Jump to content

யாழில் இருந்து கொழும்பு சென்ற சொகுசு பஸ் கோர விபத்து : மூவர் பலி, 16 பேர் காயம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் இருந்து கொழும்பு சென்ற சொகுசு பஸ் கோர விபத்து :  மூவர் பலி, 16 பேர் காயம்

05 NOV, 2022 | 06:50 AM
image

யாழில் இருந்து கொழும்பு சென்ற சொகுசு பஸ் வவுனியா நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகில் விபத்துக்குள்ளானதில் சாரதி உட்பட மூவர் பலியாகியுள்ளனர்.

இன்று சனிக்கிழமை (05) அதிகாலை 12.15 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது, 

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற அதி சொகுசு பஸ் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து நொச்சிமோட்டை பாலத்தில் மோதி தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

இதன்போது பஸ் சாரதியான ரூபன் மற்றும் ஒரு பெண் உட்பட மூவர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளதுடன், குறித்த பஸ்ஸில் பயணித்த 16 பேர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

அதில் நால்வர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இவ் விபத்து ஏற்பட்ட சமயம் அதே திசையில் பயணித்துக்கொண்ட மற்றுமொரு சொகுசு பஸ்  சாரதி தனது பஸ்ஸை விபத்து ஏற்பட்டுவதை தவிர்க்கும் முகமாக வீதியின் ஒரமாக செலுத்தி மற்றுமொரு விபத்தை தவிர்த்திருந்தார்.

இவ் விபத்து தொடர்பான விசாரணைகளை வவுனியா மற்றும் ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

IMG-20221105-WA0028.jpg

IMG-20221105-WA0024.jpg

IMG-20221105-WA0025.jpg

IMG-20221105-WA0005.jpg

IMG-20221105-WA0027.jpg

IMG-20221105-WA0002.jpg

https://www.virakesari.lk/article/139160

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

வவுனியாவில் பேரூந்து விபத்து – மூவர் உயிரிழப்பு 16 பேர் காயம்

வவுனியா நொச்சுமோட்டை பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற பேரூந்து விபத்தில் சாரதி உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று (சனிக்கிழமை) அதிகாலை 12.15 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற அதி சொகுசு பேரூந்து கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதுண்டு கவிழ்ந்துள்ளது.

இதன்போது பேரூந்து சாரதியும் மற்றும் ஒரு பெண் உட்பட மூவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், குறித்த பேரூந்தில் பயணித்த 16 பேர் காயமடைந்த நிலையில் நால்வர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து ஏற்பட்ட சமயம் அதே திசையில் பயணித்துக்கொண்ட மற்றுமொரு சொகுசு பேரூந்து சாரதி தனது பேரூந்தை விபத்து ஏற்பட்டதை தவிர்க்கும் முகமாக வீதியின் ஒரமாக செலுத்தி மற்றுமொரு பேரூந்து விபத்தை தவிர்த்திருந்தார்.

விபத்து தொடர்பான விசாரணைகளை வவுனியா மற்றும் ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

https://athavannews.com/2022/1308992

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவங்கட வேகமான வாகன ஓட்டும் முறை தான் கட்டுப்பாட்டை இழக்க முக்கிய காரணமாக இருக்கும்.

Link to comment
Share on other sites

வவுனியா பஸ் விபத்தில் பலியானவர்கள் குறித்து வௌியான தகவல்!

வவுனியா பஸ் விபத்தில் பலியானவர்கள் குறித்து வௌியான தகவல்!

 

வவுனியா விபத்தில் யாழ் பல்கலைக்கழக மாணவி உட்பட உயிரிழந்த மூவரின் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளன.

யாழில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற அதி சொகுசு பேரூந்து ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வவுனியா, நொச்சிமோட்டை பாலத்தில் மோதி தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் மூவர் மரணமடைந்ததுடன், 16 பேர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் 4 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறித்த விபத்தில் யாழ் பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மாணவியான நாவலம்பிட்டியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் அஜாகரி (வயது 23), சாரதியான கோவிலடி, உடுப்பிட்டி, வல்வெட்டித்துறையைச் சேர்ந்த எஸ்.சிவரூபன் (வயது 32), தம்பசிட்டி, பருத்தித்துறையைச் சேர்ந்த இராமலிங்கம் நிதர்சன் (வயது 24) ஆகியோரே மரணமடைந்தவர்களாவர்.

சடலங்கள் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.


 

-வவுனியா தீபன்-

https://tamil.adaderana.lk/news.php?nid=167387

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் இருந்தான.. அல்லது யாழ் நோக்கிய நீண்ட தூர பேரூந்துகள்.. தொடரூந்துகள் அடிக்கடி விபத்துக்குள்ளாவது தொடர்கதையாகி வருவதோடு.. பயணங்கள் அச்சம் நிறைந்தவையாக அமைகின்றன.

