Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எம்.எச்.17 விமானத்தை வீழ்த்திய ஏவுகணையை புடின் வழங்கியிருக்கலாம்: சர்வதேச புலனாய்வாளர்கள் தகவல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எம்.எச்.17 விமானத்தை வீழ்த்திய ஏவுகணையை புடின் வழங்கியிருக்கலாம்: சர்வதேச புலனாய்வாளர்கள் தகவல்!

எம்.எச்.17 விமானத்தை வீழ்த்திய ஏவுகணையை புடின் வழங்கியிருக்கலாம்: சர்வதேச புலனாய்வாளர்கள் தகவல்!

கடந்த 2014ஆம் ஆண்டு எம்.எச்.17 விமானத்தை வீழ்த்திய ஏவுகணையை வழங்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் முடிவு செய்ததற்கான வலுவான அறிகுறிகள் இருப்பதாக சர்வதேச புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

போயிங் 777 நெதர்லாந்து தலைநகரில் இருந்து கோலாலம்பூருக்கு பறந்து கொண்டிருந்தபோது, ஜூலை 2014இல் உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் ரஷ்ய சார்பு கிளர்ச்சியாளர்களுக்கும் உக்ரைனியப் படைகளுக்கும் இடையே நடந்த மோதலின் போது ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட தரையிலிருந்து ஏவப்படும் வான்வழி ஏவுகணையால் தாக்கப்பட்டது.

இதன்போது, பயணிகள் மற்றும் பணியாளர்கள் அடங்களாக 298 பேர் உயிரிழந்தனர். இவர்களில், 196 பேர் நெதர்லாந்தை சேர்ந்தவர்கள், மற்ற பயணிகளில் பலர் மலேசியா, அவுஸ்ரேலியா, பிரித்தானியா, பெல்ஜியம் மற்றும் பிற நாடுகளை சேர்ந்தவர்கள்.

கடந்த 2014ஆம் ஆண்டு ஜூலையில் அப்பகுதியை கட்டுப்படுத்திய டொனெட்ஸ்க் மக்கள் குடியரசின் மீது ரஷ்யா ஒட்டுமொத்த கட்டுப்பாட்டை கொண்டுள்ளது என்று கடந்த ஆண்டு தீர்ப்பளித்த நெதர்லாந்து நீதிமன்றத்தை கூட்டு விசாரணைக் குழு மேற்கோள் காட்டியது.

இராணுவ ஆதரவை வழங்குவதற்கான முடிவு ஜனாதிபதியிடம் உள்ளது என்று ரஷ்ய அதிகாரிகள் கூறிய பதிவு செய்யப்பட்ட தொலைபேசி உரையாடல்களை அது விபரித்தது.

‘பிரிவினைவாதிகளின் கோரிக்கை ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டதாகவும், இந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் உறுதியான தகவல் உள்ளது’ என்று கூட்டு விசாரணைக் குழு மேலும். கூறியது.

ஆனால் அந்த கோரிக்கையில் எம்.எச்.17 விமானத்தை சுட்டு வீழ்த்த பயன்படுத்தப்பட்ட அமைப்பை வெளிப்படையாக குறிப்பிடுகிறதா என்பது தெரியவில்லை.

‘நாங்கள் வலுவான அறிகுறிகளைப் பற்றி பேசினாலும், முழுமையான மற்றும் உறுதியான ஆதாரங்களின் உயர் கட்டத்தை எட்டவில்லை’ என்று புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.

நெதர்லாந்து, அவுஸ்ரேலியா, பெல்ஜியம், மலேசியா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்களைக் கொண்ட கூட்டு விசாரணைக் குழுவின் கண்டுபிடிப்புகள், ஐந்து நாடுகளைச் சேர்ந்த புலனாய்வாளர்களைக் கொண்டவை.

கடந்த ஆண்டு நெதர்லாந்து நீதிமன்றத் தீர்ப்பைப் பின்பற்றி, இரண்டு ரஷ்யர்கள் மற்றும் ஒரு உக்ரைனியர் கொலைக் குற்றவாளிகள் என்று கண்டறியப்பட்டது.

ஆனால், தற்போது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள ரஷ்யா, அந்தத் தீர்ப்புகள் அவதூறு மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று நிராகரித்தது.

 

https://athavannews.com/2023/1323608

 

  • கருத்துக்கள உறவுகள்

புதிய குற்றச்சாட்டுக்களை முன்வைக்க போதிய புதிய ஆதாரங்களைத் திரட்ட முடியாமையால் விமான விபத்து தொடர்பான விசாரணைகள்  (தற்காலிகமாக ) நிறுத்திவைப்பு. 👇

International team suspends investigation into MH17 plane crash

Society & CultureFebruary 08, 15:53 

According to Digna van Boetzelaer, "the evidence is at the moment not concrete enough to lead to new prosecutions"

THE HAGUE, February 8. /TASS/. The Joint Investigation Team (JIT) has decided to suspend its investigation into the 2014 Malaysia Airlines flight MH17 crash in Ukraine for lack of evidence, Dutch prosecutor Digna van Boetzelaer announced on Wednesday.

