Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

என்ன சொல்ல வருகிறீர்கள்? 

 

1 hour ago, Justin said:

ஒரு கைக்குழந்தைக்குத் தந்தை என்பதால், பிரபாகரனைக் கொல்ல முயன்றவரையே கொல்லாமல் மன்னித்து விட்டவர்கள், ஒரு தீர்வுத் திட்டத்திற்காக நீலனைக் கொன்றிருப்பார்களா என்று "ஒரு கதை" மூலம் கேட்கிறார்!

உங்களுக்கு சிரிப்பூட்டினாலும் இனி இது தான் கதையாடல்-narrative😂: "புலிகள் இருந்த போதே அங்கே பல்வேறு குழுக்கள் தற்கொலைப் படையோடு சமகாலத்தில் இருந்திருக்கின்றன. அவை மொசாட், றோ, சி.ஐ.ஏ, கே.ஜி.பி (ஏன், பின் வீட்டு பொன்னம்மாக்கா ரீம்😎) என்று பல்வேறு அமைப்புகள் சார்ந்து கொலைகள் செய்திருக்கிறார்கள்! எல்லாம் அநியாயத்திற்கு புலிகள் தலையில் கட்டப் பட்டன!

(விளங்குதா?? அவர்களும் இனி எந்த மூலையில் தான் போய் ஒழிப்பது, பாவம் விடுங்கோ!)

இந்த தீர்வுதிட்டத்தினை யார் வேணுமென்றாலும் தயாரிக்கலாம் ஒருவர் இல்லாவிட்டால் இன்னொருவர், நீலன் தயாரிக்காவிட்டால் வேறு ஒருவர் தயாரித்திருப்பார்.

ஏற்கனவே தீர்வுதிட்டம் தயாரித்துவிட்டாகிவிட்டது அதன் பின் கொல்வதால் என்ன இலாபம், அத்துடன் அப்படி ஒருவருக்காக பல போராளிகளின் உயிரினை பணயம் வைக்குமளவிற்கு என்ன இலாபம் (நீலன் திறமையான துறைசார் நிபுணர் அவரை எந்த விதத்திலும் தரக்குறைவாக கூறவில்லை).

இதற்கு வேறு ஏதாவது காரணம் இருக்குமா? என்பதுதான் எனது சந்தேகம், 

ஜஸ்ரின் உங்களுக்கு சிரிப்பூட்டியதில் எனக்கு சந்தோசம், வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்.

Edited by vasee

  • Replies 379
  • Views 35.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • nedukkalapoovan
    nedukkalapoovan

    அப்போ உங்கள் பார்வையில் கொலை செய்யப்பட்டவர்கள்.. நீதி நியாயவான்கள். அப்பாவிகளின் கொலைகளில் சவாரியே செய்யவில்லை. ஒரு இனத்தையே படுகொலை செய்தவன்கள் எல்லாம் வாழுறாங்கள் இன்னும். அதனால்.. இந்த தத்துவா

  • ரஞ்சித்
    ரஞ்சித்

    ஒருவருக்கு புலிகளை வசைபாடவும் அவர்களது ஜனநாயக விரோத செயற்பாடுகளை வாரியிறைக்கவும் வடிகால் ஒன்றும் கிடைத்த மகிழ்ச்சி. இன்னும் இருவருக்கு புலியெதிர்ப்பு என்பதற்கூடாக உள்நுழைந்து பேரினவாதத்தின் திட்டத்தை

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

விளங்குதா??

ஓம் நன்றி அண்ணா. 

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

நாரதர் வேலை பார்க்கும்... சுமந்திரன்  என்று,  கருத்தோவியம் வந்துள்ளது. 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
On 23/2/2024 at 10:27, island said:

சிறிய சந்தேகம் வந்தாலே துப்பாக்கி குண்டு மூலம் தீர்ப்பெழுதுவதை ஆதரிக்கும் நீங்கள் 

 

9 hours ago, vasee said:

அத்துடன் அப்படி ஒருவருக்காக பல போராளிகளின் உயிரினை பணயம் வைக்குமளவிற்கு என்ன இலாபம் (நீலன் திறமையான துறைசார் நிபுணர் அவரை எந்த விதத்திலும் தரக்குறைவாக கூறவில்லை).

