Jump to content

ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kadancha said:

பிரம்மச்சாரியம் (சமஸ்கிரத தழுவல்  தான்) 

நன்றிகள் பல. சரி தான் 

Link to comment
Share on other sites

  • Replies 100
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

kandiah Thillaivinayagalingam

"ஒருபால் திருமணம்"   [நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன். நான் எவரையும் அல்லது எந்த நம்பிக்கையையும் திறனாய்வு செய்யவில்லை. இதில் கூறியுள்ள கருத்துக்களின் தவறுகளை ஆக்கபூர்வமாக

ரஞ்சித்

உடலுறவை மட்டுமே அடிப்படையாக வைத்து இந்தவிடயம் ஆராயப்படுவதால் வரும் மயக்கமேயன்றி வேறில்லை இது. இயற்கையாக ஆணும் பெண்ணும் மட்டுமே ஒரு குழந்தையை உருவாக்கமுடியும் என்கிற நியதி இருப்பது உண்மைதான். ஆனால

Kavi arunasalam

கடந்த வருட ஆரம்பத்தில், யேர்மனியில்,   இரயிலில் பயணிப்பதற்காக,  இணையமூலமாக ஒருவர் ரிக்கெற் பதிவு செய்ய விரும்பி யேர்மனி இரயில் திணைக்களத்தின்  இணையத்தளத்தில் முயன்றிருக்கிறார். இணையத்தில் இருந்த படிவத

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, kandiah Thillaivinayagalingam said:
"ஒருபால் திருமணம்"
 
[நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன். நான் எவரையும் அல்லது எந்த நம்பிக்கையையும் திறனாய்வு செய்யவில்லை. இதில் கூறியுள்ள கருத்துக்களின் தவறுகளை ஆக்கபூர்வமாக அறிவியல் கண்ணோட்டத்துடன்  விமர்சியுங்கள், அத்துடன் இதில் காணப்படும்  கேள்விகளுக்கான, சந்தேகங்களுக்கான பதில்களை தரவுகளுடன் கூறுங்கள்]
 
திருமணம் என்பது ஒரு ஆணும் பெண்ணும், ஒரு நிரந்தர மற்றும் பிரத்தியேக அர்ப்பணிப்புகளுடன் ஒன்றிணைவதுடன், இயற்கையாகவே (இயல்பாகவே அமையப்பெற்ற) குழந்தைகளை பெற்று ஒன்றாக வளர்ப்பதன் மூலம் நிறைவேற்றப்படுகிறது. அதாவது,  ஆண் பெண் பாலியல் நடத்தைக்கு ஒரு அங்கீகாரம் வழங்கி அவர்களை ஒன்றாக குடும்பமாக வாழ வைப்பது திருமணம் என்று பொதுவாக சொல்லப்படுகிறது.
 
அது மட்டும் அல்ல குடும்பங்கள் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறை வரை ஒரு கலாச்சாரத்தின் மதிப்பைக் [culture's values] கடத்தும் ஒரு கட்டமைப்பாகவும் செயல்படுகிறது. எனவே, இதற்கு புறம்பாக, எதாவது ஒன்றை திருமணம் என்று அழைப்பது திருமணம் ஆகா. திருமணம் என்பது ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையிலான உடன்படிக்கை ஆகும். இது அதன் இயல்பாகவே, குழந்தைகளின் இனப்பெருக்கம் அவர்களின் கல்வி, வாழ்க்கைத் துணைகளின் ஒற்றுமை மற்றும் நல்வாழ்வு  நோக்கி தம்பதியர்களுக்கு அறிவுறுத்துகிறது அல்லது கட்டளையிடுகிறது.
 
ஆனால் ஒருபால் திருமணத்தை ஆதரிப்பவர்கள் அல்லது அதை ஊக்கிவிப்பவர்கள், இதற்கு முற்றிலும் மாறுபட்ட ஒன்றையே  முன்மொழிகிறார்கள். அதாவது இரு ஆண்களுக்கு இடையில் அல்லது இரு பெண்களுக்கு இடையில் இதை முன்மொழிகிறார்கள். இது சுயமாக ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் காணப்படும் உயிரியல், உடலியல் மற்றும் உளவியல் வித்தியாசங்களையும், அதனால் திருமணத்தில் இணைந்து அவர்கள் காணும் வாழ்வின் முழுமையையும் மறுக்கிறது. அது மட்டும்  அல்ல, மனித இனத்தின் பெருக்கம் மற்றும் குழந்தைகளை அவர்களின் இயற்கையான இரு பெற்றோர்களுடன் வளர்வதையும் தடுக்கிறது. அதாவது, சிலவேளை அதில் ஒருவருக்கு வேறு யாராவதின் மூலம் ஒரு அல்லது பல குழந்தை இருந்து அவர்களுடன் வாழ நேரிட்டால், ஒரு பால் திருமணம் அந்த குழந்தைகளுக்கு தாய் அல்லது தந்தையின் முழுமையான பங்கை உணர முடியாமல் தடுத்து விடுகிறது.
 
டார்வின் தனது இயற்கைத் தேர்வு என்ற அத்தியாயத்தில், வெற்றிகரமான உயிரினங்கள், இறக்கும் தன் மூத்தவர்களை ஈடு செய்வதற்கு தேவையானதை விட,  அதிக சந்ததிகளை ஒவ்வொரு தலைமுறையிலும் உருவாக்குகின்றன என்கிறார். மேலும் பல்வேறு இயக்கங்களின் தாக்கங்களைச் சமாளிக்கவல்ல தனிப்பட்ட உயிர் மற்றும் உயிரினங்கள் செழித்துத் தமது நன்மைபயக்கும் உயிர்ப் பண்புகளைத் தமது அடுத்த தலைமுறைக்குச் செலுத்தி, உயிர்வாழ்வு மற்றும் இனப்பெருக்கத்தை தக்கவைக்கும் என்கிறார்.
 
உதாரணமாக ஒரு பால் உறவு, இயற்கையானது என்றால் அது ஏன் இனப்பெருக்கம் செய்யவில்லை ?.ஏனென்றால் அந்த இனம் தொடர்ந்து பிழைத்து வாழ அது மிக மிக முக்கியம். 
 
ஒருபால் மக்களுக்கு திருமணத்தை மறுப்பதால், அவர்களை மற்றொரு நபருடன் அன்பான அர்ப்பணிப்புக்கு மறுப்பதாக நீங்க ஒருவேளை நினைக்கலாம்?. உண்மையில் அது தவறு. மக்கள் எல்லா நேரமும் மற்றவர்களை நேசிப்பதுடன் அர்ப்பணிப்பும் செய்கிறார்கள். ஆனால் இவை எல்லாவற்றையும் திருமணம் என்று கூறுவதில்லை, ஏனென்றால் அந்த உறவிற்கு என தனிப்பட்ட இயல்புகள் உண்டு.
 
வேண்டும் என்றால், குழப்பம் இல்லாமல் இந்த ஒருபால் உறவுகளுக்கு வேறு ஒரு பெயரை வைக்கலாம் ?. உதாரணமாக ஒருபால் கூட்டு (same sex union) அல்லது அப்படியான வேறு இன்னும் ஒரு சொல். அதன் வரைவிலக்கணமும் அதற்குத் தக்கதாக, ஒரே பால் இனத்தை சேர்ந்த இருவர், அன்பு அல்லது நட்பு, பாலுறவு, பொருளாதாரம் போன்ற பல காரணங்களுக்காக, இனப்பெருக்கம் ஆற்றல் அற்ற ஒரு கூட்டு இதுவாகும் என்று வரையறுக்கலாம்.
 
ஆனால் திருமணம் என்று இனப்பெருக்கம் ஆற்றல் அற்ற ஒரு உறவுக்கும், இனப்பெருக்கம் ஆற்றல் உள்ள ஒரு உறவுக்கும் ஒரே மாதிரி வைப்பது தான் பிழை என்கிறோம்?  
 
ஒரு பால் உறவு அல்லது தற்பால்சேர்க்கை என்பது, ஒருவர் தனது பாலை சேர்ந்த இன்னும் ஒருவருடன் பாலியல் தொடர்பு வைப்பது ஆகும். உதாரணமாக ஆணும் ஆணும் அல்லது பெண்ணும் பெண்ணும் ஆகும். உலக வரலாற்றில், வெவ்வேறு கால கட்டங்களில், ஒரு பால் உறவு பல்வேறு விதமாக அங்கீகரிக்கப்பட்டும் , பொறுத்துக்கொள்ளப்பட்டும், தண்டிக்கப்பட்டும் மற்றும் தடைசெய்யப்பட்டும் வந்துள்ளது.
 
பண்டைய உலகில் ஒரு பால் உறவுகளுக்கான பல ஆதாரங்களை, அதிகமாக பண்டைய கிரீஸ், ரோம், பண்டைய மெசொப்பொத்தேமியா, சீனாவின் சில பகுதி, மற்றும் இந்தியாவின் இதிகாசங்களிலும் புராணங்களிலும் சில ஆலய சிற்பங்களிலும் காண்கிறோம். எனவே ஒரு பால் உறவு ஒன்றும் புதிது அல்ல.
 
என்றாலும் எந்த சந்தர்ப்பத்திலும் முன்னைய காலத்தில் சந்ததிகளை உற்பத்தி செய்ய இயலாமை காரணமாக, இதை ஒரு திருமண பந்தத்தில் ஏற்கப் படவில்லை. 
 
கிரேக்க தத்துவ ஞானி பிளாட்டோ தன்னுடைய நூலில் தற்பால் சேர்க்கை உள்ள ஆண்களே வீரம் நிறைந்தவர்களாக இருப்பர் என்று சொல்லுகிறார். கிரேக்க தொன்மவியலில் கிரேக்க கடவுளர்களிடையே தற்பால் சேர்க்கை இருந்தமையும், அது போலவே இந்து புராணமான, கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்த புராணம் பாகம் 5, 2. அசுர காண்டம், 32. மகா சாத்தாப் படலம், 29 ஆவது பாடலில், திருமாலை பார்த்து, சிவபெருமான், உன்னைக் புணரும் வேட்கை எமக்கும் உண்டு; நீ கொண்ட வேடம் மிக இனிது என்கிறார். அதற்கு பாடல் 33 இல், திருமால், சிவபெருமானை நோக்கி, ஆடவர் ஆடவரோடு கூடும் வழக்கம் இல்லை. ஆதலால் எம்பெருமானே! நீர் அடியேனை புணர்தல் முறையோ? என்று கேட்பதை காண்கிறோம்.
 
 "அன்பில் ஆடவர் ஆடவ ரோடுசேர்ந்
தின்ப மெய்தி யிருந்தனர் இல்லையால்
முன்பு கேட்டது மன்று முதல்வநீ
வன்பொ டென்னைப் புணர்வது மாட்சியோ" [1463] 
 
ஏன் ஒவ்வொரு சமுதாயமும், மனித குல வரலாற்றில், ஆதியில் இருந்து ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உறவை ஆதரித்தது அல்லது முதன்மை கொடுத்தார்கள்? ஏன் இந்த தனித்துவமான உறவு "திருமணம்" என்று அழைக்கப்படுகிறது?
 
திருமணம் உண்மையில் தனித்துவமானதே, ஏனென்றால், இது உங்களுடன் தொடர்பில்லாத ஒருவருடன் உறவை உருவாக்கத் தேர்வு செய்வதுடன், அந்த தேர்வு பல பிணைப்புகளையும், உதாரணமாக, காதல் மற்றும் உடல் / பாலியல் கூறுகளையும் கொண்டுள்ளது.
 
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட குறுந்தொகை - 40, மிக ஆழமாக, சுருக்கமாக, அழகாக அந்த தனித்துவமான உறவை எடுத்து கூறுகிறது. என் தாயும் உன் தாயும் யார் யாரோ? என் தந்தையும் உன் தந்தையும் எந்த வகையில் உறவினர்? நான் உன்னையும், நீ என்னையும் எந்த வகையில் அறிவோம். அப்படி இருந்தும் நம் அன்பு உள்ளங்கள் ஒன்றோடொன்று கலந்துவிட்டன. செம்மையான நிலத்தில் (மணல் பாங்கோ, களர் பாங்கோ இல்லாத நிலத்தில்) பெய்த மழைநீர் போலக் கலந்து நிலைபெற்றுவிட்டன. (இனி நிலமும் நீரும் பயிரை வளர்க்கும்)
 
"யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ் வழி அறிதும்?
செம் புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே."
 
இப்பாடலில் செம்புலப்பெயல் நீர் போல என்ற உவமை நினைக்கும் போதெல்லாம் நயம் தருகிறது. செம்மண் நிலமும், எட்டாத உயரத்து வானமும் ஒன்றையொன்று நெருங்காத தூரத்தில் உள்ளவை. வானம் மழையைப் பொழிகிறது. நிலம் அதனை ஏற்கிறது. சிறிது நேரத்தில் ஒன்றின் பண்பு இன்னொன்றுடன் இணைந்து விடுகிறது. பிரிக்க முடியாத பிணைப்பு உருவாகிறது. செம்மண்ணின் நிறம், பெய்த மழை நீருக்கு வருகின்றது; நீரின் நெகிழ்ச்சித் தன்மை நிலத்துக்கு வருகிறது. அது நிலத்திற்கு செழிப்பைக் கொடுக்கிறது, அவ்வாறே இந்த தனித்துவ உறவும் மனித குலத்திற்கு செழிப்பு கொடுத்து அதன் தொடர் வளர்ச்சியையும் பாது காத்து ஊக்குவிக்கிறது. அது நடைபெறா விட்டால் இந்த விவாதமே தேவை வராது?
 
இது மனித உறவுகளுக்கு குறிப்பிடத்தக்க நிலைத்தன்மையையும் (stability), தனித்துவமான ஒரு கருத்தையும் (பொருளையும்) தருகிறது, இல்லையெனில் அது முழுமையடையாது. இது ஒருபோதும் தனிநபர்களுக்கோ அல்லது தம்பதிகளுக்கோ மட்டும் இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். எம் மனித சமுதாயம் தொடரவும் வளரவும் இந்த தனித்துவமான உறவு ஒன்று மட்டுமே செயல்படுகிறது. இதைத்தான் திருமணம் என்கிறார்கள்.
 
ஆகவே அந்த இயல்பு இல்லாத எதையும் அதே சொற்களால் அழைக்கலாமா?, நீங்களே முடிவு எடுங்கள்?
 
உங்களுக்கு அன்பும் துணையும் மற்றும் பாலியல் இன்பமும் தரக்கூடிய எந்த நபருடனும் நீங்க ஒன்றாக வாழலாம். அது உங்கள் விருப்பம், ஆனால் அதையும் திருமணம் என்று சொல்லலாமா என்பதே எம் வாதம்.
 
