Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"வேங்கையன் பூங்கொடி" விமர்சனப்பகுதி

Featured Replies

பாகம் இரண்டை இன்று தான் வாசிக்க சந்தர்ப்பம் கிடைத்தது மிகவும் நன்றாக இருந்தது பல தமிழ் வார்த்தைகளை நானும் அறிய கூடியதாக இருந்தது வாழ்த்துகள் எல்லாவற்றையும் விட காவியதிற்குள் எங்களை அழைத்து சென்ற விதம் அருமை......... :lol:

கவனமாக வாருங்கள்!

குண்டுகளும், எறிகணையும்

உயிர் உரசி உலவும்

காவலரன் மத்திக்கே

இக்காவியத்தால் நுழைய

வேண்டும்!

உயிர் காப்புப் பயிற்சி

உங்களுக்கு அவசியம்.

  • Replies 70
  • Views 11.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி யமுனா.

எப்படி உங்களால் மட்டும் எல்லாவிடத்திலும் நுழைந்து அனைவரையும் பாராட்டித் தட்டிக் கொடுக்க முடிகிறது?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சஹாராவுக்கு நிகர் சஹாரா என்பது முக்கியமாக கனடாவில் வசிப்பவர்களுக்கு பலவருடங்களாக தெரிந்த விடயம்.

சஹாராவை பாராட்டுவதிற்கோ, வாழ்த்துவதிற்கோ எனக்கு தகுதியில்லை என்பதை ஒத்துக்கொண்டாலும் நான் தமிழை நேசிப்பவன் என்ற ரீதியில் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

10,15 வருடங்களாக தமிழ்த்தேசியம் என்ற குறிக்கோளுடன் தனது ஆக்கங்களை நகர்த்தி வருகின்ற ஒரு தமிழ் ஆர்வளர்தான் சஹாரா.

சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், இலக்கியவாதி சஹாரா இன்று யாழில் இதைப்போன்ற படைப்புக்களை தொடர்ந்து வழங்கவேண்டும் என்பது எங்களின் எதிர்பார்ப்பு.

வணக்கம் வல்வை மைந்தன்,

தமிழ்த்தேசியம் நோக்கி இயங்குகின்றேன் என்ற சொல் எனக்கு மகுடம் சூட்டுகிறது. இருப்பினும் முழுமையான தேசியத்திற்காகச் செயற்படுகிறேனா? என்று எனக்குள்ளேயே ஆயிரம் கேள்விகள்..... பல கேள்விகளுக்கு விடைகாண முடியாமல் வேர் பிரித்த சிறுதளிராக புலம்பெயர் தேசத்தில் என்வாழ்வை எழுதிச் செல்கிறது விதி.

பேச்சாளர், இலக்கியவாதி என்றெல்லாம் என்னை நோக்கி வார்த்தைகளை அடுக்கிச் செல்லாதீர்கள் இலக்கற்ற பேச்சாளராகவும், இலக்கியவாதியாகவும் இருப்பதைக் காட்டிலும் இலக்குள்ள எழுதுகோலுக்குச் சொந்தக்காரியாக இருக்கவே விரும்புகிறேன். தொடர்ந்தும் யாழின் எனது வருகையும், பங்களிப்பும் இருக்கும். வல்வை மைந்தன் உங்கள் கருத்தினைக் கொஞ்சம் மாற்றுங்கள். தாயகத்தை நேசிக்கும் வல்வை நண்பி என்பதே எனக்கான சரியான பதமாக இருக்கும் என்று நினைக்கிறேன். நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வேங்கையன் பூங்கொடி

பாகம் 1, அங்கம் - 3

http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry348269

அங்கம் 3 தலைப்பு "பிரியசகி"

அழகாக காலைப்பொழுதை வர்ணித்து இரு நங்கைகளது அங்கங்களை வர்ணித்து பாடசாலைக்கு அனுப்பி அங்கு மாணவியருக்கு முதலுதவி படிப்பிக்க முதலுதவியின் அவசியத்தை அழகாக சொல்லி அங்கம் 3 ஐ முடித்திருக்கிறீங்க கவிதைக்குரிய பாணியில். பாராட்டுக்கள் அக்கா

செய்திடும் பணியிலே சோர்ந்ததும் இல்லை

இவர்கள்

சிகப்புத் துளி கண்டு தேம்பியதும் இல்லை.

பிடிச்சிருக்கு இருதோழிகளது பணியும் பிடிச்சிருக்கு

நன்றி யமுனா.

எப்படி உங்களால் மட்டும் எல்லாவிடத்திலும் நுழைந்து அனைவரையும் பாராட்டித் தட்டிக் கொடுக்க முடிகிறது?

