Jump to content

ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

460509219_927848529380120_63223135428812

 

460507311_927308322767474_49491650542353

 

 

460646922_927851962713110_95617186493641

 

 

460562992_927218999443073_69381329728376

ஜனாதிபதி தேர்தலில் மூன்று நிலைப்பாட்டில் நிற்கும் தமிழரசுட்சி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

460534847_927898129375160_83340248677130

 

 

May be an illustration of text

 

459761904_928570642641242_85069161273642

 

May be an image of text

 

460718071_927959989368974_88501988487193

 

460636400_927897686041871_20242044743944

 

 

460714173_928633055968334_71293667112409

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாக்களிப்புக்கு பாதகமான சம்பவங்கள் இடம்பெற்றால் வாக்களிப்பு நிலையம் சூனியமாக்கப்படும் - தேர்தல் ஆணைக்குழு

Published By: VISHNU   21 SEP, 2024 | 02:00 AM

image
 

வாக்களிப்பு நிலையங்களில் வன்முறை சம்பவங்கள் எதுவும் இடம்பெற்று வாக்களிப்புக்குப் பாதிப்பு ஏற்பட்டால், குறித்த வாக்களிப்பு நிலையம் முற்றாக செயலிழக்கப்பட்டு மீண்டும் வாக்களிப்பு நடத்தப்படும். அதுவரை தேர்தல் பெறுபேறு வெளியிடப்படமாட்டாது எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் தெரிவித்தார்.

இன்று இடம்பெற இருக்கும் ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் வேட்பாளர்களின் பிரதிநிதிகள் இரண்டு பேருக்கு அங்கு தங்கி இருப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அவர்கள் வாக்களிப்பு இடம்பெற்று முடியும்வரை அந்த இடத்திலிருந்து வெளியில் வரமுடியாது. அதேபோன்று வேறு பிரதிநிதிகளுக்கு அந்த நிலையங்களுக்கு செல்லவும் முடியாது.  அதேபோன்று வாக்களிப்பு நிலையங்களுக்கு அருகில் யாரும் கூடி இருக்கவேண்டாம். இதுதொடர்பில் ஏற்கனவே தெரிவித்திருக்கிறேன்.

அதேபோன்று  வாக்களிப்பு நிலையத்தில் ஏதாவது அசம்பாவிதம் இடம்பெற்றால் அல்லது வாக்களிப்புக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் நாசகார நடவடிக்கை ஏற்பட்டால், குறித்த வாக்களிப்பு நிலையத்தை முற்றாக (சூன்யமாக்க) செயலிழக்கச்செய்ய நடவடிக்கை எடுப்போம்.

அவ்வாறு பல வாக்களிப்பு நிலையங்கள் செயலிழக்கச்செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு, அதனால் மொத்த தேர்தல் பெறுபேற்றை வெளியிடுவதற்குப் பாதிப்பு ஏற்பட்டால், அந்த வாக்களிப்பு நிலையங்களுக்கு மீண்டும் வாக்களிப்பு நடத்திய பின்னரே தேர்தல் பெறுபேறு வெளியிட வேண்டிவரும். அதுவரை தேர்தல் பெறுபேற்றை வெளியிட எமக்கு முடியாமல் போகும்.

அதனால் வன்முறை, நாசகார சம்பவங்களுக்கு இடமளிக்காமல் அமைதியான தேர்தல் ஒன்றை நடத்த ஒத்துழைப்பு வழங்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். வாக்களிப்பு நிலையங்களுக்கு அருகில் சிவில் பாதுகாப்பு அதிகாரிகளை நியமித்துள்ளோம். கிராமங்களின் வாக்குப்பெட்டியை பாதுகாப்பது அந்த கிராம மக்களின் பொறுப்பாகும்.

அதனால் வெளிநபர்கள் கிராமங்களுக்குள் வந்து அசம்பாவிதங்களை ஏற்படுத்தாமல் பாதுகாத்துக்கொள்ள ஊர் மக்கள் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/194217

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டின் நிறைவேற்றுத்துறை அதிகாரமிக்க 9ஆவது  ஜனாதிபதியை தெரிவு செய்யும் 8ஆவது  ஜனாதிபதி தேர்தல் இன்று

Published By: VISHNU   21 SEP, 2024 | 10:05 AM

image

(இராஜதுரை ஹஷான்)

நாட்டின் நிறைவேற்றுத்துறை அதிகாரமிக்க ஒன்பதாவது  ஜனாதிபதியை தெரிவு செய்யும் எட்டாவது ஜனாதிபதி தேர்தல் இன்று சனிக்கிழமை (21)  இடம்பெறவுள்ளது.

