Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நந்திக்கடல் கடற்கரையும் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக அடையாளம் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நந்திக்கடல் கடற்கரையும் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக அடையாளம் !

நந்திக்கடல் கடற்கரையும் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக அடையாளம் !

நந்திக்கடல் கடற்கரையும் இந்த நாட்டின் கரையோரத்தில் அடையாளம் காணப்பட்ட புதிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

2009ம் ஆண்டு நடந்த உள்நாட்டுப் போரின் இறுதி யுத்தம் நந்திக்கடல் பகுதியில் இடம்பெற்றிருந்தது. இதில் பல இலட்சம் மக்கள் கொத்தணி குண்டுகளுக்கு தோட்டாக்களுக்கும் பலியாகியிருந்தனர்.

இந்நிலையில் நந்திக்கடல் கடற்கரையும் புதிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

கடலோர பாதுகாப்பு மற்றும் கடலோர வள மேலாண்மை திணைக்களம் இதுவரை இதுபோன்ற 24 இடங்களை அடையாளம் கண்டுள்ளது.

இதற்கிடையில், கடந்த மே மாதத்தை விட சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி கடந்த மாதம் 1 லட்சத்து 388 சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளனர்.

மே மாதத்தில் எண்பத்து மூவாயிரத்து 309 சுற்றுலாப் பயணிகளே நாட்டுக்கு வருகை தந்திருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வருடம் இதுவரையில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஆறு இலட்சத்து 24 ஆயிரத்து 874 ஆக பதிவாகியுள்ளது.

https://athavannews.com/2023/1338524

  • கருத்துக்கள உறவுகள்+

எப்படியெல்லாம் இனப்படுகொலைக்கான ஆதாரங்களை மறைக்க முடியுமோ அப்படியெல்லாம் முயற்சிக்கிறான் சிங்களவன். 

இதற்கு கஜேந்திரன், சம்- சும் கூட்டு, மாவை என எமது அத்தனை அரசியல்வியாதிகளும் துணை நிக்கின்றன. எல்லாம் எமது இழிவான தலைவிதியே...

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனுக்கு நடந்த அவலங்களை கேலிக்கூத்தாக்குகிறார்கள். நூல் நிலையத்திற்கு சிங்கள நூல்களை வழங்குகிறார்கள், நினைவுதூபிகளை இடித்து தங்கள் தூபிகளில்  நினைவு கூர சொல்கிறார்கள். தமிழனை எவ்வாறு சிறுமைப்படுத்தி அழிக்கலாமென்று தூக்கமின்றி முயற்சிக்கிறான். ஆனா நம்ம தலைமைகள், தூங்கியே காலத்தை கழிக்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

சுற்றுலாப் பகுதியாக மாறும் நந்திக்கடல் கடற்கரை!

நாட்டின் கரையோரத்தில் உள்ள கவர்ச்சிகரமான இடங்களை கண்டறிந்து உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அவசர வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவ திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்

இவ்வாறான இடங்களை அபிவிருத்தி செய்வதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் ஏனைய அரச நிறுவனங்கள் மற்றும் தனியார் துறைகளை இணைத்து பொருத்தமான முதலீட்டாளர்களை கண்டறிய வேண்டும் எனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கதெரிவித்துள்ளார்.

கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவத் திணைக்களம், காகே வாடியா, புத்தளம் லகூன் தீவுகள், குடவா, நீர்கொழும்பு தடாகம், கபுங்கொட, பிரிதிபுர, கொக்கலா தடாகம், சீதாகலை, உள்ளிட்ட 24 புதிய சுற்றுலாத் தலங்களை ஏற்கனவே அடையாளம் கண்டுள்ளது.
இது தவிர லுனாம தடாகம், மலாலா லெவயா, கிரிந்த, குனுகலே கடற்கரை, யானைப்பாறை, சலதீவ் தீவு, தம்பலகமுவ விரிகுடா, உப்புவெளி, சம்பல்தீவு கடற்கரை, நாயாறு கடற்கரை, நந்திக்கடல் கடற்கரை, சாந்தகுளம் கடற்கரை ஆகியன புதிய சுற்றுலாப் பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நாட்டின் பொருளாதார வளங்கள் நிறைந்த கடற்கரை 1620 கி.மீ நீளம் கொண்டது. நாட்டின் கரையோர சுற்றாடலைப் பாதுகாக்கும் அதே வேளையில் நாட்டைச் சூழவுள்ள கரையோரத்தை முறையாக அபிவிருத்தி செய்வதன் மூலம் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/262406

