Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

32-2-1-750x375.jpg

வெடுக்குநாறியில் அடாவடியில் ஈடுபட்ட சிவசேனை.

சிவசேனையின் அடாவடி தனத்தால் வெட்டுக்குநாறி ஆதி சிவன் ஆலய நிர்வாக குழு கூட்டம் இடைநடுவில் இரத்து செய்யப்பட்டுள்ளது.

வெட்டுக்குநாறி ஆதி சிவன் ஆலய நிர்வாகக்குழு கூட்டம் இன்றைய தினம் ஒலுமடு பகுதியில் உள்ள மண்டபம் ஒன்றில் நடைபெற்றது.

அதன் போது கூட்டத்திற்கு அழையா விருந்தாளிகளாக சிவசேனை அமைப்பின் மறவன்புலவு சச்சிதானந்தன் தலைமையிலான குழு வருகை தந்து கிறிஸ்தவர்களுக்கு எதிரான கருத்துக்களை கூட்டத்தில் முன் வைத்து குழப்பங்களை ஏற்படுத்தினர்.

அதன் போது, வெட்டுக்குநாறியில் சிவராத்திரி தினத்தன்று பொலிஸார் அடாவடியில் ஈடுபடும் போது , நீங்கள் எங்கே சென்றீர்கள் ? ஆலய பூசாரி உள்ளிட்ட 08 பேரை கைது செய்து சிறையில் அடைத்த போது எங்கே போனீர்கள் ? கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்குமாறு நெடுங்கேணி மற்றும் வவுனியாவில் நடத்தப்பட்ட போராட்டத்தின் போது எங்கே போனீர்கள் ? என கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கேள்வி கேட்ட போது , அதற்கு பதில் அளிக்காது கிறிஸ்தவர்களுக்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து கூறி வந்தனர்.

அதனை அடுத்து கூட்டத்தில் இருந்து வெளியேற 10 நிமிடம் அவகாசம் வழங்கப்பட்டது. அவர்கள் அதற்கு பின்னரும் வெளியேறாத நிலையில் , குழப்பங்களை தவிக்கும் முகமாக கூட்டத்தினை மண்டபத்திற்கு வெளியே நடத்த முயன்ற போதும் குழப்பத்தை ஏற்படுத்தியமையால், தற்போதைய நிர்வாகமே அடுத்த ஒரு வருட காலத்திற்கு தொடர்ந்து செயற்படும் என கூட்டத்தில் ஏக மனதாக முடிவெடுக்கப்பட்டு , கூட்டம் நிறைவு பெற்றது.

கூட்டம் நிறைவு பெற்று மக்கள் அங்கிருந்து கிளம்பும் போது , மண்டபத்திற்குள் சென்ற சிவ சேனையினர் அங்கிருந்த மேசைகள் மீது படுத்து உறங்கினர்.

இதேவேளை சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட குறுந்தூர் மலை விகாரைக்கு சென்று அங்கிருந்த புத்தரை வழிபட்டதுடன் , விகாரதிபதியுடன் நல்லுறவில் உள்ளவர்கள் , வெடுக்குநாறியில் ஆதி சிவன் ஆலயத்தையும் அந்த விகாராதிபதியிடம் கையளிக்கும் ஏற்பாடாகவே சிவசேனையினர் கூட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்தினர் என அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

32-6-600x450.jpg

32-7-600x450.jpg

32-5-600x450.jpg

32-1-1-600x450.jpg

32-3-1-600x450.jpg

32-4-600x450.jpg

https://athavannews.com/2024/1377874

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

சிவசேனை என்பது தமிழரை பிரிக்க  இந்தியாவால் களமிறக்கப்பட்ட குழுவினர் என்பதை இலங்கையில் உள்ள சாமானியர்களே உணரத் தலப்பட்டுவிட்டனர் என்பதை மேலேயுள்ள செய்தி காட்டுகிறது. 

