Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலஸ்தீனத்திற்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களால் அதிரும் அமெரிக்க பல்கலைகழகங்கள் - பல்கலைகழங்களிற்கு வெளியே முகாமிட்டு மாணவர்கள் தொடர் ஆர்ப்பாட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN   24 APR, 2024 | 11:01 AM

image
 

அமெரிக்காவின் பல்கலைகழகங்களில் இஸ்ரேலிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

அமெரிக்க பல்கலைகழகங்களில் இஸ்ரேலிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்து கொலம்பிய பல்கலைகழகம் வகுப்பறை கற்றல் செயற்பாடுகளை இடைநிறுத்தியுள்ளது. நியுயோர்க் பல்கலைகழகத்திலும் யால் பல்கலைகழகத்திலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

america_students_pro44.jpg

இதேவேளை அமெரிக்காவின் பல பல்கலைகழகங்கள் ஹமாசிற்கு எதிரான இஸ்ரேலின் யுத்தத்தினால் உருவாகியுள்ள பதற்றத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

கொலம்பிய பல்கலைகழகத்தின் வெளியே முகாமிட்டிருந்த 100க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் கடந்த வாரம் கைதுசெய்யப்பட்டனர்.

அதேவேளை ஏனைய பல்கலைகழகங்களில் கொலம்பிய பல்கலைகழகத்தில் ஏற்பட்ட நிலை உருவாகியுள்ளது.

நியுயோர்க் பல்கலைகழகத்தில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள்  பல்கலைகழத்திற்கு வெளியே முகாமிட்டுள்ளனர்.

america_students_pro1.jpg

முதலில் அவர்களை வெளியேற சொன்னோம்  எனினும் நிலைமை குழப்பகரமானதாக மாறிய பின்னர் பொலிஸாரை அழைத்தோம் என பல்கலைகழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மிரட்டும் கோசங்கள் மற்றும் யூத எதிர்ப்பு கோசங்களை கேட்க முடிந்ததாக  பல்கலைகழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

எங்கள் வளாகத்திற்குள் மாணவர்களை கைதுசெய்வதற்கு பொலிஸாருக்கு பல்கலைகழகம் அனுமதிப்பது கடும் கண்டணத்திற்குரியது என நியுயோர்க் பல்கலைகழக சட்டககல்லூரி மாணவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

america_students_pro.jpg

ஆர்ப்பாட்டங்கள்காரணமாக மாணவர்கள் மத்தியிலான பதற்றமும் அதிகரித்து காணப்படுகின்றது.

காசாவில் இஸ்ரேலின் தாக்குதலை தங்களது பல்கலைகழகங்கள் கண்டிக்கவேண்டும் இஸ்ரேலிற்கு ஆயுதங்களை விற்பனை செய்யும் நிறுவனங்களில் இருந்து விலகியிருக்கவேண்டும் என பாலஸ்தீன ஆதரவு மாணவர்கள் வேண்டுகோள் விடுத்துவருகின்றனர்.

இதேவேளை இஸ்ரேலிற்கு எதிரான விமர்சனங்கள் அனேகமாக யூதஎதிர்ப்பை அடிப்படையாக கொண்டவையாக காணப்படுகின்றன என தெரிவித்துள்ள இஸ்ரேலிய மாணவர்கள் தாங்கள் பாதுகாப்பற்றவர்களாக உணர்வதுடன் ஹமாஸ் இன்னமும் பணயக்கைதிகளை விடுதலை செய்யவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கொலம்பிய பல்கலைகழகத்திலும் பதற்ற நிலை அதிகமாக காணப்படுகின்றது.

 

america_students_pro_3.jpg

https://www.virakesari.lk/article/181819

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க பல்கலைகழகங்களில் பாலஸ்தீன சார்பு போராட்டங்கள் தீவிரம் - 100க்கும் அதிகமான மாணவர்கள் கைது

Published By: RAJEEBAN   25 APR, 2024 | 12:15 PM

image
 

அமெரிக்க பல்கலைகழகங்களில் இஸ்ரேலிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட மாணவகளிற்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்துள்ள பொலிஸார் 100க்கும் மேற்பட்ட மாணவர்களை கைதுசெய்துள்ளனர்.

அவுஸ்டினின் டெக்ஸாஸ் பல்கலைகழகத்தில்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் ஊடகவியலாளர்கள் உட்பட 34 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

america_students_pro_46.jpeg

தென்கலிபோர்னியா பல்கலைகழகத்தில் 50க்கும் அதிகமானவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலுடன் தொடர்புகளை கொண்டுள்ள ஆயுதவியாபாரிகளுடனான  தொடர்பை துண்டிக்கவேண்டும் என கோரி நியுயோர்க்கின் கொலம்பியா பல்கலைகழக மாணவர்கள் பல்கலைகழகத்தை சூழ கூடாரங்களை அமைத்து போராட்டங்களை ஆரம்பித்ததை தொடர்ந்து அமெரிக்காவின் பல பல்கலைகழங்களில் இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல மாணவர்கள் பல்கலைகழகங்களில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கலிபோர்னியாவில் யுசிபேர்க்லே மற்றும் யுஎஸ்சி பல்கலைகழங்களில் ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

கலிபோரினா அரச பொலிடெக்னிக் பல்கலைகழகத்தில் தளபாடங்கள் கூடாரங்கள் போன்றவற்றை பயன்படுத்திக்கொண்டு மாணவர்கள் பல்கலைகழகத்திற்குள் முற்றுகை போராட்டத்தை மேற்கொண்டதால்  பல்கலைகழகம் மூடப்பட்டது.

america_students_pro_47.jpg

பாலஸ்தீன ஆதரவு குழுவை சேர்ந்த மாணவன் ஒருவன் கைதுசெய்யப்பட்டமைக்கும் காசா யுத்தத்திற்காக பல்கலைகழகம் இஸ்ரேலுடனான உறவுகளை துண்டிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்தும்  ஹவார்ட் பல்கலைகழக மாணவர்கள் பல்கலைகழக வளாகத்திற்குள் கூடாரங்களை அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மாசசூட்ஸ் முதல் கலிபோர்னியா வரை பல பல்கலைகழங்களில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பேரணிகள் மற்றும் பல்கலைகழகங்களை சுற்றி முற்றுகையிடும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/181925