விபத்துக்களுக்கான காரணங்கள் கண்டறியப்பட்டு தங்க பாதுகாப்பு முன்னேற்பாடுகள்.. செய்யப்படாமை மற்றும் பயணிகளின் சாரதிகளின் நலனை முன்னிறுத்தாத வருவாய் நோக்கமான சேவைகளே இந்த நிலை தொடரக்காரணமாகும். 

சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது கடந்த கால பாடங்களில் இருந்து உள்வாங்கப்படும்.. தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி... இப்படியான போக்குவரத்துக்களை செய்ய தடை அல்லது கட்டுப்பாடுகளை விதிப்பதே இந்த அச்ச நிலை தொடராமல் இருக்க வழி வகுக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள தேசங்களில் அதிவேக நெடுஞ்சாலைகள் அமைத்துள்ளார்கள்.அனேகமானவை வெறிச்சோடியே காணப்பட்டன.

வடக்கிற்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த வீதியாக இருந்தும் இன்னமும் நெடுஞ்சாலைகள் அமைக்கப்படவில்லை.

இதன் உள்நோக்கங்கள் இன்னமும் புரியவில்லை.

போர் முடிந்தவுடன் தமிழர் தாயகங்களுக்காக கொடுக்கப்பட்ட நிதிகளிலிருந்து சிங்கள பிரதேசங்களை அபிவிருத்தி செய்துள்ளார்கள்.

வடக்கிற்கு என்றெரு நெடுஞ்சாலை இருந்தால் இப்படி சிறிய வீதிகளில் வாகனங்களை நிற்பாட்டி கைத்திருப்பது போல நெடுஞ்சாலைகளில் நிற்பாட்டி வைக்க மாட்டார்கள்.

கனரக வாகனங்கள் சாதாரண வீதியிலேயே பயணிக்கலாம்.

தூர தேசங்கள் போகிற வாகனங்களும் சிறிய வீதியில் அடித்து பிடித்து ஓட தேவையில்லை.

 

பொலிசாருக்கு ஒரேஒரு பிரச்சனை.

இப்போது வடக்கு வீதிகளில் போய்வரும் வாகனங்களை மறித்து தண்டம் என்ற பெயரில் கப்பம் அறவிட முடியாது.

On 5/11/2022 at 02:37, தமிழ் சிறி said:

விபத்து ஏற்பட்ட சமயம் அதே திசையில் பயணித்துக்கொண்ட மற்றுமொரு சொகுசு பேரூந்து சாரதி தனது பேரூந்தை விபத்து ஏற்பட்டதை தவிர்க்கும் முகமாக வீதியின் ஒரமாக செலுத்தி மற்றுமொரு பேரூந்து விபத்தை தவிர்த்திருந்தார்.

 

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:

 

 

 

10 நிமிட ஓய்வென்பது யாரால் தீர்மானிக்கப்பட்டது. 10 நிமிட ஓய்வு காணாது. மேலும் இரவு நீண்ட தூரப் பயணங்களில் ஒரே சாரதியை பயன்படுத்தக் கூடாது. எப்போதும் துணைச் சாரதி வைக்கப்பட வேண்டும். 20 நிமிட ஓய்வும்... சாரதிகள் மாற்றி மாற்றி சேவை ஆற்றுவதும் அவசியம். 

ஆளுநர் தகுந்த ஆலோசனைகள் இன்றி சகட்டு மேனிக்கு தீர்மானங்கள் எடுப்பது பிரச்சனைகளுக்கு தீர்வாகாது.

Edited by nedukkalapoovan
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் பகுதியை உலுக்கிய கோர விபத்து - உயிர் தப்பியோர் வழங்கிய பதறவைக்கும் வாக்குமூலம்

வவுனியா, நொச்சிமோட்டை பாலத்துக்கு அருகில் விபத்து இடம்பெறுவதற்கு சிறிது நேரத்துக்கு முன்னரே உணவுக்காக கடையொன்றில் அதிசொகுசு பேருந்து நிறுத்தப்பட்டது. இதனால் பேருந்தில் பெரும்பாலானவர்கள் நித்திரை கொள்ளவில்லை.

