Jump to content

தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !


Recommended Posts

ஒரு விடயம் 

இங்கு புலம் , நிலம் ஆகிய சொற்களை வெவ்வேறு அர்த்தத்தில் பயன்படுத்தி வருகின்றீர்கள் என்பதை காண முடிகின்றது.

புலம் என்றால் நிலம் மற்றும் நாம் வாழ்ந்த நாடு என்று பொருள்படும். அதனால் தான் புலம் - பெயர்ந்தவர்கள் என அழைக்கப்படுகின்றோம். 

"புலத்தில் உள்ளவர்களும் நிலத்தில் உள்ளவர்களும்" என குறிப்பிடும் போது இரண்டும் ஒரே தரப்பினரைத்தான் குறிப்பிடப்படுகின்றது.

 

https://ta.wiktionary.org/wiki/புலம்

ஏற்கனவே யாழிலும் இது தொடர்பாக உரையாடப்பட்டுள்ளது

என் புரிதல் தவறேன்றால் விளக்கவும்.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • Replies 86
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

satan

சரத் பொன் சேகா உறுதியாகவும் தெளிவாகவும் கூறியிருந்தார், "கிளிநொச்சியோடு நம் போரை முடிவுக்கு கொண்டு வருவதே நமது திட்டமாக இருந்தது, ஆனால் இந்தியாவே நமது போரை தொடர்ந்து செல்ல வற்புறுத்தியது." "மஹிந்தா சொ

satan

மிகச் சரியான பேச்சுத்தான் அது! சரணடைந்த புலிப்போராளிகளுக்கு, பொது மக்களுக்கு என்ன நடந்ததென தெரியாத, தெரிய மறுக்கும் மக்களின் பேச்சது. பல லட்ஷம் மக்கள் வன்னியில் சிக்குண்டிருந்த போது, வெறும் எழுபத்தையா

Kandiah57

தேர்தலில் போட்டியிட ஒவ்வொரு குடிமகனுக்கும். உரிமை உண்டு”   அதேநேரம் தேர்தலில் போட்டியிடாதே  என்று சொல்ல எவருக்கும் உரிமையில்லை   இந்த கூட்டம் ரணிலின் தேர்தல் பிரசாரக். கூட்டம்   பெயர் தான் என்னவோ    த

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Kandiah57 said:

புலத்திலுள்ளவர்களை  இழுக்காமல். கருத்துகள் எழுத முடியாத??. எப்போது பார்த்தாலும்  புலத்திலுளளவர்களை தீட்டினபடி   இது ஒருவகை நோய் இதனை தவிர்ப்பது நல்லது 

large.IMG_6562.jpeg.0b236cfc7cebc2d49041

  • Thanks 1
  • Haha 1
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் யாழ் களம் படிக்க தொடங்கிய போது இந்த புலம் பெயர் தமிழன் என்பது குழப்பமாக இருந்தது. இலங்கையில் உள்ள தமிழர் புலம்பெயர் தமிழரா வெளிநாட்டில் உள்ள ஈழ தமிழர் புலம் பெயர் தமிழரா என்ற குழப்பம் . சிலரிடம் கேட்டிருக்கிறேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி சொன்னார்கள் சிலருக்கு அது என்ன என்றே என்னை மாதிரி தெரியாது .ஏன் இப்படி கடுமையான சொற்களை கண்டு பிடிக்கின்றார்கள் என்று நினைத்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, நிழலி said:

ஒரு விடயம் 

இங்கு புலம் , நிலம் ஆகிய சொற்களை வெவ்வேறு அர்த்தத்தில் பயன்படுத்தி வருகின்றீர்கள் என்பதை காண முடிகின்றது.

புலம் என்றால் நிலம் மற்றும் நாம் வாழ்ந்த நாடு என்று பொருள்படும். அதனால் தான் புலம் - பெயர்ந்தவர்கள் என அழைக்கப்படுகின்றோம். 

"புலத்தில் உள்ளவர்களும் நிலத்தில் உள்ளவர்களும்" என குறிப்பிடும் போது இரண்டும் ஒரே தரப்பினரைத்தான் குறிப்பிடப்படுகின்றது.

 

https://ta.wiktionary.org/wiki/புலம்

ஏற்கனவே யாழிலும் இது தொடர்பாக உரையாடப்பட்டுள்ளது

என் புரிதல் தவறேன்றால் விளக்கவும்.

புலமும் நிலமும் ஒரே பொருளைத் தந்தாலும், புலம் பெயர்ந்தவர் எனும் போது.. வாழ்ந்த நிலத்தை விட்டு வேறு நிலம் தேடிச் சென்றவர் என்றே பொருள் தரும் என்று நினைக்கிறேன். அதனால் வெளி நாட்டில் வாழ்பவர்களையே அந்த்ச் சொல் குறிக்கும் என நினைக்கிறேன்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புங்கையூரன் said:

புலமும் நிலமும் ஒரே பொருளைத் தந்தாலும், புலம் பெயர்ந்தவர் எனும் போது.. வாழ்ந்த நிலத்தை விட்டு வேறு நிலம் தேடிச் சென்றவர் என்றே பொருள் தரும் என்று நினைக்கிறேன். அதனால் வெளி நாட்டில் வாழ்பவர்களையே அந்த்ச் சொல் குறிக்கும் என நினைக்கிறேன்.

புலம்பெயர் என்பதை சுருக்கமாக புலத்தில் உள்ளவர்கள் என்று குறிப்பிட்டிருந்தேன். 

copilot ன் விளக்கம் இது 👇
தமிழ் மொழியில் “புலம்” என்ற சொல்லின் பொருள் பின்வருமாறு:

  1. வயல்: அரிப்பு நிலம், குறிப்பாக நெற்பயிர் சாகுபடி செய்யும் நிலம்1.
  2. இடம்: ஒரு இடம், மண்டலம், அல்லது நாட்டின் ஒரு பகுதி1.
  3. திக்கு: காம்பஸின் ஒரு புள்ளி அல்லது திசை1.
  4. மேட்டு நிலம்: உலர் பயிர்ச்செய்கைக்கு ஏற்ற உயர்ந்த நிலம்1.
  5. பொறி: உணர்வு அல்லது ஐம்புலன்களின் ஒரு அம்சம்1.
  6. உணர்வு: உணர்ச்சிகள் அல்லது புலன்கள் மூலம் உணர்வு1.
  7. அறிவு: கல்வி அல்லது ஞானம்1.
  8. கூர்மதி: அறிவுக்கூர்மை அல்லது நுண்ணறிவு1.

“புலம்” என்பது பல்வேறு சூழல்களில் பயன்படுத்தப்படும் பன்முகப்பட்ட சொல்லாகும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/6/2024 at 21:57, island said:

குழந்தை வேண்டும் என்று 1000 தடவைகள் கேட்டுக்கொண்டு சண்டை பிடித்து வெவ் வேறு கட்டிலில் படுத்தால் குழந்தை கிடைக்காது. புரிந்துணர்வுடன் அன்பாக பழகி  ஒரே கட்டிலில்  படுத்து ரொமான்ஸ் செய்தால் மட்டுமே  குழந்தை கிடைக்கும்கந்தையர் 😂

இதைத்தானே காலாகாலமாக செய்துகொண்டிருக்கிறீர்கள்! எல்லாத்தையும் மேலேயிருக்கிறவன் பாத்துக்கொள்ளுவான் என்றுசொல்லி!!