"The investigation has now reached its limit. All leads have been exhausted," she said at a press conference in The Hague.

According to her, "the evidence is at the moment not concrete enough to lead to new prosecutions."

https://tass.com/society/1573355/amp

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Quote

எம்.எச்.17 விமானத்தை வீழ்த்திய ஏவுகணையை புடின் வழங்கியிருக்கலாம்: சர்வதேச புலனாய்வாளர்கள் தகவல்!

நோர்த் பைப்லைன் 2ஐ உடைத்தது போல்.....:zany_face:

  • கருத்துக்கள உறவுகள்

ரஸ்ஸியாவின் அக்கிரமங்களுக்கு வெள்ளையடிக்க சிலர் காட்டும் அதீத ஈடுபாடு புல்லரிக்க வைக்கிறது. இந்த இலட்சணத்தில் இவர்கள் மனிதாபிமானம் வேறு பேசுவார்களாம். 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரஞ்சித் said:

ரஸ்ஸியாவின் அக்கிரமங்களுக்கு வெள்ளையடிக்க சிலர் காட்டும் அதீத ஈடுபாடு புல்லரிக்க வைக்கிறது. இந்த இலட்சணத்தில் இவர்கள் மனிதாபிமானம் வேறு பேசுவார்களாம். 

மேற்கின் அநியாயங்களை நியாயப்படுத்தும் செயற்பாட்டை ஞாபக மறதி என்று சொல்லலாமா? 

மனிதாபிமானம் எல்லோருக்கும் பொதுவானது. மேற்குலகுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல. 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ரஞ்சித் said:

ரஸ்ஸியாவின் அக்கிரமங்களுக்கு வெள்ளையடிக்க சிலர் காட்டும் அதீத ஈடுபாடு புல்லரிக்க வைக்கிறது. இந்த இலட்சணத்தில் இவர்கள் மனிதாபிமானம் வேறு பேசுவார்களாம். 

ஹன்னா அறென்ட், ஒரு தத்துவவியலாளர் - மக்களை எப்படி சர்வாதிகாரிகள் தம் பக்கம் இழுக்கிறார்கள் என்பதைப் பற்றி நிறைய எழுதிய ஒருவர்: அவரது ஒரு கருத்துப் படி: "சர்வாதிகாரிகள் முற்றாகத் தமக்கு எதிராக நிற்போரைக் கவர முற்படுவதில்லை. அதே போல, தங்களை முற்றாக ஆதரிக்கும் தீவிர ஆதரவாளர்களையும் கவர முற்படுவதில்லை. ஆனால், சரி எது பிழை எது என்பதைத் தெளிவாகப் பிரித்தறிய முடியாமல் தடுமாறும் குழுக்களையும், மக்களையும் குறி வைத்துக் கவர முற்படுவர்"

இந்த கறுப்பு வெள்ளை  வேறுபாடு தெரியாமல் "எல்லாம் ஒன்று தான்" என்று தடுமாறும் மக்களே சர்வாதிகாரிகளின் வரப்பிரசாதம்!"

இங்கே டபுள் எம்.ஏ செய்ய முயல்வதும் அதே தான்! எனவே, அமைதி கொள்ளுங்கள்!😂

5 hours ago, Kapithan said:

மேற்கின் அநியாயங்களை நியாயப்படுத்தும் செயற்பாட்டை ஞாபக மறதி என்று சொல்லலாமா? 

மனிதாபிமானம் எல்லோருக்கும் பொதுவானது. மேற்குலகுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல. 

மனிதாபிமானத்தை வெளிக்காட்ட மனித நேயத்துக்கு எதிரானவர்களை ஆதரிக்க வேண்டிய அவசியம் இல்லை.
இது முற்றிலும் முரன்பாடானது.


நீங்கள் குறிப்பிடும் கருத்தாளர்கள் எங்காவது மேற்கின் மனித உரிமை மீறலை நியாயப்படுத்தியதைக் காட்ட முடியுமா ?
மாறாக உங்கள் சார்பானவர்கள் மனித இனத்துக்கு எதிரானவர்களை நியாயப்படுத்துவதை அண்மைய திரிகள் எல்லாவற்றிலும் காணலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, இணையவன் said:

1) மனிதாபிமானத்தை வெளிக்காட்ட மனித நேயத்துக்கு எதிரானவர்களை ஆதரிக்க வேண்டிய அவசியம் இல்லை.
இது முற்றிலும் முரன்பாடானது.


