Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் அமைப்புகள் ஊடாக நல்லிணக்கம்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் நிகழ்ச்சி நிரல்களுக்குள் சிக்காதீர்கள் - தமிழ்த் தலைவர்களிடத்தில் அலி சப்ரி கோரிக்கை

Published By: NANTHINI

04 JUN, 2023 | 01:45 PM
image
 

ஆர்.ராம்

பிரிவினை கோரி தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தியமையால் ஏற்பட்ட இழப்புக்களை நன்றாகவே உணர்ந்துள்ள தமிழ் தலைவர்கள், புலம்பெயர் தேசங்களில் உள்ளவர்களின் வேறுபட்ட நிகழ்ச்சி நிரல்களுக்கு சிக்கிக்கொண்டு மீண்டும் ஆயுதப்போருக்கு வழிசமைத்துவிடாதீர்கள் என்று வெளிவிவகார அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி பகிரங்கமாக கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியா ஒருபோதும் பிரிவினைக்கு அங்கீகாரம் வழங்காது என்ற யதார்த்தத்தினை புரிந்துகொண்டு முற்போக்கான சிந்தனைகளைக் கொண்டிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துடன் இனப் பிரச்சினைகளுக்கான தீர்வு உட்பட அனைத்து விடயங்களுக்கும் பேச்சுவார்த்தைகள் ஊடாக தீர்வினை காண்பதற்கு தற்போது அரிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் அடுத்தகட்டமாக முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் வீரகேசரியிடம் பிரத்தியேகமாக கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வினை காண வேண்டும் என்பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் முனைப்புடன் உள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை  பொறுத்தவரையில் அவர் முற்போக்கான ஒரு தலைவர். அவருடைய காலத்தில் தேசிய பிரச்சினை உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் முழுமையான தீர்வினை காண்பதற்கு மிகவும் அரிதான சந்தர்ப்பம் ஒன்று உருவாகியுள்ளது. 

இந்த சந்தர்ப்பத்தினை தமிழ்த் தலைவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது எனது கோரிக்கையாக உள்ளது. ஏனென்றால், புலம்பெயர் தேசங்களில் உள்ள தமிழ்த் தரப்பினர் மற்றும் அவர்கள் சார்ந்த சக்திகளுக்கு மாறுபட்ட நிகழ்ச்சி நிரல்கள் உள்ளன. அவர்கள் இலங்கையில் நிரந்தரமானதொரு தீர்வினை எட்டுவதற்கு இதயசுத்தியுடன் விரும்பவில்லை என்பது பல செயற்பாடுகள் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர்கள் சார்ந்துள்ள நாடுகளில் அவர்களது வகிபாகத்தினை தக்க வைத்துக்கொள்வதற்கான பல செயற்பாடுகளை முன்னெடுக்கின்றார்கள்.

அவ்வாறான செயற்பாடுகளை எமது நாட்டிலும் தமிழ் தலைவர்களை மையப்படுத்தி முன்னெடுக்கின்றார்கள். இந்த நிகழ்ச்சி நிரலுக்குள் தமிழ்த் தலைவர்கள் சிக்கிக்கொள்வதால் தமிழ் இளையோரின் எதிர்காலமே பாதிக்கப்படப் போகிறது என்பதை உணர்ந்துகொள்ள வேண்டியுள்ளது.

1977ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அப்போதைய தமிழ்த் தலைவர்கள் தனிநாட்டுக்கான கோரிக்கையை முன்னிலைப்படுத்தியே தேர்தலில் போட்டியிட்டார்கள். ஆனால், அத்தலைவர்களால் அந்தக் கோரிக்கையை நிறைவேற்ற முடிந்திருக்கவில்லை. இதனால் அந்தத் தலைவர்களுக்கு எதிராக இளைஞர்கள் மாறியதுடன், அவர்கள் தலைவர்களால் செய்ய முடியாததை தாம் ஆயுத வழியில் நிகழ்த்திக் காண்பிப்போம் என்று புறப்பட்டார்கள்.

இந்தத் தீர்மானம் கடந்த 30 ஆண்டுகளாக நாட்டை சிதைத்துவிட்டது. அதிலும், தமிழ் மக்களையும், அவர்கள் வசிக்கும் பகுதிகளையும் மிகவும் மோசமாக பாதித்துவிட்டது.

எனவே, இந்த விடயத்தில் தமிழ் தலைவர்கள் திறந்த மனதுடன் தீர்மானங்களை எடுக்க வேண்டும்.

