Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில் புதிய தனியார் பல்கலைக்கழகம் திறப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் புதிய தனியார் பல்கலைக்கழகம் திறப்பு.

மானிப்பாயை சேர்ந்த கனேடிய தமிழரும், பெரும் தொழிலதிபருமான இந்திரன் பத்மநாதன் யாழ்ப்பாணத்தில் ஒரு தனியார் பல்கலைக்கழகம் ஒன்றினை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.

NIT (நொர்தேர்ன் இன்ஸ்டிடியூட் ஒப் டெக்னாலஜி) கொழும்பில் இயங்கும், SLIT என்னும் ஏற்கனேவே பிரசித்தி பெற்ற நிறுவனத்துடன் சேர்ந்து இதனை ஆரம்பித்துள்ளது.

இந்த ஆரம்ப வைபவத்தில், நெதர்லாந்தினை சேர்ந்த, தொழிலதிபரான, கந்தையா பாஸ்கரனும் கலந்து கொண்டிருந்தார்.

நிறுவனம், வெளிநாட்டில் IT துறையில் வேலை பெறும் நோக்கில் பட்ட தாரிகளை உருவாக்கும் என்று இந்திரன் பேசும் போது குறிப்பிட்டார். 

  • Replies 57
  • Views 3.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Nathamuni said:

யாழ்ப்பாணத்தில் புதிய தனியார் பல்கலைக்கழகம் திறப்பு.

மானிப்பாயை சேர்ந்த கனேடிய தமிழரும், பெரும் தொழிலதிபருமான இந்திரன் பத்மநாதன் யாழ்ப்பாணத்தில் ஒரு தனியார் பல்கலைக்கழகம் ஒன்றினை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.

NIT (நொர்தேர்ன் இன்ஸ்டிடியூட் ஒப் டெக்னாலஜி) கொழும்பில் இயங்கும், SLIT என்னும் ஏற்கனேவே பிரசித்தி பெற்ற நிறுவனத்துடன் சேர்ந்து இதனை ஆரம்பித்துள்ளது.

இந்த ஆரம்ப வைபவத்தில், நெதர்லாந்தினை சேர்ந்த, தொழிலதிபரான, கந்தையா பாஸ்கரனும் கலந்து கொண்டிருந்தார்.

நிறுவனம், வெளிநாட்டில் IT துறையில் வேலை பெறும் நோக்கில் பட்ட தாரிகளை உருவாக்கும் என்று இந்திரன் பேசும் போது குறிப்பிட்டார். 

நல்ல விடயம்    ....எந்த இடம் ?   ....ஊரின் பெயர் என்ன???👍

12 minutes ago, Nathamuni said:

யாழ்ப்பாணத்தில் புதிய தனியார் பல்கலைக்கழகம் திறப்பு.

மானிப்பாயை சேர்ந்த கனேடிய தமிழரும், பெரும் தொழிலதிபருமான இந்திரன் பத்மநாதன் யாழ்ப்பாணத்தில் ஒரு தனியார் பல்கலைக்கழகம் ஒன்றினை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.

NIT (நொர்தேர்ன் இன்ஸ்டிடியூட் ஒப் டெக்னாலஜி) கொழும்பில் இயங்கும், SLIT என்னும் ஏற்கனேவே பிரசித்தி பெற்ற நிறுவனத்துடன் சேர்ந்து இதனை ஆரம்பித்துள்ளது.

இந்த ஆரம்ப வைபவத்தில், நெதர்லாந்தினை சேர்ந்த, தொழிலதிபரான, கந்தையா பாஸ்கரனும் கலந்து கொண்டிருந்தார்.

நிறுவனம், வெளிநாட்டில் IT துறையில் வேலை பெறும் நோக்கில் பட்ட தாரிகளை உருவாக்கும் என்று இந்திரன் பேசும் போது குறிப்பிட்டார். 

