Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரசுக் கட்சியின் தலைவராக சுமந்திரன் வருவாரா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பின் தலைவராக சுமந்திரன் வருவாரா?

Published By: VISHNU     12 NOV, 2023 | 06:40 PM

image

சி.அ.யோதிலிங்கம்

தமி­ழ­ர­சுக்­கட்­சியின் மாநாட்டை 2024 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் நடத்­து­வ­தென வவு­னி­யாவில் கூடிய கட்­சியின் மத்­திய குழு தீர்­மா­னித்­துள்­ளது. அம் ­மா­நாட்டில் புதிய நிர்­வா­கமும் தெரி­வு­செய்­யப்­ப­ட­வுள்­ளது. மாநாடு நடை­பெ­று­வ­தற்கு ஒரு மாதத்­திற்கு முன்னர் பத­வி­க­ளுக்­கான வேட்­பு­ம­னுக்கள் கோரப்­படும் எனவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. கட்­சியின் தலை­வ­ராக சுமந்­திரன் தெரி­வு­செய்­யப்­ப­டலாம். அதற்­கான நகர்­வு­க­ளையே பல நாட்­க­ளாக சுமந்­திரன் செய்­து­கொண்டு வரு­கின்றார். இதற்­காக அவர் கிழக்­கி­லி­ருந்து வடக்­காக வியூ­கத்தை அமைத்து செயற்­பட்டு வரு­கின்றார்.

பொதுக்­கு­ழுவில் கிழக்கின் பெரும்­பான்மை சுமந்­தி­ர­னுக்குக் கிடைக்கும். மட்­டக்­க­ளப்பு மாவட்­டமும் , திரு­கோ­ண­மலை மாவட்­டமும் அவ­ரது செல்­வாக்கின் கீழேயே உள்­ளது. அம்­பாறை மாவட்­டமும் பெரி­ய­ள­விற்கு விலகிச் செல்­லாது. யாழ்ப்­பாண மாவட்­டத்­திலும் உள்­ளூ­ராட்சி சபையின் முன்னாள் உறுப்­பி­னர்கள் சுமந்­தி­ரனின் ஆத­ர­வா­ளர்­க­ளாக இருப்­பதால் பெரும்­பான்மை கிடைக்­கலாம். ஏனைய மாவட்­டங்­களில் வாய்ப்­புக்கள் குறைவு. கிளி­நொச்சி மாவட்­டத்தில் அறவே இல்லை எனலாம்.

போட்­டி­யா­ளர்­க­ளாக மாவையும் சிறீ­த­ரனும் இறங்கக் கூடும். சில வேளை சட்­டத்­த­ரணி தவ­ரா­சாவும் இறங்­கலாம். கிழக்கின் பாரம்­ப­ரிய கட்­சிக்­கா­ரர்கள் மாவையை ஆத­ரிக்­கலாம். ஏனைய வேட்­பா­ளர்­க­ளுக்கும் சுமந்­தி­ர­னுக்கும் இடையே இடை­வெளி அதிகம் என்­பதால் வாய்ப்­புக்கள் சுமந்­தி­ர­னுக்கே உண்டு. சுமந்­திரன் எப்­போதும் இயங்கு நிலை அர­சி­யல்­வா­தி­யாக இருப்­பதும் , சர்­வ­தேச தொடர்­பு­களை அதிகம் கொண்­டி­ருப்­பதும், ஊட­கங்­களின் கவ­னிப்­புக்­கு­ரி­ய­வ­ராக இருப்­பதும் தமிழ் மத்­தி­ய­த­ர ­வர்க்­கத்­தி­ன­ரி­டையே அவ­ரது செல்­வாக்கை உயர்த்­தி­யுள்­ளது. யாழ்ப்­பான மத்­தி­ய­த­ர­ வர்க்­கத்­தி­னரின் கருத்து 'சுமந்­தி­ரனை விட்டால் கட்­சியில் வேறு யார் இருக்­கினம்' என்­பதே.

தலைவர், செய­லாளர் பத­வி­களில் ஒரு பதவி வடக்­கிற்கு வழங்­கினால் மற்­றைய பத­வியை கிழக்­கிற்கு வழங்­கு­வதே தமி­ழ­ர­சுக்­கட்­சியின் மர­பாகும். இத­ன­டிப்­ப­டை­யி­லேயே துரை­ரா­ச­சிங்கம் கட்­சியின் செய­லா­ள­ராக பணி­யாற்­றினார். அவ­ரது பதவி வில­கலின் பின்னர் மருத்­துவர் சத்­தி­ய­லிங்கம் தற்­கா­லிக செய­லா­ள­ரா­கவே உள்ளார். சாணக்­கி­யனின் பாட்­டனார் இரா­ச­மா­ணிக்கம் முன்னர் தலை­வ­ராக பத­வி­வ­கித்தார்.  இந்தத் தடவை செய­லாளர் பதவி சில­வேளை சாணக்­கி­ய­னுக்கு கிடைக்­கலாம். அது சாணக்­கி­ய­னுக்குக் கிடைத்தால் சுமந்­தி­ரனின் பாதை முழு­மை­யாக சுத்­த­மாகி விடும். சாணக்­கியன் சுமந்­தி­ரனின் நிகழ்ச்சி நிர­லுக்­குள்­ளேயே இருக்­கின்றார்.

 சாணக்­கி­ய­னுக்கு கிழக்கில் மட்­டு­மல்ல, வடக்­கிலும் புலம் பெயர் நாடு­க­ளிலும் ஆத­ரவு உண்டு. கிழக்கில் தமிழ்த் தேசி­யத்தை தக்­க­வைத்­தி­ருப்­பது சாணக்­கியன் தான் என்­பது தமிழ் மக்­களின் பொது­வான கருத்து. வயதில் குறைந்­த­வ­ராக துணிந்து முன்னே செல்லும் போராட்ட அர­சி­யல்­வா­தி­யாக , மும்­மொழி வல்­லு­ன­ராக, இரா­ச­மா­ணிக்­கத்தின் பேர­னாக அவர் விளங்­கு­வது அவ­ரது ஆத­ர­வுத்­த­ளத்தை வெகு­வாக  உயர்த்­தி­யுள்­ளது.