அதேநேரம், இந்தியாவை பொறுத்தவரையில், தனிநாட்டுக் கோரிக்கைக்கு ஒருபோதும் அங்கீகாரமளிக்காது. ஏனென்றால், இந்தியாவின் தென்பிராந்தியங்களில் அவ்விதமான சிந்தனைகள் கடந்த காலங்களில் தோன்றியிருப்பதால், மத்திய அரசாங்கம் குறித்த விடயத்தில் மிகவும் தீவிரமாக இருக்கும் என்பதே யதார்த்தமானதாகும்.

ஆகவே, தற்போது ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தை முறையாக பயன்படுத்த வேண்டியுள்ளது.

அரசாங்கத்தினை பொறுத்தவரையில்  பொறுப்புக்கூறல், அதிகாரப்பகிர்வு ஆகிய விடயங்கள் சம்பந்தமாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு தயாராகவே உள்ளது.

தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு, படிப்படியாக விடயங்கள் தீர்க்கப்படுவதற்கே நாமும் செயற்படுகின்றோம். ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம்,  அரசியல் கைதிகள் விடயத்தில் சாதகமான சமிக்ஞையை வெளிப்படுத்தியுள்ளது. எஞ்சிய சொற்ப அளவிலானவர்களை விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று தான் காணிகளை வனப் பாதுகாப்பு திணைக்களம், தொல்பொருளியல் திணைக்களம் உள்ளிட்டவை கையகப்படுத்துவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்தப் பிரச்சினையானது அனைத்து சமூகங்களுக்குமானதாக உள்ளது. ஆகவே, அந்த விடயமும் உரிய அணுகுமுறையூடாக தீர்க்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நாம் உள்ளோம்.

முன்னதாக, நான் நீதியமைச்சராக கடமையாற்றியபோது, காணாமலாக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடுகளை வழங்குவதற்கு வடக்கு, கிழக்கில் நடவடிக்கைகளை எடுத்திருந்தேன். எனினும், அதற்கு சிறிய குழுவினர்கள் எதிர்ப்பினை வெளியிட்டார்கள்.

அதேநேரம், மாற்றுத்திறனாளிகளாக உள்ள முன்னாள் போராளிகளுக்கு உண்மையிலேயே உதவிகள் தேவையாக உள்ளன. அரசாங்கத்தினால் அளிக்கப்படுகின்ற பகுதியளவிலான உதவிகளை பெற்று, வாழ்க்கையை முன்னகர்த்துபவர்களும் உள்ளார்கள்.

எனவே, அரசாங்கம் என்ற வகையில் ஐக்கிய இலங்கைக்குள் அனைவரும் சமத்துவமாகவும், சமாதானமாகவும் வாழ வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே உள்ளோம். இந்த விடயத்தில் தமிழ் தலைவர்களும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/156902

  • Replies 77
  • Views 5.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ஏராளன் said:

புலம்பெயர் நிகழ்ச்சி நிரல்களுக்குள் சிக்காதீர்கள் - தமிழ்த் தலைவர்களிடத்தில் அலி சப்ரி கோரிக்கை

Published By: NANTHINI

04 JUN, 2023 | 01:45 PM
 
 

ஆர்.ராம்

பிரிவினை கோரி தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தியமையால் ஏற்பட்ட இழப்புக்களை நன்றாகவே உணர்ந்துள்ள தமிழ் தலைவர்கள், புலம்பெயர் தேசங்களில் உள்ளவர்களின் வேறுபட்ட நிகழ்ச்சி நிரல்களுக்கு சிக்கிக்கொண்டு மீண்டும் ஆயுதப்போருக்கு வழிசமைத்துவிடாதீர்கள் என்று வெளிவிவகார அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி பகிரங்கமாக கோரிக்கை விடுத்துள்ளார்.

 

இந்த அலி ஏதோ தமிழர்களை பிரச்சினைகளுக்குள் தள்ளிவிடக்கூடாது , அவர்கள் இலங்கையில் சகல உரிமைகளுடன்  வாழ வேண்டும் என்ற தொனியில் பேசுவது போல தெரிந்தாலும், உண்மையில் அப்படி இல்லை. தனது பதவியை தக்க வைத்து கொள்ளவும், வெளிநாடுகளில் இலங்கை அரசாங்கம் தமிழர்களிடம் எவ்வளவு கரிசனை கொண்டிருக்கிறது என்பதை காண்பிக்கவும் அவர் போடும்  வேஷம் இது. தமிழனும், சிங்களவனும் அடிபடும்போதுதான் அள்ளிக்கொண்டு போகலாம் எண்டு ருஷி கண்டவர்கள்.  சோழியன் குடுமி சும்மா ஆடாது. 