ஆனால் இந்த விடயத்தில் சில பல புலம்பெயர்ஸ்,....... ....... ☹️

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kapithan said:

சிவசேனை என்பது தமிழரை பிரிக்க  இந்தியாவால் களமிறக்கப்பட்ட குழுவினர்

மறவன்புலவு சச்சிதானந்தம் பொதுபல சேனையின் ஞானசாரவுடன் ஒத்துப்போகலாம் என்று முன்பு ஒருமுறை கூறியவர். தமிழரிடையே மதரீதியில் பிளவுகளை ஏற்படுத்தவே இவர் முனைகிறார். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

மறவன்புலவு சச்சிதானந்தம் பொதுபல சேனையின் ஞானசாரவுடன் ஒத்துப்போகலாம் என்று முன்பு ஒருமுறை கூறியவர். தமிழரிடையே மதரீதியில் பிளவுகளை ஏற்படுத்தவே இவர் முனைகிறார். 

நிலத்தில் உள்ளவர்கள் இதனைப் புரிந்துகொண்டமை வரவேற்கப்படவேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரஞ்சித் said:

மறவன்புலவு சச்சிதானந்தம் பொதுபல சேனையின் ஞானசாரவுடன் ஒத்துப்போகலாம் என்று முன்பு ஒருமுறை கூறியவர். தமிழரிடையே மதரீதியில் பிளவுகளை ஏற்படுத்தவே இவர் முனைகிறார். 

சச்சிமா மட்டும் அல்ல…

இந்துக்கள் பக்கமும், கிறிஸ்தவர்கள் பக்கமும் பல புஜ்ஜிமாக்களும் இதே அஜெண்டாவுடன் இறக்கப்பட்டுள்ளனர்.

சிலர் இந்து மத காவலர்கள் என வேடமிடுவர்.

சிலர் கிறிஸ்தவ காவலர்கள் என வேடம் இடுவர்.

இன்னும் சிலர் தாம் இந்தியாவின் எதிரிகள் - இந்தியாவின் சதியை அம்பலப்படுத்துகிறோம் என வேடமிடுவர்.

ஆனால் மூன்றுதரப்பும் வேலை செய்வது இந்தியாவுக்கே.

ஊரிலும், புலம்பெயர் நாட்டிலும், குறிப்பாக யாழ் களத்தில் இவர்கள் யார் - எப்படி பட்ட உட்டாலக்கடி வேலைக்காரார் என்பதை மக்கள் தெரிந்தே வைத்துள்ளார்கள்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ப்பா,....

யாழில் புலநாய்வுத்துறைப் புளிகளின் தொல்லை தாள முடியவில்லை. 

மறவன் புலவுக்கே போட்டியா? 

😁

 

  • கருத்துக்கள உறவுகள்+

வெற்றிகரமாக இலக்கைப் பிடித்த மகிழ்வில் இரு வீராப்புகள்

 மறந்தபுலவு மற்றும் கஞ்சாவீரன்😏

 

 

 

Image

52 minutes ago, goshan_che said:

இன்னும் சிலர் தாம் இந்தியாவின் எதிரிகள் - இந்தியாவின் சதியை அம்பலப்படுத்துகிறோம் என வேடமிடுவர்.

குறிப்பாக யாழ் களத்தில் இவர்கள் யார் - எப்படி பட்ட உட்டாலக்கடி வேலைக்காரார் என்பதை மக்கள் தெரிந்தே வைத்துள்ளார்கள்.

🤣🤣🥲

எமது மக்களுக்கு மறந்தி அதிகம். அவ்வப்போது ஞாபகப்படுத்த வேண்டும் என்பது என்னுடைய கருத்து. 

அடிக்கடி அன்னவர்ர மனச புண்படுத்திட்டே இருக்கிங்க 😏😂

  • கருத்துக்கள உறவுகள்

பல்லிழந்த (சச்சி) சிங்கத்தின் நரைத்த பிடரி மயிர் சிலிர்த்தவுடன் சருகு புலிகளுக்கும்  வீராப்பு வந்துவிட்டது. 

🤣

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நன்னிச் சோழன் said:

அடிக்கடி அன்னவர்ர மனச புண்படுத்திட்டே இருக்கிங்க

சச்சியும், புஜ்ஜியும் ஒண்ணு (🇮🇳)

இதை அறியாதோர் வாயில் பஜ்ஜி😁

  • கருத்துக்கள உறவுகள்

பல்விழுந்த மாமா சிங்கத்திற்கு கோபம் வந்திட்டுது,.......... 