இதற்கு வேறு ஏதாவது காரணம் இருக்குமா? என்பதுதான் எனது சந்தேகம், 

மேலை இன்னொருவர் விடுதலைப்புலிகளின் உண்மை வரலாற்றை எழுதி இருக்கிறார். 😡 அதற்கு உண்மையை உள்ளபடி அடுத்த சந்ததிக்கு கடத்தணும் என்போர் உள்ளிட்டோரிடமிருந்து எந்த எதிர்பார்ப்பும் வராதது இங்கே என்ன வரலாறு பதியப்படப்போகிறது. அதனை மௌனத்தின் ஊடாக எவ்வாறு ஊக்குவிக்கப்போகிறோம் என்பதற்கு சான்றாகிறது. 

Edited by விசுகு
ஒரு வரிகள் சேர்க்க

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, vasee said:

 

 

ஜஸ்ரின் உங்களுக்கு சிரிப்பூட்டியதில் எனக்கு சந்தோசம், வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்.

சிரிப்பு நல்லது தான், அதற்காக நீங்கள் standup comedian ஆக நடந்து கொண்டிருப்பது இன்னொருவரின் மரணவீட்டில். இது உலகின் எந்த பண்பாட்டிலும் இல்லாத அருவருப்புத் தரும் ஒன்று!

"ஒன்றாகப் பயணிப்போம்" என்று நேற்று அறிக்கை விட்ட விசுகர், உங்கள் கொமெடியை சீரியசாக மேற்கோள் காட்டியிருப்பதைக் கவனியுங்கள்😎!

எனவே தொடர்ந்து எழுதுங்கள் உங்கள் deadpan comedy script ஐ! எங்களுக்கு சிரிப்பு, விசுகர் போன்றோருக்கு பிடித்துக் கொள்ள ஒரு கற்பனைக் கயிறு! ஒரு கல்லில் இரு மாங்காய்கள்!😂

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, விசுகு said:

 

மேலை இன்னொருவர் விடுதலைப்புலிகளின் உண்மை வரலாற்றை எழுதி இருக்கிறார். 😡 அதற்கு உண்மையை உள்ளபடி அடுத்த சந்ததிக்கு கடதாதணும் என்போர் உள்ளிட்டோரிடமிருந்து எந்த எதிர்பார்ப்பும் வராதது இங்கே என்ன வரலாறு பதியப்படப்போகிறது. அதனை மௌனத்தின் ஊடாக எவ்வாறு ஊக்குவிக்கப்போகிறோம் என்பதற்கு சான்றாகிறது. 

🤣உண்மை வரலாறு? எது, வசி எழுதியதா??

ஒரு பரிசோதனை செய்து பாருங்கள். யாழுக்கு வெளியே , ஒரு 10 பேரைத் தெரிவு செய்து இந்த "உண்மை வரலாற்றை" ஒரு தடவை சொல்லிப் பாருங்கள். உங்களை எப்படிப் பார்வை பார்க்கிறார்கள் என்று குறித்துக் கொண்டு இங்கே வந்து சொல்லுங்கள்.

நீங்கள் கிட்டத் தட்ட ஒரு பிரம்மை (delusional) நிலைக்குப் போய்க்கொண்டிருக்கிறீர்கள். எதுக்காக? ஒரு "மாசில்லாத அமைப்பாக புலிகள் இருந்தனர்" என்று காட்டும் ஒரு பயனற்ற முயற்சிக்காக.

இந்தப் பிரம்மையை அடுத்த தலைமுறைக்கும் கடத்த வேண்டுமென்கிறீர்கள்! அனேகமாக, புலிகளின் நல்ல பக்கத்தைக் கூட அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல இயலாத நிலை, இந்தப் பிரம்மையினால் ஏற்படப் போகிறது!

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Justin said:

🤣உண்மை வரலாறு? எது, வசி எழுதியதா??