பலஸ்­தீன மக்­க­ளுக்கு ஆத­ர­வாக கொழும்பில் நடை­பெற்ற கூட்­டத்தில் 'நிச்­ச­ய­மாக நாம் பாற்­சோறு உண்ண மாட்டோம்' என சாணக்­கியன் துணிந்து கூறி­யமை தமி­ழர்­களை வெகு­வாக கவர்ந்­துள்­ளது. நண்பர் ஒருவர் 'அரி­வாளை சரி­யாக சாணக்­கியன் போட்­டி­ருக்­கின்றார்' என பாராட்­டி­யி­ருக்­கின்றார்.

ஆளு­மைத்­தி­றனில் கிழக்கின் ஏனைய தமி­ழ­ரசுக் கட்­சிக்­கா­ரர்­க­ளுக்கும் சாணக்­கி­ய­னுக்கும் இடையே இடை­வெளி அதிகம். இரா­ஜ­துரை முன்னர் கிழக்கில் கோலேச்­சி­யது போல சாணக்­கியன் தற்­போது கோலோச்­சு­கின்றார். இது விட­யத்தில் சாணக்­கி­யனின் ஆளுமை இரா­ஜ­து­ரையை விட அதிகம் எனலாம். சாணக்­கி­யனைப் போல மும்­மொழி ஆற்றல் இரா­ஜ­து­ரை­யிடம் இருக்­க­வில்லை எனினும் அடுக்கு மொழி பேச்­சாளர் என்ற வகையில் இரா­ஜ­து­ரைக்கும் தமிழ் உலகம் எங்கும் ஒரு கௌரவம் இருந்­தது. இரா­ஜ­து­ரையின் பேச்சைக் கேட்­ப­தற்­கென்றே அலை­பாயும் கூட்டம் யாழ்ப்­பா­ணத்தில் இருந்­தது.

தமி­ழ­ரசுக் கட்­சியின் தலை­மைப்­ப­த­வியை கைப்­பற்­று­வது சுமந்­தி­ரனின் தற்­கா­லிக இலக்கே ஒழிய, நிரந்­தர இலக்கு அல்ல. நிரந்­தர இலக்கு தமிழ்த்­ தே­சி­யக்­கூட்­ட­மைப்பை மீளப் புன­ர­மைத்து அதற்கு தலை­வ­ரா­வதே, இதன் பின்னர் தான் தமிழ் மக்­களின் தலைவர் என்ற பெயர் அவ­ருக்கு கிடைக்கும். மேற்­கு­லகம் அவ்­வா­றான ஒரு நிலையில் சுமந்­திரன் இருப்­ப­தையே விரும்­பு­கின்­றது.

தமி­ழ­ரசுக் கட்­சிக்கு தலை­வ­ராக வராமல் தடி­யூன்றி பாய்ந்து கூட்­ட­மைப்­புக்கு தலை­வ­ராக முடி­யாது. கூட்­ட­மைப்பில் வலு­வான இருப்பு தமி­ழ­ரசுக் கட்­சிக்­குத்தான் உண்டு. மர­பு­ரீ­தி­யான கட்­சி­யாக இருப்­பதும், வடக்கு – கிழக்கு முகம் கொண்ட ஒரே­யொரு கட்­சி­யாக இருப்­பதும் இதற்குக் காரணம். கூட்­ட­மைப்பின் ஏனைய கட்­சிகள் தனித்து இருப்­புக்­கொண்ட கட்­சி­க­ளல்ல. அவை சார்­பு­ நி­லைக்­கட்­சி­களே. தனித்து போட்­டி­யிடின் அக்­கட்­சி­களில் இருந்து எவரும் வெல்­லக்­கூ­டிய வாய்ப்­புக்கள் இல்லை.

ஏனைய கட்­சி­களை மீண்டும்  கூட்­ட­மைப்பில் இணைப்­பது தொடர்­பாக சுமந்­தி­ரனும் முயற்சி செய்து வரு­கின்றார். ஏனைய கட்­சி­க­ளையும் தமி­ழ­ரசுக் கட்­சியின் மாவை பிரி­வையும் இணைத்து ஒரு அணியை வளர்ப்­ப­தற்கு இந்­தியா மிகவும் முயற்சி செய்­தது. விக்­னேஸ்­வ­ர­னையும் ஒரு­வ­ராக இவ்­வ­ணியில் இணைத்த போதும் இந்­தி­யா­வுக்கு தோல்­வியே கிடைத்­தது.

இன்னொரு பக்­கத்தில் கூட்­ட­மைப்பின் கட்­சிகள் பிரிந்­தி­ருப்­பது தமிழ்த்­தே­சிய மக்கள் முன்­ன­ணியின் செல்­வாக்கை உயர்த்­தி­யி­ருந்­தது. தொடர்ச்­சி­யாக அடை­யாளப் போராட்­டங்­களை முன்­னணி நடத்­து­வதும் 'அவர்கள் மட்­டுமே போரா­டு­கின்­றனர்' என்ற விம்­பத்­தையும் மக்கள் மத்­தியில் உரு­வாக்­கி­யுள்­ளது. எனவே, முன்­ன­ணியின் வளர்ச்­சியை தடுக்க வேண்­டு­மாயின் ஏனைய கட்­சிகள் ஐக்­கி­யப்­பட வேண்டும் என்­பது நிபந்­த­னை­யாக உள்­ளது. தனித்த அர­சி­யலை விட ஒருங்­கி­ணைந்த அர­சி­ய­லுக்கு மக்கள் மத்­தியில் எப்­போதும் செல்­வாக்கு உண்டு.