இம்முறை 38 பேர் போட்டியிடுகின்ற நிலையில்,  17, 140,354 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். சுதந்திரமானதும், நீதியானதுமான வகையில் தேர்தலை நடத்த ஒத்துழைக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு சகல பிரஜைகளிடமும்  தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

நாடளாவிய ரீதியில்  13421  வாக்களிப்பு மத்திய நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெறவுள்ள நிலையில், சுமார் 63 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர். முப்படையினரும் பாதுகாப்பு நிமித்தம் தயார் நிலையில் உள்ளனர். தேர்தல் பணிகளுக்காக 2 இலட்சத்து 25 ஆயிரம் அரச உத்தியோகஸ்தர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

அனைத்து தேர்தல் தொகுதிகளுக்குமான வாக்கு பெட்டிகள் மற்றும் தேர்தல் பணிகளுக்கான ஆவணங்கள் நேற்று காலை கையளிக்கப்பட்டன. 22 தேர்தல் மாவட்டங்களில் கொழும்பு மாவட்டத்தில் தான் அதிகளவில் தேர்தல் தொகுதிகள் , கொழும்பு தேர்தல் மாவட்டத்தில் மாத்திரம் 3151 வாக்களிப்பு மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்கெடுப்பு இன்று சனிக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை இடம்பெறவுள்ளது. வாக்களிக்க தகுதி பெற்றுள்ள அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்க வேண்டும் என ஆணைக்குழு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. வாக்களிக்க செல்லும் போது வாக்காளர் அட்டை மற்றும் தேசிய அடையாளர் அட்டை அல்லது வெளிநாட்டு கடவுச்சீட்டு, சாரதி அனுமதி பத்திர அட்டை உட்பட அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளை எடுத்து செல்லுமாறு வலியுறுத்தப்படுகிறது.

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில்  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட கோட்டபய ராஜபக்ஷ 6,924, 255 வாக்குகளை பெற்று  52.25 சதவீத வாக்குகளுடன் நாட்டின் 7 ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

 அதேபோல் அத்தேர்தலில்  ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளராக போட்டியிட்ட சஜித் பிரேமதாச 5,564, 239  வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராக போட்டியிட்ட அனுரகுமார திஸாநாயக்க 41, 553 வாக்குகளையும் பெற்றுக் கொண்டனர்.

வாக்களிப்பு தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க குறிப்பிடுகையில்;

வாக்களிக்கும் ஜனநாயக உரிமையை பிரஜைகள் அமைதியான முறையில் வெளிப்படுத்த வேண்டும். ஒருவரின் உரிமை பிறிதொருவருக்கு இடையூறாக அமைய கூடாது. தகுதி பெற்றுள்ள வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் அத்துடன் சுதந்திரமாகவும்இ நியாயமானதாகவும் தேர்தலை நடத்த  சகல பிரஜைகளும் ஒத்துழைக்க வேண்டும்.

வாக்களிப்பு மத்திய நிலையத்துக்கு செல்லும் போது வாக்காளர் அட்டை, தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு, சாரதி அனுமதி பத்திரம், ஆளடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில் அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களை கொண்டு செல்ல வேண்டும். வாக்களிப்பு மத்திய நிலையத்தில் அமைதியை பேணுவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

 தேர்தல் காலத்தில் அநாவசியமான பிரச்சினைகளை தோற்றுவிப்பதற்கு காரணியாக அமைவதை அனைவரும் தவிர்த்துக் கொள்ளுங்கள். வாக்களித்ததன் பின்னர் அமைதியான முறையில் செயற்படுங்கள் . ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் அதனால் ஏற்படும் விளைவை உங்களின் குடும்பமே எதிர்க்கொள்ள நேரிடும். ஆதரவளிக்கும் வேட்பாளர்களுக்கு எவ்வித இழப்பும் ஏற்படாது. ஆகவே தமது குடும்பத்தை நினைவில் வைத்துக் கொண்டு செயற்படுங்கள் என்று நாட்டு பிரஜைகளிடம் வலியுறுத்தியுள்ளார்.

https://www.virakesari.lk/article/194220

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிற்பகல் இரண்டு மணியளவில் வாக்கு நிலவரம்:

யாழ்ப்பாணத்தில் பலர் நித்திரை அல்லது கஜே கோஸ்டியின் வேண்டுகோளின்படி பகிஸ்கரிக்கின்றார்கள் போலிருக்கு!

