Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பின்லாந்து நாடாளுமன்றத் தேர்தல்: மத்திய வலதுசாரி தேசிய கூட்டணி கட்சி வெற்றி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பின்லாந்து நாடாளுமன்றத் தேர்தல்: மத்திய வலதுசாரி தேசிய கூட்டணி கட்சி வெற்றி!

பின்லாந்து நாடாளுமன்றத் தேர்தல்: மத்திய வலதுசாரி தேசிய கூட்டணி கட்சி வெற்றி!

பின்லாந்தில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், முக்கிய கன்சர்வேடிவ் கட்சியான மத்திய வலதுசாரி தேசிய கூட்டணி கடுமையான போராட்டத்திற்கு மத்தியில் வெற்றிபெற்றுள்ளது.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்ட நிலையில், மத்திய வலதுசாரி தேசிய கூட்டணி கட்சி (என்சிபி) 20.8 சதவீத வாக்குகளுடன் முதலிடம் பிடித்தது. அவர்களைத் தொடர்ந்து வலதுசாரி ஜனரஞ்சகக் கட்சியான தி ஃபின்ஸ் 20.1 சதவீதத்துடன், பிரதமர் சன்னா மரின் சமூக ஜனநாயகக் கட்சியினர் 19.9 சதவீதத்தைப் பெற்றனர்.

முதல் மூன்று கட்சிகளும் தலா 20 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ள நிலையில், எந்தக் கட்சியும் தனித்து ஆட்சி அமைக்கும் நிலையில் இல்லை. நோர்டிக் நாட்டின் நாடாளுமன்றத்தில் 200 இடங்களுக்கு 22 கட்சிகளைச் சேர்ந்த 2,400க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

தலைநகர் ஹெல்சின்கியில் உள்ள ஒரு உணவகத்தில் ஆதரவாளர்களால் சூழப்பட்ட நிலையில், ‘எங்களுக்கு மிகப்பெரிய ஆணை கிடைத்துள்ளது’ என்று மத்திய வலதுசாரி தேசிய கூட்டணி கட்சி தலைவர் பெட்டேரி ஓர்போ கூறினார்.

‘இந்த முடிவின் அடிப்படையில், தேசிய கூட்டணி கட்சியின் தலைமையில் பின்லாந்தில் புதிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடங்கப்படும்,’ என்று அவர் கூறினார்.

37 வயதில் ஐரோப்பாவின் இளம் தலைவர்களில் ஒருவரான மரின், தோல்வியை ஒப்புக்கொண்ட அதேவேளை, தேர்தலில் வெற்றி பெற்றவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

உலகெங்கிலும் உள்ள ரசிகர்களால் முற்போக்கான புதிய தலைவர்களுக்கு ஆயிரம் வருட முன்மாதிரியாக கருதப்படும் மரின், உக்ரைனுக்கு குரல் கொடுத்ததற்காகவும், நேட்டோவில் சேர பின்லாந்தின் வெற்றிகரமான விண்ணப்பத்தை ஆதரிப்பதில் ஜனாதிபதி சவுலி நினிஸ்டோவுடன் இணைந்து அவரது முக்கிய பங்கிற்காகவும் சர்வதேச பாராட்டைப் பெற்றார்.

ஆனால் வீட்டில், அவர் தனது விருந்து மற்றும் ஓய்வூதியம் மற்றும் கல்வி உட்பட அவரது அரசாங்கத்தின் ஆடம்பரமான பொதுச் செலவுகளுக்காக கடுமையான விமர்சனங்களையும் எதிர்கொண்டார்.

https://athavannews.com/2023/1329253

  • கருத்துக்கள உறவுகள்

பின்லாந்து தேர்தலில் பிரதமர் சனா மரீனின் கட்சி தோல்வி

Published By: SETHU

03 APR, 2023 | 12:31 PM
image

பின்லாந்தின் பாராளுமன்றத் தேர்தலில் பிரதமர் சனா மரீனின் சமூக ஜனநாயகக் கட்சி தோல்வியடைந்துள்ளது. 

200 ஆசனங்களைக் கொண்ட பின்லாந்து  பாராளுமன்றத்துக்கான பொதுத்தேர்தல் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

99 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில்,  பேத்தரி ஓர்போ தலைமையலான தேசியக் கூட்டணி எனும் வலதுசாரி கட்சி 48 ஆசனங்களை வென்றுள்ளது. கடந்த  தடவையைவிட 10 ஆசனங்களை அக்கட்சி அதிகம் வென்றுள்ளது.

ரைக்கா பியூரா தலைமையிலான, குடியேற்றவாசிகளுக்கு எதிரான, பின்ஸ் கட்சி 46 ஆசனங்களையும்  பிரதமர் சனா மரின் தலைமையிலான சமூக ஜனநாயகக் கட்சி 43 ஆசனங்களையும் வென்றுள்ளன. 

கடந்த தடவையைவிட சமூக ஜனநாயகக் கட்சி 3 ஆசனங்களை அதிகம் வென்ற போதிலும், ஆசனங்கள் பட்டியலில் அக்கட்சி 3ஆவது இடத்தையே பெற்றுள்ளது. 

2019 ஆம் ஆண்டு 34 வயதில் பின்லாந்து பிரதமராக சனா மரீன் பதவியேற்றார். அப்போது உலகின் மிக இளமையான பிரதமராக அவர் விளங்கினார்.

தேர்தலில் ஆகக்கூடுதலான ஆசனங்களைப் பெறும் கட்சி ஆட்சியமைப்பதற்கான முதல் வாய்ப்பை பெறும்.

