Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கோட்டா – மஹிந்தவிற்கு கனடாவிற்குள் பிரவேசிக்க கடுமையான தடை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதியுடன் சந்திப்பு – விசேட அறிவிப்பை வெளியிடவுள்ளார் பிரதமர்?

கோட்டா – மஹிந்தவிற்கு கனடாவிற்குள் பிரவேசிக்க கடுமையான தடை!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சுனில் ரத்நாயக்க மற்றும் லெப்டினன்ட் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாரச்சி உள்ளிட்டவர்கள் கனடாவிற்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

1983 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரை இடம்பெற்ற சிவில் யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கனடாவின் வெளிவிவகார அமைச்சு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், கனடாவில் இவர்களுக்கு உள்ள அனைத்து சொத்துகளும் முடக்கப்படும் என்பதோடு அவர்கள் எந்த வகையிலும் நாட்டிற்குள் பிரவேசிக்க கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மனித உரிமை மீறல்களைச் செய்தவர்கள்  தொடர்ந்து தண்டனையில் இருந்து தப்பிப்பதை கனடா ஒருபோதும் ஏற்காது என்ற செய்தியை இந்தத் தடைகள் எடுத்து காட்டுவதாக கனடாவின் வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி குறிப்பிட்டுள்ளார்.

பொறுப்புக்கூறல் தொடர்பில் கனடா மற்றும் சர்வதேச சமூகம் தொடர்ந்து அழைப்பு விடுத்துள்ள போதிலும், இலங்கை அரசாங்கம் தனது மனித உரிமைக் கடமைகளை நிலைநிறுத்துவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியின் முன்னேற்றத்தையும், அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான வாய்ப்புகளையும் பாதிக்கிறது என்றும் கனடாவின் வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

ஆகவே இவ்வாறு பட்டியலிடப்பட்டுள்ள தனிநபர்கள் குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கனடாவிற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் கனடாவின் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

2000 ஆம் ஆண்டு மிருசுவிலில் எட்டு தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்ட சுனில் ரத்நாயக்கவை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொதுமன்னிப்பில் விடுதலை செய்திருந்தார்.

மேலும் திருகோணமலையில் உள்ள இலங்கை கடற்படை முகாமில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி கைது செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2023/1319645

  • கருத்துக்கள உறவுகள்

 இதை மற்றைய நாடுகளும் பின்பற்ற வேண்டும். அதோடு இவர்களை பூசி மெழுகி வக்காலத்து வாங்குபவர்களையும் தடுத்தீர்கள் என்றால் இன்னும் நன்மை பயக்கும். ம் ... இனிமேல் கைக்கூலிக்கு மாரடிப்பவர்களும் குறையும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்க் கட்சிகளுக்கும் ஏதாவது ஒரு தீர்வுக்கு ஒத்துழைக்குமாறு கடுமையான அழுத்தங்கள் வரலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் நாமலின் பெயரில் அதிக சொத்து உள்ளதாக கேள்வி.

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, nunavilan said:

கனடாவில் நாமலின் பெயரில் அதிக சொத்து உள்ளதாக கேள்வி.

இலங்கை அரசியல்வாதிகளின் கறுப்புப்பணத்தில் அரப்பங்கிற்கும் மேல் கனடாவில்தான் உள்ளது. இதில் முஸ்லிம் +சில தமிழ் அரசியல் ஆயுததாரிகளின் பணமும் உள்ளடக்கம். 

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

இலங்கை அரசியல்வாதிகளின் கறுப்புப்பணத்தில் அரப்பங்கிற்கும் மேல் கனடாவில்தான் உள்ளது. இதில் முஸ்லிம் +சில தமிழ் அரசியல் ஆயுததாரிகளின் பணமும் உள்ளடக்கம். 