இனி  பத்தாம் வகுப்பு பெயில். பண்ணியவர்களும்....காசு கொடுத்து பட்டதாரிகள் ஆகலாம்....🤣😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, Kandiah57 said:

நல்ல விடயம்    ....எந்த இடம் ?   ....ஊரின் பெயர் என்ன???👍

இனி  பத்தாம் வகுப்பு பெயில். பண்ணியவர்களும்....காசு கொடுத்து பட்டதாரிகள் ஆகலாம்....🤣😂

அப்படி தெரியவில்லை. இது, பல்கலைக்கழகம் போக முடியாதவர்களுக்கும், போய் பிரயோசனம் இல்லாத பாடநெறியில் பட்டப்படிப்பு முடித்து வேலை பெற முடியாதவர்களுக்கு என்று சொல்கிறார். அதாவது A/L பாஸ் பண்ணி இருக்க வேண்டும்.

மேலும் Sri Lanka Institute of Technology சம்பந்தப்படுகிறது. அதன் தலைவரும் அங்கே இருந்தார்.

இது, லோக்கல் ஐபிசி டிவி செய்தி, வாட்சப்பில் வந்தது. இணையத்தில் வீடியோ வரும் போதும் இணைக்கிறேன்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Nathamuni said:

இந்திரன் பத்மநாதன்

நடிகை ரம்பாவின் கணவரா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

நடிகை ரம்பாவின் கணவரா?

இல்லையப்பா.... இவரது மனைவி தான் ரம்பா.

மறைந்த நடிகர் மேயர் சுந்தரராஜனின் தந்தை... 

அவரை மேடையில் அறிமுகப்படுத்திய ஒருவர், இவர் தான் சுந்தர்ராஜனின் தந்தை என்றார்.

தந்தை பேசும் போது... சொன்னார்.... இவரது மகனே மேயர் சுந்தராஜன் என்பதே எனக்கு பெருமை அன்றி இவர் தான் சுந்தர்ராஜனின் தந்தை என்பதல்ல என்றார்.

மிக சரியான கருத்து. 😎

ஆக, அதனாலே சொல்லவருவது என்னவென்றால்....

இந்திரன் பத்மநாதன் மனைவிதான் ரம்பா... 😁

ஆந்திரா தான்... 😜

  

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, Nathamuni said:

இல்லையப்பா.... இவரது மனைவி தான் ரம்பா.

மறைந்த நடிகர் மேயர் சுந்தரராஜனின் தந்தை... 

அவரை மேடையில் அறிமுகப்படுத்திய ஒருவர், இவர் தான் சுந்தர்ராஜனின் தந்தை என்றார்.

தந்தை பேசும் போது... சொன்னார்.... இவரது மகனே மேயர் சுந்தராஜன் என்பதே எனக்கு பெருமை அன்றி இவர் தான் சுந்தர்ராஜனின் தந்தை என்பதல்ல என்றார்.

மிக சரியான கருத்து. 😎

ஆக, அதனாலே சொல்லவருவது என்னவென்றால்....

இந்திரன் பத்மநாதன் மனைவிதான் ரம்பா... 😁

ஆந்திரா தான்... 😜

  

சுந்தர்ராஜன் தந்தை சொன்னால் என்ன?

வள்ளுவன் சொல்லுறான் …. “என் நோற்றான் கொல் எனும் சொல்” தான் ஒரு தந்தைக்கு பெருமையாம்.

ஆக…ரம்பா இவரை விட பிரபலம் என்பதால் ரம்பாவின் கணவர் என்பதே சரி. இதில் ஆணாதிக்கம் தேவையில்லை🤣.

பிகு

இவர் முன்னர் புலிக்கு காசு சேர்த்தவர் என்கிறார்கள். உண்மையா?

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

சேர்த்தவர் என்கிறார்கள். உண்மையா?

ஓம். சொத்துக்கள் ……..

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kandiah57 said:

நல்ல விடயம்    ....எந்த இடம் ?   ....ஊரின் பெயர் என்ன???👍

இனி  பத்தாம் வகுப்பு பெயில். பண்ணியவர்களும்....காசு கொடுத்து பட்டதாரிகள் ஆகலாம்....🤣😂

 

யாழ் பல்கலைக்கழக அனுமதி கிடைத்தாலும் அங்கு செல்லாது கொழும்பில் சென்று கல்வி கற்பவர்களும் உள்ளார்கள். காரணம், பழமையான, வேலைத்தளத்திற்கு தேவையற்ற மாதிரியான பாடவிதானம் இப்போதும் பின்பற்றப்படுகின்றதாம். 