திருமணம் என்பது பொதுவாக சில முக்கிய தனித்துவ அடிப்படை இயல்புகளை கொண்டுள்ளது. எனவே அங்கு காணப்பட்ட முதன்மை இயல்பு முற்றாக இல்லாத ஒன்றிற்கும் அதே பெயரை குறிக்க முடியாது. அதனால் தான் அதை "ஒருபால் கூட்டு" (same sex union) என்று கூறலாம் என்கிறோம்? 
 
ஆண் - பெண் திருமணம், கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தை, ஒரு தலை முறையில் இருந்து மற்ற தலை முறைக்கு மாற்றுவதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் தான் மனித இனம் செழிக்கிறது. இதன் காரணமாகவே இந்த திருமணம் என்ற ஆண் - பெண் சங்கமம், முழு சமுதாயத்திற்கு நன்மை பயக்கிறது.  
 
உதாரணமாக, தமிழருக்கிடையில், கி மு 700 இல் முதல் தோன்றிய ஆண் - பெண் கூட்டு களவு என் அழைக்கப்பட்டது. இது தனக்கு ஒரு துணையை தேடிக் கொள்ளும் முறையாகும். என்றாலும் இது பல காரணங்களால் இடையூறுகள் அல்லது ஒருவரை ஒருவர் கைவிடுதல் ஏற்பட்டதால், தொல்காப்பியர் கூறியது போல, "பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப" (கற்பியல்,4), பலர் அறியத் திருமணம் என்ற சடங்கு (கரணம்) நடத்தும் வழக்கம் சங்க காலத்தில் ஏற்பட்டது. 
 
எனவே, மனித குல வரலாறு எங்கும், ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக, உலகின் ஒவ்வொரு நிலப்பரப்பிலும், திருமணம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் நடை பெரும் ஒரு சமூக நெறியாக இருந்து வந்து உள்ளது. இவை வெறுமனே விதிவிலக்குகள் இல்லை!
 
ஒரு பால் கூட்டை ஆதரிப்பவர்கள், நிகழ் காலத்திலும், அதை தொடர்ந்து வரும் காலத்திலும் சோதிக்கப்படாத ஒரு சமூக நடைமுறையாக, ஈடுசெய்ய முடியாத ஆண் மற்றும் பெண்ணின் மதிப்புகள் முக்கிய காரணியாக அமையாத, பாலின மதிப்புக்கள் அற்ற, ஒரு பால் கூட்டை, குடும்பம் ஒன்றிற்கு உண்மையில் பரிந்து உறைகிறார்கள். இது தான் பிரச்சனையாகிறது.
 
ஏன் என்றால் அந்த குடும்பம் அடுத்த தலை முறைக்கு தானாக போகும் வாய்ப்பை இழந்து விடுகிறது. சில தம்பதியர் பிள்ளைகள் இல்லாமல் இருப்பது, சில தம்பதியர் பிள்ளை வேண்டாம் என்று இருப்பது, சில தம்பதியர் வயது போய் இருப்பது போன்ற சந்தர்ப்பங்களில் அடுத்த தலைமுறை எப்படி வரும் என்று சிலர் வாதாடலாம், ஆனால் இவை எல்லாவற்றிலும் அதற்கான சந்தர்ப்பம் இருக்கிறது அல்லது அவர்களுக்கிடையில் அதற்கான நோக்கம் இருக்கிறது என்பதை சிந்திக்க தவறி விடுகிறார்கள்.
 
ஒன்றை கட்டாயம் நீங்கள் கவனத்தில் எடுக்க வேண்டும், ஒரு பால் கூட்டுக்கு, புது பெயர் தேடாமல், இருக்கும் திருமணம் என்ற பெயருக்குள்ளேயே அதை அடக்க முற்படும் பொழுது, நீங்கள் அதன் கருத்தை அல்லது வரையறை விரிவுபடுத்தப்பட்டு, அதை உள்வாங்க வேண்டி உள்ளது. இதனால் முன்னைய தனித்துவமான கருத்து தொலைக்கப் பட்டு, அவை மேலும் மேலும் விரிவாக்கக் கூடிய நெகிழ்வு தன்மையை பெறுகிறது. எனவே கட்டாயம் வரும் காலத்தில் அது மேலும் விரிவு படுத்தப்படலாம் ?.
 
உதாரணமாக, இரு சகோதரர்களுக்கு அல்லது சகோதரிகளுக்கு இடையில் அல்லது தாய்க்கும் மகளுக்கும் இடையில் ... ஏன் சிலவேளை ஒருவருக்கும் அவரின் செல்லப் பிராணிக்கும் இடையில் .. இப்படி நீட்டப் படலாம் , அப்படி நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் உண்டு ? 


உலக வரலாற்றை நோக்கும் பொழுது பல ஆட்சியாளர்கள் ஓரின சேர்க்கையாளர்கள் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். என்றாலும் அவர்கள் திருமணம் செய்யும் பொழுது, கட்டாயம், உதாரணமாக ஆட்சியாளர் ஆணாக இருக்கும் தருவாயில், மற்றவர் பெண்ணாகவே இருக்கிறார். எனவே திருமணம் என்பது தன்னிச்சையான கட்டுமானம் அல்ல; அது ஒரு “கெளரவமான அமைப்பு“.

 

இது ஆண் பெண்களின் வேறுபட்ட மற்றும் இணக்கமான இயல்புகளின் அடிப்படையில் அமைந்துள்ளது. இதனால் தான் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன், தொல்காப்பியர் இயம்பியவாறு சடங்குகளால் வலுப்படுத்தப்பட்டு சட்டப்பூர்வமாக பிணைக்கப்பட்டுள்ளது.

 

உங்களுக்கு நன்றாகவே தெரியும், இதயத்திற்கு இரத்தத்தை உந்தி தள்ளும் செயல்பாடு உள்ளது, அப்படியே கண்ணுக்கு பார்க்கும் செயல்பாடு உள்ளது, எனவே கட்டாயம் மனித நிறுவனங்களுக்கு (human institutions) மிகவும் வெளிப்படையாக ஒரு தேவை இருக்கும். அதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் அப்படி தனித்துவமான ஒன்றும் இல்லை என்று நீங்கள் நம்பினால், திருமணம் கூட தேவை இருக்காது, அப்படி என்றால்  அதைப்பற்றி வாதாடுவதை கூட இத்துடன் நிறுத்தி விடலாம் ? 

 
 
நீங்கள் திருமண பழக்கவழக்கங்களை வெளிப்படையாக, வரலாறு முழுவதும் உற்று நோக்கினால், அங்கே சில பொதுப்படையான காரணிகளை காணலாம். அவை அதிகமாக, திருமணத்திற்கு புறம்பான பாலியல் நடவடிக்கைகளுக்கு தடை, திருமணத்திற்குள் நம்பகத்தன்மை அல்லது ஒருவருக்கு ஒருவர் உண்மையாய் இருத்தல், வாழ்வு முழுவதும் ஒருவருக்கு ஒருவர் அர்ப்பணித்தல், திருமண வாழ்வில் ஒரு பிள்ளை பிறந்தால், அதன் தந்தை கணவரே என்ற அனுமானம், பரம்பரை தொடர்பான பழக்கவழக்கங்கள் மற்றும் குடும்ப சொத்துக்கள், திருமணம் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் இருத்தல் (e.g. taboos against sex outside marriage, fidelity within marriage, life-long commitment, the assumption that a child born to a woman during a marriage is the child of her husband, customs concerning inheritance and family wealth, and ahem , the marriage being between a man and a woman) போன்றவற்றை காணலாம். இவை எல்லாம் கட்டாயம் இனப் பெருக்க நோக்கம் கொண்டவையாகவும், பெற்றோர் இருவருமே என உறுதி படுத்துவதுடன், உயிரியல் தாய் தந்தையர் கண்காணிப்பில் பிள்ளைகளுக்கு ஆதரவை நிலைநாட்டுவதும் ஆகும். 
 
எனவே தான் என்னை பொறுத்தவரையில், ஒருபால் கூட்டுக்கு அல்லது சமூக கூட்டு (civil partnerships - a new institution with a new purpose) ஒன்றிற்கு எந்த பிரச்சினையும் எனக்கு இல்லை.
 
ஆனால் அதை திருமணம் என்று வரையறுப்பதில் தான் உடன்பாடு இல்லை, ஏன் என்றால் கருத்து முக்கிய விடயத்தில் முற்றாக அல்லது எதிர்மறையாக மாறுகிறது.
 
இன்னும் ஒன்றை நான் கட்டாயம் சொல்ல வேண்டும், ஒரு ஆணின் உடலையோ அல்லது ஒரு பெண்ணின் உடலையோ, ஒரு பால் உறவு வைக்குமாறு அல்லது ஓரின சேர்க்கை செய்யுமாறு இயற்கை கட்டாயம் வடிவமைக்கவில்லை.
 
ஒருவேளை அப்படித்தான் வடிவமைத்து இருந்தால், நாம் எல்லோரும் ஒரு இருபால் உயிரியாகவே (hermaphrodites!) இருந்திருப்போம்.
 
உயிரின் அடிப்படை இயல்புகளில் ஒன்று இனப்பெருக்கம். உயிர் தன் எளிய கட்டத்தில் இருந்து மேலும் சிக்கலான கட்டத்துக்கு படிமலர்ந்தது போலவே. இனப்பெருக்க முறைகளும் எளிய நிலையில் இருந்து சிக்கலான நிலைக்கு படிமலர்ந்து உள்ளது.
 
தொடக்கத்தில் இனப்பெருக்கம் வெறும் மீளுருவாக்கமாகவே (replicating process), கலவியற்ற இனப்பெருக்கமாகவே (Asexual reproduction) நிலவியது. உதாரணமாக வைரஸ், பற்றீரியா, அதிநுண்ணுயிரி போன்றவை.
 
சிக்கலான உயிரிகளில், இனப்பெருக்கத்திற்கான பாலணுக்களை பால் உறுப்புகள் தாம் உருவாக்கிப் பரிமாறுகின்றன. உதாரணமாக விலங்குகள், மனிதர்கள். ஆகவே நாம் மில்லியன் மில்லியன் ஆண்டுகளாக  படிமலர்ந்து அல்லது பரிணமித்து இன்று இந்த நிலைக்கு தேவைகளின் அடிப்படையில் வந்துள்ளோம். எனவே இதை நாம் கவனத்தில் எப்பவும் எடுக்கவேண்டும். 
 
அண்மைய ஆய்வுகள், உலகில் இதுவரை 450 விலங்கு இனங்களிடையே ஓரினச்சேர்க்கை நடத்தைகள் காணப்பட்டு அவை ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இதில், பாலூட்டிகள், பறவைகள், பூச்சிகள், ஊர்வன என எல்லாமே அடங்கும். இதில் மனிதர்களுக்கு நெருக்கமான உறவு கொண்ட போனோபோஸ் [bonobos] ஆண் மற்றும் பெண்ணும் அடங்குகின்றன. சில சந்தர்ப்பங்களில் இனப்பெருக்க காரணங்களும் உள்ளன.
 
உதாரணமாக, ஆண் கூடைட் மீன் [Goodeid fish], தன்னுடன் போட்டியிடும் மற்ற ஆண் கூடைட் மீன்களை 
[போட்டியாளர்களை] ஏமாற்றுவதற்க்காக, இப்படி நடிக்கின்றன, மற்றும் படி, உண்மையில் அப்படியல்ல.
 
என்றாலும் ஒரே பாலின தோழர்களுக்கு இடையிலான நீண்ட கால உறவு மிருகங்களில் அரிதாகவே காணப்படுகிறது. ஆனால் 6% ஆண் பெரியகொம்பு செம்மறி ஆடுகள் [bighorn sheep] திறம்பட ஓரினச்சேர்க்கை மிருகமாகவே இருக்கின்றன. என்றாலும் விஞ்ஞானிகள் மனித ஓரினச்சேர்க்கை மிகவும் வித்தியாசமாக இருக்கக்கூடும் என்று எச்சரிக்கிறார்கள். மேலும் விலங்குகளில் இருந்து எத்தனையோ மில்லியன் ஆண்டுகளாக ஒரு தேவை அல்லது ஒரு இலக்கை நோக்கி பரிணமித்து தான், நாம் இன்றைய நிலைக்கு முன்னேறி வந்துள்ளோம்.
 
ஆகவே மனித சமுதாயத்தில் எது ஏற்றுக்கொள்ளத்தக்கது என்பதற்கு ஆதாரம் காட்டுவதற்கு விலங்குகளைக் குறிப்பிடுவதில் அல்லது விலங்குகளிடம் இருந்து எமக்கு உதாரணம் எடுப்பதில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
 
"ஓரினச்சேர்க்கை: மனிதர்களை எதிர்ப்பீர்கள்; சிங்கங்களை என்ன செய்வீர்கள்?" , என்று ஒருவரின் கட்டுரையை [By ஜெயராணி • 17/10/2019] பார்த்தேன், விலங்கு உலகில் ஆவணப்படுத்தப்பட்ட தன்னின ஊன் உண்ணும் ஆதாரம் உள்ளது, மேலும் சிங்கம் தன் குட்டிகளையே சாப்பிடுகிறது. ஆகவே மனிதர்களுக்கும் சிசுக்கொலை மற்றும் நரமாமிசம் (infanticide or cannibalism) சரியானதாக இருக்கும் என்று வாதாடலாமா  ?. 
 
மனித ஓரினச்சேர்க்கை நடத்தை பற்றிய முக்கிய வாதங்களில் ஒன்று இது ஆண் குழுக்களை, உதாரணமாக, அவர்கள் வேட்டை அல்லது போரில் இருக்கும் பொழுது, அவர்களை ஒன்றாக இணைக்க உதவுகிறது என்கிறார் பேராசிரியரும் பரிணாம உயிரியலாளருமான ராபின் டன்பார் [Robin Dunbar is a professor of evolutionary psychology]. உதாரணமாக, பண்டைய கிரீஸில் ஸ்பார்டன்ஸ் [the Spartans, in ancient Greece], தமது சிறந்த மேம்பட்ட துருப்புகளுக்கு [elite troops] இடையில் ஓரினச்சேர்க்கையை ஊக்குவித்தார்கள். இரு ஆண்களுக்கு இடையில் அப்படி ஒரு உறவு இருந்தால், ஒருவருக்கு ஒருவர் தமது மற்ற நபர்களை மீட்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வார் என்பது அவர்களின் நம்பிக்கையாகும்.
 
மேலும் ஓரினச்சேர்க்கைக்கு ஒரு செயல்பாடு இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் இது வேறொன்றின் கிளை விளைவு என்றும் [a spin-off or by-product] மற்றும் பரிணாம வளர்ச்சிக்கான முக்கியத்தை இது கொண்டிருக்கவில்லை என்றும் கூறுகிறார் [It could be a spin-off or by-product of something else and in itself carries no evolutionary weight.].
 
