Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் எழுத்துகளின் ரசிகன் நான். என்னமோ தெரியவில்லை இந்த முறை ஆற அமர இருந்து முழுவதுமாக வாசிக்க முடியவில்லை😒. வெவ்வேறு மன உளைச்சல்கள் இருப்பதால் சந்தர்ப்பம் வரும் போது வாசித்து  என் கருத்துக்களை சொல்கின்றேன்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மயிலிறகு........... 18.

                                                                                        

                                                                       உடனே யோகிபாபு ஐயோ அம்மா, அண்ணா நான் ஒன்றும் அவங்களைக் கடத்துறதுக்கு வரேல்ல. எங்கட அப்பான்ர மோட்டார் சைக்கிளை யாரோ ஒரு பொடியன் ஓடித் திரிகிறதாய் கேள்விப் பட்டன். அதுதான் அவனுக்கு இரண்டு தட்டு தட்டிப்போட்டு சைக்கிளைத் தூக்கிக் கொண்டு வரத்தான் பிளான் போட்டு பொடியளுடன் இந்தப் பக்கம் திரிஞ்சனாங்கள். அப்போது அஞ்சலா முன் வந்து அதை இவர் கேட்டிருந்தால் நானே குடுத்திருப்பேனே. இவர் "பாரில்" கடத்துறது தூக்கிறது என்று கதைத்ததால்தான் அது எனக்குத் தெரிந்து இவ்வளவும் நடந்திட்டுது. அதோ அந்தா நிக்குது மோட்டார் சைக்கிள். நான்தான் அது பழுதாய் இருந்தது. அவர் கம்பிரமாய் அதில் இருந்து இந்த ஊர் முழுதும் ஓடித் திரிந்தவர். அது பழுதாகி திண்ணையில் நிற்பதை பார்க்க எனக்கு ஒரு மாதிரி இருந்தது. அதனால்தான்  இவரிடம் அதைத் திருத்தி சில நாட்கள் ஓடிப்பார்த்துட்டு கொண்டு வரச்சொல்லி குடுத்தனுப்பினனான்.

                                                     எங்க அந்தத் தம்பியைக் கூப்பிடு என்று சொல்ல அரசு விதானை முன்னால்  வந்து அவனை உங்களுக்குத் தெரியும் தம்பி,எப்போதும் என்கூடத்தான் வேலை செய்து வருகிறவன். பெயர் வாமன். இப்ப அவனும் இங்கு விதானையாகி இருக்கிறான் என்று சொல்ல வாமன் முன்னால் வருகிறான்.

ஓ.....அப்படியா நல்லது, அவனைப் பார்த்து நல்ல ராஜாவாட்டம் இருக்கிறாய்......அவர்களை நல்லபடியாய் வைத்து வாழ்ந்துகொள் என்று வாழ்த்துகிறான். வாமனும் சைக்கிள் சாவியை அவனிடம் தர நீட்டுகிறான். அதை அவன் தாய் மறித்து இந்தப் பிள்ளை விடயத்தில் அவர் செய்த பாவத்துக்கு தன் மோட்டார் சைக்கிள் மூலமாய் பிராயசித்தம் செய்திருக்கிறார். அதை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்கிறார். அப்போது மூத்தமகன் ரவியும் எங்களுக்கு கொஞ்சம் முன்னால்தான் விதானையார் பிரச்சினைகளைச் சொல்லி கூட்டி வந்தவர். அதுவும் நல்லதாய் போயிற்றுது. உங்களின் திருமணத்தைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கு என்கிறான்.

                                                                   மயிலம்மாவும் ஏதோ அந்தப் பெண்ணுக்கு உரித்தானவர்கள் வந்திருக்கிறீர்கள், சாப்பாடு எல்லாம் தயாராய் இருக்கு. இருந்து சாப்பிட்டு விட்டுத்தான் போக வேணும் என்று சொல்ல அங்கேயே படங்கு விரித்து தாமரை இலையில் எல்லோருக்கும் சாப்பாடு பரிமாறப் படுகிறது. பின் அவர்கள் போகும் போது அந்த அம்மாள் தன் கையிலும் கழுத்திலும் இருந்ததைக் கழட்டி அஞ்சலாவுக்கு காப்பும் வாமனுக்கு சங்கிலியும் போடுகிறாள்.ரவியும், யோகிபாபுவும் கூட தங்களிடம் இருந்த சங்கிலி மோதிரங்களை கழட்டி இருவருக்கும் போடுகிறார்கள். பின் எல்லோருக்கும் நன்றி கூறிவிட்டு செல்கிறார்கள். போகும் போது மூத்தமகன் ரவி அவர்களை பார்த்து இனிமேல் உங்களுக்கு என்ன பிரச்சினை என்றாலும் எனக்கு சொல்லியனுப்பவும் நான் பார்த்துக் கொள்கிறேன். அவர்களின் தாயாரும் மயிலம்மாவையும் மற்றும் எல்லோரையும் பார்த்து  நீங்கள் நாலாம் சடங்குக்கு எங்கள் வீட்டிற்கு வாருங்கோ, நாங்கள் எல்லா ஏற்பாடும் செய்த்து வைக்கிறம் என்று சொல்கிறார்கள்.