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளை மாளிகைக்கு அருகில் பாலஸ்தீனியர்களிற்கு ஆதரவாக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

26 Apr, 2024 | 11:18 AM
image

அமெரிக்காவில் வெள்ளைமாளிகைக்கு அருகில்  அமெரிக்க மாணவர்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

அமெரிக்காவின் ஜோர்ஜ்டவுன் பல்கலைகழக மாணவர்கள் வோசிங்டனில் ஜோர்ஜ் வோசிங்டன் பல்கலைகழகத்திற்கு அருகில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

காசா யுத்தத்தின் மத்தியில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்காகவும் அமெரிக்க பல்கலைகழகங்கள் இஸ்ரேலின் மனித உரிமை மீறல்களில் தங்களுக்கு உள்ள தொடர்பை முறித்துக்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுப்பதற்காகவும்  வோசிங்டனை சேர்ந்த மாணவர்களும் பேராசிரியர்களும் செயற்பாட்டாளர்களும் அங்குகுழுமியுள்ளனர்.

george_wash_uni_protest.jpg

அமெரிக்காவின் ஏனைய பல்கலைகழகங்களை போல ஜோர்ஜ் வோசிங்டன் பல்கலைகழகத்திலும் மாணவர்கள் வளாகத்தில் கூடாரம் அமைத்து தங்கியிருந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றனர்.

ஜோர்ஜ் வோசிங்டன் பல்கலைகழக மாணவர்களிற்கான எங்கள் ஆதரவை வெளிப்படுத்துவதற்காகவும் அமெரிக்காவின் ஏனைய பல்கலைகழக மாணவர்களின் கோரிக்கைகளை வலியுறுத்துவதற்காகவும் நாங்கள் இங்குவந்திருக்கின்றோம் என அனா வெசெல்ஸ் என்ற மாணவி அல்ஜசீராவிற்கு தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகைக்கும்இராஜாங்க திணைக்களத்திற்கும் அருகில் இந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன.

தலைநகரில் நாங்கள் எதனையாவது செய்யாவிட்டால் நாங்கள் எங்கள் தார்மீக கடப்பாடுகளை நிறைவேற்றவில்லை என்பதே அர்த்தம் என மாணவி வெசெல்ஸ் தெரிவித்துள்ளார்.

 

 

https://www.virakesari.lk/article/181994

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாலஸ்தீன ஆதரவு; இஸ்ரேல் எதிர்ப்பு விவகாரம் - அமெரிக்க பிரின்ஸ்டன் பல்கலையில் தமிழ்மாணவி கைது

27 APR, 2024 | 11:16 AM
image

நியூஜெர்சி: அமெரிக்கா நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்ட மாணவி அசிந்தியா சிவலிங்கன் மாணவர் ஹாசன் சையத் ஆகிய இருவரும் இஸ்ரேல்-பாலஸ்தீனம் விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட் டுள்ளனர்.

சொந்த மண்ணில் பாலஸ்தீனிய அரேபியர்கள் அகதிகளாக வாழும்நிலைக்கு இஸ்ரேல் யூதர்களால் ஆளாக்கப்படுகிறார்கள் என்ற கருத்தை வலுவாக முன்வைத்து அமெரிக்காவில் உள்ள பல பல்கலைக்கழகங்களின் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர்.

குறிப்பாக இஸ்ரேல் ராணுவம் காசா யுத்தத்தில் அப்பாவி பாலஸ்தீனியர்களை கொன்று குவிப்பதைக் கண்டித்து நியூயார்க் நகரின் கொலம்பியா பல்கலை மாணவர்கள் தொடங்கிய போராட்டம் நாடு முழுவதும் பரவியது.

இதன் தொடர்ச்சியாக தற்போது பிரின்ஸ்டன் பல்கலையில் நிகழ்ந்த சம்பவம் குறித்து பிரின்ஸ்டன் பல்கலை மாணவர் பத்திரிகையில் வெளிவந்த செய்தி: பிரின்ஸ்டன் பல்கலை வளாகத்தின் முற்றத்தில் மாணவி அசிந்தியா சிவலிங்கன் மாணவர் ஹாசன் சையத் ஆகிய இருவரும் கூடாரமிட்டுக் கடந்த சில நாட்களாக பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பி வந்தனர். பின்னர் பல்கலையின் பிற மாணவர்கள் சில பேராசிரியர்கள் வெளிநபர்கள் உட்பட பலர் அவர்களுடன் இணைந்து பாலஸ்தீனை ஆதரித்தும்இ இஸ்ரேலை எதிர்த்தும் கோஷமிட்டனர்.

மேற்கொண்டு கூட்டங்கள் நடத்த அவர்கள் திட்டமிட்டு வந்தனர். இதனிடையில் கடந்த புதன்கிழமை அன்று பல்கலை வளாகத்தில் இவ்வாறு கூடாரம் இடுவது விதிமுறை மீறலென நிர்வாகம் எச்சரித்து மின்னஞ்சல் அனுப்பியது. இதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்த நிலையில் அசிந்தியா சிவலிங்கன் ஹாசன் சையத் ஆகிய இருவரும் வியாழக்கிழமை காலை கைது செய்யப்பட்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து அசிந்தியா சிவலிங்கன் ஹாசன் சையத் ஆகியஇருவரும் பல்கலையின் விடுதியில் தங்க தடை விதிக்கப்பட்டி ருப்பதாகப் பல்கலை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இருவரும் பல்கலையைவிட்டு வெளியேற்றப் படவில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்டமாணவி அசிந்தியா சிவலிங்கன் பிரின்ஸ்டன் பல்கலையில் சர்வதேச வளர்ச்சிக்கான பொது விவகாரத் துறையில் முதுநிலைப் பட்டம் படித்து வருகிறார்.

https://www.virakesari.lk/article/182076

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 27/4/2024 at 13:53, ஏராளன் said:

பாலஸ்தீன ஆதரவு; இஸ்ரேல் எதிர்ப்பு விவகாரம் - அமெரிக்க பிரின்ஸ்டன் பல்கலையில் தமிழ்மாணவி கைது

இதையும் செய்தி ஆக்கிட்டானுகள் 😎

  • கருத்துக்கள உறவுகள்

யாரப்பா அங்கே????????