அவர் மேலும், உடலுறவு கொள்ள வேண்டும் என்ற வேட்கை போதுமான வலுவானதாக இருந்தால் அல்லது மிகையாக வழிந்து கொட்டினால், அது வாலில்லாக் கருங்குரங்கு [போனோபோஸ்] மற்றும் செம்முகக் குரங்கு [மாகேக்] செயல்களால் பரிந்துரைக்கப்பட்டபடி, உற்பத்தி செய்யாத உடலுறவில் அந்த வேட்கை பரவக்கூடும் என்கிறார் [if the urge to have sex is strong enough it may spill over into nonreproductive sex, as suggested by the actions of the bonobos and macaques.].
 
இதன் விளைவால் அல்லது தாக்கத்தால், அவர்கள் வளரும் சமூக சூழலின் விளைவாக, அவர்களின் வாழ்நாள் முழுவதும், ஓரினச்சேர்க்கை யாளராகவே வாழ வாய்ப்பு உள்ளது அல்லது அப்படியான உணர்வுகளுக்குள் முடங்கி விட வாய்ப்பு உள்ளது என்கிறார். இதில் தான் நாம் கவனம் செலுத்த வேண்டும். என்றாலும், மனித ஓரினச்சேர்க்கைக்கான காரணங்களை முழுமையாக நாம் அறிந்து கொள்ள இன்னும் எவ்வளவோ தூரம் ஆராச்சியில் செல்ல வேண்டும் என்கிறார் ராபின் டன்பார்.
 
உலக மனித வரலாற்றின் படி, ஆண் - பெண் இருவருக்கும் இடையில் ஒரு இணைப்பை அல்லது கூட்டை சட்ட பூர்வமாக முதல் முதல் ஏறத்தாழ கி மு 2350 இல் மெசொப்பொத்தேமியாவில் அறிமுகம் செய்தவர்கள் சுமேரியர்கள் ஆகும். அதற்க்கு முதல் திருமணம் என்ற ஒரு சடங்கு இருக்கவில்லை. இங்கு சுமேரியர்கள் இன்றைய தமிழர்களின் முன்னையோர்கள் என அறிஞர்கள் இன்று பல எடுத்துக்   காட்டுகளுடன் வாதிடுகிறார்கள். இதற்கு முதல் ஒரு குறிப்பிட்ட பழங்குடியில் [tribe] உள்ள ஆண்கள் தாங்கள் விரும்பும் பெண்களை அணுகலாம் என்றும், அங்கு குழந்தைகள் பிறக்கும்போது, அவர்கள் முழு சமூகத்துக்கும் சேர்ந்தவர்களாக கருதப் பட்டார்கள். இது மனிதனுக்கு  வெவ்வேறு  பாலியல் அனுபவங்கள் அல்லது வகைகள் வேண்டும் என்ற ஒரு கருத்தின் அடிப்படையுடன் தொடர்புடையது எனலாம். என்றாலும் நாளடைவில், சில முக்கிய காரணங்களால், பாலியல் அறநெறி வளர்ச்சி அடைய, அதுவும் அதற்கு ஏற்றவாறு மாற்றம் அடைந்தது. இதன் தொடர்ச்சியாக ஒரு தொகுதி ஆண்களுக்கும் ஒரு தொகுதி பெண்களுக்கும் இடையில் திருமணம் அமைக்கப் பட்டது [‘group marriage’]. அங்கு அவர்களுக்கு இடையில் பகிரப்பட்ட பாலியல் உறவுகள் நடைபெற்றன. இதனாலேயே பின் பலகணவர் மணம் [polyandry] ஏற்பட்டது. இது இலங்கை, இந்தியா, திபெத் போன்ற நாடுகளில் முன்னைய காலத்தில் வழமையில் இருந்தன. 
 
விவசாய சமுதாயம் உலகில் முதல் எழுச்சி பெறும் பொழுது, உதாரணமாக, சுமேரியாவில், சமுதாயம் ஒரு நிலையான, ஓர் இடத்தில் தொடர்ந்து வாழக்கூடிய அமைப்பாக மாறியது. அதனால், குடும்ப வரிசையின் தொடர்ச்சியை உறுதிசெய்து, நிலையான சமூக அமைப்பை அந்த சமூகம் கோரவேண்டிய சூழ்நிலை உருவாகியது [the society demanded for stable arrangements because it ensured the continuation of the family line and provided social stability]. அதாவது திருமணத்தின் முதன்மை நோக்கம் உயிரியல் ரீதியாக அது அவரின் குழந்தை என்பதை உறுதிப் படுத்துவதே ஆகும் [to ensure that the man’s children are biologically his]. 
 
எனவே, சுமேரியாவின் தொடர்ச்சியான பண்டைய பாபிலோனில் [Babylon] பாலியல் உண்மையில் மிகவும் தாராளமாக பரந்த கொள்கையுடன் இருந்தாலும், அது ஒற்றை நபர்களுக்கு [single persons] மட்டுமே அங்கு காணப்பட்டது. ஆனால், திருமணம் ஒரு சமூக செயல்பாடாக, கடுமையாக, நெகிழ்வு தன்மையற்று கட்டுப்படுத்தப்பட்டது [marriage was rigidly stiff and controlled, as a social function]. சுமேரியன் காதல் பாடல்கள் இவ்வற்றை உறுதி படுத்துகின்றன. உதாரணமாக, கிமு 2000 ஆண்டுகளுக்கு முன் செய்யுள் வடிவத்தில் களிமண் பலகைகளில் எழுதப்பட்ட, உலகில் தோன்றிய முதல் இலக்கியமான கில்கமெஷ் காப்பியத்தில் [Epic of Gilgamesh/ written c. 2150 - 1400 BCE], முக்கிய கதாபாத்திரம் அங்கு கூறிய ஒன்றை ஒரு மேற்கோளாக காட்டலாம். 
 
“உங்கள் வயிறு நிரம்பட்டும் , 
உங்கள் உடைகள் சுத்தமாகட்டும் , 
உங்கள் உடல், தலை கழுவட்டும்; 
இரவும் பகலும் மகிழுங்கள், 
ஆடி பாடி மகிழுங்கள்; 
உங்கள் கைபிடிக்கும் குழந்தையை பாருங்கள், 
உங்கள் மனைவி உங்கள் மடியில் மகிழட்டும் ! 
இதுதான் மனிதர்களின் விதி”
 
“Let your belly be full, 
your clothes clean, 
your body and head washed; 
enjoy yourself day and night, 
dance, sing and have fun; 
look upon the child who holds your hand, 
and let your wife delight in your lap! 
This is the destiny of mortals.”
 
இந்த பாடல் வரிகள் பாபிலோனியர்களின் காதல் பற்றிய எண்ணத்தை எமக்கு படம் பிடித்து காட்டுகிறது. ஆனால் இந்த 5000 ஆண்டு எண்ணம்,  இன்றைய எண்ணத்தில் இருந்து பெரிய வேறுபாடு ஒன்றையும் காட்டவில்லை. உதாரணமாக அன்றைய இன்னும் ஒரு பாடல் ஒன்று : 
 
“தூக்கமே களைந்து விடு 
என் கைகள் காதலியை தழுவட்டும் !
நீ என்னுடன் பேசுவதால்
நான் மடியும் மட்டும் இதயம் பூரிக்கும்! 
என் அன்பே, உன்னை நினைத்து  
நேற்று இரவு இமைகள் மூட மறுத்ததால் 
இரவு முழுவதும் விழித்திருந்தேன்!" 
 
“Sleep, begone! 
I want to hold my darling in my arms! 
When you speak to me, 
you make my heart swell till I could die! 
I did not close my eyes last night; 
Yes, I was awake all night long, 
my darling, thinking of you.”
 
என்று கூறுகிறது. குழந்தைகளின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்து, அதை உறுதிப்படுத்த வேண்டிய, ஒரு அமைப்பு ஒன்றை எவராவது வடிவமைக்க வேண்டின் அது கட்டாயம் அதிகமாக இரு பெற்றோர் அமைப்பு ஒன்றுக்கே வர நேரிடும். இது குழந்தைகளுக்கு இரண்டு பெரியவர்களின் நேரம் மற்றும் பணம் போன்றவற்றை அடையக்கூடிய வசதி இருப்பதை உறுதி செய்வது மட்டுமல்ல, தரமான பெற்றோர்சார்ந்த இயல்புகளையும் அவர்கள் அனுபவிக்கக் கூடிய ஒரு பொருத்தமான சூழ்நிலையையும் அவர்களுக்கு வழங்குகிறது [it also would provide a system of checks and balances that promoted quality parenting].
 
இங்கு நீங்கள் கவனிக்கக் கூடிய தன்மை என்னவென்றால், இரு பெற்றோர்களும், அந்த பிள்ளையின் உயிரியல் பெற்றோர் என்பதால், கட்டாயம், அதிகமாக, அவர்கள் குழந்தையுடன் நெருக்கமாக உறவு வைத்திருப்பதுடன், அந்தக் குழந்தைக்காக தியாகம் செய்யவும் தயாராக இருப்பார்கள். அது மட்டும் அல்ல, யாராவது ஒரு பெற்றோர் குழந்தையை துஷ்பிரயோகம் செய்யக்கூடிய சாத்தியத்தை குறைக்கிறது. நீங்கள் மனித வரலாற்றை நுணுக்கமாக பார்த்தால், பழமையான கலாச்சாரத்தில், திருமணம் என்பது, மனித இனப்பெருக்கத்தின், ஒரு தர்க்கரீதியான நீட்டிப்பாகும் [Further in Primitive culture, marriage was a logical extension of human reproduction]. எனவே, குடும்பமும் குடும்பங்களை சுற்றி அமைக்கப்பட்ட சமுதாயமும் நிலைத்து உயிர்வாழ்வதற்கு இது உதவுகிறது. 
 

எப்படியாகினும், கடந்த நூறு ஆண்டுகளில் எம் மனித இனம் வியத்தகு மாற்றம் அடைந்துள்ளது. நாம் இன்று வேட்டுவ உணவுதிரட்டிகள் அல்லது விவசாய அடிப்படை சமூகங்கள் [hunter-gatherers or agriculturally based communities] அல்ல. நாங்கள் உயர் தொழில்நுட்பம் கொண்ட சமூகமாக இருக்கிறோம். இன்று எம்மிடம் தொலைபேசி, வானொலி, தொலைகாட்சி, விமானங்கள், ரயில்கள், கார்கள், மேம்பட்ட மருந்துகள், மரபணுப் பொறியியல் [genetic engineering], இணையம், பிறப்பு கட்டுப்பாடு, கருக்கலைப்பு, குளோனிங் அல்லது நகலி [cloning], சோதனைக் குழாய் குழந்தைகள், மற்றும் பல இருக்கின்றன. நாம் இன்று கூடிய ஆண்டு உயிர் வாழ்கிறோம். பல காரணங்களால் இன்று மனித இனம் முன்னதை காட்டிலும் வேறு பட்டுள்ளது. அந்த வேறுபாடுகள் இன்று திருமணம் என்ற கட்டுக்கோப்பை பாதிக்கிறது அல்லது மாற்றுகிறது.

 

உதாரணமாக, எம்மை இறப்பு பிரிக்கும் மட்டும் ["till death do us part"] என்ற அர்ப்பணிப்பு இன்று இல்லை. மேலும் அவர்கள் குடும்பமாக இருந்தாலும், தனித்தனியாக அல்லது வெவேறாக பல விடயங்களை கையாள முடியும். எனவே உங்கள் துணையை பெரிய கட்டுப்பாடுகள் அற்று தேர்ந்து எடுக்க முடியும். உதாரணமாக ஒரு பால் துணை. ஆனால் என்னை பொறுத்த வரையில், ஒரு பால் கூட்டுக்கும் திருமணம் என்று அழைப்பது தவறு என்று எண்ணுகிறேன். ஏன் என்றால் அதற்க்கு ஒரு தனித்துவமான நீண்ட காலம் ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் வரையறுக்கப்பட்ட கருத்து உண்டு.

 
மேலும் marriage என்ற ஆங்கில சொல்லை எடுத்தால், அதில் உள்ள "MARRY" என்ற சொல் லத்தீன் சொல்லான maritus (married) ஆகும். இந்தோ ஐரோப்பியன் மூல சொல் mari இளம் பெண்ணை (young woman) குறிக்கிறது. “mother” [தாய்] க்கான பிரெஞ்சு சொல் mere or Matri , மேலும்  திருமணத்திற்கான சொல் matrimony, இது matri+mony , என்று பிரிக்கலாம். இதில் mony , செயல், நிலை அல்லது நிபந்தனையை குறிக்கிறது. எனவே ஒரு பெண் தாய்மை அடைவதற்கான துவக்கத்தை  உண்டாக்கும் நிலையை தெரியப்படுத்தும் சடங்கு எனலாம் [matrimony  = matri  + mony, Here, mony, a suffix indicating “action, state, or condition. ”Hence Matrimony refers to that that rites wherein a woman enters the state that inaugurates an openness to motherhood]. பொதுவாக ஒரு இல்லறவாழ்வு அல்லது மண வாழ்க்கைக்குரிய உறவு  [conjugal relations], பெண் தாய்மை அடைதல் ஆகும்.
 
அதனால் தான், ஒருபால் உறவை சட்டபூர்வமாக வலுப்படுத்தி, தெரிவிக்கும் சடங்குக்கு ஒரு பால் கூட்டு அல்லது அது மாதிரி இன்னும் ஒரு சொல்லை தேர்ந்து எடுக்கலாம் என்கிறோம், அல்லாவிட்டால் ஒரு குழப்ப நிலை மட்டும் அல்ல மனித சமுதாயமே தேங்கும் நிலைக்கு வரலாம் ? 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
 

நீங்கள் இந்தக் கட்டுரையை முதலே இணைத்திருக்கிறீர்களென நினைக்கிறேன். தற்போது இது கவனம் பெற்றிருக்கிறது.

உங்கள் கட்டுரையில் இருக்கும் பல சந்தேகங்களும், வினாக்களும் நாகரீகமான முறையில் அழகாக வெளிப்படுத்தப் பட்டிருக்கின்றன என்பதைத் தவிர, ஏலவே ஓர்பாலின உறவை எதிர்ப்போர் முன்வைத்து, பரவலாகப் பதில்கள் கொடுக்கப் பட்ட வழமையான சந்தேகங்கள் தான்.

ஒரு மாதிரிக்கு,

1. மனித இனம் தப்பி, பெருகி வாழ இயற்கையாக வழங்கப் பட்டது ஆண், பெண் உறவு என்கிறீர்கள். ஓர் பாலின தம்பதிகள், தத்துக் கொடுக்கப் பட்ட குழந்தையை அன்புடன் வளர்த்தெடுக்கும் போது , இந்த மனித இனத்தின் தொடர்ச்சி காக்கப் படுவதில்லையா? அல்லது, பிள்ளை பெறாமல் திருமணமாகி இருப்போர் "இயற்கைக்கு மாறாக இருக்கிறார்கள்" என்று அவர்களையும் ஓரினச் சேர்க்கையாளரை தற்போது செய்வதைப் போல ஒதுக்கி வேறு பெயரால் அழைக்க வேண்டுமென்கிறீர்களா?