                                                              யோகிபாபு வானில் ஏறும்போது அவனது கூட்டாளிகள் அப்பாடா கனகாலத்துக்குப் பிறகு நல்ல சாப்பாடு என்று சொல்லி ஏப்பம் வீட்டுக் கொண்டே வர யோகிபாபு அவங்களை பார்த்து நில்லுங்கடா....சும்மா தன்பாட்டில்  வீட்டுக்ல  வந்து நிக்கப் போற மோட்டார் சைக்கிளுக்கு என்னை உசுப்பேத்தி விட்டு நான்  வானையும் வாடகைக்கு எடுத்து உங்களுக்கும் ஒரு வாரமா விஸ்கியும் பிரியாணியுமாய் அழுது கடைசில சைக்கிளும் கையை விட்டுப்போய் கையில கழுத்தில கிடந்த நகைகளும் போகப் பண்ணிட்டீங்களேடா. ஏறுங்கடா பஸ் ஸ்ராண்டில இறக்கி விடுவன் காலமை முதல் பஸ்ஸில இந்த ஊரைவிட்டே ஓடிடனும் சொல்லிப்போட்டன்.  வான் போகுது எல்லோரும் சிரிக்கிறார்கள்.

                                            ஏதோ சண்டை கலாட்டா நடக்கும் தான் விலக்குப் பிடித்து விடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த விதானையும் விசயம் சப்பென்று போனதைப்  பார்த்து மணமக்களை அழைத்து பொக்கட்டில் இருந்து பணம் எடுத்து இந்தா இதை வைத்துக் கொள் என்று குடுக்கிறார். என்ன அண்ணா இது சம்பளப்பணமா என்று நமுட்டுச் சிரிப்புடன் வாமன் கேட்க, போடாங்.....பக்கத்தில பிள்ளை நிக்குது இல்லையென்றால் இப்ப உனக்கு சொல்லுவான், ஏன்டா ஒன்றுமே இல்லாத விசயத்துக்கு இப்படிக் கலாட்டா பண்ணிட்டீங்களேடா. என்று சொல்லி விட்டுப் போகிறார். மற்றவர்களும் நல்ல சாப்பாடு நல்ல கலியாணம் என்று சொல்லி சிரித்துக் கொண்டு போகிறார்கள்.......!

🦚 மயில் ஆடும்........... 18.

  • Like 4
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட மாமாவுக்கும் இரவில் தான் திருமணம் நடந்தது!
தொடருங்கோ சுவி அண்ணா.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/3/2024 at 12:28, ஏராளன் said:

இன்னும் கவி ஐயாவின் படங்களைக் காணவில்லையே?!

Default-A-stunning-Luis-Royo-oil-paintin

  • Like 1
  • Thanks 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மயிலிறகை......... 19.

                                                                       

மயிலம்மா வீட்டுப் படுக்கை அறை. கல்யாணக் கலாட்டா எல்லாம் முடிந்து வர நேரமும் இரண்டு மணிக்கு மேல் ஆகிவிட்டிருந்தது. வாமனும் பொடியலுடன் கொஞ்சம் மதுவும் பாவித்து சாப்பிட்டு விட்டு வந்ததால் அறையில் பால்பழங்கள் எதுவும் அங்கில்லை. புது இடமாய் இருந்த போதிலும் அஞ்சலா கட்டிலில் சிறிதும் அச்சமின்றி அமர்ந்திருக்கிறாள். தலையில் வட்டமாய் கொண்டை போட்டு பின்னலில் சடைநாகமும் குஞ்சமும் வைத்து நிறைய பூக்களால் அலங்காரம் செய்து அனுப்பி இருந்தார்கள். அவள் தனக்குள் இவன் ஒரு தொடை நடுங்கி, இவனால் என்ன பெரிதாய் செய்துவிட முடியும் என்னும் எகத்தாளம் கண்களில் தெரிகின்றது. புத்தம் புது வாலிபனான இவனை நான்தான் சாமர்த்தியமாக வழிக்குக் கொண்டுவர வேண்டும். ஒரேயடியாய் பயப்படுத்தக் கூடாது என்று நினைக்க சிரிப்பும் கூடவே வருகின்றது.