விபத்து இடம்பெற்றபோது விழித்திருந்தமையால் பேருந்தின் கம்பிகளைப் பிடித்து அதிகளவானோர் உயிர்ச் சேதங்கள் இன்றி தப்பித்தனர் என விபத்துக்குள்ளான குறித்த அதிசொகுசு பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் புறப்பட்ட அதி சொகுசு பேருந்து வவுனியா, நொச்சிமோட்டை பாலத்துக்கு அருகில் அதிகாலை 12.20 மணியளவில், வேகக்கட்டுப்பாட்டை இழந்து மதகுடன் மோதி தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

3 பேர் உயிரிழப்பு 23 பேர் காயம்

 

 

தமிழர் பகுதியை உலுக்கிய கோர விபத்து - உயிர் தப்பியோர் வழங்கிய பதறவைக்கும் வாக்குமூலம் | Vavuniya Bus Accent Details

இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். 23 பேர் காயமடைந்தனர். அவர்களில் ஒருவர் அநுராதபுரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார். காயமடைந்தவர்களில் 4 பேர் நேற்று மாலை வீடு திரும்பினர்.

யாழ். பல்கலைக்கழக சித்த மருத்துவபீட மாணவியான நாவலப்பிட்டிப் பகுதியைச் சேர்ந்த இராமகிருஷ்ணன் சயாகரி (வயது - 23),

சாரதியான கோவிலடி, உடுப்பிட்டி, வல்வெட்டித்துறையைச் சேர்ந்த எஸ்.சிவரூபன் (வயது 32),

இன்பர்சிட்டி, பருத்தித்துறையைச் சேர்ந்த இராமலிங்கம் நிதர்சன் (வயது 25) ஆகியோரே உயிரிழந்தனர்.

உயிரிழந்த முதலாம் வருட மாணவியான சயாகரி, வீடு திரும்பிக் கொண்டிருந்த போது விபத்தில் உயிரிழந்தார்.

இதேவேளை, நிதர்சன் வெளிநாடு செல்லும் பயண ஏற்பாட்டுக்காகக் கொழும்புக்குச் சென்றுகொண்டிருந்த போது விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

 

வடமராட்சியைச் சேர்ந்தவர் தெரிவித்ததாவது:-

 

தமிழர் பகுதியை உலுக்கிய கோர விபத்து - உயிர் தப்பியோர் வழங்கிய பதறவைக்கும் வாக்குமூலம் | Vavuniya Bus Accent Details

"இரவு 11.45 மணியளவில் கனகராயன்குளத்தில் உணவுக்காக பேருந்து நிறுத்தப்பட்டது.

சுமார் 10 அல்லது 15 நிமிடங்களில் அங்கிருந்து பேருந்து புறப்பட்டது. தேநீர் அருந்தி, உணவு உண்டமையால் பேருந்தில் பெரும்பாலானவர்கள் விழிப்பாகவே இருந்தார்கள்.

சுமார் 20 நிமிடத்தில் பேருந்து வளைவு ஒன்றில் திரும்பியது. இதன்போது பேருந்து கொஞ்சம் தளம்பியதை உணர முடிந்தது.

அந்த வளைவைத் தொடர்ந்து வந்த மற்றொரு வளைவில் மதகுடன் இதேபோன்று திரும்பும் போதே மோதியது.

அந்த மதகுடன் அமைந்திருந்த நடைபாதை போன்ற ஒற்றையடி பாதையில் பேருந்தின் ஒரு சில்லும், மதகின் மற்றைய பக்கத்துடன்பேருந்தின் பின்முனையும் மோதி சாரதியின் இருக்கைப் பக்கமாக பேருந்து சரிந்து விழுந்தது.

தூக்கி வீசப்பட்ட மாணவி, சாரதி

 

 

தமிழர் பகுதியை உலுக்கிய கோர விபத்து - உயிர் தப்பியோர் வழங்கிய பதறவைக்கும் வாக்குமூலம் | Vavuniya Bus Accent Details

பெரும்பாலானவர்கள் விழித்திருந்தமையால் பேருந்து சரியும் போதே கம்பிகளைப் பிடித்து தப்பினர்.

சாரதியும், பல்கலைக்கழக மாணவியும் தூக்கி வீசப்பட்டு கல்லுடன் மோதுண்டிருந்தார்கள்.

மற்றையவர், கண்ணாடி உடைந்து வெளியே விழுந்துள்ளார். அவர் மீதே பேருந்து சரிந்து வீழ்ந்தது.

பின்னால் இன்னொரு அதிசொகுசு பேருந்தும் வந்தது. அதுவும் தளம்பியவாறே வந்தாலும், சாரதியின் சாதுரியத்தால் விபத்திலிருந்து தப்பித்தது.

வீதியை விட்டு விலகினாலும் விபத்து ஏற்படவில்லை.