இந்நிலையில், புதிய அரசாங்கம் அமைப்பது குறித்து பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாக தேசியக் கூட்டணியின் தலைவர் பேத்தரி   ஓர்போ தெரிவித்துள்ளார். 

https://www.virakesari.lk/article/152025

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஏராளன் said:

பின்லாந்து தேர்தலில் பிரதமர் சனா மரீனின் கட்சி தோல்வி

Published By: SETHU

03 APR, 2023 | 12:31 PM
image

பின்லாந்தின் பாராளுமன்றத் தேர்தலில் பிரதமர் சனா மரீனின் சமூக ஜனநாயகக் கட்சி தோல்வியடைந்துள்ளது. 

200 ஆசனங்களைக் கொண்ட பின்லாந்து  பாராளுமன்றத்துக்கான பொதுத்தேர்தல் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

99 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில்,  பேத்தரி ஓர்போ தலைமையலான தேசியக் கூட்டணி எனும் வலதுசாரி கட்சி 48 ஆசனங்களை வென்றுள்ளது. கடந்த  தடவையைவிட 10 ஆசனங்களை அக்கட்சி அதிகம் வென்றுள்ளது.

ரைக்கா பியூரா தலைமையிலான, குடியேற்றவாசிகளுக்கு எதிரான, பின்ஸ் கட்சி 46 ஆசனங்களையும்  பிரதமர் சனா மரின் தலைமையிலான சமூக ஜனநாயகக் கட்சி 43 ஆசனங்களையும் வென்றுள்ளன. 

கடந்த தடவையைவிட சமூக ஜனநாயகக் கட்சி 3 ஆசனங்களை அதிகம் வென்ற போதிலும், ஆசனங்கள் பட்டியலில் அக்கட்சி 3ஆவது இடத்தையே பெற்றுள்ளது. 

2019 ஆம் ஆண்டு 34 வயதில் பின்லாந்து பிரதமராக சனா மரீன் பதவியேற்றார். அப்போது உலகின் மிக இளமையான பிரதமராக அவர் விளங்கினார்.

தேர்தலில் ஆகக்கூடுதலான ஆசனங்களைப் பெறும் கட்சி ஆட்சியமைப்பதற்கான முதல் வாய்ப்பை பெறும்.

இந்நிலையில், புதிய அரசாங்கம் அமைப்பது குறித்து பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாக தேசியக் கூட்டணியின் தலைவர் பேத்தரி   ஓர்போ தெரிவித்துள்ளார். 

https://www.virakesari.lk/article/152025

இவர்  இனிமேல் எந்தத் தடையுமில்லாமல் பாட்டிகளில் குத்தாட்டம் போடலாம் 😀

  • கருத்துக்கள உறவுகள்

சன்னா மரின் 3 ஆவது இடமா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

சன்னா மரின் 3 ஆவது இடமா?

ஓம்..20.9% பழமைவாதிகள் , 20.1 தீவிர வலதுசாரிகள், 19.9 சனாவின் சமூக ஜனநாயக கட்சி.

ஆனால் போன தேர்தலை விட சனாவின் கட்சி வாக்கு வீதத்தையும், எம்பிகள் எண்ணிக்கையையும் கூட்டி உள்ளது.

பொதுவாக பிரித்தானியாவில் ஒரு தேர்தல் தோல்வியோடு ஒரு பிரதமரின் அரசியல் எதிர்காலம் முடிந்துவிடும் (அரிதான விதிவிலக்குகள் உண்டு). 

இத்தாலியில் மீண்டும், மீண்டும் கேட்பார்கள்.

பின்லாந்தின் அரசியல் கலாச்சாரம் எப்படியோ? @nochchi @Elugnajiru

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

இவர்  இனிமேல் எந்தத் தடையுமில்லாமல் பாட்டிகளில் குத்தாட்டம் போடலாம் 😀

தனி மனித சுதந்திரங்களையும்

தலைமையத்துவத்தையும் கலந்து இவ்வாறு குளப்புவனூடாக

இனிமேல் அடுத்த  தலைமுறையினர் வரவேண்டும்  அடுத்து  கட்டங்களுக்கு  உலகம் நகரணும் என்ற வாதமும் இத்துடன் முடிவுக்கு  வருகிறது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, விசுகு said:

தனி மனித சுதந்திரங்களையும்

தலைமையத்துவத்தையும் கலந்து இவ்வாறு குளப்புவனூடாக

இனிமேல் அடுத்த  தலைமுறையினர் வரவேண்டும்  அடுத்து  கட்டங்களுக்கு  உலகம் நகரணும் என்ற வாதமும் இத்துடன் முடிவுக்கு  வருகிறது

டொனால்ட் ரம்பின் பாலியல் விடயங்களையும் தனிமனித சுதந்திரமாக எடுக்கலாமா வேண்டாமா? :thinking_face:

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

டொனால்ட் ரம்பின் பாலியல் விடயங்களையும் தனிமனித சுதந்திரமாக எடுக்கலாமா வேண்டாமா? :thinking_face:

எவரும் பாதிக்கப்பட்டதாக முறையிடவில்லை என்றால் அதுவும் தனி மனித சுதந்திரம் தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

  • கருத்துக்கள உறவுகள்

20.8..%~20,1%~19.9....%...இந்த பெறுபேறுகள்  கிட்டத்தட்ட...சமன் ஆகும்    இதில் தோல்வி இல்லை    

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.