2) நீங்கள் குறிப்பிடும் கருத்தாளர்கள் எங்காவது மேற்கின் மனித உரிமை மீறலை நியாயப்படுத்தியதைக் காட்ட முடியுமா ?


3) மாறாக உங்கள் சார்பானவர்கள் மனித இனத்துக்கு எதிரானவர்களை நியாயப்படுத்துவதை அண்மைய திரிகள் எல்லாவற்றிலும் காணலாம்.

1) மனித நேயத்திற்கு எதிரானவர்களென்று தீர்மானிப்பதற்கான உங்கள் அளவீடு என்ன? 

2) உங்கள் கூற்றுப்படி - மேற்கை ஆதரிப்பவர்கள், மேற்கின் மனித உரிமை மீறலைக் கண்டித்த ஒரு கருத்தாளரை  உங்களால் காட்ட முடியுமா ? மெளனமாகக் கடந்துசெல்வார்கள் அப்படித்தானே? 

3) மனித குலத்துக்கு எதிரானவர்களென்று எதைக் கொண்டு அளவீடு செய்கிறீர்கள்? 

 

இங்கே பிடுங்குப்படும் எம்மிடையே மூன்று வகையான ஆட்கள் இருக்கிறார்கள். 

முதலாவது வகையினர் - எல்லோரும் வாழ வேண்டும் என உண்மையாக ஆசிப்பவர்கள்.

இரண்டாவது வகையினர் - தாங்கள் மட்டும் வாழ்ந்தால் போதும் என நினைப்பவர்கள். ⁉️

மூன்றாவது வகையறா - சைக்கிள்  கப்பில் எல்லோரின் மீதும் சவாரி செய்பவர்கள். செலன்ஸ்கி வகையறாக்கள். 🤡

இதில் இந்த மூன்றாம் வகையறாக்கள்தான் அபாயகரமானவர்கள்.

 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

 வரப்பிரசாதம்

நல்லதொரு சொல்லை அறிமுகபடுத்தினீர்கள். சர்வாதிகாரி புதினுக்கு அவரிடம் இருந்து தனக்கோ, தன் இனத்திற்கோ ஒரு துளி உதவியை கூட பெறமால்  கொடுங்கோலனை  கண்மூடிதனமாக ஆதரிக்கும் மேற்குலகநாடுகளில் வாழ்கின்ற அவரின் ஈழதமிழ் ஆதரவாளர்கள் அவருக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம்.

 

5 hours ago, Justin said:

வரப்பிரசாதம்!"

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, Kapithan said:

இங்கே பிடுங்குப்படும் எம்மிடையே மூன்று வகையான ஆட்கள் இருக்கிறார்கள். 

முதலாவது வகையினர் - எல்லோரும் வாழ வேண்டும் என உண்மையாக ஆசிப்பவர்கள்.

இரந்வகையினர் - தாங்கள் மட்டும் வாழ்ந்தால் போதும் என நினைப்பவர்கள். ⁉️

மூன்றாவது வகையறா - சைக்கிள்  கப்பில் எல்லோரின் மீதும் சவாரி செய்பவர்கள். செலன்ஸ்கி வகையறாக்கள். 🤡

இதில் இந்த மூன்றாம் வகையறாக்கள்தான் அபாயகரமானவர்கள்.

மிகச்சரியான கணிப்பீடு.

நான் புட்டினை ஆதரிக்கின்றேன்.ஆனால் அவர் எடுக்கும் நடவடிக்கைகள் அனைத்தும் சரியானதாக நினைக்கவும் இல்லை.

உங்களிடம் ஒரு கேள்வி? அது என்ன வென்றால் ஏன் எல்லோரும் உக்ரேனுக்காக அழுகின்றார்கள்? அதன் சூட்சுமம் என்ன? என்றுமில்லாதவாறு மனிதாபிமானம் எனும் மந்திர சொல்லை உக்ரேனுக்காக காவிக்கொண்டு திரிகின்றார்கள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, இணையவன் said:

மனிதாபிமானத்தை வெளிக்காட்ட மனித நேயத்துக்கு எதிரானவர்களை ஆதரிக்க வேண்டிய அவசியம் இல்லை.
இது முற்றிலும் முரன்பாடானது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் அமெரிக்காவும், நேட்டோவும் மனிதநேயத்திற்கு எதிராக எதுவுமே செய்யவில்லை என்கிறீர்களா?

உதாரணத்திற்கு பிரான்ஸ்ல் முஸ்லீம் தீவிரவாதிகள் சிறு தாக்குதல் நடத்தும் போது பதிலடியாக போர் விமானங்கள் எங்கு போய் தாக்குதல் தடத்துகின்றது என்பதாவது தெரியுமா?

ரஷ்யாவை பொறுத்த வரைக்கும் மேற்குலகு முழு உலகிற்கும் செய்த அநியாயங்களைப்போல் செய்யவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.