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13/6/2024 at 02:36, Kandiah57 said:

அருமையான பதிவு வாழ்த்துக்களுடன் பாராட்டுக்குரியவர் நீங்கள்   இந்த அழிவு எல்லாம் சிங்களத்திடம். தீர்வு இல்லாத காரணத்தால் தான் எற்ப்பட்டது   அவர்களிடம் ஒன்றுமில்லை என்னும் போது பேச்சுவார்த்தை என்ன வேண்டி கிடக்கிறது ??  இது தமிழனுக்கு புரியவில்லை 🙏

கந்தையர், பலதமிழர்களுக்கு இது நன்றாகவே புரிகிறது. ஆனால் யாழ் களத்தில்தான் சில மெத்தப்படித்தவர்களுக்கும் அடிக்கடி நிறம் மாறுபவர்களுக்கும் இது புரிவதில்லை. அது அவர்களுக்கு என்றுமே புரியாது.

  • Like 1
  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் தீர்வு திட்டம் ஆரம்பத்தில் உள்ளூராட்சி, மாவட்டசபை, மாகாணசபை என பெயரளவில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அவை நடைமுறைப்படுத்தலில் உள்ள பிரச்சினையாக இருப்பது இலங்கையின் ஆட்சி அதிகாரம் பெரும்பான்மையினரிடம் இருக்கிறது அதனை உறுதிப்படுத்தும் விதமாக அதன் விகிதாசார ப்ரதினித்துவ ஆட்சி முறை உள்ளது.

மற்ற நாடுகளில் சிறுபான்மையினரை பாதுகாக்க (இந்தியாவில் தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு) சட்டங்கள் இருக்கும் ஆனால் இலங்கையில் அரசினால் இயற்றப்படும் சட்டங்கள் பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தது போன்ற சட்டங்கள்தான் சிறுபான்மையினருக்கு.

தீர்வுத்திட்டம் இலங்கை அரசியல் சட்டமுறைமையில் சாத்தியமில்லை, அதில் மாற்றம் ஏற்படுத்த பொதுவேட்பாளர் முறை தாக்கத்தினை ஏற்படுத்தலாம், ஆனால் தற்போதுள்ள முறைமையில் சிறுபான்மையினருக்கு தீர்வு கிடைக்கும் என பொய்யான வாக்குறுதிகளை வழங்குவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

சுமந்திரனின் பேச்சிலிருந்து .......1951 ஆம் ஆண்டு சமஷ்ட்டிக் கட்சியின் தீர்மானத்தில் தமிழினத்தை தனியான கலாசாரமும், மொழியும், பூர்வீக தாயகமும் கொண்ட இனம் என்று கண்டுகொண்டிருந்தது. தமிழினம் சுயநிர்ணய உரிமை கொண்ட இனம் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. சிங்களக் கட்சிகளும் தமிழ் மக்கள் சமஷ்ட்டியைத்தான் வேண்டுகிறார்கள் என்பதை அறிந்தே இருக்கின்றன, அதனால் அதுகுறித்துக் கேள்வி கேட்பதில்லை. சமஷ்ட்டிக்குக் குறைவான எந்த தீர்வையும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. 72 ஆம் ஆண்டு இறையாண்மை கொண்ட தமிழினம் தனியாகப் பிரிந்து செல்ல முடியும் என்றபோதும், அதனைச் செய்யாமல் சமத்துவ சமஷ்ட்டி முறையில் ஏனைய இனங்களுடனும் வாழ விரும்புகின்றனர்.  1977 ஆம் ஆண்டு தனிநாடு கோரி முன்வைத்த கோரிக்கையினை மக்கள் ஏற்றுக்கொண்டு ஆணை வழங்கினர். 

இவ்வளவும் தமிழரசுக் கட்சிக்கு மக்கள் வழங்கிய ஆணை. சரி, இதற்குள் ரணிலை ஜனாதிபதியாக்குங்கள் என்றோ அல்லது சிங்களத் தலைவர் ஒருவரை ஜனாதிபதியாக்குங்கள் என்றோ கூறப்பட்டிருக்கிறதா? பொதுவேட்பாளர் நிறுத்தப்படுவது தமிழ் மக்கள் தமிழரசுக் கட்சிக்கு வழங்கிய ஆணையினை நிராகரிக்க வேண்டும் என்கிற நோக்கிலா? இல்லையே. தமிழ் மக்கள் அன்று வழங்கிய ஆதே ஆணையினை மீளவும் நிரூபிக்கத்தானே? மீளவும் நினைவுபடுத்தி தமிழ் மக்களை ஒன்றிணைக்கத்தானே? மக்கள் ஆணையினை மீளவும் புதுப்பிப்பது எப்படி அதே ஆணையினை நிராகரிப்பதாக மாறும்? இந்த ஆணையினை மீளவும் நினைவுபடுத்துவது யாருக்குத் தர்ம சங்கடமாக இருக்கப்போகிறது? தமிழர்கள் நிச்சயம் இதனை வரவேற்கத்தான் போகிறார்கள். ஆகவே, இதனை நினைவுபடுத்துவதால் கலவரப்படப்போவது சிங்கள தலைமைகள் தானே? அவர்களுக்குக் கூஜா தூக்கும் அடிவருடிகள் தானே? 

 சுமந்திரன் இந்த வாக்கெடுப்பு சமஷ்ட்டிக்கான வாக்கெடுப்பு இல்லையென்கிறார். ஆனால், 1977 இல் நடந்த பாராளுமன்றத் தேர்தல் மட்டும் தனிநாட்டிற்கான வாக்கெடுப்பா? இல்லையே. அத்தேர்தலை தமது தனிநாட்டிற்கான ஆணையாகத்தானே தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி பாவித்து வெற்றி பெற்றது? அபோது மட்டும் அது சர்வஜன வாக்கெடுப்பு, இப்போது அது ஜனாதிபதித் தேர்தலா? யாரை ஏமாற்றுகிறீர்?

ரணிலை ஆட்சிக்குக் கொண்டுவரமுடியாவிட்டால் தமிழரின் இருப்பு முற்றாக அழிந்துவிடுமாம். இறைமையும், சுயநிர்ணய உரிமையும் இல்லாது போய்விடுமாம். இப்போதுமட்டும் உங்களுக்கு இறைமையும், சுயநிர்ணய உரிமையும், சமஷ்ட்டியும் தருவேன் என்று ரணில் சொன்னாரா? யாருக்குக் கதை விடுகிறார் சுமந்திரன்? மக்கள் தந்த ஆணை தனிநாட்டிற்கானது. 1977 இல் அது நடந்தது. இன்றுவரை அதனை பெற்றுக்கொடுக்க சுமந்திரன் என்ன செய்திருக்கிறார்? 

நீர் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சி உருவாக்கப்பட்டதே தமிழ் மக்களுக்கான தனி அரசிற்கான கோரிக்கையினை முன்வைத்துத்தான். அதில் அங்கம் வகித்துக்கொண்டே தமிழ் மக்கள் அதே தேசியத்தினை முன்னிறுத்தி பொதுவேட்பாளரை நிறுத்த எத்தனிக்கும்போது எதிர்த்துப் பிரச்சாரம் செய்வேன் என்கிறீர், நீர் யாருக்காக  வேலை செய்கிறீர் என்பது மிகவும் தெளிவாக இப்போது தெரிகிறது. 