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சகாலத்திற்கு முன்பு அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தை தனியார் ஒருவர் வணிக நிலையமாக்கியதை மறந்துவிட்டீர்களா? 

சாதாரன மக்களே சுயநலத்துடன் இவ்வாறு நடந்துகொள்ளும் பொழுது மற்றவர்களை நொந்து பிரயோசனமில்லை. 

 

16 hours ago, நன்னிச் சோழன் said:

எப்படியெல்லாம் இனப்படுகொலைக்கான ஆதாரங்களை மறைக்க முடியுமோ அப்படியெல்லாம் முயற்சிக்கிறான் சிங்களவன். 

இதற்கு கஜேந்திரன், சம்- சும் கூட்டு, மாவை என எமது அத்தனை அரசியல்வியாதிகளும் துணை நிக்கின்றன. எல்லாம் எமது இழிவான தலைவிதியே...

 

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, நன்னிச் சோழன் said:

எப்படியெல்லாம் இனப்படுகொலைக்கான ஆதாரங்களை மறைக்க முடியுமோ அப்படியெல்லாம் முயற்சிக்கிறான் சிங்களவன். 

இதற்கு கஜேந்திரன், சம்- சும் கூட்டு, மாவை என எமது அத்தனை அரசியல்வியாதிகளும் துணை நிக்கின்றன. எல்லாம் எமது இழிவான தலைவிதியே...

 

19 hours ago, satan said:

தமிழனுக்கு நடந்த அவலங்களை கேலிக்கூத்தாக்குகிறார்கள். நூல் நிலையத்திற்கு சிங்கள நூல்களை வழங்குகிறார்கள், நினைவுதூபிகளை இடித்து தங்கள் தூபிகளில்  நினைவு கூர சொல்கிறார்கள். தமிழனை எவ்வாறு சிறுமைப்படுத்தி அழிக்கலாமென்று தூக்கமின்றி முயற்சிக்கிறான். ஆனா நம்ம தலைமைகள், தூங்கியே காலத்தை கழிக்கின்றனர்.

இவர்களும் மாறப்போவதில்லை. மக்களும் விழிப்படையப்போவதில்லை. நாமும் இன்னும் சிலநாள் கருத்தாடுவதோடு சரி. எல்லாம் தமிழினத்தின் சாபக்கேடா அல்லது தமிழினத்தின் பாராமுகப்போக்கா? 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஏராளன் said:

நாட்டின் கரையோர சுற்றாடலைப் பாதுகாக்கும் அதே வேளையில் நாட்டைச் சூழவுள்ள கரையோரத்தை முறையாக அபிவிருத்தி செய்வதன் மூலம் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

பாவம் பிரசன்ன ரணதுங்க! ஆற்றிலே  போட்டதை குளத்திலே தேடுகிறார் அல்லது மறைக்கப்பாக்கிறார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

சாதாரன மக்களே சுயநலத்துடன் இவ்வாறு நடந்துகொள்ளும் பொழுது மற்றவர்களை நொந்து பிரயோசனமில்லை. 

நான் அவதானித்த அளவில் உலகின் ஏனைய மனித இனங்களை விட தமிழினத்திற்கு சுயநலம் அதிகம். இதை மாற்ற விழிப்புணர்வுகளை  உருவாக்க தமிழ் அரசியல்வாதிகளாலேயே முடியும்.சிங்கள அரசியல்வாதிகளை பாருங்கள்.தங்கள் இனம் மதம் நாடு  என பேச்சுத்தொனிகள் இருக்கும்.

 

  • கருத்துக்கள உறவுகள்+
8 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

கொஞ்சகாலத்திற்கு முன்பு அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தை தனியார் ஒருவர் வணிக நிலையமாக்கியதை மறந்துவிட்டீர்களா? 