                                                                                        அப்போது வாமன் அங்கு நாலுமுழம் வேட்டி கட்டி நாஷனல் சேர்ட்டும் போட்டுகொண்டு கழுத்தில் மைனர் செயினும் கைகளில் மோதிரங்களும் மின்ன உள்ளே வருகிறான். அவன் விதானையல்லவா, இதுநாள்வரை எத்தனை எத்தனையோ பேரின் பொய் மெய் களை அவர்களின் கண்களை பார்த்தே கண்டுபிடித்திருக்கிறான். அதுபோல் அஞ்சலாவின் எண்ண ஓட்டங்களும் அவனுக்குப் புரிகின்றது. மெல்லமாய் நடந்து அவளை நெருங்கி அருகில் நிக்கிறான். அவளும் கொஞ்சம் அரக்கி இருந்து கொண்டு உட்காருடா என்கிறாள். அவனும் அருகில் அமர்கின்றான். அவள் தனக்கு சொல்வதுபோல் அவனுக்கும் சேர்த்து சொல்கிறாள். சே எல்லாம் புஷ்வாணமாய் போச்சுது. எனக்கென்ன தெரியும் அவங்கள் மோட்டார் சைக்கிளுக்காத்தான் அப்படி அலைஞ்சு திரிஞ்சவங்கள் என்று சொல்ல அவனும் எனக்கு அப்படித் தோன்றவில்லை. திருமணங்கள் சொர்க்கத்தில் நிட்சயிக்கப் படிக்கிறது என்பார்கள் அது நிஜமோ பொய்யோ தெரியாது ஆனால் எங்களை பொறுத்தவரை யோகிபாபுவால் தான் நிட்சயிக்கப் பட்டிருக்கு.

                                            அதென்னமோ உண்மைதான் என்று அதை அவள் ஆமோதிக்கிறாள். பின் அவன் கையை எடுத்து தன் இடுப்பைச் சுற்றி வைத்துக் கொண்டு மெதுவாக அவன் மார்பில் சாய்கிறாள். அவன் சும்மா இருப்பதைப்  பார்த்து என்னடா பயமாய் இருக்கா.....என்னிடம் என்னடா பயம் என்கிறாள்.

அவனும் ....ம்.....கொஞ்சம் என்று சொன்னவன், அப்படியே அவளை சரித்து மடியில் வளர்த்தி கண்களில் காதல் மின்ன உதடுகளில் முத்தமிடுகிறான். அதை அவள் ரசிக்கிறாள்.கண்கள் கிறங்குகின்றன. அவள் சற்றே அசைந்து அவன் கண்களை நோக்க அதில் காதலுடன் காமமும் ஒளிர்கின்றது. கண்களின் வார்த்தைகளை அவள் புரிந்து கொள்ளும் அடுத்த கனத்தில் இருந்து அவன் அவனாக இல்லை. கொதிக்கக் காய்ச்சிய இரும்பு கொல்லனின் அடியில் வளைந்து நெளிந்து வசமாவதுபோல் அவளும் நெகிழ்ந்து மகிழ்ந்து மலர்ந்து நிக்கிறாள்.மேனி துடிதுடித்து மயங்கி முயங்கி நிலைகுலைகிறாள்.

                                                                         இதுநாள்வரை கஞ்சனின் பெட்டிக்குள் பணக் கட்டாய்  பஞ்சடைத்து இருந்தவள்  இப்போது திருவிழாவில் சிறுவனின் கையில் கிடைத்த சில்லறைகள்  போல் சிறகடித்துப் பறக்கிறாள். அவள் மேனியில் ஆடைகள் சில இருந்த போதும் அவை தம் கடமையை மறந்து ஒதுங்கி நின்று ஓரங்க நாடகம் பார்க்கின்றன. சென்றி உடைத்து உட்புகுந்த இராணுவத்திடம் பாதுகாவல் அரண்களும் பதுங்கு குழிகளும் சரண்டர் ஆகின்றன.

                                                              கொஞ்சம் கொஞ்சமாய் கெஞ்சிக்  கெஞ்சி கொஞ்சிக் கொஞ்சி அணைக்கும் அவனின் வலிமையான கரங்களை அவளின் வளைக்கரங்கள் தடுக்க முயன்று தோற்று மென்மேலும் இறுக்கித் தழுவிக் கொள்கின்றன. செவ்விதழ்கள் செந்தேனாய் சிந்துகின்றன. தேன்துளிகள்  தெறிக்கும் இடமெல்லாம் அவன் ஆதரங்களால் மேய்கிறான்.     கன்னிமலர் காகிதமாய் கசங்கி போகிறது. மதனநீர் ஒழுக மதம் பிடித்து நின்ற பிடி அங்குசத்துக்கு அடங்கிக் கிடக்கின்றது.