அங்கிருந்து ஓடிய நடத்துநர்

 

தமிழர் பகுதியை உலுக்கிய கோர விபத்து - உயிர் தப்பியோர் வழங்கிய பதறவைக்கும் வாக்குமூலம் | Vavuniya Bus Accent Details

அந்த பேருந்தில் வந்தவர்களும் உடனடியாக உதவிகளைச் செய்து எமது பேருந்தில் பயணித்தவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள்.

பேருந்தின் நடத்துநர் இளைஞர் ஒருவரே. அவர் முதல் தடவையாக இந்த பேருந்தில் பணியாற்றினார்.

அவரும் எங்களுடன் கம்பியைப் பிடித்தே உயிர் தப்பினார்.

சாரதி உயிரிழந்ததைப் பார்த்ததும் பயத்தால் அவர் அங்கிருந்து ஓடி விட்டார்" - என்றார்.

3 அதிசொகுசுப் பேருந்து விபத்துக்கள்

 

 

தமிழர் பகுதியை உலுக்கிய கோர விபத்து - உயிர் தப்பியோர் வழங்கிய பதறவைக்கும் வாக்குமூலம் | Vavuniya Bus Accent Details

இதேவேளை, வவுனியா மாவட்டத்தில் இந்த விபத்து உள்ளடங்கலாக நேற்று மாத்திரம் 3 அதிசொகுசுப் பேருந்து விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த விபத்தில் மாத்திரமே பயணிகள் பாதிப்படைந்துள்ளனர்.

வவுனியா, நொச்சிமோட்டைப் பாலதுக்கு அருகில் விபத்துக்குளான அதிசொகுசு பேருந்தை மீட்கும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்ட போது ஏ - 9 வீதிப் போக்குவரத்து இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாகப் பாதிக்கப்பட்டது.

https://ibctamil.com/article/vavuniya-bus-accent-details-1667796785

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஏராளன் said:

இரவு 11.45 மணியளவில் கனகராயன்குளத்தில் உணவுக்காக பேருந்து நிறுத்தப்பட்டது.

சுமார் 10 அல்லது 15 நிமிடங்களில் அங்கிருந்து பேருந்து புறப்பட்டது. தேநீர் அருந்தி, உணவு உண்டமையால் பேருந்தில் பெரும்பாலானவர்கள் விழிப்பாகவே இருந்தார்கள்.

நீண்ட காலமாகவே பேரூந்துகள் நிறுத்தப்படும் இடங்களில் சாரதி நடத்துனர்களுக்கென தனியான இடம் ஒதுக்கி அவர்களுக்கு வியாபாரத்தை வழங்கியதற்காக இலவச சாப்பாடு குடிவகை என கொடுக்கப்படுவதுண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

நீண்ட காலமாகவே பேரூந்துகள் நிறுத்தப்படும் இடங்களில் சாரதி நடத்துனர்களுக்கென தனியான இடம் ஒதுக்கி அவர்களுக்கு வியாபாரத்தை வழங்கியதற்காக இலவச சாப்பாடு குடிவகை என கொடுக்கப்படுவதுண்டு.

எழுஞாயிறு அவர்களின் கருத்து இங்கு பொருத்தமாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஏராளன் said:

எழுஞாயிறு அவர்களின் கருத்து இங்கு பொருத்தமாக இருக்கும்.

நானும் பார்த்தேன்.

சிலதுகள் நடைமுறைக்கு அப்பால்பட்டவை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் வாழும் நாட்டில் 

நான் ஒரு தொழில்முறைப் பொதுப்போக்குவரத்து பேருர்ந்து ஓட்டுனர் தவிர அது தொடர்பான பகுதிநேர தொழில்நுட்பப் பரிசோதகர். இங்கு என்ன விடையங்கள் கடைப்பிடிக்கப்படுகிறதோ அவற்றில் சிலவற்றையே இங்கு நான் பரிந்துரைத்திருக்கிறேன்.

  அனைத்து ஓட்டுனர்களுக்கான மதுப் பரிசோதனை அதிகரிப்பு, இருக்கைகளுக்கான பாதுகாப்புப் பட்டி, பேரூர்ந்து ஓட்டுனருக்கான சிறப்புப் பயிற்சி இவைகள் இலங்கைத்தீவில் சாத்தியமே.

