Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வடக்கில் காணியற்ற ஒரு இலட்சம் குடும்பங்களுக்கு விரைவில் காணி - ஆளுநர் தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வட மாகாணத்தில் காணி அற்ற, வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட சுமார் ஒரு இலட்சத்து 18 ஆயிரம் குடும்பங்களுக்கு அரச காணிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் இறுதிக்  கட்டத்தை எட்டியுள்ளதாக வட மாகாண  ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், வடமாகாணத்தில் காணி அற்ற வறுமை நிலையில் வாழும் குடும்பங்களுக்கான  நன்கொடைக் காணிகள் வழங்கும் செயற்பாடுகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

அதேபோன்று  காணி அற்ற அரச உத்தியோகத்தர்களுக்கும் குத்தகைக்கு மற்றும் வீடுகளை கட்டுவதற்கு காணிகள் வழங்கும் செயற்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

மாகாணத்தில் சுமார் 4 இலட்சம்  மரங்கள் ஒவ்வொன்றிற்கும் 1:5 என்ற விகிதத்தில் மரங்களை நாட்டுவதற்கு புதிய நீர்த்தேக்கங்களை உருவாக்குவதற் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாது வழங்கப்படும் காணி துண்டுகளில் ஏற்கனவே உள்ள பயன் தரும் மரங்கள் அல்லது காணி துண்டுகளில் நடுகை செய்யும் பயன்தரும் மரங்களுக்கான இலவச ஆலோசனைகளும் பெற்றுக் கொடுக்கப்படும்.

குறித்த திட்டத்தினை செயல்படுத்துவதற்காக மாகாண அமைச்சுக்களின் அதிகாரிகள் உள்ளூர் ஆட்சி மன்றங்களின் உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச குழுக்கள் இணைந்து பணியாற்றுவதற்கான செயற்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.

 ஆகவே இதன் மூலம் மாகாணத்தில் உள்ள ஒவ்வொரு ஏழைக் குடும்பமும் 10 பேர்ச் அரச காணிக்கு உரிமையாளராக மாறுகின்ற நிலையில் அவர்களுக்கான பயன் தரும் மரங்களை அவர்களே அறுவடை செய்யும் உரிமம் வழங்கப்படும் என ஆளுநர் மேலும் தெரிவித்தார்.

வடக்கில் காணியற்ற ஒரு இலட்சம் குடும்பங்களுக்கு விரைவில் காணி - ஆளுநர் தெரிவிப்பு | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையாயின் வரவேற்கவேண்டிய செய்தி இது. நாளாந்தம் வேலைக்குச் சென்று சம்பாதிக்கும் ஏழை மக்களுக்கு நன்மை பயக்கும். வீட்டுத் திட்டமும் வழங்கினால் நன்று.
பல வீட்டுத்திட்டங்களில் வழங்கிய வீடுகளில் மக்களே இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த அங்கசனின் அப்பா...புத்தர்தான் முளைக்கிறார் என்று பார்த்தால் இனி ..சிவப்பு, பச்சை வெள்ளை வர்ணங்களிலும் கோவில் முளைக்கும்...

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

உண்மையாயின் வரவேற்கவேண்டிய செய்தி இது. நாளாந்தம் வேலைக்குச் சென்று சம்பாதிக்கும் ஏழை மக்களுக்கு நன்மை பயக்கும். வீட்டுத் திட்டமும் வழங்கினால் நன்று.
பல வீட்டுத்திட்டங்களில் வழங்கிய வீடுகளில் மக்களே இல்லை.

காணி எங்க இருக்குது, குடுக்க?

  • கருத்துக்கள உறவுகள்

இருந்த சனத்தை கலைத்து ராணுவ , கடற்படை, விமானப்படை முகாம்கள் என நிலங்களை அபகரித்து விட்டு  எந்த நிலத்தை பிரித்து ஒரு லட்சத்து பதினெட்டாயிரம் மக்களுக்கு பத்து பேர்ஜ் படி கொடுக்கப்போகிறார் ஆளுனர் ஜீவன் தியாகராஜா?

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் காணியற்றோருக்கு காணி வழங்கப்படுமா அல்லது காணியற்றோருக்கு, வடக்கில் காணி வழங்கப்படுமா ? 

🥺

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Kapithan said:

வடக்கில் காணியற்றோருக்கு காணி வழங்கப்படுமா அல்லது காணியற்றோருக்கு, வடக்கில் காணி வழங்கப்படுமா ? 

🥺

இரண்டாவது சரியான விடை...😎

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் காணி, வீடு இருந்தும் அகதிகளாக அலையும் மக்களை அவர்களது சொந்த இடங்களில் நிம்மதியாக குடியேற விடுங்கள், பிறகு காணியில்லாதவரை பற்றி பேசுவோம். அவர்கள் நிலத்தில் ராணுவம் குடியிருக்க, அவர்களும் காணியற்றவர்கள் என்று திசை திருப்பி அவர்களின் காணிகளை கையகப்படுத்தும் திட்டம். அது போக ... இவருக்கு மாற்றமாம், இவரது இடத்துக்கு வேறொருவர் வரப்போகிறாராம். இவர் தன்னை நல்லவனாக காட்ட கதை  விடுகிறார் போலுள்ளது. செய்பவர் பதவியிருக்கும் செய்திருக்கலாம், பதவி போனபின் தான் செய்ய முடியவில்லையென தன்னையும், மக்களையும் ஏமாற்றும் வேலை. போகும்போது மக்களிடம் நன்மதிப்பை பெறுவதற்காக முயற்சிக்கிறாரா? இவரது பதவிக்காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன நன்மை  செய்தார்?  

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

வடக்கில் காணியற்றோருக்கு காணி வழங்கப்படுமா அல்லது காணியற்றோருக்கு, வடக்கில் காணி வழங்கப்படுமா ? 

🥺

முதலில் அங்குள்ள பவுத்த விகாரைகளை அண்மித்து மக்களுக்கு காணிகள் வழங்கப்படும். அவர்களுக்கு காணிகள் இருந்தாலும் இல்லாவிடடாலும் பிரச்சினை இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.