🤣

  • கருத்துக்கள உறவுகள்

வெடுக்குநாறியை மறவன்புலவு  சச்சிதானந்தம் காப்பாற்றினால் ???

யார் குற்றியும் அரிசியானால் சரி.

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, விசுகு said:

வெடுக்குநாறியை மறவன்புலவு  சச்சிதானந்தம் காப்பாற்றினால் ???

யார் குற்றியும் அரிசியானால் சரி.

மக்களிடையே மத ரீதியான பிளவுகளை ஏற்படுத்தி மக்களின் மகிழ்ச்சியான வாழ்வை சிதைத்த விட்டு  வெடுக்குநாறி  மலையைக் காப்பாற்றி அதை வைச்சு என்ன  பண்ணுறது? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, island said:

மக்களிடையே மத ரீதியான பிளவுகளை ஏற்படுத்தி மக்களின் மகிழ்ச்சியான வாழ்வை சிதைத்த விட்டு  வெடுக்குநாறி  மலையைக் காப்பாற்றி அதை வைச்சு என்ன  பண்ணுறது? 

என் இனம் வாழவேண்டும் என்றால் எது எந்த அநீதி/பிளவுகள் நடந்தாலும் பரவாயில்லை. 

இதுதான் இன்றைய உலக நடப்பு.  👈🏽

எதற்கெடுத்தாலும் நீதி நேர்மையை பார்த்து இருந்ததையும்  பறிகுடுத்ததுதான் மிச்சம். இனியாவது சிந்திப்பீர்களாக.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

வெடுக்குநாறியை மறவன்புலவு  சச்சிதானந்தம் காப்பாற்றினால் ???

யார் குற்றியும் அரிசியானால் சரி.

செய்தியை வடிவா படியுங்க அண்ணாச்சி .

12 hours ago, தமிழ் சிறி said:

வெட்டுக்குநாறியில் சிவராத்திரி தினத்தன்று பொலிஸார் அடாவடியில் ஈடுபடும் போது , நீங்கள் எங்கே சென்றீர்கள் ? ஆலய பூசாரி உள்ளிட்ட 08 பேரை கைது செய்து சிறையில் அடைத்த போது எங்கே போனீர்கள் ? கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்குமாறு நெடுங்கேணி மற்றும் வவுனியாவில் நடத்தப்பட்ட போராட்டத்தின் போது எங்கே போனீர்கள் ? என கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கேள்வி கேட்ட போது , அதற்கு பதில் அளிக்காது கிறிஸ்தவர்களுக்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து கூறி வந்தனர்.

அவர்கள் அரிசி குற்ற போகவில்லை குழப்ப போனவர்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, குமாரசாமி said:

என் இனம் வாழவேண்டும் என்றால் எது எந்த அநீதி/பிளவுகள் நடந்தாலும் பரவாயில்லை. 

இதுதான் இன்றைய உலக நடப்பு.  👈🏽

எதற்கெடுத்தாலும் நீதி நேர்மையை பார்த்து இருந்ததையும்  பறிகுடுத்ததுதான் மிச்சம். இனியாவது சிந்திப்பீர்களாக.

எமது இனத்துக்குள் மத பிளவுகள் நடந்து  நமக்குள் நாம் அடிபட்டால எப்படி எமது இனம் வாழ முடியும்?   

கருத்தைப்பார்காமல்  ஏதோ என்னிலை இருக்கிற கடுப்பிலை  எழுதீற்றீங்க போல.  இண்டைக்கு இன்றும் ரெண்டு பெக்கை எடுத்திட்டு  படுத்திட்டு  நாளைக்கு கருத்தை  வாசிச்சுப் பாருங்க குமாரசாமி. 😂

  • கருத்துக்கள உறவுகள்

32-5-600x450.jpg

வெறி கூடி ஒன்று மட்டையாகி விட்டது அதான்யா நம்மதமிழ்  இனவாத  பிக்குவுக்கு கோவணத்தை அவுத்து கொடுத்த மகராசன் .