எங்கள் யாழ் கள சனநாயகத்தின் தூண்களில் ஒருவரைக் கூடக்  காணோம்? 

பொந்திற்குள் ஒடுங்கிக்கொண்டனரோ? அல்லது சாயம் கழன்றுவிடும் என்று அச்சமுறுகின்றனரோ? 

அல்லது மெளன விரதமோ? 

🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

இதையும் செய்தி ஆக்கிட்டானுகள் 😎

 

ஒரு தமிழ் பிள்ளை அமெரிக்க போராட்டத்தில் கைது ஆனால் அது எமக்கு செய்திதானே ஐயா. இந்திய மாணவிகள் இருவர் களவெடுத்து அமெரிக்காவில் கைதாகிய விடயம் விவாதிக்கப்படலாம் என்றால் அதைவிட முக்கியமான விடயம் இது. 

மற்றையது அமெரிக்கா பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் அதிக மதிப்பு உடையது. அங்கு அனுமதி கிடைப்பதே கடினம் என பொதுவான கருத்து உள்ளது. 

இந்த மாணவி கைது எமது சமூகத்திற்கு முக்கியமான விடயம். 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாணவியைப் பார்க்கும்போது ஸஹ்ரான் குழுவில் இருந்த புலஸ்தீனியின் ஞாபகம் வந்து தொலைக்கின்றது. நட்பு அப்படி.

மேலும் இப்படியான பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருக்கும் மாணவர்கள் மேலை நாடுகளில் இருந்து நாடுகடத்தப்படவேண்டும். அல்லது ரஸ்யா, இரான் போன்ற நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்படவேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயம் said:

ஒரு தமிழ் பிள்ளை அமெரிக்க போராட்டத்தில் கைது ஆனால் அது எமக்கு செய்திதானே ஐயா.

தமிழ் நாட்டு பூர்விகம் தானே ..அதுதான் பப்ளிக் ஸ்டண்ட் 
நேரடியாக பாலஸ்தீனத்திற்கு அனுப்பி அங்கே போய் போராடு என்று அனுப்பிவைத்தால் தெரியும் 
அம்மணியின் போராட்ட குணம் எப்படி காற்றில் பறக்கிறது என்று 

  • கருத்துக்கள உறவுகள்

பள்ளிக்கூடப் பக்கமே ஒதுங்காதவர்கள் போல இருக்கிறது பலரின்  நடிப்புக்கள். 🤦🏼‍♂️

எல்லோரும் தங்கள் பாத்திரங்களை மிகத் திறமையாகச் செய்கிறார்கள் யாழ் களத்து போலி சனநாயகவாதிகள் உட்பட. 

😩

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் மாணவர் போராட்டம்: ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது - லாஸ் ஏஞ்சலஸில் இரு தரப்பினர் மோதல்

அமெரிக்காவில் மாணவர் போராட்டம்

பட மூலாதாரம்,AFP

கட்டுரை தகவல்
  • எழுதியவர், மேட் மர்ஃபி
  • பதவி, பிபிசி செய்திகள்
  • 1 மே 2024

அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழக வளாகத்தில் பாலத்தீனத்திற்கு ஆதரவாகப் போராடி வரும் மாணவர்களைக் கலைப்பதற்காக நூற்றுக்கணக்கான போலீசார் உள்ளே நுழைந்தனர்.

பல்கலைக் கழகத்தில் இருக்கும் ஒரு கூடத்தில் இருந்த மாணவர்களை அகற்றுவதற்காக போலிசார் ஏணியில் ஏறிச் செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகின. மாணவர்கள் கைது செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன்னதாகவே, போராடும் மாணவர்கள் இடத்தைக் காலிசெய்ய வேண்டும் அல்லது அவர்கள் பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று கொலம்பியா பல்கலைக்கழகம் எச்சரித்திருந்தது.

இஸ்ரேல் காஸா மீது நடத்திவரும் தாக்குதலால் மனிதாபிமானச் சிக்கல்கள் தீவிரமடைந்து வருவதால், கொலம்பியா பல்கலைக்கழகம் இஸ்ரேலில் இருக்கும் தனது மூலதனங்களை விலக்கிக் கொள்ள வேண்டும் என போராடும் மாணவர்கள் வலியுறுத்துகின்றனர்.

கடந்த சில வாரங்களாக அமெரிக்காவின் பல முக்கிய பல்கலைக் கழகங்களிலும் மாணவர்கள் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கையை எதிர்த்தும், பாலத்தீனத்திற்கு ஆதரவகவும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இஸ்ரேலுடன் தொடர்புள்ள நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களைப் புறக்கணிக்கக் கோரி அமெரிக்கா முழுவதும் பல்வேறு நகரங்களிலும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இஸ்ரேல்-பாலத்தீனம், அமெரிக்க மாணவர் போராட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அமெரிக்காவின் 20-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக, கல்லூரி வளாகங்களில் மாணவர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதனால், பல முக்கியப் பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

இஸ்ரேலின் போர் நடவடிக்கைகளுகக்கு எதிராகப் போராடும் மாணவர்களை 'யூத வெறுப்பாளர்கள்' என்று யூத மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கொலம்பியா மற்றும் வேறு சில பல்கலைக் கழகங்களில் உள்ள யூத மாணவர்கள் தங்கள் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாவதைப் போல் உணர்வதாகத் தெரிவித்திருக்கின்றனர்.

ஆயினும் பல யூத மாணவர்களும் இஸ்ரேலுக்கு எதிரான இந்தப் போராட்டங்களில் கலந்துகொண்டுள்ளனர்.