 

கபிதன் நான் இங்கே தான் நிற்க்கிறேன்.  .....பட்டியலை வெளியீடுகள் போய்ப்பார்ப்போம்....😎 நான் நிற்கும் போது கனடா இந்த செயலை செய்தது மிக. மகிழ்ச்சியாகவிருக்கிறது    வாழ்த்துக்கள் 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, satan said:

 இதை மற்றைய நாடுகளும் பின்பற்ற வேண்டும். அதோடு இவர்களை பூசி மெழுகி வக்காலத்து வாங்குபவர்களையும் தடுத்தீர்கள் என்றால் இன்னும் நன்மை பயக்கும். ம் ... இனிமேல் கைக்கூலிக்கு மாரடிப்பவர்களும் குறையும்.

விடுதலைப்புலிகளை எப்படி தடை செய்தார்களோ அதே போல் இவர்களையும் எல்லா நாடுகளிலும் தடை செய்வார்களா?

எது எப்படியோ இதெல்லாம் ஒரு கண்துடைப்பு நடவடிக்கையாகவே நான் பார்க்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

மஹிந்த, கோட்டாபய ராஜபக்ஷ  கனடாவுக்குள் நுழையத் தடை

ராஜபக்ஸ

பட மூலாதாரம்,GETTY IMAGES

7 மணி நேரங்களுக்கு முன்னர்

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றங்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக மறுத்து வருகின்ற நிலையில், ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட யுத்தத்தில் ஈடுபட்ட தரப்பினர் மீது சர்வதேச சமூகம் குற்றச்சாட்டுக்களை தொடர்ந்தும் முன்வைத்து வருகின்றது.

இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதிகளும், சகோதரர்களுமான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய உள்ளிட்ட நால்வருக்கு தமது நாட்டிற்குள் பிரவேசிக்க கனடா தடை விதித்துள்ளது.

கனடா அரசாங்கத்தின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் இந்த விடயத்தை , அந்த நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு மேலதிகமாக பணியாளர் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க மற்றும் லெப்டினன் கமான்டர் சந்தன பிரசாத் ஹெட்டிஆராய்ச்சி ஆகியோருக்கும் கனடா அரசாங்கம் தடை விதித்துள்ளது.

 

1983-ஆம் ஆண்டு முதல் 2009-ஆம் ஆண்டு வரையான காலம் வரை இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தில் திட்டமிட்டு, மனித உரிமை மீறிமீறப்பட்டதால், இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அரசாங்கத்தின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நபர்களுக்கு கனடாவில் காணப்படும் அனைத்து சொத்துக்களும் தடை செய்யப்படுவதுடன், குறித்த நபர்களுக்கு எந்தவொரு விதத்திலும் தமது நாட்டிற்குள் பிரவேசிக்க முடியாது எனவும் அந்த நாட்டு அரசாங்கம் கூறியுள்ளது.

குறித்த நபர்கள் தமது சொத்துக்கள் தொடர்பாக எந்தவொரு நடவடிக்கைகளில் ஈடுபடுவதையோ அல்லது நிதி வழங்குவதையோ கனடா மற்றும் கனடாவிற்கு வெளியிலுள்ள கனேடியர்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

கடந்த நான்கு தசாப்த ஆயுத போரினால், பொருளாதாரம், அரசியல் ஸ்திரமற்ற நிலைமை மற்றும் மனித உரிமை பாரியளவில் மீறப்பட்டமை காரணமாக, இலங்கை மக்கள் பாரிய பிரச்னைகளை எதிர்நோக்கியுள்ளதாக கனடா வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி தெரிவித்துள்ளார்.

கோட்டாபய

பட மூலாதாரம்,GETTY IMAGES

''இலங்கையில் சமாதானம், நல்லிணக்கம், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை அடைவதில் கனடா உறுதியாக உள்ளது. சர்வதேச சட்டத்தை மீறுவோருக்கு எதிராக சர்வதேச தண்டனைகளை வழங்க கனடா இன்று தீர்மானமிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதன் மூலம் சமாதானமான செழிப்பான இலங்கைக்கு ஆதரவளிக்க கனடா தயாராக உள்ளது." என கனடா வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார்.