ஒரு பரிசோதனை செய்து பாருங்கள். யாழுக்கு வெளியே , ஒரு 10 பேரைத் தெரிவு செய்து இந்த "உண்மை வரலாற்றை" ஒரு தடவை சொல்லிப் பாருங்கள். உங்களை எப்படிப் பார்வை பார்க்கிறார்கள் என்று குறித்துக் கொண்டு இங்கே வந்து சொல்லுங்கள்.

நீங்கள் கிட்டத் தட்ட ஒரு பிரம்மை (delusional) நிலைக்குப் போய்க்கொண்டிருக்கிறீர்கள். எதுக்காக? ஒரு "மாசில்லாத அமைப்பாக புலிகள் இருந்தனர்" என்று காட்டும் ஒரு பயனற்ற முயற்சிக்காக.

இந்தப் பிரம்மையை அடுத்த தலைமுறைக்கும் கடத்த வேண்டுமென்கிறீர்கள்! அனேகமாக, புலிகளின் நல்ல பக்கத்தைக் கூட அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல இயலாத நிலை, இந்தப் பிரம்மையினால் ஏற்படப் போகிறது!

சிறிய சந்தேகம் வந்தாலே துப்பாக்கி குண்டு மூலம் தீர்ப்பெழுதுவதை...

இது தான் வரலாறா???

புலிகள் அப்படி செய்தார்களா??

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, விசுகு said:

சிறிய சந்தேகம் வந்தாலே துப்பாக்கி குண்டு மூலம் தீர்ப்பெழுதுவதை...

இது தான் வரலாறா???

புலிகள் அப்படி செய்தார்களா??

உங்களுக்கு குசும்பு ஜாஸ்தி  குசா 🤣

உங்களின் இந்தக் கேள்வியினூடாக நான் புரிந்துகொள்வது,...

"தாங்கள் ஆகக் குறைந்தது 40-45 வருடங்களுக்கு முன்னரே இலங்கையை விட்டுத் தப்பியோடிவிட்டீர்கள்."

ஆயுதம் தாங்கிய எல்லா இயக்கங்களும் துப்பாக்கிக் குண்டு மூலம்தான் தீர்ப்பெழுதினார்கள்.  இது உங்களுக்குத் தெரியாதென்றால் தங்களின் போராட்டம் தொடர்பான அடிப்படைப் புரிதலில் குறைபாடு இருக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, விசுகு said:

சிறிய சந்தேகம் வந்தாலே துப்பாக்கி குண்டு மூலம் தீர்ப்பெழுதுவதை...

இது தான் வரலாறா???

புலிகள் அப்படி செய்தார்களா??

என்ன மீண்டும் புதிய தியரியை வைத்து முதல் பக்கத்தில் இருந்து துவங்குவீங்கள் போல இருக்கு😂?

ஐலண்ட் சொல்வது போல புலிகள் நடந்திருக்கா விட்டால் ஆனந்தராஜா, அமீர், யோகேஸ்வரன், நீலன் முதல் இறுதியாக இராஜதுரை வரை எப்படிக் கொலையானார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்தவரை

நான் அறிந்தவரை

புலிகள் குறைந்தது மூன்று தடவையாவது எச்சரிக்கை செய்தார்கள். 

இதற்கு மேல் இதற்குள் நேரத்தை செலவழிக்க விரும்பவில்லை.  நன்றி. 

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, கிருபன் said:

 

சந்திரிக்கா காலத்து பொதியைப் பற்றி அறிய பக்கம் 4-6 படிக்கவும் (ஆங்கிலத்தில் உள்ளது)

https://noolaham.net/project/36/3532/3532.pdf

நன்றி,

இது 13 வது அரசியல் அமைப்புத் திருத்தச்சட்டத்தைவிட அதிகமாக இருக்கலாம் (ஏன் இருக்கலாம் எனக்கூறுகிறேன் எனில் பதின்மூன்றைபற்றி இப்படி மேலே குறிப்பிட்ட பொதிபோல் எவரும் எனக்கு அறிமுகப்படுத்தியதில்லை)

நிச்சயமாக மேலே கூரிப்பிட்ட விடையங்கள் தமிழ் மக்களுக்குக் கிடைத்து அவை அனைத்தும் முழுமையாகவும் நிரந்தரமாகவும் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் நாம் பல விடையங்களில் முன்னேற்றமடைந்திருப்போம்.

