Jump to content

பான் கீ மூன் இலங்கை வருகிறார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பான் கீ மூன் இலங்கை வருகிறார்

By T. SARANYA

28 JAN, 2023 | 01:37 PM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதி திங்கட்கிழமை இலங்கை வரவுள்ளார்.

 ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில் இலங்கை வரும் பான் கீ மூன்,  காலநிலை மாற்றம் மற்றும் நிலைப்பேர் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான ஒப்பந்தங்களில் கைச்சாத்திட உள்ளார்.

தென் கொரிய அரசின் உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனத்தின் தலைவரான பான் கீ மூன் கால நிலை மாற்றம் மற்றும் பசுமை அபிவிருத்தி திட்டங்களில் இலங்கையுடன் ஒன்றிணைந்து செயற்படவுள்ளதுடன் அவரது வருகையின்  பின்னர் பல பசுமை பொருளாதார அபிவிருத்தி திட்டங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதாக காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேயவர்தன தெரிவித்தார்.

மேலும் இலங்கையில் ஸ்தாபிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காலநிலை மாற்றம் தொடர்பான பல்கலைக்கழகம் குறித்து பான் கீ மூன் தனது விஜயத்தின் போது அரசாங்கத்துடன் கலந்துரையாடவுள்ளார். இருதரப்பு கூட்டாண்மையின் கீழ் காலநிலை மாற்றம் தொடர்பான பல்கலைக்கழகம் முன்னெடுப்பது குறித்தும் அவதானம் செலுத்தப்பட உள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை 7 ஆம் திகதி  செவ்வாய்க்கிழமை சந்தித்து பான் கீ மூன் கலந்துரையாட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/146919

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலம் போன சரக்குகள், தங்கள் பதவிக்காலத்தில் கடமையை சரிவர செய்ய துப்பில்லாமல், ஓர் இனத்தின் அழிவை எழுதியவர்கள் மீண்டும் ஏதோ நாசகார வேலைக்கு ஒன்று   கூடி ஓட முயற்சிக்கிறார்கள் போலுள்ளது! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, satan said:

காலம் போன சரக்குகள், தங்கள் பதவிக்காலத்தில் கடமையை சரிவர செய்ய துப்பில்லாமல், ஓர் இனத்தின் அழிவை எழுதியவர்கள் மீண்டும் ஏதோ நாசகார வேலைக்கு ஒன்று   கூடி ஓட முயற்சிக்கிறார்கள் போலுள்ளது! 

பகிடி என்ன என்றால் இவரும் ,எறிக் சொல்கையும் சுற்றுசூழல் என்ற ஒரே முத்திரையை குத்திக்கொண்டு சிறிலங்காவுக்கு வருகினம்.....ஏன்?

Link to comment
Share on other sites

4 hours ago, ஏராளன் said:
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில் இலங்கை வரும் பான் கீ மூன்,  காலநிலை மாற்றம் மற்றும் நிலைப்பேர் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான ஒப்பந்தங்களில் கைச்சாத்திட உள்ளார்.

 

இதே காரணத்துக்காகத்தான் எரிக் சொல்ஹெமும் ரணிலால் இலங்கைக்கு அழைக்கப்பட்டிருந்தார். இத்தனை பிரச்ச்னை இருக்க காலநிலை மாற்ற அபிவிருத்தியில் முக்கிய புள்ளிகள் நுளைவதால் ரணிலிடம் ஏதோ திட்டம் உள்ளது.

48 minutes ago, putthan said:

பகிடி என்ன என்றால் இவரும் ,எறிக் சொல்கையும் சுற்றுசூழல் என்ற ஒரே முத்திரையை குத்திக்கொண்டு சிறிலங்காவுக்கு வருகினம்.....ஏன்?

ஆகா இதையேதான் புத்தனும் எழுதியுள்ளார், வாசிக்கவில்லை.

மீண்டும் நல்வரவு புத்தன் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னெண்டாலும் மலிஞ்சால் சந்தைக்கு வரும் தானே....:beaming_face_with_smiling_eyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேச்சுவார்த்தை என அதிரடி ஒருபக்கம், இவர்களின் சம்பந்தமில்லாத திடீர் வருகை மறுபக்கம், ஏதோ பீதியை கிளப்புது. விட்டுவைச்ச மிச்சம் மீதியையும் இல்லாமற் செய்யவோ கூட்டி அழைக்கிறார் நரியார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல் வந்தவர் மசாலாத் தோசை கிடைக்க வில்லையென்று போட்டாராக்கும்....நரிக்கும் தன் வயதுகாரர் வந்தால்தானே பொழுது போகும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சுகம் என்ன சுகம் உன்னிடம் .......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை வருகிறார் பான் கீ மூன்

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

உலக பசுமை வளர்ச்சி நிறுவனத்தின் தலைவராகவுள்ள பான் கீ மூன், எதிர்வரும் 06 ஆம் திகதி நாட்டிற்கு வருகை தரவுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பிற்கிணங்க நாட்டிற்கு வருகை தரும் பான் கீ மூன், பல்வேறு உடன்படிக்கைகளிலும் கைச்சாத்திடவுள்ளார்.

இலங்கையின் நிலையான அபிவிருத்தி மற்றும் காலநிலை மாற்றத்துடன் தொடர்புடைய உடன்படிக்கைகள் இதன்போது கைச்சாத்திடப்படவுள்ளன.

பான் கீ மூன் நாட்டிற்கு விஜயம் மேற்கொள்ளும் காலப்பகுதியில், வௌிவிவகார அமைச்சு மற்றும் உலக பசுமை வளர்ச்சி நிறுவனம் ஆகியன உடன்படிக்கையில் கைச்சாத்திடவுள்ளதுடன், இரு தரப்பு பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுக்கவுள்ளதாக ஜனாதிபதியின் காலநிலை மாற்றம் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் ருவான் விஜேவர்தனவை மேற்கோள்காட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஸ்தாபிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ள “காலநிலை மாற்ற பல்கலைக்கழகம்” தொடர்பான பேச்சுவார்த்தைகளிலும் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் கலந்துகொள்வாரென எதிர்பார்க்கப்படுகின்றது.

 

 

http://www.samakalam.com/இலங்கை-வருகிறார்-பான்-கீ/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Veteran Indian diplomat Vijay Nambiar gives a yoga lesson to UN Secretary-General Ban Ki-moon in New Delhi in January

 

இனப்படுகொலையாளிகளைக் கண்டிக்க மறுத்து, நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த இன்னொரு கோடரிக்காம்பு. இனக்கொலை முடிந்த பின்னர் வதை முகாம்களில் அடைக்கப்பட்ட மக்களைப் பார்க்கவென்று சுற்றுலா வந்தவன். 

தான் செயலாளர் நாயகமாக வந்தபொழுது தனது பால்ய நண்பனான விஜய் நம்பியாரை தனது செயலாளராக அமர்த்தியவன். இந்த விஜய் நம்பியாரின் சகோதரான சதீஷ் நம்பியாரே இலங்கை ராணுவத்தின் ஆலோசகராக  இனக்கொலை யுத்த காலத்தில் பணியாற்றியவன். உயர் பாதுகாப்பு வலயங்கள் இவனது ஆலோசனையின்படியே பல இடங்களில் அமைக்கப்பட்டன. பேச்சுவார்த்தை குழம்பிய விடயங்களில் இவனது உயர் பாதுகாப்பு வலயங்களும் உள்ளடக்கம்.

வெள்ளைக்கொடி விவகாரத்தில் நம்பியார்களின் கைவரிசை பரவலாகப் பேசப்பட்டது. 

பா கீ மூனை கைக்குள் போட்டுக்கொண்டு இந்த இரு நம்பியார்களும் இனக்கொலை யுத்தத்திற்கான ஆயத்தங்களையும், யுத்தத்தின்போதான சதிகளையும் இந்தியா சார்பில் செய்தார்கள்.

பா கீ மூன் வடக்குக் கிழக்கிற்கு வந்தால் நிச்சயம் எமது எதிர்ப்பினை இந்தக் கோடரிக் காம்பிற்குக் காட்ட வேண்டும்.

