0171.gifசம்பந்தன்... தனது வாரிசை அறிவிக்க வேண்டிய நேரம் நெருங்கி விட்டது. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, தமிழ் சிறி said:

animiertes-lachen-bild-0171.gifசம்பந்தன்... தனது வாரிசை அறிவிக்க வேண்டிய நேரம் நெருங்கி விட்டது. 🤣

இப்ப இந்தியாவின் கட்டுப்பாட்டில் TNA யா அல்லது  அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் TNA யா என்பதுதான் பிரச்சனை.😀

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, Kapithan said:

இப்ப இந்தியாவின் கட்டுப்பாட்டில் TNA யா அல்லது  அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் TNA யா என்பதுதான் பிரச்சனை.😀

இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறபடியால்த் தான் ரணிலை எதிர்க்கிறார்கள் என எண்ணுகிறேன்.

1 hour ago, தமிழ் சிறி said:
1 hour ago, Kapithan said:

தலைமைக்கான போட்டி தொடங்கிவிட்தது. 

😉

animiertes-lachen-bild-0171.gifசம்பந்தன்... தனது வாரிசை அறிவிக்க வேண்டிய நேரம் நெருங்கி விட்டது

இரண்டு மூன்று தலைவர்களை நியமிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

 

 

 சுமந்திரனால் தமிழ் தேசியம் தேய்ந்து செல்கிறது. இனியும் சுமந்திரன் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் கட்டுப்பட மாட்டோம் – கே.வி. தவராசா குற்றச்சாட்டு.

இனியும் சுமந்திரன் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் கட்டுப்பட மாட்டோம் என்ற சிறீதரநின் கருத்தை முற்று முழுதாக ஏற்றுக்கொள்வதாக இலங்கை தமிழரசு கட்சியின் கொழும்புகிளை தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி தவராஜா தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் கூறிய இந்த விடயத்தினை நான் கட்சிக்குள் உள்வாங்கப்பட்ட பின்னர் 2010 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை 12 ஆண்டுகளாக தொடர்ச்சியாக கூறி வருகிறேன்.

கட்சி என்று கூறும் போது கட்சிக்குள்ளே ஒரு முடிவு எடுக்கும் பொழுது அந்த முடிவு அனைவராலும் சேர்த்தெடுக்கப்பட வேண்டும். தலைவர் ஒரு முடிவு எடுத்தால் கூட கட்சியில் உள்ளவர்கள் மத்தியிலும் கேட்கப்பட வேண்டும். அது மத்திய குழுவில் உள்ள நாடாளுமன்ற குழுவாக இருந்த கூட அங்கேயும் ஒன்றிணைந்து முடிவெடுக்கப்பட வேண்டும்.

எந்தவொரு முடிவும் ஒரு குழுவான முடிவாக இருக்க வேண்டும். இதனை தொடர்ச்சியாக நான் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றேன். எந்த விடயத்தை எடுத்தாலும் தன்னிச்சையான முடிவினை எடுப்பதை எப்போது நிறுத்துகிறார்களோ அப்பொழுதுதான் கட்சி நிலைத்து நிற்கும்.

இலங்கை தமிழரசு கட்சி என்பது தனியார் கம்பனியல்ல மக்களின் கட்சி மக்களின் உரிமை பெற்றெடுப்பதற்காக இந்த வீட்டுக்குள் வந்து குந்தியிருக்கின்றோம் தவிர இது எங்களுடைய வீடு என யாரும் மார்தட்ட முடியாது.

குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து கடந்த 13 வருட காலத்தில் பலர் வெளியேறி பல கட்சிகள் உருவாக்கியுள்ளன. ஒரு தனி நபரின் பிழையான செயல்பாட்டினால் இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக உயர் நீதி அரசராக இருந்த சி.வி.விக்னேஸ்வரன் உட்பட பலர் சென்று இருக்கின்றார்கள். ஒவ்வொரு தடவையும் ஒரு தனி மனிதனின் செயற்பாட்டால், பலர் கட்சியை விட்டு வெளியேறும் நிலைமை காணப்படுகின்றது.