                                அன்று அப்படி இருந்த இவன் இன்று எப்படி இப்படி மாறினான். மனதில் எழும் ஆயிரம் கேள்விகளை உடலின் இன்பவேதனை மறக்கடிக்க அவளும் அவனுடன் மல்லுக்கட்டிக் களைத்து அவனருகில் அயர்ந்து உறங்கி விடுகிறாள். அடுத்தநாள் பகல் பத்து மணிக்குமேல் எழும்பி கைகளை உயர்த்தி உடம்பு முறித்து கதவு திறந்து வெளியே வருகிறாள். மாருதியின் ஓவியம்போல் தலை நிறைய பூக்களுடன் பொலிவாய் உள்ளே போனவள் இப்பொழுது கன்னங்களும் உதடு முகம் எல்லாம் வீங்கி கண்களும் சுருங்கி அரசியல் கார்ட்டூன் போல் அலங்கோலமாய் இருக்கிறாள்.அங்கிருந்த கண்ணாடியில் பார்க்க சந்திரபிம்பமாய் இருந்தவள் சந்திரமுகியாய் வெளியே வருகிறாள்.அந்த அலங்கோலத்திலும் அழகு கொட்டிக் கிடக்கு.

                                                                                                             மயிலம்மாவும் அவளைக் கண்டு சிநேகமாய்ப் புன்னகைத்து அவளைக் குளக்கரைக்குக் கூட்டிப் போகிறாள்.போகும்போது மறக்காமல் அஞ்சலா மாற்றுவதற்காக்க பூவனத்தின் ஆடைகளையும் துவாயையும் எடுத்துக்கொண்டு போகிறாள். பின் சம்பிரதாயமாக என்னம்மா நன்றாகத் தூங்கினாயா என்று கேட்க அவளும் கைகளை உதறி விரல்களை நெட்டி முறித்துக் கொண்டே மயிலம்மாவை நேராகப் பார்க்காமல் எங்கையம்மா உங்களுக்கு பகிடியாய் இருக்கு போல.

ஏன் என்ன நடந்தது நேற்றிரவு நடந்த சம்பவத்துக்கு உன்னை கோபித்துக் கொண்டானோ......

அப்படி கோபித்துக் கொண்டால்கூடப் பரவாயில்லை என்று தோன்றுகின்றது. அப்போது இருவரும் குளத்தருகில் வந்து விட்டார்கள். இருவரும் ஆடைகளைக் களைந்து கரையில் வைத்து விட்டு குறுக்குக் கட்டிக்கொண்டு குளத்துக்குள் இறங்கி முங்கி முங்கி மூழ்கிக் குளித்து மேலே வருகிறார்கள்.அஞ்சலா கல்லில் இருக்க மயிலம்மா ஒரு சவர்காரத்தை எடுத்து அவளுக்கு முதுகு தேய்த்து விட்டு முகத்துக்கு போடுவதற்கு அவளிடம் தருகிறாள். என்ன முதுகெல்லாம் ஒரே கீறலாயிருக்கு.

சே....என்ன பையன் அவன் .....அவன் ஒரு மிருகம். பத்து கைகளும் எட்டுக் கால்களுமாய் என்னை எத்தனை இம்சை செய்தான் தெரியுமா.

எனக்கென்ன தெரியும், நீ சொன்னால்தான் தெரியும்.

அன்று என் வீட்டில் தண்ணிப் பம்பு திருத்தும்போது அப்படிப் பயந்தாங் கொள்ளியாய் இருந்தவன்....

மயிலம்மா இடைமறித்து எப்படி "எலிபிடிக்கப் பழகாத பூனை" என்று என்னவோ சொன்னாயே அப்படியா

....ம்....அன்று நான் சொன்னது உங்களுக்கு கேட்டுட்டுது போல......அதேதான் இந்த சில மாதங்களில் இப்படி ஆகியிருக்கிறான்..... என்ன வேகம் ....ஓடுற முயல்களை விரட்டி வேடடையாடும் புலியாய் இருந்தான்.  அப்போது இல்லாத வெட்கம் இப்போது என்னை ஆட்கொள்ள டேய் வெட்கமாய் இருக்குடா,லைட்டை அணையடா, லைட்டா அணையடா செல்லம் என்று சொல்கிறேன் அவன் கேட்டால்தானே,  நீ என் ஸ்வீட் ஹார்ட் அதுதான் ஹார்ட்டை அணைக்கிறேன் ஹார்ட்டாய் அணைகிறேன் என்று இதயத்துக்குள் இதயத்தைப் புகுத்துவது போல்  இம்சை செய்தான்.  இது எப்படி என்று இவர்கள் கதைக்கும் போது தூரத்தே வாமன் வருகிறான். வரும்போது முற்றத்தில் நின்ற பாம்பை  கையில் எடுத்து, கையிலும் தோளிலும் ஊரவிட்டுக் கொண்டே அங்கு வருகிறான்.

 ஐயே பாம்போடு வருகிறான் பயமில்லையா என்று அஞ்சலா வினவ...

இல்லை அது சின்னனில் இருந்தே அவனோடு நல்ல பழக்கம் ஒன்றும் செய்யாது.

சரி இப்ப அவனிடமே கேட்கிறேன் எப்படிடா உனக்குள் இந்த மாற்றம் என்று.....அப்படியே கேட்கவும் செய்கிறாள்.