தொழில் வாய்ப்புக்களை பெறக்கூடியவாறான கற்கைநெறி உள்ள தனியார் நிறுவனங்கள் யாழ்ப்பாணத்திற்கு உபயோகமானது. ஆனால், இவை நட்டம் இல்லாமல் வருவாயை ஈட்டி நீண்டகாலம் சேவை ஆற்றுமா என்பது தெரியாது. 

வகுப்பு கட்டணங்கள், மாணவர் தொகை, அனுபவம் வாய்ந்த, தகமை பெற்ற விரிவுரையாளர்களை நியமித்தல் என பல விடயங்கள் உள்ளன. இது இலகுவான பயணம் இல்லை. ஆனால், இப்படியான முதலீடு/சேவை வடக்கு மாணவர்களுக்கு பல வாய்ப்புக்களை கொடுக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kandiah57 said:

நல்ல விடயம்    ....எந்த இடம் ?   ....ஊரின் பெயர் என்ன???👍

இனி  பத்தாம் வகுப்பு பெயில். பண்ணியவர்களும்....காசு கொடுத்து பட்டதாரிகள் ஆகலாம்....🤣😂

10 ஆம் வகுப்பு பாஸ் பண்ணாமல் இதைப்படித்து பட்டம் பெற்று வேலை செய்தால் நலம் தானே?

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, nunavilan said:

ஓம். சொத்துக்கள் ……..

தகவலுக்கு நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

சுந்தர்ராஜன் தந்தை சொன்னால் என்ன?

வள்ளுவன் சொல்லுறான் …. “என் நோற்றான் கொல் எனும் சொல்” தான் ஒரு தந்தைக்கு பெருமையாம்.

ஆக…ரம்பா இவரை விட பிரபலம் என்பதால் ரம்பாவின் கணவர் என்பதே சரி. இதில் ஆணாதிக்கம் தேவையில்லை🤣.

தந்தை மகற்காற்று நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்

அவையத்து முந்தி இருக்க செய்யும் தந்தைக்கு, அந்த அவையிலே மரியாதை செய்வதே மகன் செய்யக்கூடிய பெரும் நன்றி.

29 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

 

யாழ் பல்கலைக்கழக அனுமதி கிடைத்தாலும் அங்கு செல்லாது கொழும்பில் சென்று கல்வி கற்பவர்களும் உள்ளார்கள். காரணம், பழமையான, வேலைத்தளத்திற்கு தேவையற்ற மாதிரியான பாடவிதானம் இப்போதும் பின்பற்றப்படுகின்றதாம். 

 

நான் இதை 1993 இலேயே செய்து விட்டேன்.  Bsc படிக்க கூடிய புள்ளிகள் பெற்றிருந்தேன். ஆனால் கணணி கற்க திட்டமிட்டு இருந்தமையால், கொழும்பில் இருக்கும் அத்தனை Courses களையும் விடாமல் படித்தேன்.

தனியார் பல்கலைக்கழகம் யாழில் தொடங்கியமை நல்ல விடயம். க.பொ.த உயர்தர வடிகட்டலில், பல திறமையுள்ள மாணவர்கள் கூட வாய்ப்பு கிடைக்காமல் விடுகினம். வறிய மாணவர்கள் சிலருக்காவது புலமைப் பரிசாக வாய்ப்பு கொடுப்பின் இன்னும் நல்லம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இவர் முன்னர் புலிக்கு காசு சேர்த்தவர் என்கிறார்கள். உண்மையா?

கோழி குருடா இருந்தாலும், குழம்பு ருசியா இருக்கோணும்.

ஊருக்கு உதவி செய்தால், இதெல்லாம் விடுங்க பாஸ்

3 minutes ago, நிழலி said:

தனியார் பல்கலைக்கழகம் யாழில் தொடங்கியமை நல்ல விடயம். க.பொ.த உயர்தர வடிகட்டலில், பல திறமையுள்ள மாணவர்கள் கூட வாய்ப்பு கிடைக்காமல் விடுகினம். வறிய மாணவர்கள் சிலருக்காவது புலமைப் பரிசாக வாய்ப்பு கொடுப்பின் இன்னும் நல்லம்

எனக்கு தெரிந்த வகையில், யாழ் விமான நிலையம் ஊடாக தமிழக தொடர்பு, இந்த நிறுவனத்தினை இலங்கையில் சிறப்பானதொன்றாக மாத்திவிடும் என்கிறார்கள்.

