Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வெளிநாட்டில் இருந்து பணம் கொடுத்து யாழில் வீடொன்றின் மீது தாக்குதல் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

NEWS-02-7.jpg

 

யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பல் ஒன்று வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடாத்தியுள்ளதுடன், வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றையும் தீக்கிரையாக்கியுள்ளது.

கல்வியங்காடு பூதவராஜர் ஆலயத்திற்கு அருகில் உள்ள வீடொன்றினுள் இன்று அதிகாலை 06 பேர் கொண்ட வன்முறை கும்பல் புகுந்து தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

வீட்டில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில் தாக்குதல் நடத்தியவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டில் இருந்து தாக்குதலுக்கு பணம் கொடுத்து, கூலிப்படையை ஏவி தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

https://thinakkural.lk/article/268476

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ். கல்வியங்காட்டில் 6 பேர் கொண்ட வன்முறைக்குழு வீட்டின் மீது தாக்குதல்!

Published By: VISHNU

15 AUG, 2023 | 03:42 PM
image
 

யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் கொண்ட வன்முறைக் கும்பல் ஆயுதங்களுடன் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளது.

IMG-20230815-WA0062.jpg

கல்வியங்காடு பூதவராயர் வீதியில் உள்ள அரச உத்தியோகத்தர் ஒருவரது வீட்டின் மீதே செவ்வாய்க்கிழமை (15) அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

IMG-20230815-WA0056.jpg

பெண்களின் ஆடை அணிந்து வந்த ஒருவர் உட்பட்ட ஆயுதங்களுடன் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பலே அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர்.

IMG-20230815-WA0059.jpg

இதன்போது வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள், மாணவர்களின் புத்தகப்பை என்பன தீயிட்டு கொளுத்தப்பட்டதுடன் யன்னல் கண்ணாடிகள், கண்காணிப்பு கமராக்கள் என்பனவும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.

IMG-20230815-WA0060.jpg

சம்பவம் தொடர்பில் கண்காணிப்பு கமராக்களில் பதிவான காட்சிகளை அடிப்படையாக கொண்டு கோப்பாய் பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர். 

வெளிநாட்டில் உள்ள தரப்பே இங்குள்ள வன்முறை கும்பலுக்கு பணம் அனுப்பி குறித்த வன்முறையில் ஈடுபட்டதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

https://www.virakesari.lk/article/162431

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் தமிழர் பலமே பணம்தானே. பணம் பத்தும் செய்யும்

  • கருத்துக்கள உறவுகள்

அக் குடும்பத்தின் மீது தனிப்படட விரோதமாக இருக்கலாம் தானே? பணம் வெளிநாட்டில் இருந்து மட்டும்தான் வருகிறதா ? ஏன் வெளிநாட்டுப்பணம் வந்து  என சொல்ல வேண்டும். அவர்கள்வீடு வெளிநாட்டிலிருப்பவர்கள்தா ? அவர்களை எழுப்ப நினைக்கிறார்களா ? 

  • கருத்துக்கள உறவுகள்

காசால் அடிப்பது என்பார்களே அது இதை தானா

  • கருத்துக்கள உறவுகள்

இது இலங்கையில் உள்ள வாக்னரின் கூலி படைகள். காசு பணம் அளவுக்கு மிஞ்சினால் இப்படித்தான் நடப்பார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, விளங்க நினைப்பவன் said:

காசால் அடிப்பது என்பார்களே அது இதை தானா

ஓம் போல
 

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, விளங்க நினைப்பவன் said:

காசால் அடிப்பது என்பார்களே அது இதை தானா

இல்லை இது காசை கொடுப்பித்து, கட்டையால் அடிப்பது🤣

13 hours ago, Cruso said:

வாக்னரின் கூலி படைகள்

🤣 (பணம்) வாங்குவார் கூலிப்படைகள்🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழில் பெண் வேடத்தில் வீடுகள், வாகனங்கள் மீது தாக்குதல்; 9 பேர் கைது

Published By: DIGITAL DESK 3

19 AUG, 2023 | 10:06 AM
image
 

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பெண்களின் ஆடைகளை அணிந்தவாறு வீடுகளுக்குள் புகுந்து அட்டூழியத்தில் ஈடுபட்டு வந்த வன்முறைக் கும்பலைச் சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நபர்களை கொலை செய்ய எத்தணித்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் 9 பேரும் சனிக்கிழமை (19) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரே இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

295.jpg

யாழ்ப்பாணம், கோப்பாய் மற்றும் கீரிமலை பிரதேசங்களில் இரவு வேளையில் வீடுகளுக்குள் புகுந்து கும்பல் ஒன்று அங்குள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் தாக்குதல்களை நடத்தியும் பெறுமதியான பொருள்களை சேதமாக்கியும் அட்டூழியத்தில் ஈடுபட்டு வந்தது.

அண்மையில் கோப்பாய் வன்முறைக் கும்பலைச் சேர்ந்தோர் சல்வார் ஆடையை அணிந்த வாறு தாக்குதலில் ஈடுபட்டமை சிசிரிவி கமரா பதிவில் வெளிப்பட்டது.