அரசியல்வாதிகள்,  தம்மைத் தெரிவுசெய்த மக்களின் நலன்களைக் கைவிட்டு, அம்மக்களின் எதிரிகளின் அரசியல் நலன்களைச் சார்ந்து முடிவெடுக்கும் சூழ்நிலை உருவாகும்போது, அம்மக்கள் கூட்டத்தின் நலன்களில் உண்மையான அக்கறை கொண்ட, அம்மக்கள் கூட்டத்தில் செயற்பட்டு வரும் சமூக அமைப்புக்கள் வெளியே வந்து அம்மக்களுக்கான அரசியல்த் தலைமையினை பொறுப்பெடுக்க முயல்வது நண்மையானதே. இதில் சுமந்திரன் கேள்விகேட்க எதுவும் இல்லை, அந்தத் தகுதியை அவர் இழந்து பல வருடங்கள் ஆகின்றன. 

 

 

Edited by ரஞ்சித்
புதுப்பிப்பது
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1976 ஆம் ஆண்டின் வட்டுக்கோட்டைத் தீர்மானித்தினை 1977 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் ஆணையாக முன்வைத்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி தேர்தலில் போட்டியிட்டு அமோக வெற்றிபெற்றது. தமிழ் மக்களின் "ஆணை" என்று பேசும்போது, அது 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கான தமிழ் மக்களின் ஒட்டுமொத்த ஆதரவே தொடர்ச்சியாகப் பேசப்பட்டு வருகிறது. இந்த மக்கள் ஆணையின் அடிப்படையிலேயே தனிநாடு, சுயநிர்ணய உரிமை, இறைமை, பூர்வீக தாயகம் ஆகிய விடயங்களை முன்வைத்து அரசியல் ரீதியிலும், ஆயுத ரீதியிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. ஆகவே, இந்த ஆணை என்பது எப்போதும் உயிர்ப்புடன் வைத்திருக்கப்பட வேண்டியது அவசியமான ஒன்று. ஆகவே, பொதுவேட்பாளர் இந்த ஆணையினைத்தான் மீளவும் புதுப்பித்து ‍ நினைவுபடுத்த தேர்தலில் நிட்கிறார் என்றால் அது எவ்வாறு தவறாக இருக்க முடியும்? 

சுமந்திரன் கூறும் "எமக்கு மட்டுமே தந்த ஆணை" என்பதற்கும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கான மக்கள் ஆணை என்பதற்கும் இடையில் வேறுபாடு இருக்கிறதா? இல்லையென்றால், தமிழ்ப் பொதுவேட்பாளரை சுமந்திரன் ஏன் எதிர்க்க வேண்டும்? நீங்கள் செய்யவேண்டியதை, ஆனால் செய்ய மறுப்பதை சிவில் சமூகம் செய்கிறது, அவ்வளவுதான். ஆனால், பிரச்சினை அதுவல்ல. சுமந்திரனுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் ஆணை ரணிலை ஜனாதிபதியாக்குவது. அது மக்களால் அவருக்கு வழங்கப்பட்ட ஆணை அல்ல. அது, ரணிலால் "தமிழரசுக் கட்சிக்கு இடப்பட்ட ஆணை". ஆகவே, அதனை அவரும், அவரது கட்சியினர் மட்டுமே செய்யமுடியும். வேறு எவரும் அதில் பங்கு கேட்க முடியாது. அது தமிழ் மக்களாக இருந்தாலென்ன, சிவில் சமூக அமைப்புக்களாக இருந்தாலென்ன.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பொது வேட்பாளா் ஒரு கோமாளிக்கூத்தா? சுமந்திரனுக்கு கே.ரி.கணேசலிங்கம் பதில்!

June 20, 2024
 
 

KTG 1 தமிழ் பொது வேட்பாளா் ஒரு கோமாளிக்கூத்தா? சுமந்திரனுக்கு கே.ரி.கணேசலிங்கம் பதில்!

 

ஜனாதிபதித் தோ்தல் நெருங்கும் நிலையில் பிரதான வேட்பாளா்கள் அனைவருமே வாக்குறுதிகளுடன் யாழ்ப்பாணம் வரத் தொடங்கியுள்ளாா்கள். இந்த நிலையில் தமிழ்ப் பொது வேட்பாளா் என்ற விடயம் தமிழா் தரப்பில் பேசு பொருளாகியிருக்கின்றது. இவை தொடா்பில் யாழ். பல்கலைக்கழக அரசியல்துறைத் தலைவா் கே.ரி.கணேசலிங்கம் வழங்கிய நோ்காணல்;

கேள்வி  பிரதான ஜனாதிபதி வேட்பாளா்கள் மூவருமே அடுத்தடுத்து யாழ்ப்பாணம் வருகிறாா்கள். முக்கிய சந்திப்புக்களை மேற்கொள்கிறாா்கள். வாக்குறுதிகளை வழங்குகின்றாா்கள். இவற்றை நீங்கள் எவ்வாறு பாா்க்கின்றீா்கள்?

பதில்  இதில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டிய விடயங்கள் மூன்று.

முதலாவதாக, தென்னிலங்கையில் இந்த மூன்று வேட்பாளா்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இம்முறை இருக்கிறது. அதனால், வடக்கு கிழக்கு மக்களுடைய வாக்குகளைப் பெற வேண்டிய தேவை இந்த மூன்று வேட்பாளா்களுக்கும் ஒரு அடிப்படை அம்சமாக இருக்கின்றது.

இரண்டாவதாக, அவா்களுடைய வாக்குறுதிகள், தமிழ்க் கட்சிகளுடன் அவா்கள் உரையாடும் விடயங்களைப் பொறுத்தவரையில் 13 என்ற விடயத்தைத்தான் அவா்கள் பிரதானமாகப் பேசுகின்றாா்கள். இதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விடயம் ஒன்றுள்ளது. இந்த 13 என்பது அரசியலமைப்பில் உள்ள ஒரு விடயம். இதனை ஜனாதிபதி வேட்பாளா்கள் ஒரு பிரகடனமாக வெளிப்படுத்துவது என்பது ஒரு அபத்தமான அரசியல் கலாசாரம்.

அதேவேயைில், சமஷ்யை தோ்தல் விஞ்ஞானங்களில் வெளிப்படுத்தும் தமிழ்க் கட்சிகள் மாகாண சபைகளைக் கோருவது, அதற்கான தோ்தலை நடத்துமாறு கேட்பது, 13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு கோருவது எல்லாம் மோசமான அரசியல் அணுகுமுறையாகவே கருதப்பட வேண்டும்.

கேள்வி  யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த மூன்று பிரதான ஜனாதிபதி வேட்பாளா்களுமே இனநெருக்கடிக்கு அரசியல் தீா்வு காணப்பட வேண்டும் என்பதையும், 13 ஆவது திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதையும் ஏற்றுக்கொள்கின்றாா்கள். இதனை தமிழ்த் தரப்புக்கள் சாதகமாகப் பயன்படுத்த முடியாதா?

பதில்  இதில் முக்கியமான ஒரு புரிதல் தமிழ் மக்களுக்கு இருக்கின்றது. அவா்களைப் பொறுத்தவரையில் எத்தனையோ பேச்சுவாா்த்தைகள், எத்தனையோ உத்தரவாதங்கள் அனைத்தையும் தமிழ் மக்கள் பல காலப்பகுதிகளில் சந்தித்திருக்கின்றாா்கள். அதனால், இந்தத் தீவுக்குள் இனநெருக்கடிக்கான தீா்வைக் காண்பது சாத்தியமற்றது என்பதை தமிழ் மக்கள் புரிந்துகொண்டிருக்கின்றாா்கள். இனப்பிரச்சினை என்பது ஒரு சா்வதேசப் பிரச்சினை என்பதுதான் அதன் அடிப்படை. நிச்சயமாக ஒரு பிராந்தியத் தளத்தில் நாட்டின் எல்லைக்கு வெளியேதான் இந்தப் பிரச்சினைக்கு தீா்வு காணப்பட வேண்டும் என்ற சூழ்நிலை எழுந்திருக்கின்றது.

