Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வீரப் பையன்26 said:

ஆம் ர‌னிலுட‌ன் கைகுழுக்கின‌ ஆட்க‌ள் இந்த‌ உல‌கில் நீண்ட‌ கால‌ம் வாழ்ந்ததாய் ச‌ரித்திர‌ம் கிடையாது

அன்ர‌ன் அன்ரன் பாலசிங்கம் ஜ‌யா

அத‌ற்க்கு பிற‌க்கு த‌மிழ் செல்வ‌ன் அண்ணா இப்ப‌டி ப‌ட்டிய‌ல் நீலம்

 

இப்ப‌போது ஈரான் அதிபர்..........................இனி யாரும் குள்ள‌ ந‌ரி ர‌னிலுக்கு கை கொடுத்தால் அவையில் கைக்கு அவையே மூன்று த‌ர‌ம் துப்ப‌னும்...............................................

 

இப்ப ஒருதர் பாலி மாநாட்டில்...ஏதோஓரு தொலைத் தொடர்பு தாறன் என்று நரியுடன் கைகுலுக்கினவர்...அவர்பாடும்  அப்படியோ😁

Edited by alvayan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈரான்  இந்த விபத்து சம்பந்தமாக தங்களிடம் உதவி கோரியுள்ளதாக அமெரிக்க அரசு செய்தி வெளியிட்டுள்ளதாம்.

https://www.gmx.net/magazine/politik/us-regierung-iranische-fuehrung-absturz-hilfe-gebeten-39678672

  • கருத்துக்கள உறவுகள்

ஹெலிகாப்டர் விபத்து: இரான் உதவி கேட்ட போது அமெரிக்கா என்ன செய்தது? இஸ்ரேலில் என்ன நடக்கிறது?

இரான் அதிபர் மரணம் : அமெரிக்கா மீது குற்றம்சாட்டும் இரான் முன்னாள் வெளியுறவு அமைச்சர்

பட மூலாதாரம்,GETTY

37 நிமிடங்களுக்கு முன்னர்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த செய்தி வெளியானதும் இஸ்ரேலின் சமூக ஊடகங்களில் எதிர்வினைகள் வரத் தொடங்கின. இந்த ஹெலிகாப்டர் விபத்து ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்தது.

விபத்திற்குள்ளான ஹெலிகாப்டரின் பாகங்கள் திங்கள் கிழமை காலை கண்டுபிடிக்கப்பட்டன. அதன்பின்னர் ஹெலிகாப்டரில் யாரும் உயிர் பிழைத்ததற்கான அறிகுறிகள் இல்லை என இரான் நாட்டு ஊடகம் தெரிவித்தது. ரைசியின் மரணம் உறுதி செய்யப்பட்டதும் இஸ்ரேல் சமூக ஊடகங்களில் மேலும் தீவிரமாக எதிர்வினைகள் வரத் தொடங்கின.

இரானிலும் ரைசியின் திடீர் மரணம் குறித்து சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சமீபத்தில் இரான் மற்றும் இஸ்ரேல் இடையே மோதல் ஏற்பட்டது. முதலாவதாக, சிரியாவில் உள்ள இரான் தூதரகம் மீதான தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதற்கு பதிலடியாக ஏப்ரல் 2024இல், இஸ்ரேலை ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்கியது இரான்.

 

இந்த மோதல் சம்பவங்களுக்கு மத்தியில் ரைசியும் இரானின் வெளியுறவு அமைச்சரும் திடீரென மரணமடைந்தது இஸ்ரேல் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் ரைசியின் மரணத்தில் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று இஸ்ரேல் மறுத்துள்ளது.

செய்தி முகமை ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, பெயர் கூற விரும்பாத ஒரு இஸ்ரேலிய அதிகாரி, “ரைசியின் ஹெலிகாப்டர் விபத்துக்குப் பின்னால் இஸ்ரேல் இல்லை.” என்று கூறியுள்ளார். எனினும் இஸ்ரேல் அரசிடம் இருந்து அதிகாரப்பூர்வமாக இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை.

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி கொல்லப்பட்டது தொடர்பாக இஸ்ரேலிய ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் மற்றும் அமெரிக்காவின் பங்கு குறித்து எழும் கேள்விகள் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

இரான் உதவி கேட்ட போது அமெரிக்கா என்ன செய்தது?

இரான் அதிபர் மரணம் : அமெரிக்கா மீது குற்றம்சாட்டும் இரான் முன்னாள் வெளியுறவு அமைச்சர்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின்

இரானிய செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏ கூற்றுப்படி, இந்த ஹெலிகாப்டர் விபத்துக்கு இரான் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளே காரணம் என்று இரான் முன்னாள் வெளியுறவு அமைச்சர் முகமது ஜாவத் ஜரீப் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து முகமது ஜவாத் கூறியதாவது, ‘‘இதயத்தை உலுக்கும் இந்த சம்பவத்திற்கு அமெரிக்காவும் ஒரு காரணம். விமானப் போக்குவரத்துத் துறை இரானுக்கு எதையும் விற்கக் கூடாது என்று அமெரிக்கா தடை விதித்தது. இந்த காரணத்திற்காக அதிபரும் அவரது தோழர்களும் உயிர் தியாகம் செய்யும் சூழலுக்கு தள்ளப்பட்டனர். அமெரிக்காவின் இந்த குற்றம் இரானிய மக்களின் நினைவிலும் சரித்திரத்திலும் பதிவாகியிருக்கும்.

இப்ராஹிம் ரைசியின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான போது இரான் அமெரிக்காவிடம் உதவி கோரியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் அமெரிக்கா உதவி செய்யவில்லை.

அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் திங்களன்று, “இரான் அரசாங்கம் எங்களிடம் உதவி கேட்டது. இதுபோன்ற சூழ்நிலையில் எந்த வெளிநாட்டு அரசும் உதவி கேட்டாலும் நாங்கள் உதவ தயாராக உள்ளோம் என்று இரான் அரசிடம் தெரிவித்தோம். ஆனால் இறுதியில் தளவாட பிரச்னை காரணமாக (logistical reasons) எங்களால் உதவ முடியவில்லை.” என்றார்.