மனித இனத்தோடு சேர்ந்தே வந்திருக்கும் இந்த ஓர்பால் கவர்ச்சியால், நீங்கள் பயப்படுவது போல எந்த மனித இன அழிவும் கடந்த 200K ஆண்டுகளில் ஏற்படவில்லையானால், இனி ஏற்படுமென்று எப்படி சொல்கிறீர்கள்? ஹாவார்ட் கூர்ப்பியல் நிபுணர் டானியல் லிபர்மானின் கருத்துப் படி. "கூர்ப்பு என்பது எப்போதுமே எண்ணிக்கையை அதிகரித்தல்/தப்பி வாழ்தல் என்ற நோக்கத்தில் இயங்குவதில்லை". அது மட்டுமல்லாமல், தற்போது நிகழும் ஹோமோ சேபியன்சின் கூர்ப்பு என்பது, இயற்கையினால் பெரிதும் கட்டுப் படுத்தப் படும் நிலையில் இல்லை என்றும் சொல்கிறார். இதற்கான பல உதாரணங்கள் அவரது சுவாரசியமான நூலான The Story of Human Body இல் தருகிறார்.

எனவே, நான் ஒரு எதிர் கருதுகோளை முன்வைக்கிறேன்: சமூக மாற்றங்களை ஏற்றுக் கொண்டு, சகலரையும் (பால் கவர்ச்சி, தோல் நிறம், உடல் இயலுமை) சமமாக நடத்தினால், உலகில் ஒரு பல்லினத் தன்மையான ஹோமோ சேபியன்ஸ் உருவாகும். அதன் எண்ணிக்கை சிறிது குறைகிறதென்றே வைத்துக் கொள்வோம் ஒரு பேச்சுக்கு. ஆனால், தப்பி வாழும் ஹோமோ சேபியன்ஸ், நியண்டதாலை சேபியன்ஸ் கொன்றது போல ஒருவரை ஒருவர் மறுத்து ஒதுங்கி நிற்க/ ஒளித்திருக்கச் செய்யாமல் ஸேபியன்ஸ் என்ற இனம் முன்னேற உழைப்பவர்களாக மாற்றும். இது கூர்ப்பு ரீதியில் தப்பி வாழ்தல்/நிலைத்திருத்தல் அல்லவா?

2. இன்னொரு மாதிரியாக: இதை அனுமதித்தால், incest  ஐயும், விலங்குகளோடு புணர்வதையும் அனுமதிக்க வேண்டி வருமா? என்ற உங்கள் சந்தேகம் உங்களுக்கு வந்திருப்பது ஆச்சரியம் தருகிறது.

இரத்த உறவுக்குள் நீங்கள் சொல்வது போல உறவு நிகழ்ந்தால் பல பரம்பரை ரீதியான நோய்களைச் செறிவாக்கும் நிகழ்வு நடக்கிறது, இதனால், சில விலங்குகள் கூட தங்களிடையே தாய், மகன், உடன் பிறப்பு உறவை (in-breeding)  நாடுவதில்லை. எனவே, மனிதர்கள் இதைத் தவிர்க்க உறுதியான உயிரியல் காரணம் இருக்கின்றது.

விலங்குகளை ஒருவர் புணர முயல்வது சட்டப் படி குற்றம். ஏன்? ஒரு உடலுறவில் consent இல்லை என்றால் அது சட்ட ரீதியான consensual உறவு அல்ல! விலங்குகள் எப்படி consent கொடுக்கும் என நினைக்கிறீர்கள்?

எனவே, அழகாக எழுதியிருக்கிறீர்கள், ஆனால், உங்கள் வாதம் உறுதியான அடித்தளத்தில் இல்லை!

  • Like 4
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இன்று இந்த தன்பாலின தம்பதிகளுக்கு திருமண உடன்படிக்கை அவசியம் என நம்புகிறேன் 

ஏனெனில் 

"அவர்களது குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் சட்டரீதியான பி்ரச்சனைகள் வராது இருக்க". 

நன்றி அன்பு P.S.பிரபா


முதலாவது, எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. நான் விபரமாக விளங்கப்படுத்தி உள்ளேன், 

ஆனால் அதை "திருமணம்" என்ற பெயரில் அழைக்க முடியாது, வேண்டும் என்றால் வேறு ஒரு பெயரில் அழைக்கலாம் என்பதே என் வாதம், அதற்கான முழு காரணங்களும் வரிசைப்படுத்தி தந்துள்ளேன்.

இரண்டாவது, 

என்றாலும்  "அவர்களது குழந்தைகளுக்கு" ????

இதை விளங்கப் படுத்துகிறீர்களா ???

அதுவும் நான் உதாரணங்களுடன் விளங்கப்படுத்தி உள்ளது தான் 

Is an Adopted Child Entitled to Inheritance? 

If a person dies intestate (dies without having made a Will) then both biological children and adopted children of the deceased have the exact same rights to inherit any share of the estate as each other. However, this is dependent on whether the adopted children have been validly adopted under UK law. 

Can an Adopted Child Inherit From Biological Parents in the UK?

Ultimately, it depends on whether the child was adopted before or after the death of their biological parents. If a child was orphaned and adopted at a later date then he/she would still have the right to inherit from their biological parents. 

If the child is adopted before the death of their biological parents then, if the adoption is formalised under UK law, the legal relationship between the child and biological parent is severed and the child loses the legal right to inherit from their biological parents.

Under the Rules of Intestacy, ONLY biological or adopted children can inherit from the (adoptive) parents.

இது அதிகமான நாடுகளுக்கும் பொருந்தும் என்று எண்ணுகிறேன் . ஆகவே இருவரும் சேர்ந்து தத்துப்பிள்ளை ஒன்றையோ அல்லது பலதையோ சட்ட ரீதியாக  எடுக்கும் பொழுது அங்கு பிரச்சனை இல்லை    

மேலும் 

கட்டாயம்  இரு ஓரினச்சேர்கையாளர்களுக்கு குழந்தைகள் இருக்காது. 

ஆனால் அவர்களின் முன்னைய இரு பால் திருமணம் ஒன்றின் ஊடாக மட்டுமே இருக்கலாம்?

 

அப்படி என்றால் , அந்த தாய் அல்லது தந்தையூடாக மற்றும் இன்று பிரிந்துவிட்ட மற்ற தந்தை அல்லது தாய் ஊடாக அவர்களின் உரிமைகள் வரையறுக்கப்படு கின்றன. 

மேலும் 

Ways to become a parent if you're LGBT+

There are several ways you could become a parent if getting pregnant by having sex is not an option for you.

Possible ways to become a parent include:

donor insemination

IUI (intrauterine insemination)

surrogacy

adoption or fostering

co-parenting
[If you are in a lesbian or gay relationship, co-parenting is becoming an increasingly popular option. It involves making an agreement for both couples to be involved in the child's upbringing. The level of parental responsibility would depend on various factors including whether the lesbian couple are in a civil partnership and the amount of contact each couple wish to have with the child. All issues of contact and responsibility must be clearly communicated prior to any insemination taking place. It is strongly recommended that legal advice is sought and a donor or co-parenting agreement is in place to reduce any potential problems with co-parenting situations.]

Edited by kandiah Thillaivinayagalingam
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, kandiah Thillaivinayagalingam said:

ஆனால் அதை "திருமணம்" என்ற பெயரில் அழைக்க முடியாது, வேண்டும் என்றால் வேறு ஒரு பெயரில் அழைக்கலாம் என்பதே என் வாதம், அதற்கான முழு காரணங்களும் வரிசைப்படுத்தி தந்துள்ளேன்.

நானும் காரணங்களை எல்லாம் வாசித்தேன். பல விடயங்களை அறியக்கூடியதாக இருந்தது. நன்றி.

எனினும், சட்டத்தின் பார்வையில் திருமணம் என்று அமையாவிட்டால் பலவகைகளில் தன்பாலின  தம்பதியினர் புறக்கணிக்கப்படுவார்கள். சமத்துவமான உரிமைகள் இருக்காது. இந்தக் கோணத்திலும் பார்க்கவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

அன்பு Justin க்கு [Just - based on or behaving according to what is morally right and fair. /  in - expressing the situation of something that is or appears to be enclosed or surrounded by something else.]

மனித இனம் தப்பி, பெருகி வாழ இயற்கையாக வழங்கப் பட்டது ஆண், பெண் உறவு என்கிறீர்கள். ஓர் பாலின தம்பதிகள், தத்துக் கொடுக்கப் பட்ட குழந்தையை அன்புடன் வளர்த்தெடுக்கும் போது , இந்த மனித இனத்தின் தொடர்ச்சி காக்கப் படுவதில்லையா? அல்லது, பிள்ளை பெறாமல் திருமணமாகி இருப்போர் "இயற்கைக்கு மாறாக இருக்கிறார்கள்" என்று அவர்களையும் ஓரினச் சேர்க்கையாளரை தற்போது செய்வதைப் போல ஒதுக்கி வேறு பெயரால் அழைக்க வேண்டுமென்கிறீர்களா?

இதற்கு மிக ஆழமான விளக்கம் கொடுத்துள்ளேன் . [சில தம்பதியர் பிள்ளைகள் இல்லாமல் இருப்பது, சில தம்பதியர் பிள்ளை வேண்டாம் என்று இருப்பது, சில தம்பதியர் வயது போய் இருப்பது போன்ற சந்தர்ப்பங்களில் அடுத்த தலைமுறை எப்படி வரும் என்று சிலர் வாதாடலாம், ஆனால் இவை எல்லாவற்றிலும் அதற்கான சந்தர்ப்பம் இருக்கிறது அல்லது அவர்களுக்கிடையில் அதற்கான நோக்கம் இருக்கிறது என்பதை சிந்திக்க தவறி விடுகிறார்கள்.] 

[ஓர் பாலின தம்பதிகள், தத்துக் கொடுக்கப் பட்ட குழந்தையை அன்புடன் வளர்த்தெடுக்கும் போது , இந்த மனித இனத்தின் தொடர்ச்சி காக்கப் படுவதில்லையா?

தொடர்ச்சி என்றால் என்ன என்று சொல்லமுடியுமா ? தங்களின் தொடர்ச்சியை தாங்களே ஏற்படுத்துவது , மற்றும் படி நீங்கள் தத்து எடுக்கப்  பட்ட குழந்தையை அன்புடன் வளர்த்தெடுபது அல்ல , அந்த குழந்தையும் உங்களை மாதிரியே இருந்தால் தொடர்ச்சி அறுந்துவிடும் ?? அப்படி என்றால், அது உங்களில் இருந்து மாறுபட்டு இருபால் உறவு ஒன்றில் ஈடுபடவேண்டும் அல்லவா , அந்த, நீங்கள் சொன்ன தொடர்ச்சியை நீட்டிட] 

முதலாவது, நான் ஓரின ஒன்றி வாழ்வுக்கோ அல்லது கூட்டு வாழ்வுக்கோ எதிரிப்பு என்று எங்கும் சொல்லவில்லை 

இரண்டாவது, ஆனால் திருமணம் என்ற, ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக பண்பாட்டில் உள்ள அதே சொல்லை ஓரின கூட்டுக்கும் பாவிக்கக் கூடாது, அதற்க்கு வேறு ஒரு சொல்லை பாவிக்கலாம் என்பதே என் வாதம். [வேண்டும் என்றால், குழப்பம் இல்லாமல் இந்த ஒருபால் உறவுகளுக்கு வேறு ஒரு பெயரை வைக்கலாம் ?. உதாரணமாக ஒருபால் கூட்டு (same sex union) அல்லது அப்படியான வேறு இன்னும் ஒரு சொல். அதன் வரைவிலக்கணமும் அதற்குத் தக்கதாக, ஒரே பால் இனத்தை சேர்ந்த இருவர், அன்பு அல்லது நட்பு, பாலுறவு, பொருளாதாரம் போன்ற பல காரணங்களுக்காக, இனப்பெருக்கம் ஆற்றல் அற்ற ஒரு கூட்டு இதுவாகும் என்று வரையறுக்கலாம்.]

மூன்றாவதாக "உங்கள் கட்டுரையில் இருக்கும் பல சந்தேகங்களும், வினாக்களும் நாகரீகமான முறையில் அழகாக வெளிப்படுத்தப் பட்டிருக்கின்றன என்பதைத் தவிர, ... "

நான் எங்கும் அழகுபடுத்தவில்லை, ஆனால் நாகரிகமாக வரலாற்றில் இருந்தும் இயற்கையில் இருந்தும் குறிப்புகள் கொடுத்துள்ளேன் 

நான்காவதாக "மனித இனத்தோடு சேர்ந்தே வந்திருக்கும் இந்த ஓர்பால் கவர்ச்சியால், நீங்கள் பயப்படுவது போல எந்த மனித இன அழிவும் கடந்த 200K ஆண்டுகளில் ஏற்படவில்லையானால், இனி ஏற்படுமென்று எப்படி சொல்கிறீர்கள்?"

இது தான் கவனிக்க வேண்டியது. உதாரணமாக

The proportion of the UK population aged 16 years and over identifying as heterosexual or straight was 93.6% in 2020; there has been a decreasing trend since the series began in 2014.

An estimated 3.1% of the UK population aged 16 years and over identified as lesbian, gay or bisexual (LGB) in 2020, an increase from 2.7% in 2019 and almost double the percentage from 2014 (1.6%).

The proportion of men in the UK identifying as LGB increased from 1.9% to 3.4% between 2014 and 2020; the proportion of women identifying as LGB has risen from 1.4% to 2.8% over the same period.

ஆகவே நீங்கள் கூறிய 200K ஆண்டுகளில், இப்ப தான் இது ஒரு கணிசமான அளவு தலைகாட்டிட தொடங்கி உள்ளது . 

எனவே இதன் விளைவு அல்லது தாக்கம் இன்னும் நாம் உணரும் அளவு இல்லை. எனவே அதை வைத்து,  200K ஆண்டுகளில் ஏற்படவில்லையானால், இனி ஏற்படுமென்று எப்படி சொல்கிறீர்கள்?" என்று சொல்லமுடியுமா??

மற்றும் படி நான் அல்லது எனக்கு எந்த பயமும் இல்லை. ஏனென்றால், இதன் முழுவளர்ச்சி இன்னும் 200K ஆண்டுகளில் கூட நடைபெறாது. அதுவும் எதோ ஒரு இடத்தில் தன்னை இயற்கையின் தெரிவுகளுடன் சமநிலை படுத்திவிடும். ஆனால் குடும்பம் குழந்தை இவைகளில் எப்படியான பாதிப்புக்கள், இதன் சதவீதம் ஒரு எல்லையைத்  தாண்டும் பொழுது  என்ன நடக்கும் என்பது தெரியாது? இன்னும் நாம் 200K ஆண்டுகள் கடந்தும் ஒரு சிறிய வீதத்தில் தான் காண்கிறோம். அதனாலதான் எந்த பாதிப்பும் பெரிதாக இன்னும் இல்லை. என்றாலும் பாதிப்புக்கள் கூட எத்தனிக்கும் பொழுது , தானாகவே சமநிலை படுத்தும் என்பதே என் நம்பிக்கை 

ஐந்தாவதாக,  "தப்பி வாழ்தல்/நிலைத்திருத்தல் அல்லவா? ". ஆம் , அதில் எனக்கும் நம்பிக்கை உண்டு. 