இதைத்தான் ஜெகத் கஸ்பார் சொன்னாரோ "தமிழர்கள் தட்டையான மனநிலையுடையவர்கள்" என காலம் கடந்துவிட்டது. இப்போ வீட்டுக்கட்சி யாருக்கு என அடிபடுகிறோம்.

Edited by Elugnajiru

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Justin said:

சிரிப்பு நல்லது தான், அதற்காக நீங்கள் standup comedian ஆக நடந்து கொண்டிருப்பது இன்னொருவரின் மரணவீட்டில். இது உலகின் எந்த பண்பாட்டிலும் இல்லாத அருவருப்புத் தரும் ஒன்று!

"ஒன்றாகப் பயணிப்போம்" என்று நேற்று அறிக்கை விட்ட விசுகர், உங்கள் கொமெடியை சீரியசாக மேற்கோள் காட்டியிருப்பதைக் கவனியுங்கள்😎!

எனவே தொடர்ந்து எழுதுங்கள் உங்கள் deadpan comedy script ஐ! எங்களுக்கு சிரிப்பு, விசுகர் போன்றோருக்கு பிடித்துக் கொள்ள ஒரு கற்பனைக் கயிறு! ஒரு கல்லில் இரு மாங்காய்கள்!😂

நான் கூறிய விடயம் சாதாரணமானது அது உங்களுக்கு சிரிப்பாக இருக்கிறது என கூறியது நீங்கள், தற்போது நீங்களே வந்து மரணவீட்டில் பண்பாடில்லாமல் நகைசுவை செய்கிறேன் என என் மேல் பழி போடுகிறீர்கள்.

கடவுள் இரண்டு மனிதர்களிடம் கேட்டாராம் உலகை சுற்றி பார்த்துவரும்படி முதலாமர் வந்து சொன்னாராம் உலகம் முழுவதும் அயோக்கியனாக உள்ளார்கள் என்று, இரண்டாமர் வந்து கூறினாராம் உலகம் முழுக்க நல்லவர்களாக உள்ளார்கள் என்று.

இந்த கதையினை கூறுவதன் பொதுவான நோக்கம் நல்லவர்களுக்கு மற்றவர்களும் நல்லவர்கள் அது போல தீயவர்களுகும், ஆனால் அடிப்படையில் இதுவும் தவறு உள்ளதை உள்ளவாறு பாருங்கள்.

இரண்டு விஞ்சானிகள் ஒருவர் தனது தச்சனுடன் வாதிட்டார் எப்படி குட்டிப்பூனையும் தாய் பூனையும் கதவிலுள்ள பெரிய துவாரத்துனூடாக செல்லும் சிறிய பூனை சிறிய துவாரத்தினூடாகத்தான் செல்லும் என, மற்றவர் பணிப்பெண் கொடுத்த கடிகாரத்தினை கொதி தண்ணீரில் போட்டு விட்டு முட்டையினை பார்த்து கொண்டிருந்தார்.

இதனை சாதாரணமானவர் செய்தால் அதற்கு வேறு ஒரு வடிவம் கொடுக்கப்படும் ஆனால் அவ்வாறான செயல்கள் சில நேரங்களில் மற்றவர்களுக்கு முகம்சுளிப்பினை ஏற்படுத்தும், ஆடையில்லாமல் சென்ற அரசன் போல, அதிர்ஸ்டவசமாக அதனை மன்னனுக்கு உணர்த்த சிறு குழந்தையாவது இருந்திருக்கின்றது.

  நன்றி வணக்கம்

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:

என்னைப் பொறுத்தவரை

நான் அறிந்தவரை

புலிகள் குறைந்தது மூன்று தடவையாவது எச்சரிக்கை செய்தார்கள். 

