Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

05-1.jpg?resize=750,375&ssl=1

ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!

ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸ், ஓரினச்சேர்கையாளர்கள் குறித்து கடுமையான வசைமொழியை பயன்படுத்தியுள்ளமை தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள புனித நகரமான வத்திக்கான் (vatican) திருச்சபையில் கடந்த மே மாதம் 20 ஆம் திகதி, பாப்பரசர் பிரான்சிஸ்க்கும், பேராயர்களுக்கும் (bishops) இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது, வத்திகானில் புரோசியாஜினே (Frociaggine) காற்று வீசி வருவதாகவும், ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் இளைஞர்களை செமினரிக்குள் அனுமதிக்காமல் இருப்பதே நல்லது எனவும் பாப்பரசர் பிரான்சிஸ் குறிப்பிட்டுள்ளார்.

புரோசியாஜினே (Frociaggine) என்பது ஓரினச்சேர்க்கையாளர்களை குறிக்கும் இத்தாலிய வசை மொழி என குறிப்பிடப்படுகினறது.

புரோசியாஜினே (Frociaggine) என்ற சொல் ஆங்கிலத்தில் Fagotness என்று பொருள்படும். இந்த வார்த்தை “இயற்கையை மீறிய மயக்கம்” என்ற பொருளில் ஓரின சேர்க்கையாளர்களை குறிக்கிறது.

இந்நிலையில், பாப்பரசரின் இந்த கருத்து தற்போது இத்தாலிய ஊடகங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

பாப்பரசர் பிரான்சிஸ் இதற்கு முன்னரும் இந்த வசைமொழியை பயன்படுத்தியிருந்த நிலையில், அது சர்சையை ஏற்படுத்தியதையடுத்து, அதற்கு அவர் கடந்த மாதம் மன்னிப்பு கேட்டிருந்தார்.

இந்நிலையில், மீண்டும் அவர் Frociaggine என்ற வசைமொழியை பயன்படுத்தியுள்ளார்.

87 வயதாகும் பாப்பரசர் பிரான்சிஸ், கடந்த 11 ஆண்டு காலமாக திருத்தந்தையாகவுள்ள நிலையில், LGBT சமூகத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவர் கொண்டவர் என விமர்சிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1387440

  • Replies 108
  • Views 6.7k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • kandiah Thillaivinayagalingam
    kandiah Thillaivinayagalingam

    "ஒருபால் திருமணம்"   [நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன். நான் எவரையும் அல்லது எந்த நம்பிக்கையையும் திறனாய்வு செய்யவில்லை. இதில் கூறியுள்ள கருத்துக்களின் தவறுகளை ஆக்கபூர்வமாக

  • ரஞ்சித்
    ரஞ்சித்

    உடலுறவை மட்டுமே அடிப்படையாக வைத்து இந்தவிடயம் ஆராயப்படுவதால் வரும் மயக்கமேயன்றி வேறில்லை இது. இயற்கையாக ஆணும் பெண்ணும் மட்டுமே ஒரு குழந்தையை உருவாக்கமுடியும் என்கிற நியதி இருப்பது உண்மைதான். ஆனால

  • Kavi arunasalam
    Kavi arunasalam

    கடந்த வருட ஆரம்பத்தில், யேர்மனியில்,   இரயிலில் பயணிப்பதற்காக,  இணையமூலமாக ஒருவர் ரிக்கெற் பதிவு செய்ய விரும்பி யேர்மனி இரயில் திணைக்களத்தின்  இணையத்தளத்தில் முயன்றிருக்கிறார். இணையத்தில் இருந்த படிவத

  • கருத்துக்கள உறவுகள்

ஓரினச்சேர்க்கையாளராக இருப்பது ஒரு குற்றமல்ல. ஆனால் ஓரினச் சேர்க்கையை ஊக்குவிப்பது நிச்சயம்  கண்டிக்கப்பட வேண்டும்.

12 minutes ago, Kapithan said:

ஓரினச்சேர்க்கையாளராக இருப்பது ஒரு குற்றமல்ல. ஆனால் ஓரினச் சேர்க்கையை ஊக்குவிப்பது நிச்சயம்  கண்டிக்கப்பட வேண்டும்.

ஊக்குவிப்பது என்றால் எப்படி? அப்படி ஊக்குவிப்பது ஏன் தவறானது?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

ஊக்குவிப்பது என்றால் எப்படி? அப்படி ஊக்குவிப்பது ஏன் தவறானது?

ஊக்குவிக்காமல் இருப்பது என்றால், வெளிப்படையாக இருக்காமல் ஒளிந்திருத்தல்😎. தமிழ் கல்யாண வீடுகளில் துணையிழந்தவர்கள் முன்னே வராமல் ஒளிந்து நிற்பது போல! அல்லது 83 கலவரத்தின் பின்னர் கொழும்பில் பஸ்ஸில் பயணம் செய்த தமிழ் பெண்கள் நெற்றிப் பொட்டு இல்லாமல் பயணம் செய்ததைப் போல!