                                          வாமன் இவர்களைப்  பார்த்து சிரித்துக் கொண்டே பாம்பை கீழே விட அது அப்பால் போகின்றது.பின் நாலுமுழ வேட்டியையும் பனியனையும் கழட்டிக் கரையில் வைத்து விட்டு ஜட்டியுடன் குளத்துக்குள் பாய்கிறான். மயிலம்மா நைசாக நழுவி ஆடைகளை அலம்பும் சாக்கில் அப்பால் போகிறாள். நன்றாக முங்கிக் குளித்து மேலே வந்தவனிடம் அஞ்சலாவும் டே நீ இந்த வித்தையெல்லாம் எங்கு கற்றாய் .....

எந்த வித்தை......

தெரியாத மாதிரி கேட்டியென்றால் கல்லெடுத்து அடிச்சுப்போடுவன் சொல்லடா என்கிறாள்.

இவர்களின் சண்டையை ரசித்தபடியே இவன் என்ன சொல்லித் துலைக்கப் போறானோ என்னும் பதட்டத்தில் மயிலம்மா ஆடைகளை அலம்பிப் பிழிகிறாள்….

                                                          ஓ....அதுவா ....சொல்கிறேன் கேள்.....நீ என்னை அன்று அவமதித்தாய் அல்லவா ..

சீ ......நான் ஒன்றும் உன்னை அவமதிக்கவில்லை.....

இருக்கட்டும்,  முதலில் நீ என்னைப் பூனையுடன் ஒப்பிட்டதே தவறு..... பெருந்தவறு ..... அதன் பின்தான் நான்

கோயில் தேரில் சிலைகளைப் பார்த்தேன்.....கோபுரத்தில் சிற்பங்கள் பார்த்தேன்.....

சோலையில் கிளிகளைப் பார்த்தேன்.....மரங்களில் மந்திகளைப் பார்த்தேன்.....

பாதையில் நாய்களைப் பார்த்தேன் .......பட்டிகளில் மாடுகள் பார்த்தேன்....

மலர்களில் வண்டுகள் பார்த்தேன்.....சந்து பொந்துகளில் சர்ப்பங்கள் பார்த்தேன்....

இவைகளும் போதாதென்று சரோஜாதேவியைப் பிடித்தேன் படித்தேன் ......

 சரோஜாதேவியா ......  என்னடா சொல்கிறாய் , அஞ்சலா கேட்க, மயிலம்மா வியக்கிறாள்.....

ஓம்.......சரோஜாதேவியேதான்......கையடக்கமான ஒரு காவியம்.....கலவிக் கலையின் அத்தனை நுணுக்கங்களும் அதில் அடக்கம்.....

எல்லாவற்றையும் எனக்குள் ஒத்திகை பார்த்து வைத்துக் கொண்டேன் .....எதிர்காலத்தில் உதவலாம் என்று.....

நேற்றிரவு என் பத்தினி நீ எகத்தாளமாய் மெத்தையில் இருந்தாய். புதுப் பெண்ணுக்குரிய வெட்கம் கிஞ்சித்தும் இல்லை உன்னிடம். அது என்னை சூடேற்ற, பார்த்து வைத்திருந்த ஒத்திகை அத்தனையையும் தத்தை உன்னிடம் மெத்தையில் அரங்கேற்றினேன்.....

ஓ....அதுவா விசயம் .....நானும் என்னென்னமோ நினைத்துக் கொண்டேன் என்று மயிலம்மாவை ஓரக்கண்ணால் ஒரு நொடி பார்த்து விட்டு சொல்கிறாள்....மயிலம்மாவும் நிம்மதியாய் ஒரு பெருமூச்சு விடுகிறாள்.

அது சரி.....நீ எப்படி என்னைப் பத்தினி என்கிறாய். பத்தினிக்கு அர்த்தம் என்னென்று தெரியுமாடா உனக்கு....வட்டிக்காக வட்டிவைத்தி வீட்டில் வெட்டியாய்  வாழ்ந்து வந்தவள் நான்.....நான் பத்தினியா.....

நீ பத்தினிதான், அதில் என்ன சந்தேகம் உனக்கு....

எப்படி.....

இப்படி.....அசோகவனத்தில் ஆண்டு முழுதும் வாழ்ந்த சீதை அக்நியில் குளித்து வந்த பத்தினி.....

அக்நியில் பிறந்து ஐவருடன் வாழ்ந்த பாஞ்சாலியும் பத்தினி .....

முனிவன் உருவில் வந்து முயங்கியவனை சாபமிடாமல் சல்லாபித்த அகலிகையும் பத்தினி.....

கோவலனை மணந்த கண்ணகியும் பத்தினி.....

கணிகையர் குலத்தில் பிறந்தும் அவனோடு மட்டும் வாழ்ந்து பின் தானும் துறவியாகி பெற்ற மகளையும் துறவியாக்கிய மாதவியும் பத்தினி.....