சுமந்­தி­ர­னுக்கு சவா­லான விடயம் பிரக்ஞை பூர்வ தமிழ்த்­தே­சிய சக்­தி­களின் ஆத­ரவும் இந்­திய அரசின் ஆத­ரவும் அவ­ருக்கு இல்­லா­மையே. பிரக்­ஞை­பூர்வ தமிழ்த்­தே­சிய சக்­திகள் இரண்டு குற்­றச்­சாட்­டுக்­களை சுமந்­திரன் மீது முன்­வைக்­கின்­றனர். அதில் முத­லா­வது சுமந்­திரன் இறைமை அர­சி­யலை அல்ல, அடை­யாள அர­சி­ய­லையே முன்­னெ­டுக்­கின்றார் என்­ப­தாகும். அடை­யாள அர­சியல் பார­பட்­சத்­துடன் தொடர்­பு­டை­யது. இறைமை அர­சியல் கட்சி அதி­கா­ரத்­துடன் தொடர்­பு­டை­யது. அடை­யாள அர­சி­ய­லுக்கு சோல்­பரி யாப்பின் 29 ஆவது பிரிவே போது­மா­னது. சமஸ்டி ஆட்சி எல்லாம் தேவை­யற்­றது.

'தமிழ் மக்கள் ஒரு தேச­மாக இருப்­பது அழிக்­கப்­ப­டு­வதே இனப்­பி­ரச்­சினை' என்ற புரி­தலும் சுமந்­தி­ர­னி­டத்தில் இல்லை. மேற்­கு­லக சக்­தி­களும், தென்­னி­லங்­கையின் லிப­ரல்­களும் அடை­யாள அர­சி­யலைத் தான் விரும்­பு­கின்­றன. தமிழ் மக்­களின் இறைமை அர­சி­யலை அவர்கள் ஏற்­க­வில்லை. மேற்­கு­ல­கத்தின் நிகழ்ச்சி நிரலும், தென்­னி­லங்கை லிப­ரல்­களின் நிகழ்­சி­நி­ரலும் அடை­யாள அர­சி­ய­லுக்கு உரி­யதே ஒழிய இறைமை அர­சி­ய­லுக்­கு­ரி­ய­தல்ல. இத் தரப்­பு­களின் நிகழ்ச்சி நிரலை நகர்த்தும் சுமந்­தி­ரனால் ஒரு போதும் இறைமை அர­சி­யலை முன்­னெ­டுக்க முடி­யாது என்­பது தமிழ்த்­தே­சி­யர்­களின் வாதம்.

2009 இல் ஆயு­தப்போர் மௌனிக்­கப்­பட்­டதைத் தொடர்ந்து இது­வரை காலம் பின்­பற்­றிய அர­சி­யலை ஏதோ ஒரு வகையில் முன்­கொண்டு செல்­வதா? அல்­லது அதனைக் கைவிட்டு விட்டு இணக்க அர­சி­யலை முன்­னெ­டுப்­பதா? என்ற விவாதம் எழுந்­தது. அதன் போது சம்­பந்­தனும், சுமந்­தி­ரனும் இணக்க அர­சிலை முன்­னெ­டுப்­பது என்ற தீர்­மா­னத்­திற்கே வந்­தனர்.

சுருக்­க­மாகக் கூறு­வ­தாயின் 'டக்ளஸ் நம்பர் ரூ' என்ற நிலையை எடுக்க முற்­பட்­டனர். டக்ளஸ் தேவா­னந்தா நேர­டி­யாக இணக்க அர­சி­யலைச் செய்தார். இவர்கள் மறை­மு­க­மாக இணக்க அர­சி­யலை செய்ய முற்­பட்­டனர்.  இந்த இணக்க அர­சியல் கார­ண­மா­கத்தான் சம்­பந்­த­னுக்கு சொகுசு வீடு வாழ்நாள் வரை கொழும்பில் கிடைத்­தது. சம்­பந்­தனும் அதற்கு நன்­றிக்­க­ட­னாக சிங்கக் கொடியை உயர்த்தி ஆட்­டினார்.

இணக்க அர­சியல் என்ற தீர்­மா­னத்­திற்கு வந்த பின்னர் கட்­சி­யையும், மக்­க­ளையும் அதற்குள் கொண்­டு­வர சம்­பந்­தனும், சுமந்­தி­ரனும் முயற்­சித்­தனர். மறு­பக்­கத்தில் புலம்­பெயர் தரப்பும் முன்­ன­ணியும் தமிழ்த்­தே­சிய அர­சி­யலில் உறு­தி­யாக நின்­றதால் மக்­களை மாற்றும் முயற்சி தோல்­வியில் முடிந்­தது. மறு­பக்­கத்தில் இணக்க அர­சி­ய­லினால் எந்­த­வொரு வெற்­றியும் கிடைக்­க­வில்லை. நாவற்­கு­ழி­யிலும் தையிட்­டி­யிலும் விகா­ரைகள் கட்­டப்­பட்ட போது நேரடி இணக்க அர­சி­யல்­கா­ரர்­க­ளி­னாலும், மறை­முக இணக்க அர­சி­யல்­கா­ரர்­க­ளி­னாலும் அதனைத் தடுக்க முடி­ய­வில்லை.