அதாவது தமிழ் தேசியம் தேய்ந்து கொண்டு செல்கின்றது இந்த தமிழ் தேசியம் தொடர்ந்து தேய்ந்து கொண்டு செல்லும் போது கட்சியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்றார்.

https://athavannews.com/2022/1307846

இது சரியான கருத்துகள்.....விக்கியார்   சொன்ன  புதிய. தலைவர்கள் உருவாக்க இளைஞர்களுக்கு பயிற்சி அளித்தால்...முதலமைச்சர் நிதி  ...இவற்றை..மாவை.....போனறோர எதிர்த்தார்கள்   ஏன் ?தெரியவில்லை  ஒரு இரண்டு மூன்று பேர்...இது போன்ற விடயங்களை முடிவு செய்யக்கூடாது. 

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனின் தன்னிச்சையான முடிவால் தான் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு பாதிப்பு - தவராசா

By VISHNU

30 OCT, 2022 | 08:34 PM
image

( எம்.நியூட்டன்)

சுமந்திரனின் தன்னிச்சையான முடிவினால் தான் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கின்றது. இது தனிப்பட்ட கம்பெனி அல்ல. மக்களுடைய கட்சி. மக்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி என அக்கட்சியினுடைய கொழும்புக் கிளைத் தலைவரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.பி.தவராசா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில்  நடாத்திய  ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கட்சி முடிவு என்பது மத்திய குழு அழைக்கப்பட்டு, உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு முடிவு எடுக்கப்படும். அந்த முடிவே இறுதியான முடிவாக இருக்கும்.

ஆனால் சுமந்திரனுடைய கருத்துக்கள் இப்போது தன்னிச்சையாக அமைகிறது. அது கட்சி முடிவு அல்ல. இவ்வாறான முடிவுகள் கட்சிக்கு மட்டும் பாதிப்பு அல்ல. தமிழ் மக்களுக்கும் மண்ணுக்கும் நமது நிலத்திற்கும் மொழிக்கும் இது பாதிப்பு.

22வது சட்டத்திருத்தம் பாராளுமன்றில் அண்மையில் வாக்கெடுப்புக்கு விட்டபோது சுமந்திரன், வாக்களிக்காமல் வெளியேறி சென்று விட்டார். இந்த முடிவு கட்சியில் எப்போது எடுக்கப்பட்டது. அவரே தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்துள்ளார்.

ஜனாதிபதிக்கான தெரிவு பாராளுமன்றில் இடம்பெறும்போது வாக்களிப்பில் நடுநிலை வகிப்பது முதுகெலும்பு இல்லாதவர்களின் செயல் என சுமந்திரன் கூறினார்.

அவ்வாறு கூறியவர் 22வது சட்டத்திருத்ததிற்கான வாக்களிப்பை புறக்கணித்தார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்ப்பதற்காகவே சுமந்திரன் 22வது சட்டத்திருத்ததிற்கான வாக்களிப்பை புறக்கணித்தார்.

சம்பந்தன் எப்போது விலகுவார், அந்தக் கதிரையை பிடிப்போம் என்று பலர் பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். நான் அவ்வாறு இல்லை. 

கட்சிக்குள் கொள்கைகள் தமிழ்த் தேசியத்துக்கு எதிராக மாறுமாக இருந்தால், நான் கட்சியை விட்டு வெளியேறுவேன். கட்சித் தலைமை சரியான தீர்மானங்களை எடுக்கா விட்டால், இவ்வாறு பலர் தன்னிச்சையான முடிவுகளை எடுத்து, கட்சியையும், மக்களையும் திசை திருப்பி விடுவார்கள். கட்சியில் கூட்டுப் பொறுப்பு இருக்க வேண்டும். அந்த கூட்டுப் பொறுப்பின் முடிவுகளுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும்.