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டினிடம் இந்த விவகாரத்தில் இரான் அமெரிக்காவை குற்றம் சாட்டக்கூடும் என்று கவலைப்படுகிறீர்களா? என்று கேள்வியெழுப்பட்டது.

"இந்த ஹெலிகாப்டர் விபத்தில் அமெரிக்காவுக்கு எந்த தொடர்பும் இல்லை” என்று அவர் பதிலளித்தார்.

அமெரிக்க செனட்டர் சக் ஷுமர் திங்களன்று, "அமெரிக்க உளவுத்துறை அமைப்புகளின் அதிகாரிகள் உடனான உரையாடல்களின் அடிப்படையில், இரான் அதிபர் மரணத்தில் சதி இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை” என்று கூறினார்.

 

இஸ்ரேல் ஊடகங்களின் எதிர்வினை

இரான் அதிபர் மரணம் : அமெரிக்கா மீது குற்றம்சாட்டும் இரான் முன்னாள் வெளியுறவு அமைச்சர்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

`டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல்’ என்னும் தளத்தில், ரைசியின் ஹெலிகாப்டர் விபத்திற்கும் இஸ்ரேலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ஒரு அதிகாரி கூறிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த செய்தி அறிக்கையின்படி, இஸ்ரேலின் எதிர்க்கட்சித் தலைவர் அவிக்டோர் லிபர்மேன், "ரைசியின் மரணம் இஸ்ரேல் கொள்கைகளில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாதது. அதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ரைசியின் மரண செய்தி எங்களுக்கு முக்கியமில்லை. இது இஸ்ரேலின் நிலைப்பாட்டை எந்த விதத்திலும் பாதிக்காது. இரானின் கொள்கைகளை உச்ச தலைவர் ஆயதுல்லா காமனெயி தீர்மானிக்கிறார். ரைசி ஒரு கொடூரமான மனிதர் என்பதில் சந்தேகமில்லை. அவரது மரணத்துக்கு கண்ணீர் வடிக்க மாட்டோம்.” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த செய்தி அறிக்கையில், பிரதமர் அலுவலக துணை அமைச்சர் அவி மாவோஸின் கருத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளது, “ஒரு மாதத்திற்கு முன்பு ரைசி, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினால், பிழைக்க மாட்டீர்கள் என்று மிரட்டல் விடுத்தார். ஆனால் இப்போது அவரே உயிருடன் இல்லை.” என்று பேசியுள்ளார். டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் செய்தியில், இந்த கருத்துகளை மேற்கோள் காட்டி, ரைசியின் மரணத்தை இஸ்ரேலுக்கு ஒரு நல்ல செய்தி என்று விவரித்துள்ளனர்.

ரைசி மரணத்தை தொடர்ந்து, இஸ்ரேலிய நகரமான பேட் யாமில் உள்ள ஒரு மதத் தலைவர் தனது மாணவர்களிடம் வார நாட்களில் யூதர்கள் ஓதும் பிரார்த்தனையை தவிர்க்கச் சொல்லி இருக்கிறார். பொதுவாக இந்த பிரார்த்தனைகள் பண்டிகை சமயங்களில் நிறுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தி அறிக்கையில், ரைசியின் மரணத்திற்குப் பிறகு கொண்டாட்டம், நடனம் போன்ற விஷயங்களும் சில இடங்களில் நடந்ததாக எழுதப்பட்டுள்ளது.

"தெஹ்ரானின் கசாப்புக் கடைக்காரர்”

இரான் அதிபர் மரணம் : அமெரிக்கா மீது குற்றம்சாட்டும் இரான் முன்னாள் வெளியுறவு அமைச்சர்

பட மூலாதாரம்,EPA

படக்குறிப்பு,இப்ராஹிம் ரைசி

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் எழுச்சி குறித்து `யாய் நெட்’ செய்தி இணையதளத்தில் கட்டுரையாக பகிரப்பட்டுள்ளது. அந்த கட்டுரைக்கு 'தெஹ்ரானின் கசாப்புக் கடைக்காரர்' என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

மற்றொரு செய்தி இணையதளம், `இரானின் மிகவும் வெறுக்கப்பட்ட மனிதனின் மரணம்’ என்ற தலைப்பை வழங்கியுள்ளது. ரைசியின் மரணத்துக்கு கண்டிப்பாக கண்ணீர் வராது என்று எழுதப்பட்டுள்ளது. இரான்-இராக் போரின் போது நடந்த படுகொலைகளால், அங்குள்ள மூத்த குடிமக்களின் மனதில் ரைசி குறித்து ஒருவித பயம் நிலவுகிறது.

ஹிஜாப் தொடர்பான கண்டிப்பு காரணமாக, பெண்கள் ரைசியை வெறுக்கிறார்கள் என்றும், இரானின் புரட்சிகர காவலர்களும் அவரிடமிருந்து தள்ளி இருந்ததாக அந்த செய்தி அறிக்கையில் எழுதப்பட்டுள்ளது.

இஸ்லாமிய புரட்சிக்குப் பிறகு நீதித்துறையில் பணியாற்றத் தொடங்கிய ரைசி, பல நகரங்களில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். பின்னர் நீதிபதியாகவும் ஆனார். ரைசி 1988 இல் உருவாக்கப்பட்ட உளவுத்துறை நீதிமன்றத்தில் சேர்ந்தார், அது 'மரணக் குழு' என்று பலரால் அழைக்கப்பட்டது.

ஏற்கனவே அரசியல் நடவடிக்கைகளுக்காக சிறை தண்டனை அனுபவித்து வந்த ஆயிரக்கணக்கான அரசியல் கைதிகளிடம் இந்த நீதிமன்றங்கள் மீண்டும் விசாரணை செய்தன.

இந்த நீதிமன்றங்களால் மரண தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதிகளின் சரியான எண்ணிக்கை தெரியவில்லை, ஆனால் மனித உரிமை அமைப்புகள் அவர்களில் சுமார் 5,000 ஆண்களும் பெண்களும் அடங்குவர் என்று கூறுகின்றனர். தூக்கிலிடப்பட்ட பின்னர், அவர்கள் அனைவரும் வெளியுலகிற்கு தெரியாத பெரிய புதைகுழிகளில் புதைக்கப்பட்டனர். மனித உரிமை ஆர்வலர்கள் இந்த சம்பவத்தை மனித குலத்திற்கு எதிரான குற்றம் என்று கூறுகின்றனர்.