 

https://www.tamilnet.com/art.html?catid=13&artid=8291

https://www.tamilnet.com/art.html?catid=79&artid=33259

https://www.tamilnet.com/art.html?catid=79&artid=35889

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை வந்தார் பான் கீ மூன் !

By T. Saranya

06 Feb, 2023 | 10:06 AM
image

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் மூன், இலங்கைக்கான விஜயம் மேற்கொண்டு இன்று (பெப் 06) அதிகாலை நாட்டை வந்தடைந்தார்.

IMG-20230206-WA0001.jpg

பான் கீ மூன், அவரது பாரியார் உள்ளிட்ட உட்பட நான்கு பேர் கொண்ட தூதுக்குழுவினர் இன்று திங்கட்கிழமை அதிகாலை 2 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இந்தக் குழுவினர் சிங்கப்பூரில் இருந்து UL-309 ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமானம்  மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய உள்ளிட்ட குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த பான் கீ மூன் உள்ளிட்ட குழுவினரை வரவேற்றனர்.

IMG-20230206-WA0003.jpg

 

 


 

https://www.virakesari.lk/article/147488

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மஹிந்தவுக்கு சொல்லுங்கள் மூன்: ஞாபகமூட்டினார் மனோ

 image_e1aca54ccb.jpg

இலங்கை வந்துள்ள முன்னாள் ஐநா செயலாளர் பாங்கி-மூன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கட்டாயம் சந்தித்து, தான் கடைசியாக போர் முடிந்த  சில நாட்களில் இலங்கை வந்து, தமிழினம் எதிர்கொண்ட போரழிவுகளை பார்த்து விட்டு, ஊர் திரும்பும் போது அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுகள் நடத்தி, இருவரும் சேர்ந்து வெளியிட்ட கூட்டறிக்கையை ஞாபகப்படுத்த வேண்டுமென   தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.   

மே 24, 2009 அன்று வெளியிடப்பட்ட அந்த கூட்டறிக்கையில் அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,  தான் தமிழ் கட்சிகளுடன் பேச்சு நடத்தி 13ஐ அமுல் செய்து, அதை மென்மேலும் மேம்படுத்த (13+) உடன்படுவதாகவும், அதேபோல் சர்வதேச மனித உரிமை நியமங்களை ஏற்று இலங்கையில் கடை பிடிப்பதாகவும் உலக மன்றமான ஐநாவுக்கு, அதன் பிரதான நிறைவேற்று அதிகாரியான  ஐநா செயலாளர் பாங்கி-மூன்,  என்ற தனக்கு  உறுதி அளித்ததை, இன்றைய அரசின் பிரதான கட்சியான பொதுஜன முன்னணியின் அதிகாரபூர்வ தலைவரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், அவரது எம்பிகளுக்கும், இவர்களின் பின்னால் இன்னமும் நிற்கும் சில பெளத்த பிக்குகளுக்கும் ஞாபகப்படுத்த வேண்டுமென கோரியுள்ளார்.

மனோ கணேசன் எம்பி மேலும் கூறியதாவது,

இன்று, பொறுப்பை நிறைவேற்றாத தவறுகை செய்து, குற்றவாளி கூண்டில் நிற்பது அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மட்டுமல்ல. ஒட்டு மொத்த ஐ.நா அமைப்பும் என நான் நம்புகிறேன். இவர்கள் அனைவரும் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட வேண்டும்.

பாங்கி-மூன் – மஹிந்த கூட்டறிக்கையில், கையெழுத்து இட்ட ஒரு தரப்பு வார்த்தை  தவறுமானால், அடுத்த தரப்பு அதை தட்டிக்கேட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் பெயர்தான் கூட்டறிக்கை. ஆனால், அதை ஐ.நா செய்யவில்லை. அது மட்டுமல்ல, போர் நிகழ்ந்த போது, வன்னியில் இருந்த ஐ.நா அலுவலகத்தை இலங்கை அரசு சொன்னது, என்பதற்காக மூடி விட்டு நாட்டை விட்டு வெளியேறிய அன்றைய ஐ.நாவின் முடிவுக்கு முன்னாள் ஐ.நா செயலாளர் இந்த பாங்கி-மூன் பொறுப்பேற்க வேண்டும்.

அதனால்தான், இலங்கையின் இறுதி யுத்தம், சாட்சியமில்லா யுத்தமாக நிகழ்ந்தது.  இன்று போர் முடிந்து ஏறக்குறைய 14ம் ஆண்டுகள் ஓடுகின்றன. முன்னாள் ஐ.நா செயலாளர் இலங்கை போர் தொடர்பில் அன்று  உலக மாமன்றமான ஐ.நா சபை விட்ட  தவறை இன்றாவது  ஏற்றுக்கொள்ள வேண்டும். இன்று அவர் அதிகாரத்தில் இல்லாவிட்டாலும் கூட அவர் அதை பற்றி பேச வேண்டும்.  அது உலக அளவில் எடுபடும். அன்று  இலங்கை யுத்தம் தொடர்பாக ஐ.நா விட்ட  தவறு தொடர்பில் அன்றே ஐ.நா சபைக்குள் ஒரு உள்ளக அறிக்கை தயார் செய்யப்பட்டதை நான் அறிவேன். அது பற்றி, முன்னாள் ஐ.நா செயலாளர் பாங்கி-மூன் இனியாவது பகிரங்கமாக பேச வேண்டும். இலங்கையின் ஊடகவியலார்கள் பாங்கி-மூனை கண்டு இது பற்றி கேள்வி எழுப்ப வேண்டும்.  

இலங்கை வந்துள்ள முன்னாள் ஐநா செயலாளர் பாங்கி-மூன், சந்திக்கும் நபர்களின் நிகழ்ச்சி நிரலில் நான் இல்லை. நான் அவரை கண்டால் இதை அவர் முகத்துக்கே சொல்லி கேட்க  விரும்புகிறேன்.

 

 

https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/மஹிந்தவுக்கு-சொல்லுங்கள்-மூன்-ஞாபகமூட்டினார்-மனோ/150-311942

  • Like 1
Link to comment
Share on other sites

6 hours ago, கிருபன் said:

இலங்கை வந்துள்ள முன்னாள் ஐநா செயலாளர் பாங்கி-மூன், சந்திக்கும் நபர்களின் நிகழ்ச்சி நிரலில் நான் இல்லை. நான் அவரை கண்டால் இதை அவர் முகத்துக்கே சொல்லி கேட்க  விரும்புகிறேன்.

அவரின் நிகழ்ச்சி நிரல் நரி ரனிலுடன் தான். அவரின் கூட்டணிக்குள் நீங்கள் அடங்க மாட்டீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பான் கீ மூன் - ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கிடையில் நாளை சந்திப்பு

By T. SARANYA

06 FEB, 2023 | 04:58 PM
image

(எம்.மனோசித்ரா)

ஊத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இன்று திங்கட்கிழமை நாட்டை வந்தடைந்தார். அவர் நாளை செவ்வாய்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்கவுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பான் கீ மூன்,  காலநிலை மாற்றம் மற்றும் நிலைப்பேர் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான ஒப்பந்தங்களில் கைச்சாத்திட உள்ளார்.

தென் கொரிய அரசின் உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனத்தின் தலைவரான பான் கீ மூன் கால நிலை மாற்றம் மற்றும் பசுமை அபிவிருத்தி திட்டங்களில் இலங்கையுடன் ஒன்றிணைந்து செயற்படவுள்ளதுடன் அவரது வருகையின்  பின்னர் பல பசுமை பொருளாதார அபிவிருத்தி திட்டங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதாக காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேயவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கையில் ஸ்தாபிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காலநிலை மாற்றம் தொடர்பான பல்கலைக்கழகம் குறித்து பான் கீ மூன் அரசாங்கத்துடன் கலந்துரையாடவுள்ளார். 