படகில் முனிவனுடன் சல்லாபித்து வியாசரைப் பெற்று பின் கன்னியாகி மணமுடித்த சத்யவதியும் பத்தினி....

கணவனின் கருத்துக்கமைய ஆகாயத்தில் சென்ற தேவர்களைக் கூவி அழைத்து குழவிகளைப் பெற்ற குந்திதேவியும் பத்தினி என்றால்

என்றால் .....

நீயும் பத்தினியே.....உன்னையும் என்னையும் சேர்த்து மணமுடித்து வைத்து அழகுபார்க்கும் இந்த மயிலம்மாவும் பத்தினிதான்.

என்றவனைப் கல்லில் இருந்து பாய்ந்து தாவியணைக்கிறாள் அஞ்சலா....

மனதில் இருந்த பாரம் இறங்கிய நிம்மதியில் வாமனின் அறிவை வியந்துகொண்டே பிழிந்த துணிகளை எடுத்துக் கொண்டு பின்னழகு அசைந்து அசைந்து அவனுக்கு நன்றி சொல்ல அன்னம்போல் நடந்து முன்னால் செல்கிறாள் மயிலம்மா.....!

 

                                                           சுபம்.

 

மது வீட்டுக்கு கேடு.....!

யாவும் கற்பனை....!

யாழ் அகவை 26 க்காக......

ஆக்கம் சுவி........!      

  • Like 5
  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருமணமானால் கணவன் மேல் சந்தேகமும் வந்துவிடும் போல?!
உங்கள் தொடருக்கு மிக்க நன்றி சுவி அண்ணா.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/3/2024 at 12:02, ஏராளன் said:

திருமணமானால் கணவன் மேல் சந்தேகமும் வந்துவிடும் போல?!
உங்கள் தொடருக்கு மிக்க நன்றி சுவி அண்ணா.

உண்மைதான் காதலுடன் நிப்பாட்டி இருக்கலாம்.......கல்யாணம் வரை போயிருக்கக் கூடாது..........!  😂

நன்றி ஏராளன் .......!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மயிலம்மா என்று கதையைத் தொடங்கி அஞ்சலையை கலியாணம் கட்டி…, அதுசரி சுவியர் உங்கள் உண்மையான பெயர் வாமன் இல்லையே?

Default-One-Jung-Srilankan-couple-Happy-

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, suvy said:

உண்மைதான் காதலுடன் நிப்பாட்டி இருக்கலாம்.......கல்யாணம் வரை போயிருக்கக் கூடாது..........!  😂

நன்றி ஏராளன் .......!

கற்பனைக் கதை தானே அண்ணை?!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சலிப்பில்லாமல் வாசித்த கதைகளில் ஒன்று…..!

ஊரில் ஒரு விதானையாக ஆகியிருக்கலாமோ என்ற ஏக்கம் மட்டும் என்னை விட்டு நீண்ட காலத்துக்கு அகலாது என்பது மட்டும் உண்மை…!

வாழ்த்துக்கள், சுவியர்…!

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா ஒருவாறு வாசித்து முடிச்சிட்டன். சிறு பிள்ளையள் வந்து போற இடத்தில உப்பிடியே எழுதிறது. எப்பிடித்தான் இவ்வளவையும் எழுதினீர்களோ தெரியவில்லை அண்ணா. தொடருங்கள் நன்றாகப் போகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அப்பாடா ஒருவாறு வாசித்து முடிச்சிட்டன். சிறு பிள்ளையள் வந்து போற இடத்தில உப்பிடியே எழுதிறது. எப்பிடித்தான் இவ்வளவையும் எழுதினீர்களோ தெரியவில்லை அண்ணா. தொடருங்கள் நன்றாகப் போகிறது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி.........!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சிறு பிள்ளையள் வந்து போற இடத்தில உப்பிடியே எழுதிறது. எப்பிடித்தான் இவ்வளவையும் எழுதினீர்களோ தெரியவில்லை அண்ணா. தொடருங்கள் நன்றாகப் போகிறது.

இதைத் தான் முதலே வயகு வந்தவர்களுக்கு மட்டும் என்று போட்டிருக்கலாமே என்று கேட்டேன்.

சுவி உங்கள் எழுத்தாற்றலுக்கு மிகுந்த பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

இதைத் தான் முதலே வயகு வந்தவர்களுக்கு மட்டும் என்று போட்டிருக்கலாமே என்று கேட்டேன்.

அண்ணை யாழில் 18/21 வயதுக்கு கீழுள்ளோர் வாசகர்களாகவோ உறுப்பினர்களாகவோ தம்மை வெளிப்படுத்திக் கொள்ளவில்லைத் தானே?

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 1/3/2024 at 09:08, suvy said:

 

                                                                                            மயிலம்மா.

