Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"வேங்கையன் பூங்கொடி" விமர்சனப்பகுதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நண்பர்களே!

இது ' வேங்கையன் பூங்கொடி" எனும் காவியம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யும் பகுதி.

  • Replies 70
  • Views 11.5k
  • Created
  • Last Reply

ஒவ்வொரு வெள்ளியும் தவறாமல் அங்கங்களை இணைப்பீர்களா?

இணையுங்கள் வாசிக்க நாம தயார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் வெண்ணிலா.

இக்காவியத்தின் பாகம்1இன் ஒவ்வொரு அங்கத்தையும் ஒவ்வொரு வெள்ளிதோறும் யாழின் கவிதைப் ப+ங்காவில் இணைக்க உத்தேசித்துள்ளேன்.

வல்வைசகரா அக்கா தங்களின் வேங்கையன் பூங்கொடி காவியத்தின் முதல் பகுதியை சுவத்தேன் மிகவும் நன்றாக இருந்தது....நுழைவாசலில் தொடக்கம் "தியாக சீலருக்கு தலை வணக்கம் தொட்டு" அங்கம் 1 "அவல்" வரை மிகவும் நன்றாக உங்கள் எழுத்து பாணியில் கொண்டு சென்ற விதம் மறுபடி வாசிக்க தூண்டுகிறது வாழ்த்துகள்....... :(

அவள் பாகம் 1 யில் எனக்கு சில வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியவில்லை அதை தங்களாள் விளங்கபடுத்தமுடியுமா........

1)மண்டலி விழிக்க சொல்லி மயில்கள் அகவும் என்று குறிபிட்டு உள்ளீர்கள் மண்டலி என்றா என்ன ?

2)ஆம்பல் பூத்த

அதரங்கள் நெகிழ

அன்றைய கடமைகள்

ஆற்ற வந்தாள்.

இதில் ஆம்பல் என்று குறிபிடுவது எதனை இந்த பாடல்வரிகளுக்கு விளக்கம் தரமுடியுமா?

பல சந்தேகங்கள் உள்ளன் பிறகு மிச்சம் கேட்கிறேன் மிகவும் நன்றாக இருக்கிறது தொடர்ந்து எழுதுங்கோ சுவைக்க நான் தயார் ஆனா சந்தேகங்கள் கேட்பேன் கோவிக்க கூடாது......... :huh:

வல்வை சாகரா அக்கா உங்கள் கவிதையிலான ஆரம்பம் சூப்பருங்க. அட என்னமாதிரி வர்ணித்திருந்தீர்கள் காலைப்பொழுஅதி. எபப்டிங்க? என்ன வியப்பாகிட்டுது எனக்கு. உங்களின் பல கவிதைகள் படித்திருந்த போதிலும் இது நல்லா இருந்திச்சுங்கோ

அதை விட நுழைவாயிலும் நல்லா இருந்திச்சு

இன்னொரு பக்கம் இதிலுளது!

அங்குதான் இவளின் விதியுளது!!

அடுத்த பாகத்தையும் வாசிக்க ஆவலாக இருக்கின்றது.

ஜமுனா கேட்டது போல

"ஆம்பல் & மண்டலி என்பதன் பொருள் என்னங்க?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வல்வைசகரா அக்கா தங்களின் வேங்கையன் பூங்கொடி காவியத்தின் முதல் பகுதியை சுவத்தேன் மிகவும் நன்றாக இருந்தது....நுழைவாசலில் தொடக்கம் "தியாக சீலருக்கு தலை வணக்கம் தொட்டு" அங்கம் 1 "அவல்" வரை மிகவும் நன்றாக உங்கள் எழுத்து பாணியில் கொண்டு சென்ற விதம் மறுபடி வாசிக்க தூண்டுகிறது வாழ்த்துகள்....... :(

அவள் பாகம் 1 யில் எனக்கு சில வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியவில்லை அதை தங்களாள் விளங்கபடுத்தமுடியுமா........

