Jump to content

தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா? 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அரசியல் கட்சியின்/ இயக்கத்தின்  கடந்த கால  நடவடிக்கைகளையோ அல்லது கட்சிகளின்/ இயக்கங்களின்  தலைவர்களையோ விமர்சிப்பது என்பது அவர்கள்ளை ஒட்டு மொத்தமாக நிராகரிப்பதாகாது. 

அரசியல் விமர்சனம் என்பது அரசியல் பிரமுகர்கள் அல்லது நிறுவனங்களின் நடவடிக்கைகள், கொள்கைகள் அல்லது நம்பிக்கைகளை பகுப்பாய்வு செய்து மதிப்பீடு செய்வதை உள்ளடக்கியது.

ஒரு  அரசியல் தலைவரை அல்லது கட்சியை/ இயக்ததை  ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதையோ  அல்லது  அந்த தலைவரை/ அக்கட்சியை/ இயக்கத்தை  விமர்சனத்துக்கு  அப்பாற்பட்டவர்களாக புனிதப்படுத்துவதுவதோ  நேர்மையான அரசியல் கருத்தாடலுக்கு பங்கம் விளைவிக்கும் என்பதுடன் ஆரோக்கியமான அரசியல் கருத்தாடலாக அமையாது. 

  • Confused 1
Link to comment
Share on other sites

  • Replies 71
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ரஞ்சித்

தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா?  நேற்று நண்பர் ஒருவரின் வீட்டிற்கு பிறந்தநாள் ஒன்றிற்காகச் சென்றிருந்தேன். சுமார் 8 - 9 ஆண்களும், அதேயளவு பெண்கள

ரஞ்சித்

அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்கிய அரசியல்வாதிகளால் தமிழரின் நலனும், தேசமும் எவ்வாறு பாதுகாக்கப்பட்டிருக்கின்றன என்பதை ஒருமுறை நீங்கள் இங்கு பதிய முடியுமா? ஏன் கேட்கிறேன் என்றால், எந்த அரசு எமக்கான தீர்வ

Kapithan

தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா? இப்படி ஒரு கேள்வி எழுவதே பிழை என்பது என் எண்ணம்.  நாவற்குழி குடியேற்றமும், கொழும்பில் தேவை நிமித்தம் போய் வ

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, island said:

உங்களுக்கு தெரியுமா,  யாழ்பாண பல்கலைக்கழகம் அன்றைய தமிழ் தேசிய வாதிகளான  தமிழரசு கட்சியின்,  மிக கடுமையான எதிர்ப்பின் மத்தியிலேயே திறந்து  வைக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தை திறக்க விடபாட்டோம் என்று அவர்கள் அடம் பிடித்தார்கள். யாழ்பாணம் முழுவதும் கறுப்பு கொடி ஆர்பாட்டங்கள் நடந்தன.    கூறப்பட்ட காரணம்,  இராமநாதன் என்ற தமிழினத்தின் மாபெரும் தலைவர் பெயரில் உள்ள இராமநாதன் கல்லூரியை,   அதன் பெருமைகளை அழிக்கவே  அதை அரச பல்கலைக்கழகமாக சிங்கள அரசு மாற்றுகிறது என்பதாகும்.  

அரசின் மிக சிறிய கிராமிய மட்டதிலான  அபிவிருத்தி திட்டங்கள் கூட  தமிழரசு கட்சியால் கடுமையாக எதிர்க்கப்பட்டு  அவற்றிற்கு ஒத்துழைக்க வேண்டாம் என அன்று மக்கள் மத்தியில் கடுமையான  பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. எதிர் காலத்தில் தாம் உருவாக்க நினைக்கும் தமிழீழ புரட்சிக்கு அது இடையூறு விளைவிக்கும் என தமிழ் தேசியவாதிகள் அன்று கருதினர்.  

அதன் தொடர்சசியாக எந்த தொழிற்துறை யாழில் உருவாக்கப்பட்டாலும் அதை எதிர்க்க காரணங்களை தேடித் தேடி  கண்டுபிடித்து அதை எதிர்கக ஒரு கூட்டம் எப்போதும் இருக்கின்றது.  அப்பாவி மக்களை தூண்டி அவற்றிற்கெதிராக போராட்டம் நடத்த அந்த கும்பல் முயற்சி செய்துகொண்டே இருக்கும். தற்போதைய போலி அறிவியல் வட்சப், யூரிப் காணோளிகள் அதற்கு பலம் சேர்ககின்றன.  

சுற்றுலாதுறையை வளர்கக முற்பட்டால் பல்வேறு நாட்டவர்கள் இங்கு  வருவதால் யாழ்பாண கலாச்சாம் கெடுகிறது என்று ஒரு கூட்டம் வரும்.  

ஒரு காலத்தில் “யாழ்பாண வெங்காயங்கள்” இலங்கை முழுவதும் பிரபல்யமாக அதிக  கேள்வி உள்ளதாக இருந்தது. நிரம்பலை யாழ்பாண விவசாயிகள் செய்து தமது பொருளாதாரத்தை பெருக்க  ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கா தனது பொருளாதார கோட்பாடுகள் மூலம் உதவி செய்தார். 

 இன்றைய உலகமயமாக்கல் பொருளாதார மாற்றங்களினால் அந்த நிலை இன்று இல்லை என்றாலும் ஏனைய தொழிற்துறைகளை முற்றாக நிராகரித்து   யாழ்பாணத்தில் வெங்காயங்களை உற்பத்தி செய்து சந்தைப்டுத்தி மீண்டும் யாழ்பாண வெங்காயங்களை இலங்கை முழுவதும் பிரபல்யப்படுத்தலாம். 

இலங்கையின் மற்றைய பிரதேசங்கள் பல்வேறு தொழிற் துறைகளால் வளர்சியடைய அவர்களுக்கு தேவையான வெங்காயங்களை நாம் சப்ளை செய்யலாம். 

நேரம் எடுத்து கடந்த கால அரசியல் செயல்களை தெரியபடுத்தியதற்கு நன்றி.
தமிழர்கள் பிரதேசங்களை அபிவிருத்தியடையாமல் வைத்திருந்தால் தான் தமிழர்கள் தங்களின் கீழ் இருப்பார்கள் என்று தமிழ் அரசியல்வாதிகள் நினைக்கின்றார்கள் போலும்
யாழ்பாண பல்கலைக்கழகம் திறக்கவும் எதிர்ப்பு என்பது விரக்தியை தான் ஏற்படுத்துகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, விளங்க நினைப்பவன் said:

நேரம் எடுத்து கடந்த கால அரசியல் செயல்களை தெரியபடுத்தியதற்கு நன்றி.
தமிழர்கள் பிரதேசங்களை அபிவிருத்தியடையாமல் வைத்திருந்தால் தான் தமிழர்கள் தங்களின் கீழ் இருப்பார்கள் என்று தமிழ் அரசியல்வாதிகள் நினைக்கின்றார்கள் போலும்
யாழ்பாண பல்கலைக்கழகம் திறக்கவும் எதிர்ப்பு என்பது விரக்தியை தான் ஏற்படுத்துகின்றது.

உண்மை. இந்த பல்கலைக்கழகத்தை திறந்து வைக்க வந்த பிரதமரை யாழ் பலாலியில் யாழ்மக்கள் பெரும் திரளாக வந்து வரவேற்றதை இன்றும் காணொளிகளில் பார்கலாம்.

  தமிழரசுகட்சி தனது குறுகிய அரசியலுக்காக எதிர்த்ததை மக்கள எதிர்த்தார்கள் என்று புரட்டுகளை கூற இன்று கூற  வரலாற்றை திரித்து எழுதுவோர்  முன்வந் துள்ளார்கள்.  இப்போது வவுனியா பல்கலைக்கழகம் யாழ் வளாகமாக இருந்ததை மாற்றி   தனி பலகலைக்கழகமாக மாற்றியதையும் தமிழ் தேசியவாதிகள் எதிர்பபு  தெரிவித்தனர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இனக் குழுமத்திற்கு அரசியக் கட்சியினதோ அல்லது அரசியல்த் தலைமையினதோ தேவையென்ன? அரசியத் தலைமையின்றி அம்மக்களின் அரசியல் அபிலாஷைகளை முன்னெடுக்க முடியாதா?