ஆறாவதாக, "இதை அனுமதித்தால், incest  ஐயும், விலங்குகளோடு புணர்வதையும் அனுமதிக்க வேண்டி வருமா? என்ற உங்கள் சந்தேகம் உங்களுக்கு வந்திருப்பது ஆச்சரியம் தருகிறது"

நான்  incest  ஐயும், விலங்குகளோடு புணர்வதையும் அனுமதிக்க வேண்டி வருமா? என்று கூறவில்லை, ஆனால் திருமணம் என்ற சொல்லின் வரைவிலக்கணம், அப்படியான ஒன்றுக்கும் நீட்சி பெறலாம் என்றே கூறினேன் . அதனால்த்தான் ஓரின ஒன்றிய வாழ்வுக்கு , வேறு ஒரு சொல் தேவை என்று கூறினேன்.

ஏழாவதாக  "இரத்த உறவுக்குள் நீங்கள் சொல்வது போல உறவு நிகழ்ந்தால் பல பரம்பரை ரீதியான நோய்களைச் செறிவாக்கும் நிகழ்வு நடக்கிறது, இதனால், சில விலங்குகள் கூட தங்களிடையே தாய், மகன், உடன் பிறப்பு உறவை (in-breeding)  நாடுவதில்லை. எனவே, மனிதர்கள் இதைத் தவிர்க்க உறுதியான உயிரியல் காரணம் இருக்கின்றது." 

இது முற்றிலும் சரி. ஆனால் இதற்கு எதிர்மாறான சில செய்திகளும் வரலாற்றில் அல்லது இன்றும் உண்டு.  

எட்டாவதாக, "விலங்குகளை ஒருவர் புணர முயல்வது சட்டப் படி குற்றம்." ஆம் அது சரி, ஆனால் ஏன் அப்படியான சட்டம் வந்தது என்று சொல்ல முடியுமா ?, சட்டம் எதோ ஒன்றை தடுக்க, சொல்ல ஏற்படுவது தானே , அப்படி என்றால் ?? 


உங்கள் கருத்துக்களுக்கும் விளக்கங்களுக்கும் நன்றிகள். எப்பவும் ஒரு அடித்தளத்தில் இருந்து தான் நான் பார்க்கிறேன், எழுதுகிறேன் , அலசுகிறேன் . அதனால்த்தான் இந்த எட்டு விளக்கங்களும் தோன்றின?
அது தான் அடித்தளம் 

Edited by kandiah Thillaivinayagalingam
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்பு கிருபனுக்கு 

சட்டம் ஒரு ஒழுங்கை நிலை நாட்டிட, மனிதனால் ஏற்படுத்தப்பட்டது. எனவே அது காலத்துக்கு காலம்  மாற்றமடையலாம் ?. உதாரணமாக அந்த குறிப்பிட்ட சட்டத்தை, திருமண தம்பதியர் மற்றும் ஒருபால் கூட்டு தம்பதியர் எல்லோருக்கும் என மாற்றி அமைக்கலாம்? அது என்றும் பிரச்சனை இல்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரின சேர்க்கையாளர்களினால் தத்தெடுத்து வளர்க்கப்படும் குழந்தைகளின் எதிர்காலம் எப்படியிருக்கும் என்பதை எங்கும் காண முடியவில்லை. அவர்களுக்கு இரண்டும் கெட்டான் எனும் துயர வாழ்க்கையே அமையும் என நான் நினைக்கின்றேன்.

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, குமாரசாமி said:

ஒரின சேர்க்கையாளர்களினால் தத்தெடுத்து வளர்க்கப்படும் குழந்தைகளின் எதிர்காலம் எப்படியிருக்கும் என்பதை எங்கும் காண முடியவில்லை. அவர்களுக்கு இரண்டும் கெட்டான் எனும் துயர வாழ்க்கையே அமையும் என நான் நினைக்கின்றேன்.

தத்தெடுப்பது   மிக மிக  கடினம்  ஜேர்மனியிலும். இந்தியாவிலும். சட்டம் மாற்றி உள்ளார்கள்   வருமானம்  இருக்க  வேண்டும் மற்றும் வயது கூடியவர்கள். எடுக்க முடியாது   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kandiah57 said:

தத்தெடுப்பது   மிக மிக  கடினம்  ஜேர்மனியிலும். இந்தியாவிலும். சட்டம் மாற்றி உள்ளார்கள்   வருமானம்  இருக்க  வேண்டும் மற்றும் வயது கூடியவர்கள். எடுக்க முடியாது   

நீங்கள் சட்டப்படியான ஓரின சேர்க்கைக்கு ஆதரவா இல்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

நீங்கள் சட்டப்படியான ஓரின சேர்க்கைக்கு ஆதரவா இல்லையா?

நான் ஆதரிக்கவில்லை  அதேசமயம். என்னால் அதை தடுக்கவும். முடியாது    

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


ஒரு பிள்ளையை ஒருபாலினத் தம்பதி தத்தெடுத்து வளர்க்கும் போது - அந்த பிள்ளை எதிர்பாலினத்தின் தன்மை தெரியாமல் வளர்வதும், குறிப்பாக விபரம் அறியும் பராயத்தில்  (formation years).

ஒரு பாலினத்தினர் பற்றி வெளிப்படுத்தக்கூடாது, அறிவிக்க கூடாது  என்றதும்

ஒரே விளைவு, அனால் பிள்ளைக்கு தாக்கம் கூட.

பிள்ளைக்கு இயற்கையாக உருவாக கூடிய பாலினத்தன்மை வேண்டும் என்றே வடிவமைக்க (shape) வேண்டும் என்றே சூழல் (ஒருபாலின பெற்றோர்) உருவாக்கப்படுகிறது. அதுவும், வேறு நேர்பாலினத்தவர் பிள்ளைக்கு ( தத்தெடுத்து வளர்க்கும் போது)

சூழல் (ஒரு பாலின தத்தெடுக்கும் பெற்றோர்), பிள்ளை அதன்  பாலினத் தேர்வை சா ர்பாக (ஒருபாலினப்பக்கம்) தீர்மானிக வழிவகுக்கும் சாத்தியக்கூறுகள் மிகவும் கூட.

ஏனெனில் சூழல் பாலினத்தேர்வை தீர்மனைப்பதில் பங்கு வகிக்கிறது. இதை எவராவது மறுக்கட்டும் பாப்போம், ஹார்வர்ட் பேராசிரியரையும் உள்ளடக்கி.

(எந்த விதமாக (surrogacy .. )  பிள்ளையை அடைந்தாலும், அது அடிப்படை இயற்கை முறையில் தானே கருத்தரிக்கிறது)

(வெகுஅருமையாகவே ஒருபாலின பெண் கருவை சுமந்து பெறுவதற்கு ஆயத்தம், ஆண் தம்பதிகள் என்றால் முடியாது)

பிள்ளையும் ஒருபாலினத்தை தேர்ந்து எடுத்தால், அதுக்கு சந்ததி  கொடுக்கிறது யார்?

சந்ததி முடிந்து போவதற்கே வாய்ப்புகள் கூட.

வாதத்துக்கு, ஒருபாலினம் மிகுதியாக வளர்ந்த்து விட்டது என்றால், அதன் விளைவு முழு மனிதனும் அழிவு, அல்லர் சமநிலை நேர் பாலினத்தவர் பக்கம் திரும்பும் வரை அழிவு.

ஒரு பாலினகவர் தம்பதி, சோடி எதுவாகவும் வாழட்டும். 

அனால், அது திருமணம் இல்லை. 

அது திருமணம் என்றால், ஒரே நேரத்தில் நேர்பாலினத்தவர் ஒரே நேரத்தில் பல துணைகளை  கொண்டு இருப்பதும் திருமணம் என்று வரும். 

மற்றது, இந்த ஒருபாலினத்தவர், பாலின தாவும் தன்மை  கூட.

ஒரு பாலினகவர் பிள்ளை தத்தெடுக்க, வளர்க்க அனுமதிப்பது கூடாது.  

ஒருபாலின வேட்கையாளரை ஏற்றுக்கொள்வது வேறு. 

அதை திருமணம் , சந்ததி விருத்தி, கூர்ப்புடன்  குழப்புவது வேறு.

இது பயம் அல்ல, சொல்லி இருப்பது எல்லாமே காரண, காரியம் உள்ளது.  

 

19 hours ago, kandiah Thillaivinayagalingam said:

ஆனால் அதை "திருமணம்" என்ற பெயரில் அழைக்க முடியாது

 

  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

ஒரு பாலினகவர் பிள்ளை தத்தெடுக்க, வளர்க்க அனுமதிப்பது கூடாது.  

ஆமாம்  ஆண் ஒரு பாலினத்வர்....பெண் பிள்ளைகளையும்.  பெண் ஒரு பலினத்தவர். ஆண் பிள்ளைகளையும். தத்தெடுக்க. அனுமதிக்க கூடாது   அந்த பிள்ளைகள் குமரன் குமரிகள் ஆகும் போது  தூர்பிரயோகம்  செய்ய மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் உணடு?? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வானவில் கூட்டத்தின் தொல்லை வர வர அதிகரித்துக் கொண்டே போகுது. வீகன் போல இதுவும் தூண்டப்படுதலே அதிகம். இயற்கைக்கு மாறான வானவில் கூட்டத்தின் செயற்பாடு மீது பாப்பரசரின் விசனம் மட்டும் போதாது. வானவில் கூட்டத்தினரின் இருப்பு.. பெருக்கத்தை.. கிறிஸ்தவ மிசனரிகளில்.. முற்றாக தடை செய்ய வேண்டும். இனங்காணப்படும் வானவில் குற்றவாளிகளை மிசனரிகளில் இருந்து விரட்டி விடுவது நல்லது.

  • Like 5
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

ஒரின சேர்க்கையாளர்களினால் தத்தெடுத்து வளர்க்கப்படும் குழந்தைகளின் எதிர்காலம் எப்படியிருக்கும் என்பதை எங்கும் காண முடியவில்லை. அவர்களுக்கு இரண்டும் கெட்டான் எனும் துயர வாழ்க்கையே அமையும் என நான் நினைக்கின்றேன்.

 

3 hours ago, Kadancha said:


ஒரு பிள்ளையை ஒருபாலினத் தம்பதி தத்தெடுத்து வளர்க்கும் போது - அந்த பிள்ளை எதிர்பாலினத்தின் தன்மை தெரியாமல் வளர்வதும், குறிப்பாக விபரம் அறியும் பராயத்தில்  (formation years).

ஒரு பாலினத்தினர் பற்றி வெளிப்படுத்தக்கூடாது, அறிவிக்க கூடாது  என்றதும்

ஒரே விளைவு, அனால் பிள்ளைக்கு தாக்கம் கூட.

பிள்ளைக்கு இயற்கையாக உருவாக கூடிய பாலினத்தன்மை வேண்டும் என்றே வடிவமைக்க (shape) வேண்டும் என்றே சூழல் (ஒருபாலின பெற்றோர்) உருவாக்கப்படுகிறது. அதுவும், வேறு நேர்பாலினத்தவர் பிள்ளைக்கு ( தத்தெடுத்து வளர்க்கும் போது)

சூழல் (ஒரு பாலின தத்தெடுக்கும் பெற்றோர்), பிள்ளை அதன்  பாலினத் தேர்வை சா ர்பாக (ஒருபாலினப்பக்கம்) தீர்மானிக வழிவகுக்கும் சாத்தியக்கூறுகள் மிகவும் கூட.

ஏனெனில் சூழல் பாலினத்தேர்வை தீர்மனைப்பதில் பங்கு வகிக்கிறது. இதை எவராவது மறுக்கட்டும் பாப்போம், ஹார்வர்ட் பேராசிரியரையும் உள்ளடக்கி.

(எந்த விதமாக (surrogacy .. )  பிள்ளையை அடைந்தாலும், அது அடிப்படை இயற்கை முறையில் தானே கருத்தரிக்கிறது)

(வெகுஅருமையாகவே ஒருபாலின பெண் கருவை சுமந்து பெறுவதற்கு ஆயத்தம், ஆண் தம்பதிகள் என்றால் முடியாது)

பிள்ளையும் ஒருபாலினத்தை தேர்ந்து எடுத்தால், அதுக்கு சந்ததி  கொடுக்கிறது யார்?

சந்ததி முடிந்து போவதற்கே வாய்ப்புகள் கூட.

வாதத்துக்கு, ஒருபாலினம் மிகுதியாக வளர்ந்த்து விட்டது என்றால், அதன் விளைவு முழு மனிதனும் அழிவு, அல்லர் சமநிலை நேர் பாலினத்தவர் பக்கம் திரும்பும் வரை அழிவு.

ஒரு பாலினகவர் தம்பதி, சோடி எதுவாகவும் வாழட்டும். 

அனால், அது திருமணம் இல்லை. 

அது திருமணம் என்றால், ஒரே நேரத்தில் நேர்பாலினத்தவர் ஒரே நேரத்தில் பல துணைகளை  கொண்டு இருப்பதும் திருமணம் என்று வரும். 

மற்றது, இந்த ஒருபாலினத்தவர், பாலின தாவும் தன்மை  கூட.

ஒரு பாலினகவர் பிள்ளை தத்தெடுக்க, வளர்க்க அனுமதிப்பது கூடாது.  

ஒருபாலின வேட்கையாளரை ஏற்றுக்கொள்வது வேறு. 

அதை திருமணம் , சந்ததி விருத்தி, கூர்ப்புடன்  குழப்புவது வேறு.

இது பயம் அல்ல, சொல்லி இருப்பது எல்லாமே காரண, காரியம் உள்ளது.  

 

 

கவர்ச்சிகரமான "தியரி"! முகட்டைப் பார்த்து யோசித்தால் அல்லது காலையில் ரொய்லெற்றில் இருக்கும் வேளைகளில் இது போன்ற தியரிகள் சிலருக்கு (எனக்கல்ல!) உதிக்கலாம்😂

ஆனால், இப்படியான தியரிகளை உண்மை போல பொது இடங்களில் பரப்ப முதல், இதைப் பற்றி ஆய்வுகள் நடந்திருக்கின்றனவா என்று தேடிப் பார்க்க வேண்டும்.

ஆய்ந்திருக்கிறார்களா?