 
இஸ்ரேல்-பாலத்தீனம், அமெரிக்க மாணவர் போராட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கொலம்பியா பல்கலைக்கழகத்தின் ஹாமில்டன் கூடத்திற்குள் நுழையும் நியூ யார்க் நகரக் காவல்துறையினர்

'போலீசார் மாணவர்களை மோசமாகக் கையாண்டனர்'

மாணவப் போராட்டக்காரர்கள், கலைந்து செல்வதற்குக் கொடுக்கப்பட்டிருந்த காலக்கெடுவை மீறியதால், நியூ யார்க் காவல் துறை (NYPD) அதிகாரிகள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைய, பல்கலைக்கழக அதிகாரிகளால் அனுமதிக்கப்பட்டனர். சுமார் 80-100 போலீசார் கட்டிடத்திற்குள் நுழைந்ததாக ஒரு மாணவர் பிபிசி-யிடம் தெரிவித்தார்.

பல்கலைக்கழக வளகத்தில் இருந்த ஹாமில்டன் கூடம் 'ஆக்கிரமிக்கப்பட்டு, சேதப்படுத்தப்பட்டு, முற்றுகையிடப்பட்ட பிறகு, எங்களுக்கு வேறு வழியில்லை' என்று கொலம்பியா பல்கலைக்கழகம் கூறியது. நியூ யார்க் காவல்துறைக்கு எழுதிய கடிதத்தில், பல்கலைக் கழகத் தலைவர் மினூஷ் ஷபிக், 'மிகுந்த வருத்தத்துடன்' காவல்துறை உதவியைக் கோரியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

காவல்துறையினர் வளாகத்தினுள் நுழைந்தவுடன் அதிகாரிகள் 'போராட்டக்காரர்களை திசைதிருப்ப' வீரியம் குறைந்த 'ஸ்டன் கையெறி குண்டுகளைப்' பயன்படுத்தினர் என்று பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் நியூஸ் தெரிவித்துள்ளது.

 
இஸ்ரேல்-பாலத்தீனம், அமெரிக்க மாணவர் போராட்டம்
படக்குறிப்பு,ஒரு மாணவர் பிபிசி-யிடம் காவல்துறை அத்துமீறல்களை விவரித்துக்கொண்டிருந்த போதே, ஒரு காவலர் ஜன்னலை மூடினார்

கட்டடத்திற்குள் நுழைந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களைப் பிடித்து இழுத்தும் தள்ளியும் மோசமாக நடத்தியதாக சில மாணவர்கள் குற்றம் சாட்டினர். அவர்களில் ஒருவர் ஜன்னல் வழியே பிபிசி-யிடம் பேசினார். நியூ யார்க் காவல் அதிகாரிகள் மூன்று மாணவர்களை படிக்கட்டுகளில் இருந்து கீழே தள்ளியதாகக் கூறினார். அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே ஒரு காவல் அதிகாரி குறுக்கிட்டு ஜன்னலை வலிந்து மூடியதால், நேர்காணல் தடைப்பட்டது.

இஸ்ரேல்-பாலத்தீனம், அமெரிக்க மாணவர் போராட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கைது செயப்பட்ட மாணவர்கள் பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டனர்

50 மாணவர்கள் கைது

நியூ யார்க் காவல்துறையின் பொதுத் தகவல் உதவி ஆணையர், கார்லோஸ் நீவ்ஸ், காவல் அதிகாரிகளுக்கு ஆதரவாகப் பேசினார். மாணவர்கள் ஹாமில்டன் கூடத்தின் கதவுகளை 'மேசைகள், நாற்காலிகள் அல்லது சோடா இயந்திரங்களைக்' கொண்டு 'தடுத்து' வைத்திருந்ததாக அவர் கூறினார். அதிகாரிகள் உள்ளே 'பார்க்க முடியாதபடி' செய்தித்தாள்கள் கொண்டு ஜன்னல்களையும் மூடிவைத்திருந்ததாக அவர் குற்றம் சாட்டினார்.

இச்சம்பவத்தில் சுமார் 50 பேர் கைது செய்யப்பட்டதாக சிபிஎஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொலம்பியா பல்கலைக் கழகத்தில் இருந்து செய்தியறிக்கை அளித்த பிபிசி-யின் அமெரிக்கச் செய்தியாளர் நோமியா இக்பால், பல நியூ யார்க் காவல்துறைப் பேருந்துகள் பல்கலைக் கழக வளாகத்திலிருந்து வெளியேறுவதைக் கண்டதாகக் கூறினார். அவற்றில் போராட்டக்காரர்கள் கொண்டு செல்லப்பட்டிருக்கலாம்.

கைது செய்யப்பட்ட மாணவர்கள் தங்கள் கைகள் கட்டப்பட்டு அணிவகுத்து அழைத்துச் செல்லப்பட்டபோது, போராட்டக்காரர்கள் அவர்களுக்கு ஆதரவாகப் பெரும் கோஷங்களை எழுப்பினர். `அவர்களைப் போக விடுங்கள்` என்று அவர்கள் கோஷம் எழுப்பினர்.

அந்தக் கட்டடத்தில் இருந்தபடி போராடிய மாணவர்கள் அனைவரும் அகற்றப்பட்டதாகவும், யாருக்கும் எந்த காயங்களும் ஏற்பட்டதாகப் பதிவாகவில்லை என்றும் நியூ யார்க் காவல்துறை கூறியது.

கொலம்பியா பல்கலைக் கழக மாணவர்கள் கிட்டத்தட்ட கடந்த இரண்டு வாரங்களாக பல்கலைக்கழக வளாகத்தில் கூடாரம் அமைத்துப் போராடி வருக்கின்றனர்.