  நினைத்தால்  இனிக்கும்  மோகனம் .....!

குமுகாயத்தின் சாரளங்களாக விரியும் இலக்கியப் பரப்பிலே சிறுகதை, குறுநாவல் என்பன விரைந்து வாசிக்கவும், இன்றைய அவசர உலகுக்குமான ஒரு படைப்பலகாகத் திகழ்கின்றது. அந்த அலகுக்கூடாக மயிலம்மாவை அழகோடு நகர்த்தியது அருமை. காதல், காமம் என்று அல்லாமல் ஒரு கிராமத்து வாழ்வியலில் இளையோடும் நுட்பமான தவறுகளையும் யதார்த்தமான பார்வையுள் வாசகனிடம் கொண்டுவருதல் சிறப்பு. வாமனின் பயிலரங்கு சற்று நெருடலானபோதும், அதனை அனுமதித்த மயிலம்மாவின் தாகமும் கரணியமாகிறது. இலக்கிய நயத்தோடும், இளமைத்துள்ளலோடும் படைத்துள்ளமை சிறப்பு. உங்கள் குறுநாவலூடாக வன்னிப் பெருநிலப்பரப்பில் உள்ள கிராமத்துக்குச் சென்றுவர வைத்துவிட்டீர்கள். யாழ்க் களத்தின் "கதைவாரிதி,, என்றே தங்களை அழைக்கலாம் என்பது எனது பார்வை. சுவியவர்களே தொடரட்டும் உங்கள் எழுத்தாக்கப்பணி. யாழ்க்கள ஓவியரின் கைவண்ணத்தில் மலர்ந்துள்ள ஓவியங்கள் குறுநாவலுக்கு மற்றொரு சிறப்பு.
       இப்படிப் பல படைப்பாளர்களை ஒருங்கிணைக்கும் யாழுக்கும், அதன் நெறியாளர்களுக்கும் மற்றும் இலக்கியக் கடலிலே யாழெனும் படகின் சுக்கானைப் பிடித்து நகர்த்திவரும் மோகன் அவர்களுக்கும் உளமார்ந்த நன்றி. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, nochchi said:

குமுகாயத்தின் சாரளங்களாக விரியும் இலக்கியப் பரப்பிலே சிறுகதை, குறுநாவல் என்பன விரைந்து வாசிக்கவும், இன்றைய அவசர உலகுக்குமான ஒரு படைப்பலகாகத் திகழ்கின்றது. அந்த அலகுக்கூடாக மயிலம்மாவை அழகோடு நகர்த்தியது அருமை. காதல், காமம் என்று அல்லாமல் ஒரு கிராமத்து வாழ்வியலில் இளையோடும் நுட்பமான தவறுகளையும் யதார்த்தமான பார்வையுள் வாசகனிடம் கொண்டுவருதல் சிறப்பு. வாமனின் பயிலரங்கு சற்று நெருடலானபோதும், அதனை அனுமதித்த மயிலம்மாவின் தாகமும் கரணியமாகிறது. இலக்கிய நயத்தோடும், இளமைத்துள்ளலோடும் படைத்துள்ளமை சிறப்பு. உங்கள் குறுநாவலூடாக வன்னிப் பெருநிலப்பரப்பில் உள்ள கிராமத்துக்குச் சென்றுவர வைத்துவிட்டீர்கள். யாழ்க் களத்தின் "கதைவாரிதி,, என்றே தங்களை அழைக்கலாம் என்பது எனது பார்வை. சுவியவர்களே தொடரட்டும் உங்கள் எழுத்தாக்கப்பணி. யாழ்க்கள ஓவியரின் கைவண்ணத்தில் மலர்ந்துள்ள ஓவியங்கள் குறுநாவலுக்கு மற்றொரு சிறப்பு.
       இப்படிப் பல படைப்பாளர்களை ஒருங்கிணைக்கும் யாழுக்கும், அதன் நெறியாளர்களுக்கும் மற்றும் இலக்கியக் கடலிலே யாழெனும் படகின் சுக்கானைப் பிடித்து நகர்த்திவரும் மோகன் அவர்களுக்கும் உளமார்ந்த நன்றி. 

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நொச்சி......... ஒரு ஆக்கத்துக்கு ரெண்டு வரி விமர்சனம் கிடைக்கும்போது மகிழ்ச்சியாய் இருக்கின்றது.........!  👍

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் நேற்றிரவு எதிர்பாராமல் "ஆடு ஜீவிதம்" படம் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது......இங்கு நான் படத்தை விமர்சிக்க வரவில்லை......இதில் வரும் ஒரு காட்சி.....!