1)மண்டலி விழிக்க சொல்லி மயில்கள் அகவும் என்று குறிபிட்டு உள்ளீர்கள் மண்டலி என்றா என்ன ?

2)ஆம்பல் பூத்த

அதரங்கள் நெகிழ

அன்றைய கடமைகள்

ஆற்ற வந்தாள்.

இதில் ஆம்பல் என்று குறிபிடுவது எதனை இந்த பாடல்வரிகளுக்கு விளக்கம் தரமுடியுமா?

பல சந்தேகங்கள் உள்ளன் பிறகு மிச்சம் கேட்கிறேன் மிகவும் நன்றாக இருக்கிறது தொடர்ந்து எழுதுங்கோ சுவைக்க நான் தயார் ஆனா சந்தேகங்கள் கேட்பேன் கோவிக்க கூடாது......... :huh:

ஜமுனா கேட்டது போல

"ஆம்பல் & மண்டலி என்பதன் பொருள் என்னங்க?

மனந்திறந்து கேள்விகள் கேட்ட யமுனா, வெண்ணிலா இருவருக்கும் நன்றிகள்.

'மண்டலியை விழிக்கச் சொல்லி மயில்கள் அகவும்."

'மண்டலி" என்பதற்கு 'மண்" என்றும் ஒரு பொருள் உள்ளது. அந்த வகையில் மண்ணவளான பூமாதேவியை விழிக்கச் சொல்லி மயில்கள் அகவும் என்பதே அதன் பொருள்.

'ஆம்பல் பூத்த அதரங்கள் நெகிழ அன்றைய கடமைகள் ஆற்ற வந்தாள்"

ஆம்பல் என்பது தாமரை மலரைப்போன்றது அதில் வெள்ளாம்பல், செவ்வாம்பல் என்று இரண்டு வகைகள் உள்ளன. இங்கு இடம்பெற்ற இக்கவிதைத்துளியில் வெள்ளாம்பலை எடுத்துக் கொள்வதே பொருந்தும். அதாவது தூக்கம் கலைந்து காலையில் எழுந்து வரும் ஒருவரிடம் சிவந்த அதரங்களைக் காணமுடியாது. சற்று சாம்பல் படர்ந்து வெளிரிய உதடுகளைத்தான் காணலாம். அதைத்தான் இவ்வரி புலப்படுத்துகிறது. யமுனாவிற்கும் வெண்ணிலாவுக்கும் இந்த விளக்கங்கள் புரியக்கூடியதாக உள்ளனவா?

உங்கள் தெளிவான விளக்கம் நம்ம சந்தேகங்களை தெளிவாக்கின. நன்றிகள் அக்கா.

Edited by வெண்ணிலா

  • கருத்துக்கள உறவுகள்

' வேங்கையன் பூங்கொடி" எனும் காவியம் உள்ள பக்கவிலாசத்தை இணைத்து உதுவுங்கள்

' வேங்கையன் பூங்கொடி" எனும் காவியம் உள்ள பக்கவிலாசத்தை இணைத்து உதுவுங்கள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=28361

உங்களுக்கே உரிய பாணியில் கவிதை நன்றாக இருக்கின்றது தொடருங்கள் சகாரா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்க்களத்தில் இணைந்த நாட்தொடக்கம் நல்ல நட்போடு பாராட்டும் நண்பர் கௌரிபாலனுக்கு நன்றி உரைக்கிறேன்.

உங்கள் கவிதைகள் பல முன்னர் படித்திருக்கின்றேன். இப்போது தான் முதல் கருத்து எழுதுகின்றேன்.

வேங்கையன் பூங்கொடி ஆரம்பம் நன்றாக உள்ளது. வாழ்ந்த வாழ்வை வாழ்ந்த சுழல் சுற்றங்களோடு திரும்பி பார்க்கின்றேன். பொன்னலரிகள் செவ்விரத்தம் பூக்கள் கமுகமரங்கள் தென்னம்பாழைகளில் அணில்கள் பெண்கள் பெரியபிள்ளைகளான நிகழ்வுகள் உணர்வுகள் என்று ஒரு காட்சி காவியமாக விரிகின்றது.