 
இஸ்ரேல்-பாலத்தீனம், அமெரிக்க மாணவர் போராட்டம்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,லாஸ் ஏஞ்சலஸில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் திரண்டிருக்கும் காவலர்கள்

மற்ற பல்கலைக்கழகங்களிலும் கைது நடவடிக்கை

செவ்வாய்க்கிழமை இரவு நியூ யார்க்கில் கருப்பினத்தவர் அதிகம் வசிக்கும் ஹார்லெம் பகுதியில் உள்ள நகரக் கல்லூரியிலும் போலீசார் நுழைந்து பல மாணவர்களைக் கைது செய்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவின் டெக்சாஸ், கலிபோர்னியா, ஜார்ஜியா, வட கரோலினா, யூட்டா, வர்ஜீனியா, நியூ மெக்ஸிகோ, நியூ ஜெர்சி, கனெக்டிகட் மற்றும் லூசியானா ஆகிய மாகாணங்களில் உள்ள பல்கலைக்கழக, கல்லூரி வளாகங்களிலும், 1,000-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

இஸ்ரேல்-பாலத்தீனம், அமெரிக்க மாணவர் போராட்டம்

பட மூலாதாரம்,AFP

படக்குறிப்பு,கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் இஸ்ரேல் ஆதரவு மற்றும் பாலத்தீன ஆதரவு மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது

கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் மோதல்

அமெரிக்காவின் மேற்கு கரையில், லாஸ் ஏஞ்சலஸில் உள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் நிர்வாகிகள் 'சட்ட விரோதமானவை' என்று அவர்கள் அழைக்கும் போராட்டக்காரர்களின் முகாமை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தனர். அதைத்தொடர்ந்து இஸ்ரேல் ஆதரவு மற்றும் பாலத்தீனர் ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இடையே மோதல்கள் வெடித்தன. இது நீண்ட நேரம் தொடர்ந்தது.

கறுப்பு உடை அணிந்த இஸ்ரேல் ஆதரவாளர்கள் அமெரிக்க நேரப்படி நள்ளிரவில் வளாகத்திற்கு வந்தனர். அவர்கள் முகாமைச் சுற்றியிருந்த தடுப்புகளை அகற்ற முயற்சித்தனர், என்று 'லாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. சம்பவ இடத்திலிருந்து வெளியான வீடியோ காட்சிகள் கலவரங்களைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் சுடர்கள் மற்றும் பட்டாசுகள் வெடிப்பதைக் காட்டின. மற்ற வீடியோ காட்சிகள் இரு குழுக்களிடையே நடந்த மோதலைக் காட்டின.

அமெரிக்காவில் மாணவர் போராட்டம்

பட மூலாதாரம்,AFP

படக்குறிப்பு,நள்ளிரவில் மோதிக் கொண்ட மாணவர்கள்

லாஸ் ஏஞ்சலஸ் மேயர் கரேன் பாஸ் இந்த காட்சிகளை 'வெறுக்கத்தக்கவை, மன்னிக்க முடியாதவை' என்று விவரித்தார். இதைத்தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் வளாகத்திற்கு வந்ததாகக் கூறினார்.

சில அதிகாரிகள் மாணவப் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மற்றவர்கள், காவல்துறையினரை அழைத்தனர்.

தேசிய அரசியல்வாதிகள் சிலர், இந்தப் போராட்டங்களில் யூத வெறுப்பு வெளிப்படுவதாகக் கூறி, கல்லூரிகள் இதனைச் சமாளிக்க மேலும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர்.

அமெரிக்காவில் மாணவர் போராட்டம்

பட மூலாதாரம்,AFP

படக்குறிப்பு,இஸ்ரேல் ஆதரவு மாணவர்களின் தாக்குதலுக்குப் பிறகு பாலத்தீனர் ஆதரவு மாணவர்கள் தங்களது போராட்ட முகாமை காவல் காத்து நின்ற காட்சி

https://www.bbc.com/tamil/articles/cjr7ldqew20o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்காக ஆர்ப்பாட்டம் செய்யும் உங்களிற்கு எங்கள் இதயத்திலிருந்து நன்றிகள் - அமெரிக்க கனடா பல்கலைகழக மாணவர்களிற்கு பாலஸ்தீன சிறுவர்கள்

02 MAY, 2024 | 11:05 AM
image
 

காசாபள்ளத்தாக்கின் மத்தியில் உள்ள டெய்ர் எல் பலாவில் இடம்பெற்ற பேரணியில் அமெரிக்கா கனடாவில் தங்களிற்காக குரல்கொடுக்கும்மாணவர்களிற்கு ஆதரவு தெரிவிக்கும் வாசகங்களுடன் பாலஸ்தீன சிறுவர்கள் காணப்படும் படங்கள் வெளியாகியுள்ளன.

gaza_children333.jpg

gaza_children_334.jpg

கொலம்பியா பல்கலைகழக மாணவர்களிற்கும் ஏனைய பல்கலைகழக மாணவர்களிற்கும் அவர்கள் தங்கள் ஆதரவை வெளியிட்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/182463

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கலிபோர்னியா பல்கலைகழகத்திற்குள் பொலிஸார் - பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்களை வெளியேற்ற முயற்சி - பெரும் பதற்ற நிலை

Published By: RAJEEBAN   02 MAY, 2024 | 03:53 PM

image
 

அமெரிக்காவின் கலிபோர்னியாபல்கலைகழக வளாகத்திற்கு கூடாரங்களை அமைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவரும் பாலஸ்தீன மாணவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு எச்சரித்துள்ள பொலிஸார்  ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி செல்வதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

california_pro.jpg

சில பகுதிகளில் மாணவர்களிற்கும்  பொலிஸாருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெறுகின்றன.

califor_pro2.jpg

எங்களின் பல்கலைகழகத்திலிருந்து வெளியேறு என மாணவர்கள் கோசம்  எழுப்பிவருகின்றனர்.

califor_pro.jpg

நூற்றுக்கணக்கான பொலிஸார் உள்ளே நுழைந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகின்றன.

https://www.virakesari.lk/article/182495

  • கருத்துக்கள உறவுகள்
On 27/4/2024 at 21:53, ஏராளன் said:

பாலஸ்தீன ஆதரவு; இஸ்ரேல் எதிர்ப்பு விவகாரம் - அமெரிக்க பிரின்ஸ்டன் பல்கலையில் தமிழ்மாணவி கைது

27 APR, 2024 | 11:16 AM
image

நியூஜெர்சி: அமெரிக்கா நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்ட மாணவி அசிந்தியா சிவலிங்கன் மாணவர் ஹாசன் சையத் ஆகிய இருவரும் இஸ்ரேல்-பாலஸ்தீனம் விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட் டுள்ளனர்.

