Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜேர்மனியில் துப்பாக்கிச் சூடு: ஏழு பேர் உயிரிழப்பு- எட்டு பேர் காயம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியில் துப்பாக்கிச் சூடு: ஏழு பேர் உயிரிழப்பு- எட்டு பேர் காயம்!

ஜேர்மனியில் துப்பாக்கிச் சூடு: ஏழு பேர் உயிரிழப்பு- எட்டு பேர் காயம்!

ஜேர்மனியின் ஹம்பர்க் நகரத்தில் உள்ள யெகோவாவின் தேவாலயத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், ஏழு பேர் உயிரிழந்துள்ளதாகவும், எட்டு பேர் காயமடைந்ததாகவும் உள்ளூர் ஊடகங்களை மேற்கொள்காட்டி ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

நகரின் க்ரோஸ் போர்ஸ்டல் மாவட்டத்தில் உள்ள டீல்பேஜ் வீதியில் உள்ள யெகோவாவின் தேவாலயத்தில் 21:15 மணியளவில், துப்பாக்கிச் சூடு நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் ஒரு குற்றவாளி இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். மேலும், தாக்குதலுக்கான நோக்கம் தெளிவாக இல்லை என்று பொலிஸார் தெரிவித்தனர். மேலும், பாதிக்கப்பட்டவர்களை பொலிஸார். இன்னும் அடையாளம் காணவில்லை.

ஊகங்களைப் பகிரவோ அல்லது வதந்திகளைப் பரப்பவோ வேண்டாம் என்று பொதுமக்களுக்கு பொலிஸ்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

யெகோவாவின் கிறிஸ்தவ அடிப்படையிலான மத இயக்கம், 19ஆம் நூற்றாண்டின் இறுதியில், சார்லஸ் டேஸ் ரஸ்ஸல் தலைமையில் அமெரிக்காவில் நிறுவப்பட்டது. இந்த இயக்கத்தின் தலைமையகம் நியூயோர்க்கில் உள்ளது.

https://athavannews.com/2023/1326992

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

யெகோவாவின் கிறிஸ்தவ அடிப்படையிலான மத இயக்கம், 19ஆம் நூற்றாண்டின் இறுதியில், சார்லஸ் டேஸ் ரஸ்ஸல் தலைமையில் அமெரிக்காவில் நிறுவப்பட்டது. இந்த இயக்கத்தின் தலைமையகம் நியூயோர்க்கில் உள்ளது.

https://athavannews.com/2023/1326992

இண்டைக்கு மத்தியானம் போல எனது செல்போனுக்கு பிரேக்கிங் நியூஸ் என்று அறிவிப்பு வந்து. பார்த்தவுடன் யாழ் கருத்துக்களத்தில் தேவாலயங்களை பற்றி விவாதித்து ஞாபகம் வந்தது.

Edited by nilmini

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, nilmini said:

இண்டைக்கு மத்தியானம் போல எனது செல்லபோனுக்கு பிரேக்கிங் நியூஸ் என்று அறிவிப்பு வந்து. பார்த்தவுடன் யாழ் கருத்துக்களத்தில் தேவாலயங்களை பற்றி விவாதித்து ஞாபகம் வந்தது.

உண்மைதான்... சில விடயங்கள், எம்மை அறியாமலே... 
முன்பே அதைப்பற்றி கதைத்தோ, சிந்தித்தோ இருப்போம்.
அது நடக்கும் பொது... ஆச்சரியமாக இருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, தமிழ் சிறி said:

உண்மைதான்... சில விடயங்கள், எம்மை அறியாமலே... 
முன்பே அதைப்பற்றி கதைத்தோ, சிந்தித்தோ இருப்போம்.
அது நடக்கும் பொது... ஆச்சரியமாக இருக்கும்.

யெகோவாகாரருக்கை வெடிச்சத்தம் எண்ட படியால் கொஞ்சம் யோசிக்க வேண்டிக்கிடக்கு

  • கருத்துக்கள உறவுகள்

உயிரிழந்தோருக்கு அனுதாபங்கள்.

உக்ரேன், சிரியா, துருக்கி உயிர் மட்டுமா உயிர், ஜேர்மன் உயிர் என்ன ஹைகோர்ட்டா?

கல் நெஞ்சகாரர்கள். ஒருவர் கூட அனுதாபம் கூறவில்லை.

போலி மனித உரிமை, ஜனநாயகவாதிகள்.

பிகு

யார் செய்திருப்பாகள்? வேற யார் உக்கல் உக்ரேந்தான் (ஊர்லாப் போன நேரம், கொடியில் போட்ட உள்பாவாடை காணாமல் போனாலும் உக்ரேந்தான் காரணம் - ஆங்).

  • கருத்துக்கள உறவுகள்

உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த கண்ணீரஞ்சலிகள்......இனிமேல் கோவில்கள் தேவாலயங்கள்.........போன்ற இடங்களுக்கு போவதையும் நிறுத்தி விட வேண்டும் 

சரி வரமாட்டார்களா  ??🤣

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டு செய்திகளிலும் சொல்லபட்டது. யேர்மன் அதிபர் கொடூரமான வன்முறை செயல் என்று கண்டித்திருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

அகால மரணமடைந்தோர்க்கு ஆழ்ந்த இரங்கல்கள்.........!  

