Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

வணக்கம் சகோதரி

உங்கள் திரியில் யாராவது எழுதுவதை அறிய செற்றிங்கில் போய்  Follow என்பதை அழுத்திவிட்டால் உங்கள் பதிவில் யார் எழுதினாலும் உடனே தெரியவரும்.

நன்றி அண்ணா.

  • Replies 52
  • Views 3.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • இந்த பயணம் மிகவும் தனித்துவமான ஒரு சுற்றுலாவாக இருந்ததற்கு முக்கிய காரணங்கள் ஆய்வு நிமித்தமாக ஒரு உலக அமைப்பினர் எமது பயணத்தை ஒழுங்கு செய்து மடகஸ்காரில் உள்ள அவர்களது கிளை உறுப்பினர்கள் மிகவும் நேர்த்

  • அண்டாசிபே லெமூர் சரணாலயத்தில் இருந்து மிக அருகில் இருக்கும் லெமூர் தீவுக்கு விடிய காலமய் படகுகளில் புறப்பட்டோம். வெள்ளைக்காரர்களுக்கு பொதுவாக படகோட்டல்  நீர், மலை, காடு சம்பத்தப்பட்ட விடயங்கள் எல்லாம்

  • எல்லோருடைய கொமெண்ட்ஸ்க்கும் ஊக்கத்துக்கும் மிகவும் நன்றி. எப்பவோ எழுத நினைத்தது. அங்கு வாழும்  மக்களில் 95 வீதமானோர் 500 வருடங்களுக்கு முந்தைய வாழ்க்கை தான் வாழ்கின்றனர். மிகவும் வறுமை. வரும்போது அநேக

  • கருத்துக்கள உறவுகள்

அல்லது ஒவ்வொரு திரி பதியும் போதும் Follow     என்பது காட்டும்.

அதை அழுத்தி விடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

animiertes-tiere-bild-0024.gif நில்மினி... அடுத்த மடகஸ்கார் கட்டுரை எப்ப வரும்.animiertes-tiere-bild-0025.gif animiertes-tiere-bild-0018.gif

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, தமிழ் சிறி said:

animiertes-tiere-bild-0024.gif நில்மினி... அடுத்த மடகஸ்கார் கட்டுரை எப்ப வரும்.animiertes-tiere-bild-0025.gif animiertes-tiere-bild-0018.gif

எழுதிவைத்திருக்கிறேன் இன்று வீட்டுக்கு போய் இன்னும் கொஞ்சம் கூட எழுதி பதிவிடுகிறேன் சிறி. நீங்கள் எல்லோரும் ஆவலாக வாசிப்பதால் நிறைய புதினங்களை சேர்த்து எழுதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, nilmini said:

எழுதிவைத்திருக்கிறேன் இன்று வீட்டுக்கு போய் இன்னும் கொஞ்சம் கூட எழுதி பதிவிடுகிறேன் சிறி. நீங்கள் எல்லோரும் ஆவலாக வாசிப்பதால் நிறைய புதினங்களை சேர்த்து எழுதுகிறேன்.

நன்றி நில்மினி. ஆவலுடன் பார்த்துக் கொண்டு இருக்கின்றோம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

நன்றி நில்மினி. ஆவலுடன் பார்த்துக் கொண்டு இருக்கின்றோம். 

இந்த பயணம் மிகவும் தனித்துவமான ஒரு சுற்றுலாவாக இருந்ததற்கு முக்கிய காரணங்கள் ஆய்வு நிமித்தமாக ஒரு உலக அமைப்பினர் எமது பயணத்தை ஒழுங்கு செய்து மடகஸ்காரில் உள்ள அவர்களது கிளை உறுப்பினர்கள் மிகவும் நேர்த்தியாக திட்டமிட்டு முக்கியமான இடங்களுக்கு அழைத்து சென்றமைதான்.

அங்கிருந்த 12 நாட்களில் ஒவ்வொரு நாளும் காலையில் இருந்து நள்ளிரவு வரை காடு மேடு வனாந்திரம் எல்லாம் ஒரே ஹைக்கிங் தான். ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு போவதானல், கிட்டஎன்றால் van அல்லது நேரத்தை வீணாக்காமல் சிறிய ரக விமானத்தில்தான் பயணித்தோம்.