இதற்கு மேல் இதற்குள் நேரத்தை செலவழிக்க விரும்பவில்லை.  நன்றி. 

ஆமாம் விசுகர்....

புலிகளை எதிர்கிறார்களா??? அல்லது கொலைகளை எதிர்கிறார்கள?? இல்லை 

புலிகள் செய்யும் கொலைகளை மட்டுமே எதிர்கிறார்கள?? எனக்கு விளங்கவில்லை.   இந்தியா,.இலங்கையில் இருந்த காலத்தில் எக்கச்சக்கமான கொலைகள். செய்துள்ளது 

இலங்கையும் அளவு கணக்கின்றி கொலைகள் செய்துள்ளது  

மற்றைய இயங்களும் எந்தவித குறிகோளுமின்றி  கொலைகள் செய்துள்ளனர்  

புலிகளை சீண்டினால் மட்டும் கொலை விழும்   ஏன். புலிகளை சீண்டா வேண்டும் ?? இந்த நீலனின் பொதி. 1994 இல் இருந்து  2024  வரை சுமார் 30 ஆண்டுகள் ஏன் நிறைவேற்றப்படவில்லை   காரணம் இலங்கை பாராளுமன்றம். எந்தவொரு பொதியையும் அங்கீகரிக்க மாட்டாது   

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kapithan said:

உங்களுக்கு குசும்பு ஜாஸ்தி  குசா 🤣

உங்களின் இந்தக் கேள்வியினூடாக நான் புரிந்துகொள்வது,...

"தாங்கள் ஆகக் குறைந்தது 40-45 வருடங்களுக்கு முன்னரே இலங்கையை விட்டுத் தப்பியோடிவிட்டீர்கள்."

ஆயுதம் தாங்கிய எல்லா இயக்கங்களும் துப்பாக்கிக் குண்டு மூலம்தான் தீர்ப்பெழுதினார்கள்.  இது உங்களுக்குத் தெரியாதென்றால் தங்களின் போராட்டம் தொடர்பான அடிப்படைப் புரிதலில் குறைபாடு இருக்கிறது. 

தப்பி  ஓடினாலும் பரவாயில்லை. சிலர் ஓடும்போது மக்கள் கொடுத்த பணம் , நகை நாட்டு எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு இல்லையா ஓடி விடடார்கள். எப்படியோ அவர்கள் நன்றாக வாழட்டும். 

இன்னுமாடா இவர்கள் இயக்கங்களுக்கு வெள்ளையடிக்கிறார்கள்? ஒவ்வொரு இரவு விடியும்போதும்  தூண்களில் பிணங்களை கணடவர்கள் நாங்கள். அந்த திறதுக்குள்ள ஒரு விளக்கமும் எழுதி வைத்திருப்பார்கள். அந்த அப்பாவிகளின் ரத்தம் இவர்களை சும்மா விடாது. நிச்சயமாக பழிவாங்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இந்த திரியில் எழுதிய கருத்துக்களையும் வேறு திரிகளில் எமது சமூகம் பற்றிய இன்றைய நிலையைப் பற்றி எழுதப்பட்ட, எழுதும் கருத்துகளைப் பார்க்கையில் ஒரு விஷயம் மட்டுமே தோன்றுகிறது. புலிகள், அவர்களது நடவடிக்கைகள், தோல்விகள் யாவற்றையும் Jail free card போல அவரவர் தங்களது தேவைகளுக்கு ஏற்ப பயன்படுத்துகிறார்கள். அவ்வளவுதான். இது மட்டுமே எனக்கு விளங்குகிறது. 

 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Elugnajiru said:

நன்றி,

இது 13 வது அரசியல் அமைப்புத் திருத்தச்சட்டத்தைவிட அதிகமாக இருக்கலாம் (ஏன் இருக்கலாம் எனக்கூறுகிறேன் எனில் பதின்மூன்றைபற்றி இப்படி மேலே குறிப்பிட்ட பொதிபோல் எவரும் எனக்கு அறிமுகப்படுத்தியதில்லை)

நிச்சயமாக மேலே கூரிப்பிட்ட விடையங்கள் தமிழ் மக்களுக்குக் கிடைத்து அவை அனைத்தும் முழுமையாகவும் நிரந்தரமாகவும் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் நாம் பல விடையங்களில் முன்னேற்றமடைந்திருப்போம்.