கடந்த காலங்களில் பதவிக்கு வந்தவா்கள் தமது உத்தரவாதங்களை கைவிட்டுச் சென்றமைதான் இதற்குக் காரணம். இனப்பிரச்சினை என ஒன்றுள்ளது என இவா்கள் இப்போதுதான் பேச்சுக்களை ஆரம்பிக்கின்றாா்கள். இவா்களுடைய இந்த அணுகுமுறை குறித்த புரிந்துணா்வு எமது மக்களிடம் இருக்கியது என்பதுதான் என்னுடைய அவதானிப்பு.

கேள்வி  கடந்த காலங்களில் இடம்பெற்ற ஜனாதிபதித் தோ்தல்களுடன் ஒப்பிடும்போது, இம்முறை சிங்க இனவாதம் முதன்மைப்படுத்தப்படும் ஒரு நிலையைக் காணமுடியவில்லை என்ற கருத்து ஒன்றுள்ளது. இதனை எவ்வாறு பாா்க்கின்றீா்கள்?

பதில்  அதனை நோக்கி இந்தத் தோ்தல் களம் இதுவரையில் விரிவாக்கம் பெறவில்லை என்பதுதான் என்னுடைய கருத்து. இப்போதும் அதற்கான ஒரு களம் தோற்றுவிக்கப்படும். உதாரணமாக, தனது யாழ்ப்பாண விஜயத்தின் போது 13 ஆவது திருத்தம் தொடா்பில் சஜித் பிரேமதாஸ தெரிவித்த கருத்துக்களையிட்டு, தென்னிலங்கையில் உருவாகியிருக்கும் எதிா்ப்புக்காளல் அவா் தனது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கும் ஒரு நிலை ஏற்படலாம். இது குறித்த சில செய்திகளும் வெளிவந்திருக்கின்றன.

தோ்தல் களம் விரிவடையும்போது இவ்வாறான நிலையையை நோக்கிச் செல்ல வேண்டிய ஒரு நிா்ப்பந்தம் இந்த ஜனாதிபதி வேட்பாளா்களுக்கு ஏற்படும். தமிழ் மக்களுக்கு அரசியல் தீா்வை வழங்க முன்வருகின்ற எந்த வேட்பாளரும் தோற்கடிக்கப்படுகின்ற ஒரு நிலை தென்னிலங்கையில் இருந்திருக்கின்றது. அதனால், அது குறித்த ஒரு எச்சரிக்கை இந்த மூன்று வேட்பாளா்களிடமும் இருக்கும்.

ஆனால், ஒப்பீட்டு அடிப்படையில் இனவாதம் முதன்மைப்படுத்தப்படும் ஒரு நிலை இதுவரையில் உருவாகாத ஒரு நிலை இருக்கின்றது என்பது உண்மைதான்.

கேள்வி  தமிழ்ப் பொது வேட்பாளா் என்ற கருத்து தமிழ் அரசியல் பரப்பில் இப்போது முதன்மைப்படுத்தப்படுகின்றது. இது ஒரு கோமாளிக்கூத்து என்று தமிழரசுக் கட்சியின் பேச்சாளா் சுமந்திரன் தெரிவித்திருக்கிறாா். இது குறித்த உங்கள் பாா்வை என்ன?

பதில்  இது முதிா்ச்சியற்ற அரசியலின் வெளிப்பாடாகவே எனக்குத் தோன்றுகிறது. அரசியல் தளத்தில் இருப்பவா்கள் அதற்குரிய நாகரீகத்துடன் சொற்களை வெளிப்படுத்த வேண்டும். ஏனெனில் சமூகத்தில் இருக்கின்ற ஒவ்வொருவரும் ஏதோ ஒருவகையில் வலிகளோடு பயணித்தவா்கள் என்ற வகையில் தமது இருப்பை உறுதிப்படுத்த அது முயற்சிக்கும். அவ்வாறான நிலையில் இவ்வாறான செயற்பாடுகளை அவ்வாறான வாா்த்தைகளால் அளவீடு செய்வது என்பது அறிவியல் ரீதியாக இருக்கின்ற ஒரு சமூகத்துக்கு ஒவ்வாமையானதாக இருக்கலாம்.

அந்த உரை எதனைக் காட்டுகிறது என்றால், அரசியலின் முதிா்ச்சியற்ற தன்மை, அதனுடைய பலவீனம், அது சாா்ந்திருக்கக்கூடிய உணா்ச்சிகரமான எண்ணங்களின் பிரதிபலிப்புத்தான் அந்த உரை. அதனைவிட அதன் உண்மைத்தன்மையை நோக்கி, அதன் நியாயத்தன்மையை நோக்கி விவாதங்களை முன்வைகக்கூடிய திறன் அந்தத் தரப்புக்களிடம் இல்லை என்கதைத்தான் அது காட்டுகிறது.

இதனைவிட, ஈழத் தமிழா்களைப் பொறுத்தவரையில் ஒரு நீண்ட ஆயுத, அரசியல் போராட்டத்துக்குள்ளால் பயணித்தவா்கள். தென்னிலங்கையின் அரசியலோடு சோ்ந்து 15 வருடகாலமாக அவா்கள் பயணம் செய்திருக்கின்றாா்கள். இந்தப் பயணத்தில் ஈழத் தமிழா்கள் எந்தப் பயனையும் அடையவில்லை என்பதனால், ஒரு புதிய – தந்திரோபாயமான வழிமுறையை அவா்கள் சிந்திப்தென்பதை அந்த வாா்த்தைக்குள் அடக்கிவிடலாமா என்பது முக்கியமான ஒரு அம்சம்.

கேள்வி  பொது வேட்பாளா் என்ற விடயத்தின் பின்னணியில் தமிழ் சிவில் சமூகத்தினரின் பங்களிப்பு பிரதானமாக இருக்கின்றது. இந்த சிவில் சமூகங்களின் பங்களிப்பை நீங்கள் எவ்வாறு பாா்க்கின்றீா்கள்?

பதில்  கடந்த 15 வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்கள் அரசியல் கட்சிகளுக்குப் பின்னால் பயணம் செய்திருக்கின்றாா்கள். அவா்கள் நம்பிக்கையுடன் அந்த அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளைச் செவிசாய்த்திருக்கின்றாா்கள். போரை நடத்திய சரத் பொன்சேகாவுக்கு வாக்களித்திருக்கின்றாா்கள். மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்திருக்கின்றாா்கள். சஜித் பிரேமதாஸவுக்கு வாக்களித்திருக்கின்றாா்கள்.

இவ்வாறு அனைத்துத் தளங்களிலும் அந்தவகையான சாதகமான நிலையும் ஏற்படவில்லை என்ற எண்ணத்துடன்தான் சிவில் அமைப்புக்கள் கூட்டியைவாகச் செயற்படவேண்டிய தேவை எழுந்திருக்கின்றது.

 

https://www.ilakku.org/தமிழ்-பொது-வேட்பாளா்-ஒரு/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

சமூகத்தில் இருக்கின்ற ஒவ்வொருவரும் ஏதோ ஒருவகையில் வலிகளோடு பயணித்தவா்கள் என்ற வகையில் தமது இருப்பை உறுதிப்படுத்த அது முயற்சிக்கும்.

