Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இனி மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதலாம் – கர்நாடகா அரசு அனுமதி..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
24 OCT, 2023 | 11:12 AM
image

கர்நாடகாவில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதலாம் என அம்மாநில கல்வித்துறை அமைச்சர் எம்.சி.சுதாகர் தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டு கர்நாடகாவில் அரசுப் பள்ளி ஒன்றில் ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய மாணவிகள் தேர்வு எழுத அனுமதிக்கப்படாததால், மாநிலம் முழுவதும் மிகப் பெரிய போராட்டம் வெடித்தது. சில மாணவர்கள் காவித் துண்டு அணிந்து கொண்டு ஹிஜாப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

கர்நாடகா முழுவதும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வந்ததை அடுத்து, கல்வி நிறுவனங்களில் சீருடையை தவிர பிற ஆடைகள் அணியக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனிடையே கர்நாடகாவில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ள நிலையில், முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாணவிகள் ஹிஜாப் அணியலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக விளக்கம் அளித்த கர்நாடகா கல்வித்துறை அமைச்சர் எம்.சி.சுதாகர், “ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதும் விவகாரத்தில் சிலர் தேவையில்லாத சர்ச்சையை ஏற்படுத்த முயல்கிறார்கள். சில குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே குழப்பத்தை ஏற்படுத்த முயல்கிறார்கள். தற்போது அனைத்து தரப்பினரின் சுதந்திரத்தையும் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/167631

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா… தேர்தல் வருகிறது. முஸ்லீம்களின் வாக்கும் வேணும் தானே. 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிழையான முன்னுதாரணம். 

மேற்கில், மதச் சின்னங்களும் அதனோடு தொடர்புடைய விடயங்களும் பொது இடங்களில் வெளிப்படுத்தும் செயல்களை தவிர்க்கும்படி ஊக்குவிக்கும் போக்கு அதிகரித்துச் செல்கிறது. ஆனால், தென்னாசியாவில் நேரெதிர்....

🤨

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதவாத வாக்குகளை பெற்று கொள்வதற்காக கர்நாடக காங்கிரஸ் அரசு இந்த அநீதியை செய்துள்ளது. கல்வி கற்கும் நிலையங்களில் சீருடைக்கு பதிலாக எல்லா பெண்களுமே பொது உடையாக ஹிஜாப்பே அணிய வேண்டும் கர்நாடக பொலிஸ் கடுமையாக  கண்காணிக்கும் என்றும் முடிவு செய்வார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

ஆகா… தேர்தல் வருகிறது. முஸ்லீம்களின் வாக்கும் வேணும் தானே. 😂

சுலபமாக இனங்கண்டு அடி போடவும் இலகு தானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

பிழையான முன்னுதாரணம். 

மேற்கில், மதச் சின்னங்களும் அதனோடு தொடர்புடைய விடயங்களும் பொது இடங்களில் வெளிப்படுத்தும் செயல்களை தவிர்க்கும்படி ஊக்குவிக்கும் போக்கு அதிகரித்துச் செல்கிறது. ஆனால், தென்னாசியாவில் நேரெதிர்....

🤨

நன்றி

இதைத் தான் நானும் எழுத வந்தேன்.

கெடுகுடி சொல் கேளாது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரசியலமைப்பின் பிரகாரம் முழுமையான மதச்சார்பினமையை intensiv வாக  அமுல் படுத்துவதன் மூலமே  இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியும்.

அனைத்து அரச,  பொது நிறுவனங்களிலும் இருந்து மதச்சின்னங்களை அப்புறப்படுத்துவதே முன்னேற்றத்திற்கான வழி. இது இந்தியாவுக்கு மட்டுமல்ல இலைங்கைக்கும் பொருந்தும். 

 

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.