பல சந்தர்ப்பங்களில் சுமந்திரனின் தன்னிச்சையான முடிவினால் தான், கட்சி கீழ் நோக்கி சென்றுகொண்டு இருக்கிறது என்பதை கடந்த பல ஆண்டுகளாக கூறிக் கொண்டு வருகின்றேன்.

இது தனிப்பட்ட கட்சி அல்ல. இது மக்களுடைய கட்சி. இது மக்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி. அந்த கட்சியினுடைய அங்கத்தவர்கள் யாராக இருந்தாலும் சரி கட்சித் தலைமையை மதிக்க வேண்டும்.

இந்த மண்ணுக்கும் என்னுடைய தாய் மொழிக்கும் என்னால் செய்யக்கூடிய சேவை செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கமே தவிர வேறெந்த நோக்கமும் தனிப்பட்ட இலாபமும் எனக்கு கிடையாது. என்னுடைய சொத்துக்களை கௌரி சங்கரி தவராசா எனும் அறக் கட்டளை மூலம் மக்களுக்காக வழங்கப்போகின்றேன்.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில், தேசிய பட்டியல் தருமாறு நான் கேட்கவில்லை. ஆனால் தேசியப் பட்டியில் உள்வாங்கப்பட்டேன் தேசிய பட்டியலில் எனது பெயர் முதலாவதாக காணப்பட்டது. என்றாலும், அடுத்த நாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஊடகத்தை அழைத்து, அம்பிகா சற்குணநாதனுடைய பெயர் முதலாவதாக உள்வாங்கப்பட்டுள்ளது என அறிவித்தார்.

பின்னர் சுமந்திரன், சம்பந்தனை சந்தித்து ஒரு முடிவு எடுத்து தேசிய பட்டியல் அம்பாறை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தவராசா கலையரசனை கொடுப்பதாக தீர்மானித்து அதனையும் ஊடகங்களை அழைத்து அறிவித்தார். மாவை சேனாதிராஜா பாராளுமன்ற உறுப்பினராக வரக்கூடாது என்பதில் அவர் தீவிரமாக இருந்தார்.ஆகவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவத்திற்கு தமிழ் தேசிய உணர்வுள்ள ஒருவர் தலைவராக வர வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/138740

  • கருத்துக்கள உறவுகள்

 தமிழ்த் தேசியம் என்ன Break Pads போன்றதா தேய்ந்து போவதற்கு ? 

Break pads தேசியம் என இனி அழைக்கலாம். 

🤣

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

animiertes-lachen-bild-0171.gifசம்பந்தன்... தனது வாரிசை அறிவிக்க வேண்டிய நேரம் நெருங்கி விட்டது. 🤣

நீங்கள் அவரது பூட்டப்பிள்ளையையா குறிப்பிடுகிறீர்கள்? 

  • கருத்துக்கள உறவுகள்

இவரது பேட்டியைப் பார்த்தால் சனசமூகக் கூட்டங்களில் இடம்பெறு குத்து முறிவு  நிலைக்கு  (ரேஞ்சுக்கு) TNA வந்துவிட்டது தெரிகிறத. 

இப்போது தவராச யாருடைய கட்டுப்பாட்டில் ? 

🤣

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, Kapithan said:

இப்போது தவராச யாருடைய கட்டுப்பாட்டில் ? 

முதலில் சுமத்திரன் யாருடைய கட்டுபார்த்ட்டி ல்?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

முதலில் சுமத்திரன் யாருடைய கட்டுபார்த்ட்டி ல்?

அவர் USA யின் கட்டுப்பாட்டில். 

யாரை யார் வைச்சிருக்கிறதெண்டுதான் பிரச்சினை 🤣

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப நாடு கமைதடதால் யார் பிரதமர்.😁

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.