 

Kurunegala – 65%

Kegalle – 65%

Gampaha – 62%

Galle – 61%

Puttalam – 57%

Nuwara Eliya – 70%

Matara – 64%

Rathnapura – 60%

Colombo – 60%

Kalutara – 60%

Mannar – 60%

Badulla – 56 %

Trincomalee – 54%

Monaragala – 65%

Hambantota – 60%

Vanni – 58%

Jaffna – 49%

Ampara – 60%

Anuradhapura – 70%

Mullathivu – 57%

Kilinochchi – 56%

Kandy – 65%

 

https://www.newswire.lk/2024/09/21/presidential-election-2024-voter-percentage-as-of-noon/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தீவிர தமிழ் தேசியவாதம் என்ற போர வையில  சிங்கள இனவாதத்துக்கு சமமாக தமிழ் இனவாதம் பேசும் தரப்புகள  ஶ்ரீலங்காவில் ஒரு கடும் இனவாத ஜனாதிபதி பதவிக்கு வரவேண்டும் என்றே எப்போதும் எதிர் பார்கிறார்கள். அதன் மூலமே தமது தமது வியாபாரம் செல்வ செழிப்புடன் நடைபெறும் என்றே  எப்போதும் நினைக்கிறார்கள்.  அந்த வகையில் ஐரோப்பாவில் இருக்கும் கடும் தமிழ் இனவாதியின் முகநூல் பதிவு  இப்படி கூறுகிறது.

 அனுர வெல்வதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகப் பிந்திய செய்திகள் சொல்கின்றன.
மிக்க மகிழ்ச்சி. ஏனென்றால் இதுவரை தமிழர் தேசம் சந்திக்காத பாசிச இன ஒடுக்குதல்களை ஜேவிபியிடமிருந்து எதிர்பார்க்கலாம். அதற்கு வரலாற்றில் ஏகப்பட்ட சாட்சியங்களும் இருக்கின்றன.

ஜே ஆர், சந்திரிக்கா, மகிந்த, கோத்தாவை தூக்கிச் சாப்பிடும் அளவிற்கு பாசிசம் முறுக்கேறிய ஒரு இயக்கம்தான் ஜேவிபி.

எமக்கும் இதுதான் தேவை. ஏனெனில் மைத்ரி, ரணில் போன்றவர்களை வைத்து  தமிழ்த் தேசக் கோட்பாட்டிற்கு உள்ளக / வெளியக சக்திகளால் வைக்கப்பட்ட செக் இதன் வழி தகர்க்கப்பட்டிருக்கிறது.

நாளையிலிருந்து தமிழீழம்  நம்பிக்கையுடன் தனது புதிய பாய்ச்சலை தொடங்கும்.

வெல்வோம் ❤️ வென்றே தீருவோம் 🔥

இவரை போன்ற  சுயநலமிகளின் சிந்தனை தான் தமிழினத்தை இன்றைய  அதல பாதாள அவல நிலைக்களுள் கொண்டு வந்திருக்கிறது.  இவரின் எதிர்பார்ப்பை வெல்லப் போகும் ஜனதிபதி நிறைவேற்ற கூடாது என்பதே தமிழர்  எதிர்பார்பபு. 

Edited by island
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். வாக்களிப்பு நிலையத்தில் வாக்குச்சீட்டை கிழித்த இளைஞர் கைது 

21 SEP, 2024 | 01:10 PM
image
 

யாழ்ப்பாணத்தில் வாக்களிக்க வந்த இளைஞர் ஒருவர் வாக்குச்சீட்டை கிழித்ததால் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித்தியாசாலையில் இன்றைய தினம் சனிக்கிழமை (21) வாக்களிக்கச் சென்ற இளைஞர், தனது வாக்காளர் அட்டையை காண்பித்து அடையாளத்தை உறுதிப்படுத்தி, வாக்குச்சீட்டினை கைகளில் பெற்ற பின்னர், வாக்களிக்காமல், வாக்குச்சீட்டினை கிழித்துள்ளார். 

அதனை அங்கிருந்த அதிகாரிகள் கவனித்து, பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து, பொலிஸார் இளைஞரை கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட இளைஞரிடம் பொலிஸார் மற்றும் தேர்தல் திணைக்கள உத்தியோகஸ்தர்கள் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையின்போது, அந்த இளைஞர் தேர்தலில் வாக்களிப்பது இதுவே முதல் தடவை என தெரியவந்துள்ளது. 

இச்சம்பவம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஆணைக்குழுவின் அறிவுறுத்தலுக்கமைய அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. 

https://www.virakesari.lk/article/194268

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

இச்சம்பவம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஆணைக்குழுவின் அறிவுறுத்தலுக்கமைய அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. 

இப்படியான சொறிச்சேட்டை விடும் நபர்களுக்கு மிகப்பெருந்தொகையான தண்டப்பணம் அறவிடப்படவேண்டும்.0

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

யாழ்ப்பாணத்தில் வாக்களிக்க வந்த இளைஞர் ஒருவர் வாக்குச்சீட்டை கிழித்ததால் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

வாக்களிக்காமலே விட்டிருக்கலாம்.

ஒருவேளை கஜே குழுவின் ஆதரவாளராக இருப்பாரோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது கணிப்பின்படி 
அநுரவுக்கு 52%
சஜித்துக்கு 27%
ரணிலுக்கு 17%
மற்ற சில்லறைகளுக்கு  4% கிடைக்கும்


 

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.