ஓரினச்சேர்க்கையாளர்கள் இப்படி மறைவாக இருந்தால், இந்த homophobic ஆக இருப்பவர்களுக்கு மனக்கிலேசம் ஏற்படாது, எனவே அவர்கள் "நாம் நோர்மலான ஆட்கள்" என்று பெருமிதமும் அமைதியும் கொள்வர்.

இங்கே யாருக்கு உளவள ஆலோசனை / சிகிச்சை தேவை என்று எனக்குக் குழப்பமாக இருக்கிறது இப்போது😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, தமிழ் சிறி said:

“இயற்கையை மீறிய மயக்கம்”

இயற்கைக்கு மாறான எல்லாவற்றையும் தடை செய்யக்கூடாதுஅல்ல மாறாக அவைகள் அழிக்கப்படணும்.ஓட ஓட விரட்டப்படணும். :cool:

2 hours ago, குமாரசாமி said:

இயற்கைக்கு மாறான எல்லாவற்றையும் தடை செய்யக்கூடாதுஅல்ல மாறாக அவைகள் அழிக்கப்படணும்.ஓட ஓட விரட்டப்படணும். :cool:

இலங்கை அரசின் இனவாத நடவடிக்கைகளில் இருந்து உங்களை பாதுகாக்க நீங்கள் வந்து வாழ்கின்ற ஜேர்மன் நாட்டில் ஓரினச்சேர்க்கையாளர்கள் தொடர்பான உரிமைகளுக்கு மிகவும் வலுவாக சட்ட ரீதியிலான அங்கீகாரம் கொடுக்கப்பட்டு உள்ளது.

ஹிட்லரின் நாசிகள் ஓரினச்சேர்க்கையாளர்களையும் கொன்று குவித்து இறுதியில் தோற்கடிக்கப்பட்டபின் (இரண்டாம் உலகப் போரின் பின்) இவர்களுக்கான உரிமைகள் வழங்குவதில் ஜேர்மனி முன்னனி வகிக்கின்றது

ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு registered partnerships எனும் வகையில் 2001 இல் சட்ட ரீதியில் வழங்கிய ஜேர்மனி, பின்னர் 2017 இல் அவர்கள் குழந்தையை தத்தெடுக்கும் வகையில் மேலும் தளர்வுகளை கொண்டு வந்து ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணத்திற்கு மேலும் மேலும் சட்ட ரீதியிலான அங்கீகாரத்தைக் கொடுத்துள்ளது.

ஆனால் நீங்கள், அந்த நாட்டிலேயே வாழ்ந்து கொண்டு, அந்த நாட்டின் சட்டங்களை மதிக்காமல் அவர்கள் அழித்தொழிக்கப்பட வேண்டும் என்றும், அதாவது கொல்லப்பட்ட வேண்டும் என்றும் விரட்டப்படல் வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றீர்கள்.

தனக்கு அபயம் அளித்த ஒரு நாட்டில் உள்ள, சட்ட ரீதியிலான அங்கீகாரம் உள்ள ஒரு சமூகத்தை அழித்தொழிக்க வேண்டும் என்கின்றீர்கள்.

இது தான் ஜேர்மன் நாட்டுக்கு நீங்கள் செய்யும் கைமாறு!

நன்றி கெட்ட உலகம் இது.


 

Edited by நிழலி
ஒரு வரி சேர்க்க

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

இயற்கைக்கு மாறான எல்லாவற்றையும் தடை செய்யக்கூடாதுஅல்ல மாறாக அவைகள் அழிக்கப்படணும்.ஓட ஓட விரட்டப்படணும். :cool:

இப்ப விளங்குதா? ஏன் மேற்கு நாடுகள் உங்களைப் போன்றவர்களை உள்ளே எடுக்க அச்சப் படுகிறார்கள் என?

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Justin said:

இப்ப விளங்குதா? ஏன் மேற்கு நாடுகள் உங்களைப் போன்றவர்களை உள்ளே எடுக்க அச்சப் படுகிறார்கள் என?

இப்ப விளங்குதா நான் ஏன் பிரித்தானியா பிரான்ஸ் ஜேர்மன் அயர்லாந் என வலதோ இடதோ நடுவோ அந்த அந்த மண்ணின் மக்களின் அரசியல் தெரிவை ஆதரிக்கிறேன் என..

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்

ஊக்கு

7 hours ago, நிழலி said:

ஊக்குவிப்பது என்றால் எப்படி? அப்படி ஊக்குவிப்பது ஏன் தவறானது?

ஓர்பால் தெரிவை ஊக்குவிப்பதற்கான காரணங்களாக கீழே  வருபவைகளை Copilot  அடையாள காட்டியுள்ளது 👇

என்னைப்பொறுத்தவரை குடும்ப அமைப்பு முதான் குழந்தைகளுக்கும் அவர்களது எதிர்காலத்திற்கும் பாதுகாப்பானது என்பது என் நம்பிக்கை..  அதனை பலவீனப்படுத்தும் எதனையும் ஆதரிக்கவ்முடியாது. 

மேற்கில் குடும்ப அமைப்பை ஊக்குவிக்கும் எந்த ஒரு விளம்பரத்தையும் யாரேனும் பார்த்ததுண்டா?  கண்டவர்கள் பதில் கூறவும்”. 