ஒரு ஆபத்தான விலங்குகளும் மடகஸ்காரில் இல்லாதால் இரவிரவாக காடுகளில் நடமாட பயப்படத்தேவை இல்லை. பாம்புகள் இருக்கு ஆனால் நச்சுப்பாம்புகள் அல்ல.

உலகில் சிங்கம், புலி, யானை, கரடி, மலைப்பாம்பு மாதிரி மிருகங்கள் கூர்ப்பு அடைந்து தோன்ற முன்னமே, மடகாஸ்கர் ஆபிரிக்க பெரும் நிலப்பரப்பில் இருந்து பூமித்தட்டுகளின் அசைவு காரணமாக தனியே விலகி சென்றுவிட்டது. அதனால் தான் உலகின் மற்ற இடங்களில் இருந்த லெமூர் மாற்று ராட்சத பச்சோந்திகள், பறவைகள் எல்லாவற்றையும் பின்பு தோன்றிய வேட்டையாடும் விலங்குகள் கொன்றழித்து விட்டன.

மற்ற மிருகங்களை காட்டிலும், மிகுந்த அழிவை தரும் மனித விலங்குகளால் தான் பல விலங்கினங்களும் அழிந்து போய்விட்டன. மடகாஸ்கரும் அதற்கு விலக்கல்ல. ஆனால் அங்கு மனிதர்கள் குறைவாக இருந்ததாலும், குடியேறச்சென்ற மனிதர்கள் புலி, சிங்கங்களை கொண்டு போகாமல் நாய் பூனைகளை கொண்டு சென்றதால் ஓரளவுக்கு இந்த லெமூர் உற்பட மிகப்பழைய விலங்கினங்கள் இன்னமும் அழியாமல் இருக்கின்றன.

ஆனாலும் நாய்கள் பெருகி காட்டுக்குள் சென்று இந்த அரிய வகை மிருகங்களை கொல்வதும், மடகஸ்காரின் அரசியல், பஞ்சம் என்பவற்றால் நிறைய அழிவுகளை சந்தித்திக்கொண்டு இருக்கிறது. காடுகளை சட்ட விரோதமாக அழித்து எரிபொருள், கட்டடம் கட்ட என்றும் ஒரு பக்கத்தால் அழிவு.

பொதுவாக அமெரிக்கர்களை ஒருவருக்கும் பிடிக்காது. ஒன்றில் பொறாமை அல்லது அவர்கள் எல்லோரிடமும் சண்டை போடுபவர்கள் என்பதால். அது அவர்களுக்கும் தெரியும். தாம் உலகில் எங்கு சென்றாலும் ஒருவித சந்தேகத்துடன் தான் பயணிப்பார்கள். ஆனால் மடகஸ்காரில் அமெரிக்கர்களுக்கு அப்படி ஒரு வரவேற்பு. ஏனென்றால் பட்ரிசியா ரைட் என்னும் பெண் விஞ்ஞானி 1960 ஆண்டுப்பகுதியில் அங்கு சென்று இந்த லெமூர் மற்றும் விலங்குகளை பாதுகாக்க பெரும் பாடு பட்டு, அங்கு ஒரு ஆய்வு நிலையமும் அமைத்து இன்று அது மிகப்பெரும் உதவிகளை செய்து வருகிறது. https://www.stonybrook.edu/commcms/centre-valbio/. அதானல் எமது குழுவினருக்கு பெருமிதமும் மகிழ்ச்சியும். இன்னும் தொடரும்……

Patricia.jpg

Slide10.jpg

Slide11.jpg

Slide12.jpg

 

Slide14.jpg

 

Slide15.jpg

Slide2.jpg

Slide3.jpg

 

Slide5.jpg

Slide6.jpg

Slide7.jpg

Slide8.jpg

Slide9.jpg

Edited by nilmini

  • கருத்துக்கள உறவுகள்

படங்களும் தகவல்களும் மீண்டும் மீண்டும் வாசிக்க தூண்டுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கம், புலி போன்ற விலங்கினங்கள் கூர்ப்பு அடைய முன்பே…
மடகஸ்கார் பூமித்தட்டில் இருந்து விலகிச் சென்றதால்,
இன்னும் மற்ற இடங்களில் இல்லாத அரிய விலங்கினங்கள் எஞ்சி இருக்கின்றன என்ற
 அரிய தகவலை இந்தக் கட்டுரை மூலம் அறிந்து ஆச்சரியப் பட்டேன்.
நன்றி நில்மினி. 👍🏽

தற்போது  ஊக்கப்புள்ளி போட முடியாமல் உள்ளது. கிடைத்தவுடன் போடுகின்றேன். 