அக்கா ஒருவரை பாராட்டுவதால் நாம் எந்த வகையிலும் குறைய போவதில்லை மாறாக பல விசயங்களை அவர்கள் மூலம் அறிந்து கொள்ள முடியும் :( ,உதாரணதிற்கு வெள்ளையர்களை கவனித்து இருந்தா யார் நல்லது செய்தாலும் நேராக பாராட்டுவார்கள் அவர்கள் வயதில் குறைவா இருந்தா என்ன உடனடியாக பாராட்டி ஒரு நல்ல நட்பு வட்டதை உருவாக்கி!!அவர்களை முன்னேற்றுவதோடு தாங்களும் பல விசயங்களை அறிந்து கொள்வார்கள் :icon_mrgreen: ...........எங்கள் சமூகத்தில் இது கொஞ்சம் கஷ்டம் தான் அக்கா...!! :(

செய்திடும் பணியிலே சோர்ந்ததும் இல்லை

இவர்கள்

சிகப்புத் துளி கண்டு தேம்பியதும் இல்லை.

பாகம் 3 யை சுவைக்கு சந்தப்பம் தற்போது தான் கிடைத்தது "பிரியசகி" மிகவும் அழகாக உணர்வுடனும் தொகுத்து அளித்திருந்தீர்கள் மிகவும் நன்றாக இருந்தது,அதிலும் முடிவில் வந்த இரு வரிகள் அருமை வாழ்த்துகள் அக்கா!! :wub:

வெள்ளையர்களை கவனித்து இருந்தா யார் நல்லது செய்தாலும் நேராக பாராட்டுவார்கள் அவர்கள் வயதில் குறைவா இருந்தா என்ன உடனடியாக பாராட்டி ஒரு நல்ல நட்பு வட்டதை உருவாக்கி!!அவர்களை முன்னேற்றுவதோடு தாங்களும் பல விசயங்களை அறிந்து கொள்வார்கள் ...........எங்கள் சமூகத்தில் இது கொஞ்சம் கஷ்டம் தான் அக்கா...!!

நல்லாக சொல்லி இருக்கிறீங்க ஜம்மு. எபப்டி உங்களால் இப்படி

நல்லாக சொல்லி இருக்கிறீங்க ஜம்மு. எபப்டி உங்களால் இப்படி

எல்லாம் அவுஸ்ரெலியா கற்று தந்த பாடம் தான் நிலா அக்கா......... :( !!ஆனா எல்லாரும் அவுஸ்ரெலியர்கள் தலைகணம் பிடித்தவர்கள் என்று சொல்லுவார்கள் எல்லாம் காலம் தான் நிலா அக்கா!! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரி! இப்போதுதான் 'உங்களது வேங்கையன் பூங்கொடி" வாசித்தேன். மிகவும் நயமாக நகர்கிறது. வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் காவியம். :wub::lol:

பி.கு: முன் பக்கத்தில் ஜமுனாவும், வெண்ணிலாவும் ஆம்பல் பற்றிக் கேட்டிருந்தனர். ஆம்பல் என்றால் அல்லி மலரைக் குறிக்கும்.

தாமரை மலரை முகத்துக்கும், கைகளுக்கும் ஒப்பிடுவார்கள்.

அல்லி மலரை அதரத்துக்கும்(உதடு), கண் இமைக்கும் ஒப்பிடுவார்கள். 'அல்லி விழி மூடம்மா."

ஆண்டாளின் பாசுரத்திலும் இதைக் காணலாம்.

'செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்"

திருப்பாவை: 14ம் பாடல்.

பிழையிருந்தால் பொறுத்துக் கொள்ளவும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனந்திறந்து கேள்விகள் கேட்ட யமுனா, வெண்ணிலா இருவருக்கும் நன்றிகள்.

'மண்டலியை விழிக்கச் சொல்லி மயில்கள் அகவும்."

'மண்டலி" என்பதற்கு 'மண்" என்றும் ஒரு பொருள் உள்ளது. அந்த வகையில் மண்ணவளான பூமாதேவியை விழிக்கச் சொல்லி மயில்கள் அகவும் என்பதே அதன் பொருள்.

'ஆம்பல் பூத்த அதரங்கள் நெகிழ அன்றைய கடமைகள் ஆற்ற வந்தாள்"

ஆம்பல் என்பது தாமரை மலரைப்போன்றது அதில் வெள்ளாம்பல், செவ்வாம்பல் என்று இரண்டு வகைகள் உள்ளன. இங்கு இடம்பெற்ற இக்கவிதைத்துளியில் வெள்ளாம்பலை எடுத்துக் கொள்வதே பொருந்தும். அதாவது தூக்கம் கலைந்து காலையில் எழுந்து வரும் ஒருவரிடம் சிவந்த அதரங்களைக் காணமுடியாது. சற்று சாம்பல் படர்ந்து வெளிரிய உதடுகளைத்தான் காணலாம். அதைத்தான் இவ்வரி புலப்படுத்துகிறது. யமுனாவிற்கும் வெண்ணிலாவுக்கும் இந்த விளக்கங்கள் புரியக்கூடியதாக உள்ளனவா?

