Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"இனப்பிரச்சினைக்கான தீர்வில் முஸ்லிம்களின் உரிமைகள் புறந்தள்ளப்பட முடியாது"

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1000066318.jpg

 

(ஊடகப்பிரிவு)
 
வடக்கு,கிழக்கு மாகாணங்களை இணைத்து 13 ஐ அமுல்படுத்தக் கோரும் தமிழ் தலைமைகளும் இதே நிலைப்பாட்டிலுள்ள முஸ்லிம் தலைமையும் இணைந்த வட,கிழக்கில் முஸ்லிம்களுக்கான அதிகார பகிர்வு என்ன என்பதை தெளிவு படுத்த வேண்டுமென அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
 
இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு ஜனாதிபதி தலைமையில் நடாத்தப்படும் பேச்சுக்களில் (13) அரசியலமைப்பின் 13 ஐ முழுமையாக அமுல்படுத்துமாறு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கோரியதையடுத்தே, அமைச்சர் நஸீர் அஹமட் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார்.
 
இதுபற்றி அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
 
இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். இதில் நாங்கள்
கரிசனையுடன் உள்ளோம். ஆனால், இத்தீர்வுகள் முஸ்லிம் சமூகத்துக்குப் பிரச்சினையாகிவிடக்கூடாது. வடக்கு,கிழக்கு மாகாணங்களை இணைத்து சமஷ்டி கோரும் தரப்புக்கள், இணைந்த வட,கிழக்கில் முஸ்லிம்களுக்கு வழங்கும் அதிகாரம் என்ன? இதுபற்றி அவர்கள் மனம் திறப்பது அவசியம். சூழ்நிலையைச் சமாளிக்கும் அறிக்கைகள் விடாமல், முஸ்லிம்களின் மனநிலையைப் புரிந்து கொண்டு பேசுவதே சிறந்தது.
 
இதே நிலைப்பாட்டில் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை உள்ளமை ஏற்புடையதல்ல. வடக்கு கிழக்கு இணைய வேண்டுமா? அல்லது வடக்கும் கிழக்கும் வெவ்வேறாக பிரிந்திருக்க வேண்டுமா? என்பதை முஸ்லிம் காங்கிரஸ் தலைமை சமூகத்திற்கு தெளிவுபடுத்த வேண்டும். இணைய வேண்டுமென்ற நிலைப்பாட்டில் ஹக்கீம் இருப்பாரேயானால்,வடக்கு ,கிழக்கு முஸ்லிம்களுக்கு வழங்கப்போகும் அரசியல் தீர்வை அவர் தெளிவுபடுத்த வேண்டும். இவ்விடயங்கள்
தொடர்பில், ஹக்கீமுக்கும், சுமந்திரனுக்கும் இதுவரை காலமும் இரகசியமாக நடாத்தப்பட்ட பேச்சுக்கள் வெளிக்கொணரப்படுவது அவசியம்.இவ்விரு மாகாணங்களும் பிரிந்திருக்க வேண்டுமென ஹக்கீம் கூறினால்,அந்தந்த மாகாணங்களில் அபகரிக்கப்பட்ட, கையகப்படுத்தப்பட்ட முஸ்லிம்களின் காணிகளை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
 
சிறுபான்மைச் சமூகங்கள் என்ற பொது அடையாளத்துக்குள் முஸ்லிம்களையும் உள்ளீர்க்கவே முயற்சிக்கப்படுகிறது. இப்பொது அடையாளத்துக்குள்ளும் பல பிரச்சினைகள் உள்ளன. எனவே ,13 ஐ முழுமையாக அமுல்படுத்துமாறு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கூறுவது கள நிலவரங்களுக்குப் பொருந்தாது. இது,அவரது தனிப்பட்ட விருப்பமே தவிர,வடக்கு,கிழக்கு முஸ்லிம்களின் அபிலாஷை இல்லை. எனவே, தீர்வு தொடர்பில் எவரும், எழுமாந்தமாகப் பேசக்கூடாது.
 
வடக்கும், கிழக்கும் பிரிந்த மாகாணங்களாகவே இருப்பதானால், குறிப்பாக கிழக்கில் அபகரிக்கப்பட்ட முஸ்லிம்களின் காணிகளை, முஸ்லிம் பிரதேச செயலகங்களிடமோ அல்லது முஸ்லிம்களிடமோ ஒப்படைப்பது அவசியம். உதாரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலகங்கள் உள்ளன.அவற்றில் 04 முஸ்லிம் பிரதேச செயலங்களில் 27 வீதமாக உள்ள முஸ்லிம்களுக்கு 1.3 வீதமான காணிகளே உள்ளன. அதிகாரக் கெடுபிடிகள் மற்றும் அச்சுறுத்தல்களாலே இவர்களின்
காணிகள் அபகரிக்கப்பட்டன, கபடத்தனமாக பறிக்கப்பட்டன. மாகாண சபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படுவதற்கு முன்னர், அபகரிக்கப்பட்ட முஸ்லிம்களின் காணிகள் மீள ஒப்படைக்கப்படுவது அவசியம். மட்டுமல்ல காணிகளின் எல்லைப் பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டும்.
 