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Kapithan said:

சும்மா  பகிடி விடாதேயுங்கோ ரஞ்சித். பகிடிக்கும் அளவு வேண்டாமா? 

கடந்த 15 வருடங்களாக ஒரு துரும்பைத்தானும் தூக்கிப்போட முடியாதவர்களிடம் தமிழீழத்தைத் கொடுத்தால் பஞ்சுப்பொதி சுமந்த கழுதை ஆற்றைக் கடந்த கதையாகத்தான் முடியும். 

 

கபித்தான் சொல்வதிலும் உண்மை   இருக்கிறது. ஒரு உச்ச நீதி மன்ற (ஓய்வு) நீதிபதியின் கீழ் வடக்கு மாகாண சபையை கொண்டு நடத்த முடிந்ததா? அது இல்லை, இது இல்லை எண்டு ஒப்பாரிக்கு மேல் ஒப்பாரி.

கடைசியாக இருந்த இரணைமடு குளத்தையும் சிங்கள அரசிடம் கொடுத்து குடியேற்றத்தை ஊக்குவித்ததுதான் அவர்களுடைய திறமை.

இப்போது இன்னுமோர் தகவலும் உலாவுகின்றது . ஒரு சக மாகாண அமைச்சராக இருந்தவரை என்ன சாதி எண்டு தேடி  கண்டுபிடிக்கும் முயட்சியையும் ஐயா செய்திருக்கிறார்.

இப்படி என்றால் எப்படி ஈழம் கிடைத்தால் ..........  

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, Kapithan said:

இன்னும் 10 வருடங்கள் இருந்து பாருங்கள். இலங்கையில் இனப் பிரச்சனைக்கான அடிப்படையே இல்லாமல் போய்விடும். 

வரலாம் ..அப்படியொரு நிலையில்  இனவாதம்  இருக்க முடியாது  தமிழன் சிங்களவனையும். சிங்களவன் தமிழனையும். பாராளுமன்றம் அனுப்பி வைப்பார்கள்   எந்த சுயாட்சி தரமுடியாது என்ங்கிறார்களே   அது தர வேண்டிய நிலைவரும் ....இந்தியா மாநிலங்களை விட கூடுதல் சுயாட்சி கிடைக்கலாம்......தமிழரும் சிங்களவரும். இரண்டறக் கலந்து விடுவார்கள்....இலங்கையில் இந்தியா எதுவும் செய்ய முடியாது     .....நாங்கள் எல்லோரும் சீனாவை அதரிப்போம்....வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் இலங்கையில் போய் வாழ்வார்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, ஏராளன் said:

பிரிவினை கோரி தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தியமையால் ஏற்பட்ட இழப்புக்களை நன்றாகவே உணர்ந்துள்ள தமிழ் தலைவர்கள்,

 

23 hours ago, ஏராளன் said:

மீண்டும் ஆயுதப்போருக்கு வழிசமைத்துவிடாதீர்கள் என்று வெளிவிவகார அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி பகிரங்கமாக கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரச்சனை எங்கே ஆரம்பித்தது, எதனால் ஆரம்பித்தது என்கிற காரணம் புரியாதவர் பிரச்சனை தீர்க்கப்போகிறாராம். இவரெல்லாம் நீதியமைச்சர் என்கிற வார்த்தைக்கே தகுதியில்லாதவர். பிரச்சனை தீர்க்கவாறவர் மீண்டும் ஆயுதப்போராட்டம் என ஏன் எச்சரிக்கிறார்? அப்படியென்றால் எங்களின் உரிமையை கேட்பது அவர்ளுக்கு பிரிவினையாய் தெரிகிறது. அப்போ என்ன பேசப்போகிறார்கள்? அவர்கள் சொல்வதை நம்மவர் கேட்டுக்கொண்டு இருக்க வேண்டுமென்பதா? அதற்கு பெயர் பேசுவார்த்தையா? இவருக்கு, இப்போ இலங்கையில் தமிழ் சிங்கள மோதல் ஒன்று ஏற்படவேண்டும், அவர் இனம் அதில் குளிர்காய வேண்டும், அந்த இடைவெளியில் ராஜபக்ச குடும்பம் நுழைய வேண்டும் என ஆசைப்படுகிறார். பாருங்கள்.... இவர்கள் ஒருநாள் வாங்கப்போகிற அடியை. எவ்வளவு அடித்தாலும் மீண்டும்போய் செருகுகிறது மிச்சம் பொறுக்கி சேர்க்க.  ,

  • கருத்துக்கள உறவுகள்
On 4/6/2023 at 18:35, Kapithan said:

எங்கள் பலவீனங்களையம், பலத்தையும் அப்படியே ஏற்றுக்கொள்வதுதான் சரியான பாதையில் பயணிப்பதற்கான முதற்படி. 