அண்மையில் நான் யாழிலிருந்து கொழும்பு சென்றபோது  வெள்ளவத்தைச் சந்தைக்கருகில் அதிகாலை மூன்றுமணிக்கு இறக்கிவிட்டுட்டார்கள் என்னைச் சுத்தி ஐந்து ஆறு அட்டோகாரர்கள் மொய்த்துவுவிட்டார்கள் நல்லகாலம் உறவினர் ஒருவர் வந்து காப்பாற்றிவிட்டார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2019 இல் நானும் மனைவியும் ஊருக்கு சென்றபோது யாழில் இருந்து கொழும்பை நோக்கி செல்ல பகல் நேர சொகுசு பஸ்வண்டி முன்பதிவு செய்திருந்தேன். பயண நாளில் வீதியோரம் காத்து நின்றபோது நாங்கள் எதிர்பார்த்திருந்த புதிய சொகுசு வண்டியொன்றுக்கு பதிலாக பழைய பஸ் வண்டியொன்று வந்து எங்களை ஏற்றிகொண்டது. அது எங்களுக்கு கிடைத்த முதலாவது அதிர்ச்சி.

அடுத்தது வழி நெடுகிலும் சாரதி வேகத்தை அனுசரித்து வண்டியை ஓட்டாதது எமக்கு மிக்க பயத்தை உண்டாக்கியது. பயணம் முழுவதும் அவ்வளவு பயங்கரமானதாக உணர்ந்தோம். எனது மனைவி வழி நெடுக  இதுபற்றி கவலையுடன் சொல்லிக்கொண்டே வந்தாள். சொல்லிவைத்தாற்போல் வவுனியாவில் ஒரிடத்தில் இடைவேளைக்காகவும் உணவுக்காகவும் வண்டி 30 நிமிடங்கள் நிறுத்தப்பட்டபின் கிளம்பினோம். இப்போது எங்களை பயம் இன்னும் கெளவிக்கொண்டது. காரணம் பஸ்வண்டி முன்புபோல் அதிவேகமாக சென்றது மட்டுமல்ல ஓடு பாதையில் பல இடங்களில் அங்கும் இங்கும் என்று குடைசாய்வதுபோல்  நிலைகுலைந்து சென்றது.

சிலாபத்தை அண்மிக்கும்போது இஸ்கூட்டர் ஒன்றில் வந்த ஒருவரை பஸ் மோதியது (உயிருக்கு ஆபத்தில்லை) அத்துடன் எங்கள் பயணம் தடைப்பட்டு பல மணி நேரம் அங்கு வீதிஒரம் காத்து நிற்கவேண்டிய அவலம். போலீசார் வந்து பஸ்சுடன் சாரதி நடத்துனர் அனைத்தையும் போலிஸ் நிலயத்துக்கு ஓட்டிசென்றுவிட்டார்கள்.

என்னிடம் கைத்தொலைபேசியில் "PickMe" செயலி இருந்ததால் அதன்மூலம் அந்த வழியே தற்செயலாக சென்ற ஒரு வாடகை காரை அழைத்து அதில் எமது பயணத்தை கொழும்பு நோக்கி தொடர்ந்தோம்.(PickMe செயலி பொதுவாக சிலாபம் பிரதேசத்தில் இயங்காது என்பதை நாங்கள் பயணித்த வாடகை காரின் சாரதி மூலம் அறிந்துகொண்டோம்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் - கொழும்பு சேவையில் ஈடுபடும் அனைத்து பஸ்களும் முகமாலையில் பரிசோதனை

By DIGITAL DESK 5

09 NOV, 2022 | 09:55 PM
image

யாழ் கொழும்பு சேவையில் ஈடுபடும் அனைத்து பேருந்துகளின் வழித்தட அனுமதி,சாரதி அனிமதிபத்திரங்களும் வெள்ளிக்கிழமை (11) முதல் முகமாலையில் பரிசோதிக்கப்பட உள்ளதாக  வடக்கு மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் உறுப்பினரும் வடக்கு மாகாண தனியார் போக்குவரத்து உரிமையாளர் சங்கத்தின் தலைவருமான சி.சிவபரன் தெரிவித்தார்.

நேற்றைய தினம் (08)வடமாகாண உள்ளுராட்சி அமைச்சில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை முதல் கொழும்பு- யாழ்ப்பாண இரவு சேவையில் ஈடுபடும் பஸ்கள் அனைத்தினதும்  வழித்தட அனுமதி பத்திரங்கள்,சாரதி அனுமதிபத்திரம்  முகமாலையில் பரிசோதிக்கப்படுவது எனவும் அதேபோல புளியங்குளப் பகுதியில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு செல்லும் அனைத்து பஸ்களும் 20 நிமிடங்கள் நிறுத்தி மீண்டும் பயணிக்க அனுமதிக்கப்படுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் கைதடியில்  உள்ளூராட்சி அமைச்சில்  உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் செயலாளரின் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் எனவே நாளை மறுதினத்தில் இருந்து யாழ்ப்பாண கொழும்பு சேவையில் ஈடுபடும் அனைத்து தனியார் பஸ் உரிமையாளர்கள் தங்களுடைய வழித்தட அனுமதிப்பத்திரம் மற்றும் விசேட சாரதி அனுமதிப்பத்திரம்  என்பவற்றை தங்களுடன் உடமையில் வைத்திருப்பது மிகவும் அவசியமெனவும் அது தவறும் பட்சத்தில் பொலிஸார் மற்றும் வடக்கு மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் அதிகாரிகளால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பிற்கு பயணித்த பஸ் வவுனியாவில் வேக  கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி மூவர் உயிரிழந்தவை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/139557