  • கருத்துக்கள உறவுகள்

மிக மிக மிக நன்றாக இருக்கின்றன படங்களுடன் கூடிய உங்களின் கட்டுரை.........தொடருங்கள்......!  👍

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகவல்களும் படங்களும் அருமையாக இருக்கின்றது.
நன்றி சகோதரி.

  • கருத்துக்கள உறவுகள்

Two boys in Madagascar scratch the back of a habituated lemur (Via National Geographic)

 

 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

எங்க மிச்ச சொச்சத்தை காணல  @nilmini

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

எங்க மிச்ச சொச்சத்தை காணல  @nilmini

வருது வருது. வெள்ளிக்கிழமை வரும். கு ச அண்ணாவோட விவாதத்தால் கொஞ்சம் பிந்திவிட்டது😂

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, nilmini said:

வருது வருது. வெள்ளிக்கிழமை வரும். கு ச அண்ணாவோட விவாதத்தால் கொஞ்சம் பிந்திவிட்டது😂

ஏதாவது  சூட்டாதரவு கொடுக்கணூமா கெதியா சொல்லுங்க அடிச்சு விரட்டுவம் ஆள @குமாரசாமிஎன்ன என்ன ஆ?? சும்மா விரட்டுறீங்க போல 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஏதாவது  சூட்டாதரவு கொடுக்கணூமா கெதியா சொல்லுங்க அடிச்சு விரட்டுவம் ஆள @குமாரசாமிஎன்ன என்ன ஆ?? சும்மா விரட்டுறீங்க போல 

சீ சீ கு சா அண்ணா இல்லாமல் யாழ் வெறிச்சோடிப்போடும். சும்மா இளையராஜாவை பற்றி ஒரு சிறு விவாதம்தான். இன்றுடன் முடிந்து விட்டது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அண்டாசிபே லெமூர் சரணாலயத்தில் இருந்து மிக அருகில் இருக்கும் லெமூர் தீவுக்கு விடிய காலமய் படகுகளில் புறப்பட்டோம். வெள்ளைக்காரர்களுக்கு பொதுவாக படகோட்டல்  நீர், மலை, காடு சம்பத்தப்பட்ட விடயங்கள் எல்லாம் சர்வ சாதாரணம் என்றபடியால், எனக்கும் படகோட்டத்தெரியும் என்று நினைத்திருந்தார்கள். ஏரிக்கு அருகில் சென்றதும் ஒரு படகுக்கு இருவர்,  நாலு துடுப்புகள் என்று எடுத்துக்கொண்டு படபடவென்று ஏறிவிட்டார்கள்.

எனக்கு படகு ஓட்டத்தெரியாது என்று அவர்களிடம் உடனேயே சொல்லிவிட்டேன். எம்முடன் வந்த guide, தான் என் படகில் முன்னுக்கு இருந்து துடுப்பை இயக்குவதாகவும், நான் எப்படி பின்னுக்கு இருந்து அதே மாதிரி செய்யவேண்டும் என்றும் சொல்லித்தந்தான். அமைதியான ஏரிதான். என்றபடியால் பிரச்சனை இல்லை என்று ஒருமாதிரி நானும் படகை ஓட்டினேன். அரைவாசி வழியில் ராட்சத மரம் ஒன்று அரைவாசி வெட்டப்பட்டு எரிந்த நிலையில் குறுக்கே விழுந்திருந்தது. மடகாஸ்கர் மக்கள் பொருளாதார பிரச்சனைகளால் சட்டத்தை மீறி காடுகளையும், மிருகங்களையும் அழித்து வருகிறார்கள்.