சிங்கள மாணவர்கள் கூட வரலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, nilmini said:

10 ஆம் வகுப்பு பாஸ் பண்ணாமல் இதைப்படித்து பட்டம் பெற்று வேலை செய்தால் நலம் தானே?

ஆமாம் நிச்சயமாக....ஆனால் இணைந்து கொள்ளும் அனைத்து மாணவர்களும்.    தொடர்ந்து படிப்பார்களா. ?.  படிப்பிப்பது புரிய வேண்டுமில்லையா?  அந்த காலத்து ஜேர்மன்காரரின்  குடும்பங்களுக்கு 8...9....10...பிள்ளைகள் இருந்து இருக்கிறது  என்னுடன் வேலை செய்யும் இரண்டு ஜேர்மன்காரர்.  பள்ளிகூடம். போனதில்லை..

கூட்டல். ...கழித்தல்..பெருக்கல்.   மிகவும் சிரமப்படுகிறவர்கள்      

22 minutes ago, Nathamuni said:

சிங்கள மாணவர்கள் கூட வரலாம்.

வரட்டும்....படிக்கட்டும். .....தமிழ் மொழியையும் சேர்த்து    நல்லது எங்களுக்கு 

தமிழ் ஈழம் வேண்டாம் 🤣😂🙏🤪.       

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று தமிழ் மக்கள் இருக்கும் நிலையில் நதிமூலம் ரிசிமூலம் பார்க்காமல் முன்னேற வழியை பார்க்க வேண்டும்.
 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

தந்தை மகற்காற்று நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்

அவையத்து முந்தி இருக்க செய்யும் தந்தைக்கு, அந்த அவையிலே மரியாதை செய்வதே மகன் செய்யக்கூடிய பெரும் நன்றி.

நாதம், மகன் என்ன செய்வது என்பதல்ல.

அவை எப்படி நம்மை அறிமுகப்படுத்துகிறது என்பதே மேட்டர்.

ஒரு காலத்தில் எஸ் ஏ சந்திரசேகர் மகன் விஜை என அறிமுகமாகிய அதே நபர்கள், பின்னாளில் விஜையின் அப்பா எஸ் ஏ சி என அறிமுகமாவது போல்.

தன்னை “இன்னாரின் தந்தை” என அறிமுகபடுத்தும் அளவுக்கு தன்னை விட தன் மகன் வளர்ந்தால் - அதை விட பெருமை தந்தைக்கு உண்டோ….

அதனால்தான் ….இவன் தந்தை என்னோற்றான் கொல் எனும் சொல்…..

இங்கே சொல்….சமூக மதிப்பீடு.

ஆனால் காந்தியின் மகன், அமிர்தலிங்கத்தின் மகன் என இன்றளவும் அறியபடுவோரும் உளர்.

அவர்கள் தத்தம் தந்தையரை விஞ்சவில்லை.

ஆகவே இங்கே கருதுபொருள் - யார் அதிகம் அறிய பட்டவர் என்பதே. 

ஒரு சின்ன உதாரணம். 

திரு சதாசிவம்….

எந்த சதாசிவம்? யோசிக்கிறீர்கள் அல்லவா?

கேணல் கிட்டுவின் தந்தை சதாசிவம்.

சட்டென புரிகிறது இல்லையா?

இவ்வளவுதான் மேட்டர்.

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

கோழி குருடா இருந்தாலும், குழம்பு ருசியா இருக்கோணும்.

ஊருக்கு உதவி செய்தால், இதெல்லாம் விடுங்க பாஸ்

பாஸ், நான் குழம்பு வேண்டாம் என்று எங்கேயும் சொல்லவில்லை.

கோழி குருட்டு கோழி என்பதை செய்தி சொல்லவில்லை எல்லோ? அதுதான் ஒரு தெளிவுபடுத்தல்.

அப்புறம் இதை ஊருக்கு உதவி என நான் கருதவில்லை. ஒரு கல்வி-வியாபார முயற்சி.

எமது பொதுப்பணம், தனியார் முதலீடாக, சிங்கள SLIIT ஐயும் கூட்டி கொண்டு வருகிறது என வேண்டுமானால் எடுக்கலாம். 