ஆம், 34 ஆய்வுகள், அந்த 34 ஆய்வுகளை systematic review இனால் மீள ஆராயும் போது கிடைக்கும் பதில்: ஓர் பால் பெற்றோரின் பிள்ளைகள் சில விடயங்களில் எதிர்ப்பாலின பெற்றோரின் பிள்ளைகளை விட சிறப்பாக இருக்கிறார்கள். மற்ற படி மன நிலைகளில் எதிர்ப்பாலின பெற்றோரின் பிள்ளைகளை விட வேறுபாடுகள் இல்லை.

இதன் சாதாரண மொழி இணைப்புக் கீழே:

https://www.forbes.com/sites/roberthart/2023/03/06/kids-raised-by-same-sex-parents-fare-same-as-or-better-than-kids-of-straight-couples-research-finds/ 

இனி என்ன சொல்லப் போகிறீர்கள்? "liberal intelligentsia ஷதி தான் இந்த ஆய்வு" என்று புது தியரியோடு வருவீர்களா😎

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு கலிபோர்னியாவில் இரண்டில் ஒரு திருமணம் விவாகரத்தில் முடிகின்றது என்று சொல்கின்றனர். அதை விட விவாகரத்து என்று சட்டப்படி போகாமலேயே 'ஒரு பெற்றோர்' தலைமையில் இருக்கும் குடும்பங்களும் மிக அதிகம். இவை இரண்டும் சேர்ந்தால், அது இங்குள்ள ஒரு பால் பெற்றோர்களை விட பல மடங்குகள் அதிகம். இதை வைத்துப் பார்த்தால், இரு பால் திருமணத்தால் குழந்தைகளுக்கு ஒரு பாதுகாப்பான, முழு உலகமும் அறிந்து கொள்ளக் கூடிய சூழல் அமைகின்றது என்று எப்படிச் சொல்ல முடியும்? 

கோவில் கட்டுவதற்கு என்று ஆகம விதிகள் இருக்கின்றன. அன்றிலிருந்தே இருக்கின்றன. கோவில் என்றால் என்ன, ஏன் கோவில் வேண்டும் என்றும் எழுதப்பட்டு இருக்கின்றன. இந்த என்றோ எழுதப்பட்ட விதிகளை மீறி யாரோ சிலர் அவர்களின் சுய விருப்பத்தில் ஒன்றைக் கட்டி, ஒரு கடவுளை உருவாக்கி வழிபடுகின்றனர் என்று வைப்போம். அதை அவர்கள் தங்கள் கோவில் என்றும் சொல்கின்றனர். 'நீங்கள் உங்கள் சுய விருப்பில் செய்வதற்கு இங்கு தடையில்லை, ஆனால் இதை நீங்கள் கோவில் என்று சொல்லக் கூடாது, கோவில் என்றால் விதிகள் வேறு, வழிகள் வேறு. வேணும் என்றால் உங்களின் இடத்தை 'கும்பிடும் இடம்' என்று சொல்லிக் கொள்ளுங்கள்' என்று மற்றயோர் சொல்வது சரியா?     

Edited by ரசோதரன்
  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, Justin said:

கவர்ச்சிகரமான "தியரி"! முகட்டைப் பார்த்து யோசித்தால் அல்லது காலையில் ரொய்லெற்றில் இருக்கும் வேளைகளில் இது போன்ற தியரிகள் சிலருக்கு (எனக்கல்ல!) உதிக்கலாம்

எதிர்பார்த்தது தான். 

 

46 minutes ago, Justin said:

இனி என்ன சொல்லப் போகிறீர்கள்? "liberal intelligentsia ஷதி தான் இந்த ஆய்வு" என்று புது தியரியோடு வருவீர்களா


இந்தஅல்லது இதை  போன்ற ஆய்வு நான் அறிந்தது தான்.

இது சந்தகி சந்ததி ஆக போனால் தான் இதன் விளைவு தெரியும். 

எனவே இந்த ஆய்வு இப்படியான முடிவுகளுக்குத் தான் வரும் 

(அப்படியான பரிசோதனைக்கு ஏன் மற்றவர்கள் ஆயத்தமாக இருக்க வேண்டும்?)

சும்மா,  குறுகிய கால பிள்ளை வளர்ப்பை வைத்து முடிவுக்கு வருவது, இதை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று திணிப்போரம், அந்த அஜெண்டாவை பரப்ப விரும்போக்குவோரும் செய்வது.

இவ்வளவு பாலின தாராளவாதம்  கதைக்கும் மேற்கு பாலின தாராளவாதம் திணிப்போர்  , ஏன் மேற்கு அரசு அமைப்பு   சிறுபான்மை, பெரும்பான்மை என்று வைத்து உள்ளது என்பதை கதைக்க ஆயத்தம் இல்லை, 


சிறுபான்மைக்கு அநேகமாக குழுமிய, நிறுவன உரிமைகள் ,விடயங்களில் இடம் இல்லை.


உங்களின் ( மேற்கு பாலின தாராளவாதம் திணிப்போர) லிபரல் வாதத்தை  முற்றுப்புள்ளி வைக்கும்  மேற்கு அரசுகளும், சமூகமும்.

அனால், சிறுபான்மை , பெரும்பான்மை என்று வைத்து இருக்கா விட்டால், சிறுபான்மை மிகவும் ஒடுக்கப்படும்.

எனவே, ஒருபாலினத்தவர் (ஒரு சிறுபான்மையாக) இருக்கலாம், ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

அனால், அதற்காக, எல்லா உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என்ற விடயம், பரந்த சிறுபான்மை, பெரும்பான்மை என்ற கட்டமைப்புக்கு உள்லேயே இருக்க வேண்டும், குறிப்பாக இதை பொறுத்தவரை.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/6/2024 at 12:35, P.S.பிரபா said:

“Being homosexual isn’t a crime,” Francis said on Tuesday in an interview.
 கடந்த வருட ஆரம்பத்தில் The Guardianல் வந்த பாப்பரசரின் செய்தி இது. . அப்படியிருக்க இன்று அவர் தன்பாலினத்தவரைப் பற்றி வசைபாடியாதாக கூறுவது எந்தளவு தூரம் உண்மையெனத் தெரியவில்லை.

தமிழர்களில் கிறிஸ்தவர்களில் கத்தோலிக்கர்கள் குறைவு என்று நினைக்கிறேன். அவுஸ்ரேலியாவில் தன்பாலினத்தவர்களை திருமணத்தை அனுமதித்த பின்பு தான் வெள்ள பெருக்கு அழிவுகள் கொரோனா அழிவு எல்லாம் வந்தது ஆண்டவர் கொடுத்த தண்டணை என்று தமிழ் கிறிஸ்தவர்கள் சொன்னதை நீங்கள் காணவில்லை என்று நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nedukkalapoovan said:

இந்த வானவில் கூட்டத்தின் தொல்லை வர வர அதிகரித்துக் கொண்டே போகுது. வீகன் போல இதுவும் தூண்டப்படுதலே அதிகம். இயற்கைக்கு மாறான வானவில் கூட்டத்தின் செயற்பாடு மீது பாப்பரசரின் விசனம் மட்டும் போதாது. வானவில் கூட்டத்தினரின் இருப்பு.. பெருக்கத்தை.. கிறிஸ்தவ மிசனரிகளில்.. முற்றாக தடை செய்ய வேண்டும். இனங்காணப்படும் வானவில் குற்றவாளிகளை மிசனரிகளில் இருந்து விரட்டி விடுவது நல்லது.

 

வானவில் பற்றிய கருத்துடன் உடன்பாடு இல்லை எனினும் தூண்டப்படுதல் எனும் கருத்தை ஏற்றுக்கொள்கின்றேன். சிகரெட், குடி, போதை போல ஒருபால் உறவுநிலைகள், இயற்கையில் அரிதான (இயற்கைக்கு முரணான எனும் பதம் பொருந்தவில்லை என நினைக்கின்றேன்) உறவுநிலைகள் மற்றவர்களிடையே ஊக்குவிக்கப்படுகின்றன (தொற்ற வைக்கப்படுகின்றன) என்பது உண்மை. 

முடியுமானால் கீழுள்ள காணொளியில் இதுபற்றி கூறப்படும் சில விடயங்களை கேட்டுப்பாருங்கள். 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அய்யாவின் நீண்ட கட்டுரையை படித்து முடித்தேன்.நன்றி

[திருமாலை பார்த்து, சிவபெருமான், உன்னைக் புணரும் வேட்கை எமக்கும் உண்டு; நீ கொண்ட வேடம் மிக இனிது என்கிறார். அதற்கு பாடல் 33 இல்,திருமால், சிவபெருமானை நோக்கி, ஆடவர் ஆடவரோடு கூடும் வழக்கம் இல்லை. ஆதலால் எம்பெருமானே! நீர் அடியேனை புணர்தல் முறையோ? என்று கேட்பதை காண்கிறோம்.]

கடவுளின் மேலே உள்ள செயலை பார்த்து தான் எனக்கு அதிர்ச்சியாகிவிட்டது. கிறிஸ்தவ தமிழர்கள் அவர்கள் மத அடிப்படைவாதத்தின்படி தன்பாலினத்தவர்களை எதிர்க்கின்றனர் என்றால் இந்துக்களும் இந்து கடவுளை வணங்குகின்ற சிங்கல புத்தர்களும் எதிர்ப்பது தான் மிகவும்   மாபெரும்  முரண்பாடு.  தன்பாலின தம்பதிகளுக்கு உரிமைகள்  வழங்கபட வேண்டும் என்று  இவர்கள் தங்கள் கடவுள் கொள்கை படி தீவிரமாக ஆதரிக்க  அல்லவா வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kadancha said:

எதிர்பார்த்தது தான். 

 


இந்தஅல்லது இதை  போன்ற ஆய்வு நான் அறிந்தது தான்.

இது சந்தகி சந்ததி ஆக போனால் தான் இதன் விளைவு தெரியும். 

எனவே இந்த ஆய்வு இப்படியான முடிவுகளுக்குத் தான் வரும் 

(அப்படியான பரிசோதனைக்கு ஏன் மற்றவர்கள் ஆயத்தமாக இருக்க வேண்டும்?)

சும்மா,  குறுகிய கால பிள்ளை வளர்ப்பை வைத்து முடிவுக்கு வருவது, இதை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று திணிப்போரம், அந்த அஜெண்டாவை பரப்ப விரும்போக்குவோரும் செய்வது.

இவ்வளவு பாலின தாராளவாதம்  கதைக்கும் மேற்கு பாலின தாராளவாதம் திணிப்போர்  , ஏன் மேற்கு அரசு அமைப்பு   சிறுபான்மை, பெரும்பான்மை என்று வைத்து உள்ளது என்பதை கதைக்க ஆயத்தம் இல்லை, 


சிறுபான்மைக்கு அநேகமாக குழுமிய, நிறுவன உரிமைகள் ,விடயங்களில் இடம் இல்லை.


உங்களின் ( மேற்கு பாலின தாராளவாதம் திணிப்போர) லிபரல் வாதத்தை  முற்றுப்புள்ளி வைக்கும்  மேற்கு அரசுகளும், சமூகமும்.

அனால், சிறுபான்மை , பெரும்பான்மை என்று வைத்து இருக்கா விட்டால், சிறுபான்மை மிகவும் ஒடுக்கப்படும்.

எனவே, ஒருபாலினத்தவர் (ஒரு சிறுபான்மையாக) இருக்கலாம், ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

அனால், அதற்காக, எல்லா உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என்ற விடயம், பரந்த சிறுபான்மை, பெரும்பான்மை என்ற கட்டமைப்புக்கு உள்லேயே இருக்க வேண்டும், குறிப்பாக இதை பொறுத்தவரை.

🤣எதிர்பார்த்த படியே சொல்லியிருக்கிறீர்கள்: "34 ஆய்வுகள் யாரையோ திருப்தி செய்ய யாரோ செய்த ஆய்வுகள்". இந்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் இல்லாமல் (ஆனால் formation இற்கு வாழும் சூழல் முக்கியம் என கருத்தை நீங்களே முதலில் சொல்லி விட்டு) அடுத்த சந்ததியில் சீரழிவு நிகழும் என்கிறீர்கள். இது மூக்குச் சாத்திரம், ஆனால் அதையும் சீரியசான ஆய்வு முடிவு போல உங்களால் நீட்டி முழக்கிச் சொல்ல முடிகிறது😂.

சிறு பான்மை, பெரும்பான்மையெல்லாம் ஏன்? இதற்கும் ஓர் பால் தம்பதிகளுக்கு உரிமைகள் கொடுப்பதற்கும் என்ன சம்பந்தம்?

"everybody is a minority somewhere, that doesn't mean they should  be deprived of their basic rights" சொன்னது நான் அல்ல, ரோக்கியோ நகரில் "ஒரு பால் தம்பதிகளின் உரிமையை மட்டுப் படுத்த வேண்டும்" என்று நகர மேயர் போட்ட வழக்கை நிராகரித்து ஒரு ஜப்பானிய நீதிபதி சொன்னது.  

6 hours ago, நியாயம் said:

 

வானவில் பற்றிய கருத்துடன் உடன்பாடு இல்லை எனினும் தூண்டப்படுதல் எனும் கருத்தை ஏற்றுக்கொள்கின்றேன். சிகரெட், குடி, போதை போல ஒருபால் உறவுநிலைகள், இயற்கையில் அரிதான (இயற்கைக்கு முரணான எனும் பதம் பொருந்தவில்லை என நினைக்கின்றேன்) உறவுநிலைகள் மற்றவர்களிடையே ஊக்குவிக்கப்படுகின்றன (தொற்ற வைக்கப்படுகின்றன) என்பது உண்மை. 

முடியுமானால் கீழுள்ள காணொளியில் இதுபற்றி கூறப்படும் சில விடயங்களை கேட்டுப்பாருங்கள். 

 

 

கட்டாயம் ரக்கர் கால்சன் சொல்வது இந்த ஓர் பாலின விடயங்களில் நம்பிக்கையான தகவலாகத் தான் இருக்கும்.

கார்ல்சனுக்கு ஆணும் ஆணும் , பெண்ணும் பெண்ணும் பரஸ்பர சம்மதத்தோடு உறவு வைத்திருப்பது கண்ணில காட்டக் கூடாது! ஆனால், கூட வேலை செய்யும் பெண்களிடம் அவர்கள் அனுமதியில்லாமலே கையைக் காலை நீட்டுவது பூரண சம்மதமான விடயமாக இருந்திருக்கிறது😎. அதனால் தான் Fox News  இல் இருந்து வேலை நீக்கப் பட்டார்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடலுறவை மட்டுமே அடிப்படையாக வைத்து இந்தவிடயம் ஆராயப்படுவதால் வரும் மயக்கமேயன்றி வேறில்லை இது.