இருதரப்பு கூட்டாண்மையின் கீழ் காலநிலை மாற்றம் தொடர்பான பல்கலைக்கழகம் முன்னெடுப்பது குறித்தும் அவதானம் செலுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/147558

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரணில்விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தின் கீழ் இலங்கையில் ஜனநாயகத்தை ஏற்படுத்த முடியும் -பான்கீ மூன்

By Rajeeban

07 Feb, 2023 | 11:37 AM
image

இலங்கை ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவின் புத்திசாலித்தனமான தலைமைத்துவத்தின் கீழ் இலங்கையில் ஜனநாயகத்தை ஏற்படுத்த முடியும் என நம்பிக்கை கொண்டுள்ளதாக ஐக்கியநாடுகளின் முன்னாள் செயலாளர் நாயகம் பான்கீ மூன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்

ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தின் கீழ் இலங்கை ஜனநாயகத்தையும் பேண்தகு பொருளாதார அபிவிருத்தியையும் அடைவதற்கான சாத்தியம் உள்ளது என கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவின் தலைமையில் நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்ல முடியும் என நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 

https://www.virakesari.lk/article/147595

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2050 இல் பசுமை பொருளாதாரத்தை உறுதி செய்ய செயற்திட்டத்தை ஆரம்பித்தது இலங்கை - ஜனாதிபதி

By NANTHINI

07 FEB, 2023 | 02:50 PM
image

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் பசுமை  பொருளாதாரத்தை ஸ்தாபிப்பதற்கான விசேட ஆற்றல் இலங்கைக்கு உண்டு என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

2050ஆம் ஆண்டளவில் உலகத்தை மிகச் சிறந்த நிலைக்கு மேம்படுத்துவதற்கும் பசுமை பொருளாதாரத்தை உறுதி செய்வதற்கும் என இயற்கைக்கேற்ப நம்மை தயார்ப்படுத்தும் திட்டம் மற்றும் தேசிய சுற்றுச்சூழல் செயற்திட்டம் ஆகியவற்றை இலங்கை அரசாங்கம் தயாரித்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

பசுமை வளர்ச்சிப் பாதையை நோக்கி இலங்கையின் மாற்றத்தை ஊக்குவிப்பதற்கான உத்திகள் மற்றும் வழிமுறைகள் தொடர்பிலான உயர்மட்ட நிகழ்வு நேற்று திங்கட்கிழமை (6) முற்பகல் கொழும்பு ஹில்டன் கிராண்ட் போல்ரூமில் நடைபெற்றது.

DSC_1047.jpg

இந்நிகழ்வை சுற்றாடல் அமைச்சும் உலகளாவிய பசுமை வளர்ச்சிக்கான நிறுவனமும் (GGGI) ஏற்பாடு செய்திருந்தன.

காலநிலை மாற்றம் தொடர்பிலான புதிய சட்டமூலம் தயாரிக்கப்படவுள்ள அதேவேளை காடுகளை மறுசீரமைத்தல் மற்றும் மீட்டல் ஆகிய விடயங்களை உள்வாங்கும் வகையில் பழைய சுற்றுச்சூழல் சட்டத்தை ஈடு செய்யும் வகையிலான புதிய சட்டமூலமொன்று தயாரிக்கப்படவுள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும், இப்பிராந்தியத்தில் உள்ள தமது உடைமைகளை உயிரியல் கட்டமைப்புகளாக அடையாளம் கண்ட முதல் நாடாக இலங்கையே இருக்கும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நக்கிள்ஸ் மலைத்தொடர், ஹோர்ட்டன் சமவெளி, சிவனொளிபாத மலை, சிங்கராச வனம், மகாவலி ஆறு, ராமர் பாலம் என்பன அவ்வாறு அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது:

DSC_1146.jpg

உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனத்துடன் நாளை ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதானது, பசுமை பொருளாதாரத்தை நிலை நிறுத்தல் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பிலான இலக்குகளை அடைதல் ஆகிய செயற்பாடுகளை நோக்கிய எமது நகர்வுகளின் முதற்படியாக அமையும்.

இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்காக இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் எட்டாவது செயலாளர் நாயகமும் பொதுச் சபையின் தலைவரும் உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவன (GGGI) சபையின் தலைவருமான பான் கி மூன் அவர்களை வரவேற்கின்றேன். 

இலங்கையில் முதல் தடவையாக நல்லிணக்கத்துக்கு வழிவகுத்த வரலாற்றுச் சிறப்புமிக்க இரண்டு ஒப்பந்தங்களில் பான் கி மூன் சம்பந்தப்பட்டுள்ளார்.

DSC_1093.jpg

காலநிலை மாற்றம் மற்றும் அது தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நாம் கவலையடைந்துள்ளோம். இதுவரை நடந்தவை திருப்திகரமாக இல்லை. அத்துடன் கடந்த மாநாட்டில் நாங்கள் விரும்பிய முடிவுகள் எட்டப்படவில்லை.

குறைந்த வருமானம் பெறும் நாடுகளும் நடுத்தர வருமானம் பெறும் நாடுகளும் போதுமான நிதி வசதி இல்லாமையினால், வாழ்க்கைத் தரத்தை பராமரிக்க வேண்டிய அதேநேரம் பொருளாதார அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்வதற்கும் முயற்சிக்கின்றன. 

எனவே, அபிவிருத்தியடைந்த நாடுகள் தமது நிதியுதவியை இரட்டிப்பாக்குவதன் மூலம் தாம் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டுமென இத்தகைய நாடுகள் எதிர்பார்க்கின்றன.

இவ்வருடம் சில அபிவிருத்தியடைந்த நாடுகள் பொருளாதார நெருக்கடியை சந்தித்திருப்பதாக நான் அறிந்துள்ளேன். 

எவ்வாறாயினும், அதற்கான இலக்குகள் முன்னர் நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை.

DSC_1176.jpg

எனவே, நாம் இந்த இலக்குகளை எவ்வாறு அடையப்போகிறோம் மற்றும் அதற்கு தேவையான உதவிகள் எவை என்பன தொடர்பிலும் நாம் முழுமையான அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். 

அத்துடன் எமது நாட்டின் பொறுப்பில் இல்லாத காபன் உமிழ்வுகளுக்காகவும் அபிவிருத்தியடைந்த நாடுகள் நட்டஈடு வழங்க வேண்டும்.

மூன்றாவது விடயம், நாம் எவ்வாறு இழப்புகள் மற்றம் சேதங்களை அடையாளப்படுத்துவது என்பதாகும்.

அபிவிருத்தியடைந்த நாடுகளை அதிக பணம் செலவழிக்குமாறோ அல்லது மேலும் அபிவிருத்திகளை முன்னெடுக்குமாறோ கேட்கும் விடயம் இதுவல்ல. 

நாம் ஒரு பட்டியலின் அடிப்படையில் பணியாற்றுவோம். அவசியமான பணத்தை கணக்கிட்டு, பின்னர் அதனை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பது குறித்து பார்ப்போம். 

அவர்களின் பங்களிப்பு இருக்க வேண்டும், அதேபோல நமது பங்களிப்பும் இருக்க வேண்டும். ஆனால், நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை ஒப்புக்கொள்வோம். 

கடந்த கோப் 26 கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்கள் இதுவரை நிறைவேற்றப்படாமை கவலையளிக்கிறது. 

DSC_1130.jpg

கிளாஸ்கோ மிகச் சிறந்த திருப்புமுனையாகும். பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜொன்சனினால் எடுக்கப்பட்ட முயற்சிகள் முக்கியமானவை. எனினும், அவை பின்தொடரப்படவில்லை. அந்த இலக்குகள் எட்டப்பட்டுள்ளதை நாம் உறுதி செய்ய வேண்டும். எமது இலக்குகள் மற்றும் கோரிக்கைகளை நாம் சுட்டிக்காட்ட வேண்டும். 

இலங்கையானது  2030ஆம் ஆண்டாகும்போது காபன் உமிழ்வை 14.5 சதவீதத்தாலும், அதன் பின்னர் அதனை விடவும் குறைப்பதற்கான செயன்முறையை பின்பற்றி வருகிறது.  

காலநிலை மாற்றம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கிணைப்பதற்காக நாம் ஜனாதிபதி செயலகத்தின் கீழ் காலநிலை மாற்றம் தொடர்பான அலுவலகமொன்றை உருவாக்கவுள்ளோம்.