இந்த குற்றங்களில் தனக்கு பங்கில்லை என இப்ராஹிம் ரைசி மறுத்தார். ஆனால் அவர் ஒரு முறை இரானின் முன்னாள் உச்ச தலைவர் ஆயதுல்லா காமனெயி ஃபத்வாவின் படி, இந்த தண்டனை 'பொருத்தமானது' என்று கூறினார்.

ரைசியின் உடல் தெஹ்ரானுக்கு கொண்டு வரப்படும் போது, யாரும் உண்மையாக கண்ணீர் சிந்தமாட்டார்கள் என்று `யாய் நெட்’ தெரிவிக்கிறது.

`ஜெருசலேம் போஸ்ட்’ செய்தி அறிக்கை ரைசியின் மரணம் குறித்து சமூக ஊடகங்களில் நடந்து வரும் பரபரப்பை பற்றி குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேலின் சமூக ஊடகங்களில் என்ன நடக்கிறது?

இஸ்ரேலில் சில சமூக ஊடக கணக்குகளில் இருந்து ரைசியின் மரணம் குறித்த மீம்ஸ்கள் பகிரப்படுகின்றன. சிலர் ரைசியின் ஹெலிகாப்டரை `எலி காப்டர்’ என்ற மொசாட் ஏஜென்ட் ஓட்டிச் சென்றதாக கிண்டலாக பகிர்ந்துள்ளனர்.

எலி கோஹன் என்பவர் இஸ்ரேலின் உளவாளி. இஸ்லாமில் `கமில்’ (Kamil) நிலையை எட்டியதன் மூலம், கோஹன் சிரியா அதிபருடன் மிகவும் நெருக்கமாகி விட்டார், அவர் சிரியாவின் துணை பாதுகாப்பு அமைச்சராக ஆகும் நிலையில் இருந்தார். 1967 அரபு-இஸ்ரேல் போரில் இஸ்ரேலின் வெற்றியில் கோஹன் சேகரித்த உளவுத்துறை தகவல் முக்கிய பங்கு வகித்ததாக கூறப்படுகிறது. சமூக ஊடகங்களில் பேசப்பட்டு வரும் `எலி காப்டர்’ என்ற பெயர் எலி கோஹனின் பெயருடன் இணைக்கப்பட்டு பேசப்படுகிறது.

இஸ்ரேலின் பிரெஞ்சு மொழி செய்தி சேனலின் (I-24) நிருபரான டேனியல் ஹைக், `எல்லி காப்டர்’ நகைச்சுவை பற்றி செய்தியாக வெளியிட்டார். இருப்பினும், மக்கள் இதை விமர்சித்ததால், சேனல் தரப்பு மன்னிப்பு கேட்டது.

 
இரான் அதிபர் மரணம் : அமெரிக்கா மீது குற்றம்சாட்டும் இரான் முன்னாள் வெளியுறவு அமைச்சர்

பட மூலாதாரம்,BBC/PUNEET KUMAR

படக்குறிப்பு,எலியாஹு பென் ஷால் கோஹன் அல்லது `எலி கோஹன்'

ரைசியின் மரணத்தை இஸ்ரேலிய தலைவர்கள் கொண்டாடினார்களா?

ரைசியின் மரணத்தை இஸ்ரேலிய தலைவர்கள் கொண்டாடியதாக துருக்கிய செய்தி நிறுவனம் அனடோலு (Anadolu) தெரிவித்துள்ளது. கலாசார அமைச்சர் அமிச்சாய் எலியாஹு ஒரு கோப்பையில் ஒயின் இருக்கும் படத்தை X தளத்தில் இல் வெளியிட்டு, `சியர்ஸ்’ என்று பகிர்ந்துள்ளார்.

அவர் மற்றொரு ட்வீட் பதிவில், "நேற்றிரவு வரை பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் மரணத்தை விரும்பிய இந்த பைத்தியக்காரர்களும், வலதுசாரி மக்களும், இரான் கொலையாளியின் மரணத்தை நாம் கொண்டாட வேண்டாம் என்று விரும்புகிறார்கள்.” என்று பதிவிட்டுள்ளார்.

சில இஸ்ரேலிய தலைவர்களின் அறிக்கைகள் இந்த செய்தி அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. அவர்கள் ரைசியின் மரணத்திற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டாம் என்றும், ரைசியின் பழைய அறிக்கைகளை மேற்கோள் காட்டியும் பதிவிட்டுள்ளனர்.

இப்ராஹிம் ரைசியின் மரணம் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.

https://www.bbc.com/tamil/articles/c10049qge74o

  • கருத்துக்கள உறவுகள்

 

Iran Holds Funeral Procession for Late President Raisi, Foreign Minister Amirabdollahian

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஏராளன் said:

ஹெலிகாப்டர் விபத்து: இரான் உதவி கேட்ட போது அமெரிக்கா என்ன செய்தது? இஸ்ரேலில் என்ன நடக்கிறது?

இரான் அதிபர் மரணம் : அமெரிக்கா மீது குற்றம்சாட்டும் இரான் முன்னாள் வெளியுறவு அமைச்சர்

பட மூலாதாரம்,GETTY

37 நிமிடங்களுக்கு முன்னர்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த செய்தி வெளியானதும் இஸ்ரேலின் சமூக ஊடகங்களில் எதிர்வினைகள் வரத் தொடங்கின. இந்த ஹெலிகாப்டர் விபத்து ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்தது.

விபத்திற்குள்ளான ஹெலிகாப்டரின் பாகங்கள் திங்கள் கிழமை காலை கண்டுபிடிக்கப்பட்டன. அதன்பின்னர் ஹெலிகாப்டரில் யாரும் உயிர் பிழைத்ததற்கான அறிகுறிகள் இல்லை என இரான் நாட்டு ஊடகம் தெரிவித்தது. ரைசியின் மரணம் உறுதி செய்யப்பட்டதும் இஸ்ரேல் சமூக ஊடகங்களில் மேலும் தீவிரமாக எதிர்வினைகள் வரத் தொடங்கின.