சுமந்­தி­ரனின் இணக்க அர­சியல் கார­ண­மாக தமிழ்த்­தே­சிய அர­சி­ய­லுக்குள் சுமந்­திரன் இல்லை. அதற்கு வெளியில் தான் அவர் நிற்­கின்றார் என்ற வாதம் தமிழ்த்­தே­சி­யர்­க­ளினால் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றது. இதன் சுருக்கம் 'தமிழ் மக்­க­ளுக்­கான அர­சி­யலை அவர் நகர்த்­த­வில்லை என்­பதே'

இரண்­டா­வது குற்­றச்­சாட்டு நிகழ்ச்சி நிரல் தொடர்­பா­னது. தமிழ் அர­சி­யலின் மரபு ரீதி­யான அணு­கு­முறை தமிழ் மக்­க­ளுக்­கான அர­சி­யலை தெளி­வாக வரை­ய­றுத்து அதற்­கான நிகழ்ச்சி நிரலை முன்­னெ­டுப்­பதே.தமி­ழ­ர­சுக்­கட்­சியும் அதன் பின்­ன­ரான தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியும் 1983 வரை இவ்­வா­றான நிகழ்ச்சி நிர­லையே முன்­னெ­டுத்­தன.

அதன் பின்னர் தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­களும் அத­னையே முன்­னெ­டுத்­தனர் என்­பது வர­லாறு. புலிகள் அல்­லாத ஏனைய விடு­தலை இயக்­கங்­களும் 1987 ஆம் ஆண்டு இலங்கை -– இந்­திய ஒப்­பந்தம் வரை அத­னையே முன்­னெ­டுத்­தனர்.   இலங்கை - இந்­திய ஒப்­பந்­தத்­திற்கு பின்னர் அவை இந்­திய, இலங்கை நிகழ்ச்சி நிரலை முன்­னெ­டுத்­தன என்­பது வேறு கதை.

சுமந்­திரன் தமிழ் மக்­களின் அர­சியல் இலக்கை வரை­ய­றுத்து அதற்­கான நிகழ்ச்சி நிரலை முன்­னெ­டுக்­க­வில்லை. மாறாக மேற்­கு­ல­கத்­தி­னதும் சிங்­கள லிப­ரல்­க­ளி­னதும் நிகழ்ச்சி நிர­லையே முன்­னெ­டுக்­கின்றார் என்ற வாதத்தை தமிழ்த்­தே­சி­யர்கள் முன்­வைக்­கின்­றனர்.

சிங்­கள தேசத்தில் தூய்­மை­யான லிப­ரல்கள் என எவ­ரு­மில்லை. பெருந்­தே­சி­ய­வாத லிப­ரல்­களே உள்­ளனர். நெருக்­க­டிகள் வரும் போது பெருந்­தே­சி­ய­வாதம் பக்கம் நிற்­பது என்­பதே அவர்­க­ளது வர­லாறு. சிங்­கள லிப­ரல்கள் மட்­டு­மல்ல சிங்­கள இட­து­சா­ரி­களும் அதற்கு விதி­வி­லக்­காக இருக்­க­வில்லை. அமெ­ரிக்­காவின் முன்­னைய செல்­லப்­பிள்­ளை­யான ஜே.ஆர்.ஜய­வர்­தன தொடக்கம் தற்­போ­தைய செல்­லப்­பிள்­ளை­யான ஜே.ஆரின் மரு­மகன் ரணில் வரை இதுவே வர­லாறு.

ரணில் விக்­கி­ர­ம­சிங்க இதற்கு நல்ல உதா­ரணம். அவரை உலகம் சிங்­கள சமூ­கத்தில் உள்ள மிகப்­பெரும் லிப­ரல்­வா­தி­யா­கவே கரு­து­கின்­றது. அவர் தான் சந்­தி­ரிக்­காவின் தீர்­வுப்­பொதி பாரா­ளு­மன்­றத்தில் கிழித்­தெ­றி­வ­தற்கு கார­ண­மாக இருந்தார். தற்­போது சர்­வ­தேச விசா­ரணை ஒரு போதும் நடக்­காது எனக் கூறு­கின்றார். மனித உரிமை விவ­கா­ரத்தில் 'இஸ்­ரே­லுக்கு ஒரு நீதி இலங்­கைக்கு ஒரு நீதியா? என மேற்­கு­ல­கத்தை கேட்­கின்றார். இட­து­சா­ரி­களில் கொல்வின் ஆர்.டி.சில்வா தொடக்கம் வாசு­தே­வ­நா­ண­யக்­காரா வரை வர­லாறு நாம் அனை­வரும் அறிந்­ததே.

இரண்­டா­வது, இந்­தியா சுமந்­தி­ர­னோடு இல்லை. அவர் மேற்­கு­லக விசு­வாசி என்­பதே இதற்குக் காரணம். இந்­தியா மேற்­கு­ல­கத்­தோடு சீனாவின் ஆதிக்­கத்தை தடுக்க ஒருங்­கி­ணைந்து செயற்­பட்­டாலும் தென்­னா­சி­யா­விற்குள் மேற்குலகின் ஆதிக்கத்தை ஒரு போதும் ஏற்பதில்லை. இந்தியா நண்பர்களை எதிர்பார்ப்பதில்லை எடுபிடிகளையே எதிர்பார்க்கின்றது. சுமந்திரனின் ஆளுமை எடுபிடியாக இருப்பதை ஒரு போதும் அனுமதிக்காது.

ஒரு மூத்த பத்திரிகையாளர் 'இந்தியாவுடன் எடுபிடியாக இருக்க முடியுமே தவிர நண்பராக இருக்க முடியாது' என ஒரு தடவை கூறினார். இந்தியாவின் நிகழ்ச்சி நிரலை நகர்த்துவதற்கு சுமந்திரன் ஒரு போதும் தயாராக இருந்ததில்லை. பெருந்தேசியவாதம் விரும்பாது என்பதும் சுமந்திரன் இந்தியாவுடன் நெருங்கிச் செல்லாமைக்கு ஒரு காரணம்.