The support for same-sex relationships in Western countries is influenced by a variety of factors, including cultural values, economic development, and political systems. Here are some key reasons why Western societies may encourage and support same-sex relationships:

  1. Human Rights and Equality: Western countries often emphasize human rights and equality for all individuals, including those in the LGBTQ+ community. The recognition of same-sex relationships is seen as an extension of these rights1.

  2. Democratic Values: Democracies promote freedoms such as freedom of expression and assembly, which extend to supporting the rights of minority groups, including LGBTQ+ individuals1.

  3. Economic Development: There is a correlation between economic development and the support of LGBTQ+ rights. Wealthier nations tend to be more tolerant and supportive of diversity, including sexual orientation2.

  4. Separation of Church and State: In many Western countries, there is a clear separation between religious institutions and government policies, which allows for the support of same-sex relationships regardless of religious views on the matter2.

  5. Cultural Shifts: Over time, Western societies have experienced cultural shifts that lead to a broader acceptance of different lifestyles and family structures, including those of same-sex couples3.

  6. Legal Recognition: Many Western countries have legalized same-sex marriage or recognize civil unions, providing legal support and recognition for same-sex couples1.

It’s important to note that attitudes towards same-sex relationships can vary widely even within Western countries, and there is still ongoing debate and discussion on this topic. However, the general trend in many Western societies has been towards greater acceptance and support for same-sex relationships.

பின்குறிப்பு:

மேற்கில் வசிப்பதால் மேற்கில் கூறப்படும் எல்லாவற்றையும் தலைமேற் சுமந்து,  காலால் இட்ட கட்டளையை தலையால் செய்ய என்னால் முடியாது.  

சிலருக்கு அதுதான் தொழிலே. 

(நிழலியைக் குறிப்பிடவில்லை)

 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

ஓர் ஆணுக்கு ஒரு பெண்தான் துணை. ஒரு பெண்ணுக்கு ஒர் ஆண்தான் துணை. இதை மாற்ற வெளிக்கிட்டால் அந்தக் கடவுளே வந்தாலும் எதிர்ப்பேன்.

வெல் செய்ட் போப்!👏

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நிழலி said:

ஊக்குவிப்பது என்றால் எப்படி? அப்படி ஊக்குவிப்பது ஏன் தவறானது?

இதை பற்றி தெரியாது 

ஆனால்  உடலுறவு கொள்வதால்   

குழந்தை கிடைக்கும் 

ஆரோக்கியம் அதிகரிக்கும் 

ஆயுள் கூடும் 

மன அழுத்தம் குறையும்   

இனம் அதாவது உயிரினம் அழிவது தடுக்கப்படும் 

சொந்த பிள்ளைகள் பேரப்பிள்ளைகளுடன். கதைப்பது விளையாடுகிறது,.சுற்றுலா செல்லுதல்    சிறந்த பொழுதுபோக்கு    ஆகும்  ........ இப்படிப்பட்ட நன்மைகள் ஒரினசேர்க்கையளார்களல். என்ன நன்மைகள் உண்டு”???

34 minutes ago, Kapithan said:

 

என்னைப்பொறுத்தவரை குடும்ப அமைப்பு முதான் குழந்தைகளுக்கும் அவர்களது எதிர்காலத்திற்கும் பாதுகாப்பானது என்பது என் நம்பிக்கை..  அதனை பலவீனப்படுத்தும் எதனையும் ஆதரிக்கவ்முடியாது. 

 

இதே குடும்ப அமைப்பு முறையில், பெண் துணையை ஆண் கொல்வதும், குழந்தைகள் மீதான வன்முறையும், குடும்ப வன்முறையும் (domestic violence) உள்ளது. அண்மையிலும் ஒன்ராரியோ மாகாணசபையில் இந்த domestic violence  எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்ட சீர்திருத்தத்தை என்.டி.பி. கட்சியினர் கோரி அதை டக் போர்ட்டும் ஆதரித்து இருந்தார்.

ஆகவே குடும்ப அமைப்பு முறைதான் பாதுகாப்பானது என்றும், ஓரினச்சேர்க்கை பாதுகாப்பற்றது என்றும் கூற முடியாது

 

41 minutes ago, Kapithan said:

ஊக்கு

 

மேற்கில் குடும்ப அமைப்பை ஊக்குவிக்கும் எந்த ஒரு விளம்பரத்தையும் யாரேனும் பார்த்ததுண்டா?  கண்டவர்கள் பதில் கூறவும்”. 

 

 

இங்கு காண்பிக்கப்படும் அநேகமான விளம்பரங்களில், ஆண் - பெண் உறவைச் சார்ந்த குடும்பத்தையும், பிள்ளைகளையும் தான் காட்டுகின்றனர். நான் பார்த்த எந்த விளம்பரத்திலும் ஓரினச்சேர்க்கையாளர்களை காட்டவில்லை.

 

41 minutes ago, Kapithan said:

 


The support for same-sex relationships in Western countries is influenced by a variety of factors, including cultural values, economic development, and political systems. Here are some key reasons why Western societies may encourage and support same-sex relationships:

  1. Human Rights and Equality: Western countries often emphasize human rights and equality for all individuals, including those in the LGBTQ+ community. The recognition of same-sex relationships is seen as an extension of these rights1.