சுவி, நீங்கள் இவ்விளக்கத்தினைப் பார்க்கவில்லைப்போல் இருக்கிறது. உங்கள் முயற்சியும் மகிழ்வளிக்கிறது. எங்களை அறியாமலே பழைய பாசுரங்களில் உள்ளவை எங்களை ஆளும் என்பதற்கு நல்ல சான்றை எடுத்துக் காட்டியிருக்கிறீர்கள், நன்றி சுவி.

யமுனா நல்ல சில விடயங்களைச் சுட்டிக்காட்டியுள்ளீர்கள் நானும் கடைப்பிடிக்க முயற்சி செய்கிறேன்

பாகம் 4 '"கூற்றுவன் கேட்டால்" நீங்கள் எழுதிய விதம் வாசிக்க தூண்டுகிறது மிகவும் நன்றாக இருகிறது :unsure: ஆனால் தலைப்பு "கூற்றுவன் கேட்டால்" என்பதன் பொருள் தான் விளங்கவில்லை எனக்கு கொஞ்சம் விளங்கபடுத்தமுடியுமா!!! :)

அப்ப நான் வரட்டா!!

வணக்கம்

வல்வை சகாரா

அருமையாக அழகு தமிழை உங்கள் கவிநடையால் இன்னும் அழகுற செய்திருக்கின்றீர்கள். அங்கம் 4 இணைத் தொட்டாலும் நான் இன்னும் ஒன்றிலிருந்து மீளவில்லை. வெளிவர மறுக்கின்றது மனது. . . .

வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகம் 4 '"கூற்றுவன் கேட்டால்" நீங்கள் எழுதிய விதம் வாசிக்க தூண்டுகிறது மிகவும் நன்றாக இருகிறது :o ஆனால் தலைப்பு "கூற்றுவன் கேட்டால்" என்பதன் பொருள் தான் விளங்கவில்லை எனக்கு கொஞ்சம் விளங்கபடுத்தமுடியுமா!!! :o

அப்ப நான் வரட்டா!!

ஊற்றெடுத்த உதிர ஆற்றில்

உருக்குலையும் இச்சகாவை

கூற்றுவன் கேட்பதற்காய்

காற்றாக விடுவானா?

எத்தனையோ தோழரினை

எமன் பிடுங்கத் தோற்றவன்தான்

இன்னவனை மட்டுமென்ன

எளிதாகக் கொடுப்பானா?

நன்றி யமுனா.

உண்மையிலேயே புரியவில்லையா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்

வல்வை சகாரா

அருமையாக அழகு தமிழை உங்கள் கவிநடையால் இன்னும் அழகுற செய்திருக்கின்றீர்கள். அங்கம் 4 இணைத் தொட்டாலும் நான் இன்னும் ஒன்றிலிருந்து மீளவில்லை. வெளிவர மறுக்கின்றது மனது. . . .

வாழ்த்துக்கள்.

நன்றி பரணி, அங்கம் 1 எனக்கும் கூட இன்னும் கிறக்கம் கொடுக்கும் பகுதியாகவே இருக்கிறது.

விடுபடமுடியவில்லை என்று தொடர்ந்து வாசிக்காமல் விட்டுவிடாதீர்கள். வாசியுங்கள்.

வணக்கம் வல்வை சகாரா அக்கா முதலில் "கூற்றுவன்" என்பதில் ஒரு சிறிய மயக்கம் தற்போது மயக்கத்தில் ஒரு தெளிவு!! :lol:

இந்த வாரம் "மனபுதிர்" என்று நீங்கள் எழுதிய விதம் பல மனபுதிர்களை கண்களிற்கு முன் கொண்டு வந்து நிறுத்துகிறது வாழ்த்துகள்....... :lol:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யமுனா உங்களுக்கு பல மனப்புதிர்கள் புரிகிறதா?

விடை காண முடியாத பலகேள்விகள் மனதிற்குள் முடிச்சுப் போட்டுக் கொண்டு மல்லாக்கக் கிடக்கும். காலம் ஆக ஆக முடிச்சுகள் அவிழாவிடின் புதிராகிப் போய்விடும்.

உங்களுக்குப் புரிந்த மனப்புதிர்கள் எப்படி?

சந்தேகத்துடன் கேட்கிறேன் என்று குறை விளங்க வேண்டாம் நீங்க பேபி என்று கொண்டு பம்பர்ஸ் கட்டித் திரிவதாகக் கேள்விப்பட்டேன் ஆதலால்த்தான் இக்கேள்வியை உங்களிடம் கேட்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'வேங்கையன் பூங்கொடி"

பாகம் 1,

அங்கம் 6

http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry353883

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சகாரா.உங்கள் வேங்கையன் பூங்கொடி வாசிக்க மிகவும் பெருமையாக இருக்கிறது.தொடருங்கள்.