அந்தமரத்தை கடந்து படகை எடுத்துக்கொண்டு நாமும் போகவேண்டும் என்பது நினைத்துப்பார்க்க முடியாத மாதிரி இருந்தது. எல்லோருக்கும் ஒத்தபடிதானே என்று நான் அவ்வளவு கவலைப்படவில்லை. உதவிக்கு வந்த சிலருடன் உதவியுடன் படகில் இருந்து மரத்தில் ஏறி பிறகு, அவர்கள் படகை மற்றப்பக்கம் கொண்டுவர திரும்ப படகுப்பயணம் தொடர்ந்தது. அப்பாடா என்று நினைக்கும் முதல் பாறைகள் நிறைந்த எரிப்பக்கத்தில் நீரின் ஓட்டம் அதிகமாக இருந்தது. என்னுடன் படகை ஒட்டிய மடகாஸ்கர் காரனே கொஞ்சம் படபடத்தமாதிரி இருந்தது. வந்த எல்லோருமே மிகவும் பயந்து போனோம். இடையிடையே படகைவிட்டு பாறையில் ஏறி நிற்பதும் பிறகு படகில் போவதுமாக ஒருமாதிரி லெமூர் தீவை சென்றடைந்தோம்.

தூரத்தில் எங்களை கண்டதுமே அழகான ரிங் டெய்ல் லெமூர் இன மிருகங்கள் ஏரியின் கரையில் வந்து வரவேற்பதுபோல் ஆவலாக நின்றார்கள். படகுகள் அவர்களை அண்மித்ததும் பாய்ந்தோடிவந்து எங்கள் தோள்மூட்டு, தலை என்று ஏறி நிண்டுகொண்டார்கள். கூட்டி வந்த guide மார் வாழைப்பழங்களை தந்து அவர்களுக்கு கொடுக்கும்படி கூறினார். மிகவும் நற்பான மனிதர்களை நம்பும் காட்டு விலங்கினங்கள் அவை. எமது மாணவிகள் செல்பி எடுக்க வெளிக்கிட்டவுடனேயே அந்த லெமூர்கள் அவர்களது தலையில் இருந்துகொண்டு தாமும் போஸ் கொடுத்தது மிகவும் அழகாக இருந்தது. 

Slide10.jpg

Slide14.jpg

Slide3.jpg

Slide4.jpg

Slide5.jpg

Slide7.jpg

 

Slide8.jpg

 

 

படங்களும் இடங்களும் நன்றாக உள்ளன தொடருங்க 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயம் தொடருவேன் Pira பிரா. பதின்மூன்றுநாள் தான். ஆனால் தொடர்ந்து இரவு பகலாக பயணித்ததால் ஒரு வருட அனுபவமும் போல இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nilmini said:

அண்டாசிபே லெமூர் சரணாலயத்தில் இருந்து மிக அருகில் இருக்கும் லெமூர் தீவுக்கு விடிய காலமய் படகுகளில் புறப்பட்டோம். வெள்ளைக்காரர்களுக்கு பொதுவாக படகோட்டல்  நீர், மலை, காடு சம்பத்தப்பட்ட விடயங்கள் எல்லாம் சர்வ சாதாரணம் என்றபடியால், எனக்கும் படகோட்டத்தெரியும் என்று நினைத்திருந்தார்கள். ஏரிக்கு அருகில் சென்றதும் ஒரு படகுக்கு இருவர்,  நாலு துடுப்புகள் என்று எடுத்துக்கொண்டு படபடவென்று ஏறிவிட்டார்கள்.

எனக்கு படகு ஓட்டத்தெரியாது என்று அவர்களிடம் உடனேயே சொல்லிவிட்டேன். எம்முடன் வந்த guide, தான் என் படகில் முன்னுக்கு இருந்து துடுப்பை இயக்குவதாகவும், நான் எப்படி பின்னுக்கு இருந்து அதே மாதிரி செய்யவேண்டும் என்றும் சொல்லித்தந்தான். அமைதியான ஏரிதான். என்றபடியால் பிரச்சனை இல்லை என்று ஒருமாதிரி நானும் படகை ஓட்டினேன். அரைவாசி வழியில் ராட்சத மரம் ஒன்று அரைவாசி வெட்டப்பட்டு எரிந்த நிலையில் குறுக்கே விழுந்திருந்தது. மடகாஸ்கர் மக்கள் பொருளாதார பிரச்சனைகளால் சட்டத்தை மீறி காடுகளையும், மிருகங்களையும் அழித்து வருகிறார்கள்.