இப்போது எழும் கேள்வி எதிர்காலத்தில் என்ன நிகழும் என்பதே. இந்திய விசுவாசிகளும், மேற்குலக விசுவாசிகளும் விரைவில் ஒரு தற்காலிக சமரசத்திற்கு வருவர். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மீளப்புனரமைக்கப்படும். சுமந்திரன் தமிழரசுக்கட்சியின் தலைவராகவும் பின்னர் கூட்டமைப்பின் தலைவராகவும் கட்டாயம் வருவார்.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, கூட்டமைப்பில் ஒரு போதும் இணையாது. இந்திய விசுவாசிகளும், மேற்குலக விசுவாசிகளும் இறைமை அரசியலை ஒரு போதும் முன்னெடுக்கப்போவதில்லை தமிழ்த்தேசியர்கள், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவு கொடுப்பர். புலம்பெயர் தரப்பின் தீவிர தமிழ்த்தேசியர்களும் முன்னணியோடு நிற்க வே முனைவர் இரு கட்சிமுறை ஒரு போக்காக வளரும். மீண்டும் கூட்டமைப்பினதும், முன்னணியினதும் போட்டிக்களமாகவே தமிழ் அரசியல் இருக்கப்போகின்றது.

https://www.virakesari.lk/article/169136

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

கூட்டமைப்பின் தலைவராக சுமந்திரன் வருவாரா?

கண்ணுக்கு தெரிந்த தூரம்வரை வேறு யாரும் தெரியவில்லை.

கசக்கும் என்றாலும் உண்மை.

அடுத்து இந்த கூட்டணி தொடர்ந்து இயங்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ஈழப்பிரியன் said:

கண்ணுக்கு தெரிந்த தூரம்வரை வேறு யாரும் தெரியவில்லை.

கசக்கும் என்றாலும் உண்மை.

அடுத்து இந்த கூட்டணி தொடர்ந்து இயங்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

அப்ப டெய்லி கொள்ளுபாடும் கில்லுபாடுமாய் இருக்கும் என்கிறீர்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

ஏனைய கட்­சி­களை மீண்டும்  கூட்­ட­மைப்பில் இணைப்­பது தொடர்­பாக சுமந்­தி­ரனும் முயற்சி செய்து வரு­கின்றார். ஏனைய கட்­சி­க­ளையும் தமி­ழ­ரசுக் கட்­சியின் மாவை பிரி­வையும் இணைத்து ஒரு அணியை வளர்ப்­ப­தற்கு இந்­தியா மிகவும் முயற்சி செய்­தது. விக்­னேஸ்­வ­ர­னையும் ஒரு­வ­ராக இவ்­வ­ணியில் இணைத்த போதும் இந்­தி­யா­வுக்கு தோல்­வியே கிடைத்­தது.

இந்தியா தமிழ் கட்சிகளை பிரித்து வைத்திருக்கவே விரும்புவதாக சொல்கிறார்கள்.

உதாரணத்துக்கு முன்னணியும் சுரேசும் சேர்ந்து தேர்தலில்(உள்ளூராட்சி சபை என எண்ணுகிறேன்)ஒன்றாக நின்ற போது எதுவித முன்னறிவித்தலும் இல்லாமல் கடைசி நேரம் சுரேசுக்கும் விருப்பமில்லாமல் தோல்வி என்று தெரிந்தும் ஐயா சங்கரியுடன் கூட்டி வைத்தார்கள்.

4 hours ago, ஏராளன் said:

இணக்க அர­சியல் என்ற தீர்­மா­னத்­திற்கு வந்த பின்னர் கட்­சி­யையும், மக்­க­ளையும் அதற்குள் கொண்­டு­வர சம்­பந்­தனும், சுமந்­தி­ரனும் முயற்­சித்­தனர். மறு­பக்­கத்தில் புலம்­பெயர் தரப்பும் முன்­ன­ணியும் தமிழ்த்­தே­சிய அர­சி­யலில் உறு­தி­யாக நின்­றதால் மக்­களை மாற்றும் முயற்சி தோல்­வியில் முடிந்­தது. மறு­பக்­கத்தில் இணக்க அர­சி­ய­லினால் எந்­த­வொரு வெற்­றியும் கிடைக்­க­வில்லை. நாவற்­கு­ழி­யிலும் தையிட்­டி­யிலும் விகா­ரைகள் கட்­டப்­பட்ட போது நேரடி இணக்க அர­சி­யல்­கா­ரர்­க­ளி­னாலும், மறை­முக இணக்க அர­சி­யல்­கா­ரர்­க­ளி­னாலும் அதனைத் தடுக்க முடி­ய­வில்லை.

முன்னணி என்ன செய்யுது?

என்பவர்கள் மேலே உள்ள பந்தியை படிக்க வேண்டுகிறேன்.

அவர்கள் இல்லை என்றால் ஒட்டு மொத்த தமிழர்களையும் இணக்க அரசியலுக்குள் வெற்றிகரமாக இணைத்திருப்பார்கள்.

4 hours ago, ஏராளன் said:

இப்போது எழும் கேள்வி எதிர்காலத்தில் என்ன நிகழும் என்பதே. இந்திய விசுவாசிகளும், மேற்குலக விசுவாசிகளும் விரைவில் ஒரு தற்காலிக சமரசத்திற்கு வருவர். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மீளப்புனரமைக்கப்படும். சுமந்திரன் தமிழரசுக்கட்சியின் தலைவராகவும் பின்னர் கூட்டமைப்பின் தலைவராகவும் கட்டாயம் வருவார்.

சுமந்திரன் பற்றி கேள்விக் குறியுடன் தொடங்கிய கட்டுரை 

அவரை தமிழரசுக் கட்சியின் தலைவராகவும் கூட்டமைப்பின் தலைவராகவும் ஒருதலைப் பட்சமாக முடித்திருக்கிறார்கள்.

கடைசியில் @கிருபன் மாவீரர் தினத்துக்கு புதிய தலைவர் வருகிறார் என குண்டை ஏற்கனவே போட்டிருக்கிறார். எனவே பொறுத்திருந்து பார்ப்போம்.