பல அங்கங்களாஇ இன்றுதான் வாசித்தேன். உங்கள் எழுத்தாற்றலை நினைத்து பெருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஈழப்பிரியன், வெண்ணிலா தொடர்ந்தும் வாசியுங்கள்.

யமுனா உங்களுக்கு பல மனப்புதிர்கள் புரிகிறதா?

விடை காண முடியாத பலகேள்விகள் மனதிற்குள் முடிச்சுப் போட்டுக் கொண்டு மல்லாக்கக் கிடக்கும். காலம் ஆக ஆக முடிச்சுகள் அவிழாவிடின் புதிராகிப் போய்விடும்.

உங்களுக்குப் புரிந்த மனப்புதிர்கள் எப்படி?

சந்தேகத்துடன் கேட்கிறேன் என்று குறை விளங்க வேண்டாம் நீங்க பேபி என்று கொண்டு பம்பர்ஸ் கட்டித் திரிவதாகக் கேள்விப்பட்டேன் ஆதலால்த்தான் இக்கேள்வியை உங்களிடம் கேட்கிறேன்.

பல மனபுதிர்களிற்கு விடையை தேடி செல்லாம பேபியாக இருந்துவிட்டால் பிரச்சினை ஏதும் இல்லை அக்கா சில புதிர்களை ஆராய்ச்சி பண்ண வெளிகிட்டால் உலகில் நிம்மதியாக வாழமுடியாது!! :) ஆகவே பம்பர்ஸ் கட்டு பேபியாக திரிந்துவிட்டால் புரிந்தும் புரியாத மாதிரி இருந்துவிடலாம் பல குழப்பங்களிள் இருந்தும் விலகிகொள்ளளாம்!! :)

சகரா அக்கா தங்களின் காவியத்தில் பாகம் 6 "அண்டத்தை கடந்தவள்" மற்றும் பாகம் 7 "மெளனவலிகள் இவை யாவற்றையும் சுவைக்க தற்போது தான் நேரம் கிடைத்தது மிகவும் நன்றாக இருந்தது வாழ்த்துகள்!! :)

எல்லாவற்றையும் விட "மெளனவலிகள்" ஏதோ தெரியாது ரொம்பவே பிடித்திருந்தது! :( !

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

வல்வை சகீரா பாராட்டுக்கள் சத்தியமா சொல்லுறன் இப்பிடியெல்லாம் எழுத எனக்கும் ஆசை ஆனால் எப்பிடி எழுத தொடங்கினாலும்வருதில்லை அதனாலை வயிறுபூர்வமான வாழ்த்துகள் (நெடுக மனப்ப+ர்வமா வாழ்த்தி அலுத்து போச்சுது) :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி யமுனா உங்கள் கருத்திற்கு... மௌன வலிகள் உங்களுக்கும் இருக்கிறது போல் ஆதலால் தான் அப்பகுதி உங்களுக்கு மிகவும் பிடிக்கிறது என நினைக்கிறேன். அத்தோடு யமுனா வேங்கையன் பூங்கொடி இப்போதுதான் முதலாம் பாகத்து எழாவது அங்கத்தில் நடைபோடுகிறது. நீங்கள் அங்கங்களை பாகங்களாக்கி விமர்சித்திருக்கிறீர்கள் ஒவ்வொரு அங்கத்தையும் ஒவ்வொரு பாகமாக விரிவுபடுத்தி எழுத வைத்துவிடுவீர்கள் போல் இருக்கிறது.

நன்றி சாத்திரியார்,

'தாய்மை மனதிற்குள் தவிப்பு

நஞ்சணிந்த நெஞ்சம் காணக் காண

கருவறை கலங்கியது"

உங்களின் வயிறுபூர்வமாக வாழ்த்து தாய்மாரை நினைவூட்டுகிறது.

http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry355516

  • 2 weeks later...

என்ன அக்கா!, இனிமே தொடர் தொடராதோ?

வினாடிப் பொழுதுகளில்

தன் நிலை தேற்றி முறுவல் பூத்தவன்

அகன்று செல்ல அகங்கள் துடித்தன.

சென்றவன் திக்கை நின்று பார்த்தவள்

நெஞ்சம் அவன் பின்னோட

நலன்புரி சங்கம் ஏகினாள்.

இந்த நாடகம்

இருவருக்குள்ளா?

இன்னிரு சோடிக் கண்கள் மறுத்தன

ஜதார்த்தமான வரிகள் சில சமயம் நெஞ்சைக் கனக்க வைக்கும்.

உங்கள் கவிநடை அழகு தொடருங்கள்......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.