பின்னர், இயற்கைக்கு ஏற்ப எம்மை தயார்ப்படுத்தும் திட்டம் மற்றும் தேசிய சுற்றுச்சூழல் செயற்திட்டம் ஆகியவற்றையும் தயாரித்துள்ளோம்.

2050க்குள் பசுமை பொருளாதாரம் மற்றும் சிறந்த உலகத்தை உறுதி செய்வதற்காக இவை அனைத்தும் எங்கள் அரசாங்கத்தால் முன்முயற்சியாக எடுக்கப்படுகின்றன. 

காபன் நடுநிலைமையை பேணுவதற்காக 2050ஆம் ஆண்டாகும்போது காபன் உமிழ்வை சூனியமாக்குவதற்கான திட்டங்களையும் நாம் முன்னெடுத்து வருகிறோம். 

நிலக்கரி மூலமான ஆற்றலை நாம் மேலும் அதிகரிக்கப்போவதில்லை.

படிம எரிபொருள் மானியங்களை நாம் படிப்படியாக நீக்குவோம். ஏற்கனவே நாம் அதனை நடைமுறைப்படுத்தியுள்ளோம். இவ்வாறு அதனை படிப்படியாக நீக்குவதற்காக நாம் எதிர்தரப்பினரின் தாக்குதலுக்கும் ஆளாகியுள்ளோம். 

DSC_1174.jpg

2030ஆம் ஆண்டளவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலமான 70 சதவீத மின் உற்பத்தியை நாம் இலக்கு வைத்துள்ளோம்.

இந்த காலகட்டத்துக்குள் நாம் பல முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றோம். முதலாவதாக, காலநிலை மாற்றம் தொடர்பிலான அலுவலகத்துடன் இணைந்து செயற்படக்கூடிய ஒரு புதிய காலநிலை மாற்றம் குறித்த சட்டம் உருவாக்கப்படும்.

அடுத்து, 1980ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட சுற்றுச்சூழல் சட்டத்துக்கு ஈடாக புதிய சட்டமொன்று உருவாக்கப்படும். இது காடுகளை மறுசீரமைப்பது மற்றும் மீட்பது ஆகிய விடயங்களை உள்ளடக்கியதாக இருக்கும்.

அதனை தொடர்ந்து எமது சில சொத்துக்களில் உள்ள உயிரியல் கட்டமைப்புகளை அடையாளம் காண்பது மற்றும் நக்கிள்ஸ் மலைத்தொடர், ஹோர்ட்டன் சமவெளி, சிவனொளிபாத மலை, சிங்கராஜ வனம், மகாவலி ஆறு, ராமர் பாலம் என்பன உயிரியல் கட்டமைப்புகளாக அடையாளம் காணப்படுவது போன்றவை  இப்பிராந்தியத்திலேயே மேற்கொள்ளப்படும் முதலாவது விடயமாக அமையும்.

இறுதியாக, சர்வதேச காலநிலை மாற்றம் தொடர்பிலான பல்கலைக்கழகமொன்றினை நிறுவுவதை கூறலாம்.  

இதனை நாம் பட்டப்பின் படிப்புக்கான பல்கலைக்கழகமாக நிறுவ வேண்டும். அதில்,  இந்து சமுத்திரத்தின் அனைத்து பிராந்தியங்களையும் சேர்ந்த அதிகாரிகளுக்கும், ஆபிரிக்காவை சேர்ந்தவர்களுக்கும் காலநிலை மாற்றம் தொடர்பிலான இலக்குகளை அடைவதற்கும் ஒரு புதிய காலநிலை மாற்றம் மற்றும் புதிய பசுமை பொருளாதாரம் ஆகிய விடயங்கள் குறித்த பயிற்சிகளை அளிப்பதன் மூலம் உலகை காலநிலைக்கேற்ப  தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும்.

DSC_1086.jpg

நாம் தற்போது பசுமை பொருளாதாரத்துக்காக போராடுகிறோம். அதனை நோக்கியே நாம் செல்ல வேண்டும். 

விசேடமாக, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொடர்பான திறன் எம்மிடம் இருப்பதை நாம் கண்டறிந்துள்ளோம். 

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் எம்மிடமுள்ள புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் பசுமை ஐதரசன் ஆகியவற்றை நாம் மதிப்பிட ஆரம்பித்துள்ளோம். எம்மிடம் 30 ஜிகா வாட் மேலதிக திறன் இருப்பதாக சிலர் கூறுகின்றனர். இன்னும் சிலர் 40 என்றும், 50 என்றும் கூறுகின்றனர்.

ஆனால், எம்மிடம் சரியான மதிப்பீட்டளவொன்று இருக்க வேண்டும். அதனையே ஆசிய அபிவிருத்தி வங்கி முன்னெடுத்து வருகிறது. 

எனவே, இந்த பிராந்தியத்தில் முதலீடு செய்ய நாங்கள் ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளோம். இது நாம் முன்னேறக்கூடிய இன்னுமொரு பகுதியாகும்.

எமது பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு நாம் புதிய தொழில்நுட்பத்தை பார்க்கிறோம். எனினும், நிச்சயமாக நாம் படிம எரிபொருளுடன் தொடர்புகொள்ள மாட்டோம். அத்துடன் விவசாயத்தை நவீனமயமாக்க தொழில்நுட்ப கைத்தொழில் அடிப்படையிலான  புதிய உற்பத்தி மற்றும் சேவைக் கைத்தொழில்களை பெற்றுக்கொள்வது தொடர்பிலும் நாம் கவனம் செலுத்தியுள்ளோம்.

இவற்றை அடிப்படையாகக் கொண்டே நாம் பசுமை பொருளாதாரத்தை நோக்கி நகர்கிறோம். இதில் நாம் சில சிக்கல்களை சந்திக்கப்போகிறோம். அதில் ஒன்றே திறன் குறைபாடு.

மேலும், சர்வதேச நிதியுதவிக்கான சிறந்த அணுகலும் எமக்கு தேவை. நாங்கள் கடனை நிதி ரீதியாகவும் வடிவமைக்க முடியும். 

பசுமை நிதிக் கருவியை பயன்படுத்துவதன் மூலம் தற்போதைய கடன் சுமையை குறைக்க முடியும். எமது உள்நாட்டுக் கொள்கை காலநிலை செழுமைத் திட்டத்துக்கு ஏற்றதாக இருக்கும். 

இலங்கை பின்பற்ற விரும்பும் பாதை இதுவாகும். அத்துடன் இதனை அடைய GGGI எமக்கு உதவும் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. 

நாளை கைச்சாத்திடப்படும் ஒப்பந்தமே நாம் மேற்கொள்ளவுள்ள மேற்படி செயற்பாடுகளுக்கான முதற்படியாக அமையும் என ஜனாதிபதி ரணில் கூறினார்.

DSC_0956.jpg

மேலும், இந்த நிகழ்வில் ஐ.நா.வின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கி மூன் கருத்துரையில், 

தனது இறுதி வருகைக்குப் பின்னர் கடந்த ஆறரை ஆண்டுகளுக்குள் இங்கு இடம்பெற்றுள்ள மாற்றங்களை தன்னால் உணர முடிந்துள்ளதாகவும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையின் கீழ் நாட்டில் ஜனநாயகம் மற்றும் நிலைபேண்தகு பொருளாதார அபிவிருத்தி ஆகியவற்றை அடைய முடியும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக கூறினார்.

மேலும், இந்நிகழ்வில் சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட், 2050ஆம் ஆண்டில் இலங்கை பசுமை பொருளாதாரம் தொடர்பில் அடையவுள்ள இலக்குகள் குறித்து கட்டம் கட்டமாக விளக்கமளித்தார்.

சுற்றாடல் அமைச்சின் செயலாளர் டொக்டர் அனில் ஜாசிங்க மற்றும் GGGIயின் நிகழ்ச்சித் தலைவரும் ஆசிய பிராந்தியத்தின் பணிப்பாளருமான கலாநிதி. அச்சலா அபேசிங்க ஆகியோரும் இந்நிகழ்வில் உரையாற்றினர்.