குறட்டை எத்தனை டெசிபலில் வந்தது என்பதை வைத்தே முடிவு சொல்லலாம் .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
36 minutes ago, island said:

எமது இனத்துக்குள் மத பிளவுகள் நடந்து  நமக்குள் நாம் அடிபட்டால எப்படி எமது இனம் வாழ முடியும்?   

இன்றிருக்கும் இன மத ஒற்றுமைகள் ஏதாவது முன்னேற்றங்களை தந்துள்ளனவா?

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

இன்றிருக்கும் இன மத ஒற்றுமைகள் ஏதாவது முன்னேற்றங்களை தந்துள்ளனவா?

அதுக்கு பதில் வராது 😃

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

வெறி கூடி ஒன்று மட்டையாகி விட்டது அதான்யா நம்மதமிழ்  இனவாத  பிக்குவுக்கு கோவணத்தை அவுத்து கொடுத்த மகராசன் .

"படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில்." இவர்கள் எல்லாம் மதத்தை வைத்து வயிறு வளர்ப்பவர்கள், அங்கே, புத்தரை வைத்து தமிழர் காணிகளை பிடிக்கிறார்கள். இங்கே, சிவனை வைத்து புத்தருக்கு பாதை அமைக்க  சும்மா கிறிஸ்தவர்களை வம்புக்கு இழுத்து புத்தரை பாதுகாக்கிறார்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

இன்றிருக்கும் இன மத ஒற்றுமைகள் ஏதாவது முன்னேற்றங்களை தந்துள்ளனவா?

தமிழரது உரிமைப் போராட்டத்தில் மதங்களை கடந்து மக்கள் இணைந்து  போராடியதும் மதங்களை கடந்து பல போராளிகள் இணைந்ததும் உயிர் நீர்த்ததும்  முன்னேற்றங்கள் அற்ற வீண் வேலை என்று நீங்கள் நினைக்கின்றீர்கள் போல. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, island said:

தமிழரது உரிமைப் போராட்டத்தில் மதங்களை கடந்து மக்கள் இணைந்து  போராடியதும் மதங்களை கடந்து பல போராளிகள் இணைந்ததும் உயிர் நீர்த்ததும்  முன்னேற்றங்கள் அற்ற வீண் வேலை என்று நீங்கள் நினைக்கின்றீர்கள் போல. 

நீங்கள் சொல்வது உண்மைதான்.
அது அந்த இயக்கம் இருந்த வரைக்கும் தான்.... அதற்கு முன்னரும் பின்னரும் நடந்த/நடக்கும் ஜில்மா வேலைகளை தாங்களும் அறிவீர்கள் என நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, island said:

மக்களிடையே மத ரீதியான பிளவுகளை ஏற்படுத்தி மக்களின் மகிழ்ச்சியான வாழ்வை சிதைத்த விட்டு  வெடுக்குநாறி  மலையைக் காப்பாற்றி அதை வைச்சு என்ன  பண்ணுறது? 

இல்லை 

இவரின் தலைமைப்பீடம் மோடி என்கிறார்கள். பார்க்க ஆவல். 

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, குமாரசாமி said:

நீங்கள் சொல்வது உண்மைதான்.
அது அந்த இயக்கம் இருந்த வரைக்கும் தான்.... அதற்கு முன்னரும் பின்னரும் நடந்த/நடக்கும் ஜில்மா வேலைகளை தாங்களும் அறிவீர்கள் என நினைக்கின்றேன்.

நான் கூறியது மக்களை பற்றியும் மத வேறுபாறு இன்றி போராடிய இளைஞர்களை பற்றியும் மட்டுமே. தனிப்பட எந்த இயக்கங்களை பற்றியும் அல்ல. 

5 minutes ago, விசுகு said:

இல்லை 

இவரின் தலைமைப்பீடம் மோடி என்கிறார்கள். பார்க்க ஆவல். 

மோடி அல்ல. ஆர். எஸ்.எஸ் என்பது எனது அவதானிப்பு. 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, island said:

 

மோடி அல்ல. ஆர். எஸ்.எஸ் என்பது எனது அவதானிப்பு. 

இரண்டும் ஒன்று தானே?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

இரண்டும் ஒன்று தானே?

இல்லை. 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.