இரானிலும் ரைசியின் திடீர் மரணம் குறித்து சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சமீபத்தில் இரான் மற்றும் இஸ்ரேல் இடையே மோதல் ஏற்பட்டது. முதலாவதாக, சிரியாவில் உள்ள இரான் தூதரகம் மீதான தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதற்கு பதிலடியாக ஏப்ரல் 2024இல், இஸ்ரேலை ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்கியது இரான்.

 

இந்த மோதல் சம்பவங்களுக்கு மத்தியில் ரைசியும் இரானின் வெளியுறவு அமைச்சரும் திடீரென மரணமடைந்தது இஸ்ரேல் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் ரைசியின் மரணத்தில் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று இஸ்ரேல் மறுத்துள்ளது.

செய்தி முகமை ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, பெயர் கூற விரும்பாத ஒரு இஸ்ரேலிய அதிகாரி, “ரைசியின் ஹெலிகாப்டர் விபத்துக்குப் பின்னால் இஸ்ரேல் இல்லை.” என்று கூறியுள்ளார். எனினும் இஸ்ரேல் அரசிடம் இருந்து அதிகாரப்பூர்வமாக இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை.

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி கொல்லப்பட்டது தொடர்பாக இஸ்ரேலிய ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் மற்றும் அமெரிக்காவின் பங்கு குறித்து எழும் கேள்விகள் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

இரான் உதவி கேட்ட போது அமெரிக்கா என்ன செய்தது?

இரான் அதிபர் மரணம் : அமெரிக்கா மீது குற்றம்சாட்டும் இரான் முன்னாள் வெளியுறவு அமைச்சர்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின்

இரானிய செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏ கூற்றுப்படி, இந்த ஹெலிகாப்டர் விபத்துக்கு இரான் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளே காரணம் என்று இரான் முன்னாள் வெளியுறவு அமைச்சர் முகமது ஜாவத் ஜரீப் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து முகமது ஜவாத் கூறியதாவது, ‘‘இதயத்தை உலுக்கும் இந்த சம்பவத்திற்கு அமெரிக்காவும் ஒரு காரணம். விமானப் போக்குவரத்துத் துறை இரானுக்கு எதையும் விற்கக் கூடாது என்று அமெரிக்கா தடை விதித்தது. இந்த காரணத்திற்காக அதிபரும் அவரது தோழர்களும் உயிர் தியாகம் செய்யும் சூழலுக்கு தள்ளப்பட்டனர். அமெரிக்காவின் இந்த குற்றம் இரானிய மக்களின் நினைவிலும் சரித்திரத்திலும் பதிவாகியிருக்கும்.

இப்ராஹிம் ரைசியின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான போது இரான் அமெரிக்காவிடம் உதவி கோரியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் அமெரிக்கா உதவி செய்யவில்லை.

அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் திங்களன்று, “இரான் அரசாங்கம் எங்களிடம் உதவி கேட்டது. இதுபோன்ற சூழ்நிலையில் எந்த வெளிநாட்டு அரசும் உதவி கேட்டாலும் நாங்கள் உதவ தயாராக உள்ளோம் என்று இரான் அரசிடம் தெரிவித்தோம். ஆனால் இறுதியில் தளவாட பிரச்னை காரணமாக (logistical reasons) எங்களால் உதவ முடியவில்லை.” என்றார்.

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டினிடம் இந்த விவகாரத்தில் இரான் அமெரிக்காவை குற்றம் சாட்டக்கூடும் என்று கவலைப்படுகிறீர்களா? என்று கேள்வியெழுப்பட்டது.

"இந்த ஹெலிகாப்டர் விபத்தில் அமெரிக்காவுக்கு எந்த தொடர்பும் இல்லை” என்று அவர் பதிலளித்தார்.

அமெரிக்க செனட்டர் சக் ஷுமர் திங்களன்று, "அமெரிக்க உளவுத்துறை அமைப்புகளின் அதிகாரிகள் உடனான உரையாடல்களின் அடிப்படையில், இரான் அதிபர் மரணத்தில் சதி இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை” என்று கூறினார்.

 

இஸ்ரேல் ஊடகங்களின் எதிர்வினை

இரான் அதிபர் மரணம் : அமெரிக்கா மீது குற்றம்சாட்டும் இரான் முன்னாள் வெளியுறவு அமைச்சர்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

`டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல்’ என்னும் தளத்தில், ரைசியின் ஹெலிகாப்டர் விபத்திற்கும் இஸ்ரேலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ஒரு அதிகாரி கூறிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த செய்தி அறிக்கையின்படி, இஸ்ரேலின் எதிர்க்கட்சித் தலைவர் அவிக்டோர் லிபர்மேன், "ரைசியின் மரணம் இஸ்ரேல் கொள்கைகளில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாதது. அதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ரைசியின் மரண செய்தி எங்களுக்கு முக்கியமில்லை. இது இஸ்ரேலின் நிலைப்பாட்டை எந்த விதத்திலும் பாதிக்காது. இரானின் கொள்கைகளை உச்ச தலைவர் ஆயதுல்லா காமனெயி தீர்மானிக்கிறார். ரைசி ஒரு கொடூரமான மனிதர் என்பதில் சந்தேகமில்லை. அவரது மரணத்துக்கு கண்ணீர் வடிக்க மாட்டோம்.” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த செய்தி அறிக்கையில், பிரதமர் அலுவலக துணை அமைச்சர் அவி மாவோஸின் கருத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளது, “ஒரு மாதத்திற்கு முன்பு ரைசி, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினால், பிழைக்க மாட்டீர்கள் என்று மிரட்டல் விடுத்தார். ஆனால் இப்போது அவரே உயிருடன் இல்லை.” என்று பேசியுள்ளார். டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் செய்தியில், இந்த கருத்துகளை மேற்கோள் காட்டி, ரைசியின் மரணத்தை இஸ்ரேலுக்கு ஒரு நல்ல செய்தி என்று விவரித்துள்ளனர்.