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, ஏராளன் said:

யாழ் - கொழும்பு சேவையில் ஈடுபடும் அனைத்து பஸ்களும் முகமாலையில் பரிசோதனை

பரிசோதனை என்ற பெயரில் கொஞ்ச பேர் நல்லா பணம் பண்ண போறாங்க.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதென்ன முகமாலையில....? ஆனையிறவு என்னாச்சு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, குமாரசாமி said:

அதென்ன முகமாலையில....? ஆனையிறவு என்னாச்சு?

ஆள் நடமாட்டமில்லாத இடமா பார்க்கிறாங்கள்.

இனிமேல் ரிக்கட் விலை உயரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அதென்ன முகமாலையில....? ஆனையிறவு என்னாச்சு?

இப்ப புழுக்கைக்கெல்லாம் புலியென்ட நினைப்பு, அது தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஈழப்பிரியன் said:

பரிசோதனை என்ற பெயரில் கொஞ்ச பேர் நல்லா பணம் பண்ண போறாங்க.

இரண்டு அல்லது மூன்று இடங்களில் சோதனை செய்தால் தான் நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உணவுக்காக பஸ் நிறுத்தப்படும் இடங்களில் கடை உரிமையாளர்களால் சாரதிகள் விசேடமாக கவனிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு மதுபானமும் வேறு போதைப்பொருள்களும் அங்கு வளங்கப்படுகிறது. இப்படி பஸ்வண்டி தரிக்கும் இடங்களில் சாரதியும் நடத்துனரும் பயணிகளுடன் இருந்து உணவருந்துவதில்லை. அவர்கள் தனியான இடத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டு பஸ்புறப்படும் சமயத்தில் அவ்விடத்துக்கு வருவார்கள்.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கல்வியறிவுள்ள, பல்வேறு தொடர்புகளுள், ஆழுமையுள்ளசுமந்திரனும் சாணக்கியனும் TNA க்குத் தலைமை தாங்கி  வழிநடாத்த வேண்டும்,...👍 ஏனப்பா,.. ஒரு குசும்புக்கு எழுதினாலும் விசுகர் தடியோடதான் நிக்கிறார் கண்டியளோ,..🤣
    • புதிய ஜனாதிபதி அநுரவின் கட்சிக்கு கணிசமான அளவு வாக்குகள் வடக்கு/கிழக்கில் வரும் பொதுதேர்தலில் கிடைக்கலாம். ஆனால் அவை ஆசனத்தை பெறுவதற்கு போதுமானதாக அமையுமா என்பது சந்தேகமே.
    • நாங்கள் சிறுவயதில் காலைக்காட்சி, மாலைக்காட்சி, கடற்கரைக்காட்சி என்று சோதனையில் வந்த கேள்விகளுக்கு ஏற்றமாதிரி கட்டுரை எழுதுவது போலத் தான் இருக்கின்றது இந்த பகிரங்கக் கடிதம்.  இதை எழுதியவர் ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரிக்கச் சொன்னவராக இருக்கலாம், இல்லாவிட்டால் இலங்கைச் சிங்கள ஒற்றை ஆட்சிப் பாராளுமன்றம் தேவையில்லை, எங்களின் ஒற்றுமை மட்டுமே முக்கியம், அதை சர்வதேசத்திற்கு காட்டினால் போதும் என்று சொன்னவராக இருக்கலாம். ஒரு அணுக்கமான அரசியல் செய்வோம் என்று சொன்னவராக இருக்கலாம். இன்னும் சில வகைகளும் இருக்கின்றன. ஒவ்வொன்றிலும் நியாயங்கள் இருக்கிறது தானே........... நாங்கள் எழுதிய காலை, மாலை, கடற்கரை காட்சிக் கட்டுரைகள் போலவே. சொன்னவர் யார் என்று தெரிந்தால் தான், இதில் இருக்கும் சொற்களையும், வசனங்களையும் கடந்து, அதில் மறைந்திருக்கும் உட்பொருளை விளங்கிக்கொள்ள முடியும். நித்தியின், ஜக்கியின் மற்றும் பல குருக்களின் பக்தர்களும் இதையே தான் சொல்கின்றனர். குருவின் தனிப்பட்ட வாழ்க்கையை விட்டு விட்டு, குரு சொல்வதை மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள் என்று....... உங்கள் குருக்களே தங்கள் சுகபோக வாழ்க்கைகளுக்காக மட்டுமே பேசிக் கொண்டிருக்கின்றார்கள். இறுதியில் உங்களையும், உங்கள் குடும்பங்களையும் நடுத்தெருவில் நிற்பாட்டுவார்கள் என்று தானே நாங்கள் அவர்களுக்கு எதிர்க் கருத்துகள் சொல்லுகின்றோம். இதை எழுதியவர் கூட அப்படியான ஒருவராக இருக்கலாம். இப்பொழுது பாராளுமன்றம் முக்கியம், அங்கு போவது முக்கியம், அதிகாரம் முக்கியம்............. என்கின்றனர். உண்மையே, இவை எல்லாம் முக்கியம். இவை எப்போதும் முக்கியமானவையாக இருந்தன. அத்துடன், இதைச் சொல்பவர் முன்னர் என்ன சொல்லியிருந்தார் என்று அறிதலும் முக்கியம் தானே............    