 

1 hour ago, குமாரசாமி said:

இன்று தமிழ் மக்கள் இருக்கும் நிலையில் நதிமூலம் ரிசிமூலம் பார்க்காமல் முன்னேற வழியை பார்க்க வேண்டும்.
 

 

பெரியவர் இந்த தாராளவாத கொள்கையை டக்லஸ், கருணா, பிள்ளையான், சுமந்திரன் மீதும் எடுப்பாரா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, goshan_che said:

பெரியவர் இந்த தாராளவாத கொள்கையை டக்லஸ், கருணா, பிள்ளையான், சுமந்திரன் மீதும் எடுப்பாரா?

ஈழத்தமிழர்களின் மூலாய பிரச்சனைகளில் கை வைக்காத மக்கள் அபிவிருத்திகளுக்கு நான் ஆதரவு.

வடபகுதிகளில் மின்சார அபிவிருத்தியும் வீதி புனரமைப்புகளும் செய்தது சம்பந்தனுமல்ல சுமந்திரனுமல்ல. தங்களுக்குள் தாங்கள் புது வீடுகள் கட்டியதை தவிர வேறு ஏது அபிவிருத்திகள் செய்தார்கள்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, goshan_che said:

நாதம், மகன் என்ன செய்வது என்பதல்ல.

அவை எப்படி நம்மை அறிமுகப்படுத்துகிறது என்பதே மேட்டர்.

ஒரு காலத்தில் எஸ் ஏ சந்திரசேகர் மகன் விஜை என அறிமுகமாகிய அதே நபர்கள், பின்னாளில் விஜையின் அப்பா எஸ் ஏ சி என அறிமுகமாவது போல்.

தன்னை “இன்னாரின் தந்தை” என அறிமுகபடுத்தும் அளவுக்கு தன்னை விட தன் மகன் வளர்ந்தால் - அதை விட பெருமை தந்தைக்கு உண்டோ….

அதனால்தான் ….இவன் தந்தை என்னோற்றான் கொல் எனும் சொல்…..

இங்கே சொல்….சமூக மதிப்பீடு.

ஆனால் காந்தியின் மகன், அமிர்தலிங்கத்தின் மகன் என இன்றளவும் அறியபடுவோரும் உளர்.

அவர்கள் தத்தம் தந்தையரை விஞ்சவில்லை.

ஆகவே இங்கே கருதுபொருள் - யார் அதிகம் அறிய பட்டவர் என்பதே. 

ஒரு சின்ன உதாரணம். 

திரு சதாசிவம்….

எந்த சதாசிவம்? யோசிக்கிறீர்கள் அல்லவா?

கேணல் கிட்டுவின் தந்தை சதாசிவம்.

சட்டென புரிகிறது இல்லையா?

இவ்வளவுதான் மேட்டர்.

 

இது முட்டையா, கோழியா முதலில் வந்தது கதை.

தந்தையோடு கல்வி போம்.

பொறுப்பான தந்தை வாய்ப்பது தவம் அய்யா.

அப்படி ஒரு தந்தை அமைந்து அவரால் மகன் சபையில் கெளரவிக்கப்பட்டால், தந்தைக்கு நன்றி சொல்வது நல்லறம்

 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இன்று தமிழ் மக்கள் இருக்கும் நிலையில் நதிமூலம் ரிசிமூலம் பார்க்காமல் முன்னேற வழியை பார்க்க வேண்டும்.
 

அண்ணை  நாங்கள்...அதாவது இலங்கை தமிழர்கள் இப்போது நல்ல நிலையில் தான் இருக்கிறோம்......சொந்த நாடு தான் இல்லை     

இந்தியா தமிழ்நாட்டில் அரசியல் பற்றியும் இலங்கை தமிழன் சரி..பிழை சொல்லுகிறார்கள் 

ரஷ்யா உக்ரேன் விடயத்திலும் கூட இலங்கை தமிழன்    நியாயம் பேசுகிறார்கள்.  

ஈராக்   லிபியா   சிரியா.....போன்ற நாடுகளில் அமெரிக்கா கூட்டணி   போர் புரிந்தது பிழை என்றும்  போதிக்கிறது கூட இலங்கை தமிழர்கள் தான் 

1975 முன்   இப்படி எல்லாம் சொன்னேமா?.  இல்லையே? 2023.  பாரிய முன்னேற்றம் கண்டுள்ளோம் ........