ரைசி மரணத்தை தொடர்ந்து, இஸ்ரேலிய நகரமான பேட் யாமில் உள்ள ஒரு மதத் தலைவர் தனது மாணவர்களிடம் வார நாட்களில் யூதர்கள் ஓதும் பிரார்த்தனையை தவிர்க்கச் சொல்லி இருக்கிறார். பொதுவாக இந்த பிரார்த்தனைகள் பண்டிகை சமயங்களில் நிறுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தி அறிக்கையில், ரைசியின் மரணத்திற்குப் பிறகு கொண்டாட்டம், நடனம் போன்ற விஷயங்களும் சில இடங்களில் நடந்ததாக எழுதப்பட்டுள்ளது.

"தெஹ்ரானின் கசாப்புக் கடைக்காரர்”

இரான் அதிபர் மரணம் : அமெரிக்கா மீது குற்றம்சாட்டும் இரான் முன்னாள் வெளியுறவு அமைச்சர்

பட மூலாதாரம்,EPA

படக்குறிப்பு,இப்ராஹிம் ரைசி

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் எழுச்சி குறித்து `யாய் நெட்’ செய்தி இணையதளத்தில் கட்டுரையாக பகிரப்பட்டுள்ளது. அந்த கட்டுரைக்கு 'தெஹ்ரானின் கசாப்புக் கடைக்காரர்' என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

மற்றொரு செய்தி இணையதளம், `இரானின் மிகவும் வெறுக்கப்பட்ட மனிதனின் மரணம்’ என்ற தலைப்பை வழங்கியுள்ளது. ரைசியின் மரணத்துக்கு கண்டிப்பாக கண்ணீர் வராது என்று எழுதப்பட்டுள்ளது. இரான்-இராக் போரின் போது நடந்த படுகொலைகளால், அங்குள்ள மூத்த குடிமக்களின் மனதில் ரைசி குறித்து ஒருவித பயம் நிலவுகிறது.

ஹிஜாப் தொடர்பான கண்டிப்பு காரணமாக, பெண்கள் ரைசியை வெறுக்கிறார்கள் என்றும், இரானின் புரட்சிகர காவலர்களும் அவரிடமிருந்து தள்ளி இருந்ததாக அந்த செய்தி அறிக்கையில் எழுதப்பட்டுள்ளது.

இஸ்லாமிய புரட்சிக்குப் பிறகு நீதித்துறையில் பணியாற்றத் தொடங்கிய ரைசி, பல நகரங்களில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். பின்னர் நீதிபதியாகவும் ஆனார். ரைசி 1988 இல் உருவாக்கப்பட்ட உளவுத்துறை நீதிமன்றத்தில் சேர்ந்தார், அது 'மரணக் குழு' என்று பலரால் அழைக்கப்பட்டது.

ஏற்கனவே அரசியல் நடவடிக்கைகளுக்காக சிறை தண்டனை அனுபவித்து வந்த ஆயிரக்கணக்கான அரசியல் கைதிகளிடம் இந்த நீதிமன்றங்கள் மீண்டும் விசாரணை செய்தன.

இந்த நீதிமன்றங்களால் மரண தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதிகளின் சரியான எண்ணிக்கை தெரியவில்லை, ஆனால் மனித உரிமை அமைப்புகள் அவர்களில் சுமார் 5,000 ஆண்களும் பெண்களும் அடங்குவர் என்று கூறுகின்றனர். தூக்கிலிடப்பட்ட பின்னர், அவர்கள் அனைவரும் வெளியுலகிற்கு தெரியாத பெரிய புதைகுழிகளில் புதைக்கப்பட்டனர். மனித உரிமை ஆர்வலர்கள் இந்த சம்பவத்தை மனித குலத்திற்கு எதிரான குற்றம் என்று கூறுகின்றனர்.

இந்த குற்றங்களில் தனக்கு பங்கில்லை என இப்ராஹிம் ரைசி மறுத்தார். ஆனால் அவர் ஒரு முறை இரானின் முன்னாள் உச்ச தலைவர் ஆயதுல்லா காமனெயி ஃபத்வாவின் படி, இந்த தண்டனை 'பொருத்தமானது' என்று கூறினார்.

ரைசியின் உடல் தெஹ்ரானுக்கு கொண்டு வரப்படும் போது, யாரும் உண்மையாக கண்ணீர் சிந்தமாட்டார்கள் என்று `யாய் நெட்’ தெரிவிக்கிறது.

`ஜெருசலேம் போஸ்ட்’ செய்தி அறிக்கை ரைசியின் மரணம் குறித்து சமூக ஊடகங்களில் நடந்து வரும் பரபரப்பை பற்றி குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேலின் சமூக ஊடகங்களில் என்ன நடக்கிறது?

இஸ்ரேலில் சில சமூக ஊடக கணக்குகளில் இருந்து ரைசியின் மரணம் குறித்த மீம்ஸ்கள் பகிரப்படுகின்றன. சிலர் ரைசியின் ஹெலிகாப்டரை `எலி காப்டர்’ என்ற மொசாட் ஏஜென்ட் ஓட்டிச் சென்றதாக கிண்டலாக பகிர்ந்துள்ளனர்.

எலி கோஹன் என்பவர் இஸ்ரேலின் உளவாளி. இஸ்லாமில் `கமில்’ (Kamil) நிலையை எட்டியதன் மூலம், கோஹன் சிரியா அதிபருடன் மிகவும் நெருக்கமாகி விட்டார், அவர் சிரியாவின் துணை பாதுகாப்பு அமைச்சராக ஆகும் நிலையில் இருந்தார். 1967 அரபு-இஸ்ரேல் போரில் இஸ்ரேலின் வெற்றியில் கோஹன் சேகரித்த உளவுத்துறை தகவல் முக்கிய பங்கு வகித்ததாக கூறப்படுகிறது. சமூக ஊடகங்களில் பேசப்பட்டு வரும் `எலி காப்டர்’ என்ற பெயர் எலி கோஹனின் பெயருடன் இணைக்கப்பட்டு பேசப்படுகிறது.

இஸ்ரேலின் பிரெஞ்சு மொழி செய்தி சேனலின் (I-24) நிருபரான டேனியல் ஹைக், `எல்லி காப்டர்’ நகைச்சுவை பற்றி செய்தியாக வெளியிட்டார். இருப்பினும், மக்கள் இதை விமர்சித்ததால், சேனல் தரப்பு மன்னிப்பு கேட்டது.