பிரிவு என்றதும் எமது கண்முன்னே விரிவது உறவுகளை பிரிந்திருப்பதே ஆனால் காட்சிகள் வாழ்க்கை முறைகள் பழக்கவழக்கங்கள் என்று பலதை பிரிந்த துயரம் மறைமுகமாக எமக்குள் வேதனைப்படுகின்றது. எமது கண்ணகள் இதமாக கண்ட தென்னைகளுக்கும் வாழைகளுக்கும் என்னும் ஆயிரமாயிரம் காட்சிகளுக்கும் சம்மந்தமில்லாத காட்சிகளுடன் உள்மனம் தவிக்கின்றது. அவைகளை வாழ்க்கை சுழல் மறக்கடித்து விட்டதால் சமயத்தில் ஏன் பரிதவிக்கின்றோம் என்பதே புரியவில்லை. தாயின் அணைப்பில் இருந்து ஒரு குழந்தை பழக்கமில்லாத ஒருவரிடம் வாழ்வதின் துயரம் போல் எமது உள்மனத்தில் காட்சிகளின் பிரிவும் உள்ளது. அவைக்கெல்லாம் ஆறுதல் சொல்வது போல் உள்ளது உங்கள் காவியம். தொடருங்கள். வாழ்த்துக்கள்.

நல்லதொரு தொடக்கம் வல்வை சகாரா. தொடர்ந்து வருபவற்றையும் படிக்க ஆவல் கொண்டுள்ளோம். :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இளைஞன், கடந்த ஒரு வருடத்தின் முன்னர் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? எழு! எழு1 பெண்ணே! எழு! எழு! என்ற எனது கவிதைக்கு நீங்கள் அளித்த விமர்சனம்.... அன்று நீங்கள் சுட்டிக்காட்டிய மெட்டு பின்நாளில் ஒரு எழுச்சி நிகழ்விற்கான சிறிது திருத்தங்கள் செய்யப்பட்டுப் பாடலாக்கப்பட்டது.இப்பாடலின் வரிகளை இத்தோடு இணைக்கின்றேன் இதற்காகவும் உங்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். நன்றிகள் இளைஞன்.எழு எழு பெண்ணே! எழு! ஏழு! எதிரிகள் மனபலம் உன்னடி விழவிழ எழு! எழு! பெண்ணே!! எழு! எழு!காப்பினைத் தந்திடா உலகமும் விழிக்கட்டும் காப்புக் கரங்களால் துயர் துடை!சாக்களம் மீதினில் சரித்திரம் பிறக்கட்டும் ஆக்கப் பலமது நீ படை!களங்களில் நின்று கலிகளை முட்டும் காரிகை வெல்லப் பலம் கொடு!உளங்களை வென்று பூமகள் முன்றலில் புலம் பெயர் பெண்ணென வளம் கொடு!பிஞ்சினைப் பிய்த்தவர் வஞ்சியை வதைத்தவர் வெஞ்சினம் கொண்டவர் நெஞ்சை உடை!நஞ்சினை அணிந்தவர்நாட்டைக் காப்பவர் நெஞ்சுரம் ஊட்டும் ஆற்றல் படை!கனல் விழி வீசு! கவிஞனின் கோல்கள் கர்வம் ஏற்றி எழுதட்டும்.புனலாய் கிடந்தவள் கனலாய் சிவந்திடக் காலம் காட்டிய பாதையிது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கவிதைகள் பல முன்னர் படித்திருக்கின்றேன். இப்போது தான் முதல் கருத்து எழுதுகின்றேன்.

வேங்கையன் பூங்கொடி ஆரம்பம் நன்றாக உள்ளது. வாழ்ந்த வாழ்வை வாழ்ந்த சுழல் சுற்றங்களோடு திரும்பி பார்க்கின்றேன். பொன்னலரிகள் செவ்விரத்தம் பூக்கள் கமுகமரங்கள் தென்னம்பாழைகளில் அணில்கள் பெண்கள் பெரியபிள்ளைகளான நிகழ்வுகள் உணர்வுகள் என்று ஒரு காட்சி காவியமாக விரிகின்றது.