13 ஆவது திருத்தம் அமுல்படுத்தப்பட்ட பின்னரே வட,கிழக்கில் முஸ்லிம்கள் இனச்சுத்திகரிப்புக்கு உள்ளாகினர். கிழக்கில் காணிகள் அபகரிக்கப்பட்டன.
மட்டக்களப்பில், முஸ்லிம்களின் காணிகள் கபளீகரம் செய்யப்பட்டன. இதனால்தான்,13 ஆவது திருத்தத்துக்கு முஸ்லிம்கள் அஞ்சுகின்றனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இவ்விடயத்தில் கடைப்பிடிக்கும் மௌனமும் கலைக்கப்பட வேண்டும். இவ்வாறு அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் உங்களிடம் இருந்து வரும்  எண்டு தெரியும். உங்களுக்கு என்ன தேவையோ, அதை சிங்களவரிடம் நேரடியாக கேளுங்கோ.

அது தானே முறையானது. அதை விடுத்து, பிச்சைக்கு நிக்கிற வேறு ஒரு கோஸ்டியிடம், நீ என்ன பிச்சை கேட்கிறாய், அதில என் பங்கென்ன என்பது நியாயமா படவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, colomban said:
குறிப்பாக கிழக்கில் அபகரிக்கப்பட்ட முஸ்லிம்களின் காணிகளை, முஸ்லிம் பிரதேச செயலகங்களிடமோ அல்லது முஸ்லிம்களிடமோ ஒப்படைப்பது அவசியம். உதாரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலகங்கள் உள்ளன.அவற்றில் 04 முஸ்லிம் பிரதேச செயலங்களில் 27 வீதமாக உள்ள முஸ்லிம்களுக்கு 1.3 வீதமான காணிகளே உள்ளன. அதிகாரக் கெடுபிடிகள் மற்றும் அச்சுறுத்தல்களாலே இவர்களின்
காணிகள் அபகரிக்கப்பட்டன,

அதென்ன கொசுறு.. ரவுண்டா மொத்தமாக கேட்கலாமல்லொ..😢

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, Nathamuni said:

இதெல்லாம் உங்களிடம் இருந்து வரும்  எண்டு தெரியும். உங்களுக்கு என்ன தேவையோ, அதை சிங்களவரிடம் நேரடியாக கேளுங்கோ.

அது தானே முறையானது. அதை விடுத்து, பிச்சைக்கு நிக்கிற வேறு ஒரு கோஸ்டியிடம், நீ என்ன பிச்சை கேட்கிறாய், அதில என் பங்கென்ன என்பது நியாயமா படவில்லை.

இதை நேரடியாக இவர்களிடம் சொல்ல தமிழ்த் தலைமைகளுக்கு திராணி/வக்கு இருக்கா?

இப்பவும் பிட்டும் தேங்காப்பூவும் என்று அலம்புவார்கள். கேட்க விசர்தான் வரும்.

தமிழராக தமிழர் தாயகத்துக்குள் சகல அதிகாரங்களும் வழங்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. எடுத்துக்காட்டாக சமஷ்டி என்று வந்தால் அந்த அலகின் தலைவராக அல்லது முதல்வராக வருவதற்கு வடக்கு கிழக்கில் வாழும் எந்த ஒரு முஸ்லிமுக்கும் ஜன்நாயக வழியில் சகல உரிமையும் உண்டு.

 

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, வாலி said:

இதை நேரடியாக இவர்களிடம் சொல்ல தமிழ்த் தலைமைகளுக்கு திராணி/வக்கு இருக்கா?

இப்பவும் பிட்டும் தேங்காப்பூவும் என்று அலம்புவார்கள். கேட்க விசர்தான் வரும்.

தமிழராக தமிழர் தாயகத்துக்குள் சகல அதிகாரங்களும் வழங்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. எடுத்துக்காட்டாக சமஷ்டி என்று வந்தால் அந்த அலகின் தலைவராக அல்லது முதல்வராக வருவதற்கு வடக்கு கிழக்கில் வாழும் எந்த ஒரு முஸ்லிமுக்கும் ஜன்நாயக வழியில் சகல உரிமையும் உண்டு.

 

எல்லாம் சுயநலம் தான். கிழக்கு முதல்வராக இருந்து அனுபவித்தவர். ஒன்றாக இணைந்தால், அது கிடைக்காது.

தமிழ் பேசும் மக்களாக அரசியல் செய்து, வரலாம் என்ற நோக்கம் இல்லை.

மத ரீதியாக, சிந்தித்து, போகாத ஊருக்கு வழி கேட்க்கிறார். இன்றய உலக நியதியில், ஐஸ் குண்டும் இலங்கையில் வெடித்த பின்னர், இவர்களுக்கு தனி அலகு கிடைக்காது என்று தெரிந்து, தமிழர்களிடம், கதை விடுகிறார்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

இதெல்லாம் உங்களிடம் இருந்து வரும்  எண்டு தெரியும். உங்களுக்கு என்ன தேவையோ, அதை சிங்களவரிடம் நேரடியாக கேளுங்கோ.