இதை ஏன் கேட்கிறேன் என்றால், தமிழரசுக்கட்சி இராமனாதனின் கல்லூரியைப் பாதுகாக்கவே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை சிறிமா கட்டுவதை எதிர்த்தார்கள் என்று பொய்யான தகவலை இங்கு பரப்புவதால்.

சுதந்திரத்தின் உடனடிப் பின்னரான காலத்திலிருந்தே தமிழர்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுத்தான் வருகிறார்கள். யாழ்ப் பல்கலைக்கழகம் 1974 இல் கட்டப்பட்ட ஆரம்பித்தபோது சுமார் 26 வருடகால இனரீதியிலான அடக்குமுறையினைத் தமிழர்கள் எதிர்கொண்டிருந்தார்கள். ஆகவே, தமது நலன்களுக்கெதிராக சிங்கள இனவாத அரசு செய்யும் ஒரு திட்டமிட்ட சூழ்ச்சியை தமிழர்கள் எதிர்ப்பதற்கு தமிழரசுக் கட்சியின் தூண்டுதல் தேவையானதா? தமிழரசுக் கட்சி தமிழர்களைத் தூண்டியிருக்காவிட்டால் தமிழர்களுக்கு யாழ்ப் பல்கலைக்கழகத்தின் பின்னால் இருக்கும் சூழ்ச்சி தெரிந்திருக்காது என்கிறீர்களா? 

தமிழர் ஐக்கிய முன்னணியினர் ஆளும் சிறிமாவின் சுதந்திரக் கட்சியினை கைவிட்டு விட்டு எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியினருடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துவிடுவார்கள், இது தமிழர்களின் வாக்குகள் தனது கட்சிக்குக் கிடைக்காது போய்விடும் என்பதனாலேயே சிறிமா தமிழர்கள் கேட்ட பல்கலைக்கழகம் ஒன்றை கட்டித்தருகிறேன் என்று கூறினார். ஆனால், தமிழர்கள் கேட்டுக்கொண்ட திருகோணமலை பல்கலைக்கழகத்திற்குப் பதிலாக, யாழ்ப்பாணத்தில்த்தான் கட்டுவேன் என்று அவர் அடம்பிடித்தார். இதற்குப் பின்னால் ஒரு அரசியல் சூழ்ச்சி இருந்தது. வடக்குத் தமிழரையும் கிழக்குத்தமிழரையும் பிரித்தாளுவதற்காகவே, திருகோணமலையில் கட்டுவதற்குப் பதிலாக யாழ்ப்பாணத்தில் கட்டுவதற்கு அவர் திட்டமிட்டார். அத்துடன், திருகோணமலையினைச் சிங்களவர்கள் முற்றாக ஆக்கிரமிக்கும் திட்டமும் நடைபெற்றுவந்ததனால், அங்கு தமிழர் பல்கலைக்கழகம் ஒன்றினை அமைப்பதை சிறிமா விரும்பவில்லை. 

இராமநாதனின் கல்லூரியின் மாண்பு குறைந்துவிடும் என்பதற்காகவே தந்தை செல்வா தலைமையிலான தமிழரசுக் கட்சியினரே மக்களைத் தூண்டிவிட்டு இதனைத் தடுத்தார்கள் என்று கூறுபவர் அதற்கான ஆதாரத்தை இங்கே முன்வைக்கவேண்டும். வெறுமனே சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் யாழ்ப்பாணத்தில் சிறிமாவை வரவேற்ற பழைய ஒளிப்படங்களை வைத்துப் படங்காட்டுவது செல்லாது.  ஏனென்றால், இனவழிப்புச் செய்த மகிந்தவுக்கே திலகமிட்டு, ஆரத்தி எடுத்து வரவேற்ற யாழ்ப்பாணத் தமிழர்களையும் பார்த்திருக்கிறோம்.

தமிழரசுக் கட்சியினர் மீது வெறுப்பா, செல்வா மீது வெறுப்பா, அல்லது அவர்கள் தமிழர்களுக்கு வழங்கிய அரசியல்த் தலைமை மீது வெறுப்பா என்று தெரியவில்லை. இப்போது யாழ்ப்பல்கலைக் கழகம்   தமிழரசுக் கட்சியின் சுயநலத்தால் எதிர்க்கப்பட்டது என்று கூற ஆரம்பித்திருக்கிறார். இனி, செல்வா தலைமையில் தமிழரசுக் கட்சி நடத்திய பேச்சுவார்த்தைகள், வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்பன குறித்தும் விமர்சனங்கள் வரும். அவையும் தேவையற்றவை, தந்தை செல்வாவின் சுயநலத்தாலும், தமிழரசுக் கட்சியினரின் அரசியலுக்காகவும் செய்யப்பட்டவை என்று கூறினாலும் ஆச்சரியப்படுதற்கில்லை.

இதன் முடிவு இப்படித்தான் அமையும். தமிழர்களுக்கென்று போராடுவதற்கான தேவை இருக்கவில்லை. தமிழரசுக் கட்சியோ, அல்லது வேறு அமைப்புக்களோ தமது நலன்களுக்காகவே தமிழர்களை உசுப்பேற்றிவிட்டு போராட அனுப்பினார்கள். ஏனென்றால், தமிழர்களுக்கென்று, அவர்கள் தாமாகவே உணரத்தக்க பிரச்சினைகள் என்று எதுவுமே சிங்களவர்களால் அவர்கள் மீது திணிக்கப்படவில்லை. சிறிமாவின் சுதந்திரக் கட்சியாகட்டும், ஜெயாரின் ஐக்கிய தேசியக் கட்சியாகட்டும் தமிழர்களுக்கென்று பல நல்ல திட்டங்களை அவ்வபோது கொடுத்துக்கொண்டே வந்திருக்கின்றனர். தமிழர்களுக்கு அதனை கேட்டு வாங்கத் தேவையில்லை. இவ்வளவு காலமும் காலத்தை வீணடித்திருக்கிறார்கள். இனிமேலாவது சிங்களவர்களுடன் இணைந்து, எம்மை முன்னேற்றி, இலங்கையர்களாக எம்மை இன‌ங்கண்டு, தனிமனிதர்களாக தக்கவைத்துக்கொள்வோம். இப்படி அறிவுரை கூறும் பரமாத்மாவிற்கு, ஒரு சீடரும் கிடைத்திருக்கிறார். நடக்கட்டும்.

இறுதியாக, இராமநாதன் கல்லூரிக்குப் போட்டியாக யாழ் பல்கலைக்கழகம் கட்டப்படுவதை எதிர்த்தே தமிழரசுக் கட்சியும், செல்வநாயகமும் தமிழரைத் தூண்டிவிட்டார்கள் என்பதற்கான ஆதாரத்தினை மறக்காமல் இணைத்துவிடவும். புதிதாக நீங்கள் கூறும் வரலாற்றையும் பார்த்துவிடலாம்.   

3 hours ago, விளங்க நினைப்பவன் said:

நேரம் எடுத்து கடந்த கால அரசியல் செயல்களை தெரியபடுத்தியதற்கு நன்றி.
தமிழர்கள் பிரதேசங்களை அபிவிருத்தியடையாமல் வைத்திருந்தால் தான் தமிழர்கள் தங்களின் கீழ் இருப்பார்கள் என்று தமிழ் அரசியல்வாதிகள் நினைக்கின்றார்கள் போலும்
யாழ்பாண பல்கலைக்கழகம் திறக்கவும் எதிர்ப்பு என்பது விரக்தியை தான் ஏற்படுத்துகின்றது.