இலங்கை தமிழர்களால்.   செய்ய முடியதா இரண்டு விடயங்கள்.......ஒன்று இலங்கையில் பெரும்பான்மை இனமாகி.   இலங்கையில் ஆட்சியைக் கைப்பற்றுவது 

இரண்டாவது தனி தமிழ்ஈழம்  அமைப்பது   ....இவை இரண்டையும் செய்யலாமா   ??????எப்படி??????'

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 minutes ago, Kandiah57 said:

இலங்கை தமிழர்களால்.   செய்ய முடியதா இரண்டு விடயங்கள்.......ஒன்று இலங்கையில் பெரும்பான்மை இனமாகி.   இலங்கையில் ஆட்சியைக் கைப்பற்றுவது 

இரண்டாவது தனி தமிழ்ஈழம்  அமைப்பது   ....இவை இரண்டையும் செய்யலாமா   ??????எப்படி??????

இலங்கையில் ஏன் தமிழினம் பெரும்பான்மையாக வேண்டும்? நீங்கள் வாழும் ஜேர்மனியின் தற்போதைய பிறப்புவீதம் நிலவரம் என்ன? ஏன்  ஜேர்மனிய அரசு வெளிநாட்டு மக்களை உள்வாங்குகின்றது?

நீங்கள் பல மத பல இன பல மொழிக்கு உரித்தான ஐரோப்பிய ஒன்றியத்தில் வாழ்ந்து கொண்டு எப்படி இலங்கையில் தனிநாடு கோரலாம்? இலங்கையில் இனப்பிரச்சனை இல்லையென்று நிரூபிக்கப்பட்டு விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, Kandiah57 said:

இந்தியா தமிழ்நாட்டில் அரசியல் பற்றியும் இலங்கை தமிழன் சரி..பிழை சொல்லுகிறார்கள் 

ரஷ்யா உக்ரேன் விடயத்திலும் கூட இலங்கை தமிழன்    நியாயம் பேசுகிறார்கள்.  

ஈராக்   லிபியா   சிரியா.....போன்ற நாடுகளில் அமெரிக்கா கூட்டணி   போர் புரிந்தது பிழை என்றும்  போதிக்கிறது கூட இலங்கை தமிழர்கள் தான்

கந்தையா அண்ணா, இலங்கை தமிழர்கள் இவ்வளவு நியாயங்களும், போதனைகளும் எங்கிருந்து கம்பீரமாக சொல்லுகிறார்கள் மேற்குலகநாடுகளில் பாதுகாப்பாவும் வசதிகளுடனும் இருந்தபடி.

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, குமாரசாமி said:

இலங்கையில் ஏன் தமிழினம் பெரும்பான்மையாக வேண்டும்? நீங்கள் வாழும்

எங்களை நாங்களே’ ஆள்வாதற்கு.......மட்டுமல்ல சிங்களவன். முஸ்லிம்   களையும்.  சேர்த்து ஆளா 🤣

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, குமாரசாமி said:

ஈழத்தமிழர்களின் மூலாய பிரச்சனைகளில் கை வைக்காத

தலைவர் வரட்டும் காசு தல்லாம் கோஸ்டிகள் மூலத்தில் கை வைக்காதா அப்பிரெசெண்டுகளா?

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, குமாரசாமி said:

நீங்கள் பல மத பல இன பல மொழிக்கு உரித்தான ஐரோப்பிய ஒன்றியத்தில் வாழ்ந்து கொண்டு எப்படி இலங்கையில் தனிநாடு கோரலாம்? இலங்கையில் இனப்பிரச்சனை இல்லையென்று நிரூபிக்கப்பட்டு விட்டது.

இங்கே சட்டம் ஆள்கிறது........இலங்கையில் சிங்கள இனவாதம். ஆள்கிறது.    இங்கு உள்ளது போல் சகல உரிமைகளும். இலங்கையில் இருந்தால்   நான் ஏன் இங்கே இருக்கிறேன்  ? ...தமிழர்கள் ஏன் தமிழ்ஈழம். கேக்கணும்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.