 

இரான் அதிபர் மரணம் : அமெரிக்கா மீது குற்றம்சாட்டும் இரான் முன்னாள் வெளியுறவு அமைச்சர்

பட மூலாதாரம்,BBC/PUNEET KUMAR

படக்குறிப்பு,எலியாஹு பென் ஷால் கோஹன் அல்லது `எலி கோஹன்'

ரைசியின் மரணத்தை இஸ்ரேலிய தலைவர்கள் கொண்டாடினார்களா?

ரைசியின் மரணத்தை இஸ்ரேலிய தலைவர்கள் கொண்டாடியதாக துருக்கிய செய்தி நிறுவனம் அனடோலு (Anadolu) தெரிவித்துள்ளது. கலாசார அமைச்சர் அமிச்சாய் எலியாஹு ஒரு கோப்பையில் ஒயின் இருக்கும் படத்தை X தளத்தில் இல் வெளியிட்டு, `சியர்ஸ்’ என்று பகிர்ந்துள்ளார்.

அவர் மற்றொரு ட்வீட் பதிவில், "நேற்றிரவு வரை பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் மரணத்தை விரும்பிய இந்த பைத்தியக்காரர்களும், வலதுசாரி மக்களும், இரான் கொலையாளியின் மரணத்தை நாம் கொண்டாட வேண்டாம் என்று விரும்புகிறார்கள்.” என்று பதிவிட்டுள்ளார்.

சில இஸ்ரேலிய தலைவர்களின் அறிக்கைகள் இந்த செய்தி அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. அவர்கள் ரைசியின் மரணத்திற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டாம் என்றும், ரைசியின் பழைய அறிக்கைகளை மேற்கோள் காட்டியும் பதிவிட்டுள்ளனர்.

இப்ராஹிம் ரைசியின் மரணம் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.

https://www.bbc.com/tamil/articles/c10049qge74o

நாங்கள் சடங்கு, சாமத்திய வீடுகள் போன்றவற்றை பெரும் எடுப்புச் சாய்ப்புகளுடன், எங்களின் நிதி நிலைமைகளுக்கு கட்டுப்படியாகும் அளவைத் தாண்டி மிக மிக அதிகமாகவே செய்வது போல இருக்கின்றது ஈரான் மற்றும் சில நாடுகளின் நடவடிக்கைகள். எல்லாமே வெறும் பூச்சாண்டி ஆகத் தெரிகின்றது கடைசியில்.

ரஷ்யா - உக்ரேன் சண்டையில் ரஷ்யாவிற்கு ட்ரோன்கள் கொடுத்தோம், அதி உயர் தொழில்நுட்பம் என்றனர். கடைசியில் மலையில் விழுந்த இவர்களின் ஹெலிகாப்டரை இவர்களின் ட்ரோன் எதுவும் கண்டு பிடிக்கவில்லை. துருக்கியின் ட்ரோன் ஒன்றே முதலில் சிதைவுகளை கண்டு பிடித்தது. அமெரிக்கா உதவி செய்யவில்லை என்றால்......ஏனப்பா, நீங்கள் தானே அணுகுண்டு கூட செய்கின்ற தொழில்நுட்பம் உங்களிடம் இருக்கின்றது என்றீர்கள். இப்ப என்னடா என்றால், இரவில் இருட்டில் தேடுவதற்கு யாராவது ஒரு விமானம் கொடுங்கள் என்கின்றீர்கள். சரி அப்படித்தான் ஒரு தேவை உங்களுக்கு இருந்தாலும், எங்கேயப்பா உங்களின் நண்பர்களான உச்ச தொழில்நுட்ப வல்லுநர்கள் - சீனா, ரஷ்யா, வட கொரியா....?   

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்பான கருத்துக்கள்.

1 hour ago, ரசோதரன் said:

இப்ப என்னடா என்றால், இரவில் இருட்டில் தேடுவதற்கு யாராவது ஒரு விமானம் கொடுங்கள் என்கின்றீர்கள். சரி அப்படித்தான் ஒரு தேவை உங்களுக்கு இருந்தாலும், எங்கேயப்பா உங்களின் நண்பர்களான உச்ச தொழில்நுட்ப வல்லுநர்கள் - சீனா, ரஷ்யா, வட கொரியா....?   

ஈரானையும் எல்லோ  சீனா ரஷ்யா வட கொரியாவுடன் தொழில்நுட்ப வல்லுநர் நாடாக புலம் பெயர்ந்த ஈழதமிழர்கள் சிலர் அங்கீகரித்து உள்ளனர் 🤣

1 hour ago, ரசோதரன் said:

நாங்கள் சடங்கு, சாமத்திய வீடுகள் போன்றவற்றை பெரும் எடுப்புச் சாய்ப்புகளுடன், எங்களின் நிதி நிலைமைகளுக்கு கட்டுப்படியாகும் அளவைத் தாண்டி மிக மிக அதிகமாகவே செய்வது போல

மிகச் சரியான உதாரணம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, ரசோதரன் said:

ரஷ்யா - உக்ரேன் சண்டையில் ரஷ்யாவிற்கு ட்ரோன்கள் கொடுத்தோம், அதி உயர் தொழில்நுட்பம் என்றனர். கடைசியில் மலையில் விழுந்த இவர்களின் ஹெலிகாப்டரை இவர்களின் ட்ரோன் எதுவும் கண்டு பிடிக்கவில்லை. துருக்கியின் ட்ரோன் ஒன்றே முதலில் சிதைவுகளை கண்டு பிடித்தது. அமெரிக்கா உதவி செய்யவில்லை என்றால்......ஏனப்பா, நீங்கள் தானே அணுகுண்டு கூட செய்கின்ற தொழில்நுட்பம் உங்களிடம் இருக்கின்றது என்றீர்கள். இப்ப என்னடா என்றால், இரவில் இருட்டில் தேடுவதற்கு யாராவது ஒரு விமானம் கொடுங்கள் என்கின்றீர்கள். சரி அப்படித்தான் ஒரு தேவை உங்களுக்கு இருந்தாலும், எங்கேயப்பா உங்களின் நண்பர்களான உச்ச தொழில்நுட்ப வல்லுநர்கள் - சீனா, ரஷ்யா, வட கொரியா....? 

