Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கீழடி அருங்காட்சியகத்தில் இவ்வளவு பொருட்களா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கீழடி அருங்காட்சியகத்தில் இவ்வளவு பொருட்களா?

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,பிரபுராவ் ஆனந்த
  • பதவி,பிபிசி தமிழ்
  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்
கீழடி அருங்காட்சியகம்

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2 ஏக்கர் பரப்பில் 31 ஆயிரம் சதுர அடியில் சுமார் 18 கோடியே 43 லட்ச ரூபாய் செலவில் பாரம்பரிய செட்டிநாடு கட்டட வடிவில் உருவாக்கப்பட்ட கீழடி அருங்காட்சியகத்தை பொது மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.

தமிழக தொல்லியல் துறை கீழடி அகழாய்வு தளத்தில் 2018ம் ஆண்டு முதல் தொடர்ந்து ஐந்து கட்டங்களாக அகழாய்வு மேற்கொண்டு வருகிறது. அகழாய்வுகள் மூலம் கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட தொல் பொருட்களை உலகத் தமிழர்கள், பொதுமக்கள் காணும் வகையில் தமிழக மரபுசார் கட்டடக்கலை அடிப்படையில், கீழடி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

6 தலைப்பில் தனித்தனி கட்டடம்

கீழடி அருங்காட்சியகம்

கீழடி அருங்காட்சியகத்தில் 'மதுரையும் கீழடியும்', 'வேளாண்மையும் நீர் மேலாண்மையும்', 'கலம் செய்கோ', 'ஆடையும் அணிகலன்களும்', 'கடல் வழி வணிகம்', 'வாழ்வியல்' என்னும் 6 தலைப்பின் அடிப்படையில் தனித்தனி கட்டிடங்களில் தொல்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழர்களின் தொன்மை, பண்பாடு, நாகரிகம், கல்வியறிவு, எழுத்தறிவு, உலகின் பல்வேறு பகுதிகளில் கொண்டிருந்த வணிகத் தொடர்பு ஆகியவற்றினை பறைசாற்றும் வகையில், வெளிக்கொணரும் வகையில், உலகத் தமிழர்கள் பெருமை கொள்ளும் வகையில், கீழடி அருங்காட்சியகம் அமைந்துள்ளது.

 

தமிழ்நாட்டின் தொன்மை மற்றும் வரலாற்றையும், கீழடியின் முக்கியத்துவத்தையும் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் 15 நிமிட ஒளி ஒலி காட்சியுடன் இதுவரை கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

18 ஆயிரம் தொல்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன

அருங்காட்சியகத்தில் 2600 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் பண்பாட்டின் பண்டைய கால நதிக்கரை நாகரிக வாழ்வியலை தேடி மேற்கொண்ட அகழாய்வில் செங்கல் கட்டுமானம், யானை தந்தத்தாலான பொருட்கள், மண்பாண்டங்கள், விரல் அளவு பானை, ஆட்டக்காய்கள், முதுமக்கள் தாழிகள், 4429 மணிகள், 601 வட்டச் சில்லுகள், 80 ஆட்டக் காய்கள், 16 சுடுமண் சிற்பம், 14 நாணயங்கள், தங்க அணிகலன்கள் ஆகியவைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

சிறு சிறு பொருட்களின் பாதுகாப்பிற்கான நவீன விளக்குகளுடன் கூடிய கண்ணாடி பேழைகள் என உலக தரத்தில் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அருங்காட்சியகத்தின் வெளியில் நான்கு மாடங்களுடன் கூடிய தெப்பக்குளம், கல் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளன.

அருங்காட்சியகத்தின் நுழைவு வாயிலில் தமிழகத்தின் முக்கிய அகழாய்வு தளங்களான சிவகளை, கொடுமணல், அரிட்டாபட்டி, மயிலாடும்பாறை உள்ளிட்ட 21 தளங்கள் பற்றிய வரைபடம் பொருத்தப்பட்டுள்ளது. பண்டைய கால தமிழர்களின் வாழ்வியல் முறைகளையும் அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கீழடி அருங்காட்சியகத்தை ஆர்வத்துடன் பொது மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.