வரலாற்றைத் தவறாகத் திரிபுபடுத்தும் ஒருவரின் பின்னால் ஓடுகிறீர்கள். இவரது சூட்சுமம் உங்களுக்குத் தெரியவில்லையா அல்லது அவர் கூறுவதுதான் உங்களது கருத்துமா? என்னவோ செய்துவிட்டுப் போங்கள். எல்லாரையும் திருத்த முடியும் என்றும் நான் நினைக்கவில்லை. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ரஞ்சித் said:

இறுதியாக, இராமநாதன் கல்லூரிக்குப் போட்டியாக யாழ் பல்கலைக்கழகம் கட்டப்படுவதை எதிர்த்தே தமிழரசுக் கட்சியும், செல்வநாயகமும் தமிழரைத் தூண்டிவிட்டார்கள் என்பதற்கான ஆதாரத்தினை மறக்காமல் இணைத்துவிடவும். புதிதாக நீங்கள் கூறும் வரலாற்றையும் பார்த்துவிடலாம்

இணையத்தேடுதலில் பின்வரும் இணைப்புகள் கிடைத்தன.  காழ்புணர்வின் காரணமாக இராமநாதன் கல்லூரியின் சொத்துகளை பறிமுதல் செய்து விட்டார்கள் என்று அதையும்  ஒரு காரணமாக தமிழரசு கட்சி பிரச்சாரம் செய்தது நடைபெற்ற விடயம் தான்.  

கிடைத்த இணைப்புகளில் ஒன்று  யாழிணையத்தில் கிருபன் என்ற உறவால் முன்னர் இணைக்கப்பட்ட திரி. 

https://eelanadu.lk/யாழ்ப்பாணப்-பல்கலைக்கழக/

 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/யாழ்-பல்கலைக்கழக-உருவாக்கமும்-எதிர்ப்பும்/91-293330

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி. இதுகுறித்து நன்கு அலசப்பட்டே இருக்கிறது.

ஒவ்வொருவரும் எந்த மூலையிலிருந்து இதனை எழுதுகிறார்கள் என்பதைப்பொறுத்தே விமர்சனம் அமைகிறது. 

என்னைப்பொறுத்தவரை இவை தமிழரசுக்கட்சியை விமர்சிக்கவும், தமிழ்த் தேசியத்தை இழிவுபடுத்தவும் எழுதப்பட்டவை என்றே நினைக்கிறேன். இந்த விமர்சனங்களில் ஒரு சிறிய பகுதியேனும் ஆளும் சிங்கள இடதுசாரி இனவாதத்தின் மேல் வைக்கப்படவில்லை என்பது வியப்புத்தான். அதுமட்டுமல்லாமல் சிங்கள இனவாதத்தின் பிதாமகர்களை நல்லவர்களாகக் காட்டும் கைங்கரியமும் இங்கு எனக்குத் தெரிகிறது. 

பரவாயில்லை, செய்யுங்கள். தமிழரசுக் கட்சியின் நம்பகத்தனமையினையும், தமிழ்த்தேசியத்தை வளர்த்துவிட்ட அதன் செயல்களையும் தொடர்ச்சியாக விமர்சியுங்கள். ஈற்றில் சிங்களப் பேரினவாதம் என்று ஒன்றில்லை, எல்லாம் இலங்கை நாட்டு மக்களே என்று நிறுவுங்கள். சுபம் !

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
On 26/4/2024 at 11:33, island said:

ஒரு அரசியல் கட்சியின்/ இயக்கத்தின்  கடந்த கால  நடவடிக்கைகளையோ அல்லது கட்சிகளின்/ இயக்கங்களின்  தலைவர்களையோ விமர்சிப்பது என்பது அவர்கள்ளை ஒட்டு மொத்தமாக நிராகரிப்பதாகாது. 

அரசியல் விமர்சனம் என்பது அரசியல் பிரமுகர்கள் அல்லது நிறுவனங்களின் நடவடிக்கைகள், கொள்கைகள் அல்லது நம்பிக்கைகளை பகுப்பாய்வு செய்து மதிப்பீடு செய்வதை உள்ளடக்கியது.

ஒரு  அரசியல் தலைவரை அல்லது கட்சியை/ இயக்ததை  ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதையோ  அல்லது  அந்த தலைவரை/ அக்கட்சியை/ இயக்கத்தை  விமர்சனத்துக்கு  அப்பாற்பட்டவர்களாக புனிதப்படுத்துவதுவதோ  நேர்மையான அரசியல் கருத்தாடலுக்கு பங்கம் விளைவிக்கும் என்பதுடன் ஆரோக்கியமான அரசியல் கருத்தாடலாக அமையாது. 

எதிர்காலத்தில் ஜே. ஆரும் அதுலத் முதலியும் நல்லவர்களாக யாழ் களத்தில் இட்டுக்கட்டப்படுவர் என்பதை அண்ணல் ஐலன்ட் அவர்கள் சூசகமாக அறிவிக்கிறார், மா மக்களே!

 

 

  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/4/2024 at 19:11, island said:

தமிழரசுகட்சி எப்போதுமே தனது உசுப்பேற்றும் அரசியலுக்காக பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டது என்பதும் தெரிந்த விடயம் தான்.  

இதைக்கூறுவதற்கு தமிழரசுக் கட்சி மீதான மிகுந்த வக்கிரமும், காழ்ப்புணர்ச்சியும் இருக்கும் ஒருவரால்த்தான் முடியும். அல்லாவிட்டால், அக்கட்சியின் அனைத்துச் செயறபாடுகளும் உசுப்பேற்றும், தீண்டிவிடும், உணர்வூட்டிவிடும் வெறும் இனவாத நடவடிக்கைகள் தான் என்று நீங்களும், நீங்கள் மேற்கோள் காட்டும் உங்களது முகாமின் உறுப்பினர்களும் எழுதப்போவதில்லை. 

On 27/4/2024 at 01:33, island said:

ஒரு  அரசியல் தலைவரை அல்லது கட்சியை/ இயக்ததை  ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதையோ


அப்படிக் கூறிவிட்டு, உங்களின் முகம் வெளிப்படையாகத் தெரியத் தொடங்கியவுடன் இப்படி எழுதுகிறீர்கள். உண்மையைக் கூறி எழுதுங்கள். ஏன் இவ்வளவு சிரமம்? நான் தமிழ்த் தேசியத்திற்கு எதிரானவன். இலங்கையின் ஒற்றையாட்சியை நேசிப்பவன். சிங்கள இடதுசாரிகள் எனும் போர்வையில் உலாவரும் பேரினவாதிகளை ஆதரிப்பவன். அதற்காக தமிழ்த் தேசியத்தை ஆதரித்தவர்களை, தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுத்தவர்களை, தமிழரின் பிரதேச நலன்கள் குறித்து செயற்படுபவர்களை என்னால் முடிந்தவரையில் விமர்சித்துச் சிறுமைப்படுத்துவேன் என்று வெளிப்படையாகவே கூறுங்கள். உங்களைப்போல இன்னுமொருவர் முன்னர் இங்கு உலாவந்தார். துல்பேன் எனும் பெயரில் விமர்சனம் எழுதிய அவரும் உங்களின் கருத்துக்களையே முன்வைத்து வந்தார். அவரும் உங்களின் முகாமிலிருந்து வருபவராக இருக்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரஞ்சித் said:

இணைப்பிற்கு நன்றி. இதுகுறித்து நன்கு அலசப்பட்டே இருக்கிறது.

ஒவ்வொருவரும் எந்த மூலையிலிருந்து இதனை எழுதுகிறார்கள் என்பதைப்பொறுத்தே விமர்சனம் அமைகிறது. 

என்னைப்பொறுத்தவரை இவை தமிழரசுக்கட்சியை விமர்சிக்கவும், தமிழ்த் தேசியத்தை இழிவுபடுத்தவும் எழுதப்பட்டவை என்றே நினைக்கிறேன். இந்த விமர்சனங்களில் ஒரு சிறிய பகுதியேனும் ஆளும் சிங்கள இடதுசாரி இனவாதத்தின் மேல் வைக்கப்படவில்லை என்பது வியப்புத்தான். அதுமட்டுமல்லாமல் சிங்கள இனவாதத்தின் பிதாமகர்களை நல்லவர்களாகக் காட்டும் கைங்கரியமும் இங்கு எனக்குத் தெரிகிறது. 