இலங்கைக்கான கொரிய தூதுவர் சந்துஷ் டபிள்யூ. ஜியொங், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, காலநிலை மாற்றம் தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜயவர்தன ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

https://www.virakesari.lk/article/147596

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவைச் சந்தித்தார் பான் கீ மூன்

By DIGITAL DESK 5

08 FEB, 2023 | 09:08 PM
image

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகமும், உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனத்தின் தலைவருமான பான் கீ மூன், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை புதன்கிழமை (08) பாராளுமன்றத்தில் சந்தித்தார்.

பாராளுமன்றத்துக்கு வருகை தந்த பான் கீ மூனை, பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க ஆகியோர் வரவேற்றனர்.

Ban_Ki-Moon_visit_20230207__18_.jpeg

உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனத்தின் தலைவர் என்ற ரீதியில் பான் கி மூன், பசுமை அபிவிருத்தி, நிலைபேறான அபிவிருத்தி தொடர்பில் கவனம் செலுத்தியிருந்ததுடன், கார்பன் வெளியீட்டைக் குறைத்து நிலைபேறான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பப் புதிய கூட்டாண்மைகளை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டினார்.

அரசியலில் கொள்கைகள் வகுக்கப்படும்போது பசுமை வளர்ச்சிக்கான மாதிரியொன்று அடையாளம் காணப்பட வேண்டும் என்றும், அதற்குத் தேவையான குரல் பாராளுமன்றத்தின் ஊடாக எழுப்பப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Ban_Ki-Moon_visit_20230207__10_.jpeg

இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் துறையுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மத்தியில் விரிவான விளிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தைக் சுட்டிக்காட்டிய சபாநாயகர், இந்த இலக்கை அடைவதற்குத் தான் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் உறுதியளித்தார்.

இந்தச் சந்திப்பினைத் தொடர்ந்து பான் கி மூன், இலங்கைக்கான தென்கொரியத் தூதுவர் வூன்ஜின் ஜியோங் மற்றும் GGGI இன் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஃபிராங்க் ரிஜ்ஸ்பெர்மேன் உள்ளிட்ட தூதுக் குழுவினர் பாராளுமன்ற சபா மண்டபத்தைப் பார்வையிட்டனர்.

இச்சந்திப்பில் பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் கௌரவ அஜித் ராஜபக்ஷ, சுற்றாடல் அமைச்சர் கௌரவ நசீர் அஹமட், ஜனாதிபதியின் பிரதான ஆலோசகர் தினேஷ் வீரகொடி, பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.