இந்த வலிகளை உணர்ந்தவர்கள் அல்ல எங்களுடைய தமிழ் அரசியல்வாதிகள். தங்களுடைய இருப்பையும் குடும்பங்களையும் பாதுகாத்துக் கொண்டால் மாத்திரம் போதும் என எண்ணுபவர்கள்.

உண்மையிலே மிகவும் அருவருப்பே இந்த தமிழ் அரசியல்வாதிகளை பார்க்கும் பொழுது ஏற்படுகிறது. 

 

 

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆச்சரியமானதும், பிரயோசனமானதுமான அருமையான தகவல் தந்தமைக்கு நன்றி ஏராளன். இதுவரை.. பறவைகள், மிருகங்கள் மூலம் மனிதன் கற்றவை அனேகம், இன்னும் பல கண்டறிய வேண்டி உள்ளது.  
    • "தமிழரின் உணவு பழக்கங்கள்" / "FOOD HABITS OF TAMILS" PART / பகுதி: 18   "தமிழரின் உணவு பழக்கங்கள்" / "FOOD HABITS OF TAMILS" PART / பகுதி: 18 "பண்டைய சிந்து சம வெளி உணவு பழக்கங்கள் தொடர்கிறது" / "Food Habits of Ancient Indus valley people or Harappans continuing"     சிந்துவெளியில் காணப்படும் வீடுகளில் தனி சமையல் அறை, படுக்கை அறை, குளியல் அறை முதலியன இடம் பெற்றிருந்தன. அங்கு, வீடுகளின் சமையல் அறையின் வாசல் முற்றத்தை அண்டி இருந்தன. அவை செங்கல்களால் கட்டப் பட்ட அடுப்பை கொண்டிருந்தன. அங்கு பலவித மண் பாண்டங்கள், வெவேறு அளவிலும் வெவ்வேறு வடிவத்திலும் காணப்பட்டன. பெரும் பாலான மண்பாண்டம் சக்கரத்தை சுற்றி வார்தெடுக்கப் பட்டவை. அவை நேர்த்தியான மற்றும் வழுவழுப்பான தோற்றம் உள்ளவையாகவும், அதே நேரம் அவை சுடப் பட்டதால் நல்ல வலிமையாகவும் இருந்தன. அது மட்டும் அல்ல அவை கருப்பு அல்லது சிவப்பு வர்ணம் பூசப்பட்டு இருந்தன. இவை கிண்ணம், குவளை, கோப்பை, தட்டு, பெரிய அகலமான பாத்திரம், ஜாடி போன்றவையாகும். அத்துடன் செம்பு, வெள்ளி, ஈயம் போன்றவையால் செய்யப்பட்ட பாத்திரங்களும் தோண்டி எடுக்கப் பட்டன. அவை பணக்கார குடும்பங்களால் பாவிக்கப் பட்டு இருக்கலாம். சிந்து வெளி மக்கள் தமது சமையலுக்கு எண்ணெயுடன் மற்றும் இஞ்சி, உப்பு, பச்சை குடைமிளகாய், மஞ்சள் தூள் போன்றவை பாவித்தனர்.என்றாலும் அவர்கள் நாளாந்த வாழ்க்கையில் அல்லது ஏதாவது ஒரு சிறப்பு தினத்தில் அல்லது ஆண்டவனுக்கான காணிக்கையில் அல்லது படையலில் எப்படியான உணவு சமைத்தார்கள் என்பதோ அல்லது அவையின் பெயரோ எமக்கு இன்னும் தெரியாது. ஆனால் அவையின் சேர்மானங்கள், அதாவது என்ன என்ன சேர்க்கப்பட்டன என்பதை நன்றாக அறியக் கூடியதாக உள்ளது. மெஹெர்கரில் [Mehrgarh] நடைபெற்ற அகழ்வு ஆராச்சியில், அரைக்கும் கற்கள் கண்டு பிடிக்கப் பட்டன. அவை கோதுமை, பார்லி போன்றவை அரைக்கப் பாவிக்கப் பட்டு இருக்கலாம். எனவே, அவர்கள் மாவை பாவித்து அதிகமாக ரொட்டி போன்ற ஒரு உணவை சமைத்து இருக்கலாம் என ஊகிக்க முடிகிறது. அதே போல ஹரப்பா அகழாய்வில் களிமண் கருவிகளும் தானியங்களை அரைக்கும் கல் யந்திரங்களும் அம்மி போன்ற அமைப்புடைய கல்கருவியும் கிடைத்துள்ளன. இந்த அம்மி இன்னும் இந்தியா, இலங்கை நாடுகளில் பாவனையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இது கடுகு, கொத்த மல்லி, போன்ற வாசனைத் திரவியம் பாவித்தார்கள் என்பதை உறுதிப் படுத்துகிறது. அங்கு கண்டு பிடிக்கப் பட்ட மட்பாண்ட சமையல் பாத்திரங்கள், அவர்கள் கொதிக்க வைத்தும் வேக வைத்தும் சமைத்ததை காட்டுகிறது. அத்துடன் எரிந்த எலும்பு எச்சங்கள், அவர்கள் இறைச்சியை சுட்டு சமைத்ததை - பார்பிக்யூ [BBQ] மாதிரி - எடுத்து காட்டுகிறது. மேலும் அங்கு தந்தூரி அடுப்பை போன்ற ஒன்றும் கண்டு பிடிக்கப் பட்டது. இது அதிகமாக இன்றைய தந்தூரி அடுப்பின் பழைய வடிவமாக இருக்கலாம்? அன்றைய நாளாந்த வாழ்விற்கு அடிப்படை உணவான ரொட்டி செய்ய அது பாவிக்கப் பட்டு இருக்கலாம். மேலும் கி மு 3000 ஆண்டை சேர்ந்த, தானியங்களை அரைப்பதற்க்கான மேடையும் ஹரப்பாவில் காணப்பட்டது. இது பெரும் அளவில் மா அரைத்து ரொட்டி செய்ய, நகரங்களுக்கு வழங்கியதை காட்டுகிறது. இந்த நாகரிகம் மிகவும் மேம்பட்டது. இதனால், இவர்கள் உடலிற்கு ஏற்ற தகுந்த உணவின் முக்கியத்தை கட்டாயம் அறிந்து இருக்கலாம் எனவும் நாம் நம்பலாம்.   கறி (Curry) பொதுவாக சோற்றுடன் உண்ணப்படும் குழம்பு, பிரட்டல், பருப்பு, கீரை, மீன்கறி போன்ற பல்வேறு பக்க உணவுகளை - வெங்காயம், இஞ்சி, மஞ்சள், உள்ளி, குடைமிளகாய், மிளகாய், கொத்த மல்லி, சீரகம், மற்றும் இது போன்ற வாசனைத் திரவியங்களுடன் சமைத்த ஒரு சமையலை குறிக்கிறது. ஆங்கிலத்திலும் இது Curry என்றே கூறப்படுகிறது. இந்த சொல் தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு போன ஒரு சொல்லாகும். இதன் சரித்திரம் 4000 ஆண்டுகளுக்கு மேற்பட்டது. சிந்து சம வெளி மக்கள், தமது உச்ச நாகரிக கட்டத்தில், மூன்று முக்கிய சேர்மானங்களான - இஞ்சி, உள்ளி, மஞ்சள் போன்றவற்றை பாவித்து பண்டைய - கறி சமைத்துள்ளார்கள். மேற்கு தில்லி [west of Delhi] பகுதியில் அமைந்த பண்டைய கி மு 3000 ஆண்டை சேர்ந்த சிந்து வெளி நாகரிக நகரமான பார்மானவில் [Farmana] தோண்டி எடுக்கப்பட்ட மனித எலும்பின் பல்லையும் சமையல் பானையில் ஒட்டியிருந்த எச்சங்களையும் பரிசோதித்ததில், தொல்பொருள் ஆய்வாளர்களும் விஞ்ஞானிகளும் மஞ்சள், இஞ்சிக்கான அடையாளத்தை கண்டுள்ளார்கள். வாஷிங்டன் மாநில பல்கலைக்கழகம், வான்கூவர், அமெரிக்காவின், தொல்பொருள் ஆய்வாளரான அருனிமா காஷ்யப் [Arunima Kashyap] அவர்களும், ஸ்டீவ் வெபரும் [Steve Weber] சேர்ந்து இந்த முன்னைய கறியை கண்டு பிடித்தனர். அவர்கள் மேலும் பகுதியாக எரிந்த பூண்டு உள்ளியும் அங்கு கண்டார்கள்.