பரவாயில்லை, செய்யுங்கள். தமிழரசுக் கட்சியின் நம்பகத்தனமையினையும், தமிழ்த்தேசியத்தை வளர்த்துவிட்ட அதன் செயல்களையும் தொடர்ச்சியாக விமர்சியுங்கள். ஈற்றில் சிங்களப் பேரினவாதம் என்று ஒன்றில்லை, எல்லாம் இலங்கை நாட்டு மக்களே என்று நிறுவுங்கள். சுபம் !

ஒவ்வொருவரும் எந்த மூலையில் இருந்து எழுதுகின்றார்களோ என்ற உங்கள் கூற்று உங்களுக்கும் சேர்த்தே  பொருந்தும்.   அரசியல் கட்டுரை அல்லது விமர்சனம்  சில விடயங்களை சுட்டிக்காட்டும் போது அதை எதிர் கொள்ள முடியாமல் சிங்கள இனவாத அரசை பற்றி கூறவில்லையே. அவர்கள் மட்டும் என்ன யோக்கியர்களா என்பது போன்ற கேள்வியை கேட்பது உங்கள் வாடிக்கை.  தமிழ் அரசியல்வாதிகளின் சுயநலத்தை தனது சிங்கள அரசு பாவித்தது என்று ஒரு கட்டுரையில் கூறியதை கவனிக்க மட்டீர்களா? அவ்வாறு அவர்கள்  கூறாவிட்டாலும் அது தானே உண்மை.  

மேற்கண்ட  இணைப்புகளில் இருக்கும் உண்மைகளை  உங்களால் சகிக்கமுடியவில்லை என்பதை புரிந்து கொள்ளுகிறேன்.  ஆனால்,  தமிழரசுகட்சி தனது அரசியல் பாதையில் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண எடுத்த நடவடிக்கைகளை விட தனது பாராளுமன்ற பதவிக்கு போட்டியாக வந்த தனது அரசியல் எதிரிகளை  ஒழித்துகட்டுவதற்கே முதலிடம் கொடுத்தது என்பதை  அன்றைய வரலாற்றை தெரிந்த அனைவரும் அறிவர்.  நேர்மையாக இவை பற்றி எழுதிய அன்றைய ஈழநாடு பத்திரிகை மீது அவதூறை அள்ளி வீசி,  எச்சரிக்கும் தொனியில்,  “ஈழநாடே வாயை மூடு”  என்று,   அன்று சுதந்திரன்  பத்திரிகை எழுதியது. அதன் பின்னர் எதிர்தது விமர்சனம் செய்தவர்களை வாயை மூட வைத்து இன்றைய மீள முடியாத  அவலநிலைக்கு தமிழ் மக்களை  இட்டு சென்றது இவர்களின் அரசியல் தொடர்ச்சியே.  

நான் தமிழர் அரசியல் வரலாறு பற்றி  பேசும் போது  அவற்றின் உண்மைகளை  மறைப்பதற்காக என் மீது அவதூறு பொழிவதிலே நீங்கள் கண்ணும் கருத்துமாக இருக்கின்றீர்கள். நீ அந்த முகாம் அந்த இயக்கம் என்பது போன்ற இந்தப் பாணியை  நீங்கள்  பெற்றதும் அந்த  தமிழ் அரசியல் தொடர்ச்சி தான்.  

உலக நாடுகளின் ஆதரவு இல்லாத வெறும் வார்த்தை ஜாலங்களூடான  வெற்று  அரசியல் தமிழ் மக்களை மேலும் பலவீனமாக்கவே உதவும் என்பதையும் அது பற்றி உங்களைக்கோ உங்களை போல  மாய உலகில் சஞ்சரிப்பவர்களுக்கோ  கவலை இல்லை என்பதும் தெரிந்ததே.  

நீங்கள் கூறியவாறு எவரையும் சிறுமைப்படுத்த வேண்டிய அவசியமே இல்லை. இவர்களை பற்றி உலகம் அறியும். போலி துவாரகா வரை இவர்களின் சுயநல அரசியல் நீண்டே  செல்கிறது. போலி துவாரகாவைக் கொண்டுவந்தவர்கள் எல்லோருமே தமிழ் தேசிய தூண்கள் என்ற பிம்பத்துடன் முன்னர் வலம் வந்து இன்று முகமூடி கிழிந்து நிற்பவர்களே.  தமிழ் தேசிய அரசியல்  உருவாக்கிய போலி பிம்பங்களை விற்று பணம் பண்ணும் அரசியலை செய்து அவர்கள் காசு பார்கிறார்கள். 

இலங்கை ஒற்றையாட்சியை  நான்  ஆதரிப்பவன் என்று என்னைக்க கூறுகின்றீர்கள்.   ஆனால்,  இன்று தேசியம் பேசும் அத்தனை பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒற்றையாட்சிக்கு விசுவாசமாக உள்ளவர்களே. இன்றைய தாயக/ புலம்பெயர் மக்களில் மிக பெரும்பான்மையினரை அரசியல் கதைக்கவே  ஆர்வமற்றவர்களாக மாற்றி,  பிச்சை வேண்டாம் நாயை பிடி என்று விலகி வாழும்  நிலையை ஏற்படுத்தியவர்களும் இவர்களே.  உங்களை போல என்னை போல ஒரு சிறு பகுதியினர் மட்டுமே இன்று  இலங்கையில் தமிழரின் எதிர்காலம் எப்படி அமையும், அமைய வேண்டும் என்பது பற்றிய விழிப்புணர்வு  அரசியல் விவாதங்களிலாவது ஈடுபட்டுள்ளோம்.  மிக பெரும்பான்மை தாயக/ புலம் பெயர் தமிழ் மக்கள் அரசியலில் இருந்து தம்மை விடுவித்து  இலங்கை ஒற்றையாட்சியை ஏற்று அதன் கீழ் வாழ்வதை ஏற்று கொண்டவர்களாகவே உள்ளனர் என்ற ஜதார்தத நிலையை உங்களால் விளங்கி கொள்ள முற்படமாட்டீர்கள். ஆனல் இந்த உண்மையை கூறிய என் மீது வசைமாரி பொரிவீர்கள் என்பது அறிந்ததே. அது பற்றி கவலை இல்லை.  

இந்த எனது பதிவுக்கு  பதிலாகவும் என்மீது  வசை மாரி தான் வரும் என்பதும் நான் அறிந்ததே. 

  • Downvote 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, island said:

மிக பெரும்பான்மை தாயக/ புலம் பெயர் தமிழ் மக்கள் அரசியலில் இருந்து தம்மை விடுவித்து  இலங்கை ஒற்றையாட்சியை ஏற்று அதன் கீழ் வாழ்வதை ஏற்று கொண்டவர்களாகவே உள்ளனர் என்ற ஜதார்தத நிலையை உங்களால் விளங்கி கொள்ள முற்படமாட்டீர்கள். 

மிகத் தவறான கருத்து. மிகப் பெரும் வீரம் தியாகம் மற்றும் அர்ப்பணிப்பு செய்து போராடிய ஓர் இனத்தை இவ்வாறு சிறுமைப் படுத்திவிடவேண்டாம். எந்த இனத்திலும் செயற்பாட்டாளர்கள் மற்றும் நாம் நாடு என்று சிந்திப்பவர்கள் மிகச்சிலராகவும் மதில் மேல் பூனைகளும் நான் என்று சுயநலமாக சிந்திப்பவர்கள் மிக மிக அதிகமாக இருப்பதும் சாதாரண நடைமுறை மற்றும் வரலாறு. 

தமிழர்களின் தலைவர்களை சாட இவ்வாறு அருவரி பாடங்களை தூக்கி வரவேண்டாம். அதற்காக தான் சிவப்பு.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, island said:

ஒவ்வொருவரும் எந்த மூலையில் இருந்து எழுதுகின்றார்களோ என்ற உங்கள் கூற்று உங்களுக்கும் சேர்த்தே  பொருந்தும்.   அரசியல் கட்டுரை அல்லது விமர்சனம்  சில விடயங்களை சுட்டிக்காட்டும் போது அதை எதிர் கொள்ள முடியாமல் சிங்கள இனவாத அரசை பற்றி கூறவில்லையே. அவர்கள் மட்டும் என்ன யோக்கியர்களா என்பது போன்ற கேள்வியை கேட்பது உங்கள் வாடிக்கை.  தமிழ் அரசியல்வாதிகளின் சுயநலத்தை தனது சிங்கள அரசு பாவித்தது என்று ஒரு கட்டுரையில் கூறியதை கவனிக்க மட்டீர்களா?