இந்த தாக்குதல்கள் தொடர்பில் பொலிஸ் நிலையங்களில் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

01__3_.jpg

சந்தேக நபர்களிடமிருந்து 3 மோட்டார் சைக்கிள்கள், 2 வாள்கள், கைக்கோடரி ஒன்றும் மடத்தல் ஒன்றும் தாக்குதல்களுக்கு அணிந்து சென்ற பெண்கள் ஆடைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கல்வியங்காடு பகுதியில் உள்ள வீடு மீதான தாக்குதலுக்கு டென்மார்க்கில் வசிக்கும் விஸ்வநாதன் என்பவரே காரணம் என்றும் அவர் தமக்கு பணம் அனுப்பியதாகவும் முதன்மை சந்தேக நபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார் என்று பொலிஸார் கூறினர்.

https://www.virakesari.lk/article/162682

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஏராளன் said:

டென்மார்க்கில் வசிக்கும் விஸ்வநாதன் என்பவரே காரணம் என்றும் அவர் தமக்கு பணம் அனுப்பியதாகவும் முதன்மை சந்தேக நபர் வாக்குமூலம் வழங்கி

உண்மையாயின் டென்மார்க்கில் அவருக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்யலாமா?

  • கருத்துக்கள உறவுகள்

யாழில். குடும்பம் ஒன்றை படுகொலை செய்ய டென்மார்க்கில் இருந்து ஒரு இலட்சத்து 80ஆயிரம் கூலி

written by  adminAugust 18, 2023
 
20230818_181100.jpg?fit=1170%2C658&ssl=1

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டு பகுதியில் வீடொன்றின் மீது தாக்குதல் நடாத்தி , குடும்பம் ஒன்றை படுகொலை செய்ய ஒரு இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து கூலிப்படை ஒன்றினை கூலிக்கு அமர்த்திய டென்மார்க்கில் உள்ள பிராதான சந்தேக நபரை இன்டர்போல் உதவியுடன் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக   காவல்துறையினா்  தெரிவித்துள்ளனர்.

கல்வியங்காடு பிரதேசத்தில் கடந்த 15ஆம் திகதி அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீடு ஒன்றின் மீது தாக்குதல் நடாத்திய சம்பவத்துடன் தொடர்புடைய 8 பேரை யாழ்ப்பாணம் விசேட குற்றத்தடுப்பு  காவல்துறையினா்  கைது செய்துள்ளனர்.  குறித்த தாக்குதல் சம்பவத்துடன் 6 பேர்  நேரடியாக தொடர்புபட்டுள்ளதுடன் ஒருவர் தாக்குதல் சம்பவத்துக்கு மோட்டார் சைக்கிளை வழங்கியதுடன் ஒருவர் தரகராகவும் செயற்பட்டுள்ளார் என   காவல்துறையினா் தெரிவித்துள்ளனர்.

 கைது செய்யப்பட்ட வன்முறை கும்பலிடம் இருந்து பெண்களின் ஆடைகள்,மோட்டார் சைக்கிள்கள்,வாள்கள்,கோடாரி,இரும்பு கம்பி,மடத்தல் போன்றன கைப்பற்றபட்டுள்ளன.   டென்மார்க்கில் வசித்து வரும் விஸ்வநாதன் என்ற நபர் பணம் அனுப்பியே குறித்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது எனவும் அரச உத்தியோகத்தரையும் அவரது குடும்பத்தினரையும் கொலை செய்யும் நோக்கில் தாக்குதல் நடத்திய வன்முறை கும்பலுக்கு ஒரு லட்சத்து எண்பதாயிரம் ரூபா பணம் டென்மார்க்கில் இருந்து விஸ்வநாதன் என்பவரால் அனுப்பப்பட்டுள்ளதாக  காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக செங்குந்தா இந்து கல்லூரி விளையாட்டு மைதானம் தொடர்பில் நீடித்த பிரச்சனையே குறித்த தாக்குதல் சம்பவத்துக்கு காரணம் எனவும்   காவல்துறை  விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 

https://globaltamilnews.net/2023/194207/

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

குடும்பம் ஒன்றை படுகொலை செய்ய ஒரு இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து கூலிப்படை ஒன்றினை கூலிக்கு அமர்த்திய டென்மார்க்கில் உள்ள பிராதான சந்தேக நபரை

உயிர்களின் விலை இவ்வளவு மலிவானதா? அதுவும் இழப்புகளை சந்தித்த இனத்தில்...

  • கருத்துக்கள உறவுகள்

இனி இது டோலரா?

பவுண்ஸா? 

யூரோவா? அதிகம் ஆட்களை வெட்ட பயன்படுத்தப்படுகிறது என்ற நிலையில் வந்து தான் நிற்கும்?😡

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, கிருபன் said:

டென்மார்க்கில் உள்ள பிராதான சந்தேக நபரை இன்டர்போல் உதவியுடன் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக   காவல்துறையினா்  தெரிவித்துள்ளனர்.

உலக மட்டத்தில் புலத்தமிழர்களை மிக உயர்ந்த இடத்துக்கு கொண்டு சென்றுவிட்டார். 

  • கருத்துக்கள உறவுகள்

போதை ஆசாமிகளும் குறுக்கு வழியில்பணம் சேர்ப்வர்களும் எதுவும் செய்வர்கள். நீதி நேர்மை மரணித்துவிடட  நாட்டில் வாளும் கத்தி பொல்லும்அடக்க நினைக்கிறது.  பயந்துவாழும் வாழ்க்கையாகி விட்ட்து.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.