  2. Democratic Values: Democracies promote freedoms such as freedom of expression and assembly, which extend to supporting the rights of minority groups, including LGBTQ+ individuals1.

  3. Economic Development: There is a correlation between economic development and the support of LGBTQ+ rights. Wealthier nations tend to be more tolerant and supportive of diversity, including sexual orientation2.

  4. Separation of Church and State: In many Western countries, there is a clear separation between religious institutions and government policies, which allows for the support of same-sex relationships regardless of religious views on the matter2.

  5. Cultural Shifts: Over time, Western societies have experienced cultural shifts that lead to a broader acceptance of different lifestyles and family structures, including those of same-sex couples3.

  6. Legal Recognition: Many Western countries have legalized same-sex marriage or recognize civil unions, providing legal support and recognition for same-sex couples1.

 

 

இதே காரணங்களால் தான் நான் ஓரினச்சேர்க்கையாளர்களை ஆதரிக்கின்றேன். நாசிக்கள் போல், அவர்களை கொல்ல வேண்டும் என்றோ, விரட்டப்பட வேண்டும் என்றோ கூறவில்லை

27 minutes ago, வாலி said:

ஓர் ஆணுக்கு ஒரு பெண்தான் துணை. ஒரு பெண்ணுக்கு ஒர் ஆண்தான் துணை. இதை மாற்ற வெளிக்கிட்டால் அந்தக் கடவுளே வந்தாலும் எதிர்ப்பேன்.

வெல் செய்ட் போப்!👏

நீங்கள் கனடாவில் வாழ்வதாக ஒரு முறை குறிப்பிட்டு இருந்தீர்கள் என நினைக்கின்றேன். அங்கு இப்படியான ஓரினச்சேர்க்கையாளர்களை கண்டவுடன் எப்படி உங்கள் எதிர்ப்பை காட்டுகின்றீர்கள்? கடவுளே வந்தாலும் எதிர்ப்பவர், நிச்சயம் அவர்களைக் கண்டவுடன் சும்மா இருந்திருக்க மாட்டீர்கள் என நம்புகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னைக்கேட்டால் இதை எதிர்க்கவும் தேவை இல்லை ஆதரிக்கவும் தேவை இல்லை.. இதை கலாச்சாரமாக ஊக்குவிப்பது நிச்சயம் தவறு.. அவரவர் வாழ்க்கை அவரவர்க்கு.. அவரவர் தெரிவு அவரவர்க்கு.. இதை ஊக்குவித்து ஒரு பஷன் ஆக்கி ரெண்ட் ஆக்குவது புகைப்பிடிப்பதை ஊக்குவிப்பதுபோல் மிகத்தவறான செயற்பாடு.. அதே நேரம் இதை இயற்கையின் தெரிவாக அமைந்தவர்களை நாம் ஏற்றுக்கொண்டு அரவணைத்து செல்லவேண்டும்.. எங்களைப்போல் அவர்களுக்கும் தம் ஆசைபோல் வாழ எல்லா உரிமையும் உண்டு.. அதே நேரம் இயற்கையாக உடலில் இந்த ஹோர்மோன் மாற்றங்கள் இல்லாத பிள்ளைகளுக்கும் மூளைச்சலவை செய்வதுபோல் இதை ரெண்ட் ஆக்குவது பல்வேறு பால்வினை நோய்களுக்கும் சமூக மற்றும் குடும்ப கட்டமைப்புகளின் சீர்குலைவுக்கும் காரணமாகிவிடும்..

15 minutes ago, Kandiah57 said:

இதை பற்றி தெரியாது 

ஆனால்  உடலுறவு கொள்வதால்   

குழந்தை கிடைக்கும் 

ஆரோக்கியம் அதிகரிக்கும் 

ஆயுள் கூடும் 

மன அழுத்தம் குறையும்   

 

ஓரினச்சேர்க்கையாளர்கள் உடலுறவு கொள்ளும் போது இவை நடக்கவில்லை என்று யார் உங்களுக்கு சொன்னது?

மாறாக, ஓரினச்சேர்க்கையாளர்களை அவர்களின் விருப்புக்கு எதிராக எதிர் பாலினத்தவர்களுடன் உடலுறவு கொள்ள செய்தால் தான் மேற்சொன்ன எதுவும் நிகழாது.

15 minutes ago, Kandiah57 said:

 

இனம் அதாவது உயிரினம் அழிவது தடுக்கப்படும் 

சொந்த பிள்ளைகள் பேரப்பிள்ளைகளுடன். கதைப்பது விளையாடுகிறது,.சுற்றுலா செல்லுதல்    சிறந்த பொழுதுபோக்கு    ஆகும்  ........ இப்படிப்பட்ட நன்மைகள் ஒரினசேர்க்கையளார்களல். என்ன நன்மைகள் உண்டு”???

இதெல்லாம் சாக்கு போக்குதானே?

1. ஓரினச்சேர்க்கையாளர்கள் மிகவும் குறைந்த விகிதமானோர். அவர்களால் இனப்பெருக்கம் செய்ய முடியாது விடின், மனித குலம் அழிந்து போகப் போவதில்லை. 