நான் எழுதும் மூலை எதுவென்று நீங்கள் தேடவேண்டாம். நானே சொல்லிவிடுகிறேன். இலங்கையில் தமிழர்களுக்கென்று தனியான மொழியும், கலாசாரமும், தேசமும் இருக்கின்றது என்று முற்றிலுமாக நம்பும் மூலையது. சுதந்திரத்திலிருந்து தனிச்சிங்களச் சட்டம், பல்கலைக்கழக அனுமதி, பிரஜாவுரிமை, குடியேற்றங்கள், காலத்திற்குக் காலம் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட இன வன்முறைகள் என்கிற பெயரிலான‌ இனக்கொலைகள், 1972,1977,1981,1983 - ‍ 2009 என்று இன்றுவரை நிகழ்த்தப்படும், இலங்கையின் சிங்கள பெளத்த இனவாதிகளால் ஒற்றையாட்சியின் கீழ் நடத்தப்படும் இனவழிப்பில் பாதிக்கப்பட்ட பல லட்சக்கணக்கான தமிழர்கள் இருக்கும் மூலையில் நான் இருக்கிறேன். முடிந்தால் நீங்கள் இருக்கும் மூலையைச் சொல்லிவிடுங்கள். 

அரசியல் விமர்சனங்களைச் சுட்டிக்காட்டும்போது நான் அதனைத் தட்டிக்கழிக்கவோ அல்லது அதனை ஏற்றுக்கொள்ள முடியாமலோ விதண்டாவாதம் செய்யவேண்டிய தேவையென்ன இருக்கிறது? இங்கு எது அரசியல் விமர்சனம்? அறையினுள் இருக்கும் வெள்ளை யானை எது? தமிழரசுக் கட்சியின் தந்திரமான தலைமையா அல்லது சிங்களப் பேரினவாதப் பயங்கரவாதமா? தமிழரசுக் கட்சியை அவமதிக்கவேண்டும், அவர்களையே இன்றுள்ள தமிழ்த் தேசியம் எனும் அருவருக்கத்தக்க கொள்கைக்கான பிதாமகர்களாகக் காட்டவேண்டும் என்று பகீரதப் பிரயத்தனத்தில் எழுதிய நீங்கள், உங்கள் எழுத்துக்களின் இடையே இழையோடிப்போயிருக்கும் சிங்கள இடதுசாரிப் பேரினவாதத்தின், சிங்கள இனவாதத்தின் பிதாமகத் தம்பதிகளை உங்களையறியாமலேயே வாழ்த்துவதும், பாராட்டுவதும் உங்களின் முயற்சியில் அப்பட்டமாகத் தெரிகிறது. நீங்கள் எழுதும் எல்லா விமர்சனத்திற்கும் "சிங்களவர் திறமோ?" என்று நான் கேட்கவில்லை. நீங்கள் எழுதிய இந்த விமர்சனத்திற்குள்ளேயே சிங்களவர்களை வாழ்த்துகிறீர்கள், அதனால்த்தான் கேட்கிறேன். அடுத்தது, சிங்களவர் திறமோ என்று நான் கேட்பதன் மூலம், தமிழரசுக் கட்சியைப் பற்றி நீங்கள் எழுதும் அவதூறுகளை நான் ஏற்றுக்கொண்டேன் என்று யார் உங்களுக்குச் சொன்னது? நீங்களோ, மீனிளங்கோவோ அல்லது சண்முகமோ அல்லது ஈழநாட்டின் யாரோ இரு எழுத்தாளரோ எழுதினால் அது உணமையென்று ஆகிவிட வேண்டுமா? தமிழரசுக் கட்சிகுறித்தும்,  தமிழரின் உரிமைப் போராட்டத்தில் அதன் செயற்பாடுகள் குறித்தும் தமிழினத்திற்குள் ஒரு புரிதல் இருக்கின்றது. அந்தப் புரிதல் சிங்கள அடக்குமுறையின் கீழ் அவர்கள் பட்ட இடையறாத அழிவுகளிலிருந்து தமக்கான அரசியல்த் தலைமையாக அவர்கள் உணர்ந்து ஏற்றுக்கொண்ட தலைமை அது. அந்தத் தலைமையின் செயல் தவறானதென்றால் அன்றே அது தமிழர்களால் தூக்கியெறியப்பட்டிருக்கும். உங்கள் போன்றவர்கள் அன்று நிச்சயமாக இருந்திருப்பார்கள். சிங்கள அரசுகளின் செயற்பாடுகளை நிச்சயம் வர‌வேற்றிருப்பார்கள். ஆனால், மக்களால் ஏறெடுத்தும் பார்க்கப்பட்டிருக்க மாட்டார்கள். 
ஏதோவொரு கட்டுரையில், ஏதோவிரு இடத்தில் "சிங்கள அரசியல்த் தலைமை தனது சுயநலத்திற்காக தமிழரசுக் கட்சியைப் பாவித்தது" என்று மிகுந்த சிரமப்பட்டுக் காட்டவேண்டிய தேவையென்ன? இதன்மூலம் ஒருவிடயம் புலனாகிறதே கவனித்தீர்களா? அதாவது உங்களது தமிழரசுக் கட்சிக்கெதிரான, தமிழ்த்தேசியத்திற்கெதிரான விமர்சனங்களில் நீங்கள் தேவைகருதி விதைக்கும் ஓரிரு "சிங்களவர் மீதான விமர்சனம்" என்பது உங்களை நடுநிலையாளன் என்று காட்டுவதற்காக மட்டும்தான் என்பது. நீங்கள் அதைக்கூடச் செய்திருக்கத் தேவையில்லை. விமர்சிப்பது தமிழரசுக்கட்சியையும், அது ஆரம்பித்த தமிழ்த் தேசியத்தையும் தானென்னும் போது, சிங்களவரை விமர்சிக்கவேண்டிய தேவை ஏன் உங்களுக்கு? அவர்களை விடுங்கள், நேராகவே எம்மை விமர்சியுங்கள். ஏனென்றால், உங்களின் சிங்கள விமர்சனங்களை நாம் ஏற்றுக்கொள்ளவுமில்லை, அது உங்களின் நோக்கமும் அல்ல என்பதும் எமக்கு நன்கு தெரியும். 

  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, island said:

அன்று சுதந்திரன்  பத்திரிகை எழுதியது. அதன் பின்னர் எதிர்தது விமர்சனம் செய்தவர்களை வாயை மூட வைத்து இன்றைய மீள முடியாத  அவலநிலைக்கு தமிழ் மக்களை  இட்டு சென்றது இவர்களின் அரசியல் தொடர்ச்சியே.  

உங்களைப்போன்றவர்களும், ஈழநாடும் முன்வைத்த கருத்துக்களும் விமர்சனங்களும் கேட்கப்பட்டிருந்தால் இப்போதிருக்கும் நிலையினை விடவும் எவ்வாறு இருந்திருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? சிங்களப் பேரினவாதம் மனம் மாறி தமிழர்களுக்கான உரிமைகளையும், அபிலாஷைகளையும் தந்திருக்கும் என்கிறீர்களா? தமிழரசுக் கட்சி செய்த அரசியல் தவறென்றால், சரியான அரசியல் எதுவென்று நிச்சயம் உங்களுக்குத் தெரிந்திருக்கும், அதை இங்கே பகிரலாமே? உரிமைகேட்டதும், மொழிக்கான அந்தஸ்த்துக் கேட்டதும், எமது நிலங்களை ஆக்கிரமிக்காதீர்கள் என்று கோரியதும், எம்மீதான அரச ஆதரவிலான தாக்குதலை நடத்தாதீர்கள் என்று கேட்டதும் தவறான அரசியல் என்றால், நீங்களும், ஈழநாடும் முன்வைத்த அரசியல் என்ன? 
தமிழர்களின் முன்னால் இரண்டு அரசியல் முறைகள் இருக்கிறது. ஒன்று, இனம் சார்ந்து, இனத்தின் நலன் சார்ந்து, இனத்தின் இருப்புச் சார்ந்து செய்வது. இரண்டாவது, இனத்தின் அடையாளம் தொலைத்து, ஆக்கிரமிப்பை அமைதியாக ஏற்றுக்கொண்டு, சிங்களப் பெருந்தேசியத்திற்குள் உள்வாங்கப்பட்டு, அடையாளத் துறப்பின் மூலம் சொந்த நலனை மட்டும் காத்துக்கொள்வது. இதில் முதலாவதைத்தான் தமிழரசுக் கட்சியும், அதனால் ஆரம்பிக்கப்பட்டதாக நீங்கள் சாடும் தமிழ்த்தேசியத்தை ஆதரிக்கும் மக்களும் செய்ததும், இன்றுவரை செய்துவருவதும்.  நீங்கள் சார்வது எந்த அரசியல் என்பது ஓரளவிற்கு உங்களின் கருத்துக்களில் இருந்தே தெளிவாகிவருகிறது. அப்படியில்லையென்றால், தமிழருக்கு இதுவரை தெரியாத அந்த மூன்றாவது அரசியல்ப் பாதை குறித்து நீங்களே இங்கு சொல்லிவிடுங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, island said:

நான் தமிழர் அரசியல் வரலாறு பற்றி  பேசும் போது  அவற்றின் உண்மைகளை  மறைப்பதற்காக என் மீது அவதூறு பொழிவதிலே நீங்கள் கண்ணும் கருத்துமாக இருக்கின்றீர்கள். நீ அந்த முகாம் அந்த இயக்கம் என்பது போன்ற இந்தப் பாணியை  நீங்கள்  பெற்றதும் அந்த  தமிழ் அரசியல் தொடர்ச்சி தான்.  

நீங்கள் பேசுவது அரசியல் வரலாறு இல்லை. முற்றான அரசியல் அவதூறு. பல தசாப்த்தங்களாக தமிழரின் நலன்களுக்காக அயராது போராடிய ஒரு அரசியல்த் தலைமையினையும், அரசியல் கட்சியையும் அவதூறு செய்யும் செயல். அதைக்கூட, சிங்களப் பேரினவாதத்தின் கொடுங்கரங்களை ஆதரிப்பதன் மூலம் செய்ய விழைகிறீர்கள். உதாரணத்திற்கு, யாழ் பல்கலைக்கழகத்தை தமிழரின் நலனுக்காகவே சிறிமா கட்டினார் என்பதும், தமிழரின் நலன்களுக்காக சுண்ணக்கற்பாறைகளை அகழ்வதை தமிழர்களின் அரசியல்வாதிகள் அரசியலாக்குகிறார்கள் என்று எழுதினீர்கள். தமிழரின் நலன்குறித்து உண்மையான அக்கறைக் கொண்டிருப்பவராக இருந்திருந்தால், உங்களின் விமர்சனத்தின் அடிப்படை எமது நலன்களை மீளப் பெற்றுக்கொள்வதாக இருந்திருக்க வேண்டும். ஆனால், அங்கேதான் உங்களின் அடையாளம் தெளிவாகத் தெரிகிறது. அதாவது இவ்வாறான விமர்சனங்களை முன்வைப்பதன் மூலம், தமிழர்கள் இனிமேல் எதுவும் செய்யமுடியாது, கல்வியில், தொழில்நுட்பத்தில், வேலைவாய்ப்பில் உங்களை வளர்த்துக்கொள்ள அரசுடன் இணைந்து இலங்கையர்களாக செயற்படுங்கள் என்கிற வாத‌த்தை முன்வைக்கிறீர்கள்.  
எமக்குள் இருப்பது இரு முகாம்கள். நான் ஏலவே கூறியது போல, தமிழர்களின் நலன்களைக் காக்க, அல்லது மிளப்பெற்றுக்கொள்ள முயற்சிக்கும் "தமிழ்த்தேசிய இனவாதிகளின்"முகாம். மற்றையது, அதே நலன்களை கைவிட்டு விட்டு சிங்களத்துடன் இணங்கிச்சென்று ஐக்கியமாகிவிடுபவர்களின் முகாம். எனது முகாமை நான் கூறிவிட்டேன், நீங்கள்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, island said:

உலக நாடுகளின் ஆதரவு இல்லாத வெறும் வார்த்தை ஜாலங்களூடான  வெற்று  அரசியல் தமிழ் மக்களை மேலும் பலவீனமாக்கவே உதவும் என்பதையும் அது பற்றி உங்களைக்கோ உங்களை போல  மாய உலகில் சஞ்சரிப்பவர்களுக்கோ  கவலை இல்லை என்பதும் தெரிந்ததே.  

நான் மாய உலகில் சஞ்சரிக்கின்றேனா? எப்படி? எமது நலன்களையும், இருப்பையும், தேசத்தையும், மக்களையும் காத்துக்கொள்வதென்பது மாய உலகில் சஞ்சரிப்பதாக உங்களுக்குத் தெரிவது எப்படி? இது, எல்லாச் சாதாரண, தனது இனம் குறித்த அக்கறையும், பிரக்ஞையும் இருக்கின்ற எவருக்கும் வரக்கூடிய ஒரு உணர்வுதானே? இது எப்படி மாய உலக சஞ்சாரமாகிறது உங்களுக்கு? அப்படியானால், நீங்கள் வாழும் நிஜ உலகில் இவைகுறித்துப் பேசவேண்டாம் என்கிறீர்களா? அல்லது இவை எதுவுமே தேவையற்றவை என்கிற முடிவிற்கு வந்துவிட்டீர்களா? நீங்கள் ஒருவிடயம் நோக்கிப் பயணிக்கிறீர்கள். அந்தவிடயம் என்பது உங்களைப்பொறுத்தவரை மிகவும் அவசியமானதாக இருக்கிறது. ஆகவே, அதனை அடைவதற்கு உங்களால் முடிந்த அனைத்து வழிகளிலும் முயல்கிறீர்கள். இதுவரையான உங்கள் முயற்சிகள் தகுந்த பலனைத் தரவில்லையென்பதற்காக அந்த விடயத்தை மாய உலகம் என்று விட்டுவிடுவீர்களா அல்லது தொடர்ந்து முயல்வீர்களா? உங்களுக்கு அந்தப் பிரச்சினை இருக்காது என்று நம்புகிறேன். ஏனென்றால், அந்த விடயம் அவசியமானதென்று நீங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. ஆகவேதான் முயற்சிப்பவர்களை நோக்கி வசைபாடுகிறீர்கள். 

3 hours ago, island said:

நீங்கள் கூறியவாறு எவரையும் சிறுமைப்படுத்த வேண்டிய அவசியமே இல்லை. இவர்களை பற்றி உலகம் அறியும்.

தமிழரசுக் கட்சி செய்ததெல்லாமே உணர்சியூட்டி மக்களைத் தவறாக வழிநடத்தியமைதான் என்று பந்தி பந்தியாக‌ எழுதியது அவர்கள் மீதான வாழ்த்துபா என்கிறீர்களா? தமிழரசுக் கட்சிகுறித்தும், செல்வநாயகம் குறித்தும் தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள். நீங்கள் கூறும் அந்த "உலகம் அறியும்" என்னும் "அந்த உலகத்தில்" எத்தனை பேர் இருக்கிறீர்கள்? தனிச்சிங்களச் சட்டம் பிறந்து, பல்கலைக்கழக அனுமதி மறுக்கப்பட்டு, தமிழ் இளைஞர்கள் அவதியுற்றுக்கொண்டிருந்தபோது, அந்த அரசாங்கத்தையே வாழ்த்திப்பாடிய ஒருசிலர் வாழும் உலகமாக அது இருக்க வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, island said:

போலி துவாரகா வரை இவர்களின் சுயநல அரசியல் நீண்டே  செல்கிறது. போலி துவாரகாவைக் கொண்டுவந்தவர்கள் எல்லோருமே தமிழ் தேசிய தூண்கள் என்ற பிம்பத்துடன் முன்னர் வலம் வந்து இன்று முகமூடி கிழிந்து நிற்பவர்களே.  தமிழ் தேசிய அரசியல்  உருவாக்கிய போலி பிம்பங்களை விற்று பணம் பண்ணும் அரசியலை செய்து அவர்கள் காசு பார்கிறார்கள். 