அந்தமரத்தை கடந்து படகை எடுத்துக்கொண்டு நாமும் போகவேண்டும் என்பது நினைத்துப்பார்க்க முடியாத மாதிரி இருந்தது. எல்லோருக்கும் ஒத்தபடிதானே என்று நான் அவ்வளவு கவலைப்படவில்லை. உதவிக்கு வந்த சிலருடன் உதவியுடன் படகில் இருந்து மரத்தில் ஏறி பிறகு, அவர்கள் படகை மற்றப்பக்கம் கொண்டுவர திரும்ப படகுப்பயணம் தொடர்ந்தது. அப்பாடா என்று நினைக்கும் முதல் பாறைகள் நிறைந்த எரிப்பக்கத்தில் நீரின் ஓட்டம் அதிகமாக இருந்தது. என்னுடன் படகை ஒட்டிய மடகாஸ்கர் காரனே கொஞ்சம் படபடத்தமாதிரி இருந்தது. வந்த எல்லோருமே மிகவும் பயந்து போனோம். இடையிடையே படகைவிட்டு பாறையில் ஏறி நிற்பதும் பிறகு படகில் போவதுமாக ஒருமாதிரி லெமூர் தீவை சென்றடைந்தோம்.

தூரத்தில் எங்களை கண்டதுமே அழகான ரிங் டெய்ல் லெமூர் இன மிருகங்கள் ஏரியின் கரையில் வந்து வரவேற்பதுபோல் ஆவலாக நின்றார்கள். படகுகள் அவர்களை அண்மித்ததும் பாய்ந்தோடிவந்து எங்கள் தோள்மூட்டு, தலை என்று ஏறி நிண்டுகொண்டார்கள். கூட்டி வந்த guide மார் வாழைப்பழங்களை தந்து அவர்களுக்கு கொடுக்கும்படி கூறினார். மிகவும் நற்பான மனிதர்களை நம்பும் காட்டு விலங்கினங்கள் அவை. எமது மாணவிகள் செல்பி எடுக்க வெளிக்கிட்டவுடனேயே அந்த லெமூர்கள் அவர்களது தலையில் இருந்துகொண்டு தாமும் போஸ் கொடுத்தது மிகவும் அழகாக இருந்தது. 

Slide10.jpg

Slide14.jpg

Slide3.jpg

Slide4.jpg

Slide5.jpg

Slide7.jpg

 

Slide8.jpg

 

 

நில்மினி…  எழுத்திற்கு  ஏற்ற மாதிரி, படங்களை இணைப்பதால்…
நாமும், மடகஸ்காரிற்கு பயணிப்பது மாதிரி உணர்வு ஏற்படுகின்றது.

எமது வீட்டு பிராணிகளான… நாய், பூனையை விட  
லெமூர் மிருகங்கள்… முன்பின் அறிமுகம் இல்லாதவர்களுடன் நெருக்கமாக பழகுவது வியப்பாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

அழகான படங்களும் அருமையான கட்டுரையும் நன்றாக இருக்கிறது.....!

6 hours ago, தமிழ் சிறி said:

நில்மினி…  எழுத்திற்கு  ஏற்ற மாதிரி, படங்களை இணைப்பதால்…
நாமும், மடகஸ்காரிற்கு பயணிப்பது மாதிரி உணர்வு ஏற்படுகின்றது.

 

சிறியர் அந்த ஆற்றில மரத்தில தடக்குப்பட்டு முழுசின அனுபவமும் வந்ததா......!   😂

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, nilmini said:

அரைவாசி வழியில் ராட்சத மரம் ஒன்று அரைவாசி வெட்டப்பட்டு எரிந்த நிலையில் குறுக்கே விழுந்திருந்தது

அந்தமரத்தை கடந்து படகை எடுத்துக்கொண்டு நாமும் போகவேண்டும் என்பது நினைத்துப்பார்க்க முடியாத மாதிரி இருந்தது. எல்லோருக்கும் ஒத்தபடிதானே என்று நான் அவ்வளவு கவலைப்படவில்லை. உதவிக்கு வந்த சிலருடன் உதவியுடன் படகில் இருந்து மரத்தில் ஏறி பிறகு, அவர்கள் படகை மற்றப்பக்கம் கொண்டுவர திரும்ப படகுப்பயணம் தொடர்ந்தது

Slide7.jpg

 

1 hour ago, suvy said:

அழகான படங்களும் அருமையான கட்டுரையும் நன்றாக இருக்கிறது.....!