மற்றும் ஒரு சான்றாக, இஞ்சியும் மஞ்சளும், ஹரப்பாவில் தோண்டி எடுக்கப்பட்ட மாட்டின் பல்லிலும் கண்டனர். கால் நடைகள் ஏன் கறி மாதிரி ஒரு உணவை உண்டான என்பது சரியாக புரியாவிட்டாலும், ஸ்டீவ் வெபர் அதற்கு ஒரு நியாயம் கற்பிக்கிறார். இன்றும் இந்த பகுதிகளிலும் மற்றும் இதர பகுதிகளிலும் மக்கள் தாம் சாப்பிட்ட உணவின் மிகுதியை தமது வீட்டிற்கு வெளியே அங்கும் இங்குமாக திரியும் மாடுகளுக்கு போடுகின்றனர். அது போல முன்பும் நடந்து இருக்கலாம் என்கிறர். ஹரப்பன் இடிபாடுகளில் வீட்டுக் கோழி அங்கு இருந்ததற்கான சான்றுகள் காணப் படுகின்றன. இது ஒரு வேளை, அங்கு கண்டு பிடித்த தந்தூரி போன்ற அடுப்பில் சமைக்கப்பட்டு இருக்கலாம். சோறு இல்லாமல் கறியா என்று நீங்கள் ஜோசிக்கலாம்? அப்படித்தான் பல தொல்பொருள் ஆய்வாளர்கள் நினைத்தார்கள். சிந்து வெளி மக்கள் ஓர் சில தானியங்களுக்கு மட்டும் - அதிகமாக கோதுமை, பார்லி போன்றவைக்கு மட்டும் கட்டுப் பட்டு இருந்ததாகவே கருதினர். ஆனால் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக தொல் பொருள் ஆய்வாளர் ஜெனிபர் பேட்ஸ் [Jennifer Bates] இதை மாற்றி அமைத்துள்ளார். அவர் இந்தியா - பிரித்தானியா கூட்டு குழுவுடன் சேர்ந்து, மேற்கு தில்லி பகுதியில் ஆய்வு செய்யும் போது, அங்கு சிந்து வெளி மக்கள் அரிசி, பயறு, பாசிப் பயறு உட்பட பல தானியங்கள் பயிரிட்டது தெரிய வந்தது. ஆகவே கறி உலகின் மிகவும் பிரபலமான உணவு மட்டும் இன்றி, அது மிகப் பழைய தொடர்ந்து பாவனையில் இருக்கும் ஒரு உணவும் ஆகும்.   நீங்கள் ஒரு பாரம்பரிய தமிழ் அல்லது இந்திய மதிய அல்லது இரவு உணவு ஒன்றை சாப்பிடுகிறீர்கள் என்றால் அங்கு கட்டாயம் இஞ்சி, மஞ்சள், பருப்பு இருக்கும். அத்துடன் சோறு அல்லது தினையும் அதிகமாக முடிவில் வாழைப் பழமும் இருக்கும். அப்படியானால், நாம் இன்று சாப்பிடும் உணவு, எம் முதாதையர் 4500 ஆண்டுகளுக்கு முன்பு சாப்பிட்ட உணவிற்கும் பெரும் வேறுபாடு கிடையாது எனலாம். இனி "பண்டைய சங்க தமிழரின் உணவு பழக்கங்கள்" பற்றிப் பார்ப்போம்.   நன்றி     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   பகுதி : 19 தொடரும்     "FOOD HABITS OF TAMILS" PART: 18 "Food Habits of Ancient Indus valley people or Harappans continuing"     Harappan houses had a kitchen opening from the courtyard, with a hearth or brick-built fireplace. Food in Indus Valley civilization was made in the utensils which included earthenware of various kinds. shapes and in a range of sizes. Most of the potteries were wheel made with fine and smooth appearances that were baked to give it strength. The potteries were painted with black or dark red slips. Such painted potteries included bowls, beakers, goblets, dishes, basins, saucers stands and jars. The excavations also include a number of vessels which are made up of Copper, silver, and lead. may be for in wealthy households. The Indus Valley peoples may be cooked with oils, ginger, salt, green peppers, and turmeric root, which would be dried and ground into an orange powder. We don't know the name of dishes they cooked in day to day life or for any special occasions or for any religious offerings in their kitchens because, mainly, we are still not able to read their language and also we are not found any literature, such as poems or written long records about their activities as Sumerian did. But we know the ingredients of their dishes and we know it very well. Also excavations in Mehrgarh have revealed grinding stones which is used in grinding wheat & barley so we can deduce that they used flour and maybe they know how to prepare Roti etc. In Harappa too they found hard stone - roller - grinders [Ammi], the design of which is still found all over India & Sri Lanka, confirm the use of spices. Also finding of pottery cooking vessel, may be used for boiling & stewing. Further charred bone remains show that they cooked meat by grilling. Also a small metre - high clay oven, instead of having a side - entry, this egg - shaped vessel's entry hole was at the top, which was narrower than its centre point. It was the ancestor of today's tandoori oven and may be used for bread - making, something fundamental to daily existence. Also Platform For Grinding Grains found at Archaeological Site Of Harappa, Indus Valley Civilization, belongs to 3rd Millennium BC, prove that they grind corn on the platforms for the city's supply of bread. This civilization was highly developed and thus many historians believe that they knew about importance of proper diet in life.   What is curry? The term likely derives from kari, the word for sauce in Tamil, a Dravidian language. A curry, as the Brits defined it, might be A mixture of onion, ginger, turmeric, garlic, pepper, chilies, coriander, cumin, and other spices cooked with shellfish, meat, or vegetables. But the original curry predates Europeans’ presence in India & Sri Lanka by about 4,000 years. Villagers living at the height of the Indus civilization used three key curry ingredients — ginger, garlic, and turmeric — in their cooking. This proto - curry, in fact, was eaten long before Brits defined it .But thanks to technological advances, scientists can now identify minute quantities of plant remains left behind by meals cooked thousands of years ago. It is no easy task; researchers must gather crumbling