2. ஓரினச்சேர்க்கையாளர்களும் adoption இப்போ மூலமும் வாடகை தாய் முறை மூலமும் பிள்ளைகளை பெற்றுக் கொள்கின்றனர்.

அத்துடன் சொந்த பிள்ளைகள், பேரக்குழந்தைகள் இல்லாவிட்டால் சந்தோசம் இல்லாமல் ஆகிவிடுமா? 

7 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

என்னைக்கேட்டால் இதை எதிர்க்கவும் தேவை இல்லை ஆதரிக்கவும் தேவை இல்லை.. இதை கலாச்சாரமாக ஊக்குவிப்பது நிச்சயம் தவறு.. அவரவர் வாழ்க்கை அவரவர்க்கு.. அவரவர் தெரிவு அவரவர்க்கு.. இதை ஊக்குவித்து ஒரு பஷன் ஆக்கி ரெண்ட் ஆக்குவது புகைப்பிடிப்பதை ஊக்குவிப்பதுபோல் மிகத்தவறான செயற்பாடு.. அதே நேரம் இதை இயற்கையின் தெரிவாக அமைந்தவர்களை நாம் ஏற்றுக்கொண்டு அரவணைத்து செல்லவேண்டும்.. எங்களைப்போல் அவர்களுக்கும் தம் ஆசைபோல் வாழ எல்லா உரிமையும் உண்டு.. அதே நேரம் இயற்கையாக உடலில் இந்த ஹோர்மோன் மாற்றங்கள் இல்லாத பிள்ளைகளுக்கும் மூளைச்சலவை செய்வதுபோல் இதை ரெண்ட் ஆக்குவது பல்வேறு பால்வினை நோய்களுக்கும் சமூக மற்றும் குடும்ப கட்டமைப்புகளின் சீர்குலைவுக்கும் காரணமாகிவிடும்..

சட்ட ரீதியிலான அங்கீகாரத்தினை, பாடசாலைகளில் அவர்களுக்கான அங்கீகாரத்தையா trend நீங்கள் என்று சொல்கின்றீர்கள்?

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, நிழலி said:

ஓரினச்சேர்க்கையாளர்கள் உடலுறவு கொள்ளும் போது இவை நடக்கவில்லை என்று யார் உங்களுக்கு சொன்னது?

மாறாக, ஓரினச்சேர்க்கையாளர்களை அவர்களின் விருப்புக்கு எதிராக எதிர் பாலினத்தவர்களுடன் உடலுறவு கொள்ள செய்தால் தான் மேற்சொன்ன எதுவும் நிகழாது.

இதெல்லாம் சாக்கு போக்குதானே?

1. ஓரினச்சேர்க்கையாளர்கள் மிகவும் குறைந்த விகிதமானோர். அவர்களால் இனப்பெருக்கம் செய்ய முடியாது விடின், மனித குலம் அழிந்து போகப் போவதில்லை. 

2. ஓரினச்சேர்க்கையாளர்களும் இப்போ மூலமும் வாடகை தாய் முறை மூலமும் பிள்ளைகளை பெற்றுக் கொள்கின்றனர்.

அத்துடன் சொந்த பிள்ளைகள், பேரக்குழந்தைகள் இல்லாவிட்டால் சந்தோசம் இல்லாமல் ஆகிவிடுமா? 

எனது சொந்த அனுபவம்    மற்றும் உடலுறவு என்றால் என்ன?? ஆணும் ஆணும் அல்லது பெண்ணும் பெண்ணும் செய்ய முடியுமா?? 

Just now, Kandiah57 said:

எனது சொந்த அனுபவம்    மற்றும் உடலுறவு என்றால் என்ன?? ஆணும் ஆணும் அல்லது பெண்ணும் பெண்ணும் செய்ய முடியுமா?? 

சொந்த அனுபவத்தின் அடிப்படையில் தான் எதனையும் எழுத வேண்டும் என்றால், இங்கு எவரும் பரந்துபட்டு உரையாடவும் முடியாது.

ஆணும் ஆணும், மற்றும் பெண்ணும் பெண்ணும் எப்படி உடலுறவு கொள்கின்றார்கள் என்பது ஒரு 15 வயது பிள்ளைக்கே இன்று தெரிந்திருக்கும் போது, உங்களுக்கு தெரியாது என்று சொல்கின்றீகள்! அதுவும் ஜேர்மனில் இருந்து கொண்டு! 