பிரபாகரன் என்கிற ஒற்றைச் சொல்தான் எங்கள் எல்லோரினதும் த்க்ஷ்லைமுடியைப் பிடித்து ஒன்றாகத் தூக்கி கட்ட்டிவைத்திருந்த மந்திரச் சொல். 

அந்தப் பிரபாகரன் என்னும் தலைமை இல்லை என்றவுடன்  நாங்கள் எல்லோரும் சிதறிய சீட்டுக்கட்டாக மாறிவிட்டோம். 

இந்த நிலையில்  தமிழீழத்தை தந்தால் குரங்கின் கைப் பூமாலைதான். 

இன்னும் 10 வருடங்கள் இருந்து பாருங்கள். இலங்கையில் இனப் பிரச்சனைக்கான அடிப்படையே இல்லாமல் போய்விடும். 

அங்கே தமிழ்ப் பெளத்தர்களும், சிங்களப் பெளத்தர்களும் ஒன்றாக வெசாக் கொன்றாடுவார்கள். முசிலிம்கள் இரண்டாம் சிறுபான்மையினர் எனும் நிலைக்கு வந்துவிடுவார்கள். 

எஞ்சிய தமிழர்கள் மும்மொழியும் பேசிக்கொண்டே Canada வுக்கும் Australia வுக்கும் குடிபெயர்வு செய்வது தொடர்பாக ஆலோசனை செய்வார்கள். வெளிநாடுகளில் வாழும் கொஞ்சநஞ்ச தாயகப் பற்றாளர்கள் இலங்கையில் போய் retire செய்ய ஆவன செய்துகொண்டிருப்பார்கள். 

அப்போது, யாழ் களத்தில் நின்று அடிபட ஒருவரும் இருக்கப்போவதில்லை. 

அடுத்த சில வருடங்களுக்குள் ஏதாவது  தீர்வு ஒன்று வராவிட்டால் இதுதான் எங்கள் நிலை. 

மறுப்பதற்கில்லை, சிங்களம் நன்றாக திட்டமிட்டு நிகழ்ச்சி நிரலை நகர்த்துகின்றது

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, உடையார் said:

மறுப்பதற்கில்லை, சிங்களம் நன்றாக திட்டமிட்டு நிகழ்ச்சி நிரலை நகர்த்துகின்றது

சிங்களம் நன்றாக திட்டமிட்டு நிகழ்ச்சி நிரலை நகர்த்துகின்றது என்றால், நாங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறோம்? 

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

சிங்களம் நன்றாக திட்டமிட்டு நிகழ்ச்சி நிரலை நகர்த்துகின்றது என்றால், நாங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறோம்? 

 

எல்லாரையும் திட்டிக் கொன்டிருக்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, சுவைப்பிரியன் said:

எல்லாரையும் திட்டிக் கொன்டிருக்கிறோம்.

வருபவன், போகின்றவன், பக்கத்தில் இருப்பவன், கூடவே நிற்ப்வன் எல்லோருக்கும் சேற்றை வாரி இறைக்கின்றோம். 

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

சிங்களம் நன்றாக திட்டமிட்டு நிகழ்ச்சி நிரலை நகர்த்துகின்றது என்றால், நாங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறோம்? 

 

 

15 minutes ago, Kapithan said:

வருபவன், போகின்றவன், பக்கத்தில் இருப்பவன், கூடவே நிற்ப்வன் எல்லோருக்கும் சேற்றை வாரி இறைக்கின்றோம். 

 

கேள்வியும் கேட்டு.....பதிலும் அளித்துள்ளார்”.......இத்துடன் சிங்களவருக்கு   தகவல்கள் வழங்கிறோம்.  என்பதையம்  சேர்ந்து விடவும்   🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

எல்லாரையும் திட்டிக் கொன்டிருக்கிறோம்.

48 minutes ago, Kapithan said:

வருபவன், போகின்றவன், பக்கத்தில் இருப்பவன், கூடவே நிற்ப்வன் எல்லோருக்கும் சேற்றை வாரி இறைக்கின்றோம். 

 

2009 க்கு பின்னர் ஏதாவது ஒரு விடயத்தை தீர்க்கமாக செய்திருந்தால் வாயை மூடிக்கொண்டு இருக்கலாம் என்று பார்த்தால்......???????

  • கருத்துக்கள உறவுகள்

நிலைமையை இன்னும் மோசமாக்கி, இலங்கையில் இனப்பிரச்சனை என்று ஒன்று இருக்கவேயில்லை மதப்பிரச்சனைதான் இருக்கிறது அதையும் தீர்த்துவிடுவோம் என்று முடித்துவிடுவார்கள் போலிருக்கிறதே!