    • 👆 Thank God, I have not been so ruthless as the guy above in dealing with relatives. I seem to be fair enough 👇    
    • கொழும்பில் போட்டியிடும் தமிழரசு கட்சி..! பங்காளி கட்சிகளுக்கு கால அவகாசம் இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டமானது பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது நிறைவுக்கு வந்துள்ளது.  இதற்கமைய, ரெலோ மற்றும் ப்ளொட் ஆகிய கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து மூன்று நாட்களுக்குள் தமது முடிவு எட்டப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  அத்துடன், கொழும்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சி போட்டியிடுவதாகவும் இதற்கான வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கு ஒரு குழுவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  அடுத்த கூட்டம்  அதேவேளை, குறித்த விடயங்கள் தொடர்பில் எதிர்வரும் 03ஆம் திகதி மீண்டும் கூட்டம் நடத்தப்பட்டு தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவு வழங்கியவர்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் கடிதம் ஒன்றை முன்வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இதன்போது, கிட்டத்தட்ட 2018ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை இடம்பெற்றிருக்க கூடிய அனைத்து விடயங்கள் தொடர்பிலும் விளக்கம் கோர வேண்டுமே தவிர தற்போது நடந்த விடயங்கள் தொர்பில் மாத்திரம் விளக்கம் கோரப்பட கூடாது எனவும் கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், மத்தியக்குழு கூட்டமானது, பல்வேறுபட்ட வாத பிரதிவாதங்களுக்கு மத்தியில் முடிவுக்கு வந்துள்ளது.  அதேவேளை, கூட்டத்திற்கு பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், "தமழிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் காலை முதல் மாலை வரை நடைபெற்றது. இதன்போது ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னரான விடயங்கள் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் கூடி ஆராய்ந்தோம். ஜனாதிபதி தேர்தலில் கட்சி எடுத்த 3 தீர்மானங்களுக்கு மாறாக செயற்பட்டவர்கள் தொடர்பாக ஆராயப்பட்டது. அதிலே அப்படியாக கட்சியின் முடிவை மீறி செயற்பட்டவர்களிடம் விளக்கம் கோருவது என முடிவு எடுக்கப்பட்டது. அரியநேத்திரனை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என பலமான கருத்துக்கள் சொல்லப்பட்டிருந்தாலும், முதலாம் திகதி எடுத்த தீர்மானத்தில் தேர்தலில் இருந்து விலக வேண்டும் என்று கோரியிருந்தோம். அதற்கு அவருடைய விளக்க கடிதத்தில் பதில் சொல்லப்பட்டிருக்கவில்லை. அது காலம் கடந்து கிடைத்தாலும் வாசித்து காட்டப்பட்டது. ஆகவே அது சம்மந்தமாக கேட்டு விட்டு தீர்மானங்களை எடுக்கவுள்ளோம். முக்கிய விடயமாக ஆராயப்பட்டது நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆகும். நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக நாங்கள் விசேட அறிவிப்பை மனவுவந்து விடுவதற்கு தீர்மானித்துள்ளோம். அதாவது தமிழ் தேசிய பரப்பில் இருக்கிற கட்சிகள் விசேடமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெவ்வேறு காலகட்டங்களில் விலகிப் போன கட்சிகள் திரும்பவும் எங்களுடன் சேர்ந்து தேர்தலை முகங்கொடுங்க விரும்பினால் வரமுடியும். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகிச் சென்றவர்கள் வருகிற தேர்தல் சவால் மிக்க தேர்தலாக இருப்பதால் இணங்கி வந்து இந்த தேர்தலில் போட்டியிட முடியும். தமிழரசுக் கட்சியின் பெயரிலும், அதன் சின்னத்திலும் தான் கடந்த காலங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக போட்டியிட்டோம். அந்த விதமாக இந்த தேர்தலில் போட்டியிட நாங்கள் தீர்மானித்துள்ளோம். அப்படியாக அந்த அழைப்பை ஏற்று வந்தால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வேட்ப்பாளர்களை நிறுத்துவது தொடர்பில் கலந்துரையாடி முடிவு எடுப்போம். அப்படி அவர்கள் வராவிட்டால் இலங்கை தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிடும். திருகோணமலை, அம்பாறை மாவட்டங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ளோம். அங்கே ஒரு தமிழ் உறுப்பினர் மட்டும் தான் தெரிவு செய்யப்படும் நிலை இருப்பதால் அந்த விடயங்களை அந்த மாவட்ட கிளைகளுடன் பேசி முடிவுக்கு கொண்டு வரலாம் என தீர்மானித்துள்ளோம். அதற்கு மேலதிகமாக இம்முறை வடக்கு - கிழக்குக்கு வெளியே உள்ள கொழும்பு உட்பட தமிழர்கள் வாழும் ஏனைய மாவட்டங்களிலும் போட்டியிட பரிசீலனை செய்யப்பட்டுள்ளது. விடுக்கப்பட்டுள்ள அழைப்பு  எதிர்வரும் 4 ஆம் திகதி வேட்புமனுத் தாக்கல செய்தல் ஆரம்பிக்கவுள்ளதால் பிரிந்து சென்றவர்கள் மீள வருவது தொடர்பாக மிக விரைவாக அவர்களது பதிலை எதிர்பார்க்கின்றோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்ற கட்சிகள் வந்து இணைவதற்கு அழைப்பு விடுத்துள்ளோம். அதற்கு வெளியே வேறு கட்சிகள் வந்தால் அதனை பரிசீலிக்கலாம். ஏனெனில் எங்களது கட்சியில் இருந்து பிரிந்து போனவர்களது கட்சியும் மேலும் பிரிந்து இருக்கின்றது. அவர்களை உள்வாங்கும் போது சில ஆட்சேபனைகள் இருக்கும். அது பற்றி பேசியே முடிவு எடுப்போம். ஆனால் தீர்மானமாக அழைப்பு விடுப்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்களை வாருங்கள் சேர்ந்து பயணிப்போம் என்று புன்முறுவலோடு அவர்களை அழைக்கின்றோம். புதியவர்களை தேர்தலில் உள்வாங்குவது, இளைஞர்களை உள்வாங்குவது தொடர்பிலும் நீண்ட நேரம் பேசினோம். அதனை சரியாக நாம் அணுகுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. மக்களிடத்தில் இது தொடர்பான பாரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. விசேடமாக தேசிய மக்கள் சக்தி பெற்ற வெற்றிக்கு பிற்பாடு அத்தகைய எண்ணப்பாடு எங்களது பிரதேசங்களிலும் உயர்ந்துள்ளது. அது நல்ல விடயம். இளைஞர்கள், ஆளுமையுள்ளவர்கள், படித்தவர்கள், பெண்கள் என அவர்களுக்கான பிரதிநித்துவத்தை உறுதி செய்யும் வகையில் தான் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். அதற்கான நியமனக்குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு இறுதி முடிவுகளை எடுக்கும். ஆனால் மாவட்ட ரீதியாக கலந்து ஆலோசித்து தான் அந்த முடிவுகள் எடுக்கபடும். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்கள் சிலர் எம்முடன் பேசியுள்ளார்கள். தம்முடன் இணையுமாறு அவர்கள் அழைப்பு எதனையும் விடவில்லை. நாங்கள் பிரதானமான தமிழ் கட்சி. இது வரைக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக வேறு கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட்ட போது தேர்தலுக்கு முகம் கொடுத்தது இலங்கை தமிழரசுக் கட்சியின் பெயரிலும், அதன் சின்னத்திலுமே தான். அதே முறையில் நாங்கள் இந்த தேர்தலையும் சந்திப்பதற்கு பிரதான கட்சி என்ற வகையில் நாங்கள் அவர்களுக்கும் அழைப்பு விடுகின்றோம்” என குறிப்பிட்டுள்ளார்.  https://tamilwin.com/article/ilankai-tamil-arasu-katchi-meeting-in-colombo-1727533785?itm_source=parsely-detail
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 3 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.