இதைத்தான் ஜெகத் கஸ்பார் சொன்னாரோ "தமிழர்கள் தட்டையான மனநிலையுடையவர்கள்" என காலம் கடந்துவிட்டது. இப்போ வீட்டுக்கட்சி யாருக்கு என அடிபடுகிறோம்.

பொதிகளை  தீரவுகளை. ஒரு தனி நபர் எழுதி என்ன பிரயோஜனம்??? பாராளுமன்றம் அங்கீகரிக்க மாட்டாது என்று அனைவருக்கும் தெரியுமில்லையா. ?? இதனை விட சிறந்த தீர்வினை எழுத முடியும்  ....எழுதி என்ன பலன்?? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kandiah57 said:

பொதிகளை  தீரவுகளை. ஒரு தனி நபர் எழுதி என்ன பிரயோஜனம்??? பாராளுமன்றம் அங்கீகரிக்க மாட்டாது என்று அனைவருக்கும் தெரியுமில்லையா. ?? இதனை விட சிறந்த தீர்வினை எழுத முடியும்  ....எழுதி என்ன பலன்?? 

இலங்கைப் பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கமுடியாத தீர்வின் வரைபை எழுத உதவியர் கொலை செய்யப்படவேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்வியையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, கிருபன் said:

இலங்கைப் பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கமுடியாத தீர்வின் வரைபை எழுத உதவியர் கொலை செய்யப்படவேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்வியையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

அதையெல்லாம் கேட்க கூடாது. கேடடால் நீங்கள் துரோகியாக்க படுவீர்கள்.

அவரின் அரசியல் அறிவையும் அரசியல் செல்வாக்கையும், ஒரு அரசியல் தீர்வை எழுதும் தகமையயும் , உலகத்தலைவர்களால் ஏற்றுக்கொள்ள படடதையும் இவர்கள் ஏற்று கொள்ள தயாராகவில்லை. தெரிந்தும் தெரியாதவர்கள் போல் நடிக்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

இலங்கைப் பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கமுடியாத தீர்வின் வரைபை எழுத உதவியர் கொலை செய்யப்படவேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்வியையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

இருந்து பாருங்கள் கிருபன் இந்த கேள்விக்கான நேரடிப் பதில் வராது. 

  • கருத்துக்கள உறவுகள்

நடந்தவைகள் எல்லாம் 100% சரியானவை என்று அதற்கு நியாயம்  கற்பித்து அவை எல்லாம்  விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவை எனப் புனிதப்படுத்தி  அதை எமது பெருமையாக் கூறி  காவியம் எழுதுவதும்,  அந்தப் புனிதமானவற்றில்  நியாயமற்ற பாரிய   படுகொலைகளும் உள்ளனவே எனச் சுட்டிக்காட்டும் போது,  அந்த விவாதத்தில்  அதற்கு பதில் சொல்ல முடியாத நிலையை அடையும் போது,  பழசை இனி கிண்டி என்ன பிரயோசம்,  நீங்கள் என்ன பழசே கிண்டிக் கொண்டிருக்கின்றீர்கள்,  என்று எம்மைக் குற்றம் சாட்டுவதும்,   அதன்  பின்னர் மீண்டும் தாம்   அதே  பழசை கட்டிப்பிடித்து தொங்கிக்கொண்டு,  தாம் பழசு என்று கூறிய அதே விடயங்களை  பெருமையாக பேசி அதே தவறான அரசியலை தொடரவேண்டும் என்ற பொருள்பட பேசும்  வரட்டுத் தத்துவத்துக்கு பெயர் தான் தேசியம் என்றாகி விட்டது கவலைக்குரியது.     