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:

 

கேள்வியும் கேட்டு.....பதிலும் அளித்துள்ளார்”.......இத்துடன் சிங்களவருக்கு   தகவல்கள் வழங்கிறோம்.  என்பதையம்  சேர்ந்து விடவும்   🤣

எல்லாவற்றையும் open  ஆகக் கதைத்தால் கோபம் வரும்தான். அதனால்  உங்கள் கோபம் புரிகிறது கந்தையர்.

அந்தக் கோபத்தை காட்டவேண்டிய இடத்தில் காட்டுங்கள், சிறிதளவேனும் பிரயோசனமாக இருக்கும். 

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

நிலைமையை இன்னும் மோசமாக்கி, இலங்கையில் இனப்பிரச்சனை என்று ஒன்று இருக்கவேயில்லை மதப்பிரச்சனைதான் இருக்கிறது அதையும் தீர்த்துவிடுவோம் என்று முடித்துவிடுவார்கள் போலிருக்கிறதே!

என்ன சாத்தான் , ராய் சமாதானம் சமாதானமாக பொய் சேர்ந்திடடாரோ? எதோ இவரைப்பற்றி எழுதுவீர்கள் எண்டு எதிர்பார்த்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்
On 4/6/2023 at 09:49, Kapithan said:

இவர் இலங்கையில் நிரந்திரமான தீர்வு ஒன்றை ஏற்படுத்துவதற்கான நிகழ்ச்சி நிரல் ஒன்றுடன், கனடாவில் உள்ள தமிழ்  அமைப்புக்களை ஒன்றுதிரட்டுவதற்கு கடுமையாக உழைப்பதாகக் கேள்வி. 

ஆனால் வழமைபோல எங்கள் அமைப்புக்களிடையே........

☹️

 

On 4/6/2023 at 11:31, satan said:

 

விளக்கம் கோரப்படுகிறது!

 

On 4/6/2023 at 11:48, alvayan said:

அவ்சரப்பட வேண்டாம்....மாதச்சம்பளம் பெறுபவர் என்றுதான் வதந்தி....தனிநபர்  வரும்படிவேண்டி ...தலதாக்குபோனவராம்..

 

On 4/6/2023 at 13:16, alvayan said:

இவரைப்பற்றி உங்களூக்குத்தான்  நல்லாத்தெரியும் ..அவிட்டு விடுங்கோ...ஒருவர் தலைவர் வழிதான் சரி என்று சொல்ல ...குறுக்கை வாறியள்..... சமாதானம் செய்யிற சமாதானம்...உங்களுக்கு கூட்டுத்தானே

 

On 4/6/2023 at 11:25, satan said:

கொஞ்சம் பொறுத்திருங்கள்! எல்லா விபரமும் விலாவாரியாக வரும். நான் குறிப்பிடும் ஆள் இவரோ என்பது சந்தேகமாக இருக்கிறது. பொறுத்திருங்கள் உறுதிப்படுத்தப்படும்வரை.

மன்னிக்கவும்! கொஞ்சம் விபரம் வருமென்று எதிர்பார்த்து புதிர் போட்டேன், ஆள் வெளிவிடவேயில்லை, எல்லாம் அடங்கிவிட்டது! 

இப்போதைக்கு இவ்வளவுதான்! 

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
On 3/6/2023 at 23:16, alvayan said:

இவரைப்பற்றி உங்களூக்குத்தான்  நல்லாத்தெரியும் ..அவிட்டு விடுங்கோ...ஒருவர் தலைவர் வழிதான் சரி என்று சொல்ல ...குறுக்கை வாறியள்..... சமாதானம் செய்யிற சமாதானம்...உங்களுக்கு கூட்டுத்தானே

வெறும் கை முழம் போடாது கண்டியளோ.

புலம்ஸ் பெயர்ஸ் எல்லாம் புலம்பத்தான் பொருத்தம். யாராவது ஒருவன் ஏணியை வத்து ஏற முற்பட்டாலே முதல் சேறடித்து ஏணியைத் தட்டி விடுவதுதான் புலம்பெயர்ஸ் வழமை

கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாத புலம் பெயர்ஸ் எல்லாம் , வானம் ஏறி வைகுண்டம் போன கதைதான் புலம்பெயர்ஸ் ஸின் திரும்பவும் ஆயுதப் போராட்டக் கதை. 

😏

 

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, Kapithan said:

வெறும் கை முழம் போடாது கண்டியளோ.