https://www.virakesari.lk/article/147741

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 26 APR, 2024 | 07:19 PM   கிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர்களுக்கென சகல வசதிகளும் கொண்ட புதிய கட்டடத் தொகுதி இன்று (26) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திருகோணமலையில் திறந்துவைக்கப்பட்டு, அரச உத்தியோகத்தர்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.  இந்த கட்டடம் செந்தில் தொண்டமானின் 241 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.  கிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர்கள் தங்களின் பணிகளை உரிய முறையில் முன்னெடுக்க தங்களுக்கு போதுமான இட வசதிகள் இல்லை எனவும், தங்களுக்கு தளபாட வசதிகளுடன் கூடியதொரு கட்டடத்தொகுதியை கட்டமைக்கும் பணிகள் பொருளாதார நெருக்கடியால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால்  அக்கட்டடத்தை நிர்மாணித்துத் தருமாறு  ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் கோரிக்கை முன்வைத்திருந்தனர். அக்கோரிக்கையின் பிரகாரம், ஆளுநர் செந்தில் தொண்டமானின் நிதி ஒதுக்கீட்டில் இந்த கட்டடம் நிர்மாணிக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது.  https://www.virakesari.lk/article/182051
    • 26 APR, 2024 | 05:13 PM     சுமார் 300 பேரைப் பலியெடுத்து மேலும் 500க்கும் அதிகமானவர்களை படுகாயங்களுக்குள்ளாக்கிய அனர்த்தமிகு ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் ஐந்தாவது வருட நினைவுகூரலை கடந்த ஏப்ரல் 21இல் இலங்கை அனுஷ்டித்தது. நீடித்து நிற்கும் அதன் விளைவுகளை நாம் மனதிற்கொள்ள வேண்டியது அவசியமாகும். வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் ஏற்பட்ட வீழ்ச்சியின் விளைவான பொருளாதார தாக்கங்கள் நாட்டை தொடர்ந்து அச்சுறுத்திக்கொண்டேயிருக்கின்றன. மக்கள் இன்று பெரும் பொருளாதாரச் சவால்களுக்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.  மக்களின் அக்கறைக்குரியவையாக இருக்கும் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லாததன் விளைவாக அரசாங்க தலைமைத்துவத்தின் மீதான நம்பிக்கை சிதைவடைந்திருப்பது குறித்து தேசிய சமாதானப் பேரவை கவலையடைகிறது.  இந்த நிலைமை துரதிர்ஷ்டவசமாக ஆட்சி முறைமையின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விரக்தியடையவும் மேலும் அநீதிகளுக்கும்  வழிவகுத்திருக்கிறது.  உத்தியோகபூர்வமான பல விசாரணைகள் நடத்தப்பட்ட போதிலும், ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கு வழிவகுத்த நிகழ்வுகள் தொடர்பிலான கேள்விகள் தொடரவே செய்கின்றன. பொறுப்பற்ற முறையில் தங்களது கடமையை செய்யத் தவறியவர்களில் சிலர் அதற்கான விளைவுகளைச் சந்தித்தபோதிலும், மூடிமறைப்புகள் இடம்பெற்றிருக்கின்றன என்ற உணர்வு மக்கள் மத்தியில் தொடரவே செய்கிறது. தகவல்கள் மறைத்து வைக்கப்பட்டதாக வெளிவருகின்ற கதைகள் உண்மையைக் கண்டறிவதற்கு புதிய உறுதிப்பாட்டுக்கான தேவையை மேலும் வலியுறுத்துகின்றன.  அடுத்தடுத்து பதவிக்கு வந்த இலங்கை அரசாங்கங்கள் உண்மையை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தவறியதன் காரணமாகவே ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை சான்றுகளைச் சேகரிக்கும் அதன் பிரிவை தொடர்ந்து செயற்படுத்தவேண்டும் என்ற நிலைப்பாடு நியாயப்படுத்தப்படுகிறது. ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில் பலியானவர்களை புனிதர்களாக அல்லது தியாகிகளாக திருநிலைப்படுத்துவதற்கு நாட்டின் கத்தோலிக்க திருச்சபை மேற்கொள்கின்ற முயற்சியின் நோக்கம் படுகொலைகள் பற்றிய நினைவை தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் உயிர்த்துடிப்புடன் வைத்திருப்பதேயாகும். இதற்கு சர்வதேச முன்னுதாரணங்கள் இருக்கின்றன. 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் நிகழ்வுகளை நாம் சிந்தித்துப் பார்க்கின்றபோது இலங்கையின் வரலாற்றை கறைபடுத்திய வன்செயல் மற்றும் அநீதியின் பரந்த பின்புலத்தையும் புரிந்துகொள்ள வேண்டும். 1989ஆம் ஆண்டில் உச்சநிலைக்குச் சென்ற ஜே.வி.பி.யின் கிளர்ச்சி தொடக்கம் 2009 மே மாதம் கொடூரமான முறையில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட உள்நாட்டுப்போர் வரை மோதல்களினதும் வன்முறைகளினதும் காயங்கள் ஆழமானவையாக இருக்கின்றன. நல்லிணக்கத்துக்கான எமது தேடலில் எமது கடந்த காலத்தின் வேதனைமிகு உண்மைகளுக்கு முகங்கொடுத்து நீதி, பொறுப்புக்கூறல் மற்றும்  குணப்படுத்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தை கட்டியெழுப்பப் பாடுபடவேண்டும். முன்னோக்கிச் செல்ல வேண்டுமானால், நீதிக்கான தேடுதல் பக்கச்சார்பான நலன்களையும் தேர்தல் ஆணைகளையும் கடந்தவையாக இருக்கவேண்டியது அவசியமாகும். எதிர்வரும் தேர்தல்களும் அரசாங்க மாற்றமும் பொறுப்புக்கூறல் மற்றும்  நல்லிணக்கத்தை நோக்கிய முயற்சிகளுக்கு புதுச்சக்தியை கொடுப்பதற்கான ஒரு வாய்ப்பை வழங்குகிறது. தற்போதைய அரசாங்கத்தின் தலைமைத்துவமும் எதிர்கால அரசாங்கத்தின் தலைமைத்துவமும் சுயநலன்களின் நெருக்குதல்களில் இருந்து விடுபட்டு நீதிக்கும் வெளிப்படைத்தன்மைக்குமான தேடலுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும். https://www.virakesari.lk/article/182046
    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 05:02 PM   கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலைப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (26) கண்ணிவெடி அகற்றலின் போது மனித எச்சங்களுடன் கூடிய ஆடை ஒன்றும்  இனங்காணப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.  தொடர்ந்து பொலிசார் மாவட்ட நீதவானின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் இஸ்மாத் ஜெமில் இன்று காலை சம்பவ இடத்திற்கு சென்று குறித்த மனித எச்சங்கள் மற்றும் மனித எச்சம் இனங்காணப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். தொடர்ந்து குறித்த பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் மூலம் கண்ணிவெடி அகற்றும் பணியை முன்னெடுக்குமாறும், கிடைக்கப் பெறுகின்ற எச்சங்கள் மற்றும் தடயங்கள் தொடர்பாக பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு  கொண்டு செல்லுமாறும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கிடைக்கப்பெற்ற மனித எச்சங்களை சட்ட வைத்திய அதிகாரி மூலம் பரிசோதனைக்கு உட்படுத்த அனுப்பி வைக்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.  இது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை சம்பவ இடத்தினை மீண்டும் சென்று பார்வையிடுவதாகவும் நீதவான் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/182042