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மனிதனுடைய பெறுமதி (value) என்பது அவனது குடும்பம் சார்ந்து இருக்கலாம், இனம் சார்ந்து இருக்கலாம், இதையெல்லாம் தாண்டி உலகம் சார்ந்தும் இருக்கலாம். இங்கே "இனத்திற்கு என்ன செய்தார் (கொல்லப் படாமலிருக்க என்ன செய்தார்?)"  என்று நக்கலாகக் கேள்வி கேட்ட உறவுகளுக்காக கீழே இணைப்பு.

https://hrp.law.harvard.edu/fellowships/visiting-fellowships/neelan-tiruchelvam-memorial-fellowship/

ஹார்வார்ட் சட்டக் கல்லூரியின் மனித உரிமைக் கழகம் இன்னும் நீலன் திருச்செல்வம் புலமைப் பரிசிலை அவர் நினைவாக வழங்கி வருகிறது. அந்த அமைப்பின் தளத்தில் இருக்கும் நீலன் பற்றிய விபரிப்பு:

Neelan Tiruchelvam (1944-1999) was a Sri Lankan peace and human rights activist, lawyer, scholar and politician. Recognized nationally and internationally for his unyielding commitment to social justice and his efforts to end the Sri Lankan Civil War, Neelan Tiruchelvam was also a pioneering scholar of constitutional theory and minority rights. His illustrious career encompassed stations as Member of the Sri Lankan Parliament, Founding Director of the International Centre for Ethnic Studies, and Chair of the Council of Minority Rights Group International. One month before he was scheduled to join Harvard Law School as a Visiting Professor, Tiruchelvam was assassinated in Sri Lanka on July 29, 1999.

During his life, Tiruchelvam had built deep connections with Harvard Law School, where he obtained his LL.M. in 1970 and completed his S.J.D. in 1973. He returned to Cambridge in 1986 as one of the first Visiting Fellows at the Human Rights Program (HRP), which had been created just two years before. While at HRP, Tiruchelvam delivered the Edward A. Smith Lecture about human rights in the context of ethnic conflict in Sri Lanka.

On September 17, 1999, HRP organized a memorial service for Neelan Tiruchelvam at Harvard Law School. The memorial service proceedings are available on the HRP website.

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Justin said:

ஒரு மனிதனுடைய பெறுமதி (value) என்பது அவனது குடும்பம் சார்ந்து இருக்கலாம், இனம் சார்ந்து இருக்கலாம், இதையெல்லாம் தாண்டி உலகம் சார்ந்தும் இருக்கலாம். இங்கே "இனத்திற்கு என்ன செய்தார் (கொல்லப் படாமலிருக்க என்ன செய்தார்?)"  என்று நக்கலாகக் கேள்வி கேட்ட உறவுகளுக்காக கீழே இணைப்பு.

https://hrp.law.harvard.edu/fellowships/visiting-fellowships/neelan-tiruchelvam-memorial-fellowship/

ஹார்வார்ட் சட்டக் கல்லூரியின் மனித உரிமைக் கழகம் இன்னும் நீலன் திருச்செல்வம் புலமைப் பரிசிலை அவர் நினைவாக வழங்கி வருகிறது. அந்த அமைப்பின் தளத்தில் இருக்கும் நீலன் பற்றிய விபரிப்பு:

Neelan Tiruchelvam (1944-1999) was a Sri Lankan peace and human rights activist, lawyer, scholar and politician. Recognized nationally and internationally for his unyielding commitment to social justice and his efforts to end the Sri Lankan Civil War, Neelan Tiruchelvam was also a pioneering scholar of constitutional theory and minority rights. His illustrious career encompassed stations as Member of the Sri Lankan Parliament, Founding Director of the International Centre for Ethnic Studies, and Chair of the Council of Minority Rights Group International. One month before he was scheduled to join Harvard Law School as a Visiting Professor, Tiruchelvam was assassinated in Sri Lanka on July 29, 1999.

During his life, Tiruchelvam had built deep connections with Harvard Law School, where he obtained his LL.M. in 1970 and completed his S.J.D. in 1973. He returned to Cambridge in 1986 as one of the first Visiting Fellows at the Human Rights Program (HRP), which had been created just two years before. While at HRP, Tiruchelvam delivered the Edward A. Smith Lecture about human rights in the context of ethnic conflict in Sri Lanka.