அல்லது ஆண் குறியும் பெண் குறியும் சம்பந்தப்பட்டால் மாத்திரமே அது உடலுறவு என நீங்கள் வரையறை செய்து வைத்துள்ளீர்கள் போல் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, நிழலி said:

சொந்த அனுபவத்தின் அடிப்படையில் தா

சொந்த அனுபவம் என்பது  பிள்ளைகள் பேரப்பிள்களால். மகிழ்ச்சி உண்டு”  இது விலைக்கு வேண்டா முடியாது   வீடு திரும்பும்  ஒவ்வொரு சமயத்திலும். சிறு குழந்தை   கதவை திறந்தவுடன்   சிரித்து கொண்டு வரும் போது  அனைத்து கவலைகளும் இல்லாமல் போய்விடும்   இதை நீங்கள் அனுபவிக்க இல்லை என்றால்   .....உணரவில்லை எனில்   எனது கருத்தை எற்க வேண்டாம்’    

முன்னாள் ஜேர்மன் வெளிநாட்டு அமைச்சர் ஒருபால்க்காரர்.  50 வயதில் இறந்து விட்டார்     

  • கருத்துக்கள உறவுகள்

ரெண்ட் ஆக்குவது சட்டம் இயற்றுவதை அல்ல குறிப்பிடுவது.. தனது ஒவ்வொரு பிரசையையும் காக்கவேண்டியது அரசின் கடமை..

ஆனால் எல் ஜீ பி ரி பிரைட் மார்ச் சோ ஏதோவொண்டு ரீவி சமூகவலைத்தள விளம்பரங்களுடன் பெருமெடுப்பில் பேரணியாக நடத்துகிறார்கள்.. பல்வேறு ஆதரவு பிரச்சாரங்களை நடத்துகிறார்கள்.. உடுப்புகள் அடையாளங்கள் எல்லாம் விக்கிறார்கள்.. பெரிய பெரிய நடிகர்கள் எல்லாம் பேசுகிறார்கள்..

ஓரின சேர்க்கை என்றால் என்ன..? அது தானாக உடலில் ஹோர்மன்களின் மாற்றங்களால் வருவது.. ஆணும் பெண்ணும் எப்படி பிறப்பால் ஹோர்மன்களால் தீர்மானிக்கப்படுகிறோமோ அதுபோல் அவர்களும்.. நாம் திணிக்கக்குடாது..

ஆகவே

குமாரச்சமியோ கப்பிதனோ போன்ற பெற்றோர்கள் இந்த ரெண்டாக்கலை பார்க்கும்போது தமது பிள்ளைகளுக்கும் சமூக அக்கறை இருந்தால் சமூகத்துக்கும் இது உன் உடம்பில் இயற்கையாக வரவேணும் நீயாக திணிப்பதோ விரும்பி ஈடுபடுவதோ அல்ல என்பதை எழுத பேச எல்லா உரிமையும் இருக்கு.. உங்களுக்கு ஓரினசேர்க்கையை விளம்பரப்படுத்த உரிமை இருக்கு என்றால் இவர்களுக்கும் இயற்கையாக ஹோர்மன்களினால் நீ ஓரினச்சேர்க்கையாளனாக இல்லாமல் இயற்கைக்கு மாறாக நீ உனக்குள் அந்த எண்ணத்தை திணித்து ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவது தவறு அதனால் வரும் நோய்கள் குடும்ப கட்டமைப்பு சிதைவு ஆகியவற்றைன்பேசவும் எழுதவும் உரிமை இருக்கிறது..

  • கருத்துக்கள உறவுகள்

எங்களது காலத்தில் எமது பிள்ளைகள் ஒரு எமது இனத்தவரை கொண்டு வந்தால் போதும் இருந்தது. 

இன்று ஓரினச்சேர்க்கையாக இருந்து விடக்கூடாது என்று கலங்குவதாக இருக்கிறது. 

12 minutes ago, Kandiah57 said:

சொந்த அனுபவம் என்பது  பிள்ளைகள் பேரப்பிள்களால். மகிழ்ச்சி உண்டு”  இது விலைக்கு வேண்டா முடியாது   வீடு திரும்பும்  ஒவ்வொரு சமயத்திலும். சிறு குழந்தை   கதவை திறந்தவுடன்   சிரித்து கொண்டு வரும் போது  அனைத்து கவலைகளும் இல்லாமல் போய்விடும்   இதை நீங்கள் அனுபவிக்க இல்லை என்றால்   .....உணரவில்லை எனில்   எனது கருத்தை எற்    

கந்தையா அண்ணை,

எனக்கு இரண்டு பிள்ளைகள், இங்கிருக்கும் ஓணாண்டி, விசுகு மற்றும் பலருக்கு தெரியும் நான் அவர்களுடன் போடும் கும்மாளம்.

ஆனால் என் மகிழ்ச்சிக்குரிய விடயங்கள் மட்டுமே எல்லாருக்கும் மகிழ்ச்சியை தரும் என நான் நம்பவில்லை.

ஓரினச்சேர்க்கையாளர்கள் அவரவருக்கு தெரிந்த முறையில் மகிழ்வாக வாழ்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நிழலி said:

ஆனால் என் மகிழ்ச்சிக்குரிய விடயங்கள் மட்டுமே

ஒ.கே. ரொம்ப சரி   எற்றுக். கொள்கிறேன்   நன்றி வணக்கம் 🙏

8 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

ரெண்ட் ஆக்குவது சட்டம் இயற்றுவதை அல்ல குறிப்பிடுவது.. தனது ஒவ்வொரு பிரசையையும் காக்கவேண்டியது அரசின் கடமை..