சொந்த மண்ணில் பாலஸ்தீனிய அரேபியர்கள் அகதிகளாக வாழும்நிலைக்கு இஸ்ரேல் யூதர்களால் ஆளாக்கப்படுகிறார்கள் என்ற கருத்தை வலுவாக முன்வைத்து அமெரிக்காவில் உள்ள பல பல்கலைக்கழகங்களின் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர்.

குறிப்பாக இஸ்ரேல் ராணுவம் காசா யுத்தத்தில் அப்பாவி பாலஸ்தீனியர்களை கொன்று குவிப்பதைக் கண்டித்து நியூயார்க் நகரின் கொலம்பியா பல்கலை மாணவர்கள் தொடங்கிய போராட்டம் நாடு முழுவதும் பரவியது.

இதன் தொடர்ச்சியாக தற்போது பிரின்ஸ்டன் பல்கலையில் நிகழ்ந்த சம்பவம் குறித்து பிரின்ஸ்டன் பல்கலை மாணவர் பத்திரிகையில் வெளிவந்த செய்தி: பிரின்ஸ்டன் பல்கலை வளாகத்தின் முற்றத்தில் மாணவி அசிந்தியா சிவலிங்கன் மாணவர் ஹாசன் சையத் ஆகிய இருவரும் கூடாரமிட்டுக் கடந்த சில நாட்களாக பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பி வந்தனர். பின்னர் பல்கலையின் பிற மாணவர்கள் சில பேராசிரியர்கள் வெளிநபர்கள் உட்பட பலர் அவர்களுடன் இணைந்து பாலஸ்தீனை ஆதரித்தும்இ இஸ்ரேலை எதிர்த்தும் கோஷமிட்டனர்.

மேற்கொண்டு கூட்டங்கள் நடத்த அவர்கள் திட்டமிட்டு வந்தனர். இதனிடையில் கடந்த புதன்கிழமை அன்று பல்கலை வளாகத்தில் இவ்வாறு கூடாரம் இடுவது விதிமுறை மீறலென நிர்வாகம் எச்சரித்து மின்னஞ்சல் அனுப்பியது. இதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்த நிலையில் அசிந்தியா சிவலிங்கன் ஹாசன் சையத் ஆகிய இருவரும் வியாழக்கிழமை காலை கைது செய்யப்பட்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து அசிந்தியா சிவலிங்கன் ஹாசன் சையத் ஆகியஇருவரும் பல்கலையின் விடுதியில் தங்க தடை விதிக்கப்பட்டி ருப்பதாகப் பல்கலை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இருவரும் பல்கலையைவிட்டு வெளியேற்றப் படவில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்டமாணவி அசிந்தியா சிவலிங்கன் பிரின்ஸ்டன் பல்கலையில் சர்வதேச வளர்ச்சிக்கான பொது விவகாரத் துறையில் முதுநிலைப் பட்டம் படித்து வருகிறார்.

https://www.virakesari.lk/article/182076

சமூக நீதிக்காக போராடுபவர்கள் சுயநலமாக இருப்பதில்லை, ஆனால் இதனால் இப்படியானவர்கள் மற்றவர்களுக்காக சில வேளைகளில் தமது கல்வி, எதிகாலம் என்பவற்றை தூக்கி எறிந்துவிடுவார்கள், அப்படி இல்லாமல் தனது கல்வியினை இந்த குழந்தை சிறப்பாக முடித்து எதிர்காலத்தில் ஒரு மிக சிறந்த ஆளுமை நிறைந்த தலைமத்துவங்களை பெற்றால் சமூகத்திற்கும் மிக உதவியாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vasee said:

சமூக நீதிக்காக போராடுபவர்கள் சுயநலமாக இருப்பதில்லை, ஆனால் இதனால் இப்படியானவர்கள் மற்றவர்களுக்காக சில வேளைகளில் தமது கல்வி, எதிகாலம் என்பவற்றை தூக்கி எறிந்துவிடுவார்கள், அப்படி இல்லாமல் தனது கல்வியினை இந்த குழந்தை சிறப்பாக முடித்து எதிர்காலத்தில் ஒரு மிக சிறந்த ஆளுமை நிறைந்த தலைமத்துவங்களை பெற்றால் சமூகத்திற்கும் மிக உதவியாக இருக்கும்.

தாங்கள் சொல்ல வருவதென்ன ? 

இப்படிப்  போராடாமல் கல்வியைத் தொடர்ந்து கற்று முடித்தால் சமூகத்திற்கு பாரிய உதவியாக இருக்கும் என்கிறீர்களா? 

அப்படியானால் இதே theory கோட்பாடு, இலங்கையில் கல்வியை இடைநடுவில் கைவிட்டு  ஆயுதம் தூக்கி போராடியவர்களுக்கும் பொருந்துமா? 

@விசுகு

"ஆட்டுக்க மாட்டை செருக வேண்டாம்" என்று கூறாதீர்கள். 

 

(சமூக மாற்றங்களுக்கான அடிப்படையே இப்படியான போராட்டங்கள்தான்)

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Kapithan said:

தாங்கள் சொல்ல வருவதென்ன ? 

இப்படிப்  போராடாமல் கல்வியைத் தொடர்ந்து கற்று முடித்தால் சமூகத்திற்கு பாரிய உதவியாக இருக்கும் என்கிறீர்களா? 

அப்படியானால் இதே theory கோட்பாடு, இலங்கையில் கல்வியை இடைநடுவில் கைவிட்டு  ஆயுதம் தூக்கி போராடியவர்களுக்கும் பொருந்துமா? 

@விசுகு

"ஆட்டுக்க மாட்டை செருக வேண்டாம்" என்று கூறாதீர்கள். 