இதை யாரும் மறுக்கவில்லையே? தேசியத்தை விற்று பணம் பார்க்கும் கூட்டம் எப்போதும் போல இருந்துகொண்டு தான் இருக்கும். பல போலிகளை அவ்வப்போது காலம் எமக்குக் காட்டிக்கொண்டே வருகிறது. தமிழ் மக்களும் இவர்களைத் தாண்டி சென்றுகொண்டுதான் இருக்கிறார்கள். உண்மையான தேசியவாதிகள் யார்,  போலிகள் யாரென்பதை அவர்களால் மிக இலகுவாக உணர்ந்துகொள்ளமுடிவது போல, இனத்திற்குள் இருப்பதாகப் பாசாங்கு செய்துகொண்டு, அந்த இனத்தின் இருப்பையே அரித்துக்கொண்டு, அடக்குமுறையாளனுக்கு சாமரம் வீசும் சிலர் குறித்தும் அவர்கள் நன்கு அறிந்தே வைத்திருக்கிறார்கள். இதனாலேயே இவர்களைப்போன்றவர்களால் இனத்திற்குள் ஒட்டிவிட முடியாது தனியே பிதற்றவேண்டியிருக்கிறது. 

3 hours ago, island said:

இலங்கை ஒற்றையாட்சியை  நான்  ஆதரிப்பவன் என்று என்னைக்க கூறுகின்றீர்கள்.   ஆனால்,

ஆக, நான் அனுமானித்ததை உங்களின் இந்தக் கூற்று உறுதிப்படுத்துகிறது என்று நான் ஏற்றுக்கொள்கிறேன். 

3 hours ago, island said:

ஆனால்,  இன்று தேசியம் பேசும் அத்தனை பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒற்றையாட்சிக்கு விசுவாசமாக உள்ளவர்களே.

நானும் இதைத்தான் சொல்கிறேன். இலங்கையின் ஒற்றையாட்சி யாப்பினை ஏற்றுக்கொண்டு பாராளுமன்றக் கதிரைகளை நிரப்பும் அனைவரும் ஒற்றையாட்சியை ஏற்றுக்கொள்பவர்கள்தான். அதனால்த்தான், பகிஷ்கரிக்கவேண்டும் என்று கேட்கிறேன். 

3 hours ago, island said:

புலம்பெயர் மக்களில் மிக பெரும்பான்மையினரை அரசியல் கதைக்கவே  ஆர்வமற்றவர்களாக மாற்றி,  பிச்சை வேண்டாம் நாயை பிடி என்று விலகி வாழும்  நிலையை ஏற்படுத்தியவர்களும் இவர்களே

உண்மை. இன்றிருக்கும் தமிழரசுக் கட்சியின் நிலையினால் தமிழர்களின் அரசியல் ஆர்வம் குறைந்துவருவதை மறுக்கவில்லை. அதற்காக, தமிழரசுக் கட்சி ஆரம்பிக்கப்பட்டதையும், அதன் சரித்திரச் செயற்பாடுகளையும், தமிழ் மக்களின் நலனில் அது கொண்டிருந்த அக்கறையினையும் இன்றிருக்கும் கொழும்புசார் தமிழ் அரசியல்வாதிகளுடன் ஒப்பிடமுடியுமா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, island said:

புலம் பெயர் தமிழ் மக்கள் அரசியலில் இருந்து தம்மை விடுவித்து  இலங்கை ஒற்றையாட்சியை ஏற்று அதன் கீழ் வாழ்வதை ஏற்று கொண்டவர்களாகவே உள்ளனர் என்ற ஜதார்தத நிலை

நீங்கள் எங்கு வாழ்கிறீர்கள்? புலத்திலா? அப்படியானால், அங்கிருக்கும் மக்களின் மனோநிலையினை இவ்வளவு கீழ்த்தரமாக உங்களால் மதிப்பிட முடிந்திருக்காது. நீங்கள் பழகும் குறுகிய வட்டத்திற்குள், உங்களைப்போன்றே சரணாகதி, இணக்க அரசியல், அடையாளம் துறப்பு எனும் மனோநிலையில் சஞ்சரிக்கின்ற ஒரு சிலரின் மனவோட்டங்களை ஒட்டுமொத்த புலம்பெயர் தமிழர்களினதும் மனவோட்டமாக மடைமாற்றப்ப பார்க்கிறீர்கள். 

3 hours ago, island said:

ஆனல் இந்த உண்மையை கூறிய என் மீது வசைமாரி பொரிவீர்கள் என்பது அறிந்ததே. அது பற்றி கவலை இல்லை.  

இந்த எனது பதிவுக்கு  பதிலாகவும் என்மீது  வசை மாரி தான் வரும் என்பதும் நான் அறிந்ததே

உங்களின் மீது வசைமாறி பொழியவேண்டிய தேவை எனக்கு இல்லை. உங்களின் விமர்சனத்தை, என்பக்க நியாயங்களோடு விமர்சிக்கிறேன். அவ்வளவுதான். உங்களைப்போன்ற பலரை நான் பார்த்தாயிற்று. பலருடன் விவாதிப்பதில் பயனில்லை என்று நகர்ந்து சென்றுவிடுவேன். உங்களின் கண்ணியமான எழுதிற்காகத் தொடர்ந்து எழுதலாம் என்று எண்ணினேன். அவ்வளவுதான். 

நீங்கள் உங்களின் பார்வையில் சரியென்று நினைப்பதை எழுதுகிறீர்கள். அது மற்றையவர்களுக்கும் சரியாக இருக்க வேண்டும் என்பதில்லை. நான் எழுதுவதும் அப்படியே. எனக்குச் சரியென்று பட்டதை எழுதிவருகிறேன். நோக்கமொன்றுதான், எனது இனம் சிங்கள பெளத்த ஆக்கிரமிப்பிலிருந்து என்றோவொருநாள் விடுபடவேண்டும் என்பது. உங்கள் நோக்கமும் அதுவென்றால், மகிழ்ச்சி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

எனது இனம் சிங்கள பெளத்த ஆக்கிரமிப்பிலிருந்து என்றோவொருநாள் விடுபடவேண்டும் என்பது. உங்கள் நோக்கமும் அதுவென்றால், மகிழ்ச்சி.

எனது விருப்பமும் அதுதான். எனக்கு பல இன நண்பர்கள் இருக்கின்றார்கள். ஆனால் உந்த சிங்கள இனத்தில்தான் “ஹாய்” என்று சொல்லுவதற்குக்கூட ஒருவருமில்லை. இனியும் எவரையும் சேர்ப்பேன் என்றும் நினைக்கவில்லை.

இந்தத் திரியில் அலசப்பட்ட எல்லா கருத்துக்களையும் வாசிக்கவில்லை. எனினும் தமிழர்கள் ஒற்றையாட்சிக்குக் கீழே வாழுவதை ஏற்றுக்கொள்ளும் நிலை இன்னும் வரவில்லை.

கையாலாகாத தமிழ்த் தேசிய அரசியல் கோமாளிகளால் மக்களின் ஆதர்சனமான அரசியல் விருப்பங்கள் முன்னெடுக்கப்படவில்லை. தமிழ்த் தேசியத்தை நலிவுபெறச் செய்து இலங்கைத் தேசியத்தை ஏற்றுக்கொள்ளவைக்க பல செயற்பாடுகள் தொடர்ச்சியாக நடக்கின்றன. தமிழ்த் தேசிய முன்னெடுப்பு என்பது தோல்வி தழுவிய கோஷம் என்பதும், பொருளாதார அபிவிருத்தியே போதும் என்பதும், மக்கள் கொண்டாட்டத்தையும், கேளிக்கைகளையும் விரும்புவதால் அவற்றுக்கான வெளிகளை திறந்துவிடுவதன் மூலம் தேசிய உணர்வை மழுங்கடிக்கலாம் என்றும் பல வேலைத்திட்டங்கள் நடக்கின்றன.