15 minutes ago, பெருமாள் said:

அப்ப டெய்லி கொள்ளுபாடும் கில்லுபாடுமாய் இருக்கும் என்கிறீர்கள் 

ஏன் பெருமாள் நீங்கள் யாரையும தெரிவு செய்யவில்லை?

Edited by ஈழப்பிரியன்

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

இந்தியா தமிழ் கட்சிகளை பிரித்து வைத்திருக்கவே விரும்புவதாக சொல்கிறார்கள்.

உதாரணத்துக்கு முன்னணியும் சுரேசும் சேர்ந்து தேர்தலில்(உள்ளூராட்சி சபை என எண்ணுகிறேன்)ஒன்றாக நின்ற போது எதுவித முன்னறிவித்தலும் இல்லாமல் கடைசி நேரம் சுரேசுக்கும் விருப்பமில்லாமல் தோல்வி என்று தெரிந்தும் ஐயா சங்கரியுடன் கூட்டி வைத்தார்கள்.

முன்னணி என்ன செய்யுது?

என்பவர்கள் மேலே உள்ள பந்தியை படிக்க வேண்டுகிறேன்.

அவர்கள் இல்லை என்றால் ஒட்டு மொத்த தமிழர்களையும் இணக்க அரசியலுக்குள் வெற்றிகரமாக இணைத்திருப்பார்கள்.

சுமந்திரன் பற்றி கேள்விக் குறியுடன் தொடங்கிய கட்டுரை 

அவரை தமிழரசுக் கட்சியின் தலைவராகவும் கூட்டமைப்பின் தலைவராகவும் ஒருதலைப் பட்சமாக முடித்திருக்கிறார்கள்.

கடைசியில் @கிருபன் மாவீர.  ர் தினத்துக்கு புதிய தலைவர் வருகிறார் என குண்டை ஏற்கனவே போட்டிருக்கிறார். எனவே பொறுத்திருந்து பார்ப்போம்.

ஏன் பெருமாள் நீங்கள் யாரையும தெரிவு செய்யவில்லை?

2009க்கு முன் இவ‌ரை நான் பார்த்த‌து இல்லை
இவ‌ர் தேர்த‌லில் முறைகேடாய் வெல்ல‌ வைக்க‌ப் ப‌ட்ட‌வ‌ராம் 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

கடைசியில் @கிருபன் மாவீரர் தினத்துக்கு புதிய தலைவர் வருகிறார் என குண்டை ஏற்கனவே போட்டிருக்கிறார். எனவே பொறுத்திருந்து பார்ப்போம்.

அப் ப தேசியத்தலைவரும் வரப் போகிறார். தமிழரசுக்கட்சி தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கும் புதிய தலைவராக சுமத்திரன் வரப்போகிறார். என்னய்யா குழப்பிறீங்க?

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பையன்26 said:

2009க்கு முன் இவ‌ரை நான் பார்த்த‌து இல்லை
இவ‌ர் தேர்த‌லில் முறைகேடாய் வெல்ல‌ வைக்க‌ப் ப‌ட்ட‌வ‌ராம் 

அதுமட்டுமல்ல கட்சிக்குள்ளும் பின் கதவால் வந்தவரென்று சொல்கிறார்கள்.

2 minutes ago, புலவர் said:

அப் ப தேசியத்தலைவரும் வரப் போகிறார். தமிழரசுக்கட்சி தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கும் புதிய தலைவராக சுமத்திரன் வரப்போகிறார். என்னய்யா குழப்பிறீங்க?

புலவர் சகல திருவிளையாடல்களும் லண்டனிலேயே நடக்கிறபடியால் கிருபனுக்கு தெரிந்திருக்கும்.

சாடைமாடையாக இடைஇடை சொல்லியுள்ளார்.

நீங்களும் லண்டன் தானே? எதுவும் கேள்விப்படலையோ?

இன்னும் 15 நாட்கள் தானே பொறுத்திருப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

ரணகளத்திலேயும் ஒரு கிளு கிளுப்பு! குஷ்பு வும் யாழ்ப்பாணத்துக்கு வாறாவா அதுவும் நவம்பம்மாதம் என்னங்கடா நடக்குது இங்க?https://www.facebook.com/100089863100751/videos/7111137668944389/

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ஈழப்பிரியன் said:

அதுமட்டுமல்ல கட்சிக்குள்ளும் பின் கதவால் வந்தவரென்று சொல்கிறார்கள்.

அது உண்மைதான்.

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ஈழப்பிரியன் said:

ஏன் பெருமாள் நீங்கள் யாரையும தெரிவு செய்யவில்லை?

உங்கள் கருத்துதான் நமது கணிப்பும் உண்மை கசக்கும் தமிழரசு தலையாகலாம் கூட்டமைப்புக்கு ??இந்தியாவோடு சும் இணங்கினால் அங்கு ம் தலைதான் சும்மை பொறுத்தவரை பேராசை பிடித்த மனிதன் அதுக்காக எந்த பேய் என்றாலும் உறவாடுவார் அவருக்கு தமிழரின் உரிமைகள் முக்கியமல்ல அவரின் சொந்த நலனே முக்கியம் ஆகவே அவர்தான் இரண்டுக்கும் தலை என்பது உண்மை .தமிழரின் நிலை சட்டியில் இருந்து அடுப்புக்குள் குதித்த கதையாகிடும் .

இப்பவே வடகிழக்கில் பல தெருக்களில் இளம் பொடியள் இல்லாத வெறும் கிளடுகளே உள்ள தெருக்களாக மாறிக்கொண்டு இருக்கிறது இருப்பவர் எல்லாம் கனடா போகணும் என்று நிக்கிறார்கள் நாங்கள் எல்லாம் குண்டுக்கும் ஆமிக்கும் பயந்து இங்கு வந்தோம் தற்போதைய இளையோர் போதை பொருளுக்கும் கஞ்சாவுக்கும் வால்வெட்டு குழுக்களுக்கும் பயந்து பெற்றோரே அனுப்பி வைக்கினம் இந்த நிலையில் சும் அங்கு வந்தால் போதை குழுக்களுக்கு சிவப்பு கம்பளம் விரிப்பது போன்றது ஏனென்றால் கடந்த காலம்களில் பிடிபடும் போதை குளுகளுக்காக அதிகம் வாதாடி வெளியில் எடுத்து விட்டது இந்த சுமத்திரன் கோஸ்ட்டிதான் .