  • கருத்துக்கள உறவுகள்

 மதவாதிகள் மீது "மதங்" கொண்டவர்கள் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். 
அகால மரணமடைந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Teaser-Bild

இவர்தான் அந்த கொலையாளியாம். இவர் ஜெகோவாவில் இருந்து விலகியவராம்.
அதாவது பழைய ஜெகோவாகாரர். எனக்கு பிரச்சனை தெரியும்.சட்டபூர்வமாக வெளியே வரும் தானே.

17 hours ago, goshan_che said:

யார் செய்திருப்பாகள்? வேற யார் உக்கல் உக்ரேந்தான் (ஊர்லாப் போன நேரம், கொடியில் போட்ட உள்பாவாடை காணாமல் போனாலும் உக்ரேந்தான் காரணம் - ஆங்).

இந்த காவித்திரிதல் உங்களுக்கும் நீங்கள் சார்ந்தோருக்கும் நிர்வாகத்தினருக்கும் எவ்வித பிரச்சனையுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, குமாரசாமி said:

இவர்தான் அந்த கொலையாளியாம். இவர் ஜெகோவாவில் இருந்து விலகியவராம்.
அதாவது பழைய ஜெகோவாகாரர்.

அண்ணை இன்னும் அந்த அனுதாப செய்தி வரவில்லை.

அல்லது செத்தவர்கள் ஜெகோவா என்றால் அனுதாபம் தேவையில்லை என நினைக்கிறீர்களோ?

41 minutes ago, குமாரசாமி said:

இந்த காவித்திரிதல் உங்களுக்கும் நீங்கள் சார்ந்தோருக்கும் நிர்வாகத்தினருக்கும் எவ்வித பிரச்சனையுமில்லை.

இல்லை இப்ப எங்க அடி விழுந்தாலும் காலை உக்ரேனில் தூக்குவதுதானே டிரெண்ட். அது போல இருக்கும் என நினைத்தேன். இல்லை என்றால் ஓகே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, goshan_che said:

அண்ணை இன்னும் அந்த அனுதாப செய்தி வரவில்லை.

அல்லது செத்தவர்கள் ஜெகோவா என்றால் அனுதாபம் தேவையில்லை என நினைக்கிறீர்களோ?

நான் வளர்த்து விட்ட என் உறவுகள் ஜெகோவாவிற்கு மாறிய பின் என்னையும் நான் வணங்கும் கடவுளையும் சாத்தான்,பேய்கள் என்றபின் அவர்கள் மனிதர்கள் என தோன்றவில்லை.என் பார்வையில் அவர்கள் உயிர் உள்ள ஜடங்கள்.

தாங்களும் தாங்கள் சார்ந்தோரும் மட்டுமே இந்த பூமியில் வாழ தகுதியுள்ளவர்கள் என நினைப்பவர்களுக்கு ஏது அஞ்சலி?

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

நான் வளர்த்து விட்ட என் உறவுகள் ஜெகோவாவிற்கு மாறிய பின் என்னையும் நான் வணங்கும் கடவுளையும் சாத்தான்,பேய்கள் என்றபின் அவர்கள் மனிதர்கள் என தோன்றவில்லை.என் பார்வையில் அவர்கள் உயிர் உள்ள ஜடங்கள்.

எனக்கும் ஜெகோவாவினர் மீது எந்த நல்ல அபிபிராயமும் இல்லை. இருப்பதெல்லாம் கடுப்பும், நக்கலும்தான். உங்கள் தனிப்பட்ட காரணத்தை புரிந்து கொள்கிறேன்.

ஆனால் ஒரு செய்தி திரியில் (துயர் பகிர்வோம் திரியில் அல்ல) பூகம்ப செய்திக்கு மறந்து போய் அனுதாபம் தெரிவிக்காதோர் எல்லாம் மனித நேயம் அற்றோர் என எழுதுவது சரி என்றால் - தனிபட்ட காரணம் இருந்தாலும் ஒரு மனித இழப்பை இட்டு அனுதாபம் கூட தெரிவிக்க முடியாமல் இருப்பவரையும் அதே சட்டியில் வறுக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

நான் வளர்த்து விட்ட என் உறவுகள் ஜெகோவாவிற்கு மாறிய பின் என்னையும் நான் வணங்கும் கடவுளையும் சாத்தான்,பேய்கள் என்றபின் அவர்கள் மனிதர்கள் என தோன்றவில்லை.என் பார்வையில் அவர்கள் உயிர் உள்ள ஜடங்கள்.

தாங்களும் தாங்கள் சார்ந்தோரும் மட்டுமே இந்த பூமியில் வாழ தகுதியுள்ளவர்கள் என நினைப்பவர்களுக்கு ஏது அஞ்சலி?

 

நானும்  அஞ்சலி எழுதவில்லை  அண்ணா

இது  காரணம் தான்

நான் உண்மையான  பேய்  பிசாசு  பிடித்தவர்களை அவர்களது  கூட்டத்தில்

அவர்களால்  இனம் காணப்பட்டவர்களிடம்  கண்டுகொண்டேன்...

செத்தவர்கள்  தானே  பேய் பிசாசு ஆகமுடியும்??

அப்போ பேய் பிசாசுகளுக்கு  எதுக்கு மீண்டும்  அஞ்சலி???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.