புலம்ஸ் பெயர்ஸ் எல்லாம் புலம்பத்தான் பொருத்தம். யாராவது ஒருவன் ஏணியை வத்து ஏற முற்பட்டாலே முதல் சேறடித்து ஏணியைத் தட்டி விடுவதுதான் புலம்பெயர்ஸ் வழமை

கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாத புலம் பெயர்ஸ் எல்லாம் , வானம் ஏறி வைகுண்டம் போன கதைதான் புலம்பெயர்ஸ் ஸின் திரும்பவும் ஆயுதப் போராட்டக் கதை. 

😏

 

அதுதான் அவையின்ரை சம்பளத்தோ🙃டை வந்திருந்து அவயின்ரை ஆட்களுக்கு சப்போட் பண்ணுறியல்..அதுக்கிள்ளை எமக்கு அட்வைசும் பண்ணி  நடிக்கிறியள்

1 hour ago, satan said:

 

 

 

 

மன்னிக்கவும்! கொஞ்சம் விபரம் வருமென்று எதிர்பார்த்து புதிர் போட்டேன், ஆள் வெளிவிடவேயில்லை, எல்லாம் அடங்கிவிட்டது! 

இப்போதைக்கு இவ்வளவுதான்! 

 

 

 

 

வராது ஒரே ஆட்கள்...

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kapithan said:

வெறும் கை முழம் போடாது கண்டியளோ.

புலம்ஸ் பெயர்ஸ் எல்லாம் புலம்பத்தான் பொருத்தம். யாராவது ஒருவன் ஏணியை வத்து ஏற முற்பட்டாலே முதல் சேறடித்து ஏணியைத் தட்டி விடுவதுதான் புலம்பெயர்ஸ் வழமை

கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாத புலம் பெயர்ஸ் எல்லாம் , வானம் ஏறி வைகுண்டம் போன கதைதான் புலம்பெயர்ஸ் ஸின் திரும்பவும் ஆயுதப் போராட்டக் கதை. 

😏

 

கபிதன்   ....ஒன்று சொல்லுகிறேன். கவனமாக கேளுங்கள்........

நான் ஒரு கார் எடுத்தேன்..சிலர் நல்ல கார்....விலையும் குறைவு   மலிவு   என்றார்கள்...இன்னும் சிலர்     கூடாதா கார்   விலையும்   இரண்டு மடங்கு....என்னை பிடித்திருந்தால்.  மலிவான நல்ல கார்  வேண்டி தந்திருப்பேன்.  என்பார்கள்    நல்லது அல்லது கூடாது’.  நான் நினைத்ததை    அன்றிலிருந்து இன்றுவரை செய்துகொண்டு வருகிறேன்     ஆகவே யாராவது ஒரு செயலை செய்யும்போது  ஆதரவு கருத்துகள்...எதிர் கருத்துகள்   இரண்டுமே இருக்கும்    இதற்காக எவருமே நினைத்ததை செய்யாமல் விடுவதில்லை..[நீங்கள் நான் உள்பட ].  

அடிக்கடி நீங்கள் கூறும் விடயம்  ..அவர்   போகிறார் சகல திட்டங்களுடன்.  இந்த நாலு மாதங்களில்  நல்ல தீர்வு வருகிறது..... கொஞ்ச காலத்தில் புலம்பெயர் குழப்பினார்கள் என்பீர்கள்.     அடுத்து இவர்  போவார்”    கண்டிப்பாக தீர்வு இதோ வருகிறது என்பதும்.......தொடர்ந்து  புலம்பெயர்     குறை கூறுவது வழக்கம்    

எந்தவொரு தமிழராது ஆதரவு இல்லாமல் இலங்கை அரசினால். தீர்வு தர முடியும்  ...

இலங்கை அரசு   எந்த கட்சிகள் பதவியில் இருந்தாலும்  தமிழருக்கு  தீர்வு வழங்குவது இல்லை என்று உறுதியாக இருந்தால்..[இருக்கிறது ]அவர்.  .....இவர்  ....எவர்....எந்த திட்டங்களுடன்  ....எவ்வளவு பலமான. அமைப்புக்கள் ஆதரவுடன் போனாலும்  தீர்வு வரவே வராது”       எனவே…  தயவுசெய்து புலம்பெயர் தமிழ் மக்களை திட்டாமல் இருக்க முயற்சி செய்யவும்  😁

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, alvayan said:

அதுதான் அவையின்ரை சம்பளத்தோ🙃டை வந்திருந்து அவயின்ரை ஆட்களுக்கு சப்போட் பண்ணுறியல்..அதுக்கிள்ளை எமக்கு அட்வைசும் பண்ணி  நடிக்கிறியள்

வராது ஒரே ஆட்கள்...