இயற்கையாக ஆணும் பெண்ணும் மட்டுமே ஒரு குழந்தையை உருவாக்கமுடியும் என்கிற நியதி இருப்பது உண்மைதான். ஆனால், இரு பெண்கள் இணைந்தும் குழந்தையை உருவாக்க முடியும் என்றும், ஆண்களும் கருத்தரிக்கலாம் என்று நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. இவை இயற்கைக்கு முரணானவையா? ஆம், ஏனென்றால் இயற்கையாக இவை நடக்கச் சாத்தியமில்லை இப்போதுவரைக்கும்.

ஆனால், இருவர் உறவில் இணைவதற்கு உடலுறவு மட்டுமே இருந்தால்ப் போதுமானதா? இதைத்தவிரவும் வேறு என்ன விடயங்கள் இருவர் இணையும் உறவில் இருக்கின்றன? புரிந்துணர்வு, விட்டுக்கொடுப்பு, பிடித்தவிடயங்களில் ஈடுபாடு, ஆறுதல், துணை....இப்படிப் பல விடயங்கள் இருக்கின்றனவே? ஆணும் பெண்ணும் இருக்கும் உறவில் இப்பிரச்சினைகள் எவ்வளவு தூரத்திற்குத் தீர்க்கப்பட்டிருக்கின்றன? எத்தனை ஆண்கள் அல்லது பெண்கள் தமது எதிர்ப்பால் துணையினைக் கைவிட்டு விட்டு ஓரினத் துணையினைத் தேடியிருக்கின்றனர்?

ஒருவர் தன்னை ஆணாகவோ பெண்ணாகவோ நினைப்பதற்கு உணர்வதற்கு அவரில் காணப்படும் ஹோர்மோன்களே காரணமாவதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். எவருமே வேண்டுமென்று தமது பிறப்பில் இருந்த பாலினை விட்டு எதிர்ப்பாலிற்கு மாறுவதில்லை என்று நினைக்கிறேன். அது இயற்கையாக அவர்களில் நடக்கும் உளவியல், ஹோர்மோன் மாற்றங்களால் ஏற்படுகின்றது என்றுதான் தான் நினைக்கிறேன். 

பாப்பாணடவர் ஓரினச் சேர்க்கையாளர் குறித்து அவதூறாகப் பேசுவதற்குக் காரணம் இருக்கிறது. தனது சபையில் இவர்கள் சேர்ந்துவிட்டால், தாம் இற்றைவரை போதித்துவரும் ஓரினச் சேர்க்கைக்கெதிரான பிரச்சாரத்தை அது பாதித்துவிடும் என்று அவர் பயந்திருக்கலாம். ஆனால், ஓரினச் சேர்க்கையென்பது கிறிஸ்த்துவிற்கு முன்னைய காலத்திலிருந்து இருப்பதாக வேதாகமத்தில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. அதைவிட,  கத்தோலிக்க மதகுருக்களில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம், ஓரினச் சேர்க்கை போன்றவை பல நூற்றாண்டுகளாக பழக்கத்தில் இருப்பவை. அவைகுறித்துப் பேசுவதைத் தவிர்த்து ஓரினச் சேர்க்கையாளர்கள் குறித்து பாப்பாணடவர் பேசுவது தவறு. முதலில் உள்ளுக்குள் இருக்கும் பிரச்சினைகள் குறித்து அவர் வெளிப்படையாகப் பேசட்டும். பின்னர் ஓரினச் சேர்க்கையாளர்கள் குறித்து கருத்துக் கூறலாம். 

ஒருவர் தன்னை ஆணாகவோ, பெண்ணாகவோ அல்லது இவை இரண்டிற்கு இடையில் இன்னொரு இனமாகவோ நினைப்பதும், உணர்வதும், அதற்கேற்றாற்போல் நடந்துகொள்வதும் அவரது விருப்பம். இதில் மற்றையவர்கள் கருத்துக் கூறவோ, கட்டுப்பாடுகள் விதிக்கவோ முடியாது. 

  • Like 9
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நமது அடுத்த தலைமுறைகளை மனநோயாளிகளாக மாறிவிடாமல் பாதுகாக்க வேண்டியது நம் கடமை. 

Bild

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமது உணர்வுகளை விளங்கிக்கொள்ளாது, ஏற்றுக்கொள்ளாது, குடும்பத்தில் உன்னை ஒருவனாக அல்லது ஒருத்தியாக எம்மால் பார்க்கமுடியாது என்று பெற்றோரும், உறவினர்களும் வெறுத்து ஒதுக்கும் நிலையில் உளரீதியாகப் பாதிக்கப்பட்டுவரும் இளைய சமுதாயம் குறித்து நாம் அனைவரும் அக்கறை கொள்ளும் காலம் விரைந்து உருவாகி வருகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த வருட ஆரம்பத்தில், யேர்மனியில்,   இரயிலில் பயணிப்பதற்காக,  இணையமூலமாக ஒருவர் ரிக்கெற் பதிவு செய்ய விரும்பி யேர்மனி இரயில் திணைக்களத்தின்  இணையத்தளத்தில் முயன்றிருக்கிறார். இணையத்தில் இருந்த படிவத்தில், நீங்கள் ஆணா? பெண்ணா? என்ற கேள்வியில் எங்கே  ‘ஆம்என்று போடுவதில் அவருக்குச் சிக்கல் வந்தது. காரணம் அவர் ஆணும், பெண்ணும் இல்லாத மூன்றாம் பால்.

கோபத்துடன் அவர் இரயில் திணைக்களத்துக்கு இது விடயமாக மின்னஞ்சல் அனுப்பி வைத்தார். பதில் அவருக்கு அனுகூலமாக இல்லாததால், நீதிமன்றத்துக்கு இந்தப் பிரச்சினையைக் கொண்டு சென்றார். இரயில் திணைக்களம் அவருடன் சமரசம் செய்ய முயற்சித்தது. அவருக்கேற்பட்ட மன அழுத்தத்துக்கான நட்ட ஈடாக 1000 யூரோக்களைத் தருவதாகவும் கேட்டுப் பார்த்தது. அவர் உடன் படவில்லை.

“இது ஒருவரது தனிப்பட்ட விடயம் அல்ல. பொதுவானது. ஆகவே உங்கள் (இரயில் திணைக்களம்) படிவங்களில் மாற்றங்களைச் செய்யுங்கள். அதுவும் ஆறு மாதங்களுக்குள்என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆறு மாதங்கள் குறைவானது ஒரு வருடம் எடுத்துக் கொள்கிறோம் என இரயில் திணைக்களம் கேட்டுக் கொண்டது.

பின்னர் அவர் குறிப்பிட்ட படிவத்தில் மட்டுமல்ல, எங்களது முழுசிஸ்ரத்திலும் மாற்றம் செய்ய வேண்டும். அதற்குப் பெரும் பணமும், கால அவகாசமும் தேவை என்றார்கள். இப்பொழுது மாற்றம் செய்து விட்டார்களா? இல்லையா? என்பது தெரியவில்லை.

இந்தப் பிரச்சினை இன்று யேர்மனியில் உள்ள சகல நிறுவனங்களுக்கும் இருக்கிறது. திரு,திருமதி என்று விழிக்காமல் எல்லோருக்கும் பொதுவாகஹலோஎன்றே அழைக்கலாமா? என குளம்பிப் போய் இருக்கிறார்கள்.

ஓரினச் சேர்க்கையாளர்களின் குடும்ப வாழ்வை யேர்மனியும் அங்கீகரிக்கிறது. அவர்கள் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பதில் எந்தச் சிக்கல்களும் இல்லை. யேர்மனியில் வளரும் பிள்ளைகளுக்கு பெற்றோர்களே பாலியல் சம்பந்தப்பட்ட விபரங்களை சொல்லித் தருகிறார்கள். பாடசாலைகளிலும் பாலியல் சம்பந்தமான விடயங்களை ஆசிரியர்கள் விளக்குகிறார்கள். ஆகவே ஓரினச் சேர்க்கையாளர்களின் பிள்ளைகளும் தங்கள் பாதுகாவலர்கள்   போல் மாறி விடுவார்களோ என்ற அச்சம் தேவையற்றது. தவறாக ஏதும் நடந்தாலும்,பாடசாலையில் பிள்ளைகளின் நடத்தையை  ஆசிரியர்கள் அவதானித்து  அது சம்பந்தமான திணைக்களத்துக்கோ (Jugendamt), பாடசாலை அதிபருக்கோ அறிவித்து விடுவார்கள்.

ஓரினச் சேர்ககையாளர்களும் எங்களைப் போன்று வாழப் பிறந்தவர்கள். அவர்களுக்கான உரிமையையும், மதிப்பையும் தருவதுதான் முறையானது.

  • Like 6
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Justin said:

ஆனால் formation இற்கு வாழும் சூழல் முக்கியம் என கருத்தை நீங்களே முதலில் சொல்லி விட்டு) அடுத்த சந்ததியில் சீரழிவு நிகழும் என்கிறீர்கள்

 

இந்த ஆய்வு செய்யப்பட முடியாது, சந்ததி சந்ததியாக ஆய்வு நடக்க வேண்டும்.


அனால், ஒரு சந்ததியில் கூட, ஓர்பாலின பெற்றோ  வளரும் பிள்ளை ஓர்பாலினத்தை  தேர்ந்து  எடுக்கும் சாத்தியக்கூறுகள், நேர்பாலினத்தில வளரும் பிள்ளையோடு ஒப்பிடும்  போது  கூடவா, குறையவோ  என்பதை பற்றி ஆய்வு நடக்காது.


அப்படி நடந்தலாலும், அது  சந்ததியாக ஆய்வு இருக்கும் போதே அதன் நம்பகதத்தன்மை பற்றி கதைக்கலாம்.


1. திருப்பியும் கேட் கிறேன், சந்ததி பரிசோதனைக்கு மற்றவர்கள் ஏன் ஆயத்தமாக இருக்க வேண்டும்?

2. அடிப்படையில் ஆண் விந்துவாலும், பெண் முட்டையிலும் உருவாக்கம் கருவின் சிசுவுக்கு. நேர்பாலினம் சமவாய்ப்பை , இடத்தை, சூழலை, மற்றும் எந்த வாழ்கை அம்சத்திலும் சமவாய்ப்பை  அளிக்கிறது  பாலினத் தெரிவுக்கு.

இது பிள்ளையின் அடிப்படை உரிமை என்றதை நிராகரித்து, பிள்ளைக்கு பெற்றோரின் பாலினத்தனமையை தீர்மானிப்பது, சிறுபான்மையின்  பாலியல் தேவைக்காக, அதுவும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அவர்கள் பெறாத பிள்ளைக்கு.

நேர்பாலினத்தில் வளரும் பிள்ளை மாறும் என்றால், அது ஊக்குவிக்கப்படாத, சார்பாக சீவப்படாத,  பிள்ளையின் உண்மையான தெரிவு.


இதில் வேறு பல வருங்கால விளைவுகள் சொல்லப்பட  முடியாது.  ஆய்வும் செய்யப்பட முடியாது.


இதில் வேறு பல வருங்கால விளைவுகள் சொல்லப்பட  முடியாது.  ஆய்வும் செய்யப்பட முடியாது.

ஏனெனில் பல பிள்ளைகள்  வளரும் போடு குறைபாடுகள் பற்றி பி பிரக்ஞை இல்லை, அனால் வெளியியில், வேறு நண்பர்களோ, தெரிந்தவர்களோ என்று பழகு பொது தான் அவர்களின் குறைபாடுகள், துர்பிரயோகத்துக்கு உட்பட்டதை பற்றி உணர்கிறார்கள்.

பிள்ளை வளர்ந்து, தன வளர்ந்து துர்பிரோயோக (ஒரு பாலின பெடோரோடம் .ளர்ந்தது) முறை என்றால் பிள்ளைக்கு பிறப்பிலேயே அநீதி இழைக்கப்பட்டு விட்டது என்று ஆகி விடும். 

இது ஒரு உதாரணம் மாத்திரமே.


நீங்கள் சொல்லுவது மிகச்சிறிய கால இடைவெளி ஆய்வை வைத்து , அந்த  காலம் இல்லை என்றே சொல்லலாம்  (மனித விருத்தி வரலாற்று காலத்துடன் ஒப்பிடும் போது ), ஒரு துவாரப்பார்வை ஊடக.

நான் சொல்லுவது, பல பரந்துபட்ட முழு மனித வாழ்க்கை, கரிசனைகள்,  போன்றவற்றை உள்ளடக்கி.

 

 