          அமலாபால் தன் வீட்டின் முற்றத்தில் இருந்த கிடுகுகளால் மறைத்து கட்டியிருந்த குளியலறையில் குளித்துக் கொண்டிருப்பார்.....அங்கு வரும் அவரது கணவன் பிருத்விராஜ் அவரை அப்படியே ஈரப் பாவாடையுடன் தூக்கி வந்து, வீட்டின் அருகே ஒரு பெரிய ஆறு ஓடுகின்றது அந்த ஆற்றில் வீசுவார் பின் தானும் குதித்து அமலாபாலுடன் உல்லாசமாய் நீந்துவர்......இக் காட்சி எந்த விரசமுமின்றி அழகாக நயமாக படமாக்கப் பட்டிருக்கு......அதை எழுத்தில் வர்ணிப்பதாயின் அப்படியே மயிலம்மாவும் வாமனும் நீராடுவதை வாசிக்கவும்...... இந்தப் படம் இப்போதுதான் வந்தது......சில வாரங்களுக்கு முன்பே மயிலம்மாவில் இதுபோன்று நான் எழுதியிருந்தேன்....... இவை எதேச்சையாக நடப்பது அவ்வளவுதான்.......! 

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 🤣........... 'மகளிர் மட்டும்' என்று சில பேரூந்துகள் அப்பொழுது ஓடிக் கொண்டிருந்தது. நூல் விடு, நூல் விடு என்றால் இதில எங்க நூலை விடுகிறது, அந்த பேரூந்திற்கு கிட்டவே எங்களை விடமாட்டார்களே .............😜. ஊரில் எத்தனையோ பேர்கள் நூல்கள் விட்டார்கள் தான். நமக்கு துணிவும் இருக்கவில்லை, சோலியும் கூட... இப்ப சுற்றும் முற்றும் பார்த்தால், நூல் விடப்பட்ட பலர் நூலே விடாதவர்களை கட்டியும், நூல் விட்டவர்கள் வீட்டில் சொன்னவர்களைக் கட்டியும் என்று எல்லோரின் கதையும் முடிந்து விட்டது..........  
    • மருத்துவர் கோபிஷங்கரை நேற்று எட்ட இருந்து பார்த்தேன். அவருடைய பெறாமகளின் நடன அரங்கேற்றத்திற்கு வந்திருந்தார். இவர் வருவார் என்று தெரிந்ததுமே சந்தித்துப் பேச்சுக் கொடுக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டு தான் போயிருந்தேன். பின்னர், நான் ஏதும் அர்த்தமில்லாமல் உளறி வைக்க, என்னையும் தன் பகிர்வுகளில் ஒரு பாத்திரமாக்கி விடுவாரோ😂 என்ற அச்சத்தில் பேசாமல் இருந்து விட்டேன். 
    • ஏமாற்றுவதை எந்த வயதிலும் ஆரம்பிக்கலாம் .......!  😂
    • தமிழ்வின்னுக்கு திரவத்தை அளக்கும் அலகும் மீற்றரில் இருக்கின்றது. மில்லி லீற்றருக்கும் மில்லி மீற்றருக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் எல்லாம் இணையம் நடத்தினால் இப்படித் தான் நிகழும்.  
    • உங்கள் இருவரதும் கருத்துக்களைப் பார்த்தேன். இது வரை நான் எழுதிய எதையும் "ஜஸ்ரின் எழுதியிருக்கிறார்" என்று தான் பார்த்திருக்கிறீர்கள், என்ன எழுதியிருக்கிறார் என்று பார்க்கவில்லை என்று புரிகிறது. இது போன்ற சந்தர்ப்பங்களில், என் கருத்துகளின் பயனின்மை - futility புரிகிறது, மேலும் எழுத வேண்டியதன் அவசியமின்மையும் புரிகிறது. இன்னும் ஒரு மாதத்தில் எனக்கு ஐம்பது தாண்டுகிறது (@பெருமாள் நோட் பண்ணிக் கொள்ளுங்கள்😎). ஐம்பது தாண்டினால், பெரும்பாலும் ஆண்கள், ஒரு "நேரக்கணிப்பு குண்டு" போல எந்த நேரமும் return ticket இல் போகலாம். நான் இப்படியே எழுதிக் கொண்டிருந்தால் இப்ப சம்பந்தனுக்கும், சுமந்திரனுக்கும் கிடைக்கும் eulogy போல எனக்கும் சின்ன ஸ்கேலில் கிடைக்கும் என நம்புகிறேன். எனவே, "எனக்கேன் வம்பு" என்கிற மன நிலை கொஞ்சம் என்னிலும் ஏற்பட்டு விட்டது. இன்னொரு பக்கம் "எக்கேடாவது கெட்டுப் போங்கள்" என்ற மனநிலையும் உருவாகி விட்டது. இந்தக் காரணங்களால், தமிழர் அரசியல் திரிகளில்  இனி மௌனமாக இருக்க முடிவு செய்திருக்கிறேன். நமக்கு அடைக்கலமாக இருப்பது முடிவில்லாத விஞ்ஞானமும், அறிவியல் தொழில் நுட்பமும்😂.  
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 0 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.