ஆனால் எல் ஜீ பி ரி பிரைட் மார்ச் சோ ஏதோவொண்டு ரீவி சமூகவலைத்தள விளம்பரங்களுடன் பெருமெடுப்பில் பேரணியாக நடத்துகிறார்கள்.. பல்வேறு ஆதரவு பிரச்சாரங்களை நடத்துகிறார்கள்.. உடுப்புகள் அடையாளங்கள் எல்லாம் விக்கிறார்கள்.. பெரிய பெரிய நடிகர்கள் எல்லாம் பேசுகிறார்கள்..

ஓரின சேர்க்கை என்றால் என்ன..? அது தானாக உடலில் ஹோர்மன்களின் மாற்றங்களால் வருவது.. ஆணும் பெண்ணும் எப்படி பிறப்பால் ஹோர்மன்களால் தீர்மானிக்கப்படுகிறோமோ அதுபோல் அவர்களும்.. நாம் திணிக்கக்குடாது..

ஆகவே

குமாரச்சமியோ கப்பிதனோ போன்ற பெற்றோர்கள் இந்த ரெண்டாக்கலை பார்க்கும்போது தமது பிள்ளைகளுக்கும் சமூக அக்கறை இருந்தால் சமூகத்துக்கும் இது உன் உடம்பில் இயற்கையாக வரவேணும் நீயாக திணிப்பதோ விரும்பி ஈடுபடுவதோ அல்ல என்பதை எழுத பேச எல்லா உரிமையும் இருக்கு.. உங்களுக்கு ஓரினசேர்க்கையை விளம்பரப்படுத்த உரிமை இருக்கு என்றால் இவர்களுக்கும் இயற்கையாக ஹோர்மன்களினால் நீ ஓரினச்சேர்க்கையாளனாக இல்லாமல் இயற்கைக்கு மாறாக நீ உனக்குள் அந்த எண்ணத்தை திணித்து ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவது தவறு அதனால் வரும் நோய்கள் குடும்ப கட்டமைப்பு சிதைவு ஆகியவற்றைன்பேசவும் எழுதவும் உரிமை இருக்கிறது..

இங்கே வருடத்தில் ஒரு முறை இப் பேரணி நடக்கும். இப் பேரணிகளை, பாடசாலைகளில் வைக்கப்படும் rainbow flags களை LGBTQ சமூகத்தை சக சமூகமாக அங்கீகரியுங்கள் என்பதை வலியுறுத்த, அவர்கள் ஒதுக்கப்பட வேண்டியவர்கள் என காட்ட இவற்றை நடாத்துகின்றனர். 

இதில் தவறு இருப்பதாக தெரியவில்லை.

ஓரினச்சேர்க்கை அவரவர் விருப்பு சம்பந்தமானது. எவராலும் திணிக்கப்பட முடியாது. Trend இனை பார்த்து ஒருவர் மாறினால், அவரைப் பார்த்து ஐயோ பாவம் என்று சொல்லிப் போட்டு கடந்து போகத்தான் முடியும்.

கபிதன் கூறியது வேறு, குமாரசாமி கூறியது வேறு. 

சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு சமூகத்தை அழிக்கப்பட வேண்டியவர்கள் என எழுவது எல்லாம் கருத்துச் சுதந்திரத்தின் வகைக்குள் வராது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, நிழலி said:

இலங்கை அரசின் இனவாத நடவடிக்கைகளில் இருந்து உங்களை பாதுகாக்க நீங்கள் வந்து வாழ்கின்ற ஜேர்மன் நாட்டில் ஓரினச்சேர்க்கையாளர்கள் தொடர்பான உரிமைகளுக்கு மிகவும் வலுவாக சட்ட ரீதியிலான அங்கீகாரம் கொடுக்கப்பட்டு உள்ளது.

ஹிட்லரின் நாசிகள் ஓரினச்சேர்க்கையாளர்களையும் கொன்று குவித்து இறுதியில் தோற்கடிக்கப்பட்டபின் (இரண்டாம் உலகப் போரின் பின்) இவர்களுக்கான உரிமைகள் வழங்குவதில் ஜேர்மனி முன்னனி வகிக்கின்றது

ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு registered partnerships எனும் வகையில் 2001 இல் சட்ட ரீதியில் வழங்கிய ஜேர்மனி, பின்னர் 2017 இல் அவர்கள் குழந்தையை தத்தெடுக்கும் வகையில் மேலும் தளர்வுகளை கொண்டு வந்து ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணத்திற்கு மேலும் மேலும் சட்ட ரீதியிலான அங்கீகாரத்தைக் கொடுத்துள்ளது.

ஆனால் நீங்கள், அந்த நாட்டிலேயே வாழ்ந்து கொண்டு, அந்த நாட்டின் சட்டங்களை மதிக்காமல் அவர்கள் அழித்தொழிக்கப்பட வேண்டும் என்றும், அதாவது கொல்லப்பட்ட வேண்டும் என்றும் விரட்டப்படல் வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றீர்கள்.

தனக்கு அபயம் அளித்த ஒரு நாட்டில் உள்ள, சட்ட ரீதியிலான அங்கீகாரம் உள்ள ஒரு சமூகத்தை அழித்தொழிக்க வேண்டும் என்கின்றீர்கள்.

இது தான் ஜேர்மன் நாட்டுக்கு நீங்கள் செய்யும் கைமாறு!

