Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நஷ்டத்தில் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் நிறுவகிக்கப்படும் போதிலும் புதிய விமானங்கள் கொள்வனவு - பந்துல குணவர்தன

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நஷ்டத்தில் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் நிறுவகிக்கப்படும் போதிலும் புதிய    விமானங்கள் கொள்வனவு - பந்துல குணவர்தன

By DIGITAL DESK 2

13 DEC, 2022 | 01:35 PM
image

(எம்.மனோசித்ரா)

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் நஷ்டத்தில் நிர்வகிக்கப்படுகின்ற போதிலும், அதனை மறுசீரமைப்பதற்காக புதிய விமானங்களைக் கொள்வனவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (13)  நடைபெற்ற போது , நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு எந்த அடிப்படையில் 11 விமானங்களை கொள்வனவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டது என்று கேட்கப்பட்ட போதே அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நிறுவனமொன்று வீழ்ச்சியடைந்ததன் பின்னர் அதனை மறுசீரமைக்க முடியாது. இது வரை கொள்வனவு செய்யப்பட்டுள்ள விமானங்களின் வரி காலம் நிறைவடைந்தால் , அதன் பின்னர் மறுசீரமைக்க முடியாது.

எனவே நிறுவனமொன்றை நிர்வகித்துக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்திலேயே அதன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும். அதற்கமையவே புதிய விமானங்களை கொள்வனவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.

https://www.virakesari.lk/article/142979

  • கருத்துக்கள உறவுகள்

காசு எங்கால?

அடமானம், பிளேன் மேல எண்டால், கடனுக்கு தருவினம். மாதக்காசு கட்டாட்டி, வெளிநாடுகளில் வைத்து அமத்தலாம் எண்டு.🤑

  • nunavilan changed the title to நஷ்டத்தில் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் நிறுவகிக்கப்படும் போதிலும் புதிய விமானங்கள் கொள்வனவு - பந்துல குணவர்தன
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எயார் லைன்ஸ் நிறுவனம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 110 பில்லியன் ரூபா நிலுவையை செலுத்தவேண்டியுள்ளது - இந்திக

By DIGITAL DESK 5

13 DEC, 2022 | 02:55 PM
image

(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்)  

வரையறுக்கப்பட்ட ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு 110 பில்லியன் ரூபா நிலுவை தொகை செலுத்தப்படவுள்ளது. 

மாதாந்தம் 10 மில்லியன் ரூபாவை எயார் லைன்ஸ் நிறுவனம் தற்போது செலுத்தி வருகிறது  என மின் சக்தி மற்றும் வலு சக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (13) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்களின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

வரையறுக்கப்பட்ட ஸ்ரீ லங்கன் எயார் லைன் நிறுவனம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு 110 பில்லியன் ரூபா நிலுவை தொகை செலுத்தப்படவுள்ளது.

இந்த நிலுவை தொகையை பெற்றுக் கொள்ள பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீ லங்கன் எயார் லைன் நிறுவனம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு மாதாந்தம் 10 மில்லியன் ரூபா நிலுவைத் தொகை செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இதற்கமைய கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை நிலுவை தொகை செலுத்தப்பட்டுள்ளது.இருப்பினும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதம் 10 மில்லியன் ரூபா நிலுவை தொகை செலுத்தப்படவில்லை.

ஸ்ரீ லங்கன் எயார் லைன் நிறுவனம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு 30 பில்லியன் ரூபா நிலுவை தொகையை செலுத்தியுள்ளது. கடன் அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்க முடியாது என எயார் நிறுவனத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்போது எழுந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன,நட்டமடையும் ஸ்ரீ லங்கன் எயார் நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகள் மாதாந்தம் பல இலட்சம் ரூபா சம்பளம் பெறுகிறார்கள்.

நிலுவை தொகையை பெற்றுக் கொள்ள பேச்சுவார்த்தை மாத்திரம் முன்னெடுக்க கூடாது நிலுவை கட்டண தாமதத்திற்கு தண்டபணம் அறவிடப்பட வேண்டும்.

ஸ்ரீ லங்கன் எயார் லைன் நிறுவனம் பல பில்லியன் ரூபாவை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு செலுத்தாத காரணத்தினால் கூட்டுத்தாபனம் பாரிய நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது,இந்த சுமை சாதாரண மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த, ஸ்ரீ லங்கன் எயார் லைன் நிறுவனம் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை பெற்றுக் கொள்ள இந்த அரசாங்கம் தான் உரிய நடவடிக்கை எடுத்துள்ளது.தற்போது முறைமை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.தற்போது கடனுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படுவதில்லை என்றார்.

https://www.virakesari.lk/article/143004

  • கருத்துக்கள உறவுகள்

நட்டத்தில் இயங்கும் விமான நிறுவனத்தை ஏன்லே இன்னமும் நடத்துறீங்க?😎

புலத்திலுள்ளோருக்கு வித்துடுங்க. 🫣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ராசவன்னியன் said:

நட்டத்தில் இயங்கும் விமான நிறுவனத்தை ஏன்லே இன்னமும் நடத்துறீங்க?😎

புலத்திலுள்ளோருக்கு வித்துடுங்க. 🫣

காசடிக்கத்தான்…..

  • கருத்துக்கள உறவுகள்

உதை வைச்சு புலம்பெயர்ஸை அமுக்கிற பிளானோ?

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, satan said:

உதை வைச்சு புலம்பெயர்ஸை அமுக்கிற பிளானோ?

இல்லை, யாழ் களத்தில் யாரோ புலத்திலிருந்து  “ஈழம் Air” விமான கம்பெனி ஆரம்பிக்க டெண்டர் விட்டார், யாரென ஞாபகம் இல்லை! 🤪 

அவரை அந்த குழாமை ஒரே அமுக்கு..அமுக்கிட வேண்டியதுதான். 😜

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழனால்  விமானம் ஓட்டமுடியாது,  ஓட்டமாடான் என்றுமில்லை, விமான கம்பனி நடத்த இயலாது என்றுமில்லை, அவனால் எல்லாம் முடியும். ஆனால் அவன் தொடங்கினால்; காட்டிக் கொடுக்கவும், முட்டுக்கட்டை போட்டு தடுக்கவும், அழிக்கவும் பலபேர் போட்டி போட்டுகொண்டு வருவார்கள்.  கறையான் புத்தெடுக்க கருநாகம் குடி இருக்கும். எதுக்கு வம்பு? அது அதுக்கு தெரிந்ததைத்தானே அதனால் செய்யமுடியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.