ஆனால் சிங்கள இனம் தமது ஒடுக்குமுறை அரசியலில் இருந்து ஒரு இம்மிகூட நகரவில்லை. வடக்கு கிழக்கில் தொடர்ச்சியாக நில ஆக்கிரமிப்பும், பொருளாதார நடவடிக்கைகளில் இறுக்கமான பிடியும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.

தேசிய அரசியலை முழுமையாக நீர்த்துப்போகச் செய்ய தமிழரசுக் கட்சியை பிளவுபடுத்தி அவர்களை நீதிமன்றுக்கு ஏறச் செய்தாயிற்று. 

தாயகத் தமிழரை புலம்பெயர் தமிழரிடம் இருந்து பிரிக்கும் வேலைத்திட்டங்களும் நடக்கின்றன.

நிலாந்தனின் கட்டுரையைப் படித்தால் பலவற்றைப் புரிந்துகொள்ளமுடியும்.

👇🏾

 

  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@ரஞ்சித்   நான் எழுதும் விடயங்களை முழுமையாக புரிந்து கொள்ள முயலாமல் என்னை ஒரு பரம வைரி போலும் தமிழ் தேசியத்துக்கு எதிரானவன் போலவும்,  ஒற்றையாட்சியை வலியுறுத்துபவன் போலவும் சித்தரித்து நீங்கள் எழுத, பின்னர் நான் உங்களுக்கு இன்றைய அரசியல் நிலையின் உண்மை நிலையையும் இந்த நிலைக்கு எம்மைக் கொண்டு வந்து விட்டதன் கடந்த கால  அரசியலைப் பற்றிக் கூறி  பதிலெழுத, நீங்கள் முன்னதை விட ஆக்கோஷத்துடன் என்மீது  வசைமாரி பொழிய இப்படியே  இவ் விவாதம்  நீண்டு செல்கிறது.  எனவே, இந்த  விவாதத்தை நிறுத்தி நீங்கள்  முன் வைக்கும் அரசியல் முன் மொழிவு விரைவில்  நடைமுறைச் சாத்தியமாக மக்களால் ஏற்றுகொள்ளப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டு அந்த  அரசியல் வெற்றியளித்து,  உங்களது அரசியல் முன்மொழிவின் வினைதிறனால்  அடுத்த ஓரிரு ஆண்டுகளில் தமிழ் மக்களுக்கு சாதகமான மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்தாலே போதும் நான் எனது இன்றைய நிலை தொடர்பாக எனது   கருத்துகளை வாபஸ் வாங்கி உங்கள் கருத்துகளை ஏற்றுக் கொள்ள தயாராக உள்ளேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

இந்தத் திரியில் அலசப்பட்ட எல்லா கருத்துக்களையும் வாசிக்கவில்லை. எனினும் தமிழர்கள் ஒற்றையாட்சிக்குக் கீழே வாழுவதை ஏற்றுக்கொள்ளும் நிலை இன்னும் வரவில்லை.

 

நானும் வாசிக்கவில்லை.

ஆனால் ஜியினை போலவே ஒற்றையாட்சியை நாட்டில் வாழும் தமிழர்கள், இத்தனை பின்னடைவுக்கு பின்னும், ஏற்று கொண்டதாக நானும் நினைக்கவில்லை.

6 hours ago, கிருபன் said:

கையாலாகாத தமிழ்த் தேசிய அரசியல் கோமாளிகளால் மக்களின் ஆதர்சனமான அரசியல் விருப்பங்கள் முன்னெடுக்கப்படவில்லை. தமிழ்த் தேசியத்தை நலிவுபெறச் செய்து இலங்கைத் தேசியத்தை ஏற்றுக்கொள்ளவைக்க பல செயற்பாடுகள் தொடர்ச்சியாக நடக்கின்றன. தமிழ்த் தேசிய முன்னெடுப்பு என்பது தோல்வி தழுவிய கோஷம் என்பதும், பொருளாதார அபிவிருத்தியே போதும் என்பதும், மக்கள் கொண்டாட்டத்தையும், கேளிக்கைகளையும் விரும்புவதால் அவற்றுக்கான வெளிகளை திறந்துவிடுவதன் மூலம் தேசிய உணர்வை மழுங்கடிக்கலாம் என்றும் பல வேலைத்திட்டங்கள் நடக்கின்றன.

💯 உண்மை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

ஆனால் சிங்கள இனம் தமது ஒடுக்குமுறை அரசியலில் இருந்து ஒரு இம்மிகூட நகரவில்லை. வடக்கு கிழக்கில் தொடர்ச்சியாக நில ஆக்கிரமிப்பும், பொருளாதார நடவடிக்கைகளில் இறுக்கமான பிடியும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.

மீண்டும் 100% யதார்த்தமான பார்வை.

நாட்டில் மட்டும் அல்ல, புலம்பெயர் தேசத்தில் எமது பிள்ளைகளின் பள்ளிகளில் கூட சிங்கள பிள்ளைகள் இனவாதமாகவே இன்றும் நடக்கிறார்கள்….ஏன் என்றால் வளர்ப்பு அப்படி. தமிழருக்கு எதிரான இனவாதம் இங்கிலாந்தில் வீட்டில் ஊட்டப்படுகிறது.

நான் அடிக்கடி சொல்வதுதான் தனி மனிதர்களாக பழக இனிமையானவர்கள் எனிலும் கூட்டு மனோநிலை, இனவாதம் என்று வரும் போது ஒரு இஞ்சிதன்னும் 1948 இல் இருந்து அவர்கள் நகரவில்லை.

அதேபோல் தமிழரசு கட்சி மீது “உசுப்பேத்தல்” போன்ற நியாயமான விமர்சனங்களை முன் வைத்தாலும்….

ஒட்டுமொத்த இனப்பிரச்சனையே அவர்களால் தூண்டபட்டது என்பது உண்மைக்குப் புறம்பானது.

சிங்களவரின் இனவாதமும் அதை செயல்படுத்திய சிங்கள தலைமைகளுமே இனப்பிரச்சனைக்கு 95% காரணிகள்.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ஒட்டுமொத்த இனப்பிரச்சனையே அவர்களால் தூண்டபட்டது என்பது உண்மைக்குப் புறம்பானது.

சிங்களவரின் இனவாதமும் அதை செயல்படுத்திய சிங்கள தலைமைகளுமே இனப்பிரச்சனைக்கு 95% காரணிகள்.

நமக்குள் நாம் பேச ஒன்றிணைந்து செயலாற்ற இந்த அடிப்படை தான் ஆகக் குறைந்த வரம்பு. 

எமக்கு முன்னால் தம்மால் முடிந்த அளவு செய்து விட்டு போன எவரையும் கனம் செய்யாமல் எவரையும் எம்முடன் இணைக்க முடியாது. எம் முன்னே தம் வாழ்வை கொடுத்து செயலாற்றிவிட்டு சென்றவர்களை சார்ந்த இந்த மாதிரி  தூற்றுதல்கள் அடுத்த தலைமுறையை வேண்டாம் இந்த பழி என்று பின் வாங்க செய்து விடும். 

உலக வரலாற்றில் தம்மால் முடிந்த அளவு செய்தவர்களை நகரங்கள் வீதிகள் மற்றும் கேடயங்கள் என்று அவர்களது பெயர் குறிக்கப்பட்டு பெருமை படுத்துதல் தொடர்வது இதற்காகத் தான். நன்றி.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்தின் இன்றைய வெற்றிகளில் ஒன்று......
ஈழத்தமிழர்களின் இன , உரிமை பிரச்சனைகளை கடந்து போர் குற்றம் எனும்  சந்தர்ப்பத்தை பயன் படுத்திக்கொண்டு...


அதிலேயே  நம்மவர்கள் நேர காலங்களை கடத்திக்கொண்டிருக்க......


அவர்களோ எந்தவொரு இடைஞ்சல்கள் இல்லாமல் தமிழர் பகுதிகளில் அத்துமீறிய குடியேற்றங்களையும் விகாரை நிறுவுதல்களையும் செய்து கொண்டு தமது வரலாற்றை புதிதாக எழுதிக்கொண்டிருக்கின்றார்கள்.

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.