On September 17, 1999, HRP organized a memorial service for Neelan Tiruchelvam at Harvard Law School. The memorial service proceedings are available on the HRP website.

இதப் பார்க்கும் நெடுக்கர் இதை ஏன் தேவையில்லாமல் இங்கே வெட்டி ஒட்டுகிறீர்கள் எனக் கேட்கப்போகிறார். 😀

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கிருபன் said:

இலங்கைப் பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கமுடியாத தீர்வின் வரைபை எழுத உதவியர் கொலை செய்யப்படவேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்வியையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

ஆமாம் கேட்கலாம்   .. நான் மறிக்கவில்லை ..இவர் மட்டும் தான் மனிதன் . என்பது இல்லை  சுட்டுக் கொல்லப்பட்ட அனைவரும் மனிதர்கள் தான்  .  அதையும் ஏன் என்று கேளுங்கள் ..  இவர் எழுதிய தீர்வு ஏன் நடைமுறைப்படுத்தப்படவில்லை,??  30 ஆண்டுகள் கடந்து விட்டது ... போராட்டம் தோற்றதற்க்கும். தீர்வு கிடைக்கமைக்கும்  முழு காரணம்  தமிழ் தலைவர்கள் தான் ....ஆயுதப் போராட்டம் என்று தீர்மானம் எடுத்த பின்னர்

1.    ஆயுதம் ஏந்தி போராடி இருக்க வேண்டும்

2.   விருப்பம் இல்லையென்றால் அரசியலிலிருந்து ஒதுக்கி இருக்க வேண்டும்

3. .அல்லது இளைஞர்களுடன். சேர்த்து போராடி இருக்க வேண்டும்  ஆயுதம்  துக்கமால் ஒத்துழைப்பு வழங்கி இருக்கலாம்

4,. இவர்கள் அரசியலில் இருந்தது தங்களை வளர்த்து கொள்வதற்குத்தான்

5,.எங்களுக்கு தேவை தீர்வு  இவருடைய படிப்பு அல்ல  வன்முறை மோசமானது தான் ஆனால் அடிமைத்தனம் வன்முறையை விட மோசமானது

6.  இவர் தீர்வு எழுதியதுக்கு தான் கொல்லப்பட்டார்  என்பது சரியா?? வேறு காரணம்கள் இல்லையா?  யாழ் கள உறவு ஒருவர்  விளக்கம் அளித்து இருந்தார்.  

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Cruso said:

அவரின் அரசியல் அறிவையும் அரசியல் செல்வாக்கையும், ஒரு அரசியல் தீர்வை எழுதும் தகமையயும் , உலகத்தலைவர்களால் ஏற்றுக்கொள்ள படடதையும் இவர்கள் ஏற்று கொள்ள தயாராகவில்லை. தெரிந்தும் தெரியாதவர்கள் போல் நடிக்கிறார்கள். 

இந்த தகமைகள். தமிழ் ஈழம் என்றும் ஆயுதப் போராட்டம் செய்வது… தான்  வழி என்றும்  முடிவு எடுக்க முதலும் இருந்தது தானே??  அந்த நேரத்தில் தீர்வு வரைந்து இருக்கலாம்,.....ஏன் செய்யவில்லை  ...?? இவர் பெரிய படிப்பு படித்து விட்டார் என்று சிங்களவன் தீர்வு தந்து விடுவார்களோ?? அல்லது பாராளுமன்றம் அங்கீகாரம்…………………… வழங்கி விடுமா?? தயவுசெய்து பதில்கள் அளிக்கவும்   

8 hours ago, island said:

இருந்து பாருங்கள் கிருபன் இந்த கேள்விக்கான நேரடிப் பதில் வராது. 

ஏன்?

  • கருத்துக்கள உறவுகள்

பெரிய படிப்பு படித்தவர். ஏன் பாராளுமன்ற உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார்??? இரண்டாவது வருமானமா ?? 

Guest
This topic is now closed to further replies.



இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.