    • ஐபிஎல் 2024: பேட்ஸ்மேன்களின் காட்டடியால் கலங்கும் பந்துவீச்சாளர்கள் - டி20இல் நிகழும் மாற்றங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இங்கிலாந்து அணியின் ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் ஜோஸ் பட்லர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக மூன்று இன்னிங்ஸ்களில் இரண்டு சதங்கள் அடித்துள்ளார். கட்டுரை தகவல் எழுதியவர், அயாஸ் மேமன் பதவி, கிரிக்கெட் எழுத்தாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் உலகின் பணக்கார கிரிக்கெட் போட்டியான இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) இந்த ஆண்டு பேட்டிங்கில் அபாரமான வாண வேடிக்கையைப் பார்க்க முடிகிறது. நாடு முழுவதும் உள்ள மைதானங்களில், பேட்ஸ்மேன்கள் எச்சரிக்கையைக் காற்றில் பறக்க விடுகிறார்கள். இரக்கமின்றி பெரிய ஷாட்களை அடிக்கிறார்கள், கிட்டத்தட்ட ஒவ்வொரு போட்டியையும் சிக்ஸர் அடிக்கும் திருவிழாவாக மாற்றுகிறார்கள். இதனால், பந்துவீச்சாளர்கள் வெலவெலத்துப் போயுள்ளனர். டி20 கிரிக்கெட் எங்கே போய்க்கொண்டிருக்கிறது என நிபுணர்களும், ரசிகர்களும் குழம்பிப் போயுள்ளனர். நாம் இதுவரை பார்த்த அதிரடி பேட்டிங்கின் சில புள்ளிவிவரங்களைப் பார்ப்போம். செவ்வாய்க்கிழமை இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னெள சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான சீசனின் 39வது போட்டிக்குப் பிறகு, மொத்தம் 1,191 பவுண்டரிகள் மற்றும் 686 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன. ஐபிஎல் 2023இல் மொத்தம் 2,174 பவுண்டரிகள் மற்றும் 1,124 சிக்ஸர்கள் பதிவு செய்யப்பட்டன. நடப்பு சீசன் பாதிக்கு மேல் எஞ்சியுள்ள நிலையில் கடந்த ஆண்டின் புள்ளிவிவரங்கள் எளிதில் முறியடிக்கப்படும் என்று எதிர்பார்ப்பது நியாயமானதே. பவுண்டரிகள், சிக்ஸர்கள் அதிகரித்திருப்பது அணியின் ஸ்கோரையும் அதற்கேற்ப உயர்த்தியுள்ளது.   எளிதில் முறியடிக்கப்படும் சாதனைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டி20 வரலாற்றில் அதிக பவர்பிளே ஸ்கோரை பதிவு செய்ய டிராவிஸ் ஹெட் உதவினார். ஆரம்பக்கால ஐபிஎல் சீசன்களில், 150-160 ரன் என்பது சவால் கொடுக்கும் ஸ்கோராக கருதப்பட்டது. ஆனால் இன்று பெரும்பாலும் 10 போட்டிகளில் 8இல் இது போன்ற ஸ்கோர் அடித்த அணிகள் தோல்வியடைகின்றன. ஸ்கோரிங் முறைகளில் ஏற்பட்ட மாற்றத்தை விளக்குவதற்கு இந்த உதாரணத்தைப் பார்ப்போம். 2007ஆம் ஆண்டு தொடக்க டி20 உலகக் கோப்பையில் ஸ்டூவர்ட் பிராட் பந்தில் யுவராஜ் சிங் ஆறு சிக்ஸர்களை விளாசினார். அப்போது இந்தியா மொத்தம் 218 ரன்கள் எடுத்தது. அந்த நேரத்தில் இது ஒரு பெரிய சாதனை. இருப்பினும் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அணி 200 ரன்கள் அடிப்பது என்பது வாடிக்கையாகிவிட்டது. செவ்வாய்க்கிழமை வரை இந்த ஐபிஎல் சீசனில் நடந்து முடிந்துள்ள 39 ஆட்டங்களில் அணிகள் 19 முறை 200 ரன்களை கடந்துள்ளன. மொத்த ஸ்கோர் ஒன்பது முறை 400 ரன்களை தாண்டியது. வியக்க வைக்கும் வகையில் இரண்டு போட்டிகளில் இரு அணிகளின் மொத்த ஸ்கோர் 500 ரன்களை தாண்டியுள்ளது. சுவராஸ்யமான தகவல்கள் இன்னும் முடியவில்லை. இந்த சீசனில் சராசரி ரன் விகிதம் ஓவருக்கு 10. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சீசனின் தொடக்கத்தில் இருந்தே சாதனைகளை முறியடிக்கும் ஓவர் டிரைவில் உள்ளனர். டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான முதல் பவர்பிளேவில் (ஆறு ஓவர்கள்) முன் எப்போதும் இல்லாத வகையில் 125 ரன்களை குவித்தனர். இது ஒரு ஓவருக்கு 20.83 ரன்கள் என்ற வியக்க வைக்கும் சாதனை. இந்த சீசனில் சன்ரைசர்ஸ் அணி, மூன்று முறை 250 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிராக 287 ரன்கள் எடுத்ததும் இதில் அடங்கும். இதுவொரு ஐபிஎல் சாதனை. இந்தப் போக்கு தொடருமானால் இந்த சீசனிலேயே 300 ரன்கள் என்ற சாதனை படைக்கப்படலாம். டி20 கிரிக்கெட், இயல்பிலேயே அதிரடி ஆட்டத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. பேட்டிங்கிற்கு நிலையான ஸ்ட்ரோக் ஆட்டம் தேவைப்படுகிறது. அங்கு ஒரு டாட் பால்கூட ஏற்றுக்கொள்ள முடியாதது. பேட்ஸ்மேன்கள் ஒவ்வொரு பந்திலும் அதிகபட்ச ரன் எடுக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆகவே மட்டையை வீச தடையற்ற சுதந்திரம் வழங்கப்படுகிறது. இந்த உத்தியால் ஆபத்துகள் இருந்தாலும், பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களால் உந்தப்பட்ட ரன் குவிப்பு இந்த சீசனில் ஒரு விதிவிலக்காகவே உள்ளது.   இத்தகைய அதிரடி பேட்டிங்கிற்கு காரணம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் வீரர் அஷூதோஷ் ஷர்மா 28 பந்துகளில் 61 ரன்கள் குவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். எளிதான ஆடுகளங்கள் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. உலகமெங்கும் ஒயிட்-பால் கிரிக்கெட், ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20க்கான ஆடுகளங்கள் எளிதாக விளையாடக் கூடியதாகவே தயார் செய்யப்படுகின்றன. டி20 கண்கவர் ஆக்‌ஷன் வாக்குறுதியைக் கொண்டிருப்பதால், ரசிகர்கள், ஒளிபரப்பாளர்கள் மற்றும் ஸ்பான்சர்களுக்கு அதிரடி ஷாட்கள் முக்கிய அம்சமாகிவிட்டன. இதற்காகவே எல்லா ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. மற்ற டி20 லீக்குகளை போல் அல்லாமல் ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு உகந்ததாக இருப்பதை ஐபிஎல் உறுதி செய்கிறது. இருப்பினும் ஃப்ளாட் பிட்சுகள் மட்டுமே பந்துவீச்சாளர்கள் எதிர்கொள்ளும் ஒரே தடை அல்ல. பேட்டர்கள் தற்போது நல்ல உடல் தகுதியுடனும், நல்ல வலுவுடனும், சாகசங்களுக்குத் துணிந்தவர்களாகவும் உள்ளனர். குறிப்பாக இளம் வீரர்கள் தங்கள் ஆரம்ப ஆண்டுகளிலேயே டி20இல் இழுக்கப்படுகின்றனர். அவர்கள் அதிக ரிஸ்குகளை எடுக்கின்றனர். போட்டிகளில் வெற்றிபெற, அற்புதமான சாதனைகளைப் படைக்க முயற்சி செய்கிறார்கள். போட்டியை எதிர்த்து சமாளிக்கவும், அதிக அங்கீகாரம் மற்றும் வெகுமதிக்காகவும் அவர்கள் இதைச் செய்கின்றனர். சில விதிமுறை மாற்றங்களும் பந்து வீச்சாளர்களின் முக்கியத்துவத்தைக் குறைப்பதில் பங்களித்துள்ளன. உதாரணமாக இந்த ஐபிஎல் சீசனில் இம்பாக்ட் சப்ஸ்டிட்யூட் அறிமுகமாகியுள்ளது. சரியான நேரத்தில் ஒரு குறிப்பிட்ட வீரரைக் கொண்டு வருவதற்கு பயிற்சியாளர்கள் மற்றும் கேப்டன்களுக்கு இது வாய்ப்பளித்துள்ளது. சூழலுக்கு ஏற்ப ஆட்டத்தை மாற்றிக்கொள்ள இதுவொரு சுவாரஸ்யமான வாய்ப்பைக் கொடுக்கிறது. மேலும் ஒரு பந்து வீச்சாளரைக்கூட இம்பாக்ட் சப்ஸ்டிட்யூட்டாக கொண்டு வர முடியும். ஆனால் இதுவரையிலான போக்கு பேட்டிங் வீரர்களுக்கு சாதகமாகவே உள்ளது. கிரிக்கெட் ஒரு பேட்டரின் விளையாட்டு என்று சொல்லப்படுகிறது. ஆனால், மட்டைக்கும் பந்துக்கும் இடையே அதிகரித்து வரும் இந்த இடைவெளி டி20க்கு நல்லதா என்பதுதான் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் நடக்கும் பரபரப்பான விவாதம். இந்தச் சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பேட்டிங் ஜாம்பவானுமான சுனில் கவாஸ்கர் பந்துவீச்சாளர்களுக்கு ஆதரவு அளித்துள்ளார். "இது இந்த அளவுக்கு ஒருதலைப்பட்சமாக இருந்தால் அது போட்டியின் மீதான ஆர்வத்தைக் குறைத்துவிடும்," என்று அவர் கூறுகிறார்.   பந்துவீச்சாளர்களுக்கு சவாலான நிலை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆண்ட்ரே ரசல் அடிக்கும் ஒரு ஷாட். வழக்கமான 75 கெஜத்தில் இருந்து 65 அல்லது அதற்கும் குறைவாக பவுண்டரி தூரம் குறைக்கப்பட்டது கவாஸ்கரின் கோபத்திற்கு முக்கிய காரணம். "ஒரு பந்து வீச்சாளர் தன் பந்து மூலம் பேட்ஸ்மேனை தவறு செய்யத் தூண்டுகிறார். ஆனால் பவுண்டரி தூரம் குறைக்கப்பட்டதால் அது பந்துவீச்சாளருக்கு எதிராகிவிடுகிறது. கேட்ச் ஆக மாற வேண்டிய பந்து சிக்ஸருக்கு சென்றுவிடுகிறது,” என்று அவர் கடுப்புடன் கூறினார். நவீன பேட்டுகளின் வல்லமை காரணமாகத் தவறாக அடிக்கப்படும் ஷாட்டுகளில்கூட பந்து கணிசமான தூரம் பயணிக்கிறது. இது கவாஸ்கரின் கவலையை நியாயப்படுத்துகிறது. முன்னாள் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன், பந்து வீச்சாளர்களின் திறமை மற்றும் மனோபாவத்திற்கு சவால் விடும் சூழ்நிலையாக இதைப் பார்க்கிறார். "பௌலர்கள் நான்கு ஓவர்களில் ஹீரோக்களாக மாறுவதற்கான வாய்ப்பும் ஊக்கமும் உள்ளது" என்கிறார் ஸ்டெய்ன். டி20 ஆட்டத்தின் மனநிலை மரபுவழியில் இருந்து வியத்தகு முறையில் மாறியுள்ளது. இந்த மாற்றம் தொடர்கிறது. எனவே கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் என்று அனைவருமே ஆற்றல்மிக்கவர்களாக, செயல்திறன் கொண்டவர்களாக, ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஆனால் கோல்ஃப் மற்றும் பேஸ்பாலின் சங்கமம் போல டி20 கிரிக்கெட் மாறாமல் இருக்க, பேட் மற்றும் பந்தின் சமநிலை பராமரிக்கப்பட வேண்டும். https://www.bbc.com/tamil/articles/c1038g85e13o