 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • டி20 உலகக் கோப்பை: மிரட்டிய ஆப்கானிஸ்தானை வியூகம் வகுத்துச் சுருட்டிய இந்தியா பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆப்கானிஸ்தான் அணியை 47 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 21 ஜூன் 2024, 03:09 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மேற்கிந்தியத்தீவுகளுக்கு சூப்பர்-8 சுற்று ஆட்டங்கள் மாறிவிட்டதால் இனிமேல் டி20 போட்டிகளுக்கே உரிய ரன் குவிப்பை பார்க்கலாம் என்று கூறப்பட்டது. ஆடுகளங்கள் ரன்குவிப்புக்கு சாதகமாக இருப்பதுபோல் தெரிந்தாலும், பேட்டர்கள் பந்தைக் கவனித்து ஷாட்களை அடிக்க வேண்டியுள்ளது. இதுதான் நேற்றை இந்தியா-ஆப்கானிஸ்தான் ஆட்டத்தில் தாத்பரியமாக இருந்தது. அனுபவ பேட்டர்கள், தொடக்க ஆட்டக்காரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா இருவரும் பொறுமையாக, நிதானமாக பேட் செய்யாமல் விக்கெட்டை இழந்தனர். ஆனால், சூர்யகுமார் யாதவ் நிதானமாக, அதேநேரம் எந்தப் பந்தை பெரிய ஷாட்டாக மாற்றலாம் எனத் தெரிந்து அடித்து ஹீரோவாக ஜொலித்தார். பிரிட்ஜ்டவுனில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-8 சுற்றில் குருப்- ஏபிரிவில் நடந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை 47 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் சேர்த்தது. 182 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 134 ரன்களுக்கு ஆட்டமிழந்து 47 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றி மூலம், இந்திய அணி குரூப்-1 பிரிவில் 2 புள்ளிகளுடன், நிகர ரன்ரேட்டில் 2.350 என்று வலுவாக முதலிடத்தில் இருக்கிறது. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தொடர்ந்து 13 சர்வதேச போட்டிகளை இந்திய அணி வென்று சாதனையை தக்கவைத்துள்ளது. ஆப்கானிஸ்தான் ரன்ரேட் மைனஸ் 2.350 என்று குறைவாக இருக்கிறது. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். இந்தியா - ஆப்கானிஸ்தான் போட்டியில் நடந்தது என்ன? இந்த ஆட்டத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தது பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ், துணைக் கேப்டன் ஹர்திக் பாண்டியாவும், பந்துவீச்சில் பும்ரா, அர்ஷ்தீப் சிங் இருவரும்தான். அதிலும் புதிய பந்தில் பும்ராவின் பந்துவீச்சு துல்லியமாக இருந்ததை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இந்திய அணி 90 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது, இந்திய அணியை தாங்கிப்பிடித்து பெரிய ஸ்கோருக்கு கொண்டுவந்தவர் சூர்யகுமார் யாதவ். 28 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்த சூர்யகுமார் கணக்கில் 5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் அடங்கும். அணியைச் சரிவிலிருந்து மீட்ட சூர்யகுமார் ஆட்டநாயகனாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சூர்யகுமார்-ஹர்திக் பாண்டியா கூட்டணி நேற்றைய ஆட்டத்தில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இருவரும் 5-ஆவது விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்ததுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாகவும், பெரியஸ்கோருக்கும் வழிவகுத்தது. ஹர்திக் பாண்டியாவும் 2 சிக்ஸர்கள், 3பவுண்டரிகள் உள்பட 32 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பந்துவீச்சில் பும்ராவின் திறமை ஒவ்வொரு போட்டியிலும் மெருகேறிக் கொண்டே செல்கிறது. இந்த டி20 உலகக் கோப்பைத் தொடங்கியதிலிருந்து பும்ரா பந்துவீச்சில் எக்கானமி 3 ரன்களைக் கடக்கவில்லை. இந்த ஆட்டத்திலும் 4 ஓவர்கள் வீசிய பும்ரா 7 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது திறனை வெளிப்படுத்தினார். அதிலும் புதிய பந்தில் பும்ராவாவின் பந்துவீச்சை சமாளிக்க ஆப்கானிஸ்தான் பேட்டர்கள் கடும் சிரமப்பட்டு விக்கெட்டையும் இழந்தனர். அதேபோல அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்கள் வீசி 36 ரன்கள் கொடுத்து 3 விக்கெட், சிராஜுக்குப் பதிலாக கொண்டுவரப்பட்ட குல்தீப் யாதவ் 4 ஓவர்களிலி் 32 ரன்கள் கொடுத்து 2 விக்கெட் என அற்புதமாகப் பந்துவீசினர். அக்ஸர் படேலும், ஜடேஜாவும் தங்களின் கட்டுக்கோப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தி வெற்றிக்கு துணை செய்தனர்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ரோகித் சர்மான கூறியது என்ன? வெற்றிக்குப்பின் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் “கடந்த 2 ஆண்டுகளாக நாங்கள் இங்கு டி20 போட்டிகளை விளையாடியிருக்கிறோம் என்பதால், சூழலை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றாற்போல் திட்டமிட முடிந்தது. அதனால்தான் 180 ரன்களை எட்ட முடிந்தது.” என்றார். “பேட்டர்களின் பங்கு அசாத்தியமானது. எங்களிடம் உலகத் தரம்வாய்ந்த பந்துவீச்சாளர்கள் இருப்பதால் ஸ்கோரை டிபெண்ட் செய்ய முடிந்தது, பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். இக்கட்டான நேரத்தில் ஒவ்வொரு வீரரும் தங்களின் பங்களிப்பை அளித்தனர். ஸ்கை, ஹர்திக் பார்ட்னர்ஷிப் முக்கியமானதாக இருந்தது. ஆட்டத்தை ஆழமாகக் கொண்டு செல்ல இருவரின் ஆட்டம் அவசியமானதாக இருந்தது. பும்ராவின் பந்துவீச்சு குறித்து நமக்குத் தெரியும். அவர் பந்துவீச்சில் என்ன செய்வார் என்பதும் தெரியும். சூழலையும், ஆடுகளத்தையும் சாதகமாக பயன்படுத்தி பந்துவீசக்கூடியவர். பொறுப்பெடுத்து தனது பங்களிப்பை பல ஆண்டுகளா அளித்து வருகிறார் பும்ரா. இந்த ஆடுகளத்தின் தன்மையைப்புரிந்து கொண்டுதான் 3 சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சுக்கு ஏற்ற ஆடுகளம் அடுத்த ஆட்டத்தில் இருந்தால், அதிகமான வேகப்பந்துவீச்சாளர்களுடன் வருவோம்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ரோகித், கோலி 2 ஆண்டுகளாக விளையாடவில்லை ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என கணித்து ரோகித் சர்மா, கோலி பேட் செய்து கையைச் சுட்டுக்கொண்டனர். 2022 டி20 உலகக் கோப்பைத் தொடருக்குப்பின் கடந்த ஜனவரி மாதம் வரை சர்வதேச டி20 போட்டிகளில் இதுவரை ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் விளையாடவில்லை. ரோஹித் சர்மா 13 பந்துகளில் 8 ரன்களுடன் பரூக்கி பந்துவீச்சில் பெரிய ஷாட்டுக்கு சென்று விக்கெட்டை இழந்தார். இன்றைய டி20 போட்டிகளில் பந்துவீச்சில் ஒவ்வொரு வீரரும் எவ்வாறு வேரியேஷன்களை கொண்டு வருகிறார்கள். 145 கி.மீ வேகத்தில் பந்துவீசும் ஒரு பந்துவீச்சாளர் அடுத்த பந்தை அப்படியே வேகத்தைக் குறைத்து 110 கி.மீ வேகத்தில் வீசுகிறார். இதை கவனிக்காமல் விட்டதுதான் நேற்றைய ஆட்டத்தில் ரோஹித் சர்மா செய்த தவறாகும். ஐபிஎல் தொடரில் பலமுறை லெக் ஸ்பின்னுக்கு கோலி ஆட்டமிழந்துள்ளார். இதை உணர்ந்த ரஷித் கான் தனது பந்துவீச்சில் கோலியை பெரிய ஷாட்டுக்கு மாற்றும் வகையில், ஆசையைத் தூண்டும் வகையில் பந்துவீசினார். இதை கவனிக்காத கோலி, சிக்ஸருக்கு முயன்று கேட்சாகினார். பட மூலாதாரம்,GETTY IMAGES சூர்யகுமார் யாதவ் சிறப்பான பேட்டிங் சூர்யகுமாரின் பேட்டிங் நேற்றைய ஆட்டத்தில் மாஸ்டர் கிளாஸாக இருந்தது. சூர்யகுமார் 3வது வீரராக வழக்கமாகக் களமிறங்கிய நிலையில் இந்த உலகக் கோப்பைத் தொடரில் அவருக்கு 4வது இடம் தரப்பட்டது. ஆனாலும், தனக்குரிய பணியை இந்தத் தொடரில் சிறப்பாகவே செய்து வருகிறார். சூர்யகுமார் ஒவ்வொரு போட்டியிலும் வித்தியாசமான, ஸ்பெஷல் ஷாட்களை ஆடுவதை வழக்கமாக வைத்துள்ளார். ஆப்சைட் சென்ற பந்துகளை ஸ்வீபுக்கு மாற்றியது, ஃபுல்டாஸ் பந்தை ஸ்வீப்புக்கு மாற்றியது என எதிரணி பீல்டர்கள் கணிக்க முடியாத வகையில் ஷாட்களை விளையாடினார். அதாவது இடதுபுறம் பவுண்டரி எல்லை குறைவாக இருக்கிறது என்பதை உணர்ந்து பெரும்பாலான ஷாட்களை சூர்யாக இடதுபுறம் அடித்து ஸ்மார்ட் கிரிக்கெட்டை ஆடினார். சூர்யகுமார் அடித்த 3 சிக்ஸர்களில் ஒரு சிக்ஸரில் பந்து அரங்கத்தின் மேற்கூரையில் விழுந்தது. ஸ்லோவர் பந்துகளை எவ்வாறு கணித்து ஆட வேண்டும் என்பதற்கு பிரத்யேகப் பயிற்சி எடுத்த சூர்யா, நேற்று ஸ்லோவர் பந்துகளை சிக்ஸருக்கும், பவுண்டரிகளுக்கும் பறக்கவிட்டார். ஒரு கட்டத்தில் பந்துவீச்சு வேரியஷன்கள் சூர்யாவிடம் தோல்வி அடைந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆடுகளம் மந்தமாக இருந்தால், பந்து வரும் திசையை பேட்டர்கள் கணிப்பது சிரமம். இதற்கு நீண்டநேரம் களத்தில் இருந்து பந்தை கணித்தால்தான் ஆட முடியும். ஆனால், இதை சூர்யகுமார் வந்தவுடன் புரிந்து கொண்டு ஆடுகளத்துக்கு ஏற்றபடி ஆட்டத்தை மாற்றிக்கொண்டார். வழக்கமாக ஸ்விட்ச் ஹிட், ரிவர்ஸ் ஸ்வீப் போன்றவற்றை அதிகமாக ஆடக்கூடிய சூர்யா நேற்று பெரிதாக ஆடவில்லை.இந்த ஆட்டத்தில் 14 ரன்கள் மட்டுமே கீப்பருக்கு பின்னால் அடித்து சூர்யா சேர்த்தார். இதுபோன்று ஆடுவது சூர்யாவின் பேட்டிங்கில் குறைந்த சதவீதம் என்றாலும், ஆடுகளத்தின் மெதுவான தன்மை, பந்தின் வேகக் குறைவால் அதிகமான சக்தியை செலுத்திதான் இந்த ஷாட்களை ஆட முடியும் என்பதால் பெரியாக மெனக்கெடவில்லை. ஆடுகளத்தின் தன்மையைப் புரிந்து கொண்ட சூர்யா, அதை ஹர்திக் பாண்டியாவிடம் கூறி, அவர் அடித்த அதே ஷாட்களுக்கு அடிக்க மாற்றினார். இருவருமே பீல்டர்கள் கணிக்க முடியாத பகுதியில் பவுண்டரி, சிக்ஸர்களை விளாசினர். ரன் சேர்ப்பதற்கு கோலி, ரோஹித், ரிஷப் பந்த், துபே ஆகியோர் சிரமப்பட்ட நிலையில், சூர்யகுமார் 27 பந்துகளில் அரைசதம் அடித்தது சகவீரர்களுக்கே வியப்பாக இருந்திருக்கலாம். ஆனால், கடைசி நேரத்தில் பரூக்கி வீசிய ஸ்லோவர் பந்துக்கு சூர்யா இரையாகினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES பும்ரா சிறப்பான பந்துவீச்சு புதிய பந்தில் பும்ராவின் பந்துவீச்சு வேகம் அற்புதமானது. புதிய பந்தில் பும்ரா பந்துவீசினாலே 75 சதவீதத்துக்கும் மேல் விக்கெட் வீழ்த்தும் சாதனையை டி20 போட்டியில் வைத்துள்ளார். அதை நேற்றைய ஆட்டத்திலும் பும்ரா நிரூபித்தார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவதற்குள் ஆப்கானிஸ்தானின் குர்பாஸ்(11), ஜசாய்(2) விக்கெட்டுகளை காலி செய்தார். இந்த டி20 உலகக் கோப்பையில் அதிகமான ரன் குவித்தவர்கள் வரிசையில் முதலிடத்தில் இருக்கும் குர்பாஸ் விக்கெட்டை அனாசயமாக எடுத்தார் பும்ரா. குர்பாஸ் இறங்கி வந்ததும் பந்தை ஆஃப் சைடில் விலக்கி பும்ரா வீசவே, அதை அடிக்க முற்பட்டு ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்தார் குர்பாஸ். ஆடுகளத்தன் தன்மையை உடனடியாகக் கணித்து அதற்கு ஏற்றார்போல் பும்ரா பந்துவீசுவதால்தான் அனைத்து ஃபார்மெட்டுகளின் ராஜா என்று புகழப்படுகிறார். இந்த ஆட்டத்தில் பும்ரா 7 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார். அனுபவமில்லாத ஆப்கானிஸ்தான் ஆடுகளத்தின் தன்மையை உணர்ந்து அதற்கு ஏற்றபடி பேட்டிங்கையும், பந்துவீச்சையும் உடனடியாக மாற்றாததன் விளைவுக்கு ஆப்கானிஸ்தான் நேற்று விலை கொடுத்தது. பேட்டிங்கில் தொடக்க வீரர்கள் முதல் நடுவரிசை வரை பெரிய ஷாட்களுக்குதான் பெரும்பாலும் முயன்றார்களே தவிர, களத்தில் நிலைத்திருக்க முயலவில்லை. இதனால்தான் ஆப்கானிஸ்தான் அணியில் ஓமர்சாய் தவிர, மற்ற எந்த பேட்டரும் 20 பந்துகளுக்கு மேல் சந்திக்கவில்லை. பந்துவீச்சிலும் ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்றார்போல் ரஷித் கான், பரூக்கி இருவர் மட்டுமே பந்துவீசினர். மற்ற பந்துவீச்சாளர்கள் யாரும் ஆடுகளத்தின் தன்மையை உணர்ந்து பந்துவீசவில்லை. அதிலும் குறிப்பாக நவீன் உல் ஹக் பந்துவீச்சு படுமோசமாக இருந்தது. ரஷித் கான் தவிர அனைத்து பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு 8 ரன்களுக்கு மேல் வாரி வழங்கினர். https://www.bbc.com/tamil/articles/cy99zwqqpkno
    • இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன் பிடித்த குற்றச்சாட்டில் நான்கு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்று திங்கட்கிழமை (17) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.   யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒரு படகையும் அதிலிருந்த நான்கு இந்திய மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் கடற்படையினர் கைது செய்தனர்.  
    • சமஷ்டி முறையிலான தீர்வை எட்டுவதற்கு இந்தியா உதவ வேண்டும் – தமிழ்த் தலைவர்கள் எடுத்துரைப்பு! இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்ஷங்கர் நேற்று தமிழ் அரசியல் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதன்போது மாகாணங்களில் அபிவிருத்தி மற்றும் அதிகாரப்பகிர்வு தொடர்பான பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் ஜெய்ஷங்கர் தெரிவித்திருந்தார். இதேவேளை, தமிழர்களுக்கு 13 ஆவது திருத்தம் அரசியல் தீர்வுக்கான ஆரம்ப புள்ளியாக அமையாது எனவும் இந்தியா வழங்கிய 13 ஆவது திருத்தம் வேறு இங்குள்ள தலைவர்கள் அமுல்ப்படுத்துவதாகக் கூறும் 13 ஆவது திருத்தம் வேறு என தமிழ் தலைவர்கள் இந்திய அமைச்சர் ஜெஸ்ஷங்கரிடம் எடுத்துரைத்தனர். அதேபோன்று எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெறுவது குறித்தும் தமிழத் தலைவர்கள் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெஸ்ஷங்கரிடம் தெரிவித்திருந்தனர். மேலும் ஒன்றையாட்சிக்குள் தமிழர்களுக்கான தீர்வை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அதனை இந்தியா ஏற்றுக்கொண்டு சமஷ்டி முறையிலான தீர்வை எட்டுவதற்கு இந்தியா உதவ வேண்டும் எனவும் தமிழ்த் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். குறித்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், சிறீதரன், சாணக்கியன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சி.வி.விக்னேஸ்வரன், எஸ்.கஜேந்திரன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோர் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1388963
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.