skeletons and find ancient dirty dishes before using powerful laboratory microscopes to pinpoint the ingredients of ancient meals. Examining the human teeth and the residue from the cooking pots, [from the late third millennium B.C ancient town of Farmana, west of Delhi] archaeologists, & scientists spotted the tell - tale signs of turmeric and ginger, two key ingredients, Even today, of a typical curry. Archaeologist Arunima Kashyap at Washington State University Vancouver, who, along with Steve Weber, made the recent proto-curry discovery. They also found a carbonized clove of garlic. They found additional supporting evidence of ginger and turmeric use on ancient cow teeth unearthed in Harappa, one of the largest Indus cities, located in Pakistan west of the border with India. Why would cattle be eating curry - style dishes? Weber notes that in the region today, people often place leftovers outside their homes for wandering cows to munch on. The Harappan ruins also contain evidence of domesticated chickens, which were likely cooked in those tandoori - style ovens and eaten. And what would a proto - curry be without a side of rice? Many archaeologists once thought that Indus peoples were restricted to a few grains like wheat and barley. But Cambridge University archaeologist Jennifer Bates, part of a joint Indian - U.K. team, has been examining the relative abundance of various crops at two village sites near today’s Masudpur, also west of Delhi. She found that villagers cultivated a wide array of crops, including rice, lentils, and mung beans. we now know that curry is not only among the world’s most popular dishes; it also may be the oldest continuously prepared cuisine on the planet.   If you are having a proper Tamil or Indian lunch or dinner, there is good chance that your food will contain ginger or turmeric or lentils. You have rice or millet and maybe even a banana to top it off. If so, the food that we eat today is no different from the ones eaten by our ancestors who lived in the Indus - Saraswathi region, 4500 years back. Let us now look at the "food habits of ancient Sangam Tamils".   Thanks     [Kandiah Thillaivinayagalingam Athiady, Jaffna]   PART : 19 WILL FOLLOW        
    • தோல்வியில் முடிவடைந்த திம்புப் பேச்சுக்கள் :  வவுனியாவிலும் திருகோணமலையிலும் இருநாட்களில் பலியிடப்பட்ட 220 தமிழர்கள் http://www.tchr.net/his_riots_outcome.htm தமிழர்களையும், இந்தியாவையும் தனது "புதிய யோசனைகள்" எனும் சதித் திட்டத்தினூடாக ஹெக்டர் ஜயவர்த்தன ஏமாற்றிய நாளான 1985 ஆம் ஆண்டு ஆவணி 16 ஆம் திகதி, வவுனியா -  யாழ்ப்பாணம் வீதியில் விமானப்படைக்குச் சொந்தமான ஜீப் வண்டியொன்றின்மீது போராளிகளால் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால், கண்ணிவெடித் தாக்குதலில் ஜீப் வண்டி தப்பியதுடன், அதில் பயணம் செய்த விமானப்படையினருக்கும் சேதங்கள் ஏற்பட்டிருக்கவில்லை. ஆனாலும், தம்மீது தாக்குதல் நடத்தப்பட்டதனால் கொதிப்படைந்த விமானப்படையினர் பொதுமக்கள் மீது பழிவாங்கும் தாக்குதல்களைக் கட்டவிழ்த்து விட்டனர். வவுனியாவிலிருந்து வடக்கே செல்லும் வழியில் பதினைந்து தமிழர்களைச் சுட்டுக் கொன்ற விமானப்படையினர் வீதியின் இரு மருங்கிலும் இருந்த தமிழர்களின் வீடுகளுக்கும், கடைகளும் தீவைத்தனர்.  அன்றிரவு, சுமார் 400 பேர் அடங்கிய இராணுவத்தினரின் படைப்பிரிவொன்று தமிழர்களின் கிராமங்களான இரம்பைக்குளம், தோணிக்கல், கூழைப்பிள்ளையார் குளம், கூடம்குளம், மூன்றுமுறிப்பு ஆகிய பகுதிகளுக்கு  ஐம்பது வாகன‌ங்களில் வந்திறங்கியது. அக்கிராமங்கள் முற்றாகச் சுற்றி வளைக்கப்பட்டதுடன், நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு வீடுகளுக்கு வெளியே வந்தோரை கைகளை மேலே தூக்கி வருமாறு பணித்த இராணுவத்தினர், சனநடமாட்டம் அற்ற பகுதிக்கு அவர்களை இழுத்துச் சென்றனர். அக்கிராமங்களின் வீடுகளுக்குள் புகுந்த சில இராணுவத்தினர் அங்கிருந்த இளைஞர்களை அவர்களின் பெற்றோரின் முன்னிலையில் சுட்டுக் கொன்றனர். மீதிப்பேரைக் கைது செய்து , ஏனையோர் தடுத்துவைக்கப்படிருந்த  ஒதுக்குப்புறமான பகுதிக்கு இழுத்து வந்தனர். "ஒரு வயதான அதிகாரி அடித்தொண்டையில் கத்தினான், "நாற்பது வயதிற்குக் குறைந்த எல்லாப் பேய்களும் எனக்கு முன்னால் வந்து வரிசையில் நில்லுங்கள். மற்றையவர்கள் நிலத்தில் இருக்கலாம்" என்று அவன் கர்ஜித்தான். எனக்கோ 52 வயது. நான் நிலத்தில் இருந்துகொண்டேன். எனது இரு மகன்களும் இராணுவத்தினர் கட்டளையிட்டதன்படி வரிசையில் சென்று நின்றுகொண்டார்கள். எனது பிள்ளைகள் உட்பட சுமார் 50 இளைஞர்களை அவர்கள் வரிசையில் நிறுத்திச் சுட்டுக் கொன்றார்கள்" என்று சர்வதேச மன்னிப்புச் சபையிடம் தனது வாக்குமூலத்தைக் கொடுத்த இரு இளைஞர்களின் தந்தையான கந்தவனம் குமரன் கூறினார்.  29 வயது நிரம்பிய சிவகுமாரன் எனும் இளைஞரது மனைவியான சாந்தினி தனது வாக்குமூலத்தில் அன்றிரவு அப்பகுதியில் நடந்த அகோரமான படுகொலைகளைப்பற்றி இவ்வாறு சாட்சியமளித்தார். "அன்றிரவு எனது வீட்டிற்கு இராணுவத்தினர் வந்தபோது எனது கணவரை நான் ஒளித்திருக்கச் சொன்னேன். ஆனால், வீட்டினுள் வந்த இராணுவத்தினர் அவரைக் கண்டுவிட்டனர். அவரைக் கைகளை உயர்த்துமாறு கேட்டுக்கொண்டே நெற்றியில் சுட்டுக் கொன்றனர். அவரது தலை சிதறிப்போக, மூளைப்பகுதி நிலமெங்கும் சிந்தத் தொடங்கியது. எனது பெயரைச் சொல்லிக்கொண்டே அவர் எனது கைகளில் இறந்துபோனார்" என்று அவர் கூறினார்.  