நன்றி கெட்ட உலகம் இது.


 

நீங்கள் தனி மனித கருத்துக்திற்கும்
நன்றி விசுவாசத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் தள்ளாடுகின்றீர்கள் என நினைக்கின்றேன்.

நான் தற்போது வாழும் நாட்டில் தங்க வசதி தந்த நாட்டில் தலையாட்டும் மாடு போல் நன்றி விசுவாசத்துடன் இருக்க வேண்டுமாயின்.....

நான் பிறந்து வளர்ந்த நாட்டிற்கும் நன்றி விசுவாசத்துடன் மாற்றுக்கருத்தில்லாமல் வாழ்ந்திருக்க வேண்டுமா?

56 minutes ago, குமாரசாமி said:

நீங்கள் தனி மனித கருத்துக்திற்கும்
நன்றி விசுவாசத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் தள்ளாடுகின்றீர்கள் என நினைக்கின்றேன்.

நான் தற்போது வாழும் நாட்டில் தங்க வசதி தந்த நாட்டில் தலையாட்டும் மாடு போல் நன்றி விசுவாசத்துடன் இருக்க வேண்டுமாயின்.....

நான் பிறந்து வளர்ந்த நாட்டிற்கும் நன்றி விசுவாசத்துடன் மாற்றுக்கருத்தில்லாமல் வாழ்ந்திருக்க வேண்டுமா?

தங்க வசதி மட்டுமல்ல வாழ்வையே தந்த நாட்டின் எல்லாவற்றையும் ஆதரிக்க வேண்டிய அவசியம் இல்லை. எமக்கு பிடிக்காத விடயங்களை எதிர்த்து எம் கருத்தை முன்வைக்கலாம், அவற்றில் இருந்து தனிப்பட விலகி இருக்கலாம், ஏன் எதிராக்ல் போராட்டங்களைக் கூட செய்யலாம்.

ஆனால் எமக்கு பிடிக்கவில்லை என்பதற்காக, பலர் ஏற்றுக் கொண்டு சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு சமூகத்தினரை அழித்தொழிக்க வேண்டும் என்பது எந்த விதமான நியாயம்? தனக்கு ஒவ்வாத விடயம் எனில் அதை அழித்தொழிக்க வேண்டும் என்பது எந்தவகை அறம்?

 

உங்களின் இரண்டாவது கேள்விக்கு என் பதில்: இலங்கை போன்ற இனமொன்றில் பிறந்த் காரணத்திற்காக உயிர் வாழும் உரிமை பறிக்கப்படும் தேசத்துக்கு அதே இனத்தில் பிறந்த ஒருவர் விஸ்வாசமாக இருக்க வேண்டும் என நினைப்பதே மகா தவறு என்பேன்.

 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிழலி said:

இதே குடும்ப அமைப்பு முறையில், பெண் துணையை ஆண் கொல்வதும், குழந்தைகள் மீதான வன்முறையும், குடும்ப வன்முறையும் (domestic violence) உள்ளது. அண்மையிலும் ஒன்ராரியோ மாகாணசபையில் இந்த domestic violence  எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்ட சீர்திருத்தத்தை என்.டி.பி. கட்சியினர் கோரி அதை டக் போர்ட்டும் ஆதரித்து இருந்தார்.

ஆகவே குடும்ப அமைப்பு முறைதான் பாதுகாப்பானது என்றும், ஓரினச்சேர்க்கை பாதுகாப்பற்றது என்றும் கூற முடியாது

 

இங்கு காண்பிக்கப்படும் அநேகமான விளம்பரங்களில், ஆண் - பெண் உறவைச் சார்ந்த குடும்பத்தையும், பிள்ளைகளையும் தான் காட்டுகின்றனர். நான் பார்த்த எந்த விளம்பரத்திலும் ஓரினச்சேர்க்கையாளர்களை காட்டவில்லை.

 

இதே காரணங்களால் தான் நான் ஓரினச்சேர்க்கையாளர்களை ஆதரிக்கின்றேன். நாசிக்கள் போல், அவர்களை கொல்ல வேண்டும் என்றோ, விரட்டப்பட வேண்டும் என்றோ கூறவில்லை

நீங்கள் கனடாவில் வாழ்வதாக ஒரு முறை குறிப்பிட்டு இருந்தீர்கள் என நினைக்கின்றேன். அங்கு இப்படியான ஓரினச்சேர்க்கையாளர்களை கண்டவுடன் எப்படி உங்கள் எதிர்ப்பை காட்டுகின்றீர்கள்? கடவுளே வந்தாலும் எதிர்ப்பவர், நிச்சயம் அவர்களைக் கண்டவுடன் சும்மா இருந்திருக்க மாட்டீர்கள் என நம்புகின்றேன்.

ஒப்பீட்டு அளவில் குடும்ப முறை மேன்மையானதா இல்லையா? 

(ஒரு உதாரணத்திற்காக மாத்திரம்) உங்கள் குழந்தைகளை ஓரினச் சேர்க்கையாளர்கள் தத்தெடுத்து வளர்க்க ஒப்புதல் தருவீர்களா? 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.