சாதாரன மக்களே சுயநலத்துடன் இவ்வாறு நடந்துகொள்ளும் பொழுது மற்றவர்களை நொந்து பிரயோசனமில்லை. 

 

 

உண்மைதான்

2 hours ago, nochchi said:

 

இவர்களும் மாறப்போவதில்லை. மக்களும் விழிப்படையப்போவதில்லை. நாமும் இன்னும் சிலநாள் கருத்தாடுவதோடு சரி. எல்லாம் தமிழினத்தின் சாபக்கேடா அல்லது தமிழினத்தின் பாராமுகப்போக்கா? 

சாபக்கேடும் பாராமுகமுமே... இன்னுமொரு பத்து ஆண்டுகளோட தமிழனின் இருப்பு இப்ப இருப்பதை விடக் கேவலாமகி விடும். பிறகு கொஞ்சக் காலத்திலை எல்லாம் முடிஞ்சிடும் என்டு நினைக்குறன்.

  • கருத்துக்கள உறவுகள்

எதிரியின் ஆக்கிரமிப்புக்குள் இருக்கும்... சுதந்திர வேட்கை கொண்டிருந்த மக்கள் கூட்டத்திற்கு.. என்ன தான் கிடைக்கும்..??! இந்த ஆக்கிரமிப்புக்கு துணை நின்றவர்களை தான் இந்த மக்கள் இப்போ கேள்வி கேட்கனும். அதில் இணைத்தலைமை நாடுகள் என்றவையும் அடங்குவினம். இப்ப அவை உக்ரைனுக்கு ஆயுத சப்பிளை செய்வதிலும் உக்ரைனியர்களை தம் பக்கம் இழுப்பதிலும்.. பிசி. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

நான் அவதானித்த அளவில் உலகின் ஏனைய மனித இனங்களை விட தமிழினத்திற்கு சுயநலம் அதிகம். இதை மாற்ற விழிப்புணர்வுகளை  உருவாக்க தமிழ் அரசியல்வாதிகளாலேயே முடியும்.சிங்கள அரசியல்வாதிகளை பாருங்கள்.தங்கள் இனம் மதம் நாடு  என பேச்சுத்தொனிகள் இருக்கும்.

 

அரசியல்வாதிகளை முழுவதும் நம்பியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. விழப்புணர்வை அவர்களுக்குத் தான் முதலில் கொடுக்கவேண்டும். 

சாதாரண மனிதர்களுக்கு அவர்களின் இனம் மொழி மீது பற்றும் சமூகமாக முன்னேற வேண்டும் என்ற கொள்கையும் இருக்க வேண்டும். இந்த எண்ணம் அங்கே அருகி வருகிறது. அவ்வளவுதான் நான் உணர்ந்து கொண்டது. 

 

Edited by பிரபா சிதம்பரநாதன்
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப பெரியவிகாரையும்...ஒரு கலர் அடிச்ச மசூதியும் வருமெண்டுறியள்..

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

அரசியல்வாதிகளை முழுவதும் நம்பியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. விழப்புணர்வை அவர்களுக்குத் தான் முதலில் கொடுக்கவேண்டும். 

யாருக்கு நம்ம அரசியல்வாதிகளுக்கா ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

அரசியல்வாதிகளை முழுவதும் நம்பியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. விழப்புணர்வை அவர்களுக்குத் தான் முதலில் கொடுக்கவேண்டும். 

36 minutes ago, பெருமாள் said:

யாருக்கு நம்ம அரசியல்வாதிகளுக்கா ?

 

இலங்கையில் தமிழ் மக்களுக்கு தனிப்பட்ட உதவிகளை தவிர்த்து நல்லது கெட்டது எது செய்ய வேண்டுமாயினும் அரசியல்வாதிகளால் மட்டுமே முடியுமென அங்கு வசிப்பவர் ஒருவர் சொன்னார். 

இலங்கையில் தான் தப்பினால் தம்பிரான் புண்ணியம் என்ற நிலை .....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.