👆

ஆடத் தெரியாத புலம்ஸ்பெயர்ஸ் எல்லாம்   மேடை சரியில்லை என்றார்களாம். 

😁

1 hour ago, Kandiah57 said:

கபிதன்   ....ஒன்று சொல்லுகிறேன். கவனமாக கேளுங்கள்........

நான் ஒரு கார் எடுத்தேன்..சிலர் நல்ல கார்....விலையும் குறைவு   மலிவு   என்றார்கள்...இன்னும் சிலர்     கூடாதா கார்   விலையும்   இரண்டு மடங்கு....என்னை பிடித்திருந்தால்.  மலிவான நல்ல கார்  வேண்டி தந்திருப்பேன்.  என்பார்கள்    நல்லது அல்லது கூடாது’.  நான் நினைத்ததை    அன்றிலிருந்து இன்றுவரை செய்துகொண்டு வருகிறேன்     ஆகவே யாராவது ஒரு செயலை செய்யும்போது  ஆதரவு கருத்துகள்...எதிர் கருத்துகள்   இரண்டுமே இருக்கும்    இதற்காக எவருமே நினைத்ததை செய்யாமல் விடுவதில்லை..[நீங்கள் நான் உள்பட ].  

அடிக்கடி நீங்கள் கூறும் விடயம்  ..அவர்   போகிறார் சகல திட்டங்களுடன்.  இந்த நாலு மாதங்களில்  நல்ல தீர்வு வருகிறது..... கொஞ்ச காலத்தில் புலம்பெயர் குழப்பினார்கள் என்பீர்கள்.     அடுத்து இவர்  போவார்”    கண்டிப்பாக தீர்வு இதோ வருகிறது என்பதும்.......தொடர்ந்து  புலம்பெயர்     குறை கூறுவது வழக்கம்    

எந்தவொரு தமிழராது ஆதரவு இல்லாமல் இலங்கை அரசினால். தீர்வு தர முடியும்  ...

இலங்கை அரசு   எந்த கட்சிகள் பதவியில் இருந்தாலும்  தமிழருக்கு  தீர்வு வழங்குவது இல்லை என்று உறுதியாக இருந்தால்..[இருக்கிறது ]அவர்.  .....இவர்  ....எவர்....எந்த திட்டங்களுடன்  ....எவ்வளவு பலமான. அமைப்புக்கள் ஆதரவுடன் போனாலும்  தீர்வு வரவே வராது”       எனவே…  தயவுசெய்து புலம்பெயர் தமிழ் மக்களை திட்டாமல் இருக்க முயற்சி செய்யவும்  😁

இலங்கை டமிள்ஸிடம் + புலம்பெயர்ஸ் களிடம் இருக்கும் இனப்பிரச்சனைக்கான முன்மொழிவு என்ன? 

இதற்கு நேர்மையான பதிலை தங்களிடம்  எதிர்பார்க்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Kapithan said:

இலங்கை டமிள்ஸிடம் + புலம்பெயர்ஸ் களிடம் இருக்கும் இனப்பிரச்சனைக்கான முன்மொழிவு என்ன? 

நீங்கள் குறிப்பிடும் இந்த இரு பிரிவுகளுக்குள்ளும் நீங்களும் அடக்கம். உங்கள் முன்மொழிவு என்னவோ?

  • கருத்துக்கள உறவுகள்

ஆடத் தெரியாத புலம்ஸ்பெயர்ஸ் எல்லாம்   மேடை சரியில்லை என்றார்களாம். 

 

அப்படித்தான் இருக்கும்...நீங்கள் ஆடுவது கண்டியன் டான்ஸ்.....அந்த ஸ்டெப்ஸ் வேறைதானே..

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

👆

ஆடத் தெரியாத புலம்ஸ்பெயர்ஸ் எல்லாம்   மேடை சரியில்லை என்றார்களாம். 

😁

இலங்கை டமிள்ஸிடம் + புலம்பெயர்ஸ் களிடம் இருக்கும் இனப்பிரச்சனைக்கான முன்மொழிவு என்ன? 

இதற்கு நேர்மையான பதிலை தங்களிடம்  எதிர்பார்க்கிறேன். 

என்னை பொறுத்த மட்டில். இலங்கை அரசு   தீர்வு இலங்கை வாழ் தமிழருக்கு ஒருபோதும் தரமாட்டார்கள்  என்பதை உறுதியாக நம்புகிறேன்  ......எனவேதான் தமிழர்கள் தீர்வு திட்டங்கள் வைக்க வேண்டிய அவசியமில்லை........