 

(சமூக மாற்றங்களுக்கான அடிப்படையே இப்படியான போராட்டங்கள்தான்)

அவர் சொல்ல வருவதை உள் வாங்கி பதில் எழுதவும். நன்றி 

 

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, விசுகு said:

அவர் சொல்ல வருவதை உள் வாங்கி பதில் எழுதவும். நன்றி 

 

அவர் என்ன சொல்ல வருகிறார்? நீங்கள் கூறுங்கள்? 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

அவர் என்ன சொல்ல வருகிறார்? நீங்கள் கூறுங்கள்? 

ஒவ்வொரு கரும்புலியும் உயிரை கொடுக்கும் போதும் மிகவும் வருந்தியதுண்டு. ஏன்???

ஒரு உயிர் போவதென்ற கவலை தாண்டி அந்த உன்னத மக்கள் விரும்பிகள் போல அந்த உன்னத சேவையாளர்கள் போல மக்கள் தலைவர்கள் கிடைக்கமாட்டார்கள் எவரை எம் இனம் இழக்க கூடாதோ அவர்களை இழந்து கொண்டிருக்கிறோம் என்பதால் ...

இதை புரிந்து கொண்டால் மேலே அவர் எழுதியதும் புரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, விசுகு said:

ஒவ்வொரு கரும்புலியும் உயிரை கொடுக்கும் போதும் மிகவும் வருந்தியதுண்டு. ஏன்???

ஒரு உயிர் போவதென்ற கவலை தாண்டி அந்த உன்னத மக்கள் விரும்பிகள் போல அந்த உன்னத சேவையாளர்கள் போல மக்கள் தலைவர்கள் கிடைக்கமாட்டார்கள் எவரை எம் இனம் இழக்க கூடாதோ அவர்களை இழந்து கொண்டிருக்கிறோம் என்பதால் ...

இதை புரிந்து கொண்டால் மேலே அவர் எழுதியதும் புரியும்.

சாரி பெரியவா, 

மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட வேண்டாம். விடயத்திற்கு நேராக  வரவும். 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

தாங்கள் சொல்ல வருவதென்ன ? 

இப்படிப்  போராடாமல் கல்வியைத் தொடர்ந்து கற்று முடித்தால் சமூகத்திற்கு பாரிய உதவியாக இருக்கும் என்கிறீர்களா? 

அப்படியானால் இதே theory கோட்பாடு, இலங்கையில் கல்வியை இடைநடுவில் கைவிட்டு  ஆயுதம் தூக்கி போராடியவர்களுக்கும் பொருந்துமா? 

@விசுகு

"ஆட்டுக்க மாட்டை செருக வேண்டாம்" என்று கூறாதீர்கள். 

 

(சமூக மாற்றங்களுக்கான அடிப்படையே இப்படியான போராட்டங்கள்தான்)

போராட்டத்தினை வேண்டாம் என கூறவில்லை, ஆனால் எதிர்காலத்தில் இவ்வாறான சமூக அக்கறையுள்ளவர்கள் உயர் பதவிகளில் வருவதற்கு இடையூறாக தற்போதய நடவடிக்கைகள் அமைந்துவிடாமல் பார்த்து கொள்ளவேண்டும்.

பெரும்பாலும் கல்விகற்றவர்கள் உயர்பதவிகளை சுயநல அடிப்படையிலேயே குறிவைப்பார்கள், பின்னர் அவர்கள் ஊழல் போன்ற நடவடிக்கையிலும் ஈடுபடுபவர்களாகவும் மாறுகின்ற நிலை ஏற்படும்.

சமூக சிந்தனை உள்ளவர்கள் இந்த உயர்பதவிகளை பெற்றால் தேவையற்ற களைகள் சமூகத்தலைமைகளை பெறுவதனை தடுக்கலாம்.

உங்களிடம் ஒரு கேள்வி, சமுக சிந்தனை கொண்டவருக்கு சார்பாக கருத்திட்ட என்னிடம் கேள்வி கேட்ட நீங்கள், அவரையும் அவரது போராட்டத்தினையும் கேவலப்படுத்துகின்ற கருத்தாளர்களிடம் ஏன் எந்த கருத்தினையும் கூறவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, vasee said:

போராட்டத்தினை வேண்டாம் என கூறவில்லை, ஆனால் எதிர்காலத்தில் இவ்வாறான சமூக அக்கறையுள்ளவர்கள் உயர் பதவிகளில் வருவதற்கு இடையூறாக தற்போதய நடவடிக்கைகள் அமைந்துவிடாமல் பார்த்து கொள்ளவேண்டும்.

பெரும்பாலும் கல்விகற்றவர்கள் உயர்பதவிகளை சுயநல அடிப்படையிலேயே குறிவைப்பார்கள், பின்னர் அவர்கள் ஊழல் போன்ற நடவடிக்கையிலும் ஈடுபடுபவர்களாகவும் மாறுகின்ற நிலை ஏற்படும்.

சமூக சிந்தனை உள்ளவர்கள் இந்த உயர்பதவிகளை பெற்றால் தேவையற்ற களைகள் சமூகத்தலைமைகளை பெறுவதனை தடுக்கலாம்.

உங்களிடம் ஒரு கேள்வி, சமுக சிந்தனை கொண்டவருக்கு சார்பாக கருத்திட்ட என்னிடம் கேள்வி கேட்ட நீங்கள், அவரையும் அவரது போராட்டத்தினையும் கேவலப்படுத்துகின்ற கருத்தாளர்களிடம் ஏன் எந்த கருத்தினையும் கூறவில்லை?

👇

பலருடைய கருத்துக்கள், அவர்களது உண்மையான இயல்பை எல்லோருக்கும் வெளிச்சம்போட்டுக் காட்டுவதால்  அப்படியே தொடரட்டும் எனச் சீண்டுவதில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

america-protest.jpeg

2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது : தொடரும் போராட்டம்.