உலக கண்காணிப்பு தொழில் நுட்பத்தில் அமெரிக்கா வல்லமை  உடையது என புட்டின் அவர்களே பாராட்டியுள்ளார். அந்த காணொளியை தேடி இணைக்கின்றேன்.
அதை விட அமெரிக்காவை யாரும் தரக்குறைவாக  மதிப்பிடுவதில்லை. மாறாக அவர்களின் வல்லாதிக்க போக்கையே எதிர்க்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

எழுத்தாளர் சாரு ஒரு தடவை ஒரு படத்தை விமர்சித்து விட்டார், ஏதோ அஜித் அல்லது விஜய் படம் என்று நினைக்கின்றேன். சாரு 'இது என்ன கொடுமை, இந்தப் படங்களை எல்லாம் எப்படி ஒரு மனிதன் பார்க்கிறது, நான் மாடியிலிருந்தே குதித்து இருப்பேன்....' என்று அந்தப் படத்தை கறாராக கடுமையாக விமர்சித்து விட்டார். விட்டார்களா அந்த கதாநாயகனின் ரசிகர்கள்........ 'யாரடா சாரு, அவன் என்ன பெரிய இவனா...' என்று கேட்டு, சாரு வீட்டிற்கு ஆட்டோ அனுப்பப் போவதாக வெருட்டினார்கள். அதற்குப் பிறகு சாரு சினிமா விமர்சனமே இனி வேண்டாம் என்று ஓடி விட்டார்.

இங்கே யாழ் களத்திலும் சில விடயங்களில் ஒரு ரசிகர் மனநிலை இருக்கின்றது போல........என்னவோ போங்கள், பொழுது போகுது தானே........😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈரான் ஜனாதிபதியின் ஜனாசா நல்லடக்கம் இன்று

sachinthaMay 23, 2024
wld03-1.jpg

ஹெலிகொப்டர் விபத்தில் கொல்லப்பட்ட ஈரான் ஜனாதிபதி, வெளியுறவு அமைச்சர் மற்றும் ஏனையவர்களுக்காக அந்நாட்டு உயர்மட்டத் தலைவர் ஆயதொல்லா அலி காமெய்னி நேற்று தொழுகை நடத்தினார்.

ஈரானிய கொடி போர்த்திய இறந்தவர்களின் உடல்கள் அடங்கிய பேழைகள் டெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டு பெரும் எண்ணிக்கையான மக்களுக்கு முன் உயர்மட்டத் தலைவர் ஜனாஸா தொழுகையை நடத்தினார்.

ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிர் அப்துல்லாஹியன் மற்றும் மேலும் ஆறு பேர் சென்ற ஹெலி கடந்த ஞாயிற்றுக்கிழமை அசர்பைஜான் நாட்டு எல்லைக்கு அருகில் விபத்துக்குள்ளாகியதில் ஒருவரும் உயிர் தப்பவில்லை.

‘இறைவனே நாம் அவரிடம் நன்மையைத் தவிர வேறு எதனையும் பார்க்கவில்லை’ என்று உயர்மட்டத் தலைவர் பிரார்த்தனையின்போது தெரிவித்தார்.

தொடர்ந்து அந்த பேழைகள் மக்களால் சுமந்து செல்லப்பட்டதோடு வெளியே ‘அமெரிக்கா ஒழிக’ என்ற கோசமும் எழுப்பப்பட்டது. இந்த இறுதிக் கிரியையில் பல வெளிநாட்டு தலைவர்களும் பங்கேற்றனர்.

ஈரான் ஜனாதிபதியின் இறுதிக் கிரியை கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அவரது உடல் தெற்கு கொராசன் மாகாணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் அவரது சொந்த ஊரான மஷாத்துக்கு எடுத்து வரப்படவுள்ளது. இன்று (23) மாலை இறுதிச் சடங்குகளுக்குப் பின்னர் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

 

https://www.thinakaran.lk/2024/05/23/world/62483/ஈரான்-ஜனாதிபதியின்-ஜனாச/

  • கருத்துக்கள உறவுகள்

இதோட இரான் திருந்தவேணும், இல்லை எண்டு அடம்பிடிச்சால் நாங்கள் என்னேய்யலும்?!👀

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாலி said:

இதோட இரான் திருந்தவேணும், இல்லை எண்டு அடம்பிடிச்சால் நாங்கள் என்னேய்யலும்?!👀

சீன‌ன் தைய்வான் கூட‌ சீண்ட‌ல் இனி இந்த‌ செய்திக்கு தான் முத‌ல் இட‌ம்

ர‌ஸ்சியா சீனா இந்தியா
இந்த‌ மூன்று நாடுக‌ளும் ஈரானுக்கு துணையாக‌ இருப்போம் உத‌வியும் செய்வோம் என்று அறிவித்து இருந்தார்க‌ள்.................................

  • கருத்துக்கள உறவுகள்

ஈரான் மீதான பொருளாதார தடை மிக நீண்டகால நடைமுறையிலுள்ளது, இந்த தடைகளின் பாதிப்பிலிருந்தும் ஒரு சவால் விடும் தேசமாக உள்ளது.

பலஸ்தீன இஸ்ரேல் போர் ஆரம்பத்தில் இந்தியா தனது ஆதரவினை இஸ்ரேலிற்கு வழ்ங்கியிருந்தது, அதற்கு கார்கில் போரில் இந்தியாவிற்கு தேவையான ஆட்லறி குண்டுகளை இரஸ்சியாவிடமிருந்து இஸ்ரேல் மூலமாக உடனடியாக பெற்றுகொண்டது என பல காரணங்கள் கூறப்பட்டது.

ஆனால் இஸ்ரேல் எதிர்யான ஈரானின் ஜனாதிபதி மரணத்திற்கு இந்தியா தற்போது துக்கதினம் அனுஸ்டிக்கிறது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் இந்தியாவின் வெளியுறவு கொள்கை என்பது இந்திய நலன் என கூறுகிறார், இந்த இந்தியாவின் கொள்கை நிலைப்பாட்டிற்கு ஆசான் இலங்கைதான், மேற்கு சீனா, இந்தியா, பாகிஸ்தான், இரஸ்சியா என எதிர் எதிரணிகளுடன் ஒரே நேரத்தில் நல்லுறவினை பேணும் அதே நேரம் ஒரு குறித்த தரப்பு அழுத்தம் கொடுக்கும் போது அவர்களது எதிர்ப்பாசறையில் இருந்து இலங்கைக்கு ஆதரவாகவும் அழுத்தம் கொடுப்பவர்களுக்கு கண்டனம் கொடுக்கும் நிலையில் இலங்கை உள்ளது.