    • டி.ஆர்.பாலுவை விமர்சித்த யூடியூபர் குடும்பத்துக்கு மிரட்டல் என குற்றச்சாட்டு - திமுக தரப்பு விளக்கம் என்ன? பட மூலாதாரம்,சிவராமகிருஷ்ணன் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஸ்ரீபெரும்புதூர் திமுக நிர்வாகி ராமலிங்கத்தின் மகன் சிவராமகிருஷ்ணன் ஜப்பானில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். தனது சொந்த ஊரான ஸ்ரீபெரும்புதூரில், திமுக எம்.பி. டி.ஆர்.பாலு வளர்ச்சித் திட்டங்கள் எதையும் நடைமுறைப்படுத்தவில்லை எனக் குற்றம் சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனால் அவருடைய குடும்பத்தாருக்கு திமுகவினரே‌ மிரட்டல் விடுப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், ஸ்ரீபெரும்புதூர் நகர செயலாளர் சதீஷ் பிபிசி தமிழிடம் பேசியபோது, இந்த விவகாரம் குறித்துத் தனக்கு எதுவும் தெரியாது என்றும் சிவராமகிருஷ்ணனின் தந்தை ராமலிங்கத்துடன் தனக்கு நெருங்கிய பழக்கமே கிடையாது எனவும் விளக்கம் அளித்தார். என்ன நடந்தது? ஜப்பானில் பணியாற்றும் சிவராமகிருஷ்ணன் ஜப்பான் தமிழ் ப்ரோஸ் என்ற யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்.‌ அதில் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர், “அனைவரும் ஸ்ரீபெரும்புதூர் பிரம்மாண்டமாக வளர்ந்திருப்பதாக நினைக்கிறார்கள். வளர்ந்துள்ளது என்றால் என்ன‌ பொருள்? வேலை வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால், மக்களுக்குத் தரமான வாழ்க்கை இருக்கிறதா? இத்தனை பேர் வாழும் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு பூங்கா கிடையாது. சாலை போட இந்த அரசுக்குத் தெரியுமா? பத்து ஆண்டுகளாகப் பல நூறு கோடி செலவு செய்து பாதாள சாக்கடை கட்டப்பட்டு வருகிறது. அது செயல்முறைக்கு வரும்போதுதான், அந்தத் திட்டம் எப்படி இருக்கிறது என்று தெரியும். (டி.ஆர்‌.பாலு) ஸ்ரீபெரும்புதூரில் என்ன செய்து விட்டார் என்று இரண்டாவது முறையாக அவருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரியவில்லை,” என்று பேசியிருந்தார். அவர் 3 லட்சம் பின் தொடர்பவர்கள் கொண்ட தனது யூ டியூப் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டார்.   பட மூலாதாரம்,திமுக ஸ்ரீபெரும்புதூர் வார்டு அவைத்தலைவர் ராமலிங்கம் இந்த வீடியோவை வெளியிட்டதற்காக திமுக நகரச் செயலாளரும், ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சித் தலைவர் சாந்தியின் கணவருமான சதீஷ் தன்னை மிரட்டியதாக, ஸ்ரீபெரும்புதூர் இரண்டாவது வார்டு அவைத் தலைவராக உள்ள ராமலிங்கம் கூறுகிறார். இந்த விவகாரம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், “கடந்த 12 ஆண்டுகளாக பாதாள சாக்கடைப் பணிகள் நடைபெறுகின்றன. நானும் என் மனைவியும் ஒருமுறை தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து பலத்த காயமடைந்தோம். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, என் மகன் ரூ.8 லட்சம் சிகிச்சைக்காக செலவு செய்தான். பள்ளிக் குழந்தைகள், பொதுமக்கள் எனப் பலரும் அதில் விழுகிறார்கள்," என்று கூறினார். மேலும், அந்த ஆதங்கத்தில் தனது மகன் வீடியோவை வெளியிட்டதாகவும் அதற்காக தாம் கட்டிக் கொண்டிருக்கும் வீட்டை இடித்துவிடுவதாக சதீஷ் மிரட்டியதாகவும் கூறினார். பட மூலாதாரம்,YOUTUBE நான்கு நாட்கள் முன்பு “DMK Sriperumbudur MP டி.ஆர் பாலு UPகள் மிரட்டல்” என்று மற்றொரு வீடியோவை வெளியிட்டிருந்தார். முதல் வீடியோவில் தாம் பேசியதற்காக ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி நகர திமுக செயலாளர் சதீஷ் தனது தந்தையை மிரட்டியதாக அதில் கூறியிருந்தார். அந்த வீடியோவில், “ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் என்ன பிரச்னைகள் இருக்கின்றன என்பது இந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலுவின் காதுகளுக்கு எட்ட வேண்டும் என்றுதான் காணொளி வெளியிட்டிருந்தேன். அதற்காக எனது தந்தையை மிரட்டியுள்ளனர். நான் காணொளி வழியாக வெளிப்படுத்திய பிரச்னைகளை வருங்காலத்தில் நிவர்த்தி செய்வோம் என்று கூறியிருக்கலாம். ஆனால் அதை விட்டு, மிரட்டுவது எந்த விதத்தில் நியாயம்? இப்போது என்னை சீண்டிவிட்டார்கள், நான் சும்மா விடமாட்டேன்," எனப் பேசியுள்ளார். மேலும், "ஸ்ரீபெரும்புதூர் பஞ்சாயத்து கடந்த மூன்று ஆண்டுகளில் முறைகேடுகளைச் செய்துள்ளனர். இதுவரை என்னென்ன திட்டங்கள், எவ்வளவு செலவு செய்துள்ளனர் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் முழு தகவல்களையும் வெளியே கொண்டு வரப் போகிறேன். நான் எந்தக் கட்சி சார்பாகவும் பேசவில்லை. பெரிய கட்சிகள் என்று கூறுகிறார்கள், அவர்களின் முகத் திரைகள் கிழிக்கப்பட வேண்டும். நான் என்ன திமுகவுக்கு எதிரியா? நாளை பாஜக, அதிமுக, நாம் தமிழர் என யார் ஆட்சிக்கு வந்தாலும் கேள்வி கேட்கும் சாதாரண மனிதன். பெரிய தலைவர்கள் தங்களுக்குக் கீழ் உள்ளவர்களுக்குக் கடிவாளம் போடத் தவறுவதால்தான் திமுக மீது இவ்வளவு அவபெயர் ஏற்படுகிறது. அதிமுக ஆட்சியில் இருந்தபோதும் லஞ்சம் ஊழல் இருந்தது. ஆனால் அது மக்களை நேரடியாகப் பாதிக்கவில்லை. ஆனால், இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, கல், மண், ஜல்லி என எதைத் தொட்டாலும் லஞ்சம்,” என்று அந்த வீடியோவில் பேசியிருந்தார்.   பட மூலாதாரம்,YOUTUBE மேலும் அதே வீடியோவில் தனது தந்தை வீடியோ கால் மூலம் தன்னிடம் பேசியதை வெளியிட்டிருந்தார் சிவராமகிருஷ்ணன். அதில், “செயலாளர் சதீஷ் என்னை அழைத்து, 'எப்படி உன் மகன் இப்படி வீடியோ போடலாம், நீ எப்படி வீட்டு வரி, குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு வாங்குவாய் எனப் பார்க்கிறேன். அனைத்துக்கும் என்னிடம்தான் வர வேண்டும், எப்படி வாங்குகிறாய் எனப் பார்க்கிறேன்' என்று கூறியதாக" ராமலிங்கம் பேசியிருந்தார். திமுக உட்பட எந்தக் கட்சியில்தான் இல்லை என்று கூறிய சிவராமகிருஷ்ணன் பிபிசி தமிழிடம் பேசியபோது, “ஸ்ரீபெரும்புதூரில் பல சுற்றுச்சூழல் பாதிப்புகள் உள்ளன. அங்குள்ள நெடுஞ்சாலையை நான்குவழிச் சாலையிலிருந்து ஆறு வழிச் சாலையாக மாற்றும் திட்டம் நடைபெறுகிறது. வயலுக்குச் செல்ல நாங்கள் இந்த நெடுஞ்சாலையைக் கடந்து செல்ல வேண்டும். எனவே ஒரு மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை கட்டித் தருமாறு கேட்டோம். அதை இன்னும் செய்யவில்லை. நான் காணொளியில் கூறியது என் கருத்து. ஆனால், எனது அப்பாவை மிரட்டியுள்ளனர். எங்களுக்கு நான்கு வீடுகள் உள்ளன. அதில் ஒன்றில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கான குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புகள் கிடைக்காது என்றும், வீடுகளை இடித்து விடுவோம் என்றும் தொடர்ந்து பலரது முன்னிலையில் அவதூறாகப் பேசியுள்ளனர். இதனால் எனது தந்தை மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார்,” என்றார் சிவராமகிருஷ்ணன்.   பிபிசி தமிழிடம் பேசிய ஸ்ரீபெரும்புதூர் நகர செயலாளர் சதீஷ், “இந்த விவகாரம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது, நண்பர்கள் கூறித்தான் அந்த வீடியோவையே பார்த்தேன். ராமலிங்கம் கட்சி உறுப்பினர்தான். இதே பகுதியில், செல்வபெருமாள் தெருவில்தான் வசிக்கிறார். ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்தார். வாக்குப்பதிவு நாளில் அவரை நான் பார்த்தபோது 'வாக்குப்பதிவு நன்றாக போய்க் கொண்டிருக்கிறது' என்று கூறினார். அவருடன் எனக்கு நெருங்கிய பழக்கமே கிடையாது. அவர் நிலத்தில் அவர் வீடு கட்டினால் நான் என்ன செய்து தடுக்க முடியும்?” என்று விளக்கம் அளித்தார். https://www.bbc.com/tamil/articles/cw8qd458jjgo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.