அமெரிக்க பல்கலைக்கழகங்களில் முன்னெடுத்து வரும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களில் ஈடுபட்டுள்ள மாணவர்களில் இதுவரை 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வசேத ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு எதிராகவும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

காசாவில் போர்நிறுத்தம், இஸ்ரேலுக்கான அமெரிக்காவின் இராணுவ உதவி மற்றும் ஆயத விநியோகத்தை நிறுத்துதல், போரினால் பயனடையும் நிறுவனங்களில் இருந்து பல்கலைக்கழக முதலீடுகளை திரும்பப் பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தே மாணவர்கள் இவ்வாறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்திவந்த மாணவர்களின் முகாம்களை கலவரத் தடுப்பு பொலிஸார் வலுக்கட்டாயமாக அகற்றியுள்ளனர்.

இதன்போது அங்கு போராட்டம் நடத்திய நூற்றுக்கணக்கான மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் மட்டுமன்றி, லாஸ் ஏஞ்சலீஸ் மாநில பல்கலைக்கழகத்திலும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

குறித்த பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள ஹெமில்டன் அரங்கில் தடுப்புகள் அமைத்து மாணவர்களால் போராட்டம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், பொலிஸார் கடந்த புதன்கிழமை அங்கிருந்து மாணவர்களை வெளியேற்றியிருந்தனர்.

https://athavannews.com/2024/1381061

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க பல்கலைக்கழகங்களில் பலஸ்தீன ஆதரவு மாணவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையிலான மோதல் தொடர்கிறது - வேர்ஜினீயாவில் 25 பேர் கைது

Published By: RAJEEBAN   05 MAY, 2024 | 01:31 PM

image
 

அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீன ஆதரவாளர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றுள்ள அதேவேளை வேர்ஜினியா பல்கலைக்கழகத்தில் 25 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சனிக்கிழமை பொலிஸார் வேர்ஜினியா பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களை வெளியேற்றுவதற்காக தயாராகயிருக்கும் வீடியோக்கள் வெளியாகியிருந்தன.

ஆர்ப்பாட்டக்காரர்கள் சுதந்திர பாலஸ்தீனம் என கோசம் எழுப்பினர்.'

america_students_pro_48.jpg

அந்த பகுதியில் சட்டவிரோத ஒன்றுகூடல் இடம்பெறுவதாக காவல்துறையினர் சமூக ஊடகங்களில் எச்சரித்தனர்.

இதன் பின்னர் பொலிஸார் உள்ளே நுழைந்தவேளை மாணவர்கள் இழுத்து நிலத்தில் விழுத்தப்பட்டனர் இழுக்கப்பட்டனர் அவர் கண்கணில் எரிச்சலை ஏற்படுத்தும் திரவம் தூவப்பட்டது என மாணவர்களிற்கு உதவிபுரிந்த ஆங்கில பேராசிரியர் ஒருவர் வோசிங்டன் போஸ்டிக்கு தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் குறித்தே எங்கள் கரிசனைகள் காணப்படுகின்றன மாணவர்கள் பாதுகாப்பாகயில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பல்கலைகழகத்தின் கொள்கைக்கு விரோதமாக கூடாரங்களை மாணவர்கள் அமைத்துள்ளனர் என மாணவர்களிற்கு தெரியப்படுத்தினோம் அவற்றை அகற்றுமாறு கேட்டுக்கொண்டோம் பொலிஸாரின் உதவியை நாடினோம் என பல்கலைகழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் ஹமாஸ் மோதல்கள் தொடர்பாக அமெரிக்காவின் பல்கலைகழகங்களில் கடந்த வாரம் முழுவதும் பல ஆர்ப்பாட்டங்கள்இடம்பெற்றுள்ளதுடன் பல மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலுடன் வர்த்தகத்தில் ஈடுபடுவதை நிறுத்தவேண்டும் காசா யுத்தத்திற்கு ஆதரவாக செயற்படுவதை கைவிடவேண்டும் என கோரி பல்கலைகழக வளாகங்களில்  கூடாரங்களை  அமைத்து மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/182734

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு புறம் பாரிய அழிவினை ஏற்படுத்தும் ஆயுதங்களை கொடுத்துக்கொண்டு மறுபுறம் பொதுமக்களை கொல்லவேண்டாம் என கண்துடைப்பு நாடகம் நடத்தும் அமெரிக்க அரசு எதற்காக பாலஸ்தீனத்தின் மீது போர் தொடுப்பதில் ஆர்வமாக இருக்கிறது என தெரியவில்லை இதே போலவே இலங்கையிலும் பொதுமக்கள் அழிவிற்குக்காரணமான ஆயுதங்களையும் பயிற்சிகளையும் இந்த தரப்புகளே வழங்கியது, இரஸ்சியாவுடனான யுத்தத்திற்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு இரஸ்சியாவினால் பாதிப்பு ஏற்படலாம் என நியாயம் கூறினால் இலங்கையிலும் பலஸ்தீனத்திலும் நிகழ்த்தபட்ட, நிகழ்த்தப்படுகின்ற படுகொலையினால் அமெரிக்காவிற்கு என்ன இலாபம் என்பது புரியவில்லை.

அமெரிக்கா புதிதாக உலகை அழிப்பதற்கு புதிய ஒரு திட்டம் ஒன்றினை ஆரம்பித்துள்ளதா? அல்லது அமெரிக்க உலக ஒழுங்கிற்கு வைரஸ் வந்துவிட்டதா?

உண்மையில் அமெரிக்க குடிமக்கள் தம் கண்ணுக்கு முன்னால் நிகழும் படுகொலைகளை கண்டும் காணாமல் இருக்கும் சிந்தனையற்றவர்களாக இருப்பார்களா? எனும் சந்தேகமாக இருக்கின்றது (அவர்களது வரிப்பணத்தில்தான் இந்த படுகொலைகள் நிகழ்கின்றது அதனால் அவர்களும் இதற்கு தார்மீக பொறுப்புள்ளவர்கள்).

குறைந்த பட்ச எதிர்ப்பாக இந்த இடது சாரி அரசினை வரும் தேர்தலில் தூக்கியெறியவேண்டும் அதையாவது செய்வார்களா? ஆனால் எந்த அரசு வந்தாலும் அவர்களது கொள்கைகளில் பெரிதாக மாற்றம் வராது ஏனெனில் எரியிற வீட்டில் பிடுங்குவதுதான் அவர்களது கொள்கை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.