அது தானே முறையானது. அதை விடுத்து, பிச்சைக்கு நிக்கிற வேறு ஒரு கோஸ்டியிடம், நீ என்ன பிச்சை கேட்கிறாய், அதில என் பங்கென்ன என்பது நியாயமா படவில்லை.

இது நிஞாயமான கேள்வி நாதம்.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, வாலி said:

இதை நேரடியாக இவர்களிடம் சொல்ல தமிழ்த் தலைமைகளுக்கு திராணி/வக்கு இருக்கா?

இப்பவும் பிட்டும் தேங்காப்பூவும் என்று அலம்புவார்கள். கேட்க விசர்தான் வரும்.

தமிழராக தமிழர் தாயகத்துக்குள் சகல அதிகாரங்களும் வழங்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. எடுத்துக்காட்டாக சமஷ்டி என்று வந்தால் அந்த அலகின் தலைவராக அல்லது முதல்வராக வருவதற்கு வடக்கு கிழக்கில் வாழும் எந்த ஒரு முஸ்லிமுக்கும் ஜன்நாயக வழியில் சகல உரிமையும் உண்டு.

 

அய்யா ஒருக்கா விட்டுக்கொடுத்த காக்காதான் இப்ப இந்தக் கதை கதைக்குது..அதுவின் ஆட்சியில் பறிச்ச காணீ கோவில் காணாதாம்..அதுதான் மிச்சம் பிடிக்கிறதுக்கு இப்பவும் அய்யாவின் வண்டியில் கை வைத்தபடி இருக்கிறார்( யாழில் உள்ள படம் பார்க்கவும்) சவூதி எண்ணெய் அமைச்சர் என்ரை கிளஸ்மேட்தான்.. இந்த எண்ணெய் கொண்டுவாறன் என்று போனவர் ..இன்னும் எண்ணெயைக் காணவில்லை..இப்ப பார்த்தால் தமிழரோடை உரிமைக்கு சண்டை பிடிக்கிறார்..காக்காவுக்கு அடுத்த தேர்தலில் சீற் வேணுமில்லே...பழைய கலர் போட்டோ கொப்பியோடை திரிவார் இனி..

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஒம்பத்தி தொண்ணூத்தி எட்டுக்கு ஒரே தொணதொணப்புத்தான். நொய் நொய் எண்டபடி.குள்ளநரியன் அள்ளிக் கொடுத்திருப்பான் கள்ளன் இவனுக்குப் பள்ளம் தோண்டச்சொல்லி.ஒருவன் இடையில் நுழைந்து பஞ்சாயத்தைக் குழப்பிவிட்டால் சரிதானே. அதுதான் நடக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம் அரசியல்வாதிகளால் பறிக்கப்பட்ட தமிழ் மக்களின் காணிகள், துரத்தியடிப்புகள் பற்றிய அவலங்களை  சற்று இப்போதைக்கு நிறுத்திவிட்டு (Park this issue temporarily for now)
உண்மையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள், அமைப்புகள், மக்களால் அங்கே வாழ்ந்த முஸ்லீம் மக்களின் காணிகள் அடாத்தாக பறிக்கப்பட்டுள்ளதா?

அல்லது அவர்களுக்கு கிடைக்கவேண்டிய ஞாயமான சரியான காணி பங்கீடுகள் நடந்தேறாமல் இருக்கிறதா?
இது பற்றி விபரங்கள் தெரிந்தவர்கள் யாரும் இங்கே பகிருவீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, colomban said:

13 ஆவது திருத்தம் அமுல்படுத்தப்பட்ட பின்னரே வட,கிழக்கில் முஸ்லிம்கள் இனச்சுத்திகரிப்புக்கு உள்ளாகினர்.

இது எப்போ நடந்தது?

11 hours ago, colomban said:

இதனால்தான்,13 ஆவது திருத்தத்துக்கு முஸ்லிம்கள் அஞ்சுகின்றனர்.

இனிமேற்தானா? இவர் எடுத்து விடுறதெல்லாம் மற்றவர்கள் நம்புவார்கள் என்று நினைக்கிறாரா?

11 hours ago, colomban said:

சிறுபான்மைச் சமூகங்கள் என்ற பொது அடையாளத்துக்குள் முஸ்லிம்களையும் உள்ளீர்க்கவே முயற்சிக்கப்படுகிறது.

அப்போ...... பெரும்பான்மையோடு இணையிறது, யார் இவர்களை இழுத்து பிடிச்சது? பொறுங்கோ! பொறுத்த நேரம் கக்கீம் இழுப்பார் கயிறு, அப்போ தலைகீழாய் வீழ்வது சம்பந்தரும், சுமந்திரனும், சாணக்கியனும் விழுகிற அதிர்வில இருந்து சம்பந்தர் மீண்டும் எழுந்திருக்கப்போவதில்லை.   

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.