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, ஈழப்பிரியன் said:

அதுமட்டுமல்ல கட்சிக்குள்ளும் பின் கதவால் வந்தவரென்று சொல்கிறார்கள்.

புலவர் சகல திருவிளையாடல்களும் லண்டனிலேயே நடக்கிறபடியால் கிருபனுக்கு தெரிந்திருக்கும்.

சாடைமாடையாக இடைஇடை சொல்லியுள்ளார்.

நீங்களும் லண்டன் தானே? எதுவும் கேள்விப்படலையோ?

இன்னும் 15 நாட்கள் தானே பொறுத்திருப்போம்.

இவ‌ர் ஒரு மொள்ளமாரி  முடிச்சவிக்கி அண்ணா
இவ‌ர் ச‌முதாய‌த்துக்கு ந‌ல்ல‌து செய்ய‌ வ‌ந்த‌வ‌ர் என்று சொன்னால் யாரும் ந‌ம்ப‌ மாட்டின‌ம் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்தது சுமந்திரன் தான்.
காரணம்  தமிழ் அரசியல்வாதிகள் தங்கள் சுயநலத்திற்காக மற்றவர்களை வளர்த்தெடுக்க மாட்டார்கள்.தம் இனப்பற்று அற்றவர்கள்.இதுவும் தமிழின விடுதலைப்போராட்டம் இடையில் அழிந்ததிற்கான காரணிகளில் ஒன்று. கால்நடைகளுக்கு எப்படி பிரம்பு அவசியமோ அது போல் இன்றைய அரசியல்வாதிகளுக்கும் அவசியம். இவர்களுக்கெதிரான மக்கள் போராட்டம் மிக அவசியம். இந்த கடப்பாடு மாற்று கட்சிகளுக்கும் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கட்டுரையில் சொல்ல வந்தது  ஈழத் தமிழரைக் கட்டுப்படுத்துவது இந்தியாவா அல்லது மேற்கா? என்பதுதான். 

1) ஈழத் தமிழர் எவரும் இந்தியாவை நம்புவதற்கு ஆயத்தம் இல்லை

2) இந்திய வம்சாவழியினர் என்பதில் இருந்து அது மலையகத் தமிழராக மாற்றம்பெற்றுவிட்டது. இனிமேல், ஈழத் தமிழரைப்போன்று மலையகத் தமிழரையும் மேற்குஇந்தியாவிற்கெதிரானதாக மாற்ர்றிவிடும். 

3) யார் என்ன கூறினாலும் சிங்களம் இந்தியாவை நம்பியதாக வரலாறு இல்லை. இனியும் நம்பாது. ஒன்றில் மேற்கை நம்பும் அல்லது கிழக்கை நம்பும். 

4) சிங்களத்தை தனது கைக்குள் கொண்டுவரும் வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக அண்மையில் இந்திய நிதியமைச்சர் இலங்கை வந்து மகாநாயக்கர்களைச் சந்தித்தது. 
 

இப்போது தமிழர் எமது நிலை என்ன? 

 

 

4 hours ago, புலவர் said:

ரணகளத்திலேயும் ஒரு கிளு கிளுப்பு! குஷ்பு வும் யாழ்ப்பாணத்துக்கு வாறாவா அதுவும் நவம்பம்மாதம் என்னங்கடா நடக்குது இங்க?https://www.facebook.com/100089863100751/videos/7111137668944389/

இது டிசம்பர் என்று அல்லவா இருக்கின்றது? ட்விட்டர் யிலும் ஒருவர் இந்த வீடியோ வை பகிர்ந்து, நவம்பர் என்று போட்டிருந்தார். நான்தான் எதையேனும் பிழையாக விளங்கிவிட்டேனா?

இந்த கட் டுரையாளர் என்ன சொல்லியிருந்தாலும், சுமந்திரன் இன்று தமிழ் அரசு கட்சியை பொறுப்பு எடுப்பது  எரிகிற நெருப்பில் நெய்யை ஊற்றுவததிற்கு சமன். 

தமிழ் தேசிய கூட்டமைப்பு, இன்று காஸாவில் என்ன நடைபெறுகின்றதோ அதே போன்ற ஒரு நிலையில், 2009 இல் வெளியாரின் அழுத்தங்களுக்கு பணிந்து அன்று நடந்த உண்மைகளை இன்றுவரை மறைக்கும் ஒரு காரியத்தையே செய்கின்றது. 

இன்று நான் இதை எழுதுகின்ற நேரத்தில்  உலகம், அமெரிக்க, இஸ்ரேல் ஒரு யுத்த நிறுத்தத்திற்கு சார்பான திசையே நோக்கியே செல்கின்றது. எங்களுக்கு அரபு நாடுகள் போன்று ஒரு பலமான கடடமைப்பு இருக்காதா போதிலும், எங்களாலும் இன்னும் கொஞ்சம் முயற்சித்திருக்கலாமோ என்ற எண்ணம் வராமல் இல்லை. எங்களில் அல்லது எங்கள் பக்கத்தில் முயற்சிக்காதவர்கள் என்றால் முதலில் வருவது கூட்ட்டமைப்பினரே.