சிறியர் அந்த ஆற்றில மரத்தில தடக்குப்பட்டு முழுசின அனுபவமும் வந்ததா......!   😂

animiertes-baeume-bild-0023.gifசுவியர்...  நானும் ஆற்றின் படத்தை கண்டவுடன், அந்த இராட்சத மரத்தையும், 
முழுசிக் கொண்டு நிற்கும், நில்மினி எங்கே என்றும்தான்  தேடினேன். 😂
அவ அந்தப் படத்தை எமக்கு காட்டாமல், மறைத்து விட்டா போலுள்ளது. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

 

animiertes-baeume-bild-0023.gifசுவியர்...  நானும் ஆற்றின் படத்தை கண்டவுடன், அந்த இராட்சத மரத்தையும், 
முழுசிக் கொண்டு நிற்கும், நில்மினி எங்கே என்றும்தான்  தேடினேன். 😂
அவ அந்தப் படத்தை எமக்கு காட்டாமல், மறைத்து விட்டா போலுள்ளது. 🤣

அவ நில் மினி இல்ல .....ரன் மினி........!  🏃‍♀️

Pin on movement

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, தமிழ் சிறி said:

நில்மினி…  எழுத்திற்கு  ஏற்ற மாதிரி, படங்களை இணைப்பதால்…
நாமும், மடகஸ்காரிற்கு பயணிப்பது மாதிரி உணர்வு ஏற்படுகின்றது.

எமது வீட்டு பிராணிகளான… நாய், பூனையை விட  
லெமூர் மிருகங்கள்… முன்பின் அறிமுகம் இல்லாதவர்களுடன் நெருக்கமாக பழகுவது வியப்பாக உள்ளது.

ஓம் சிறி. லெமூர்களை பார்க்கவும் நல்ல வடிவு. பஞ்சு போல பாதங்கள். ஒருவிதத்தில் அப்பாவி மிருகங்கள்

14 hours ago, suvy said:

அழகான படங்களும் அருமையான கட்டுரையும் நன்றாக இருக்கிறது.....!

சிறியர் அந்த ஆற்றில மரத்தில தடக்குப்பட்டு முழுசின அனுபவமும் வந்ததா......!   😂

😁ஆத்தில எல்லோரும் முழுசிக்கொண்டு நிண்டதால ஒருவரும் படம் எடுக்கவில்லை. படகில் இருந்து குறுக்க இருந்த மரத்துக்கு மேல ஏற வேண்டி இருந்ததால் கமெரா போன் எல்லாம் பையில வச்சிட்டம்.

13 hours ago, தமிழ் சிறி said:

 

animiertes-baeume-bild-0023.gifசுவியர்...  நானும் ஆற்றின் படத்தை கண்டவுடன், அந்த இராட்சத மரத்தையும், 
முழுசிக் கொண்டு நிற்கும், நில்மினி எங்கே என்றும்தான்  தேடினேன். 😂
அவ அந்தப் படத்தை எமக்கு காட்டாமல், மறைத்து விட்டா போலுள்ளது. 🤣

படமும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என்று எல்லோரும் முழுசிக்கொண்டு நிண்டதால் அந்தக்காட்சி மனதில் மட்டும்தான் இருக்கு சிறி.🤔

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, suvy said:

அவ நில் மினி இல்ல .....ரன் மினி........!  🏃‍♀️

 

இதைத்தான் அசல் பகிடி எண்டு சொல்லுறது. நில்(மினி) ஓடி(மினி) ஆகிய இடம் மடகஸ்கார்.

பி கு:  அப்பா இருந்தா கவலைப்பட்டிருப்பாரே? அவரது நீல மாணிக்கத்தை (Nilmini) எல்லோரும் பகிடி பண்ணுகிறார்கள் என்று ☺️

14 hours ago, suvy said:

அழகான படங்களும் அருமையான கட்டுரையும் நன்றாக இருக்கிறது.....!

சிறியர் அந்த ஆற்றில மரத்தில தடக்குப்பட்டு முழுசின அனுபவமும் வந்ததா......!   😂

நன்றி சுவி.

நிறைய சுவாரசியமான கதைகள் இருக்கு. கட்டுரை தொடரும்.

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...



இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.