உங்களுக்கு ஒரு விடயம் புரியவில்லை என்பது..உங்கள் கருத்துகளில்லிருந்து எனக்கு தெளிவாக விளங்கிறது....அதாவது   தீர்வு ஒன்றை  முன்வைத்து நடைமுறை படுத்த . இலங்கை விரும்பினால்      எந்தவொரு தமிழனின் உதவியும்   ஆலோசனையும் தேவையில்லை...மட்டுமல்ல எந்தவொரு வெளிநாடுகளும். உதவவேண்டியதில்லை.  இது உங்களுக்கு புரியமாட்டேங்குது  .......

இன்றுவரை இலங்கை அரசு தீர்வு ஒன்றை வைத்து  தமிழ் மக்கள் அல்லது தமிழ் தலைவர்கள்   குழப்பினார்கள் என்பதை சுட்டி காட்டுங்கள் பார்ப்போம்....

மேலும்  பல தீர்வுகளை முன் மொழிய முடியும் ....உதாரணமாக   ஜேர்மன் மாதிரி...சுவிஸ்    மாதிரி   கனடா   மாதிரி  .........நாங்கள் வைக்கும் தீர்வை யார் தாருவார்கள்.?. 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, alvayan said:

ஆடத் தெரியாத புலம்ஸ்பெயர்ஸ் எல்லாம்   மேடை சரியில்லை என்றார்களாம். 

 

அப்படித்தான் இருக்கும்...நீங்கள் ஆடுவது கண்டியன் டான்ஸ்.....அந்த ஸ்டெப்ஸ் வேறைதானே..

எவ்வளவு இலகுவாக இன்னொருவரை துரோகியென்றும், காட்டிக்கொடுப்பவர் என்றும்  முடிவுகட்டுகிறீர்கள். ஆச்சரியமாக இருக்கிறது. 🥺

செயற்கை நுண்ணறிவு தோற்றது போங்கள் 🤣

அது எவ்வாறாகினும் இருக்கட்டும், ஆனால் டமில்த் தேசிய புலம்பெயர்ஸ்களிடம் முன்மொழிவு ஏதாகினும் இருக்கிறதா ? 

இல்லையென்றால் பிறகேன் குய்யோ முய்யோவென்று கத்துவான் ? 

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

எவ்வளவு இலகுவாக இன்னொருவரை துரோகியென்றும், காட்டிக்கொடுப்பவர் என்றும்  முடிவுகட்டுகிறீர்கள். ஆச்சரியமாக இருக்கிறது. 🥺

செயற்கை நுண்ணறிவு தோற்றது போங்கள் 🤣

அது எவ்வாறாகினும் இருக்கட்டும், ஆனால் டமில்த் தேசிய புலம்பெயர்ஸ்களிடம் முன்மொழிவு ஏதாகினும் இருக்கிறதா ? 

இல்லையென்றால் பிறகேன் குய்யோ முய்யோவென்று கத்துவான் ? 

 

முதலில் உங்களின் பின்புறத்தைப் பார்க்கவும்...அப்புறம் தமிழ்ப் புலம்பெயர்ஸீடம் என்ன தீர்வு இருக்கென்று கேளுங்கள்..அவர்கள் சொல்வார்கள்...இந்ததிரியில் எவ்வளவுஆட்கள் இதுபற்றி கூறிவிட்டார்கள்.....எந்தவித சூடுசொரணையுமின்றி ..சுப்பற்றை கொல்லைக்குள் நிக்கிறியள்...என்ன செய்வது ..ரெயினிங்கு அப்பிடி..

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, alvayan said:

முதலில் உங்களின் பின்புறத்தைப் பார்க்கவும்...அப்புறம் தமிழ்ப் புலம்பெயர்ஸீடம் என்ன தீர்வு இருக்கென்று கேளுங்கள்..அவர்கள் சொல்வார்கள்...இந்ததிரியில் எவ்வளவுஆட்கள் இதுபற்றி கூறிவிட்டார்கள்.....எந்தவித சூடுசொரணையுமின்றி ..சுப்பற்றை கொல்லைக்குள் நிக்கிறியள்...என்ன செய்வது ..ரெயினிங்கு அப்பிடி..

ஊரில் மதில்மேல் குந்தியிருந்து பட்டப்பெயர் வைத்து விசிலடித்த பழக்கம் எனக்கில்லை. தாங்கள் எப்படியோ என்பதும் எனது கரிசனைக்குட்பட்டது அல்ல. 

அதுசரி , என்ன தீர்வு என்று வசிஸ்ரர் வாயால் சொன்னால் குறைந்தா போய்விடுவீர்கள்? 

😁

Edited by Kapithan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.