கீழடி அருங்காட்சியகம்
 
படக்குறிப்பு,

சிவானந்தம்

க்யூஆர் கோடு மூலம் வெளிநாடுகளில் உள்ள மக்கள் கண்டு ரசிக்கலாம்

கீழடி அருங்காட்சியகம் குறித்து தமிழக தொல்லியல் துறை ஆணையர் சிவானந்தம் பிபிசி தமிழிடம் பேசுவையில், கீழடி பகுதியில் நடைபெற்ற நான்கு முதல் எட்டாம் கட்ட அகழாய்வில் கிடைத்த 18 ஆயிரம் தொல்பொருட்களை அதன் தன்மைக்கு ஏற்ப பிரித்து காட்சிப்படுத்தியுள்ளோம்.

இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் 31 ஆயிரம் சதுர அடியில் ஆறு கட்டிடங்களில் கீழடி அருங்காட்சியகம் உலகத்தரம் வாய்ந்ததாக அமையப்பெற்றுள்ளது. கீழடி பகுதியில் நடைபெற்ற அகழாய்வை நேரடியாக வந்து பார்க்க இயலாத மக்கள் இந்த அருங்காட்சியகத்தின் மூலம், அகழாய்வில் எவ்வாறு தொல்பொருட்கள் கிடைத்தது என்பதை பார்க்கும்படி வசதி செய்யப்பட்டுள்ளது.

அகழாய்வில் எடுக்கப்பட்ட பொருட்கள் மட்டுமல்லாமல் தொல்பொருட்களை எடுக்க பயன்படுத்தப்பட்ட கருவிகளும் 'கீழடியும் வைகையும்' என்ற பெயரில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 3டி அனிமேஷன் உள்ளிட்டவற்றால் வீடியோ மற்றும் ஆடியோ வடிவில் தொல்பொருட்கள் கீழடி அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.

கீழடி அருங்காட்சியகத்தில் இருக்கக்கூடிய தொல்பொருட்களை வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருக்கக்கூடிய மக்கள் இங்குள்ள க்யூ ஆர் கோடுகளை பயன்படுத்தி கண்டு ரசிக்கக் கூடிய வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கீழடி

மத்திய, மாநில தொல்லியல் துறை இணைந்து அகழாய்வு மேற்கொள்ள வேண்டும்

அடுத்த கட்ட அகழாய்வில் மாநில தொல்லியல் துறை மத்திய தொல்லியல் துறையுடன் இணைந்து அகழாய்வு செய்தால் கூடுதல் சிறப்பாக இருக்கும் என்று கூறுகிறார். முன்னாள் மத்திய தொல்லியல் துறை அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணன். கீழடி அருங்காட்சியகம் குறித்து பிபிசி தமிழிடம் அவர் பேசுகையில், “கீழடியில் அருங்காட்சியகம் நல்ல முறையில் சிறப்பாக அமைந்துள்ளது.

அருங்காட்சியகத்தில் ஒரு சில இடங்களில் தொல்பொருட்களின் புகைப்படங்கள் மட்டுமே உள்ளன. எனவே அகழாய்வில் எடுக்கப்பட்ட பொருட்கள் அனைத்தையும் காட்சிபடுத்த மாநில தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கீழடியில் மத்திய தொழில்துறை மேற்கொண்ட அகழாய்வில் கிடைக்கப்பெற்ற 5200 பொருட்கள் நீதிமன்ற உத்தரவின் படி சென்னையில் உள்ளன. அவற்றைப் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், அதை ஒப்படைப்பது குறித்து மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும் ” என்றார்.

கீழடி அருங்காட்சியகம்
 
படக்குறிப்பு,

திவ்யா

ஆச்சரியமாக பார்க்கும் குழந்தைகள்

கீழடி அருங்காட்சியத்தை பார்க்க வந்திருந்த மதுரையைச் சேர்ந்த திவ்யா பிபிசி தமிழிடம் பேசுகையில், “பண்டைய தமிழர்கள் வாழ்ந்த முறை, அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் உள்ளிட்டவைகளை நேரில் பார்த்து தெரிந்து கொள்ளும் அளவில் மிக சிறப்பாக கீழடி அருங்காட்சியகம் அமைந்துள்ளது.