ஏன் ஈரானின் அதிபருக்கு இலங்கை கூட அஞ்சலி செலுத்துகிறது ஏன் இவ்வாறு நாடுகள் ஈரானிற்கு திடீர் ஆதரவு செலுத்துகின்றன.

தாராள மய பொருளாதாரத்தின் அடிப்படை தங்குதடையற்ற வர்த்தகம், ஆனால் தற்போதுள்ள உலகம் பொருளாதார தடையினை ஆயுதமாக பயன்படுத்த ஆரம்பித்த பின்னர் ஒரு புது வாய்ப்பினை வளர்ந்து வரும் நாடுகளுக்கு உருவாக்கிவிட்டுள்ளது அது இடைத்தரகர்களாக வர்த்தக செயற்பாட்டில் ஈடுபடுவது, இதனை ஐ எம் எப் இணைப்புநாடுகள் என அழைகிறது, இதன் மூலம் பொருளாதார தடைகளால் உலக பொருளாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்பினை இந்த நாடுகள்நிவர்த்தி செய்கின்றன, இவை வர்த்கக தடை உள்ள நாடுகளுக்கு பொருள்களை பெற்றுக்கொடுப்பதுடன் அவர்களது பொருள்களை பொருளாதார தடைவிதித்த நாடுகளுக்கே வழ்ங்குகின்றன அவற்றில் மெக்சிக்கோ, வியட்நாம், இந்தியா என்பன முன்னிற்கின்றன இந்த ஓட்ட போட்டில்யில் இலங்கையும் இணைய விரும்புகிறது, இலங்கை மட்டுமல்ல வேறு நாடுகளும் விரும்புகிறன.

மறுவளமாக இஸ்ரேலின் நிலை கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆகிறது.

எமது பிரச்சினைகான தீர்வினை இந்தியா மூலமாகத்தான் பெறுவோம் ஒரு சாராரும் மேற்கு நாடுகளுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் எனும் ஒரு சாராரும் கறுப்பு வெள்ளையாக சிந்தித்து ஒரே வட்டத்திற்குள் நாம் இருக்க உலகம் எம்மை கடந்து சென்றுகொண்டிருக்கிறது.

நாமும் மாறவேண்டும், 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வீரப் பையன்26 said:

ர‌ஸ்சியா சீனா இந்தியா
இந்த‌ மூன்று நாடுக‌ளும் ஈரானுக்கு துணையாக‌ இருப்போம் உத‌வியும் செய்வோம் என்று அறிவித்து இருந்தார்க‌ள்.................................

 ஓம் உறவே ரஷ்யா சீனா இந்தியா ஈரானும்  பிரிக்ஸ் என்ற கூட்டிலும் இருக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

 ஓம் உறவே ரஷ்யா சீனா இந்தியா ஈரானும்  பிரிக்ஸ் என்ற கூட்டிலும் இருக்கின்றார்கள்.

அவ‌ங்க‌ள் இன்னும் ப‌ல‌ நாட்டை இணைக்க‌ போகின‌ம் பிரிக்ஸ்சுக்கை அதில் ஈரானும் இணைய‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு

நெட்டோ அமைப்பை போல‌ இவ‌ர்க‌ளும் த‌ங்க‌ட‌ அமைப்பை பெரிப்பிக்கினம் உற‌வே

ஈரான் அதிவ‌ரின் ம‌ர‌ண‌த்துக்கு ர‌ஸ்சியா த‌ன‌து நாட்டின் தேடும் ப‌டைய‌ உட‌ன‌ அனுப்பி வைச்ச‌து 

ஈரான் அதிவ‌ரின் ம‌ர‌ண‌த்துக்கு இந்தியா த‌ன‌து நாட்டு கொடிய‌ அர க‌ம்ப‌த்தில் ப‌ற‌க்க‌ விட்ட‌வை............................. 

புட்டினின் அறிக்கையில் தான் த‌ன‌து ச‌கோத‌ர‌னை இழ‌ந்து விட்டேன் என்று க‌ண்ணீர் ம‌ல்க‌ அறிக்கை வெளியிட்டு இருந்தார்

ஈரான் அதிப‌ரும் புட்டினும் நேரில் ச‌ந்திச்சு இருக்கின‌ம் உக்கிரேன் போர் ஆர‌ம்பிச்ச‌ கால‌ க‌ட்ட‌த்தில் அல்ல‌து அத‌ற்க்கு முத‌லாக‌ கூட‌ இருக்க‌லாம் உற‌வே............................................

  • கருத்துக்கள உறவுகள்

ஈரான் ஜனாதிபதியின் ஹெலிக்கொப்டர் மீது தாக்குதல் நடத்தப்பட்டமைக்கான அறிகுறிகள் இல்லை - ஈரான் இராணுவம்

24 MAY, 2024 | 03:40 PM
image
 

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் ஹெலிக்கொப்டர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமைக்கான அறிகுறிகள் எவையும் இல்லை என ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது.

மலைப்பகுதியில் விழுந்ததும் ஹெலிக்கொப்டர் தீப்பிடித்து எரிந்துள்ளது அது தாக்கப்பட்டமைக்கான அடையாளங்கள் இல்லை என ஈரான் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர் என ஏபி செய்தி வெளியிட்டுள்ளது.

ஹெலிக்கொப்டர் விபத்து குறித்து விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஈரான் இராணுவத்தின் இந்த அறிக்கை தொலைக்காட்சியிலும் வெளியாகியுள்ளது.

ஹெலிக்கொப்டர் விபத்திற்கு எவர்மீது குற்றச்சாட்டுகள் அந்த அறிக்கையில் சுமத்தப்படாதமை குறிப்பிடத்தக்கது.

ஹெலிக்கொப்டருடனான தொடர்பாடல்களின் போது சந்தேகத்திற்கு இடமான எந்த தகவலும் வெளியாகவில்லை எனவும் ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/184390

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.