பிரிவு என்றதும் எமது கண்முன்னே விரிவது உறவுகளை பிரிந்திருப்பதே ஆனால் காட்சிகள் வாழ்க்கை முறைகள் பழக்கவழக்கங்கள் என்று பலதை பிரிந்த துயரம் மறைமுகமாக எமக்குள் வேதனைப்படுகின்றது. எமது கண்ணகள் இதமாக கண்ட தென்னைகளுக்கும் வாழைகளுக்கும் என்னும் ஆயிரமாயிரம் காட்சிகளுக்கும் சம்மந்தமில்லாத காட்சிகளுடன் உள்மனம் தவிக்கின்றது. அவைகளை வாழ்க்கை சுழல் மறக்கடித்து விட்டதால் சமயத்தில் ஏன் பரிதவிக்கின்றோம் என்பதே புரியவில்லை. தாயின் அணைப்பில் இருந்து ஒரு குழந்தை பழக்கமில்லாத ஒருவரிடம் வாழ்வதின் துயரம் போல் எமது உள்மனத்தில் காட்சிகளின் பிரிவும் உள்ளது. அவைக்கெல்லாம் ஆறுதல் சொல்வது போல் உள்ளது உங்கள் காவியம். தொடருங்கள். வாழ்த்துக்கள்.

நன்றி சுகன்

புலம் பெயர்ந்தவர்களான நாம் நிறையவே இழந்துவிட்டோம். பளிங்கு மாளிகையின் கவர்ச்சியில் பச்சையத்தைத் தொலைத்தவர் நாம் போகப்போக நிறையவே உணரப்போகிறோம். இருந்தாலும் பச்சையம் தொலைத்த பளிங்கு மாளிகைகள் கவர்ச்சியானவையாகத்தான் எம்மினத்திற்குத் தெரியப்போகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

நல்வாழ்த்துக்கள் வல்வைசகரா,

ஆற்றலோடு ஆரம்பிதிருக்கிறீர்கள். உங்களுக்குள் நிறை வாழ்வு படிமங்களாக நிறைந்துள்ளது. முழுமையாக வெளிப்படுங்கள். வாசிப்புக்காக எனது குறுங்காவியம் ஒன்றை இணைத்திருக்கிறேன்.

நல்வாழ்த்துக்களூடன்

http://noolaham.net/library/books/03/278/278.pdf

உங்கள் காவியத்தின் லேஅவுட் வாசிப்பைச் சிரமப் படுத்துகிறது.

மிகவும் அழகான வண்ண எழுத்துக்களால் எம்மை கவர்ந்த பதிவு தொடரட்டும் சகாறா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

poet உங்களுடைய உற்சாகமான தட்டிக்கொடுப்பிற்கும் உங்களுடைய காவியப் பதிவிற்கும் நன்றிகள். அத்தோடு இலக்கியன் உங்களுக்கும் எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் வேங்கையின் பூங்கொடி காவியம் படித்தேன்,

நல்ல ஆரம்பம் சகாரா தொடர்ந்து படிக்க ஆவலாயு:ள்ளோம்

  • கருத்துக்கள உறவுகள்

சஹாராவுக்கு நிகர் சஹாரா என்பது முக்கியமாக கனடாவில் வசிப்பவர்களுக்கு பலவருடங்களாக தெரிந்த விடயம்.

சஹாராவை பாராட்டுவதிற்கோ, வாழ்த்துவதிற்கோ எனக்கு தகுதியில்லை என்பதை ஒத்துக்கொண்டாலும் நான் தமிழை நேசிப்பவன் என்ற ரீதியில் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

10,15 வருடங்களாக தமிழ்த்தேசியம் என்ற குறிக்கோளுடன் தனது ஆக்கங்களை நகர்த்தி வருகின்ற ஒரு தமிழ் ஆர்வளர்தான் சஹாரா.

சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், இலக்கியவாதி சஹாரா இன்று யாழில் இதைப்போன்ற படைப்புக்களை தொடர்ந்து வழங்கவேண்டும் என்பது எங்களின் எதிர்பார்ப்பு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இரசிகை.'வேங்கையன் பூங்கொடி"பாகம் ஒன்றின் அங்கம் 2 இணைக்கப்பட்டுள்ளது.வேங்கையன

  • கருத்துக்கள உறவுகள்

சஹாராவுக்கு நிகர் சஹாரா என்பது முக்கியமாக கனடாவில் வசிப்பவர்களுக்கு பலவருடங்களாக தெரிந்த விடயம்.

சஹாராவை பாராட்டுவதிற்கோ, வாழ்த்துவதிற்கோ எனக்கு தகுதியில்லை என்பதை ஒத்துக்கொண்டாலும் நான் தமிழை நேசிப்பவன் என்ற ரீதியில் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

10,15 வருடங்களாக தமிழ்த்தேசியம் என்ற குறிக்கோளுடன் தனது ஆக்கங்களை நகர்த்தி வருகின்ற ஒரு தமிழ் ஆர்வளர்தான் சஹாரா.

சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், இலக்கியவாதி சஹாரா இன்று யாழில் இதைப்போன்ற படைப்புக்களை தொடர்ந்து வழங்கவேண்டும் என்பது எங்களின் எதிர்பார்ப்பு.

அங்கம் 2 ஐ வாசித்த போது அவ்நிகழ்வுகள் என் நெஞ்சில் நிழலாடியது. உங்கள் தமிழ் சொற்கள் அழகோ அழகு. பெருமையாக இருக்குதுங்கோ, பாராட்டுக்கள்

நன்றி இளைஞன், கடந்த ஒரு வருடத்தின் முன்னர் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? எழு! எழு1 பெண்ணே! எழு! எழு! என்ற எனது கவிதைக்கு நீங்கள் அளித்த விமர்சனம்.... அன்று நீங்கள் சுட்டிக்காட்டிய மெட்டு பின்நாளில் ஒரு எழுச்சி நிகழ்விற்கான சிறிது திருத்தங்கள் செய்யப்பட்டுப் பாடலாக்கப்பட்டது.இப்பாடலின் வரிகளை இத்தோடு இணைக்கின்றேன் இதற்காகவும் உங்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். நன்றிகள் இளைஞன்.எழு எழு பெண்ணே! எழு! ஏழு! எதிரிகள் மனபலம் உன்னடி விழவிழ எழு! எழு! பெண்ணே!! எழு! எழு!காப்பினைத் தந்திடா உலகமும் விழிக்கட்டும் காப்புக் கரங்களால் துயர் துடை!சாக்களம் மீதினில் சரித்திரம் பிறக்கட்டும் ஆக்கப் பலமது நீ படை!களங்களில் நின்று கலிகளை முட்டும் காரிகை வெல்லப் பலம் கொடு!உளங்களை வென்று பூமகள் முன்றலில் புலம் பெயர் பெண்ணென வளம் கொடு!பிஞ்சினைப் பிய்த்தவர் வஞ்சியை வதைத்தவர் வெஞ்சினம் கொண்டவர் நெஞ்சை உடை!நஞ்சினை அணிந்தவர்நாட்டைக் காப்பவர் நெஞ்சுரம் ஊட்டும் ஆற்றல் படை!கனல் விழி வீசு! கவிஞனின் கோல்கள் கர்வம் ஏற்றி எழுதட்டும்.புனலாய் கிடந்தவள் கனலாய் சிவந்திடக் காலம் காட்டிய பாதையிது

சகாரா... மகிழ்ச்சியான விடயம். முடிந்தால் அதனை ஒலிவடிவிலும் இங்கு இணைக்கலாமே. Rap வடிவில் செய்வதற்கும் இவை மிகப் பொருத்தமான வரிகள். Sujith (Brammam) போன்றவர்கள் இதனை முயற்சித்து பார்க்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.