அருங்காட்சியகம் வரும் குழந்தைகள் மிகவும் ஆர்வத்துடன் தொல்லியல் பொருட்களை கண்டு ரசிப்பதும் அதனைப் பற்றி அறிந்து கொள்ளவும் மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர்.

தொல்பொருட்கள் வைக்கப்பட்டுள்ள ஆறு கட்டிடங்களில் எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது. பண்டைய தமிழர்கள் எவ்வாறு வணிகம் செய்தார்கள் என்பதை சிறப்பாக வெளிப்படுத்தும் கடல் வணிகம் கட்டிடம்தான்.

அங்கு பண்டைய தமிழர்கள் வணிகத்தில் ஈடுபட்டதற்கான பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.அவர்கள் வணிகத்திற்காக பயன்படுத்திய பொருட்கள், நாணயம், கடல் வழி பயண கருவிகள் உள்ளிட்டவை வியப்பூட்டும் வகையில் உள்ளன.

பண்டைய காலத்தில் பெண்களுக்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதற்கு சான்றாக அவர்கள் பயன்படுத்திய யானை தந்தத்தால் ஆன சீப்பு, கண்ணுக்கு பயன்படுத்தப்படும் கண் மை, அணிகலன்கள், முத்துமணி, தங்கம், பாசி, உள்ளிட்டவைகளை பார்ப்பதற்கு மிகவும் அருமையாக இருந்தது” என்றார்.

கீழடி அருங்காட்சியகம்
 
படக்குறிப்பு,

முகேஷ்

அருங்காட்சியகத்தில் இருந்து வெளியே வர மனம் இல்லை

பொறியியல் கல்லூரி மாணவர் முகேஷ் கீழடி அருங்காட்சியம் தொடர்பான தனது அனுபவம் குறித்து பிபிசி தமிழிடம் பேசுவையில்,“அகரம், கீழடி, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வந்த அகழாய்வுகளை நேரடியாக சென்று பார்த்த அனுபவம் எனக்கு இருக்கிறது. ஆனால் அகழாய்வில் எடுக்கப்பட்ட பொருட்களை இதுவரை நான் பார்த்ததில்லை.

தற்போது, கீழடி அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்களை பார்க்கும் போது மிகவும் பிரமிப்பாக உள்ளது. பண்டைய தமிழர்களின் வாழ்க்கை முறையை நேரடியாக பார்த்து உணரக்கூடிய அளவில் உள்ளது. இங்கு வைக்கப்பட்டுள்ள சில பொருட்கள் முப்பரிமாண வடிவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

பண்டைய தமிழர்கள் விளையாட்டிற்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுத்திருந்தனர் என்பதை பறைசாற்றும் விதமாக அவர்கள் பயன்படுத்திய விளையாட்டு பொருட்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

கீழடி அருங்காட்சியகம்

குழந்தைகள் பயன்படுத்திய பொம்மைகள், விலங்குகளின் எலும்புகள், இரும்பு ஆயுதங்கள், நாணயங்கள், பானை என ஏராளமான பொருட்கள் சிறப்பான முறையில் காட்சிப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன.

பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் கட்டாயம் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட வேண்டும். கீழடியை பார்க்கும் மாணவர்களுக்கு தொல்லியல் மீதான ஆர்வம் அதிகரிக்கும். இதனால் பண்டைய தமிழர்களின் வாழ்வியல் மேலோங்கும்.

கீழடி அருங்காட்சியகத்தை பார்த்துவிட்டு வெளியே வரும்போது சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து விட்டு வருவது போன்ற உணர்வு ஏற்படுகிறது” என்று தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/c7242rx6qxzo

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அருமையான தகவல்கள் ஏராளன். நான் இவற்றைப்பற்றி ஆரம்பத்தில் இருந்தே வாசித்துக்கொண்டு வருகிறேன் காணொளிகள் உற்பட)

  • கருத்துக்கள உறவுகள்

அன்றே அப்படி வாழ்ந்திருக்கிறார்கள்.......தகவல்களுக்கு நன்றி ஏராளன் ........!  👍

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.