இன்று அமெரிக்கா எவ்வாறு இஸ்ரேல்-பாலஸ்தீன போரை நடாத்துகிறதோ அதே போல, அன்று இந்தியா போரை நடாத்தியது. இன்று எவ்வாறு பைடன் தலைமையிலான அரசாங்கம் ஒன்றும் செய்யமுடியாமல் இருக்கின்றதோ, அதே போல அன்று காங்கிரஸ் அரசாங்கம் முழுமூச்சாச்கா போரை நடத்தியது. உதாரணத்திற்கு இப்போது பைடன் அரசாங்கத்திற்கு பதிலாக ராம்ப் அரசாங்கள் இருக்குமா இருந்தால், அமெரிக்க அரசாங்கம் இஸ்ரேலுக்கு  செய்யும் உதவியின் அளவு மாறாது, ஆனால் வீதி தோறும் ஒவ்வொரு பாலஸ்தீன கொலைக்குக்கும் ஊர்வலங்களும், அழிவுகளும் நடைபெறும். ஜோஜ் பிலோய்ட் இறந்த நேரத்தில் நடந்த ஆர்பாட்டங்களை ஒத்த நிலை வந்திருக்கும். 

ஆனால் இப்போதுஉள்ள நிலை அப்படியல்ல. அழுதாலும் பிள்ளையை அவள்தான் பெறவேண்டும் என்பது போல பாலசுதீனத்தை காப்பதும் அவர்களுடை தொழில், அதே நேரத்தில் இஸ்ரேலை காப்பதும் அவர்களுடைய தொழில். 

பைடனுக்கு இரு பக்கமும் பிரச்சனை. ஒரு பிரச்சையையுமே தீர்க்க முடியாதவர்களுக்கு இரண்டு பக்கமும் பிரச்சனை என்றால் என்ன செய்ய முடியும்?

யூதர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதான செய்தி நிறுவனங்கள் எல்லாம், இஸ்ரேலின் பிள்ளைகள் எல்லாம் தங்கபிள்ளைகள், காஸா பிள்ளைகள் எல்லாம் தகரப்பிள்ளைகள் என இனவாதத்தை கக்குகின்றன. பிடித்தது வைக்கப்பட்டுள்ள 200 பேரை விடுவிக்க 20,000 என்ன 200,000 பேரைக் கொன்றாலும் பாவம் இல்லை என்று மனித உரிமை கதைக்கின்றன.

ஆனால், அதைத்தாண்டி மக்கள் கூடுகிறார்கள் பெரு நகரங்களில். முதல் ஆளாக பிரென்ச் அதிபர் யுத்த நிறுத்தத்திற்கு கோரிக்கை விட்டுள்ளார். 

தனி மனிதனாக உலகில் மாற்றுக் கருத்துக்களுக்கு 40 பில்லியன் பணத்தை சூதாடிய இலான் மாஸ்க் "கொல்லப்படும் ஒவ்வொரு தீவிரவாதிக்கும் பதிலாக பல தீவிரவாதிகளை பிரசவித்தால்; இந்தப்போர் ஒருபோதும் முடியாது" என்று தன்னுடைய ஆகக் கூடிய நடுநிலையை சொல்லியுள்ளார்.

ஆனாலும் இந்த போர் ஒரு யுத்த நிறுத்தத்தை நோக்கி செல்லுகிறது. ராம்ப் சொல்லியுள்ளார் "சில நேரங்களில் பிரச்சனைகளை அதன் பாட்டுக்கு விடுவதே சரி என்று" அதன் கருத்து "இஸ்ரேல்க்கு இனி உதவி செய்ய வேண்டாம்" என்று.

அமெரிக்க உதவி நிறுத்தப்படும் பட்சத்தில்; யுத்தம் அடுத்த நொடி நிற்கும். 

ஆனால் அதை செய்ய பைடனால் முடியாது. 

அப்படி அதைச் செய்வார் என்றால், அவரால் அடுத்த முறை அதிபர் தேர்தலில் வெல்ல முடியாது.

இப்படியான பல சிக்கலான நிலை ஒன்றுதான் 2009 யிலும் இருந்தது.  தமிழ் தேசிய கூட்ட்டமைப்பு, அதன் தலைமைத்துவம் வெளி அழுத்தங்களுக்கு பணிந்து புலிகளை அழிக்க அல்லது புலிகளோடு மக்களை அழிக்க வேடிக்கை கட்டி பார்த்துக்கொண்டு நின்றது.

அதன் ஒரு அங்கமாகத்தான் சுமந்திரன் கூட்டமைப்பிற்கு கொண்டு வரப்படடவர். புலிச்சார்பற்ற கூட்டமைப்பாக, கூட்டமைப்பை மாற்றுவதுதான் அவரின் முதல் பணி.

ஆனால், களநிலை அப்படியல்ல. 

இப்பவும் புலிகளின் ஆதரவுத்தளமே பலமாக உள்ளது. 

அப்படியென்றால், ஏன் கஜேந்திரகுமார் அணி பாரிய வெற்றி ஒன்றையும் பெறவில்லை என்று கேட்கலாம். அவர்களுடைய வாக்குகள் எப்போதும் பிரிந்தே போகின்றது. அதைத்தவிர கூட்ட்டமைப்பின் தலைமை தங்கள் புலியோடு தொடர்பற்றவர்கள் என்று காட்டும் அதேநேரத்தில் உள்ளூர் பிரமுகர்கள் தாங்கள்தான் புலிகளின் வாரிசு என்று வாக்குகளை திரட்டுகிறார்.

இதுதான் தமிழ் அரசுக்கு கட்சியில் உள்ள இன்றைய பிரச்சனை. 

சுமந்திரன் தலைமைத்துவத்தை எடுப்பதன் மூலம், கட்சிக்கும் தொண்டர்களுக்கும், கட்சிக்கும் வாக்காளர்களுக்குமான இடையிலான வேறுபாடு கூடும். இதை அறுவடை செய்யப்போவது கஜேந்திரனாக இருக்கலாம். ஆனால் பொதுவில் இது ஒரு மறையான விளைவைக் கொண்டுவரும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.