இதன்படி, 2023-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6-ஆம் தேதி முதல் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தில் லட்சக்கணக்கான உயிர்கள் காவு கொள்ளப்பட்டதாகவும், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்ததாகவும் தமிழர் தரப்பினர் கூறி வருகின்றனர்.

அத்துடன், ஆயிரக்கணக்கான தமிழர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டதாக கூறி, வடக்கில் இன்றும் தொடர் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையில், தமக்கான நீதியை உள்நாட்டில் எதிர்பார்க்க முடியாது எனவும், சர்வதேச நாடுகள் தமக்கான நீதியை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும் எனவும் வடக்கு மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இவ்வாறான நிலையில், கனடா இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

கோட்டாபய

பட மூலாதாரம்,GETTY IMAGES

ராஜபக்ஷ தரப்பின் பதில்

இந்த விடயம் தொடர்பில் ராஜபக்ஷ தரப்பின் பதிலை பெற்றுக்கொள்வதற்காக பிபிசி தமிழ், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிரத்தியேக செயலாளர் சுதேஷ்வர பண்டாரவை தொடர்புக்கொண்டு வினவியது.

தாம் இந்த விடயம் தொடர்பில் அறியவில்லை என அவர் பதிலளித்தார்.

https://www.bbc.com/tamil/articles/c1980eymkddo

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

விடுதலைப்புலிகளை எப்படி தடை செய்தார்களோ அதே போல் இவர்களையும் எல்லா நாடுகளிலும் தடை செய்வார்களா?

விடுதலைப்புலிகளை தடுப்பதற்கு அன்று ஒரு கதிர்காமர் ஓய்வின்றி உழைத்தார். சிங்களம் செய்தது சரியானதே என்று நிறுவவும் அவர்களை தடுப்பு பட்டியலில் இணைக்காமல் தடுப்பதற்கு சின்னக்கதிர்காமர் இன்று  உழைக்கிறார் எப்படி முடியும்? தடுப்புகள் கண்டிப்புகள் எல்லாம் ஆளாளுக்கு ஏற்றமாதிரியே மிதமாகவும் அதிகமாகவும் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

கனேடிய பிரதமர் அலுவலகத்தின் வற்புறுத்தலின் பேரில் ராஜபக்ஷக்களுக்கு தடை

ஜனாதிபதியுடன் சந்திப்பு – விசேட அறிவிப்பை வெளியிடவுள்ளார் பிரதமர்?

கனேடிய பிரதமர் அலுவலகத்தின் வற்புறுத்தலின் பேரில் இரண்டு முன்னாள் ஜனாதிபதிகளின் பெயர்கள் தடைபட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மனித உரிமை மீறல்களில் சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமல்ல, அதற்கு தலைமை வகித்தவர்களும் இணைக்கப்பட வேண்டும் என கனேடிய பிரதமர் அலுவலகம் கருதுகின்றது.

போரின் போது மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களுக்காக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள் மஹிந்த மற்றும் கோட்டாபய ராஜபக்சவுக்கு கனடா பயணத் தடை விதித்திருந்தது.

இதேவேளை கனடாவில் உள்ள புலம்பெயர் தமிழர்களின் அழுத்தம் காரணமாக பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன என உயர்ஸ்தானிகர் ஹர்ஷ நவரத்ன குற்றம் சாட்டியுள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கோரிக்கையை அவர் பின்பற்றவில்லை என்பதனாலேயே இந்த நிலைமைக்கு வழிவகுத்தது என்றும் கூறியுள்ளார்.

 

https://athavannews.com/2023/1320226

 

  • கருத்துக்கள உறவுகள்
On 11/1/2023 at 21:54, nunavilan said:

கனடாவில் நாமலின் பெயரில் அதிக சொத்து உள்ளதாக கேள்வி.

அதுதான் இல்லாத விடுதலைப்புலிகளை சொல்லி புலம்புகிறார் நாமல், விடுதலைப்புலிகளுக்கு ஓடியோடி தடை விதித்ததை மறந்து.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.