அப்படுகொலைகள் இரண்டு நாட்களாகத் தொடர்ந்து நடைபெற்றன. வவுனியாவில் மொத்தமாக 120 தமிழர்களை சிங்கள இராணுவத்தினர் இரு நாட்களில் கொன்றனர். கொல்லப்பட்டவர்களில் 8 சிறுவர்களும் அடங்கும், அவர்கள் எவருமே 10 வயதைக் கடந்திருக்கவில்லை. அப்பகுதியின் சர்வோதய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், அவரது மனைவியும் கொல்லப்பட்டவர்களில் அடங்கும். தாம் கொன்றவர்களில் 40 பேரின் உடல்களை இழுத்துவந்த இராணுவம் வவுனியா வைத்தியசாலையில் போட்டுவிட்டுச் சென்றது. மீதி 80 பேரின் உடல்களும் படுகொலைகள் நடந்த இடத்திலேயே கிடந்தன.   தமிழர்களை வேரோடு பிடுங்கி எறிதல்  இவ்விரு நாட்களிலும் தமிழர் தாயகத்தின் மற்றுமொரு பகுதியிலும் சிங்கள அரச படைகள் தமிழர்கள் மீதான படுகொலைகளைப் புரிந்திருந்தனர். திருகோணமலையில் இவ்விரு நாட்களிலும் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 100 தமிழர்களை இராணுவம் கொன்றது. பாரம்பரிய தமிழ்க் கிராமங்களான பன்குளம், இரணைக்கேணி, சாம்பல்த்தீவு ஆகியவற்றிற்குள் புகுந்த இராணுவத்தினர் அக்கிராமங்களில் இருந்து தமிழர்கள் எவரும் வெளியேற முடியாதவாறு சுற்றிவளைத்து நூறு பொதுமக்களைச் சுட்டுக் கொன்றனர். தமது உறவினர்கள் கொல்லப்பட்டதைக் கண்ணால்க் கண்ட சாட்சிகள் தமது சாட்சியங்களை சர்வதேச மன்னிப்புச்சபை உட்பட பல மனிதவுரிமை அமைப்புக்களுக்கு வழங்கியிருந்தனர். சாம்பல்த் தீவில் கைதுசெய்யப்பட்ட இளைஞர்களை வரிசையில் நிற்கவைத்த இராணுவம் அருகிலிருந்து சுட்டுக் கொன்றது. பன்குளம் பகுதியில் இராணுவத்தினருடன் இணைந்துகொண்ட சிங்கள ஊர்காவல்ப் படையினர் இக்கோரத் தாண்டவத்தில் ஈடுபட்டனர். சிங்கள ஊர்காவல்ப் படை ஆனால், இத்தாக்குதல்கள் நன்கு திட்டமிட்ட வகையில், இராணுவத்தினருக்கான பாதுகாப்பு வலயம் ஒன்றைனை உருவாக்கும் நோக்கில் ஜெயவர்த்தனவின் அரசாங்கத்தினால் நடத்தப்பட்டிருந்தது. வடக்கு மாகாணத்திற்கும் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் இடையில் சூனிய வலயம் ஒன்றினை ஏற்படுத்துவதே தமது நோக்கம் என்று லலித் அதுலத் முதலி இத்தாக்குதல்கள் குறித்துப் பேசும்போது கூறினார். இத்திட்டத்தினை உருவாக்கும் ஆலோசனைகளை அக்காலத்தில் இலங்கையில் தங்கியிருந்த இஸ்ரேலிய இராணுவ ஆலோசகர்கள் வழங்கியிருந்தனர். "வடக்கிற்குள் பயங்கரவாதத்தை நாம் ஒடுக்கி விடுவோம்" என்று லலித் அதுலத் முதலி தொடர்ச்சியாகக் கூறிவந்தார். வவுனியாவிற்கு வடக்கே இராணுவத்தினருக்கான பாதுகாப்பு வலயம் ஒன்றினை உருவாக்கி அப்பகுதியில் தமிழர்களை நடமாட தடைசெய்தமையும், திருகோணமலை முதல் முல்லைத்தீவு வரையான கடற்பரப்பினை தடைசெய்யப்பட்ட பிரதேசமாக அறிவித்ததும் வடக்கையும் கிழக்கையும் முற்றாகத் துண்டித்துவிடும் நோக்கில்த்தான் என்பது வெளிப்படையானது. நிலம் வழியாக வடக்கிலிருந்து கிழக்கிற்கு போராளிகளும், ஆயுதங்களும் கொண்டுவரப்படுவதைத் தடுக்கும் நோக்கிலேயே வடக்கு மாகாணத்திற்கும், கிழக்கு மாகாணத்திற்கும் இடையிலான நிலத்தொடர்பினை இராணுவப் பாதுகாப்பு வலயங்களை உருவாக்குவதன் மூலம் அரசாங்கம் முற்றாகத் துண்டித்தது. அத்துடன், கடல்வழியாக போராளிகள் இந்த மாகாணங்களுக்கிடையில் பயணிப்பதைத் தடுக்க கடல்வலயத் தடையினையும் அரசு கொண்டுவந்திருந்தது. இலங்கையின் மாகாணங்கள்  தெற்கில் காணியற்ற சிங்கள விவசாயிகளை தமிழர் தாயகத்திலிருந்து தமிழர்களை வேறோடு பிடுங்கியெறிந்த பகுதிகளில் உருவாக்கப்பட்டிருக்கும் இராணுவப் பாதுகாப்பு வலயங்களில் லலித் அதுலத் முதலி குடியேற்றத் தொடங்கினார். என்னுடன் பேசும்போது குறைந்தது 200,000 சிங்களவர்களையாவது குடியேற்றுவதே தனது திட்டம் என்று ஒருமுறை கூறியிருந்தார். மேற்கின் மன்னார்க் கரையிலிருந்து முல்லைத்தீவின் கிழக்கு எல்லைவரையான பகுதியில் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டு வந்த இராணுவப் பாதுகாப்பு வலயத்தில் இவர்கள் குடியேற்றப்பட்டு வந்தனர். மேலும், முல்லைத்தீவிலிருந்து திருகோணமலை வரையான கரையோரக் கிராமங்களில் தமிழர்களை விரட்டிவிட்டு சிங்கள மீனவர்களை குடியேற்றவும் லலித் அதுலத் முதலி திட்டமிட்டார். பெருமளவு இயற்கை வளங்கள் நிரம்பிய இப்பகுதிகளில் தமிழர்களின் பாரம்பரிய விவசாய மற்றும் மீன்பிடிக் கிராமங்கள் தொடர்ச்சியாகக் காணப்பட்டு வந்தன. வளம் நிறைந்த இக்கிராமங்களை இராணுவ ஆக்கிரமிப்பு ஒன்றின் ஊடாகக் கைப்பற்றி சிங்களவர்களைக் குடியேற்றுவதே ஜெயவர்த்தனவினதும் லலித் அதுலத் முதலியினதும் நோக்கமாக இருந்தது. இப்பாரம்பரிய தமிழ்க் கிராமங்களில் இருந்து தமிழர்களை வேறோடு பிடுங்கியெறியும் திட்டம் லலித் அதுலத் முதலியினால் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டு வந்தது. 1984 ஆம் ஆண்டின் ஆரம்பத்துடன் இந்த நடவடிக்கைகளும் அவரால் முடுக்கிவிடப்பட்டன.கென்ட் மற்றும் டொலர் சிங்களக் குடியேற்றப் பண்ணைகள் மீதான புலிகளின் தாக்குதல்களையடுத்து,  1984 ஆம் ஆண்டின் இறுதியிலும், 1985 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலும் இம்முயற்சிகளை லலித் அதுலத் முதலி தீவிரப்படுத்தினார். இக்காலப்பகுதியில் தமிழர்கள்  முற்றாக அடித்து விரட்டப்பட்ட கிராமங்களாவன :  கொக்கிளாய், கருநாற்றுக்கேணி, கொக்குத்தொடுவாய், நாயாறு, கென்ட் - டொலர் பண்ணைகள், ஆண்டான்குளம், கனுக்கேணி, உந்தராயன்குளம், உதங்கை, ஒதியாமலை, பெரியகுளம், தண்டுவன், குமுழமுனை கிழக்கு மற்றும் மேற்கு, தண்ணியூற்று, முள்ளியவளை, தண்ணிமுறிப்பு, செம்மலை மற்றும் அள‌ம்பில்.
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.